Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Airforce’

NorthEast Secretariat on Human Rights (NESoHR): 70,000 new Internally Displaced People (IDP) in Vanni in 60 days; SLA shelling targets another hospital zone in Vanni, IDP killed; Sri Lankan Soldiers Kill 15 Tamil Tigers; Jets Raid Rebel Bases

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 10, 2008

வட இலங்கை மோதல்களில் விடுதலைப் புலிகள் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளில், வன்னிக் களமுனைகளிலும், யாழ்ப்பாணத்தில் கிளாலி களமுனைகளிலும் சனியன்று இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 28 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.

வவுனியா பாலமோட்டை முன்னரங்க பகுதிகளிலும், வெலிஓயா பகுதியிலும் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மீது நேற்று நடத்திய தாக்குதல்களில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் விபரம் வெளியிட்டுள்ளது. பாலமோட்டை பகுதியில் இடம்பெற்ற சண்டைகளின் பின்னர் இராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதலில் 2 விடுதலைப் புலிகளின் சடலங்களும் ஆயுதத் தளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் கூறியிருக்கின்றது.

யாழ்ப்பாணம் கிளாலி பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதல் ஒன்றில் 15 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முகமாலை பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.

ஆனால் விடுதலைப் புலிகள் தரப்பு தகவல்களோ, வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம், நவ்வி ஆகிய பகுதிகளில் இருந்து மும்முனைகளில் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன. இந்த மோதல்களில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.


மடு தேவாலயம் திரும்பியது மாதா திருச்சொரூபம்

மாதா திருச்சொரூபம்
மாதா திருச்சொரூபம்

இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலுக்கு, மன்னார் ஆயர் இல்லத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்த மடு மாதாவின் திருச்சொரூபம், சனிக்கிழமை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டு கொலுவேற்றப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்.

கடந்த நான்கு மாதங்களாக உரிய பராமரிப்பின்றி இருந்த மடுக்கோவிலின் திருத்த வேலைகள் முடிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, மடுக்கோவிலை பூஜை வழிபாட்டுக்குரிய புனிதமாக்கும் சமய வைபவங்களை மேற்கொள்வதற்காக கத்தோலிக்க மதகுருமார்கள் திங்கட்கிழமை அங்கு செல்லவிருப்பதாகவும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தெரிவித்தார்.


வட இலங்கையில் அறுபதினாயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை இலங்கை அமைச்சர் உறுதி செய்துள்ளார்

அமைச்சர் ரிசாத் பதியுதீன்
அமைச்சர் ரிசாத் பதியுதீன்

இலங்கைப் படையினருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இடையில் இலங்கையின் வட பகுதியில் தொடரும் மோதல்கள் காரணமாக அப்பகுதியில் அறுபதினாயிரம் மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் சபையின் முகவராண்மை கூறியதை இலங்கையின் மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஒப்புக்கொண்டுள்ளார்.

இருந்த போதிலும், அங்குள்ள மக்களுக்கான நிவாரண உதவிகள் ஆகஸ்டு மாதம் 15 திகதி வரைக்குமான அளவுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனாலும், அங்குள்ள அரசாங்க அதிகாரிகளை தற்போதைய சூழ்நிலையில் தொடர்புகொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதில் சில சிரமங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவை குறித்து அமைச்சர் ரிசாத் பதியுதீனின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


விமானக் குண்டுவீச்சில் விடுதலைப்புலிகளின் தளங்கள் அழிக்கப்பட்டதாக இராணுவம் கூறுகிறது- பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் அறிவிப்பு

விமானக் குண்டு வீச்சு( ஆவணப்படம்)
விமானக் குண்டு வீச்சு( ஆவணப்படம்)

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் பிரதேசமாகிய வன்னிப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவிலும், சனிக்கிழமை காலையிலும் விமானப்படையினர் வான்வழி தாக்குதல்களை நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதம் ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தள்ள விஸ்வமடுக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் ஒன்றின் மீது சனிக்கிழமை காலை 10 மணிக்கும், புதுக்குடியிருப்புக்கு வடக்கே உள்ள இரணைப்பாலையில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு தளம் ஒன்றின் மீது இன்று காலை 9.55 மணிக்கும் விமானப்படையினர் விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி அந்தத் தளங்களை அழித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.

