Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Children’

Baby Formula – 4 dead, 6200 sick: China Milk Scandal Shows Ties Between Companies, City Officials: Singapore suspends China milk imports; deadly chemical found in yoghurt

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2008


பாலில் நஞ்சு கலக்க காரணமான வலையமைப்பு கலைக்கப்பட்டதாக சீனா கூறுகிறது

சீனப்பாலை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை தடை செய்யவோ அல்லது திருப்பியழைக்கவோ மேலும் மேலும் நாடுகள் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இந்த இரசாயனத் தொற்று ஏற்பட காரணமாக இருந்த வலையமைப்பை கலைத்து விட்டதாக சீனா கூறுகிறது.

திருட்டுத்தனமாக நடத்தப்பட்ட ஆலைகள் மற்றும் பால் பண்ணைகளில் நடத்தப்பட்ட சோதனைகளையடுத்து இருபத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பாலில் மெலமைன் என்னும் இரசாயனத்தை சேர்த்தார்கள் அல்லது அதை பாலில் சேர்க்க உதவினார்கள் என்ற காரணத்துக்காகவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் இரசாயனக் கலப்பு காரணமாக அங்கு பல ஆயிரம் குழந்தைகள் நச்சுத்தன்மைக்கு உள்ளாகி நோயுற்றன. நான்கு குழந்தைகள் இறக்கவும் நேரிட்டது.

இதனிடையே தங்களது குழந்தைகள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் வழக்குகளை தொடுத்திருக்கும் குடும்பங்கள் வழக்கை கைவிடுமாறு அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


சீனப் பொருட்களின் பாதுகாப்புத்தன்மை உறுதி செய்யப்படும் – சீன பிரதமர்

சீன குழந்தை
பால்மா கலப்படத்தால் குழந்தைகள் பாதிப்பு

சீனாவில் பால்மாவில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, சீனப் பொருட்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதி செய்ய சீன பிரதமர் வென் ஜியாபோ உறுதியளித்துள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு தங்கள் அரசாங்கம் திடமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் பால்மா கலப்பட விஷயத்தில் தலைநகர் பீஜிங்கில் புதியதாக 176 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக சீன செய்திகள் கூறுகின்றன.

மேலும் ஷாங்காய் நகரத்தில் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் ஐந்து சதவிதத்தினர் சிறுநீரகங்களில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளை காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் இது வரையில் நான்கு குழந்தைகள் பலியாகியுள்ளனர், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் பால்மாவில் ஏற்பட்ட ரசாயனக் கலப்பால் பல ஆயிரம் குழந்தைகளுக்கு பாதிப்பு

பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தை
பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தை

சீனாவில் இரசாயனக் கலப்பு கொண்ட பால்மாவை உட்கொண்ட காரணத்தினால் ஆறாயிரம் குழந்தைகள் நோய்வாய்பட்டுள்ளனர் என அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக இதுவரை மூன்று குழந்தைகள் மரணமடைந்துள்ளன என்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது என்றும் சீனாவின் சுகாதார அமைச்சர் சென் ஷூ தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் நூற்றிஐம்பதுக்கும் அதிகமானவர்களின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டு செயலிழந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஊழல் தொடர்பான விவகாரம் பரவிவரும் நிலையில், சீனாவின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பானது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இராசயனமான மெலமைன், மேலும் இருபத்து இரண்டு வெவ்வேறு வர்த்தகப் பெயர்களையுடைய பால்மாவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரசாயனப் பொருள் பால்மாவில் கலந்திருப்பதாக அறியப்படவில்லை. பாலில் புரதச்சத்து கூடுதலாக இருப்பதற்காக மெலமைன் கலக்கப்பட்டதாக எண்ணப்படுகிறது.

இதையடுத்து தேசிய அளவில் அனைத்து பால் உணவுப் பொருட்களும் பரிசோதிக்கப்பட வேண்டும் என சீனா உத்தரவிட்டுள்ளது.



