பிரான்ஸில் பெத்தான்கூர்
ஃபார்க் கிளர்ச்சிக்காரர்களால் 6 வருடங்கள் பிடித்து வைக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை மீட்கப்பட்ட கொலம்பிய அதிபர் தேர்தலுக்கான முன்னாள் வேட்பாளரான இன்கிரிட் பெத்தான்கூர் அவர்கள், தான் வளர்ந்த பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த தருணத்துக்காக தான் 7 வருடங்கள் காத்திருந்ததாகவும், பிரான்ஸுக்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.
அவரது மீட்புக்கான இராணுவ நடவடிக்கையில் பங்கேற்காத போதிலும், அவரை விடுவிக்க வேண்டும் என்று ஊக்கத்துடன் பிரச்சாரம் செய்துவந்த, பிரான்ஸ் அதிபர் சர்கோஸி அவர்களையும் பெட்டன்கூட் அவர்கள் சந்தித்தார்.
தேர்தலில் சர்கோஸிக்கு கிடைக்கவிருந்த மோசமான வாக்குவீதத்தை மாற்றி அதனை ஊக்குவிப்பதற்காகவே, உண்மையில்பெத்தான்கூரை விடுவிக்க வேண்டும் என்று சர்கோஸி பிரச்சாரம் செய்துவந்தார் என்று அவரது விமர்சகர்கள் கூறிவந்தனர்.