Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Ramar’

Sethu Bridge – Ramar Palam aka Hanuman Bridge referred in Ramayanam – History, Current state & Backgrounders

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2007

1. காலம்: பார’தீய’ ஜெகதால கட்சி !

2. பொருனைக்கரையிலே: சேது,பாம்பன்,தனுஷ்கோடி -2

http://porunaikaraiyile.blogspot.com/2006/07/1.html

3. பினாத்தல்கள்: எல்லாப்பக்கமும் �

Voice on Wings said…

//சேது சமுத்திரத்திட்டம் கனிமவளம், சுற்றுச்சூழல் ஆகிய காரணங்களைத் தவிர்த்து, வேறெந்தக் காரணங்களாலும் கைவிடப்படக்கூடாது. புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்பது அரசு தரப்பால் தெளிவாக்கப்பட்டபிறகே தொடரப்படவேண்டும், வெள்ளை யானையாக இருந்தாலும் ஈகோவுக்காக தொடரப்படக்கூடாது!//

அகழ்வுப் பணிகளால் இதுவரை அப்பகுதியில் ஐந்தாறு திமிங்கிலங்கள் மரணித்துள்ளன என்று நேற்று CNN IBN நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. பவளப்பாறைகளுக்கும் பேராபத்து என்ற கருத்து நிலவுகிறது. பொருளாதார அடிப்படையிலும் இத்திட்டம் பெரிய அளவில் பலன் தரபோவதில்லை என்ற தகவல்களே கிடைக்கின்றன.

இப்படியிருக்கையில் Ram factor ஒரு அருமையான சந்தர்ப்பம் நம் அதிகார வரக்கத்திற்கு. மூட நம்பிக்கை எதிர்ப்பு என்ற பெயரில் இத்திட்டத்திற்கான ஆதரவைத் திரட்டி, சில தனிநபர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒரு திட்டத்தை அவசர கதியில் முன்னெடுத்துச் செல்கின்றனர் நம் ஆட்சியாளர்கள்.
September 23, 2007 11:08 AM

4. நினைத்தேன் எழுதுகிறேன்: வலைப்ப�

5. Thoughts at random: Rama,Sethu and Mr. Karunanidhi

6. E=mc^2: Where are the Indian Scientists?

7. குப்பைகள்: வராதா? வரக்கூடாதா? – கலைஞர் கடிதம்

8. குசும்பு: சென்னை வந்த ராமன்

9. பங்கு வணிகம்: இந்தியா, இலங்கை, சேது & இராமர் பாலம்

10. வெட்டிப்பயல்: கர்ம வீரர், கலைஞர�

News:
11. தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர்

12. கண்ணகி கதையை நம்புபவர்கள் ராமர�

13. மத்திய திமுக அமைச்சர்களை டிஸ்ம�

14. பஜ்ரங் தள், VHP, ராமசேனா தொண்டர்கள

15. இராமர் பாலம் – செய்தித் தொகுப்பு

16. சென்னை பஸ் எரிப்பு: கருணாநிதி க�

17. பெங்களூரூ வன்முறை – இராமர் சேது �

18. Ram Sethu controversy: Ambika Soni offers to resign | சற்றுமுன்…

19. இராமர் இருப்பு: அரசு பின்வாங்கி

20. இராமர் பாலம் – ஆதாரங்கள் இல்லை – ம

21. ராமர் பாலத்தை இடிக்க உலகளவில் க

Cartoons:

22. Ramar Sethu issue | சற்றுமுன்…

23. Dinamani’s Mathy on Congress vs BJP in Ramar Sethu Issue | சற்றுமுன்…


ஜெயலலிதா கூறும் ராமர் பாலம் கடலுக்கடியில் 18 மைல் நீளமுள்ளது

விழுப்புரம், ஜன.29: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலம் வரலாற்று தொன்மைமிக்க பாலமாகும்.

சேது கடல் கால்வாய் அமைக்கும்போது ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்தியாவை இலங்கையுடன் இணைக்கும் இந்த பாலத்தை சேது பாலம், ராமர் பாலம், அனுமன் பாலம் என்றழைக்கின்றனர். இந்திய வரைபடத்தில், இந்த பாலத்தை ஆதம் பாலம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கி இலங்கை வரை 18 மைல் தூரத்துக்கு கடலுக்கு அடியில் இப் பாலம் உள்ளதை செயற்கைக்கோள் எடுத்த புகைப்படம் விளக்குகிறது.

பாக் நீரிணைப்பில் உள்ள இப் பாலத்தின் மீது மணல் குவிந்துள்ளதால், சில இடங்களில் மட்டும் இப்பாலம் வெளிப்படுகிறது. இவற்றை திட்டு என்றும் குட்டித் தீவு என்றும் மீனவர்கள் அழைக்கின்றனர்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்த பாலத்தின் வரலாற்று தொன்மையை ஏற்கெனவே விளக்கியுள்ளது. இப்பாலம் 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகவும், பிரளயம் ஏற்பட்ட பின்னர் இப்பாலம் கடலுக்கடியில் மூழ்கி விட்டதாகவும் ஆய்வுகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் உள்ள இப்பாலம், கோரல் ரீப் (இர்ழ்ஹப்நற்ர்ய்ங்) என்றழைக்கப்படும் பவளப்பாறைகளைக் கொண்டது. இப்பவளப்பாறை படுகையில் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பல வசிப்பதோடு, இனப்பெருக்கம் செய்கின்றன.