சீன பால் உற்பொருட்களுக்கு சிங்கப்பூர் இறக்குமதி தடை

இரசாயனக் கலப்படம் நிறைந்த பால் மாவு

சீனாவிலிருந்து பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் சிங்கப்பூர் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சில சீன பால் உற்பத்திப் பொருட்களில் தொழிற்சாலை இரசாயனமான மலெமைன் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவில் பாலிலும் பால் மாவிலும் இந்த இரசாயனக் கலப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கடைகளிலிருந்து பால் உற்பத்திப் பொருட்கள் பலவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டு அவை அகற்றப்பட்டுவருகின்றன.

சீனாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்திகளை கடந்த சில நாட்களில் எடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் கிட்டத்தட்ட பத்து சதவீத மாதிரிகளில் மெலமைன் கலந்திருக்கிறது என சீன அரசாங்கத்தின் தரக் கண்காணிப்பு நிறுவனம் கூறுகிறது.

இதனிடையே, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவு வகைகளை பரிசோதனை செய்ய இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து கொழும்பில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றிய வர்த்த நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்த்தன, நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அரசு இந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கையினை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Kid soldiers: Human Rights Watch: Indian forces, Maoist rebels use child fighters – Chhattisgarh Conflict

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 6, 2008

இந்தியப் படையும் மாவோயிஸ்ட்டுகளும் சிறாரை படையில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள்
சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள்

சிறார்களை மோதல்களில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்திய பாதுகாப்புப் படையினரையும், மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களையும் சர்வதேச செயற்பாட்டு அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது.

இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் அனைத்துத் தரப்பினரும் சிறார்களை ஆயுத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாக அது கூறுகிறது.

தாம் சிறாரை ஆட்சேர்ப்புச் செய்வதாகவும், சில சமயங்களில் 12 வயதுச் சிறாரைக் கூட ஆட்சேர்ப்புச் செய்வதாகவும் கிளர்ச்சிக்காரர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரச ஆதரவுடனான சல்வா ஜூடூம் ஆயுதக்குழுவினரும் சிறார்களைப் பயன்படுத்துவதாக அந்த மனித உரிமை அமைப்பு கூறுகிறது.

சிறாரை ஆட்சேர்ப்புச் செய்வதை அரசாங்கம் மறுக்கிறது.

Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , | Leave a Comment »

9 babies die during clinical trials at AIIMS-India-The Times of India

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 19, 2008

இந்தியாவில் மருத்துவ சோதனையில் இறந்த குழந்தைகள்

இந்தியாவின் முன்னணி மருத்துவ ஆய்வு நிலையம் ஒன்றில் கடந்த இரண்டரை வருடங்களில், மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரீட்சார்த்த நடவடிக்கை ஒன்றின்போது குறைந்தது 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

நோய்த்தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு விடை காணும் முகமாக தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகளின்போது இந்த மரணங்கள் இடம்பெற்றதாக, அனைத்து இந்திய மருத்துவ விஞ்ஞான ஆய்வு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால், நடந்த அனைத்து உயிரிழப்புகளுக்கும் மருத்துவ சோதனையைக் காரணம் கூறமுடியாது என்றும், சில குழந்தைகள் உயிர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இறந்தவற்றில் பல ஏழைக் குழந்தைகள் என்றும், இந்த மருந்துவ சோதனையின் பிரதிபலன்களை புரிந்துகொள்ள முடியாதவர்களைக் கொண்ட, படிப்பறிவு இல்லாதவர்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவை என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


BBC News | HEALTH | Unicef denies Assam vaccine deaths (19 November, 2001)

The United Nations says it is confident that reports that several children have died in the Indian state of Assam as a result of a UN-sponsored anti-blindness campaign are false.

Hundreds of thousands of children in Assam were given syrup containing Vitamin A in a campaign organised by the UN’s children’s organisation, Unicef, to prevent blindness.

Shortly after, thousands of children were reported to fallen ill because of the syrup and now the Assam state government says at least 16 children have died.

