காஷ்மீர் கோயில் விவகாரத்தில் புதிய உடன்பாடு
![]() |
![]() |
காஷ்மீர் ஆர்ப்பாட்டங்கள் |
இந்தியாவின் காஷ்மீரில், கோயில் ஒன்றை சுற்றியிருக்கின்ற நிலத்தை பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சையில், அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்பாட்டை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டத்தை இந்துக்கள் கைவிட்டுள்ளனர்.
கோயிலை நடத்தும் வாரியத்திற்கு மேலதிகமாக நிலங்களை கொடுப்பதற்கு முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த சர்ச்சையால் இரு மதத்தினரும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இப்போது நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், சர்சைக்குரிய நிலத்தை, வாரியத்தினர் தற்காலிகமாக பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் ஒப்பு கொண்டுள்ளனர்.
இந்த செய்தியானது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரில் புதிய ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.