Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘warlord’ Category

Arms race in Arab & Gulf states – US, Israel: War zones

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 3, 2007

அமைதியைக் குலைக்கும் ஆயுத பேரம்!

எஸ். ராஜாராம்

“”சவூதி அரேபியா மற்றும் அரபு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம், சகோதரர்களாக இருக்கும் எங்களைப் பிரிக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. அரபு நாடுகளுக்கு நண்பன்போல காட்டிக்கொள்ள திட்டமிடும் அமெரிக்காவின் இந்த ஆயுத பேரத்தால் மத்திய கிழக்கில் பதற்றம்தான் அதிகரிக்கும்”.

அரபு நாடுகளுடனான அமெரிக்காவின் சமீபத்திய ஆயுதபேர பேச்சுவார்த்தை குறித்து ஈரான் அதிபர் அகமதி நிஜாதி சொன்னது இது.

ஈரானின் முக்கியமான கூட்டாளியான சிரியாவும் இந்த ஆயுத பேரத்தை அபாயகரமானது எனக் கண்டித்துள்ளது.

உலக நாடுகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த முறை மத்திய கிழக்கு நாடுகளைக் குறிவைத்து குறிப்பாக, அரபு நாடுகளுடன் ஆயுதபேர பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபு நாடுகளான எகிப்து, ஜோர்டானுக்கு 13 பில்லியன் (ஒரு பில்லியன் – 100 கோடி) டாலருக்கும், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கும் மொத்தம் 20 பில்லியன் டாலருக்கும் ஆயுதங்களை அமெரிக்க விற்பனை செய்ய உள்ளது.

அத்துடன் இஸ்ரேலுக்கு 30 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உடன்பாடு செய்துகொண்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ஆயுதங்கள் வழங்கப்படும்.

இதில் விசேஷம் என்னவென்றால் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் “ராணுவ உதவியாக’ அளிக்கிறது. ஏனென்றால் இஸ்ரேல் எப்போதுமே அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. அமெரிக்காவிடம் இருந்து இதுவரை அதிக அளவில் ராணுவ உதவியைப் பெற்ற நாடு இஸ்ரேல்தான்.

கடந்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் மதிப்பில் இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை மீறி கொத்துக் குண்டுகளை மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வீசியது. இதுகுறித்து பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தபோதிலும், அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. தற்போது இஸ்ரேலுக்கு அளிக்கும் உதவியைக்கூட நியாயப்படுத்தவே செய்கிறது.

“”மத்திய கிழக்குப் பிராந்தியம் கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது அபாயாகரமானதாக உள்ளது. இஸ்ரேலும் பல அபாயங்களை எதிர்கொள்கிறது.

லெபனான், பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஈரானும், சிரியாவும் உதவுகின்றன. அதைச் சமாளிக்கும் வகையில் இஸ்ரேல் தனது ராணுவ பலத்தை மேம்படுத்திக் கொள்ளவே இந்த உதவி” என்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் நிக்கோலஸ் பர்ன்ஸ்.

நேரம்பார்த்து அடிப்பது என்பார்கள்… அதை அரபு நாடுகளில் தனது முக்கியமான கூட்டாளியான சவூதி அரேபியா மூலம் ஈரானுக்கு எதிராக கச்சிதமாக நிறைவேற்றுகிறது அமெரிக்கா.

சக அரபு நாடான லெபனானில் நிலையற்ற தன்மையைத் தவிர்க்க இணைந்து செயல்படுவது என சமீபத்தில்தான் ஈரானும், சவூதி அரேபியாவும் முடிவு செய்தன.

ஈரான் ஷியா பிரிவு ஆளுமையிலும், சவூதி அரேபியா ஸன்னி பிரிவு ஆளுமையிலும் உள்ள நாடுகள். ஆனால், இராக்கில் சிறுபான்மை ஸன்னி பிரிவு மக்களுக்கு எதிராகச் செயல்பட ஷியா பிரிவு தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுகிறது என்பதில் சவூதிக்கு சிறிய நெருடல். அந்த நெருடலை தற்போதைய ஆயுத விற்பனை மூலம் அமெரிக்கா பெரிதாக்கிவிட்டதாகக் கருதுகிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மட்டுமின்றி, மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கும் அமெரிக்காவை கவலைகொள்ளச் செய்துள்ளது. ஏனெனில் ஈரானில் ஆளும்சக்தியான ஷியா பிரிவு முஸ்லிம்கள்தான் இராக், லெபனானிலும் பெரும்பான்மையாக உள்ளனர்.

