Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Saidapet’ Category

Chennai Book Fair – M Karunanidhi to open the Madras Festival in St. George Anglo Indian HSS

Posted by Snapjudge மேல் ஜனவரி 10, 2007

5 கோடி புத்தகங்கள் இடம்பெறும் கண்காட்சி: சென்னையில் கருணாநிதி நாளை தொடங்கி வைக்கிறார்

30th Book Exhibition – Chennai Book Fair : Idly Vadai
IdlyVadai – இட்லிவடை: 30வது புத்தக கண்காட்சி

30th Chennai Book Fair – Badri : First Day Announcements & Karunanidhi Visit
பத்ரியின் வலைப்பதிவுகள்

Official Website

வலைத்தள: http://www.bapasi.org/

வலைப்பதிவுகள்
சென்னை புத்தகக் கண்காட்சி – முதல் நாள் ( படங்கள் )
சென்னை புத்தகக் காட்சி: நாள் 1 – பத்ரி
குழந்தைகளுக்கான புத்தகங்கள் – தமிழில்

செய்திகள்:
More space, more books, some films: fair from today – The Hindu
Chennai Book Fair has new venue – The Hindu
Chief Minister’s largesse to book publishing industry – The Hindu
தினத்தந்தி செய்தி
தினமலர் செய்தி
தினமணி செய்தி

சென்னை,ஜன.9-

தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 30-வது புத்தக கண்காட்சி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோஇந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நாளை(புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. கண்காட்சியை முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். அமைச்சர் துரை முருகன், நல்லி குப்புசாமி உள்படபலர் கலந்து கொள்கிறார்கள்.

கண்காட்சியில் 474 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 கோடி புத்தகங்கள் இடம் பெறுகின்றன. இதில் சர்வ தேச அளவிளான அனைத்து தரப்பு புத்தகங்களும் கிடைக்கும். தினமும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

தினமும் கலைநிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் நேர்காணல்கள் இடம் பெறுகின்றன. குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி கண்காட்சியில் நடைபெற உள்ளது. புத்தகங்கள் வாங்கும்போது 10 சதவீத தள்ளுபடி உண்டு.

சிறந்த எழுத்தாளருக்கான மணிவாசகம் பதிப்பகம் ச.மெய்யப்பன் விருது எழுத்தாளர் பிரபஞ்சனுக்கும்,

சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகசெம்மல் க.கணபதி விருது பிரேமா பிரசுரத்திற்கும் வழங்கப்படுகிறது.

குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ.வள்ளியப்பா விருது ஹரிஹரன் என்ற ரேவதிக்கும்,

சிறந்த புத்தக விற்பனையாளர் விருது திருச்சி அகத்தியர் புத்தக சாலைக்கும் வழங்கப்பட உள்ளது.

கண்காட்சி நுழைவுக்கட்டணம் 5 ரூபாய். 12-வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கட்டணம் கிடையாது.

கார்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்த வசதி உண்டு. அதற்கு கட்டணமும் உண்டு. மொத்தம் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சி 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தகவலை தென்இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் காந்தி கண்ணதாசன் பேட்டியின் போது தெரிவித்தார். அருகில் செயலாளர் சண்முகம் இருந்தார்.

சொந்தப் பணத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 கோடி: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஜன. 11: தனது சொந்தப் பணத்தில் ரூ. 1 கோடி நிதியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு (பபாசி) வழங்குவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சேத்துப்பட்டு பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் 30-வது புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை மாலை அவர் தொடங்கி வைத்தார்.

“பபாசி’ தேர்வு செய்த சிறந்த எழுத்தாளர் பிரபஞ்சன், குழந்தை எழுத்தாளர் ஹரிஹரன் என்கிற ரேவதி, சிறந்த பதிப்பகத்தாரான பிரேமா பிரசுரம், சிறந்த புத்தக விற்பனையாளர் திருச்சி அகஸ்தியர் புத்தக நிலையம் ஆகியோருக்கு விருதுகளை வழங்கினார்.

பின்னர் முதல்வர் பேசியது:

சிறந்த எழுத்தாளர் உள்ளிட்டோருக்கு கேடயம் மற்றும் சால்வை உள்ளிட்டவற்றை வழங்குமாறு சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் கூறினார்.

இதைத் தொடர்ந்து விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொற்கிழி வழங்கச் சொல்வார் என எதிர்பார்த்தேன். அந்த வகையில் காந்தி கண்ணதாசன் எனக்கு ஏமாற்றத்தையே அளித்தார்.

இனிவரும் காலங்களில் இந்நிலை தொடரக் கூடாது என்று கருதி, இச்சங்கத்துக்கு ரூ. 1 கோடி தொகையை எனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்குகிறேன்.

ரொக்கத் தொகையை வங்கியில் நிரந்தரக் கணக்கில் போடுவதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையிலிருந்து சிறந்த எழுத்தாளர், சிறந்த பதிப்பாளர், சிறந்த விற்பனையாளர் என ஆண்டுதோறும் 5 பேரைத் தேர்வு செய்து அவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவதற்கு இத்தொகை பயன்படட்டும்.

