ஃபின்லாந்தின் முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நொபெல் பரிசு
![]() |
![]() |
மார்த்தி அஹ்திஸாரி |
சமாதானத்துக்கான இந்த வருட நோபல் பரிசு ஃபின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரான மார்த்தி அஹ்திஸாரி அவர்கள்க்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர் ஒரு சிறந்த மத்தியஸ்தர் என்றும், முப்பது வருடத்துக்கும் அதிகமான காலப்பகுதியில், உலகின் பல பாகங்களில் முரண்பாடுகளை தீர்க்க அவர் உதவியுள்ளார் என்று நோபல் பரிசுக்குழு கூறியுள்ளது.
மிகவும் சிக்கலான பிரச்சினைகளான கொசோவா பிரச்சினை மற்றும் இந்தோனேசியாவின் அச்சே மாகாண பிரச்சினை ஆகியவற்றை தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளில் நடுநாயகமாக அவர் திகழ்ந்துள்ளார் என்றும் அந்தக் குழு கூறியுள்ளது.
அனைத்து முரண்பாடுகளும் தீர்த்து வைக்கப்படக் கூடியவைதான் என்ற முடிவுக்கு தான் வந்துள்ளதாகக் கூறும் அஹ்திஸாரி அவர்கள், தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை தொடர்ந்து வைத்திருப்பது, சர்வதேச சமூகத்துக்கு ஒரு அபகீர்த்தி என்று குறிப்பிட்டுள்ளார்.