பீய்ஜிங்கில் அமெரிக்கப் பயணி கொலை
![]() |
![]() |
கொலை நடந்த பீய்ஜிங் நகர மேளக் கோபுரம் |
பீய்ஜிங் ஒலிம்பிக்கில் இன்று, அமெரிக்க சுற்றுலாப்பயணி ஒருவரை சீனர் ஒருவர் கொன்றுள்ளார். கொல்லப்பட்டவர், அமெரிக்க வாலிபால் அணியுடைய பயிற்சியாளரின் உறவினர் என்று தெரிவிக்கப்படுகிறது.
அந்த அமெரிக்கரும், ஒரு பெண் உறவினரும் அவர்களுடைய சீன வழிகாட்டியும் பீய்ஜிங் நகர மையத்திலுள்ள பழங்காலக் கோபுரத்தில் இருக்கையில், சீனர் தாக்கியுள்ளார்.
அமெரிக்கரைக் கொன்ற பின்னர் அந்த சீனரும் கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான பெண்ணும், வழிகாட்டியும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். இந்தக் கொலையின் காரணம் என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை. சீனாவில் வெளிநாட்டினர் தாக்குதலுக்குள்ளாவதென்பது அரிதாக நடக்கும் விஷயம்.