Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Voice’ Category

The case for Mixed member Proportional Representation: Voting and Democracy

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2008

விகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.

தொகுதி நலன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.

தற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.

மாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.

அத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.

பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலனை செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

திரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.

இதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.

1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இருக்கிறது.

சுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.

விகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.

இந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.

ஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.

மக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

ஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உருவாகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.

Posted in abuse, Admin, Administration, Advices, Citizens, Constituency, Cronies, Crony, Democracy, Election, Elections, Electorate, Europe, Federal, Freedom, Govt, Independence, Manifesto, minority, MLA, Money, MP, National, parliament, Party, people, Politics, Polls, Power, Proportion, reforms, Representation, Representatives, Republic, seats, States, Voice, Vote, voters, Votes | Leave a Comment »

Myanmar (Burma) Violence and India External Affairs – TJS George

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 8, 2007

டி.ஜே.எஸ். ஜார்ஜ்

ஏனிந்த மௌனமம்மா..?

காந்தியக் கொள்கை விஷயத்தில் நாம் ஆஷாடபூதித்தனத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறோம். காந்திஜியின் சொந்த மாநிலமான குஜராத்தே வன்முறைக் களமாகத் திகழ்ந்து அவரைச் சிறுமைப்படுத்துவதில் வியப்பு ஏதும் இல்லை.

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் அகிம்சை குறித்துத் தேனொழுகப் பேசிய சோனியா காந்தி, இந்தியாவிலோ, மியான்மரிலோ ஏற்பட்டுவரும் ரத்தக்களரி குறித்து வாய் திறவாமல் இருந்ததிலும் வியப்பு ஏதும் இல்லை.

உலகின் எந்தப் பகுதியிலாவது நடந்த வன்முறை அல்லது அடக்குமுறை ஆட்சி மீது இந்திய அரசு கண்டனக் குரல் எழுப்பி நாம் கடைசியாக கேட்ட சந்தர்ப்பம் எது என்று நினைவுகூரமுடியுமா?

அநியாயத்தைத் தட்டிக்கேட்காமல் அமைதி காத்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த அமைதிக்கு அர்த்தம் இருக்கிறது; அப்படியாவது நமக்கு எந்த ஆதாயமாவது கிடைத்திருக்கிறதா?

இப்படிப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதில் சீனாதான் சமர்த்து. நம்முடைய அந்தமான் தீவின் வடக்கு முனைக்கு அருகில் கல்லெறி தூரத்தில், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் கடற்படை தளத்தை சீனா நிறுவியுள்ளது.

பாகிஸ்தானில் மலைப்பகுதியில் நெடுஞ்சாலைகளையும், ஆழ்கடலில் கடற்படை தளத்தையும் அமைத்துக்கொண்டு ராணுவரீதியாகத் தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ளது சீனா.

சர்வதேச அரங்கில், ராஜீயரீதியாக தான் விதைக்கும் ஒவ்வொரு விதைக்கும் ஈடாக, 10 பழங்களைப் பறித்துக் கொள்கிறது சீனா.

வங்கதேசத்துக்காக நமது முப்படைகளைத் திரட்டிச் சென்று போரிட்டு விடுதலை வாங்கித் தந்தோம், பதிலுக்கு நமது எல்லையில் புதிய எதிரியை இப்போது சம்பாதித்துள்ளோம். போதாதக்குறைக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வேறு தலையில் கட்டிக்கொண்டு அழுகிறோம்.

வங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்ததற்காக நம்மை மிரட்ட தனது விமானந்தாங்கிக் கப்பலை இந்துமகா சமுத்திரத்துக்கு அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்.

இராக்கைவிட மியான்மரில் இயற்கை வளம் அதிகம் என்கிறார்கள், இது இன்னமும் அமெரிக்காவின் துணை அதிபர் டிக் சினீயின் கண்ணில் படவில்லை என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது; இல்லை ஒருவேளை பட்டுவிட்டதா?

ராணுவத் தலைமை ஆட்சியாளர் தாண் ஷ்வேயின் மாப்பிள்ளை தேசா, சாதாரணமானவராக இருந்து குபேரனாகிவிட்டார் என்கிறார்கள்.

நாட்டின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம், ராணுவக் கொள்முதல் எல்லாமே அவரைச்சுற்றித்தான் இருக்கும் என்பது புரிகிறது. அவருக்கென்று சொந்தமாகவே ஒரு விமானம் கூட இருக்கிறதாம்.