மேலும், தனது நண்பனான சிரியாவுடன் சேர்ந்து பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான் உதவுவதாக அமெரிக்கா கருதுகிறது. மொத்தத்தில் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை எதிர்க்கும் ஈரானை தனிமைப்படுத்தவே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

இதை அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வெளிப்படையாகவே சொல்கிறார். “”மத்திய கிழக்கில் அமெரிக்காவின் “விருப்பத்துக்கு’ எதிரான ஒரே நாடு ஈரான்தான்” என்கிறார் அவர்.

இதற்கிடையே, மத்திய கிழக்கில் அமைதியை நிலவச்செய்வது தொடர்பாக இந்த ஆண்டு இறுதியில் சர்வதேச மாநாடு நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் புஷ் அறிவித்துள்ளார்.

“”மத்திய கிழக்கில் அமைதியின்மைக்குக் காரணமே அமெரிக்காதான். இருப்பினும் அமெரிக்கா நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறோம்” என சிரியா தெரிவித்துள்ளது.

“”அரபு நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்குச் செலவிடும் தொகையை தங்கள் நாடுகளின் முன்னேற்றத்திற்குச் செலவிட வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார் ஈரான் அதிபர்.

“”மத்திய கிழக்கில் ஆயுதப்போட்டியை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. தனது ஆயுதத் தொழிற்சாலையைத் தொடர்ந்து இயக்கவும், உலகக் கடனாளியாகித் திவாலாவதைத் தவிர்க்கவுமே இந்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டுகிறார் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முஸ்தபா முகமது நஜ்ஜார்.

உலகின் தலைவராகத் தன்னைக் கருதிக்கொள்ளும் அமெரிக்கா, ஈரானுடனான தனது தனிப்பட்ட வெறுப்புக்காக மத்திய கிழக்கில் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமல்ல.

Posted in America, Ammunitions, Arab, Arabia, Arms, ascendant, Bahrain, Boeing, Commerce, Democracy, Dubai, Economy, Egypt, Embargo, Emirates, Employment, Freedom, Gaza, Gulf, Haliburton, Hamas, Independence, Iran, Iraq, Islam, Israel, Jobs, Jordan, King, Kingdom, Kuwait, Lebanon, Mid-east, Mideast, Missiles, Monarchy, Muslims, Oman, Palestine, Peace, Qatar, Quatar, Race, sales, Saudi, Sharjah, Shia, Sunni, Syria, UAE, US, USA, War, warlord, Weapons, Yemen | Leave a Comment »

Dinamani op-ed: TJS George – East India Company still rocks on as World Bank

Posted by Snapjudge மேல் ஜூலை 22, 2007

கிழக்கிந்திய கம்பெனி சாகவில்லை, உயிரோடு இருக்கிறது!

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

எவ்வளவு சுலபமாக நாடுகள் தங்களுடைய வரலாற்றை சலவைக்குப் போட்டுவிடுகின்றன! இரண்டாவது உலகப் போரில் ஜப்பானிய ராணுவம் செய்த அக்கிரமங்கள் என்ன என்று அந்நாட்டின் புதிய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது. வியத்நாமில் அமெரிக்கா செய்த அக்கிரமங்கள் அந்நாட்டு பள்ளிக்கூட குழந்தைகளுக்குத் தெரியாது.

ஆரியர்கள் திருநைனார்குறிச்சியிலிருந்தும், திராவிடர்கள் குலு பள்ளத்தாக்கிலிருந்தும் வந்தார்கள் என்று நம் நாட்டின் சில பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்றனர்!

உண்மை எது என்பது, (வரலாற்று) குப்பையைப் பெருக்க வந்தவர்களின் கண்களில்தான் இருக்கிறது.

பிரிட்டிஷ்காரர்கள்தான் தங்களுடைய ரயில்வே மூலமும் தடையற்ற வர்த்தக நடைமுறைகள் மூலமும் இந்தியாவுக்கு வாழ்வையும் வளத்தையும் கொண்டுவந்து சேர்த்தார்கள் என்று இந்தியாவில் படித்த பெரும்பாலானவர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவின் செல்வமும் இயற்கை வளங்களும்தான் பிரிட்டனுக்குப் புது வாழ்வைத் தந்தன.

இந்தியாவின் வளமான பகுதிகள் பல, பிரிட்டிஷாரின் நன்மைக்காக இங்கே அடியோடு அழிக்கப்பட்டன. பிரிட்டனின் “மான்செஸ்டர் டி-73′ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் பூண்டோடு அழிக்கப்பட்டது. அந்தத் துணியை நெய்த திறமைவாய்ந்த நெசவாளர்களின் கட்டைவிரலை வெட்டி வீசினர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனித் துரைமார்கள்!

ஏகாதிபத்திய காலத்தில் நிலவிவந்த உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டுவரும் வேலையை, ஆய்வு நூல்கள் மூலம் அவ்வப்போது மேற்கொள்கின்றனர் மேற்கத்திய நாடுகளின் அறிஞர்கள்.

இப்போதுள்ள பன்னாட்டு நிறுவனங்களின் (எம்.என்.சி.) முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கிந்திய கம்பெனி எப்படி ரத்த வெறி பிடித்து அலைந்தது என்பதை நிக் ராபின்ஸ் என்பவர் தன்னுடைய ‘The Corporation that Changed the World: How the East India Company Shaped the Modern Multinational’ என்ற நூலில் அற்புதமாக விளக்கியிருக்கிறார்.

அச்சத்தில் உறைந்தே போகும் அளவுக்குச் சில உண்மைகளை அவர் அந் நூலில் தெரிவித்துள்ளார். ராபர்ட் கிளைவ், கிழக்கிந்திய கம்பெனியின் வியாபாரத்துக்குள் “ஒரு உள் வியாபாரம்’ செய்து பெரும் தொகையை அள்ளியிருக்கிறார். கம்பெனியின் தலைவரும் அவரே என்பதால் மோசடி செய்வது அவருக்குக் கடினமான வேலையாக இருக்கவில்லை.

பிரிட்டனிலோ, கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திடமிருந்தும் அரசிடமிருந்தும் அவ்வப்போது சலுகைகளைத் தொடர்ந்து பெற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து லஞ்சம் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.

“மேலை நாடுகளின் நாகரிகத்தின் பின்னால் இருப்பது, ஈரானிய எண்ணெய் வயல்களில் அடித்த கொள்ளையில் கிடைத்த லாபம்தான்’ என்று ஈரானிய அதிபர் அகமதி நிஜாத் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவனை, “மரை கழன்றவன்’ என்றும் “மேலைநாடுகளுக்கு எதிரானவன்’ என்றும் முத்திரை குத்தும் அளவுக்கு எல்லோருடைய மூளையும் அற்புதமாகச் சலவை செய்யப்பட்டிருக்கிறது.

அகமதி நிஜாத் என்ன சொன்னாரோ அது உண்மைதான்! 1950-களின் ஆரம்பத்தில் ஈரானில் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்த மூசாதேக் என்பவர் ஈரானின் மன்னரான ஷாவை நாட்டைவிட்டே ஓடவைத்தார். பிறகு ஈரானின் எண்ணெய் வயல்களை தேச உடைமையாக்கினார். எண்ணெய் வயல்களைச் சொந்தமாக வைத்திருந்த பெரும் பணக்காரர்களும், மேற்கத்திய நாடுகளின் அரசுகளும் சில மாதங்களுக்கெல்லாம் இணைந்து செயல்பட்டு மன்னர் ஷாவை மீண்டும் ஈரானுக்கு அழைத்துவந்து முடிசூட்டின. மூசாதேக் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

இது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல. சூயஸ் கால்வாயை கமால் அப்துல் நாசர் தேச உடைமையாக்கியபோது, எகிப்துடன் யுத்தத்துக்குச் சென்று மூக்குடைபட்டு திரும்பியது பிரிட்டன்.