India Gets $521 Million World Bank Funding For Polio, Malaria (Friday, August 1, 2008)

India was given almost $521 million of funding from the World Bank to fight infectious diseases, including polio and malaria, which kill thousands of people in the South Asian nation and risk spreading overseas.

The funding will help the government and UN agencies prevent, diagnose and treat parasitic infections and increase polio vaccination, the Washington-based bank said in a release yesterday. …

India, along with Nigeria, Pakistan and Afghanistan, remains the only country still affected by the scourge of polio that shatters the future of hundreds of people, mostly young children,’ said Isabel Guerrero, World Bank Vice President for South Asia, in the release. ‘With this operation, we hope India will take the final step towards eradicating polio.’ …

The National Vector Borne Disease Control and Polio Eradication Support Project aims to help India cut illness from malaria by 50 percent and eliminate Kala azar, a parasitic infection transmitted by sand flies that infects about 40,000 Indians annually, by 2010. The project plans to improve malaria prevention and provide treatment for more than 100 million people. … The World Bank and government of India spent seven months reviewing past health projects marred by fraud and graft, mostly related to the procurement of goods, to adopt measures that safeguard against corruption, yesterday’s release said.” [Bloomberg]

R.C. Deka to be new director of AIIMS- Hindustan Times: “Deka’s two years’ as dean of AIIMS and also in a senior administrative post at the Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research, Puducherry, went in his favour.”

49 babies die during clinical trials at AIIMS-India-The Times of India: “Nod from ethics panel: AIIMS”

Responding to a Right to Information (RTI) query on clinical trials on babies, the AIIMS administration admitted that of the 4,142 babies — 2,728 of whom were below the age of one — who were enrolled for clinical trials by the institute’s department of paediatrics, 49 had died since January 1, 2006. The department conducted 42 sets of trials on babies during this period.

In its reply, AIIMS said the deaths amounted to a 1.18% mortality rate. The RTI query was filed by Rahul Verma of Uday Foundation for Congenital Defects and Rare Blood Groups, an NGO.

India recently pipped China to become Asia’s most popular destination for conducting clinical trials. According to the Planning Commission, 139 new trials were outsourced to India recently compared with 98 in China.

The cost of conducting trials in India is 20% to 60% of the cost in industrialized countries. The RTI query also digs out information on the top drugs (according to volume of consumption) made in a foreign country that were used during the trials on the babies.

AIIMS has said five foreign-manufactured medicines were tested during the trials. They were zinc tablets for treating zinc deficiency and serving as a nutritional supplement, olmesartan and valsartan for treating blood pressure-related problems, rituximab for treating chronic focal encephalitis and gene-activated human glucocerebrosidase for treating Gaucher’s disease, which affects the liver. AIIMS said it had taken clearance for the trials from its own ethics committee, the health ministry steering committee (HMSC) on ethics and the national ethics committees of ICMR and DBT.

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , | 5 Comments »

Stampede at Naina Devi Temple in Bilaspur HP: 145 Dead, 30 Injured – ‘Police cane-charged us’: Stampede survivors

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2008

இந்தியக் கோவிலில் கூட்ட நெரிசல்; குறைந்தது 140 பேர் பலி

வட இந்தியாவில் ஒரு இந்துக் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தபட்சம் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறுகின்றனர். தவிர ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஒரு குன்றின்மேல் அமைந்துள்ள நைனா தேவி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிராவண மாத நவராத்திரி சிறப்புப் பூஜைக்காக சென்றுகொண்டிருக்கையில், பாதையின் விளிம்பி உள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழ, ஜனநெரிசல் ஏற்பட்டததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர்.

இறந்தவர்களில் சுமார் நாற்பது பேர் சிறார்

Posted in Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

C Vezhavendhan: The need for quality Instructors – Teacher Training Schools

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

தேவை தரமான ஆசிரியர்களின் சேவை

சி. வேழவேந்தன்

தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்கள் உள்பட அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை சொற்ப அளவில் மட்டுமே இருந்தன.

எனவே, அப்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேரும் நிலை இருந்தது.

