எஸ்டோனிய ஞாபகார்த்த சின்னம் அகற்றப்பட்டால் கடுமையான நடவடிக்கை என்கிறது ரஷ்யா
![]() |
![]() |
ரஷ்ய இன ஆர்ப்பாட்டக்காரர்கள் |
எஸ்டோனியாவின் தலைநகர் டலினில் உள்ள செஞ்சேனையின் இரண்டாம் உலகப்போர் நினைவுச் சின்னத்தை அங்கிருந்த நகர்த்த அந்த நாட்டு அரசாங்கம் எடுத்த முடிவுக்கான பதிலாக, கடுமையான நடவடிக்கைகளை ரஷ்யா எடுக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜை லாவ்றோ கூறியுள்ளார்.
அந்தச் சிலை அங்கிருந்து நகர்த்தப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சியாக, பெரும்பாலும் ரஷ்ய இனத்தைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸாருடன் மோதியதில், ஒருவர் கொல்லப்பட்டதுடன், 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பால்டிக் நாடான எஸ்டோனியாவுடனான இராஜதந்திர உறவுகளை ரஷ்யா முறித்துக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை, அதிபர் பூட்டினைக் கேட்டுள்ளது.
ரஷ்யா தனது பிரதிபலிப்பை நியாயமாக வெளிப்படுத்த வேண்டும் என்றும், உணர்ச்சிவசப்பட்டு வெளிப்படுத்தக் கூடாது என்றும் எஸ்டோனிய வெளியுறவு அமைச்சர் உர்மாஸ் பாயிட் கூறியுள்ளார்.