ஃபின்லாந்தில் பள்ளிக் கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி
![]() |
![]() |
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடம் |
ஃபின்லாந்து நாட்டில் சமையல் கலை மற்றும் தொழிற்பயிற்சிக்கான பள்ளிக்கூடம் ஒன்றில், ஒரு துப்பாக்கிதாரி சுட்டதில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர்.
தன்னைத்தானே துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொண்ட அந்த துப்பாக்கிதாரி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார்.
தான் ஒரு துப்பாக்கி பயிற்சியிடத்தில் இருப்பதான வீடியோவை இணையத்தில் ஏற்றிக்கொண்டிருந்தபோது திங்கழன்று கைது செய்யப்பட்ட அந்த நபர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்ட போதிலும், கைது செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கௌகாஜோகி நகரில் நடந்த இந்த சம்பவம், கடந்த ஒரு வருடத்தில், ஃபின்லாந்தில் நடந்த இதுபோன்ற இரண்டாவது சம்பவமாகும்.