திருப்புல்லாணி கடற்கரையிலிருந்து துவங்கும் இப்பாலத்தின் மீது இப்போதும் சிலர் நடந்து செல்கின்றனர். கடலுக்கடியில் மூழ்கியுள்ள பாலத்தின் மீது நடந்து சென்றால் முழங்கால் அளவுக்கு மட்டும் கடல்நீர் உள்ளது. 5 கி.மீ. தூரம் வரை நடந்து செல்லலாம். படகுகள் கரையிலிருந்து நடுக்கடலுக்கு செல்ல வழி ஏற்படுத்துவதற்காக, இப்பாலத்தில் சில இடங்களில் உடைப்பை மீனவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

கற்கள் மிதக்கும்

அதிசயம்

இப்பாலத்தில் உள்ள கற்களைப் பெயர்த்து எடுத்தால், அவை கடலில் மூழ்காமல் மிதக்கின்றன. இந்த கற்களை ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்தம் அருகே உள்ள மடத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர். அதிசயமான இக்கற்களை பக்தர்கள் வாங்கிச் சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் இதற்கு ஆதம் பாலம் என்று பெயரிட்டனர். இலங்கையில் இறக்கி விடப்பட்ட உலகின் முதல் மனிதரான ஆதாம், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வர இப்பாலத்தைப் பயன்படுத்தியாகவும், ஆகவே இப்பாலத்துக்கு ஆதம் பாலம் என பெயரிடப்பட்டதாவும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாம், ஏவாளுக்கு பிறந்த குழந்தைகளான ஆபில், ஹாபில் ஆகிய இருவரில் ஒருவரின் சமாதி ராமேஸ்வரம் ரயில் நிலையம் அருகே உள்ளது. இஸ்லாமிய குடும்பத்தினரால் பராமரிக்கப்படும் ஆபில்-ஹாபில் தர்ஹாவுக்கு செல்வோரிடம், ஆதம் பாலம் என்பது ஆதாம் நடந்த உலகின் முதற் பாலம் என்று விவரிக்கின்றனர்.

இலங்கை மன்னர் ராவணன் கடத்திய சீதா பிராட்டியை மீட்க, ராமர் தலைமையில் அனுமன் அமைத்த பாலம் இது என்று கூறும் இலங்கை வாழ் மக்கள், இதை அனுமன் பாலம் என்று அழைக்கின்றனர்.

சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாரதியார் இப்பாலத்தைப் பற்றி பாடியுள்ளார். ராமேஸ்வரம் தீவை, தமிழகத்துடன் தரை வழியில் இணைக்க பாம்பன் பாலம் கட்டிய கேமன் இந்தியா என்ற நிறுவனம், ஆதம் பாலத்தை பயன்படுத்தி இலங்கைக்கு தரைவழிப் பாலம் அமைக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆலோசனை வழங்கியிருந்தது.

—————————————————————————————————————————————————————-
ராமர் பாலத்தைக் காப்போம்

இல. கணேசன்

“”ஏலத்துக்குத் தயாராக உள்ள சிற்பம்” குறித்து சமீபத்தில் பத்திரிகைகளில் ஒரு செய்தி வெளியானது. அது ஒரு சிறிய சுண்ணாம்புக் கல் சிங்கச் சிற்பம். அதன் ஏல மதிப்பு 7 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படி அந்த சிற்பம் தயாரான பொருள் விலை உயர்ந்ததா அல்லது கலை வேலைப்பாட்டில் மிகச் சிறந்ததா என்றால், எதுவுமில்லை. அதன் விலைமதிப்பு உயர்ந்ததற்கு ஒரே காரணம், அது 5000 ஆண்டு பழைமையானது என்பதே!

உலகின் எல்லா நாடுகளும் பழைமையைப் போற்றுகின்றன. பாகிஸ்தானில் உள்ள கட்ராஸ் ஆலயத்தின் பின்னணி என்ன? மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தாகம் மேலிட்டு, ஒரு குளத்தில் நீர் அருந்தச் சென்றனர். அப்போது யக்ஷனது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாததால், நால்வரும் மடிய, தருமர் சென்று யக்ஷனது கேள்விக்குப் பதில் கூறி நான்கு சகோதரர்களும் உயிர் மீட்ட சம்பவம் நடந்த இடம். அந்த இடத்தில் ஒரு கோயில் உள்ளது. அது சிதிலமடைந்துள்ளது. அதைப் புதுப்பித்துப் பாதுகாக்க பாகிஸ்தான் அரசு ரூ. 10 கோடி ஒதுக்கியுள்ளது.”

இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானின் அரசுக்கு, மகாபாரதத்தின்மீது நம்பிக்கை இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் தன் தேசத்தின் தொன்மைச் சிறப்புடைய பழம்பொருள்களைப் பாதுகாக்கும் அக்கறை அதற்கு உள்ளது. ராமன் இருந்தார் என்பதை ஆட்சியில் உள்ளவர்கள் நம்ப மறுக்கலாம். ஆனால் கோடிக்கணக்கான மக்கள் நம்புகின்ற ஒரு வரலாற்றுச் சின்னத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டாமா? அக்கறை செலுத்தாவிட்டாலும் ராமர் பாலத்தைத் தகர்ப்பதையாவது தவிர்க்க வேண்டாமா?

அது ராமர் நடந்த பாலம் என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை; நம்பிக்கைக்கு ஆதாரம் கேட்பது தவறு. வணக்கத்துக்குரிய முகமது நபிகளின் திருமுடி ஒன்றைப் பேழையில் வைத்து ஹஸரத்பால் மசூதியில் போற்றுகின்றார்கள். அது அவர்களது நம்பிக்கை. நாம் அதை மதிக்கிறோம். புத்தரது பல் ஒன்றை வைத்து பௌத்தர்கள் பாதுகாக்கிறார்கள். அது அவர்களது நம்பிக்கை. அதையும் நாம் மதிக்கிறோம்.

இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டு எவரும் கேள்வி கேட்கக்கூடாது. கன்னியாகுமரியின் பாதம் விவேகானந்தப் பாறையில் பதிந்துள்ளதை நாம் நம்புகிறோம். நிரூபிக்க கைரேகை நிபுணரது சான்றிதழைக் கொண்டுவா என்றா கேட்பது?

ராமேசுவரம் மீனவர்கள் தங்களது படகில், யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு ராமர் பாலத்தைக் காட்டுகிறேன் என அழைத்துச் சென்று, கரையிலிருந்து சிறிதுதூரம் சென்று கடல் நடுவே தண்ணீரில் இறக்கிவிட்டு நடக்கச் சொல்வார்கள். இது பாரம்பரியமாக எத்தனையோ ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. “நாஸô’ படமெடுத்துக் காட்டிய பிறகுதான், அது தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை தொடர்ந்து இருப்பதை உலகம் உணர்ந்தது. சுனாமி வந்தபோது கடல் வெகுதூரம் உள்வாங்கியது. அப்போது இந்தப் பாலத்தை நூற்றுக்கணக்கானோர் நேரில் பார்த்தார்கள்.

அது சரி, ராமர் பாலம் என மக்கள் சொன்னால் போதுமா? வரலாற்று ஆதாரம் வேண்டாமா எனக் கேட்கலாம். சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள அரிய ஆவணங்களில் ஒன்று, ஆங்கிலேயர்கள் 1788 ஜனவரி 1-ல் தயாரித்த வரைபடம். இஸ்லாமிய ஆட்சியின் இறுதிக்காலம் (நன்ழ்ஸ்ங்ஹ் ம்ஹல் ர்ச் ஏண்ய்க்ன்ள்ற்ட்ஹய் ன்ய்க்ங்ழ் ஙர்ஞ்ன்ப் உம்ல்ண்ழ்ங்) தொடர்பானது. அதில் தனுஷ்கோடி – தலைமன்னார் பகுதிக்கு ராமர் பாலம் என்றே பெயரிடப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு, ஒரு வரைபடம் – நெதர்லாந்து வரைந்தது. அதில் இதே பகுதியை ராமர்கோயில் என எழுதி, ராமர் பாலம் என அடைப்புக்குறியில் குறிப்பிட்டுள்ளனர். ராமன் வாழ்ந்ததே கற்பனை; எனவே, அவர் தெற்கே வந்ததும் கற்பனை எனக் கூறுவோரும் உள்ளனர். அவர்களுக்கு ஒரு கேள்வி. ராமேசுவரம் என்கிற பெயர் எப்படி வந்தது? ராமன், ஈஸ்வரனை அதாவது சிவனைப் பூஜித்த ஸ்தலம் என்பதால்தானே?

அந்தக் கடற்கரைப் பகுதி புனிதமானதாகக் கருதப்படுகிறதே, அது அந்தப் பகுதிக்கு ராமர் வந்த பிறகுதானே? அது சேது சமுத்திரம் என்று பெயர் பெற்றுள்ளதே! சேது தீர்த்தம் என்றும் சொல்கிறார்களே! சேது என்னும் சமஸ்கிருத சொல்லுக்குப் பாலம் என்பது பொருள். தமிழ் அகராதிப்படி செயற்கைக்கரை என்று பொருள். செயற்கையாக அமைந்த பாலம் என்று பெயர். சேது சமுத்திரம் என்பதற்கு, பாலத்தை ஒட்டியுள்ள சமுத்திரம் என்றுதானே பொருள்? அந்தப் பாலத்திற்கு அதிபதி – தலைமன்னார் வரை – சேதுபதி. பாரதத்தின் எல்லையைப் பற்றி குறிப்பிடும்போது சேது முதல் இமயம் வரை – சேது ஹிமாசலம் என்றுதான் குறிப்பிடுவார்கள். இந்திய அரசு 1767-ல் தயாரித்த முதல் நிலஅளவைக் குறிப்பேட்டில் அதன் சின்னத்தைப் பொறித்து கீழே ஆசேது ஹிமாசலம் என்றே எழுதியிருக்கிறார்கள்.

ராமன் கட்டிய சேதுவின் பெயரில்தான் சேது சமுத்திரத் திட்டம் அமைந்துள்ளது. அரசின் திட்டப்படி அது நிறைவேறினால் திட்டம் வெற்றி பெறும். சேது இருக்காது. ராமநாதபுர மாவட்ட விவரச் சுவடிகளை தமிழ்நாடு அரசு 1990-ல் வெளியிட்டது. அதற்கு அன்றைய முதல்வர் எழுதிய முன்னுரையில், ராமநாதபுர மாவட்ட விவரச் சுவடியை வெளியிட்டிருப்பதன் வாயிலாக இம்மாவட்டத்தின் சமூக வரலாற்றை ஆராய்வதற்குப் பயனுடைய பணி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும், நல்ல பணிகளிலும் ஆராய்ச்சி வேலைகளிலும் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் இந்த விவரச்சுவடி பெரிதும் பயன்படும் என குறிப்பிட்டுள்ளார்.

வடமொழியில் இது நள சேது என்றும் தமிழில் திருவணை என்றும் சொல்லப்படுகிறது. ராம சேது என்றும் சொல்வர்; ஆதி சேது என்ற பெயரும் உண்டு.” இந்த விவரங்கள் அடங்கிய அரசுப் பதிப்புக்கு முன்னுரை எழுதிய அன்றைய முதல்வர்தான், இன்றும் முதல்வராக உள்ளார்.

இது மக்களுடைய நம்பிக்கைக்குரிய ஒரு தொல்பொருள் என்பது மட்டுமல்ல. இன்றைய தினம் இந்திய அரசு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்வதில் பிடிவாதமாக இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் பயனாக நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை அணுஈனுலை மூலம் அபரிமிதமாகப் பெறலாம் என்பது எத்தனை காலத்துக்கு? அமெரிக்கா விரும்புகிறவரை மட்டுமே!

ஆனால் இந்த ராமர் பாலத்தையொட்டி (நீங்கள் அதற்கு என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் சரி) சுமார் 400 ஆண்டுகளுக்கு நாடு முழுவதற்கும் தங்குதடையற்ற மின்சாரம் அளிப்பதற்குத் தேவையான அணுசக்தி மூலப்பொருள் மண்டிக் கிடக்கிறதே!

ராமர் பாலம் என்று அழைப்பதற்கு எங்களது பகுத்தறிவு இடம் கொடுக்கவில்லை என்று கருதுவோர், இந்த அணு மின்சக்தி மூலப்பொருளுக்காகவேனும் சேது திட்டத்தின் வழித்தடத்தை மாற்றலாமே?

சேது சமுத்திரத் திட்டத்தைக் கொள்கைரீதியாக ஏற்று ஆய்வுப் பணிகளைத் துவக்கியது முன்னாள் பிரதமர் வாஜ்பாய்தான். வாஜ்பாய் ஆட்சிக் காலத்துக்கு முன்பு இரு வழித்தடங்கள் பரிந்துரைக்கப்பட்டன. ஒன்று மண்டபம் அருகே. இரண்டாவது – பாம்பன் அருகே. முதல் வழித்தடத்தை 1956-ல் பரிந்துரைத்த எ.ஆர். ராமசாமி முதலியார், ஆதாம் பாலத்தை (அதாவது ராமர் பாலத்தை) இடிக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்துள்ளார்.

வாஜ்பாய் அரசில் 3-வது வழித்தடம் பரிந்துரைக்கப்பட்டது. அது கோதண்டராமர் ஆலயத்தைப் பாதிக்கும் என்பதால் எதிர்ப்பு கிளம்பி கைவிடப்பட்டது.

பிறகு 4-வது வழித்தடம் கோதண்டராமர் கோயிலுக்கும் எஞ்சியுள்ள தனுஷ்கோடி பகுதிக்கும் இடையே உள்ள ஆளில்லா நிலப்பகுதியில் தோண்டப் பரிந்துரைக்கப்பட்டது. இது நேரடியான பாதை. குறைந்த தூரம், குறைந்த செலவு. இரு பகுதியிலும் உள்ள நிலப் பகுதிகள் சுவர்போல அமையும். ராமர் பாலத்துக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.

