Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Conflict’

Aug 16,17: Russia vs Georgia – South Ossetia Conflict

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 18, 2008

ஜோர்ஜியா தொடர்பில், ரஷ்யா மீதான விமர்சனத்தை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது

ரஷ்ய அதிபர் அலுவலகம் மிரட்டி அச்சுறுத்துவதாக அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், ஜோர்ஜியா தொடர்பில், ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான சொற்போர் தீவிரமடைந்துள்ளது.

21ஆம் நூற்றாண்டில் வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் முறை இதுவல்ல என்று கூறிய அதிபர் புஷ், ரஷ்யா தனது ஆக்கிரமிப்புப் படையை வாபஸ் பெறவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அந்தப் பிராந்தியத்தில் ரஷ்யாவால் மாத்திரமே அமைதியை உறுதிப்படுத்த முடியும் என்று கூறியுள்ள, ரஷ்ய அதிபர் டிமித்ரி மெட்வெடேவ் அவர்கள், ரஷ்ய மக்களும், படையினரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானால், ரஷ்யா இதே பாணியில்தான் மீண்டும் பதிலளிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேற்குலகுடனான உறவுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுவதை ரஷ்யா தவிர்க்க விரும்புகிறது என்று வலியுறுத்திய அவர், பிரான்ஸினால், மத்தியஸ்தம் செய்யப்பட்ட அமைதித் திட்டத்தில், ஜோர்ஜியாதான் இதுவரை கைச்சாத்திட மறுத்ததே ஒழிய, ரஷ்யா அல்ல என்றும் கூறியுள்ளார்.

ஜோர்ஜியா விடயத்தில் ரஷ்யாவின் நடவடிக்கை அளவுக்கு அதிகமானது என்று விமர்சித்த, ஜெர்மனியின், தலைவி அங்கேலா மெர்கெல் அவர்களுடன் பேச்சு நடத்திய பின்னர் ரஷ்ய அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.


அமெரிக்க அரசுத் துறை செயலருடன் ஜோர்ஜிய அதிபர் சந்திப்பு

அமெரிக்க அரசுத்துறை செயலருடன் ஜோர்ஜிய அதிபர்

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டலீஸா ரைஸ் அம்மையாருடன் பேச்சு நடத்திய ஜோர்ஜிய அதிபர் மிகாயல் சாகாஷ்விலிப் பின்னர் கருத்துவெளியிடுகையில், தங்களுடைய நாட்டில் எந்தப் பகுதியும் அந்நிய ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதை தன்னால் ஒருபோதும் சகித்துக்கொண்டிருக்க முடியாது என்று கூறியிருக்கின்றார்.

ஜோர்ஜியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் ரஷ்யா மதித்து நடக்க வேண்டும் என்று கொண்டலீஸா ரைஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையில் ஜோர்ஜியா தற்போது கையெழுத்திட்டுள்ளது என்றும் கொண்டலீஸா ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.


ஜோர்ஜிய நிலப்பரப்பில் ரஷ்யப் படைகளின் இருப்பு நீடிக்கிறது

ஜோர்ஜியாவில் ரஷ்ய டாங்கிகள்

ஜோர்ஜியாவின் நிலப் பகுதிக்குள் மூன்று முக்கிய நகரங்களின் உட்பகுதிகளின் இன்னமும் ரஷ்யப் படைகள் நிலைகொண்டுள்ளன.

ஜோர்ஜியாவின் மேற்கு பகுதியிலிருந்து பிரிந்து சென்ற அப்காஸியாப் பிரதேசத்திலுள்ள போட்டி என்ற நகரிலிருக்கும் பிபிசியின் செய்தியாளார், அங்குள்ள கடற்படைகளின் கப்பல்களை நிறுத்தும் இடத்தில் ரஷ்யாவின் துருப்புக்களை ஏற்றிச் செல்லும் படகுகள், கவச வாகனங்கள் மற்றும் அதிவேக படகுகள் நிலை கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.

அங்குள்ள இராணுவத் தளவாடங்களை அழிப்பதே ரஷியாவின் நோக்கமாக இருக்கக்கூடும் என்று தோன்றுவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கிறார்.

இவை மட்டுமில்லாமல், இன்னும் உள்ளே செனாக்கி நிலப்பகுதியில், பெரிய அளவில் ரஷிய இராணுவப் படைகள் இருக்கின்றன. அவர்கள் அந்தப் பகுதியிலிருந்து பெருமளவில் ஜோர்ஜியாவின் தளவாடங்களை கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளனர்.

இதேவேளை, கோரி நகரின் கட்டுப்பாட்டை மீண்டும் கையளிப்பது தொடர்பில் ஜோர்ஜிய போலீசாருடன் ரஷ்யர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள்.