மருத்துவம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து அங்கே இடம் கிடைக்காத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேருவது வழக்கம்.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 18 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை அரசு மேலும் குறைத்துள்ளது.

இதன் மூலம் விண்ணப்பித்த அனைவருக்கும் (குறைந்த மதிப்பெண்கள் பெற்றால்கூட) பொறியியல் கல்லூரிகளில் அரசின் கலந்தாய்வு மூலம் இடம் கிடைக்கும் நிலை உள்ளது.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் (ரூ. 2 லட்சம் வரை) சீட் கிடைக்தாத நிலையே இருந்துவந்தது.

ஆனால், தற்போது தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதன்மூலம் ஆண்டுதோறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் உள்ள 40 ஆயிரம் இடங்களில் 25 ஆயிரம் இடங்களை அரசு கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது.

மீதம் உள்ள 15 ஆயிரம் இடங்களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தினர் நேரடியாக மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர்.

அரசின் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர் அரசு ஒதுக்கிய கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.

போட்டி அதிகமாக இருந்தபோது தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் தானாக நிரம்பின.

ஆனால் இன்று தனியார் பொறியியல் கல்லூரிகளைப் போலவே, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கே மாணவர்கள் இல்லாமல் இடத்தை காலியாக வைத்துள்ளன.

எனவே தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முன்னர் ரூ. 2 லட்சத்திற்கு விலை போன இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான இடம், தற்போது ஆண்டுக்கு ரூ. 35 ஆயிரம் என குறைந்துள்ளது.

இதையும் தவணை முறையில் கொடுக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வுக்கு 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த ஆண்டு 40 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மாணவர்கள் பிரிவில் ஒரு குறிப்பிட்ட இடஒதுக்கீட்டில் குறைந்த பட்ச கட்-ஆப் மதிப்பெண் 470.

இதேபோல, மாணவிகள் பொதுப் பிரிவில் அறிவியல் பிரிவுக்கு 835, கலைப் பிரிவுக்கு 952, தொழில் பிரிவுக்கு 971 என கட்-ஆப் மதிப்பெண் இருந்தது.

பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 470 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவர் அரசு ஒதுக்கீட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்வதற்கான வாய்ப்பை கடந்த ஆண்டு பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் குறைவாகவே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தரமான ஆசிரியர்களால்தான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆங்கில மோகத்தாலும், தரமான கல்வி கிடைக்குமா என்ற சந்தேகத்தாலும் தமிழகத்தில் மொத்தம் உள்ள 34,208 அரசு, தனியார் தொடக்கப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்துவருகிறது.

ஆனால், அரசிடம் அனுமதிபெற்று இயங்கிவரும் 4622 நர்சரி, பிரைமரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் தொடர்ந்து ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.

300, 400 மாணவர்கள் படித்துவந்த சில தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது ஒரு மாணவர் கூட இல்லாமல் மூடப்பட்டுவரும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுக்க ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளுக்கு இணையாக தமிழ் வழிப் பள்ளிகளிலும் கற்றல் முறைகளை மாற்றவேண்டும். அதோடு தரமான ஆசிரியர்களின் சேவையும் இன்றைய முக்கியத் தேவையாக உள்ளது.

மேலும், நமது அண்டை மாநிலமான புதுச்சேரியைப்போல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை அரசு தொடங்கி ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர்களை அந்த வகுப்புகளுக்கு நியமிக்கலாம்.

இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைவதைத் தடுக்க முடியும்.

மேலும், பணக்காரர் வீட்டுக் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைத்துவரும் தரமான கல்வி சாமானிய ஏழைக் குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யலாம்.

இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஆங்கில அறிவும், கணினி அறிவும் அவசியம் என்பதால் அதற்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.

Posted in Economy, Finance, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Primary School Education: Nursery kids admission – Tamil Nadu, Children

Posted by Snapjudge மேல் ஜூன் 20, 2008

இது விதியல்ல, சதி!