பனாமா கால்வாய் யாருக்குச் சொந்தம் என்ற நீண்ட கால பிரச்னை முற்றி, 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்கு எதிரான கலவரமாக உருவெடுத்தது. அப்போது அமெரிக்கா பனாமா மீது படையெடுத்து, அதன் அதிபர் மேனுவல் நோரிகாவை போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி கைது செய்தது.

ஏகாதிபத்தியத்திடம் காலனிகளாக இருந்த நாடுகள் விடுதலை பெற்ற பிறகும் காலனியாதிக்கம் முடியவில்லை; 19-வது நூற்றாண்டில் பிரிட்டன் செய்த வேலையை இப்போது அமெரிக்கா எடுத்துக் கொண்டுவிட்டது. வியாபாரத்தில் உள்ளடி வேலை செய்யும் “உள்-வர்த்தகம்’ என்ற அயோக்கியத்தனத்தை அது கையாள்கிறது. என்ரான், வேர்ல்ட் காம். போன்ற பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் மறைந்த கதையைப் பார்த்தாலே இந்த பித்தலாட்டம் புரியும்.

அரசியல்ரீதியான ஊழல் என்பதை, வாஷிங்டனில் “ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தரகுக் கூட்டம்’ என்று நிலைநிறுத்திவிட்டது அமெரிக்கா. அத்தோடுகூட, அது தனது ராணுவ பலத்தையும் மிதமிஞ்சிப் பயன்படுத்துகிறது.

இராக்கில், அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் காலடி எடுத்து வைத்தது அங்குள்ள எண்ணெய் வளத்துக்காகத்தான் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா?

இப்போது “கிழக்கிந்திய கம்பெனி’ உலகம் முழுக்க பரவியிருக்கிறது. ராபர்ட் கிளைவும் வாரன் ஹேஸ்டிங்ஸýம் இன்னமும் உலா வருகின்றனர். அவர்களின் பெயர்தான் “உலக வங்கி’, “உலகமயமாக்கல்’ என்று மாற்றி வழங்கப்படுகிறது!

————————————————————————————————————–
யாருக்காக மானியங்கள்?

விவசாயத்துக்கான மானியங்கள் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்திருக்கிறார். அதே சமயம், உரங்களுக்குத் தரப்படும் மானியத்தை புதிய முறையில் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்து அடுத்த ஆண்டு முதல் அமலுக்குக் கொண்டுவரலாம், இந்த ஆண்டு பழைய முறையிலேயே மானிய உதவியை அளிக்கலாம் என்றும் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பிரதமர் முடிவெடுத்திருக்கிறார்.

விவசாயத்துக்கு மானியம் என்பது அவசியம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளுக்கே இதில் இருவித கருத்துகள் இல்லை. அதே சமயம், உர மானியம் என்பது யாருக்குப் போகிறது, அது நீடிப்பது அவசியமா என்பதைக் கட்டாயம் தீர்மானித்தாக வேண்டும்.

கடந்த ஆண்டு உர மானிய நிலுவை ரூ.8,000 கோடி என்றும் இந்த ஆண்டு ரூ.40,000 கோடி என்றும் அரசே வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மத்திய புள்ளியியல் துறை கணக்கெடுப்பின்படி, 2000-01-ம் ஆண்டில் உர மானியமாக ரூ.13,800 கோடி, மின்சார மானியமாக ரூ.6,449 கோடி, பாசன மானியமாக ரூ.13,681 கோடி, இதர மானியங்களாக ரூ.854 கோடி என்று மொத்தம் ரூ.34,784 கோடி விவசாயத்துக்காக தரப்பட்டுள்ளது.

உணவு தானிய கையிருப்பைப் பொருத்தவரை, 3 மாத கையிருப்பு, 6 மாத கையிருப்பு என்பதெல்லாம், பொது விநியோக முறைக்கு மாதந்தோறும் எடுத்துக்கொள்ளப்படும் அரிசி, கோதுமை போன்றவற்றின் அளவைப் பொருத்ததே தவிர உண்மையில் நம் நாட்டு மக்களின் தேவையைப் பொருத்தவை அல்ல.