பக்தியின் அடிப்படையிலும் அறிவியல் முன்னேற்றத்தின் அடிப்படையிலும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்; ஆனால் அது ராமர் பாலத்துக்குப் பாதிப்பு இல்லாத வகையில் நான்காவது வழித்தடத்தில் அமைய வேண்டும் என்பதுதான் இந்துமதத்தில் நம்பிக்கையுள்ள பெருவாரியான மக்களின் விருப்பம். பெரும்பான்மை விருப்பத்திற்கு மாறாகத்தான் செயல்படுவோம் என்று இவர்கள் மார்தட்டினால், மக்களாட்சித் தத்துவத்தில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் பொருள். அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை மக்கள் மன்றம் தீர்மானிக்கும்.

(கட்டுரையாளர்: மாநிலத் தலைவர், பாரதீய ஜனதா கட்சி).

——————————————————————————————————————————

கடவுள் காப்பாற்றட்டும்

Dinamani Editorial (Sep 21, 2007)

ஏதாவது கேட்டால், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், வேறு எதையாவது சொல்லி கேள்வியைத் திசைதிருப்புவது என்பது முதல்வர் கருணாநிதியின் வாடிக்கை. ராமர் பற்றி விமர்சித்து இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் நீங்கள், ஏசுநாதர் பற்றியோ, நபிகள் நாயகம் பற்றியோ விமர்சிப்பதில்லையே என்ற கேள்விக்கு, “”ராமர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம்; ஆரிய-திராவிடப் போராட்டத்தின் கதைதான் ராமாயணம்; நேரு சொன்னார், ராஜாஜி சொன்னார் என்று எதைஎதையோ சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் சொல்லி எங்கெங்கோ விஷயத்தைக் கொண்டு சென்றிருக்கிறார்.

பகுத்தறிவுவாதம், இறைமறுப்பு என்பன போன்ற விஷயங்கள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விருப்பம். இவையெல்லாம் திராவிட அரசியல் உலகுக்கு எடுத்துரைத்த புதுக்கருத்தல்ல. சொல்லப்போனால் பொதுவுடைமைவாதிகளிடமிருந்து திராவிட இயக்கங்கள் அரைகுறையாகக் களவாடிய விஷயங்கள்தான் இவை. திராவிட இயக்கத்தினரைப்போல ஊருக்குப் உபதேசிக்காமல், பகுத்தறிவுவாதத்தையும் இறைமறுப்பையும் வாழ்க்கைநெறியாகவே கடைப்பிடிப்பவர்கள் பொதுவுடைமைவாதிகள்தான்.

இறைமறுப்பு என்பது இந்து மதத்தின் பல்வேறு தத்துவங்களில் ஒன்று என்பது மட்டுமல்ல, எத்தனையோ ஞானிகளும் சித்தர்களும் சமயக்குரவர்களும் சொல்லிவிடாத பகுத்தறிவுவாதத்தையும் இறைமறுப்பையும் வேறு யாரும் சொல்லிவிடவும் இல்லை. அவர்களைப் பொருத்தவரை அவை தத்துவம். முதல்வர் கருணாநிதியைப் பொருத்தவரை இவை மூன்றாம்தர வாக்கு வங்கி அரசியல்.

வால்மீகி எழுதிய ராமாயணம் என்கிற காவியத்தின் கதாநாயகன்தான் ராமர். “நானும் எத்தனையோ கதைகள் எழுதியிருக்கிறேன். அதில் வரும் கதாநாயகர்களைப்போல ராமனும் ஒரு கதாநாயகன்தான்’ என்கிறார் முதல்வர் கருணாநிதி. இவர் எழுதிய “அவன் பித்தனா, பூமாலை, மறக்க முடியுமா போன்ற படங்களின் கதாநாயகர்களின் பெயர் என்ன என்று கேட்டால் அந்தப் படத்தைப் பார்த்த எத்தனை பேருக்கு இப்போது ஞாபகம் இருக்கும்? களவொழுக்கத்தை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்ட இவரது கதைகளை இப்போது பார்த்தால் யாராவது ரசிப்பார்களா? ஆனால், ஆயிரக்கணக்கான வருடங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லியும் எழுதியும் கேட்டும் பார்த்தும் திகட்டாத ஒரு காவியத்தை, இவரது களவொழுக்கக் கதைகளுடன் ஒப்பிடுவது எந்தவிதத்தில் நியாயம்?

ராமாயண காவியத்தில் எத்தனைஎத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் நமது முதல்வருக்குத் தெரியவில்லை. வால்மீகி ராமாயணத்தில் சோமபானம் அருந்தினார் ராமர் என்று ஒரு வரி இருப்பதாகவும் அதை விவாதிக்கத் தயாரா என்றும் கேட்கிறார் முதல்வர். ஏகபத்தினி விரதன் ராமன் என்பதெல்லாம் அவருடைய கவனத்தைக் கவரவில்லை என்றால் எங்கே கோளாறு?

“வேறு பாதையில் அமைந்தாலும் பரவாயில்லை. எந்தப் பாதை என்பதல்ல பிரச்னை. எங்களுக்குத் தேவை சேது சமுத்திரத் திட்டம் என்றும், ராமர் பாலத்தை இடித்தே தீர வேண்டும் என்று தான் வலியுறுத்தவில்லை என்றும் முதல்வர் கூறியிருக்கிறார். நல்லதொரு மனமாற்றம். வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

அப்படியானால் ராமர் பற்றிய சர்ச்சை ஏன்? தேவையில்லாமல் ராமரை முதல்வர் விமர்சிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? தன்னுடைய மூன்றாம்தர களவொழுக்கக் கதாநாயகர்களுடன் காவிய நாயகனான ராமரை ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன?