ஏவுகணை பாதுகாப்புத் திட்டம்: போலந்து-அமெரிக்க உடன்பாட்டை ரஷ்யா விமர்சித்துள்ளது

ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை விளக்குகிறார் அமெரிக்க அரசு அதிகாரி

அமெரிக்க ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதிக்கான தளத்தை தமது நாட்டில் வைத்துக்கொள்ள உடன்படுவதன் மூலம், போலந்து, ஒரு தாக்குதல் இலக்காகிறது என்று ரஷ்ய கூறுகிறது.

ரஷ்ய இராணுவ படையின் துணைத் தலைவரான ஜெனரல், அனடோலி நொகொவிட்சின் அவர்களால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போக்கிரி நாடுகள் என்று தாம் கூறிக்கொள்ளும் நாடுகளிடம் இருந்துவருகின்ற ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாத்துக்கொள்ளவே இந்த பாதுகாப்புக் கவசத்திட்டம் வடிவமைக்கப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.

ஆனால், இது ரஷ்யாவை இலக்கு வைத்தது என்றே ரஷ்யா இதனைப் பார்ப்பதாக, ரஷ்ய அதிபர் மெட்வெடேவ் அவர்கள் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத்திட்டத்தின்படி, வழி மறித்துத் தாக்கும் ஏவுகணைகளை பால்டிக் கடற்கரையோரம் அமெரிக்கா நிறுவ, போலந்து அனுமதிக்கும். அதற்குப் பதிலாக, போலந்தின் இராணுவத்தை நவீனமயப்படுத்த அமெரிக்கா உதவுவதுடன், போலந்தின் விமானப்படையில், பாட்ரியட் ஏவுகணைகளை இணைப்பதன் மூலம் அதனை வலுப்படுத்தவும் உதவும்.


ஜோர்ஜியாவில் இருந்து ரஷ்யத் துருப்புகள் திங்கட்கிழமை முதல் வெளியேறும் – ரஷ்ய அதிபர்

ஜோர்ஜியாவிலிருந்து ரஷ்யத் துருப்புகள் வெளியேறுவது தொடர்பில் சற்றுக் குழப்பம் எழுந்த நிலையில், ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வியதேவ் பிரஞ்சு அதிபர் நிக்கோலா சர்கோஸியிடம் ரஷ்ய துருப்புகளின் வெளியேற்றம் வரும் திங்கட்கிழமை நன்பகலிலிருந்து ஆரம்பிக்கும் என்று கூறி தெளிவுபடுத்தியுள்ளர்.

ஏற்படுத்தப்பட்டுள்ள சமரச உடன்படிக்கையை ரஷ்யா நடைமுறைப்படுத்தத் தவறினால் கடும் பின்விளைவுகளை அது எதிர்கொள்ள நேரிடும் என்று சர்கோஸி ரஷ்ய அதிபரிடம் எச்சரித்திருந்ததாக பிரஞ்சு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே ஜெர்மனியின் சான்செல்லர் அங்கெலா மெர்க்கெல் அவர்களும் தன் பங்கில் ரஷ்யா துருப்புகளை வேகமாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

டிபிலிஸியில் ஜோர்ஜிய அதிபருடன் பேச்சுநடத்திய பின்னர் கருத்து வெளியிட்ட அங்கேலா மெர்க்கெல் ஜோர்ஜியாவின் நில ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டுமென்றும் அகதிகளுக்கு உதவிகள் கிடைக்க இடமளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

ஜோர்ஜியா விரும்பினால் இனியும் கூட அதனால் நேட்டோ உறுப்புரிமையைப் பெற இயலும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஜோர்ஜியாவில் வன்முறைகள் தொடர்வதாக ஜோர்ஜியா அதிபர் குற்றச்சாட்டு

ஜோர்ஜியாவில் ரஷ்ய துருப்புகள்
ஜோர்ஜியாவில் ரஷ்ய துருப்புகள்

ஜார்ஜியாவில் வன்முறைகள், சூறையாடல்கள் தொடர்வதோடு, பாதிப்புகள் பல இடங்களுக்கு பரவியிருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஜார்ஜிய அதிபர் மிகைல் சாக்ஸ்விலி தெரிவித்துள்ளார்.

இது ரஷ்யாவின் இன ஒழிப்பு செயல் என்று கூறியுள்ள அவர், ஜார்ஜியா ஒரு போதும் தனது பகுதியை விட்டு கொடுக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கோரி நகரத்தின் நுழைவு வாயில்களை ரஷ்யப் படைகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன, அத்தோடு கோரி மற்றும் தலைநகர் டிபிலிஸிக்குப் இடையில் சோதனைச்சாவடிகளை அமைத்துள்ளனர்.