லட்சக்கணக்கான டன்கள் கோதுமை, அரிசி கையிருப்பில் இருக்கும் அதேவேளையில் 20 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. ஒரு வேளை சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் இரவில் பட்டினியோடு படுப்பவர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஏதும் திரட்டப்படுவதில்லை.

“வேலைக்கு உணவு திட்டம்’ என்ற முன்னோடி திட்டம்கூட, தேர்வு செய்யப்பட்ட மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்தான் முனைப்பாக அமல்படுத்தப்படுகிறது. அதுவும் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் உதவியோடு மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

உர மானியம் தொடர்பாக அடிக்கடி பேசப்படும், அதே வேகத்தில் மறக்கப்படும் இரு விஷயங்கள் நினைவுபடுத்தப்பட வேண்டியவை. உர உற்பத்தியில் பொதுத்துறை (அரசு) நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுகின்றன. உர உற்பத்திக்கு அரசு நிறுவனங்கள் எவ்வளவு (விரயமாக) செலவு செய்தாலும், எந்த அளவு உற்பத்தி செய்தாலும் அவற்றை அரசு வாங்கிக் கொண்டு மானியத்தையும் கையோடு வழங்கிவிடுவதால், அரசின் மானியம் விரயமாகிறது என்பது முதல் குற்றச்சாட்டு. நவீனத் தொழில்நுட்பத்தில், செலவைக் குறைத்து தயாரிப்பது அவசியம் என்ற நிர்பந்தம் இல்லாமல் பழைய முறையிலேயே தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பது இக்குற்றச்சாட்டின் சாரம்.

அடுத்தது, ரசாயன உரங்களால் நிலம் தன்னுடைய இயற்கையான சத்தை இழப்பதுடன், சாகுபடியாகும் உணவு தானியங்களும் உண்பவர்களுக்குத் தீங்கை விளைவிப்பனவாக இருக்கின்றன என்பதாகும். எனவே இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும். மக்கிய எருவையும், மண்புழுக்களையும் நிலங்களில் இட்டு மண்ணை வளப்படுத்த வேண்டும் என்ற கூக்குரல் எங்கும் கேட்க ஆரம்பித்துவிட்டது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்கள் இதையும் வலியுறுத்துகின்றனர்.

விவசாய விலை நிர்ணயக் குழு என்ற உயர் அமைப்பில், சாகுபடியாளர்களின் நேரடிப் பிரதிநிதிகளை அதிக அளவில் சேர்த்து, அவர்களைக் கொண்டே பிராந்தியங்களுக்கு ஏற்ற வகையில் கொள்முதல் விலைகளையும் சிறப்பு மானியங்களையும் நிர்ணயிக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்துள்ளபடி, சந்தையில் நிலவும் விலைக்குக் குறையாமல் கொள்முதலுக்கு விலைதரப்பட வேண்டும். குறைந்தபட்ச கொள்முதல் விலை என்பது, விவசாயிகளின் அடிவயிற்றில் அடிப்பதாக இருப்பதைக் கைவிட வேண்டும். வேளாண் பொருள்களின் விலை உயர்ந்தால் பணவீக்க விகிதம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று “”நிபுணர்கள்” மிரட்டுவதை கேட்டுக் கொண்டு விவசாயத்தைப் படுகுழியில் தள்ளக்கூடாது.

Posted in abuse, Affairs, Agriculture, America, bank, Barrier, Biz, Business, Canal, Center, CIA, Consumer, Corn, Corporation, Current, Customer, Divide, Duty, Economy, Electric, Electricity, England, ethanol, Exploit, Exploitation, External, Farming, Farms, Fertilizer, Fertilizers, Finance, Foreign, GDP, Govt, Growth, IMF, Incentive, Incentives, Income, Industry, International, Iran, Irrigation, IT, MNC, multinational, Needy, NRI, Panama, Poor, Power, Queen, Relations, Rich, State, Subsidy, Suez, Tamil, Tariffs, Taxes, Trade, UK, Unipolar, USA, War, warlord, WB, Wealthy, World, world bank | Leave a Comment »

Is US a warlord?