முதல்வர் கருணாநிதிக்கு ஒரு ராசி உண்டு. தனது சொந்த பலம், செல்வாக்கைவிட சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவரை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்திருக்கின்றன. ஒவ்வொருமுறை ஆட்சியில் அமரும்போதும், அவருக்குப் பேராதரவு உருவாகும். அவரை விமர்சித்தவர்கள்கூட, அவர் கனிந்துவிட்டார், மாறிவிட்டார் என்றெல்லாம் கூறி புளகாங்கிதம் அடைவார்கள்.

இவையெல்லாம் ஓரிரு ஆண்டுகளுக்குத்தான். பிறகு, தேவையில்லாத எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவார். அவரது ஆட்சி மக்களால் விரும்பப்படாத ஆட்சியாக மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துவிடும். அந்த ராசி இந்தமுறையும் வேலை செய்யத் தொடங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது. கடவுள் காப்பாற்றட்டும்.

——————————————————————————————————————
இன்று சேது, நாளை எவரெஸ்ட்?

டி.ஜே.எஸ். ஜார்ஜ்
1920-களில் திராவிட இயக்கத்துக்குத் தூண்டுகோலாக இருந்த சுயமரியாதைக் கொள்கை எங்கே போனது? இன்றைக்கு திராவிட அரசியல்வாதிகளை ஆட்டிப் படைக்கும், தங்களை மட்டும் வளர்த்துக் கொள்ளும் போக்கு எப்படி உருவானது?

“திராவிட நாட்டில்’ அண்மைக்காலமாக எழுந்துள்ள மோதல் போக்குச் சூழல்களால்தான் இக் கேள்விகள் எழுகின்றன. கர்நாடகத்தில், குறிப்பாக பஸ் பயணிகள் எரிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணமான விரோத உணர்வு அரசியலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

கர்நாடகத்தில் அரசியல்வாதிகளைச் சார்ந்து நின்று செயல்படும் காவல் துறை, இந்த விஷயத்தை மெத்தனமாகக் கையாண்டதால் நிலைமை மேலும் மோசமானது.

பெரும்பாலான மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் இத்தகைய மோசமான சித்து விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். தெலுங்கு- கங்கை, காவிரி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்னைகளில் தமிழக அரசு தனது அண்டை மாநிலங்களுடன் மோதல்போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான சர்ச்சையால் வகுப்புவாத உணர்வுகள் தூண்டப்பட்டதால், இந்த மோதல்போக்கு தேசிய அளவில் விரிவடைந்துள்ளது. ஆளும் திமுகவில் அதிகார மையமாகச் செயல்படும் குழுவினர், இந்தப் பிரச்னைகள் அனைத்திலும் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். தாங்கள் சொல்வதுதான் சரி, மற்றவர்கள் சொல்வது சரியல்ல என்பது இவர்களுடைய நிலைப்பாடு. இது சரிதானா?

ஒரு தலைமுறைக்கு முன்னதாக, ராமர்- சீதை கதாபாத்திரங்களைக் கலந்து “”கீமாயணம்” என்ற நாடகத்தை அரங்கேற்றினார் காலஞ்சென்ற நடிகர் எம்.ஆர். ராதா. இன்றைய சூழ்நிலையில் அதை நினைத்துகூடப் பார்க்க முடியாது. அது தேவையற்றதும்கூட.

1852-ல் “”மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன்” என்ற அமைப்பால் வடிவம் கொடுக்கப்பட்ட திராவிடக் கொள்கையில் சில முக்கிய அம்சங்களும் இருந்தன. 1920-களில் திராவிடக் கொள்கையானது மேலும் வலிமை பெற்றது; நீதிக் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு வழிகோலியது.

பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைதான் திராவிடக் கொள்கைக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. பல்வேறு விஷயங்களில் பெரியார் மாறுபட்ட குணாதிசயங்களுடன் செயல்பட்ட போதிலும், நவீன இந்திய வரலாற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். திராவிட அரசியல் வித்தியாசமாகவே இருந்தது. நீதிக் கட்சி வலுவாக இருந்த காலகட்டத்தில், நிலச் சீர்திருத்தம், பெண்கள் விடுதலை ஆகிய அடிப்படைக் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அண்ணாவுக்கு, தெளிவான அரசியல் இலக்குகள் இருந்தபோதிலும், பள்ளிகளில் சரியான வரலாற்றைப் போதிப்பதற்காக இயக்கம் நடத்தினார்; 1950-களின் பிற்பகுதியில் சுமார் 20 ஆயிரம் திமுக தொண்டர்கள் பள்ளி ஆசிரியர்களாக மாறினர்.

