Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Kayalvizhi’

Is Mu Ka Azhagiri taking helm at DMK & Tamil Nadu Government: Waning MK Stalin

Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2008

கைமாறுகிறதா கழகம்?

கடலூர், ஜூன் 15: கடலூர் மக ளிர் அணி மாநாடு திமுகவில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அங்கீகாரம் தேடித் தருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்பதைவிட, திமுகவின் வருங்காலத் தலை மைக்கான பதவிப் போட்டியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த பிள்ளையார் சுழி போட்டிருக்கி றது என்பதுதான் பார்வையா ளர்களின் கருத்து.

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்திற்குள் நடக்கும் “நிழல் யுத்தத்தின்’ வெளிப்பாடுதான் இந்த மாநாடு என்று கருதும் வகையில் உள்ளாட்சித் துறை அமைச்சரும், துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான மு.க. ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் மாநாட்டில் கலந்து கொள்ளாததைச் சுட்டிக் காட்டுகிறார்கள். உடல்நிலை சரியில்லை என்று மு.க. ஸ்டா லின் தரப்பில் கூறப்பட்டாலும், அவரது சார்பில் ஏன் மகன் உதய நிதி கூடக் கலந்து கொள்ள வில்லை என்கிற கேள்வி எழுப் பப்படுகிறது.
மு.க. அழகிரியின் மகள் கயல் விழியின் கன்னிப்பேச்சு மகளிர் அணி மாநாட்டில் முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது என்பது மட்டுமல்ல, மு.க. அழகிரி, அவ ரது மகன் துரை தயாநிதி என்று அழகிரி குடும்பமே திரண்டு வந் திருந்தது.

முதல்வரின் மனைவி தயாளு அம்மையார், துணைவி ராஜாத்தி அம்மாள் என்று குடும் பத்தினர் அனைவரும் ஆஜராகி இருந்தபோது, மு.க. ஸ்டாலி னின் குடும்பத்தினர் யாருமே வராதது தொண்டர்கள் மத்தியி லேயே பல வதந்திகளைக் கிளப் பிவிட்டிருக்கிறது.
“”உடல்நிலை சரியில்லை என் பது ஒருபுறம் இருக்க, மு.க. அழ கிரியைப்போல் எதிரிகளைச் சமாளிக்கும் சாமர்த்தியம் தள பதி ஸ்டாலினுக்குக் கிடையாது என்று தலைவர் தீர்மானித்து விட்டார். இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக விரைவிலேயே மு.க. அழகிரி கட்சியின் துணைப் பொதுச்செயலாள ராக அறிவிக்கப்படுவார்” என்று தொண்டர்கள் மத்தியில் பரவ லாகவே பேசப்பட்டது.
தனது ஆதரவாளர்களை அமைச்சர் ஸ்டாலின் பாதுகாப் பதில்லை என்பதும், அவர்க ளுக்கு ஆதரவாகக் குரல் எழுப் பாமல் மௌனம் சாதிக்கிறார் என்பதும் அவரைப் பற்றிய பரவ லான குற்றச்சாட்டு.

  • ஸ்டாலி னின் தீவிர ஆதரவாளரான தா.கிருட்டிணன் கொலைக்கு, அமைச்சர் ஸ்டாலினின் பதில் மௌனம்தான் என்பதும்,
  • அவ ரது ஆதரவாளர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகா பறிப்பு,
  • பூங்கோதை யின் ராஜிநாமா,
  • கருப்பசாமிப் பாண்டியன் ஓரங்கட்டப்படுதல் போன்ற நிகழ்வுகளும் மு.க.

ஸ்டாலினின் ஆதரவாளர்களை மிகவும் சோர்வடைய வைத்தி ருக்கின்றன.
“”பாவம், தளபதியின் குரல் இப் போதெல்லாம் எடுபடுவ தில்லை. அவரும் மிகவும் மென் மையாகவும், ஜென்டிலாகவும் நடக்க விரும்புவதால், அந்த பல வீனத்தை மற்றவர்கள் பயன்ப டுத்திக் கொள்கிறார்கள். தலைவ ரின் குடும்பத்தில் இப்போதெல் லாம் மு.க. அழகிரி வைத்தது தான் சட்டம். உடல்நிலையைக் காரணம் காட்டி தளபதி விரை விலேயே ஓரங்கட்டப்படுவார்” என்று போதையில் இருந்தாலும் தெளிவாகவே பேசினார் தொண்டர் ஒருவர்.

அடுத்த தேர்தலில் ஜெயலலி தாவுக்குப் போட்டியாக கனி மொழியும் கயல்விழியும் பிரசா ரத்தில் இறங்குவார்கள் என்றும், அது திமுகவுக்கு பெண்களின் வாக்குகளை அள்ளித் தந்துவி டும் என்றும் மாநாட்டிற்கு வந்தி ருந்த சில பெண்கள் நிஜமாகவே நம்புகிறார்கள்.
மாநாட்டுக்கு வந்திருந்த மூத்த தலைவர் ஒருவர் வருத்தத்துடன் கூறிய விஷயம்~ “தலைவர் இப் படி அதிகார மையங்களை அதி கரித்துக் கொண்டே போவது கட்சியின் வருங்காலத்திற்கு நல் லதல்ல. ஒன்று அல்லது இரண் டுக்கு மேல் அதிகார மையங்கள் இருந்தால், வாரிசுப் போட்டி ஏற் பட்டு வருங்காலத்தில் கட்சி சின் னாபின்னாமாகி விடும். இது ஏன் எங்கள் தலைவருக்குப் புரிய வில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது’.
வாரிசுப் போட்டியில் வலுக்கி றது அழகிரியின் கரங்கள் என் பதை மாநாடு தெளிவாக்கியது.

Posted in DMK, Govt, Politics, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , | 2 Comments »