கோரி நகரத்திற்கு மனிதாபிமான உதவிகளை ரஷ்ய படையினர் அனுமதித்துள்ளனர். இந்த நகரத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை மக்கள் வழிமறித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


ஜோர்ஜியாவில் தாக்குதல்கள் தொடருவதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்

ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் பிரான்ஸ் நாட்டின் மத்தியஸ்தத்தின் ஊடான போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு பல மணிநேரத்தின் பின்னரும் கூட ஜோர்ஜிய நகரான கோரியிலும் மற்றும் அதனைச் சுற்றவரவுள்ள கிராமங்களிலும் சூட்டுச் சம்பவங்களும் கொள்ளையடிப்புச் சம்பவங்களும் இடம்பெற்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள தளத்தில் இருந்த ஜோர்ஜியப் படையினரின் இராணுவத் தளபாடங்களை, ரஷ்ய தாங்கிகள் நிர்மூலம் செய்துவிட்டதாகத் தென்படுவதாக அந்த நகருக்கு வெளியேயுள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தெற்கு அசட்டியாவின் பிரிவினைவாதிகளால் பெருமளவு கொள்ளைகள் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து வெளியேறிவருகின்ற மக்கள் கூறுகிறார்கள்.

துப்பாக்கி முனையில் மக்கள் சூறையாடப்படுவதுடன், வீடுகளும் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.

கோரியில் இருந்து தெற்காக, ஜோர்ஜிய தலைநகர் திபிலிசியை நோக்கி ரஷ்ய கவச வாகனங்கள் முன்னேறிவருகின்றன. ஆனால், பின்னர் பிரதான வீதி மூடப்பட்டுவிட்டது.

கோரிக்கு வெளியே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்ற ஜோர்ஜியத் தளங்களில் இருந்து இராணுவ தளபாடங்களையும், வெடிபொருட்களையும் ரஷ்யப் படையினர் அகற்றி வருவதாக ரஷ்ய இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.


Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Israel-Palestine conflict – Resisting the Nakba: Expulsion and dispossession can’t be cause for celebration

Posted by Snapjudge மேல் மே 15, 2008

இஸ்ரேல் தோன்றிய தினத்துக்கு துக்கம் அனுஷ்டிக்கும் பாலஸ்தீனர்கள்

இஸ்ரேலியக் கொடியை எரிக்கும் பாலஸ்தீனர்கள்

இஸ்ரேல் தனது உருவாக்கத்தின் 60வது ஆண்டு நிறைவை கடந்த வாரம் கொண்டாடியது. ஆனால் இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கத்தை அடுத்து, அதனால் பாதிக்கப்பட்ட பாலத்தீனர்கள் இன்று தாம் எதிர்கொண்ட அனர்த்தத்தைக் குறிக்கும் நக்பா என்ற தினத்தை அநுட்டித்தார்கள்.

நக்பா என்ற அரபுச் சொல்லின் அர்த்தம் பேரழிவு, பேரனர்த்தம், பெரும்கேடு என்பதாகும்.

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவான போது லட்சக்கணக்கான பாலத்தீன மக்களுக்கு அது ஒரு அனர்த்த தினமானது. லட்சக்கணக்கில் பாலத்தீன மக்கள் அன்று இதனால் வீடிழந்தனர், கொல்லப்பட்டனர், இடம்பெயர்ந்தனர். இன்று பல இடங்களில் சிதறிய நிலையில் அவர்கள் அகதி முகாம்களிலும் வேறு இடங்களிலும் தங்கியுள்ளனர்.

தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி 60 ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், தமது தாயக நிலத்துக்குத் திரும்புவதற்கு, தார்மீக ரீதியிலான மற்றும் சட்ட ரீதியிலான உரிமை தமக்கு இன்னமும் இருக்கிறது என்று அந்த பாலத்தீன மக்கள் நினைக்கிறார்கள்.

நாற்பதுகளின் இறுதியில் உருவான ஐக்கிய நாடுகள் தீர்மானம் ஒன்றும் அதற்கு ஆதரவு வழங்குகிறது.

ஆனால் 40 லட்சம் பாலத்தீனர்கள் நாடு திரும்பும் பட்சத்தில், தமது நாட்டில் தாம் தமது யூத அடையாளத்தை இழந்துவிடுவோம் என்ற இஸ்ரேலியர்களின் அச்சம் இதற்குத் தடையாக இருக்கிறது.

அப்படியானால், பாலத்தீன தனி நாடு என்ற கனவு கானல் நீராகி வருகிறதா?

Posted in Law, Order, Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | Leave a Comment »