ஏற்கெனவே சன் டி.வி. நிறுவனம் மூலம் எனது மனைவியின் பங்குத் தொகையாக கிடைத்த பணம் வங்கியில் போடப்பட்டுள்ளது. இத்தொகை மூலம் கிடைக்கும் வட்டியிலிருந்து ஏழை எளியவர்களின் படிப்புக்கு உதவி, மருத்துவ சிகிச்சைக்கு உதவி போன்றவற்றுக்கு அத்தொகை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் கருணாநிதி.
புத்தகக் கண்காட்சிக்கு நிரந்தர இடம் ஒதுக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் 30-வது புத்தகக் கண்காட்சியை புதன்கிழமை தொடங்கிவைத்து,

  • திருச்சி அகஸ்தியர் புத்தக நிலையத்தை சார்ந்த எஸ். கோபாலகிருஷ்ணன் (சிறந்த புத்தக விற்பனையாளர்),
  • பிரேமா பிரசுரத்தை சார்ந்த ஆர்.எம்.ரவி (சிறந்த பதிப்பகத்தார்),
  • ஹரிஹரன் என்கிற ரேவதி (சிறந்த குழந்தை எழுத்தாளர்),
  • எழுத்தாளர் பிரபஞ்சன் (சிறந்த எழுத்தாளர்) ஆகியோருக்கு விருதுகளை வழங்குகிறார்
  • முதலமைச்சர் கருணாநிதி. உடன் (இடமிருந்து)
  • தொழிலதிபர் நல்லி குப்புசாமி,
  • சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன்.

சென்னை, ஜன. 11: புத்தகக் கண்காட்சிக்கு நிரந்தர இடம் ஒதுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சென்னை எழும்பூர் மற்றும் சைதாப்பேட்டையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கூறினால் அதை அளிப்பதற்கு அரசு தயாராக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 30-வது புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:

இதுபோன்ற கண்காட்சியை நடத்துவதற்கு நிரந்தர இடம் தர வேண்டும் என்று நல்லி குப்புசாமி செட்டி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்கும் வகையில் சென்னையில் எத்திராஜ் கல்லூரி அருகிலும் சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலும் இடம் இருப்பதாக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். இந்த இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்றை வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்கும் பணியைத்தான் எனக்கு விட்டு வைத்திருக்கிறார்.

சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இவ்விரண்டு இடங்களையும் சென்று பார்வையிட்டு இதில் எது வசதியான இடம் என்று முடிவு செய்து கூறினால், அதை வழங்குவதற்கு அரசு தயாராக உள்ளது.

இதற்கான கட்டடத்தை அரசு கட்டுவதா அல்லது பதிப்பகத்தாரே கட்டிக் கொள்வதா என்று அடுத்த கட்டமாக பேசப்பட்டது. இருவரும் சேர்ந்து கூட்டாக கட்டுவதே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.

மாலை, சால்வைக்குப் பதில் புத்தகம்: அரசு விழாக்களில் முக்கியப் பிரமுகர்களுக்கு மாலை, சால்வை அணிவிப்பதற்குப் பதில் புத்தகங்களை பரிசாக வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போடப்பட்டது. அரசு விழாக்களில் இது நிச்சயம் பின்பற்றப்படும் என்றார் கருணாநிதி.

முன்னதாக, சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன் வரவேற்றார். பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் பேசினர். எழுத்தாளர் பிரபஞ்சன் ஏற்புரை வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், திரளான புத்தக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

கண்காட்சியில் மொத்தம் 474 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்குகளை பேட்டரி கார் மூலம் முதல்வர் பார்வையிட்டார்.

Posted in 30th Book Fair, Agathiyar Book Depot, Authors, Azha Valliappa Prize, BAPASI, Best Publisher, Book Fair, Book Updates, Books, Booksellers, Chetput, Durai Murugan, Ethiraj College, Function Pictures, Gandhi Kannadasan, Hariharan, Ka Ganapathy Award, Kizhakku Pathippagam, M Karunanidhi, Madras, Manivaasagam Pathippagam, Nalli Kuppusamy, Official News, Pachaiappa College, Pachaiappaa College, Pachaiyappa College, Permanent Exhibition, Permanent Place, Photos, Prabanjan, Prema Prasuram, Prizes, Public Works Department, Publishers, PWD, Revathy, RM Ravi, S Gopalakrishnan, Sa Meyyappan Award, Saidapet, School Grounds, Shares, St. George Anglo Indian HSS, St. George Anglo-Indian Higher Secondary, Sun Network, Sun TV, Tamil, Thadandar Nagar, Thamizh, Virudhugal, Viruthu, Writers, XXX Book Exhibition | Leave a Comment »

Who will be the next Mayor of Chennai?

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் யார்?- 3 பேர் பெயர் அடிபடுகிறது

சென்னை, அக்.23-

சென்னை மாநகராட்சி தேர்தல் கடந்த 13 மற்றும் 15 தேதிகளில் நடந்து முடிந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை கடந்த 20-ந்தேதி நடந்தது. மொத்தம் 155 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில்

  • 90 இடங்களில் தி.மு.க.வும்,
  • 38 இடங்களில் காங்கிரசும்,
  • 17 இடங்களில் பா.ம.க.வும்,
  • அ.தி.மு.க. 4 இடங்களிலும்,
  • இந்திய கம்ïனிஸ்டு,
  • விடுதலை சிறுத்தைகள் தலா 2 இடங்களிலும்,
  • ம.தி.மு.க.,
  • பகுஜன்சமாஜ் தலா ஒரு இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளன.

கடந்த 2001- ம் ஆண்டு மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. 67 இடங்களை கைப்பற்றியது. இதன் பின்பு மற்ற கட்சியில் இருந்து விலகி சில கவுன்சிலர்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்ததால் அதன் பலம் 77 ஆக உயர்ந்தது.

மாநகராட்சி மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தின் காரணமாக அவர் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த தேர்தலில் 54 வார்டுகளை கைப்பற்றிய தி.மு.க. இந்த தேர்தலில் 90 வார்டுகளை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர்பதவி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மேயர், துணைமேயர் ஆகியோர் தி.மு.க. கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களால் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.

மேயர்பதவி தென்சென்னையை சேர்ந்த கவுன்சிலர் ஒருவருக்கும், துணைமேயர் பதவி வடசென்னையை சேர்ந்த கவுன்சிலருக்கும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேயர் பதவிக்கு

  • மா.சுப்பிரமணியம்,
  • தனசேகரன்,
  • சுரேஷ்குமார் ஆகியோர் பெயர் அடிபடுகிறது.

மேயர் பதவிக்கு பெயர் அடிபடும் மா.சுப்பிரமணியம் தென்சென்னை மாவட்டத்தில் 140-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவர் கடந்த முறை மாநகராட்சி மண்டலக்குழு தலைவராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தி.மு.க. மாநில இளைஞரணி துணைச்செயலாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்றத்திற்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அந்த தேர்தலில் இவரை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தபோது மா.சுப்பிரமணி மாசற்றவர் என்று பாராட்டி பேசினார். மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக பணியாற்றியபோது அவருடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர். எனவே சென்னை மாநகராட்சி மேயராக இவரை தேர்ந்தெடுக்க அதிகவாய்ப்புகள் இருப்பதாக தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது பற்றி மா.சுப்பிரமணியத்திடம் கேட்டபோது, “மேயர் பதவி பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் முடிவு செய்வார்” என்றும் கூறினார்.

இதேபோல் 130-வது வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தனசேகரன் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. தனசேகரன் தி.மு.க. வுக்கு சோதனைஏற்பட்ட காலத்தில் எல்லாம் களத்தில் இறங்கி கட்சிக்காக தீவிரமாக பணியாற்றுபவர். தி.மு.க. பகுதிகழக செயலாளராக இருந்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குண்டர்கள் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சியில் மழைக்காலத்தில் எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தனசேகரன் தான் காரணம் என்று கூறி போலீசார் அவரை கைதுசெய்தனர். இவர் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது என்று கூறி கருணாநிதி போராட்டம் நடத்தினார். உச்சநீதிமன்றம் வரை சென்று, இவர் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்பதை நிரூபித்து காட்டினார். கே.கே.நகர் பகுதியில் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக அரும்பாடு பட்டவர். ஆகவே இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமில்லாமல் 86-வது வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்தெடுக்கப்பட்ட சுரேஷ்குமார் பெயரும் மேயர்பதவிக்கு அடிபடுகிறது. காரணம் அவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றிபெற்ற சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பகுதிகழக செயலாளராக இருந்து பொதுமக்களின் பல்வேறு பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு உதவினார்.

சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் மேயர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

துணைமேயர் பதவிக்கு

  • 111-வது வார்டு கவுன்சிலர் செல்வி,
  • 69-வது வார்டு சாந்திபாய்,
  • 68-வது வார்டு கவுன்சிலர் வசந்தி

ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 25-ந்தேதி சென்னை மாநகராட்சி கவுன்சிலராக தேர்வுசெய்யப்பட்ட 155 பேரும் பதவியேற்றுக்கொள்கிறார்கள்.
29-ந்தேதி காலை சென்னை மாநகராட்சி மன்றத்தில் மேயர்தேர்தல் நடைபெறுகிறது.

Posted in Chennai, Chepauk, Civic Polls, Dhanasekaran, Elections, KK Nagar, Local Body election, Ma Subramaniam, Madras, Mayor, Radha Ravi, Saidapet, Santhi bai, Selvi, South Madras, Sureshkumar, Tamil Nadu, Vasanthi | Leave a Comment »