சர்வதேச அமைப்பின் பொருளாதாரத் தடை இருக்கிறதோ இல்லையோ, ஹால்பர்ட்டன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மியான்மரில் ஜனநாயகம் மலர காலூன்ற இது நல்ல நேரம். (ஹால்பர்ட்டன் என்பது எண்ணெய்த் துரப்பணத் துறையில் அனுபவம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனம்).

நான் சொல்வது கற்பனையோ அதீதமோ அல்ல; எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில் அமெரிக்காவின் கரங்கள் கண்ணுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கின்றன என்பது சமீபகாலத்தில் சி.ஐ.ஏ.வின் ரகசியங்கள் அம்பலமானபோது தெரியவந்துள்ளது.

1988-ல் லாக்கெர்பி விமான விபத்து நினைவில் இருக்கிறதா? அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான்! இறுதியில் ஒரு லிபியர்தான் அந்த விபத்தின் பின்னணியில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

மால்டாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்தான் அந்த சாட்சியத்தையும் அளித்தார். அவருக்கு அமெரிக்க அரசு 20 லட்சம் டாலர்களைப் பரிசாகத் தந்தது. லிபியர் இப்போது கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.

1980-களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்டு அந்நாளைய சோவியத் யூனியன் திண்டாடியது நினைவுக்கு வருகிறதா? அமெரிக்க, பிரெஞ்சு உளவுப்படையினர்தான் அதற்குக் காரணம்.

ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகள் மீள முடியாமல் சிக்கிக்கொண்டால், சோவியத் யூனியனே சிதறுண்டுவிடும் என்று பிரெஞ்சு உளவுப்பிரிவினர் தகவல் அளித்தனர். உடனே அதற்கான ஏற்பாடுகளில் அதிபர் ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கியது.

சோவியத் துருப்புகளை ஹெராயின் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்குவதும் பிரெஞ்சு உளவுத்துறை வகுத்துக் கொடுத்த திட்டம்தான் என்று “”காவ் பாய்ஸ்” என்ற நூலின் ஆசிரியர் பி. ராமன் தெரிவிக்கிறார்.

சோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட ஜிகாதிகளுக்கும் தனி ஊக்குவிப்பு தரப்பட்டது. உலகெங்கிலுமிருந்தும் ஜிகாதிகள் அணி திரண்டு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து சோவியத் துருப்புகளுக்கு எதிராக சண்டையிட்டு அவர்களைப் படுதோல்வி அடையவைத்தனர்.

அமெரிக்கா பணமும் ஆயுதமும் கொடுத்து அப்படி ஊக்குவித்த ஜிகாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின் லேடன்.

காலப்போக்கில் எதிர்பார்த்தபடியே சோவியத் யூனியன் சிதறுண்டு போனது.

அதே சமயம் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியும் கலகலத்துக்கொண்டிருக்கிறது. “அமெரிக்கர்களே இஸ்லாத்துக்கு மாறிவிடுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் மிதக்கிறார் பின் லேடன்.

மியான்மரில் நடக்கும் கலவரங்களின் பின்னணியிலும் அமெரிக்கா இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்; பாகிஸ்தானிலும் தில்லியிலும் நடப்பனவற்றின் பின்னணியில் எந்த அளவுக்கு அமெரிக்காவின் கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மியான்மரிலும் இருக்கும்.

(கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)

Posted in Affairs, Afghan, Afghanisthan, Arms, Bangladesh, Burma, Bush, Cartel, China, Cocaine, Democracy, Diesel, Drugs, energy, External, Foreign, Gandhi, Gas, George, Govt, Gujarat, GWB, Heroin, Imports, India, International, Iraq, Laden, Libya, Malta, Myanmar, Oppression, Osama, Pakistan, Petrol, Politics, Spokesperson, Violence, Voice, Wars, World | Leave a Comment »

Rajni’s ‘Sultan’ trailer screened with ‘Sivaji – The Boss’

Posted by Snapjudge மேல் ஜூன் 14, 2007

“சிவாஜி’ திரையிடும் தியேட்டர்களில் ரஜினியின் “சுல்தான்’ பட ட்ரெய்லர்
sultan sivaji trailer rajni images

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செüந்தர்யா இயக்கியுள்ள அனிமேஷன் படம் “சுல்தான் த வாரியர்’. ரஜினி படங்களில் இடம்பெறுவது போன்ற காமெடி, ஆக்ஷன் காட்சிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்ட்டூன் சினிமாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் “சிவாஜி’ படம் வெளியாகும் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

இதுபற்றி செüந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில் “”இந்த “சுல்தான்’ படம் ஒரு துவக்கம்தான். ரஜினிகாந்த் படம் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கிறார்கள். அனிமேஷன் படம் என்றாலும் ஒரு திரைப்படத்துக்குரிய அனைத்து விஷயங்களும் இதில் உள்ளன. அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் இந்தப் படம் நிறைவேற்றும்” என்றார்.