தற்போதைய திமுக தலைமைக்கு இதுபோன்ற தொலைநோக்குப் பார்வை இல்லை. சிசுக் கொலைக்கு எதிராக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த 20 ஆயிரம் திமுக தொண்டர்களை கிராமங்களுக்கு அனுப்பலாமே? தமிழகம் முழுவதும் சாதிகளின் பெயரால் நடைபெறும் தொடர் மோதல்களுக்கு முடிவு கட்ட பயிற்சி பெற்ற ஆண்களையும், பெண்களையும் கிராமங்களுக்கு அனுப்பலாமே? இதன்மூலம், சாதிய உணர்வுகளுக்கு முடிவு கட்ட உறுதி ஏற்கலாமே?

இந்தக் கேள்விகளுக்கு வாக்கு வங்கி என்ற தேர்தல் ஜனநாயகத்தில்தான் பதில்கள் பொதிந்து கிடக்கின்றன. வாக்குகளைப் பெறுவதற்கு சாதிதான் குறுக்கு வழி. பெண் சிசுக் கொலை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை உள்ளூர் விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாமே தவிர, வாக்குகளைக் கவர்வதற்கு அவை எந்தவிதத்திலும் உதவாது.

காவிரி நீர், தமிழகத்துக்கு புதிய ரயில்வே கோட்டங்கள் போன்ற எளிதான உணர்வுப்பூர்வமான விஷயங்கள் மூலம் பெருவாரியான மக்களின் வாக்குகளைக் கவர்ந்துவிட முடியும் என்பதால், மற்றவற்றைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள திமுக அமைச்சர்கள், தமிழகத்துக்கு மட்டுமேயான மத்திய அமைச்சர்களாகத்தான் செயல்படுகின்றனர். சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலை ஆழப்படுத்துவதற்கு டி. ஆர். பாலுவிடம் ஏராளமான காரணங்கள் இருக்கலாம். ஆனால், இயற்கையின் போக்கை மாற்ற நினைத்தால் பேரழிவு ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

கடற்கரை மணலைத் தோண்டுவதாலும், அலையாத்திக் காடுகளை அழிப்பதாலும் நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு நமக்குக் கற்றுத் தந்த பாடம். இந்த பாடத்தை நாம் கற்றுக் கொண்டோமா?

எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உயரத்தை சில நூறு அடிகள் வெட்டிக் குறைத்தால், அந்த மலைப் பகுதியில் அதிக லாபம் ஈட்டித் தரும் சுற்றுலா மையங்கள் உருவாகலாம். எவரெஸ்ட் சிகரப் பகுதியை வெட்டுவதற்கு இந்த ஒரு காரணம் மட்டும் போதுமா? எவரெஸ்ட் தமிழகத்தில் இல்லாமல் போனதற்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

———————————————————————————————————–
“ஒரு மணி 45 நிமிடத்தை மிச்சப்படுத்த ரூ. 4 ஆயிரம் கோடி செலவா?’

