Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Posts Tagged ‘Actress’

Asin’s Vogue cover appearance: Dasavatharam, Ghajini Movie Star in the Lead Image of the Fashion Magazine

Posted by Snapjudge மேல் ஜூன் 25, 2008

Posted in India, Tamil | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

Dasavatharam: Kamal protects Asin for not attending Cauvery Protest Fast

Posted by Snapjudge மேல் மே 15, 2008

Taken from: சினிமா நிருபர்

சினுக்கு ஆப்பு வைக்கும் தமிழ்சினிமா

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததும், கர்நாடகாவில் தமிழ் சினிமாக்கள் ஓடிய தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனை கண்டித்து சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கர்நாடகாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பிறப்பால் கன்னடர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆக்ஷன் கிங் அர்ஜூன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்பார்களத, மாட்டார்களா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதெல்லாம் பழைய கதை…! விஷயத்துக்கு வருவோம். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஒரு சில நடிகர்களும், பல நடிகைகளும் பங்கேற்கவில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அசினும் வரவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் நடந்த தசாவதாரம் விழாவுக்கு வந்த நடிகை அசின், அப்படியே நடிகர் சங்கத்திடம் ஒரு விளக்கக் கடிதத்தையும் கொடுத்து விட்டு சென்றார். உண்ணாவிரத போராட்டத்துக்கு வராதது ஏன்? என்பதற்கு விளக்கம்தான் அந்த கடிதத்தில் இருந்தது.

உண்ணாவிரதம் நடந்த நாளில் தான் இந்தி கஜினி படத்தின் சூட்டிங்கில் இருந்ததாகவும், சூட்டிங்கை திடீரென ரத்து செய்ய முடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். ஆனால் சம்பவத்தன்று கஜினி சூட்டிங் நடைபெறவில்லை என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

நடிகை அசின் உண்ணாவிரதம் பற்றி தெரிந்து கொண்டே வராமல் இருந்து விட்டார். அவரது விளக்க கடிதத்தையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் அசின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலையில் நடிகர் சங்கம் இருக்கிறது. இதற்கு காரணம் கமல்ஹாசன்தானாம்.

கமல்ஹாசனுடன் ஜோடி சேர்ந்து அசின் நடித்துள்ள தசாவதாரம் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அசின் மீது நடவடிக்கை எடுத்தால் தசாவதாரம் ரீலிசிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்க யோசித்து வருகிறார்கள் சங்க நிர்வாகிகள். அதே நேரத்தில் அசினுக்கு இந்தியில் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் திரையுலகம் தன் மீது நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை என்றே அசின் கூறி வருகிறாராம்.

கொசுறு தகவல் : சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்காத நடிகை திவ்யா (குத்து ரம்யா), பெங்களூருவில் கன்னட திரையுலகம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு தமிழ்நடிகர்கள் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து திவ்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் சென்னையில் வந்து உண்ணாவிரதம் இருந்திருந்தால் மட்டும் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்குமா? என்று பதில் கேள்வி கேட்டு கோபப்படுகிறார்.

Posted in Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , | 3 Comments »

Uthayanithy Stalin & Kruthika Uthayanithi: Photo with Tamil Actress Madhumitha

Posted by Snapjudge மேல் மே 15, 2008

‘எம் சினிமா’ பட நிறுவனம் தயாரிக்கும் ‘சொல்ல… சொல்ல… இனிக்கும்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி கலந்துகொண்டு படத்தின் நாயகி மதுமிதாவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார். உடன் கிருத்திகா உதயநிதி.
MK Stalin Son with Spouse

Posted in DMK, Govt, Politics, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »

Nayanthara alleges she was solicited for sex by IPL executives – Cricket, T20, Contracts

Posted by Snapjudge மேல் மே 7, 2008

அது ‘அந்த’ டார்ச்சர்-நயனதாரா புது குண்டு!

ஐ.பி.எல்லின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் சிலரது ‘தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கேற்ப’ நடந்து கொள்ள நான் மறுத்து விட்டதாலேயே என்னை டிஸ்மிஸ் செய்து அசிங்கப்படுத்த முயற்சிக்கின்றனர் என நயனதாரா பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூதர்களாக முன்னணி நட்சத்திரங்கள் விஜய் மற்றும் நயனதாரா நியமிக்கப்பட்டனர். இதற்காக விஜய்க்கு ரூ.1 கோடியும், நயனதாராவுக்கு ரூ.40 லட்சமும் சம்பளமாக வழங்க இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டது. இதில் நயனதாராவுக்கு ரூ.20 லட்சம் அட்வான்ஸாக வழங்கியிருந்தனர்.

ஆரம்பத்தில் அணியை அறிமுகப்படுத்தும் நிகழ்சிகளில் பங்கேற்ற நயனதாரா, பின்னர் ரஜினியின் குசேலன் ஷூட்டிங்குக்காக ஹைதராபாத் சென்றுவிட்டார். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக படப்பிடிப்புத் தளத்திலேயே மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதற்கு அடுத்த நாளே சென்னையில் அவர் தூதராக இருந்த சென்னை அணி பங்கேற்கும் மேட்ச். ஒப்பந்தப்படி இந்த மேட்சின்போது, வீரர்களை உற்சாகப்படுத்தவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் தூதரான நயனதாரா வந்திருக்க வேண்டும். ஆனால் விஜய் மட்டும் வந்து தனியாகக் கையாட்டிக் கொண்டிருந்தார். உடல்நிலையைக் காரணம் காட்டி நயனதாரா வரவில்லை.

அடுத்த நாளே அவரை தூதர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டதாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குதாரரும், ஏவி.எம்.பாலசுப்பிரமணியனின் மகனுமான குருநாத் மெய்யப்பன் அதிரடியாக அறிவித்தார். நயனதாரா தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் நயனதாராவுக்கு முன்பணமாகக் கொடுத்த ரூ.20 லட்சத்தில் 15 லட்சத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் அதற்காக அவருக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி சில தினங்களுக்கு முன் நயனதாராவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னை குருநாத் மெய்யப்பன் வேண்டுமென்றே அசிங்கப்படுத்துவதாக நயனதாரா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது;

என்னை இந்த தூதர் பொறுப்பிலிருந்து நீக்கியது அவசர குடுக்கைத்தனமானது. முறையற்றது. ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதற்காக நியாயமாக நான்தான் அவர்கள் மீது புகார் கொடுத்திருக்க வேண்டும்.

நியாயமான காரணங்களுக்காக, மேட்சின்போது வராமல் போவது இருபக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளுள் ஒன்று. நான் மருத்துவமனையில் இரு தினங்கள் தங்கியதற்கான சான்றிதழ்கள் என்னிடம் உள்ளன. என்னை நீக்கியதற்கு இதுவல்ல காரணம். அது ‘வேறு பின்னணி’… என்கிறார் நயனதாரா.

அவர்கள் ‘என்ன எதிர்பார்த்தார்கள்’ என்பது ஒரு திரைப்பட நடிகையாக எனக்கும் தெரியும். ஆனால் நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. இதற்கு மேலும் சட்டம், காண்ட்ராக்ட் என்ற பெயரில் என்னைத் தொந்தரவு செய்தால் நானே சட்டத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளாராம் நயன்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை இதுதானா?

Posted in India, Law, Tamil, Tamil Nadu | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 Comment »