Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Olympics’

Baby Formula – 4 dead, 6200 sick: China Milk Scandal Shows Ties Between Companies, City Officials: Singapore suspends China milk imports; deadly chemical found in yoghurt

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2008


பாலில் நஞ்சு கலக்க காரணமான வலையமைப்பு கலைக்கப்பட்டதாக சீனா கூறுகிறது

சீனப்பாலை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை தடை செய்யவோ அல்லது திருப்பியழைக்கவோ மேலும் மேலும் நாடுகள் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இந்த இரசாயனத் தொற்று ஏற்பட காரணமாக இருந்த வலையமைப்பை கலைத்து விட்டதாக சீனா கூறுகிறது.

திருட்டுத்தனமாக நடத்தப்பட்ட ஆலைகள் மற்றும் பால் பண்ணைகளில் நடத்தப்பட்ட சோதனைகளையடுத்து இருபத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பாலில் மெலமைன் என்னும் இரசாயனத்தை சேர்த்தார்கள் அல்லது அதை பாலில் சேர்க்க உதவினார்கள் என்ற காரணத்துக்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் இரசாயனக் கலப்பு காரணமாக அங்கு பல ஆயிரம் குழந்தைகள் நச்சுத்தன்மைக்கு உள்ளாகி நோயுற்றன. நான்கு குழந்தைகள் இறக்கவும் நேரிட்டது.

இதனிடையே தங்களது குழந்தைகள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வழக்குகளை தொடுத்திருக்கும் குடும்பங்கள் வழக்கை கைவிடுமாறு அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


சீனப் பொருட்களின் பாதுகாப்புத்தன்மை உறுதி செய்யப்படும் – சீன பிரதமர்

சீன குழந்தை
பால்மா கலப்படத்தால் குழந்தைகள் பாதிப்பு

சீனாவில் பால்மாவில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, சீனப் பொருட்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதி செய்ய சீன பிரதமர் வென் ஜியாபோ உறுதியளித்துள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு தங்கள் அரசாங்கம் திடமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் பால்மா கலப்பட விஷயத்தில் தலைநகர் பீஜிங்கில் புதியதாக 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக சீன செய்திகள் கூறுகின்றன.

மேலும் ஷாங்காய் நகரத்தில் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஐந்து சதவிதத்தினர் சிறுநீரகங்களில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளை காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இது வரையில் நான்கு குழந்தைகள் பலியாகியுள்ளனர், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் பால்மாவில் ஏற்பட்ட ரசாயனக் கலப்பால் பல ஆயிரம் குழந்தைகளுக்கு பாதிப்பு

பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தை
பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தை

சீனாவில் இரசாயனக் கலப்பு கொண்ட பால்மாவை உட்கொண்ட காரணத்தினால் ஆறாயிரம் குழந்தைகள் நோய்வாய்பட்டுள்ளனர் என அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக இதுவரை மூன்று குழந்தைகள் மரணமடைந்துள்ளன என்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது என்றும் சீனாவின் சுகாதார அமைச்சர் சென் ஷூ தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் நூற்றிஐம்பதுக்கும் அதிகமானவர்களின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டு செயலிழந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஊழல் தொடர்பான விவகாரம் பரவிவரும் நிலையில், சீனாவின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பானது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இராசயனமான மெலமைன், மேலும் இருபத்து இரண்டு வெவ்வேறு வர்த்தகப் பெயர்களையுடைய பால்மாவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரசாயனப் பொருள் பால்மாவில் கலந்திருப்பதாக அறியப்படவில்லை. பாலில் புரதச்சத்து கூடுதலாக இருப்பதற்காக மெலமைன் கலக்கப்பட்டதாக எண்ணப்படுகிறது.

இதையடுத்து தேசிய அளவில் அனைத்து பால் உணவுப் பொருட்களும் பரிசோதிக்கப்பட வேண்டும் என சீனா உத்தரவிட்டுள்ளது.



சீன பால் உற்பொருட்களுக்கு சிங்கப்பூர் இறக்குமதி தடை

இரசாயனக் கலப்படம் நிறைந்த பால் மாவு

சீனாவிலிருந்து பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் சிங்கப்பூர் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சில சீன பால் உற்பத்திப் பொருட்களில் தொழிற்சாலை இரசாயனமான மலெமைன் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவில் பாலிலும் பால் மாவிலும் இந்த இரசாயனக் கலப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கடைகளிலிருந்து பால் உற்பத்திப் பொருட்கள் பலவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டு அவை அகற்றப்பட்டுவருகின்றன.

சீனாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளை கடந்த சில நாட்களில் எடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் கிட்டத்தட்ட பத்து சதவீத மாதிரிகளில் மெலமைன் கலந்திருக்கிறது என சீன அரசாங்கத்தின் தரக் கண்காணிப்பு நிறுவனம் கூறுகிறது.

இதனிடையே, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவு வகைகளை பரிசோதனை செய்ய இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய வர்த்த நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன, நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அரசு இந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கையினை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Olympics quickly marred by tragedy: Relative of US volleyball coach killed – Father of former Olympian killed in Beijing

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 10, 2008

பீய்ஜிங்கில் அமெரிக்கப் பயணி கொலை

கொலை நடந்த பீய்ஜிங் நகர மேளக் கோபுரம்

பீய்ஜிங் ஒலிம்பிக்கில் இன்று, அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவரை சீனர் ஒருவர் கொன்றுள்ளார். கொல்லப்பட்டவர், அமெரிக்க வாலிபால் அணியுடைய பயிற்சியாளரின் உறவினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்த அமெரிக்கரும், ஒரு பெண் உறவினரும் அவர்களுடைய சீன வழிகாட்டியும் பீய்ஜிங் நகர மையத்திலுள்ள பழங்காலக் கோபுரத்தில் இருக்கையில், சீனர் தாக்கியுள்ளார்.

அமெரிக்கரைக் கொன்ற பின்னர் அந்த சீனரும் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான பெண்ணும், வழிகாட்டியும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். இந்தக் கொலையின் காரணம் என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை. சீனாவில் வெளிநாட்டினர் தாக்குதலுக்குள்ளாவதென்பது அரிதாக நடக்கும் விஷயம்.


Posted in Law, Order | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

Conflict between Georgia and South Ossetia

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 10, 2008

தெற்கு ஒஸ்ஸெட்டியாவில் சண்டையை நிறுத்தும்படி ஜோர்ஜியா தமது துருப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறது

ஜோர்ஜியா, தெற்கு ஒஸ்ஸெட்டியாவிலுள்ள தமது படையினருக்குப் போரை நிறுத்தும்படி ஆணையிட்டிருப்பதாக திப்லிசியிலுள்ள ரஷ்யத் தூதரகத்துக்குத் தெரிவித்துள்ளது.

அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை தொடங்கத் தாங்கள் தயார் என்று ரஷ்யாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும் ஜோர்ஜியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜோர்யியப் படைகள் தெற்கு ஒஸ்ஸெட்டியாவிலிருந்து விலகிவிட்டன என்றும், தற்போது அந்த நகரம் ரஷ்யப் படைகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் ஜோர்ஜியா கூறுகிறது.

ஆனால் பெரிய பீரங்கிகள் விலகியதைத் தாங்கள் கண்டிருந்தாலும், ஜோர்ஜியப் படைகள் இன்னமும் அப்பகுதியில் உள்ளன என்று சீனா கூறுகிறது. கூடவே ஜோர்ஜயிப் படைகள் முழதாக விலகாது போர்நிறுத்தப் பேச்சுக்கு வாய்ப்பில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

இதற்கிடையே ஜோர்ஜியாவின் தலைநகர் திப்லிசியின் புறநகர் பகுதியிலுள்ள படை விமானத் தளம் மீது ரஷ்ய விமானம் குண்டுவீசியதாக ஜோர்ஜியா கூறியுள்ளது.

படைக் குவிப்பு செய்வதாக அப்காஸிய அதிகாரிகள் கூறுகின்றனர்






ஜோர்ஜியாவிடமிருந்து பிரிந்துபோன இன்னொரு பகுதியான அப்காஸியாவின் அதிகாரிகள் தாங்கள் முழு அளவில் படைகளைக் குவிப்பதாகத் தெரிவித்துள்ளனர். தமது வட பகுதி நகரான கொடோரிப் பள்ளத்தாக்கிலிருந்து ஜோர்ஜியப் படைகளை விரட்ட சுமார் ஆயிரம் துருப்பினரை அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அப்பகுதியில் இருக்கும் ஐ.நா. பாதுகாப்புக் கண்காணிப்புப் படையினரை விலக்கிக்கொள்ளும்படி ரஷ்யா ஐ.நா.வைக் கேட்டுள்ளது.

அப்பகுதிக்கு ரஷ்யா ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பியுள்ளது என ஜோர்ஜியா முறைப்பட்டுள்ளது.

அமெரிக்கா ரஷ்யாவைக் கடிந்துள்ளது

ஜோர்ஜியாவுடன் நடக்கும் மோதலில் ரஷ்யா எடுத்துள்ளது அளவு மிஞ்சிய ஆபத்தான நடவடிக்கை என அமெரிக்க அதிபர் தரப்புக் கடிந்துள்ளது.