சென்னை, செப். 29: சேது சமுத்தி ரக் கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து மேற்கொள்வதன் மூலம் 1 மணி 45 நிமிடத்தை மட் டுமே மிச்சப்படுத்த முடியும்.
இதற்கு ரூ. 4 ஆயிரம் கோடி செலவு செய்ய வேண்டுமா? என இந்தியக் கப்பல் படையிலிருந்து ஓய்வுபெற்ற கேப்டன் பாலகிருஷ் ணன் கேள்வி எழுப்பினார்.
சேது சமுத்திர கப்பல் கால்வாய் எதிர்ப்பு இயக்கம் சார்பில் சென் னையில் வெள்ளிக்கிழமை சேது சமுத்திரம் குறித்த அறிவியல், பொருளாதார ரீதியான நிலைத் தன்மை குறித்த விவாதம் நடத்தப் பட்டது. இதில் பங்கேற்ற அவர் பேசியது: சேது சமுத்திரக் கால்வாய் திட் டத்தின் மூலம், கோல்கத்தாவிலி ருந்து தூத்துக்குடிக்கு கப்பல் போக்குவரத்துக்கான தூரத்தை 340 கடல் மைல்களாகவும், சென் னையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல 434 கடல் மைல்களாகவும் குறைக்க முடியும் என இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள் ளது.
பொதுவாக ஒரு கப்பல் கோல் கத்தாவிலிருந்து இலங்கையைச் சுற்றிக்கொண்டு தூத்துக்குடிக்கு செல்வதற்கு கடக்க வேண்டிய மொத்த தூரம் 1227 கடல் மைல் கள் ஆகும்.
இதே சேது சமுத்திரக் கால் வாய் மூலம் செல்ல, கடக்க வேண் டிய தூரம் 1098 கடல் மைல்கள் ஆகும். இதன் மூலம் கடக்க வேண்டிய தூரத்தில் 129 கடல் மைல்கள் குறைகிறது.
கப்பல் அதிகபட்சமாக ஒரு மணிக்கு 12 கடல் மைல்கள் வேகத் தில் செல்லமுடியும். இதன்படி கோல்கத்தாவிலிருந்து இலங்கை யைச் சுற்றிக்கொண்டு தூத்துக்கு டிக்குச் செல்ல 102.2 மணி நேரம் ஆகும்.
இதே சேது சமுத்திரக் கால்வாய் வழியாகச் சென்றால் 98.5 மணி நேரம் ஆகும். ஏனெனில், திட்டத் தின்படி, சேது சமுத்திரக் கால் வாய் 12 மீட்டர் அளவுக்குதான் ஆழப்படுத்தப்பட உள்ளது. இது போன்ற ஆழம் குறைந்த பகுதியில் கப்பல் செல்லும்போது, கப்பலின் வேகத்தை 50 சதவீதம் குறைக்க வேண்டும்.
மேலும் கால்வாய் வழியாக பய ணிக்கும் போது கப்பலின் பாது காப்புக்காக ஒரு மாலுமியை பணி யமர்த்தவேண்டும். இவர் கப்ப லில் ஏறி இறங்க குறைந்தது 2 மணி நேரம் ஆகும். இதன் மூலம் சேது சமுத்திரக் கால்வாய் வழியாக செல்ல மொத்தம் 100.5 மணி நேரம் ஆகும். இதன்படி 1 மணி 45 நிமிடங்கள் மட்டுமே குறைகிறது.
மொத்த தூரத்தில் 129 கடல் மைல்கள் குறைந்து, 1 மணி 45 நிமி டம் மிச்சமாவதற்காக ரூ. 4 ஆயி ரம் கோடியை செலவு செய்ய வேண்டுமா? மேலும் சேது சமுத்திரக் கால் வாய் வழியாக கப்பல் செல்லும் போது, அந்த கப்பல் நிறுவனத் துக்கு ரூ. 19 லட்சம் நஷ்டம் ஏற்ப டும். எனவே இந்தத் திட்டத்தால் எந்த பயனும் இல்லை என்றார் அவர்.
முழுமையான ஆய்வு மேற் கொள்ளப்படவில்லை: இந்தியப் புவியியல் ஆய்வுக் கழக ஓய்வு பெற்ற இயக்குநர் கே. கோபாலகி ருஷ்ணன் கூறியது: ஆதம் பாலம் அமைந்துள்ள பாக்.ஜலசந்தி-மன்னார் வளை குடா பகுதியில் பூகம்பம் வருவ தற்கு அதிக வாய்ப்புகள் உள்ள தென பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
அரசு கூறுவதுபோல் ஆதம் பாலம் வெறும் மணல் திட்டுக ளால் மட்டும் உருவாகவில்லை.
பல்வேறு நிலப்பரப்பு மாற்றங்க ளையும், கடலில் ஏற்படும் அதிர்வு களையும் உள்வாங்கி இந்தப் பகுதி ஒரு தடுப்பு அரணாக விளங்கிவரு கிறது.

இந்தப் படிவங்களில் பெரிய பிளவுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பிளவுகள் மூலம் அவ்வப் போது நகர்வுகள் ஏற்படும். இத னால் இதன் மேற்பரப்பில் கட்டப் படும் எந்தக் கட்டுமானங்களும் நிலைத்து நிற்காது.

சேது சமுத்திரக் கால்வாய் திட் டத்துக்காக, இந்தியப் புவியியல் ஆய்வுக் கழகம் மூன்று துளைகள் மட்டுமே போட்டு ஆய்வு செய் துள்ளனர். அதுவும் ஆதம் பாலத் தின் மீது ஒரு துளை மட்டும் போட்டு ஆய்வு செய்துள்ளனர்.

முழுமையான திட்டத்துக்கான ஆய்வு இதுவரை மேற்கொள்ளப் படவில்லை.
பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப் படும்: சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் பல்லுயிர் பெருக்கம் பெரிதும் பாதிக்கப்படும்.
ஆதம் பாலம் அமைந்துள்ள பாக்.ஜலசந்தி, மன்னார் வளை குடா கடல் உயிரிகள் வாழ்வதற்கு மிக ஏதுவான சூழ்நிலைக் காணப் படுகிறது. சுத்தமான நீர் உள்ள இந்தப் பகுதியில்தான் மீன்கள் இனப்பெருக்கத்தை மேற்கொள் ளும்.

எனவே ஆதம் பாலத்தின் ஒரு பகுதி தோண்டப்படுவதன் மூலம் அசுத்த நீர் கலந்து மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும்.
மேலும் சூறாவளி, சுனாமி போன்ற பேராபத்துகள் ஏற்படுவ தோடு, மழைப் பொழிவிலும் மாற் றம் ஏற்படும் என்றார் அவர்.

Posted in Anuman Palam, Backgrounders, Current state, Details, Hanuman Bridge, History, India, Islands, Ramar Palam, Ramayan, Ramayanam, Rameswaram, Sethu, Sethu Bridge, Sri lanka, Srilanka | குறிச்சொல்லிடப்பட்டது: , | 11 Comments »