பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலி
![]() |
![]() |
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில், பழங்குடியின நிர்வாக சபை ஒன்றின் கூட்டத்தில் தற்கொலையாளி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் அதில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
அந்தப் பகுதியில் இயங்கும் தலிபான்களுக்கு எதிராக ஒரு பழங்குடியின ஆயுதக்குழுவை உருவாக்குவதற்காகவே இந்தக் கூட்டம் ஒரக்ஸாய் பிராந்தியத்தில் கூட்டப்பட்டது.
600 பேர் கலந்துகொண்ட கூட்டத்துக்குள் நடந்து சென்ற தற்கொலையாளி குண்டை வெடிக்கச் செய்ததாக ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.