பூநகரி பகுதியில் உள்ள நாகதேவன்துறைக்கு அருகில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு நிலையத்தையும், அதனோடு இருந்த படகுகள் நிறுத்துமிடத்தையும் விமானப்படையின் எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் குண்டு வீசி தாக்கி அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டிருக்கின்றது.

எனினும் இரணைப்பாலை பகுதியில் இன்று காலை விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்கள் மீதே குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் ஆசிரியர் ஒருவர் உட்பட 2 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், 12 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆனால், அக்கூற்றினை விமானப்படையினர் மறுத்துள்ளனர். இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


Posted in Politics | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Aviation branch of Tamil Tigers in Eezham: LTTE AirForce – Kumudam Reporter

Posted by Snapjudge மேல் மே 8, 2008

விடுதலைப்புலிகளின் விமான ரகசியங்கள் – அதிர்ச்சியில் இலங்கை ராணுவம்
– ஆர். முத்துக்குமார்

ஏப்ரல் 25, 2008. நள்ளிரவு நேரம். மணி 1.25 ஆகியிருந்தது. இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் இருந்து இரண்டு சிறிய ரக போர் விமானங்கள் புறப்பட்டு, வானத்தில் மிதக்கத் தொடங்கின. கிட்டத்தட்ட அதே நேரத்தில் இரணமேடு என்ற இடத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வானத்தை நோக்கிக் கிளம்பியது.

சரியாக 1.32 ஆனபோது மணலாறு பகுதியை ஒரு விமானம் நெருங்கியிருந்தது. சில நொடிகள் இடைவெளியில் இரண்டு குண்டுகள் விமானத்தில் இருந்து தரையை நோக்கி வீசப்பட்டன. குண்டுகள் தாக்கிய இடம், இலங்கை ராணுவத்துக்குச் சொந்தமான மணலாறு முன்னரங்கு நிலையம். அதற்குள் இன்னொரு விமானம் சிங்கபுரா என்ற இடத்தை நெருங்கியிருந்தது. அங்குள்ள பிராந்திய கட்டளையிடும் தலைமையகத்தை நோக்கி விமானத்தில் இருந்து ஒரு குண்டு வீசப்பட்டது.

குண்டுகள் இலக்கைத் தாக்கிய பதினெட்டாவது நிமிடத்தில் இரண்டு விமானங்களும் முல்லைத்தீவுக்கு அருகில் உள்ள முல்லியவெளி ஓடுபாதையில் வந்து இறங்கின. இந்த ஓடுபாதை முல்லைத் தீவில் இருந்து ஏழாவது கிலோமீட்டரில் இலங்கை ராணுவத்தினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, புலிகளால் உருவாக்கப்பட்டதாகும்.

தாக்குதலை நடத்திய விமானங்கள் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவை என்பது சொல்லித் தெரிய வேண்டிய விஷயமில்லை. (இரணமேட்டில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் இலங்கை ராணுவத்தின் கவனத்தைத் திசை திருப்பும் காரியத்தில் கண்ணும் கருத்துமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது தனிக்கதை). ஆனால், விமானங்கள் தரையிறங்கிய பிறகு, நடந்த காரியங்கள் இலங்கை ராணுவம் உள்ளிட்ட பலருடைய புருவங்களையும் உயர வைத்துள்ளன.

அப்படி என்ன நடந்துவிட்டது தரையில்?

விமானங்கள் கீழே இறங்குவதற்கு வசதியாக சமிக்ஞை கொடுக்கும் விதமாக, விமான ஓடுபாதையில் விளக்குகளை எரியவிட்டுக் காத்துக்கொண்டிருந்தனர் புலிகள். விமானங்கள் கீழிறங்கியதும் எரிந்து கொண்டிருந்த பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டன. குறைவான வெளிச்சத்தில் விமானங்களின் இறக்கைகளைப் பக்குவமாக மடக்கினர் புலிகள். பாகங்கள் மின்னல் வேகத்தில் கழற்றப்பட்டன. சில நிமிடங்களுக்கு முன்னர் விண்ணில் வட்டமிட்ட விமானங்கள் இரண்டும் தற்போது சின்னச்சின்ன உதிரிபாகங்களாக மாறியிருந்தன. எல்லாம் ஒன்றாக பார்சல் செய்யப்பட்டு, அங்கே தயாராக நின்று கொண்டிருந்த புலிகளுக்குச் சொந்தமான டிராக்டர் ஒன்றில் ஏற்றப்பட்டன. பைலட்டுகள் உள்ளிட்ட புலிகள், டிராக்டரில் ஏறிக்கொள்ள, வனப்பகுதியை நோக்கி விரைந்து சென்று மறைந்தது டிராக்டர்.