சமீபத்தில் சென்னை முகப்பேரில் நடந்த சம்பவம் ஒன்று நமது சமுதாயத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் ஏன் நம்மீதே நமக்குக் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. 24-வயது அனிதா என்ற பெண்மணி தனது மூன்று வயதுப் பெண் குழந்தையை நர்சரி பள்ளியில் சேர்க்க நன்கொடை கொடுக்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டாள் என்பதுதான் அந்தத் திடுக்கிடும் செய்தி.

அனிதா தற்கொலை செய்து கொண்டு விட்டாள். ஆயிரக்கணக்கான அனிதாக்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்குப் பல்வேறு தியாகங்களைச் செய்து கொண்டும், வெளியில் சொல்ல முடியாத நரக வேதனையை மனதில் சுமந்து கொண்டும், கடன்காரர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவமானத்தை மென்று விழுங்கிக் கொண்டும் வாழ்கிறார்கள் என்பது ஒன்றும் ரகசியமல்ல. பள்ளிக்கூடம் திறக்கிறது என்கிறபோதே வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பதைபதைக்கும் பெற்றோரும், உற்றார், உறவினர், நட்பு என்று அனைவரிடமும் கைநீட்டிக் கெஞ்சும் பெற்றோரும் ஏராளம் ஏராளம்.

“தம்மிற் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது’ என்பது வள்ளுவப் பேராசானே எழுதி வைத்த குறள். அக்கம்பக்கத்துப் பெண்டிரும், உற்றார் உறவினரும் தத்தம் குழந்தைகளைப் பெரிய பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு அனுப்பும்போது, தங்களது குழந்தைகளுக்கும் அந்தக் கல்வி தரப்பட வேண்டும் என்று எந்தவொரு பெற்றோரும் விழைவது இயல்பு. அப்படித் தர முடியாத நிலையில், விரக்தியும் வேதனையும் ஏற்படுவது தவிர்க்க முடியாதுதான்.

கிராமப்புறங்களிலிருந்து படித்துப் பட்டம் பெற்றுத் தங்கள் வாழ்க்கைத் தரத்தைப் பன்மடங்கு உயர்த்திக் கொண்ட கையோடு, தத்தம் குழந்தைகளை மிகப்பெரிய பணக்காரக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க வைக்க, தங்களுக்கு இயலாமல் போன கனவுகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பலர் துடிக்கிறார்கள். அதற்காக எந்த விலையையும் கொடுக்க அவர்கள் தயாராகிறார்கள் என்பதைத்தான் மேலே கூறிய செய்தி உறுதிப்படுத்துகிறது.

சமச்சீர் கல்வி, உயர்கல்வி, மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகள் என்றெல்லாம் பேசுகிறோமே தவிர, இந்தத் தனியார் பள்ளிகளின் கட்டணத்தையும், நன்கொடையையும் முறைப்படுத்த நமது அரசு ஏன் முன்வருவதில்லை என்பது புதிராகவே இருக்கிறது. காளான்கள் போலத் தனியார் பள்ளிகள் ஆங்காங்கே முளைக்கின்றன. இந்தப் பள்ளிகள் நன்கொடை வசூலித்துத் தங்களது கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கிக் கொள்கின்றன. கேள்வி கேட்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், இது தனியார் முயற்சி என்றும் கூறுகிறார்கள். நாமும் பார்த்துக் கொண்டு வாளாவிருக்கிறோம்.

தனியார் பள்ளிகளை விடுங்கள். அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் அரசின் உதவியுடன் நடத்தப்படும் பள்ளிகளில் அதிகாரபூர்வமற்ற வகையில் நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன. இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமலா நடைபெறுகிறது? இத்தனைக்கும் தமிழக அரசின் 1972ஆம் ஆண்டு சட்டப்படி இந்த நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தடுக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்டுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள், இன்னொருபுறம் பள்ளிக் கல்வியில் தனியார் தலையீட்டை அதிகரித்து சமூக ஏற்றத் தாழ்வு என்கிற நஞ்சைப் பிஞ்சு உள்ளங்களில் விதைக்கின்றனர். பணக்காரக் குழந்தைகள் மட்டுமே படிக்கும் தனியார் பள்ளிகள் ஒருபுறம், ஏழைகள் மட்டுமே படிக்கும் அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துப் பள்ளிகளும், அரசு உதவியுடன் நடத்தப்படும் பள்ளிகளும் மறுபுறம்.