அதிபர் புஷ் அவர்களோடு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் சீனாவில் இருக்கின்ற அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேம்ஸ் ஜெஃப்ரி அவர்கள், ரஷ்யாவின் நடவடிக்கைகள் அடங்காமல் அதிகரிக்கும் பட்சத்தில் அவை அமெரிக்கா, ரஷ்யா இடையிலான நீண்டகால உறவுகளைக் கணிசமாகப் பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு அதிபர் சர்க்கோசி அவர்களோடு தொலைபேசியில் பேசியிருந்த ஜெர்மனியின் சான்சல்லர் அஞ்செலா மெர்க்கல் அவர்கள், நிபந்தனைகள் எவையுமின்றி அப்பகுதியில் போர் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றுள்ளார்.

போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்களும் போரை நிறுத்தும்படி கேட்டுள்ளார்.


ரஷ்ய தாக்குதலைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் யுத்த நிலை பிரகடனம்

ஜார்ஜியாவிலே பிரிவினை கோரும் தெற்கு அஸ்ஸெட்டியா பிராந்தியத்தின் அருகில் அமைந்துள்ள கோரி நகரில் ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஜார்ஜியாவில் யுத்த நிலையை பிரகடனம் செய்யும் அதிபரின் ஆணைக்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜார்ஜியத் துருப்புகள் குவிக்கப்பட்டுவருகின்ற இராணுவ நிலைகளை இலக்குவைத்து ரஷ்ய விமானங்கள் தாக்கின என்றாலும், ஒரு தாக்குதலில் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள். தங்களது விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதையும் ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.

தெற்கு அஸ்ஸெட்டியாவின் தலைநகர் ஷின்வாலியைக் முற்றுகையிட ஜார்ஜியர்கள் செய்த முயற்சிக்குப் பின்னர், அந்நகரின் கட்டுப்பாட்டை ரஷ்யத் துருப்பினர் கைப்பற்றியுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அப்காஸியப் பிரிவினைவாதிகளும் ஜார்ஜியப் படைகள் மீது தாக்குதல்

ஜார்ஜியாவில் இருக்கின்ற மற்றுமொரு பிரிந்துபோன பிராந்தியமான அப்காஸியாவில் இருக்கின்ற பிரிவினைவாதிகள், கொடொரி கோர்ஜில் உள்ள ஜோர்ஜியப் படைகள் மீது தாம் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.

கோர்ஜில் இருக்கின்ற ஜார்ஜியப் படைகளை அங்கிருந்து விரட்டுவதே தமது நோக்கம் என்று, அப்காஸியாவில் சுய-அரசாங்கத்தை பிரகடனம் செய்துள்ள ஆட்சியாளர்களின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த கோர்ஜ் பகுதிதான் அங்கு, ஜார்ஜிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே பகுதியாகும்.

ஜார்ஜியா நிலவரம்: புஷ் கவலை

அதிபர் ஜார்ஜ் புஷ்

ஜார்ஜியாவில் உருவாகியுள்ள நெருக்கடி குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அதிபர் புஷ் கூறுகின்றார்.

ஒலிம்பிக் துவக்கவிழாவில் கலந்துகொண்டிருந்த அதிபர் புஷ் பீய்ஜிங்கிலிருந்து கருத்து வெளியிடுகையில், ஜார்ஜிய நிலப்பரப்பின் ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததோடு, குண்டுவீசுவதை ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் ரஷ்யா, தனது முன்னாள் சோவியத் ஒன்றியப் பகுதிகளின் நிலப்பகுதிகளை அபகரிக்கும் எண்ணம் கொண்டிருக்கிறது என்ற குற்றம்சாட்டின் மூலம் ரஷ்ய நடவடிக்கையை ஜார்ஜியா ஊதிப்பெரிதுபடுத்துகிறது என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜார்ஜியத் துருப்பினருக்கு இராக்கில் சண்டையில் ஈடுபடுதற்கு பயிற்சியளித்துவந்த அமெரிக்க இராணுவக் குழுவினர் ஜார்ஜியத் தளங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , | Leave a Comment »

Picket spots created for Games: 3 ‘Protest Pens’ Planned for Beijing Parks – Olympic protest zones

Posted by Snapjudge மேல் ஜூலை 24, 2008

ஒலிம்பிக்கின் போது ஆர்பாட்டங்களுக்கென தனியான பூங்காக்கள்

சீன பூங்கா ஒன்று
சீன பூங்கா ஒன்று

சீனாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது சட்டபூர்வமான போராட்டங்களை மூன்று பொதுப் பூங்காக்களில் நடத்த அனுமதியளிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கான போராட்டக்காரர்களின் விருப்பம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமன்பாட்டை காணும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரியான லியூ ஷாவூ தெரிவித்துள்ளார்.

போட்டிகளின் போது போராட்டங்களை அனுமதிக்க வேண்டிய தேவையை சீன அதிகாரிகள் அங்கீகரிக்கும் ஒரு நகர்வே இது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

எனினும் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த போராட்டக்காரர்கள் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , | 1 Comment »