Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Eezhavendhan’ Category

Another Red Cross Staff Assassinated in Jaffna & Eelaventhan loses membership in Sri Lanka parliament

Posted by Snapjudge மேல் திசெம்பர் 17, 2007

தவறு தன்னுடையதல்ல என்கிறார் ஈழவேந்தன்

இலங்கை நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த விடயத்தில் தான் ஒரு சூழ்நிலைக் கைதி என்றும் ஆகவே தனது நிலைமையை உணர்ந்து தனது கட்சித் தலைமைப்பீடம் தன்னை மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கும் என்று தான் நம்புவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.

தனது விடுமுறையை நீட்டிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் ஊடாக தான் ஒரு கடிதத்தை அனுப்பியதாகவும், ஆயினும், நாடாளுமன்ற பணியாளர் ஒருவர் வழங்கிய தவறான தகவல் காரணமாக அவர் அந்த கடிதத்தை கையளிக்காமல் விட்டுவிட்டதாகவும், அதனால்தான் இன்று தான் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த நிலையில் தவறு தன்னுடையது அல்ல என்றும், குறிப்பிட்ட நாடாளுமன்ற அதிகாரி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை (சிறியளவு தவறாயினும்) ஆகியோரின் தவறினாலேயே தான் தற்போது இந்த இக்கட்டான நிலைக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக நான்கு நாட்கள் தான் நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருந்து மூன்று உரைகளை ஆற்றியிருந்ததாகவும், ஆயினும் வாக்களிப்பு தினத்தன்றே தான் அதற்கு தடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தவிவகாரம் குறித்து ஈழவேந்தன் மற்றும் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே ஆகியோரது செவ்விகளை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


செஞ்சிலுவைச் சங்க ஊழியர் கொலை

யாழ் நகரப் பகுதி
யாழ் நகரப் பகுதி

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் கடந்த 14 ஆம் திகதி கடத்தப்பட்டு பின்னர் கைதடியில் சடலமாக நேற்று கண்டெடுக்கப்பட்ட செஞ்சிலுவைச் சங்க ஊழியராகிய 43 வயதுடைய சூரியகாந்தி தவராஜா கொல்லப்பட்டிருப்பதை சர்வதேச செஞ்சிலுவைக் குழு இன்று அறிக்கையொன்றின் மூலம் கண்டித்திருக்கின்றது,

இது குறித்து கருத்து தெரிவித்த சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் சார்பில் குரல் தரவல்ல அதிகாரியாகிய டாவிடே விக்னட்டி, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் கிளையில் பல வருடங்களாக அவர் பணியாற்றி வந்துள்ளதுடன், மூன்று வருடங்களாக பருத்தித்துறை பிரிவின் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவராகவும் அவர் பணிபுரிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தவராஜா கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினராலும் அதிகாரிகளினாலும் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், இது, இந்த வருடத்தில் இடம்பெற்ற இரண்டாவது பாரதூரமான சம்பவமாகும் எனவும், இதனால், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது இன்று இலங்கையில் பணியாற்றும் செஞ்சிலுவைக் குழுவினர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் பணியாற்றும் சூழல் குறித்தும் கவலையடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை சர்வதேச செம்பிறைச் சங்கம் கோரியிருக்கின்றது என்றும் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவின் பேச்சாளர் டாவிடே விக்னட்டி தெரிவித்தார்.


Posted in Assassinations, Budget, dead, Eelam, Eelavendhan, Eelaventhan, Eezham, Eezhavendhan, Eezhaventhan, Jaffna, Killed, LTTE, Murder, NGO, Red Cross, RedCross, Sri lanka, Srilanka, UN, UNICEF, Volunteer, Volunteering, Volunteers | 1 Comment »