மகேஸ்வரி வேலாயுதம் படுகொலை செய்யப்பட்டார்
![]() |
![]() |
மகேஸ்வரி வேலாயுதம் |
இலங்கையின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சக ஆலோசகரும், மனித உரிமைகள் சட்டத்தரணியுமான மகேஸ்வரி வேலாயுதம் யாழ்ப்பாணம் கரவெட்டியில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாயைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த மகேஸ்வரி வேலாயுதத்தை, அங்கு இராணுவ உடையில் வந்த விடுதலைப்புலிகளே சுட்டுக்கொலை செய்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் தெரிவித்தார்.
இறக்கும் போது மகேஸ்வரிக்கு வயது 53. அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்த போதிலும், அவர் எந்தவிதமான பாதுகாப்பையும் கோரியிருக்கவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விடுதலைப்புலிகளின் தரப்புக் கருத்தை உடனடியாகப் பெறமுடியவில்லை.
TamilNet: EPDP TAMIL TRAITOR Maheswari Velayutham shot dead in Jaffna – Eelam Justice Dispensed!