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2006

“யு.எஸ். மார்க்’ ஜனநாயகம்

ஜனகப்பிரியா

இப்புவியிலேயே மிக அமைதியான நாடு என ஜார்ஜ் புஷ் வர்ணித்த அமெரிக்கா, கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏதாவது ஒரு நாட்டுடன் ஒவ்வோர் ஆண்டும் போர் புரிந்த வண்ணமாக இருக்கிறது. இப்போதைக்கு உலகில் உள்ள எண்ணெய் வளம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

பால்கன், மத்திய ஆசியப் பகுதிகளில் அமெரிக்காவின் ராணுவத் தலையீடுகள் அங்கிருக்கும் எண்ணெய் வளத்தினை இலக்காகக் கொண்டவை. உலக எண்ணெய் வளத்தில் மூன்றில் இரண்டு பங்கு மேற்காசியாவில் இருப்பதனால்தான் அப்பகுதியின் அரசியல் மேலாண்மையைத் தன் பிடிக்குள் கொண்டு வரத் துடிக்கிறது அமெரிக்கா.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவினைக் கண்டுபிடித்த 500வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களை எதிர்த்து, ஐரோப்பிய, ஆசியப் பூர்வீகக் குடிகளின் வம்சாவளியினரும் மனித உரிமை ஆர்வலர்களும் 1992-ல் எதிர்ப்பியங்களை நடத்தினர். அதற்கான வரலாற்று ரீதியான நியாயங்கள் உண்டு. உலகின் இயற்கை வளங்கள் அனைத்தையும் தானே அடைய வேண்டுமென்ற தீவிர வெறியினால் தென் அமெரிக்கக் கண்டத்தில் சிலி, குவாட்டிமாலா, பிரேஸில், பெரு, நிகரகுவா ஹோண்டுராஸ், எல்சால்வடார், மெக்ஸிகோ போன்ற நாடுகளிலெல்லாம் தனது உளவுத்துறையான சி.ஐ.ஏ.வின் ரகசிய, நேரடி நடவடிக்கைகளின் வழியாக அந்த நாடுகளின் அமைதியையும் சுதந்திரத்தையும் சீர்குலையச் செய்த மிகப்பெரிய “ஜனநாயகக் காவலனாக’ அமெரிக்கா இருக்கிறது!

நாகசாகி, ஹிரோஷிமா நகரங்களின் மீது அணுகுண்டு வீசி “அமைதியை’ ஏற்படுத்தியது தொடங்கி, வியட்நாமில் பனிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நடத்தி மக்களின் வாழ்க்கையில் “ஜனநாயகம்’ தழைக்கப் பாடுபட்டதை உலகம் மறக்க முடியுமா?

1970 மார்ச் 25-ல் அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிஞ்சர் தலைமையில் கூடிய 40 பேர் கொண்ட ஆலோசனைக் கமிட்டி, ஜனநாயக ரீதியில் தேர்ந்தடுக்கப்பட்ட சோஷலிச அரசாங்கத்தைக் கவிழ்க்க, சிலியின் ராணுவ எதிர்ப்புரட்சிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் டாலர் நிதி ஒதுக்குகிறது. 1973 செப்டம்பர் 11-ந் தேதி மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை சி.ஐ.ஏ.வின் வழிகாட்டுதலோடு ராணுவ பலத்தால் சீர்குலைத்து மக்கள் தலைவர் அலண்டேவைக் கொலை செய்தனர். பல்லாயிரக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்களும் கலைஞர்களும் சான்டியாகோ விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1988-ல் ஆயிரக்கணக்கான குர்து இன மக்களைக் கொன்று குவித்தார் சதாம் என்று குற்றச்சாட்டு. அதே ஆண்டில்தான் அமெரிக்க விளைபொருள்களை வாங்க 500 மில்லியன் டாலர்களை அமெரிக்க அரசாங்கம் சதாம் உசேனுக்கு மானியமாக வழங்கியது. குர்து இனமக்கள் அழித்தொழிக்கப்பட்டதற்குப் பரிசாக அடுத்த ஆண்டில் மானியத் தொகையை இரு மடங்காக்கி 1 பில்லியன் டாலர்களை வழங்கியது அமெரிக்கா. ஆந்த்ராக்ஸ் கிருமிகளை உண்டுபண்ணும் நுண்ணுயிர் வித்துகளையும் ஹெலிகாப்டர்களையும் ரசாயன உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்யத் தேவையான துணைப்பொருள்களையும் சதாமுக்குக் கொடுத்தது அமெரிக்கா. ஆனால் 1990-ல் சதாம் குவைத் நாட்டுக்குள் படைகளை அனுப்பி போர் நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதற்காக அவர் மீது கோபம் வரவில்லை அமெரிக்காவுக்கு; தன்னுடைய உத்தரவின்றி அனுப்பினார் என்பதுதான் குற்றம்.