பசி, வறுமை, ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாமல் வளரும் சமுதாயம் ஒருபுறம். கல்வியில்கூட வறுமையே கதி என்கிற விதியை வரித்துக் கொண்ட குழந்தைகள் மறுபுறம். இட ஒதுக்கீட்டால் ஏற்படும் சமூகநீதிகூட பணக்காரப் பள்ளிகளில் படித்தால் மட்டுமே கைகொடுக்கும் துர்பாக்கிய நிலை. ஏழையாகப் பிறந்த குற்றத்திற்காக அந்தக் குழந்தையும், அந்தக் குழந்தையைப் பெற்ற குற்றத்திற்காக அந்தப் பெற்றோரும் இதையெல்லாம் விதியென்று கருதி வாளாவிருப்பதுதான் சமுதாய நீதியா?

மேலே எழுப்பிய கேள்விகளைப் பெருந்தலைவர் என்று அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் கு. காமராஜ் உணர்ந்திருந்தார். அதனால்தான் கட்டாயக் கல்வி என்கிற பெயரில் அனைவருக்கும் கல்வி அளித்தது மட்டுமல்லாமல் பள்ளிக் கல்வியை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். தனியார் பள்ளிகளும் அரசின் சட்ட மற்றும் பாடத்திட்டங்களுக்கு உள்பட வைத்தார். தமிழகத்தில் சாதி பேதம் மறைந்து சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் குறைந்ததற்குக் காமராஜின் கல்விக் கொள்கைதான் தலையாய காரணம்.

பள்ளிக் கல்வியை தனியாரிடமிருந்து அகற்றி அரசே ஏற்று நடத்துவது மட்டும்தான் இதற்கு ஒரே தீர்வு. அதைச் செய்யாத வரையில் சமூக நீதியும் சமச்சீர் கல்வியும், அனைவருக்கும் கல்வியும் உதட்டளவு உபந்நியாசமாகத்தான் தொடரும்!

Posted in Economy, Finance, Govt, India, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Rising malnutrition at the cost of inflation: India suffers epidemic of stunted kids – researchers: Food prices hike increase risk warning in South Asia: UNICEF

Posted by Snapjudge மேல் மே 15, 2008

இந்திய குழந்தைகளின் போஷாக்கின்மை குறித்து ஐநா கவலை

போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று
போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று

இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதிப்பேர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறுகிறது.

இந்த நிலையில், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக, மேலும் பட்டினியைச் சந்திக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியிருப்பதாக, ஐ.நா.வுக்கான குழந்தைகள் நிதியமான யுனிசெஃப்பின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் டேனியல் டூலே தெரிவித்திருக்கிறார்.

அரிசி விலையுயர்வினாலும் பெரும் பாதிப்பு
அரிசி விலையுயர்வினாலும் பெரும் பாதிப்பு

இந்தப் பிரச்சினை தொடர்பாக செவ்வாய்க்கிழமை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டேனியல் டூலே, விலைவாசி உயர்வு பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்தியா உள்பட இந்தப் பிராந்தியத்தில் உள்ள குழந்தைகள் பெரும் அபாயத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக எச்சரித்தார்.

விலைவாசி உயர்வு காரணமாக, இந்தியாவில் மட்டும் சுமார் 18 லட்சம் குழந்தைகள், போஷாக்கின்மையால் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருப்பதாக யுனிசெப் கூறுகிறது. இதைத் தடுக்க வேண்டுமானால், இலவச உணவுத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்து, ஏழைகள் பயன்பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுனிசெப் கூறுகிறது. நீண்டகால கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமானால், வேளாண் துறையில் தற்போது பற்றாக்குறையாக உள்ள முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் யுனிசெப் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

Posted in Economy, Finance, Govt, India | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »