வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
![]() |
![]() |
உயிரினங்களில் ஒளிரும் தன்மை குறித்த ஆராய்ச்சிக்கு வேதியல் நோபல் பரிசு |
வேதியியலுக்கான இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு, ஜி எப் பி எனப்படும் பசுமை ஒளிரும் புரதத்தை கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருள் ஜெல்லி மீன்களில் முதலில் கண்டறியப்பட்டது.
அமெரிக்கர்களான மார்டின் Chalfie roger Tsien ஆகியோருக்கும் ஜப்பானியரான Osamu Shimomura வும், உயிர் அறிவியலுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு கருவியை வெளிக்கொண்டுவந்துள்ளதாக நோபல் கமிட்டி கூறியுள்ளது.
இந்த கண்டுபிடிப்பை நுண்ணோக்கியின் கண்டுபிடிப்புடன் அது ஒப்பிட்டுள்ளது.
மூளை செல்களின் வளர்ச்சி மற்றும், புற்றுநோய் போன்ற வியாதிககளின் பரவல் போன்றவற்றை கண்டறிய இந்த பசுமை ஒளிர்தலின் புரதம் உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்படுகிறது.