காஸாப் பகுதியில் மீண்டும் சண்டை
![]() |
![]() |
காஸாப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினர். |
மத்திய கிழக்கின் காசாப் பகுதியில், பாலத்தீன இஸ்லாமியவாத ஹமாஸ் குழுவுக்கும் இஸ்ரேலியத் துருப்புக்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் ஹமாஸ் குழுவைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலுடனான எல்லையில் வெடி மருந்துகளை வைக்க இவர்கள் முயன்றார்கள் என்று இஸ்ரேல் கூறுகிறது. காசாப் பகுதியில் ஐந்து மாதங்களுக்கு முன்னரே இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
ஆனாலும் இங்கு பதற்ற நிலை இன்னமும் நிலவுகிறது என்று எமது செய்தியளார் கூறுகிறார்.
‘காசா மீதான தடை வெட்கத்துக்குரிய செயல்’- ஐ.நா அலுவலர்கள்
![]() |
![]() |
இஸ்ரேலினால் காசா நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடை நடவடிக்கைகளை, வெட்கத்துக்குரிய செயல் என்று அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிதாக உணவுப் பொருட்கள் வருவதை இஸ்ரேல் அனுமதிக்காவிட்டால், ஐ.நாவின் உணவு விநியோக இடங்களில் இன்னும் இரு தினங்களில் உணவுப் பொருட்கள் தீர்ந்து போகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஒரு வரா காலமாக காசா நிலப்பரப்புக்குள் உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்து வகைப் பொருட்களின் போக்குவரத்தையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இதனால் காசா பகுதியில் உள்ள ஒரே மின் உற்பத்தி நிலையமும் திங்கட்கிழமை இரவில் இருந்து இயங்கவில்லை.
தற்போது குறைந்த அளவிலான எரிபொருட்கள் காசா பகுதிக்குள் கொண்டு செல்லப்படுவதை இஸ்ரேல் அனுமதித்துள்ளது. ஆனால் உணவுப் பொருட்களை அங்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.