இந்த கார்ட்டூன் படத்தை ஆட்லேப்ஸ் நிறுவனமும், ஆச்சர் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

———————————————————————————-

30 வருடத்தில் பார்க்காத கூட்டம் `சிவாஜி’ படத்துக்கு ரூ.2 1/2 கோடி வசூல்: அபிராமி ராமநாதன் பேட்டி

சென்னை, ஜுன். 19-

ரஜினியின் சிவாஜிபடம் கடந்த 15-ந்தேதி ரிலீசானது. தியேட்டர்களில் படத்தை காணதினமும் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவு முன் கூட்டியே முடிந்து விட்டதால் பலர் டிக்கெட் கிடைக்காமல் திரும்புகின்றனர். `சாப்ட்வேர்’ கம்பெனிகள் 1000, 2000 என்று டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளன.

இதனால் சாதாரண மக்களால் இன்னும் படம் பார்க்க முடியவில்லை. 10 ரூபாய் டிக்கெட்டுகளுக்கு முன் பதிவு கிடையாது என்பதால் அந்த டிக்கெட்டுக்காக இரவு 12 மணிக்கு தியேட்டர்களில் கிïவில் நிற்கின்றனர். மறுநாள் காலை தான் டிக்கெட் வழங் கப்படுகின்றன. விடிய விடிய கிïவில் சளைக்காமல் நிற் கின்றனர்.

திரையுலக வரலாற்றில் சமீப காலங்களில் இது போன்ற கூட்டங்களை பார்த்ததில்லை என்கின்றனர் சினிமா பிரமுகர்கள். வசூலிலும் சிவாஜி சக்கை போடு போடுகிறது.

சென்னையில் சத்யம், சாந்தம், ஆல்பர்ட், தேவி, மெலோடி, அபிராமி, அன்னை அபிராமி, பால அபிராமி, உதயம், சூரியன், ஐநாக்ஸ், ஏ.வி.எம். ராஜேஸ்வரி, கமலா, பாரத், மகாராணி ஆகிய 15 தியேட்டர்களில் `சிவாஜி’ ஓடு கிறது. அனைத்திலும் தினமும் 4 காட்சிகள் திரையிடப்படுகின் றன. வருகிற 25-ந்தேதி வரை இந்த தியேட்டர்களில் டிக்கெட் இல்லை. அனைத்து காட்சிகளும் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை நகர சிவாஜி பட விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் மாலைமலர் நிருபரிடம் கூறினார்.

மேலும் அவர் கூறியதா வது:-

சிவாஜி படம் 14-ந்தேதி இரவு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. 15-ந்தேதி முதல் தினமும் 4 காட்சிகள் திரையிட்டு வருகிறோம். சென்னையில் 15 தியேட்டர் களிலும் ஒரு காட்சிக்கு 15 ஆயிரம் பேர் பார்க்கின்றனர். ஒருநாளைக்கு 75 ஆயிரம் பேர் பார்க்கிறார்கள். இது வரை சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் படம் பார்த்துள்ளனர். அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை முன்பதிவு செய்யப் பட்டுள்ளது. எந்த தியேட்டரி லும் டிக்கெட் இல்லை.

என் 30 வருட அனுபவத் தில் அபிராமி தியேட்டரில் 207 படங்கள் 100 நாட்கள் ஓடியுள்ளன. 45 படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளன. அவற்றில் ஒரு படத்துக்கு கூட இவ்வளவு கூட்டத்தை பார்த்த தில்லை. முன் பதிவுக்காக இப்படிப்பட்ட நீண்ட கிïவையும் கண்ட தில்லை.

குடும்பம் குடும்பமாக வருகிறார்கள். இளைஞர்கள், பெரியர்கள், குழந்தைகள், பெண்களான அனைவரையும் ஒரு சேர பார்க்க முடிகிறது. சிவாஜி படத்துக்குத்தான். தியேட்டர்களுக்கு இதுவரை வராதவரெல்லாம் வரு கிறார்கள்.

சிவாஜி மூலம் தமிழ் சினிமாமறுபிறவி எடுத்துள்ளது.

சென்னை தியேட்டர்களில் சிவாஜி ரிலீசாகி 4 நாட்களில் ரூ.1 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. முன் பதிவான 10 நாட்களுக்கும் 2 கோடியே 40லட்சம் வசூலாகி உள்ளது.

படம் பார்த்தவர்கள் திரும்ப திரும்ப வருகிறார்கள். அதிக நாட்கள் இந்த படம் ஓடும்.

இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.

Posted in Abiraami, Abirami, Action, Adlabs, Animation, Archer, Area, ARR, Availability, Background, Biz, Black, Cinema, Clubs, Collections, Comedy, Counter, Deals, Fans, Films, Loss, Money, Movies, Mystery, Preview, Production, Profits, Rahman, Rajini, Rajiniganth, Rajinikanth, Rajni, Rajniganth, Rajnikanth, Re-recording, Records, Rehman, Rental, revenue, sales, Soundarya, Soundharya, Sountharya, Sowndharya, Sultan, Tickets, trailer, Transactions, Updates, Voice, Warrior | 8 Comments »

MP3 Audio Books by Kizhakku pathippagam – Introduction for Avid Readers

Posted by Snapjudge மேல் மே 30, 2007

புதிய வாசகர்களை உருவாக்கும் “ஒலிப் புத்தகம்’: படிக்க வேண்டியதில்லை; கேட்டாலே போதும்

கே. வாசுதேவன்

திருநெல்வேலி, மே 30: தமிழகத்தில் தற்போது புதிதாக விற்றுவரும் ஒலிப் புத்தகம் (ஆடியோ புக்) புதிய புத்தக வாசகர்களை உருவாக்கி வருகிறது.

கேட்டாலே போதும், புத்தகத்தை வாசித்த திருப்தி கிடைப்பதாக அதன் வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய அவசர உலகில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. பள்ளி – கல்லூரிகளில் பயிலும்போது மட்டுமே இளைய சந்ததியினர் பாடம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிக்கின்றனர்.

இவற்றைத் தவிர்த்துப் பிற புத்தகங்களை அவர்கள் படிப்பது மிகவும் அரிதாகிவிட்டதால், வரலாறு, கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு, கலைகள் போன்றவை பற்றிய அறிவு இன்றைய இளைஞர்களிடம் எதிர்பார்க்க முடியாதாகிவிட்டது.

10 ஆண்களுக்கு முன்வரை புத்தக வாசிப்பு, விளையாட்டு ஆகியவை மட்டுமே பொழுதுபோக்கு. இன்று அப்படியில்லை டி.வி., இன்டர்நெட், இ மெயில், திரைப்படம் எனப் பல.

படிக்கும் ஆர்வம் குறைவு: அனைத்தும் வணிக நோக்கில் செயல்படும் சூழ்நிலையில், புத்தகம் படிக்கும் ஆவல் குறைகிறது.

மேலும், தேவையான தகவல்களை உடனுக்குடன் இன்டர்நெட், இ மெயில் போன்றவற்றின் மூலம் பெற்றுவிடுவதால் புத்தக வாசிப்பும் விற்பனையும் குறைந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் வாசகர்களைக் கவர புதிய யுக்திகளைப் புத்தகப் பதிப்பாளர்கள் புகுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்தப் புதிய யுக்தியில், ஒரு புத்தகத்தில் உள்ள அனைத்தையும் ஒலிப் புத்தகமாக -“எம்பி3′ குறுந்தகடுகளாக இந்தப் பதிப்பகங்கள் வெளியிடுகின்றன.

இந்த ஒலிப் புத்தகத்தில் மெல்லிய பின்னணி இசையுடன், வசீகரமான குரலுடனும் புத்தகம் சிறிது தணிக்கை செய்யப்பட்டு வாசிக்கப்படுகிறது.

அதாவது நாம் ஒரு புத்தகத்தை படிக்காமலேயே, அந்த புத்தகத்தில் உள்ளது பற்றி முழுமையாகக் கேட்க முடிகிறது.

மேலும், புத்தகத்தின் விலையை ஒப்பிடும்போது, இதன் விலை மிகவும் குறைவாகவே உள்ளது.

