மூழ்கிய படகில் இருக்கும் விஷ இரசாயனத்தை அகற்றுவதற்கான முயற்சி
![]() |
![]() |
மூழ்கிய கப்பலின் அருகே மீட்புப் பணியாளர்கள் |
பிலிப்பைன்ஸில் அண்மையில் மூழ்கிய ஒரு படகிலிருந்து நூற்றுக்கணக்கான சடலங்களை மீட்கும் பணியைச் செய்யத் தடையாக அப்படகிலிருந்த விஷ இரசாயனத்தை அகற்றுவதற்கு தற்போது ஒரு சிறப்பு நிபுணர் அணி முயற்சித்துவருகிறது.
கடந்த சனிக்கிழமை சூறாவளியில் சிக்கி மூழ்கிய அப்படகின் அடித்தளத்தில் இருந்து பத்து டன்கள் அளவிலான பூச்சிக்கொல்லி மருந்தை பாதுகாப்பாக வெளிக்கொணர இந்த நிபுணர் அணி முயலும்.
இந்தப் படகு மூழ்கிய சமயத்தில் அதில் எண்ணூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தனர்; ஆனால் 60 பேருக்கும் குறைவானவர்களே உயிர்பிழைத்ததாகத் தெரியவருகிறது.
நேற்று வெள்ளிக்கிழமைதான் படகில் இரசாயனம் இருப்பது தெரியவந்து சடலங்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது.