சவுதிக்கு செல்ல எகிப்திய மருத்துவர்களுக்கு தடை
![]() |
![]() |
சவுதி அரேபியாவில் வேலை செய்யும் பல வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர் |
சவுதி அரேபியாவுக்கு எகிப்திய மருத்துவர்கள் சென்று பணியாற்றுவதற்கு எகிப்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
எகிப்திய மருத்துவர் ஒருவரால் வழங்கப்பட்ட மருந்தின் காரணமாக சவுதியின் ஒரு இளவரசி போதை மருந்துக்கு அடிமையாகும் நிலைமை ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அந்த மருத்துவருக்கு சவுதியில், 1500 சவுக்கடிகளும், 15 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டதைக் கண்டித்து கெய்ரோவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்த நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது.
தற்போது வேலைக்கான அனுமதியில் விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய தடை, ஏற்கனவே சவுதியில் பணியாற்றும் எகிப்திய மருத்துவர்களை பாதிக்காது என்றும், எகிப்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குதிரையேற்ற விபத்து ஒன்றில் கடுமையாக காயமடைந்த பெண்ணுக்கு மோர்பின் என்னும் மருந்தை இந்த மருத்துவரான ரவுவ் அமீன் பரிந்துரைத்துள்ளார்.
தனது சிறைத்தண்டனைக் காலத்தில், வாராந்தம், பொதுமக்கள் முன்பாக இவருக்கு இந்த கசையடிகள் வழங்கப்படும்.