வளைகுடாப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அமெரிக்கா விதித்த தடைகளின் காரணமாக, உணவு, மருந்து, சுத்தமான குடிநீர், மருத்துவமனை உபகரணங்கள் எல்லாமும் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் ஐந்து லட்சம் இராக்கியக் குழந்தைகள் இறந்திருக்கின்றன. இதைப்பற்றி அமெரிக்காவின் ஐ.நா. தூதுவராக இருந்த, “மேடலின் ஆல்பிரெட்’ கூறியது என்னவென்றால்: “”அது ஒரு கடினமான முடிவுதான், இருந்தாலும் அடைந்த லாபத்தை எண்ணும்போது கொடுத்த விலை சரிதான் என்று நாங்கள் எண்ணுகிறோம்”.

பனிரெண்டு ஆண்டுகள் கழித்து இராக்கின் மேல் இன்னொரு போர். இரண்டரை லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். லட்சக்கணக்கில் குழந்தைகள் நோய் கண்டு இறந்து போயின.

இறந்து போனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்கூடப் பாரபட்சம். அமெரிக்க சிப்பாய் இறந்தால் 5 லட்சம் டாலர். இராக்கிய பிரஜை இறந்தால் இரண்டாயிரம் டாலர் கொடுப்பதே கடினம். ஆனால் 30 ஆயிரம் டாலர்களுக்கு மேல் வழங்குவதாக விளம்பரம். கடந்த சில ஆண்டுகளில் 300 டன் எடையுள்ள யுரேனியத்தினாலான கதிரியக்கத் தன்மை கொண்ட ஆயுதங்களை இராக்கின் நிலப்பரப்பில் வயல்வெளிகளில் வீசியிருக்கிறது அமெரிக்க ராணுவம்.

அமெரிக்க நிர்வாகத்தின் உள் அறைகளினுள் பதுங்கியிருந்த சில பழைய உண்மைகளை உலகம் இப்போது அறியத் தொடங்கியிருக்கிறது. 70களின் முற்பாதியில் ஆப்கன் பிரச்சினையில் முன்னாள் சோவியத் யூனியனின் படைகளை வெளியேற்ற நடைபெற்ற அமெரிக்க முழக்கங்களின் திரைமறைவில் சவூதி மன்னரின் குடும்பத்தினருடன் இணைந்து “அல்-காய்தா’ அமைப்பு உருவாகத் துணையாக நின்றார் சீனியர் புஷ்.

“ஹில்பர்ட்டன்’ எனும் பெயரிலான ஆயுத உற்பத்தி நிறுவனம் புஷ் குடும்பத்தினருக்குச் சொந்தமானது. இதன் சகோதர நிறுவனமான “டிக்செனி’க்குத்தான் ஆப்கனிலும் இராக்கிலும் கட்டுமானப் பணிகளுக்கான ஆணை கிடைத்திருக்கின்றன. இப்போது நமக்குப் புரியும்: “அழித்தலும் ஆக்கலும் நானே’ என்கிற அமெரிக்க கொக்கரிப்பின் பொருள்; அப்பாவி லெபனான் மக்களின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிவதை அவர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நடவடிக்கை என்று இன்று அறிவிக்கிற அமெரிக்க ஜனநாயகத்தின் நிஜமுகம்!

Posted in America, Ammunitions, Arms, Dinamani, Fights, Lord of war, Op-Ed, Tamil, US, USA, warlord, Wars | Leave a Comment »