புத்தகத்தில் நாள்கணக்கில் வாசித்து தெரிந்துகொள்ளும் விஷயத்தை, சில மணி நேரங்களிலேயே ஒலிப் புத்தகங்கள் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

புத்தகத்தை வாசிப்பதற்கு என்று சில சூழ்நிலைகள் நமக்கு கிடைத்தால் மட்டுமே, அதை முழுமையாக வாசித்துப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்த ஒலிப் புத்தகத்தை கேட்கும் வசதிகள் மட்டும் நம்மிடம் இருந்தால் போதும், எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

இதுவரை பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள், ஆன்மிக உரைகள் ஆகியவற்றை மட்டுமே ஒலியின் வடிவில் கேட்டு வந்த மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்.

Posted in Audio, Biography, Books, Chokkan, Commerce, Digital, Disabled, Download, Hear, Internet, Introduction, Kilakku, Kizakku, Kizhakku, Media, MP3, padhippagam, padhippakam, pathippagam, pathippakam, Publishers, Read, Readers, Tamil Book, Venture, Voice | 5 Comments »

Inclusion of the Tamil Nadu Reservation Act in the IX Schedule is unconstitutional: KM VIjayan

Posted by Snapjudge மேல் நவம்பர் 1, 2006

தமிழக இடஒதுக்கீடு சட்டத்தை 9-வது அட்டவணையில் சேர்த்தது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஜயன் வாதம்

புதுதில்லி, நவ. 1: தமிழக இட ஒதுக்கீடு சட்டத்தை, நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தாத வகையில், அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு வாதிட்டார் மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன்.

சட்டங்களை இயற்றி அவற்றை 9-வது அட்டவணையில் சேர்க்க நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான 9 நீதிபதிகள் பெஞ்ச், திங்கள்கிழமை முதல் விசாரித்து வருகிறது. தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் உள்பட பல்வேறு மாநில சட்டங்களை இதில் சேர்த்தது குறித்தும் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

ஒரு சட்டம் இயற்றப்பட்டு, அதை 9-வது அட்டவணையில் சேர்த்து விட்டால், அது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது என்ற பாதுகாப்பைப் பெற்று விடுகிறது.

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமனை அடுத்து, “வாய்ஸ்’ என்ற நுகர்வோர் அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை வாதிட்ட விஜயன், கேசவானந்த் பாரதி வழக்கில் 1973-ம் ஆண்டு நீதிமன்றத்துக்குப் பிறகு தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் 1994-ம் ஆண்டு 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டதால், அது நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது என்றார்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 31 (ஏ)-ன் கீழ் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைத் தவிர, மற்ற சட்டங்களை 9-வது அட்டவணையில் சேர்க்க முடியாது. ஆனால், தமிழக இட ஒதுக்கீடு சட்டம் 31 (ஏ)-வின் கீழ் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

எழுத்து மூலம் நீதிமன்றத்தில் அளித்த மனுவில், 9-வது அட்டவணை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். 94 சதம் மக்கள் இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அறிவித்துவிட்ட பிறகு, இட ஒதுக்கீடு அர்த்தமற்றதாகிவிட்டது. தமிழக இட ஒதுக்கீடு சட்டம், அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும், அதை அமல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Constitution, Fali Nariman, fraud, Harish Salve, judicial review, Keshavanand Bharti, KM Vijayan, Ninth Schedule, Reservation Act, Supreme Court, Tamil Nadu, Voice | 1 Comment »

Dubbing Artistes Association Head elected – Radharavi

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006

தென்னிந்திய சினிமா, “டப்பிங்’ கலைஞர்கள் சங்கத் தலைவர் ராதாரவி

சென்னை, செப். 11: தென்னிந்திய சினிமா மற்றும் பின்னணி குரல் (டப்பிங்) கலைஞர்கள் சங்கத் தலைவராக ராதாரவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கான தேர்தல், சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செயலராக கே.செல்வராஜ், பொருளாளராக ராஜாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செயற்குழு உறுப்பினர்களாக சத்யப்பிரியா, சவிதா உள்ளிட்ட 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

துணைத் தலைவர்களாக வீரமணி, ராம்குமார், மோகன்குமார் உள்ளிட்டோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

Posted in Association, Dubbing, Election, Pinnani, Radha Ravi, Radharavi, Tamil, Voice | 3 Comments »