இந்த இடத்தில் இருந்துதான் ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. அது எப்படி புலிகளால் விமானங்களைத் தனித்தனி பாகங்களாகப் பிரித்து டிராக்டரில் எடுத்துச் செல்ல முடிந்தது? அந்த அளவுக்கு நவீன ரக விமானங்கள் புலிகளுக்கு எப்படிக் கிடைத்தன? எங்கிருந்து கிடைத்தன? அவற்றை இயக்கியது யார்? இப்படிப் பல கேள்விகளுக்கான விடைகள் தற்போது அம்பலமாகியுள்ளன.

விடுதலைப்புலிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே தங்களுடைய வான்வழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். கட்டுநாயக விமானத் தளத்தின் மீதான தாக்குதல்தான் இவற்றுக்குப் பிள்ளையார் சுழி. அவ்வப்போது இடைவெளிவிட்டு மூன்று தாக்குதல்கள் நடந்தேறின. தற்போது நடந்துள்ள மணலாறு தாக்குதல், புலிகளின் ஐந்தாவது வான்வழித் தாக்குதல் சம்பவம். அனைத்துக்குமே புலிகள் பயன்படுத்தியது ஞீறீவீஸீ க்ஷ் 143 லி என்ற மாடலைச் சேர்ந்த சிறிய ரக விமானங்கள்தான்.

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த மொரவன் ஏவியேஷன் என்ற நிறுவனத்தின் பெருமைக்குரிய தயாரிப்பு இந்த விமானங்கள். இதுவரை சுமார் ஆறாயிரம் விமானங்களுக்கு மேல் தயாரித்து, அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்துள்ளது இந்த நிறுவனம்.

மொரவன் நிறுவனம் தயாரிக்கும் விமானங்களில் மிகவும் எடை குறைவானது, புலிகள் பயன்படுத்தும் கிசிடிண 143 மாடல்தான். இதன் எடை வெறும் 850 கிலோ. வெகு எளிதாக இவற்றின் பாகங்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்துவிட முடியும். அதேபோல, அதிக சிரமமில்லாமல் பாகங்களை ஒருங்கிணைத்துவிடவும் முடியும். இந்த அம்சம்தான் புலிகளை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.

நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் இந்த விமானம், புலிகளுக்காகவே பிரத்யேகமாக இரண்டு பேர் மட்டும் செல்லத்தக்க வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. முக்கியமான விஷயம், விமானம் ஓட்டத் தெரிந்த பைலட் எவர் வேண்டுமானாலும் இந்த விமானங்களை இயக்க முடியாது என்பதுதான். சிறப்புப் பயிற்சிகள் பெற்றவரால் மாத்திரமே இயக்க முடியும். இதற்கு புஷ் ஃப்ளையிங் என்று பெயர்.

சரி.. இந்தப் பயிற்சிகள் எப்படி புலிகளுக்குத் தரப்பட்டன?

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பாக இருந்தாலும், இவற்றைப் புலிகள் வாங்கியது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஃபிளையிங் கிளப் என்ற நிறுவனத்திடம் இருந்துதான். அந்த நிறுவனமே புலிகளுக்கு புஷ் ஃபிளையிங் பயிற்சிகளை அளித்துள்ளன. முக்கியமாக, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெரும்பாலான பைலட்டுகள் இந்த புஷ் ஃபிளையிங் கலையில் நிபுணர்கள்.

புலிகள் பயன்படுத்தும் விமானங்கள் பற்றி இலங்கையில் இருந்து வெளியாகும் ‘தி பாட்டம் லைன்’ வார இதழில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை தகவல்களும் அவர்களுடைய வான்படைக்கு எந்த அளவுக்கு சக்தி இருக்கிறது என்பதை அப்பட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளன. அடுத்த தாக்குதலை புலிகள் எப்போது வேண்டுமானாலும் நிகழ்த்தலாம் என்பதால், இலங்கை ராணுவத்தின் வயிற்றில் புளி கரைந்து கொண்டிருக்கிறது, வேக வேகமாக!

– குமுதம் ரிப்போர்ட்டர்

Posted in Govt, Politics, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , | Leave a Comment »