வஸிரிஸ்தானில் 8 படையினர் பலி
![]() |
![]() |
பாகிஸ்தான் படையினர் |
ஆஃப்கன் எல்லைப்புறத்துக்கு அருகே உள்ள பாக்கிஸ்தானின் தெற்கு வஸிரிஸ்த்தான் பகுதியில் இருக்கும் வானா பகுதியில் பாகிஸ்தானப் பாதுகாப்புப் படைகளின் வண்டித் தொடர் மீது நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது எட்டுப் படையினர் கொல்லப்பட்டுப் பலர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான இராணுவத்தின் சார்பில் பேசும் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
போராளிகளின் நடவடிக்கைகள் இப்பகுதியில் அதிகரித்ததைத தொடர்ந்து பாக்கிஸ்தானப் படைகள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன.
ஆஃப்கன் எல்லைக்கு அருகே உள்ள பழங்குடிப் பகுதியின் மீது அமெரிக்கா நடத்தியதாகக் கருதப்படுகின்ற எறிகணைத் தாக்குதலில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட சம்வம் நடந்து சில நாட்களுக்குள் இந்தத் தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது.