சீன சுரங்க நிலச்சரிவில் குறைந்தது 120 பேர் பலி
![]() |
![]() |
நிலச்சரிவில் அகப்பட்ட வாகனம் ஒன்று |
வட சீனாவின் ஷான்ஷி மாகாணத்தில் உள்ள சுரங்கம் ஒன்றுக்கு அருகே நடந்த நிலச்சரிவில் 120க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தற்போது நம்பப்படுவதாக சீன ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
நிலச்சரிவு நடந்து இரண்டு நாட்களுக்கு மேலான பிறகும், மீட்புப் பணியாளர்கள் இன்னும் உயிர் தப்பியிருப்பவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
சேற்றில் இன்னும் பல டஜன் உடல்கள் கிடைக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சுரங்க கழிவுப்பொருட்களைக் கொண்டிருந்த ஏரி ஒன்று உடைந்ததை அடுத்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.