அமெரிக்கர் பால் க்ரூக்மனுக்கு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு
![]() |
![]() |
பால் க்ரூக்மன் |
பொருளாதாரத் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அமெரிக்கரான பால் க்ரூக்மனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர வர்த்தகம் மற்றும் உலகமயமாக்கலின் விளைவுகள் குறித்த அவரது ஆய்வுகளுக்காக இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது.
பிரின்ஸ்ட்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதிவருபவருமான பால் க்ரூக்மன் அதிபர் புஷ் அவர்களின் நிர்வாகத்தை நீண்ட காலமாக கடுமையாக விமர்சித்துவந்தவர்.
அதிபர் புஷ்ஷின் கொள்கைகள்தான் தற்போது நிலவிவரும் நிதி நெருக்கடிகளுக்கு காரணம் என்று க்ரூக்மன் வாதிட்டுவந்துள்ளார்.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெரும்பாலும் அமெரிக்கர்களாலேயே வெல்லப்பட்டுள்ளது என்பது குறறிப்பிடத்தக்கது.