Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vijayganth’ Category

Desiya Murpokku Dravida Kazhagam & Vijaikanth – Biosketch

Posted by Snapjudge மேல் ஜூலை 6, 2007

நடிகர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தது ஏன்?- வெளிவராத `பிளாஷ்பேக்’ தகவல்கள்

நிருபர்கள் “நீங்கள் அரசியலுக்கு வரப்போகிறீர்களா?” என்று பரபரப்புக்காக விஜயகாந்த்திடம் 1996-ல் ஒரு கேள்வி கேட்டார்கள்.

“நான் ஏன் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும். காலம் அழைத்தால் வந்து விட்டு போகிறேன்” என்று கேசுவலாக பதில் சொன்னார் விஜயகாந்த்.

இதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக நிருபர்கள் இந்தக் கேள்வியை சுமார் 100 முறை கேட்டு விட்டார்கள்.

இன்றைய சூழ்நிலையில் தமிழக அரசியலில் விஜயகாந்தின் தே.மு.தி.க.வும் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாகி விட்டது.

ஆறு கோடி ஜனங்களும், அனைத்துக் கட்சி தலைவர்களும், உளவுத் துறையும் தே.மு.தி.க. வளர்ச்சி மீது ஒரு கண் வைத்தபடியே இருக்கிறார்கள்.

விஜயகாந்த்தின் அரசியல் `என்ட்ரி’க்கும், அவரது `பிளாஷ் பேக்’ வாழ்விற்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது.

விஜயகாந்த்தின் தந்தை அழகர் சாமிக்கு சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம்.

அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிகளுக்கு 2 மகன், 2 மகள்கள். முதலாமவர் விஜயலட்சுமி, அடுத்தவர் நாகராஜ், மூன்றாவது விஜயராஜ், அதற்கடுத்தவர் திருமலாதேவி.

மேற்கண்ட விஜயராஜிற்கு டைரக்டர் எம்.ஏ. காஜா வைத்த பெயர் தான் “விஜயகாந்த்”.

கடைக்குட்டி பெண்ணான திருமலாதேவி பிறந்த 20-வது நாளில் தாயார் ஆண்டாள் இறந்து விட, உற்றார் -உறவின ரின் கட்டாயத்தின் பேரில் அழகர்சாமிக்கு ருக்மணியம் மாள் என்பவருடன் 2-வது திரு மணம் நடந்தது. இவர்க ளுக்கு 7 குழந்தைகள்.

இவர்கள் அனைவருமே மதுரை மேலமாசி வீதியில் சவுராஷ்டிரா செக்கடி சந்தில் உள்ள ஒரு வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்தார்கள்.

சிறு வயது விஜயகாந்த் மிகவும் சேஷ்டைக்காரர். எப்பொழுதும் தன்னைச்சுற்றி 10 பேருடன் உலா வரும் விஜய காந்த் படித்தது 10-ம் வகுப்பு வரை தான்.

இதையே அவர் மதுரை புனித ஜோசப் பள்ளி, தெப்பக் குளத்தில் உள்ள ஆர்.சி. ரோசரி சர்ச் பள்ளி, மதுரை ரெயில் நிலையம் அருகில் உள்ள “மெஜுரா காலேஜ் ஆப் ஸ்கூல்”, தேவ கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, நாடார் வித்யாசாலை உயர் நிலைப் பள்ளி, விக்கிரமசிங்க புரம் செயின்ட் மேரீஸ் பள்ளி ஆகிய 6 இடங்களில் படித்து கரை சேர்ந் திருக்கிறார்.

சிறிய `புரஜக்டர்’ ஒன்றை வீட்டில் வைத்துக் கொண்டு அக்கம், பக்கத்து சிறுவர்களிடம் `நாலணா’ டிக்கெட் வாங்கி `மகாதேவி’ படத்தை ஓட்டுவதில் தான் ஆர்வம் இருந்ததே தவிர விஜயகாந்த்திற்கு படிப்பில் துளியும் அக்கறை இல்லை.

பள்ளிக்கூடத்தை `கட்’ அடித்து விட்டு நண்பர்களுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர்.நடித்த உலகம் சுற்றும் வாலிபனை இரண்டே நாளில் ஐந்து முறை பார்த்திருக்கிறார்.

அப்பாவின் ரைஸ்மில்லில் அரிசி திருடி விற்று காசாக்கி வடை, பிஸ்கெட், புரோட்டா என்று விளாசியிருக்கிறார்.

செத்த பாம்பை வாத்தி யாரின் இருக்கையில் வைத்து அவரை `ஓ’ வென அலற வைத்திருக்கிறார்.

நள்ளிரவு தெருக்கூத்தை பார்க்கப் போய் நடனம் ஆடுபவர் மீது `நல்லா இருடா’ என்று முட்டை-தக்காளியை வீசியிருக்கிறார்.

இதற்கெல்லாம் விஜய காந்தின் முக்கிய கூட்டாளியாக இருந்தவர் இப்போதைய இப்ராகிம் ராவுத்தர் தான்! எந்தச் சேஷ்டை செய்தாலும் இருவரும் இணை பிரியாமல் செய்வது தான் வழக்கம்.

இப்ராகிம் ராவுத் தரின் வீடு மதுரை வெத்தலைப் பேட்டையில் இருந்தது. அவரது தந்தை வெத்தலை கமிஷன் மண்டி வைத்திருந்தார்.

இது பற்றி விஜயகாந்த் சொல்கிறார்.

“அப்பவெல்லாம் படிப்பு பத்தியோ, எதிர்காலம் பத்தியோ நாங்க சிந்திக்க மாட்டோம். எம்.ஜி.ஆர். படம் பார்க்கணும்ங்கிறதத் தவிர வேற எதுவும் தெரியாது. என் பள்ளி வாழ்க்கையில நான் இங்கிலீசையும், சயின்சையும் படிச்சதே இல்லை. நாம் தான் சரியா படிக்கலை.

படிச்சு முன்னேற விரும்பு ஏழை மாணவர்களுக்காவது உதவணும். அவங்க படிச்சு பட்டம் வாங்கினா….நானே படிச்சு வாங்குன மாதிரிங்கிற எண்ணத்தில தான் என்னால முடிஞ்ச அளவு படிப்புக்கு உதவுகிறேன்” என்கிறார் அவர்.

தாயில்லாத பிள்ளை என் பதால் விஜயகாந்த் செய்யும் இந்தச் சேஷ்டைகளை கண்டு கொள்ளாமலேயே வளர்த்து வந்தார் அழகர்சாமி.

இளம் வயது விஜயகாந்த் திற்கு இரண்டு முறை காதல் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போதெல்லாம் விஜய காந்த் கூட்டாளிகள் ஒன்றாகச் சந்திப்பது இப் போதைய தே.மு.தி.க. பொதுச் செயலாளரான ராமு வசந்த னின் வீடு இருக்கும் மதுரை மேல ஆவணி வீதியில் தான்!

இங்குள்ள சேனாஸ் பிலிம்ஸ் என்ற சினிமா கம்பெனி அருகே தான் அரட்டைக்கச்சேரி நடக்கும்.

இந்த தெருவில் உள்ள ஒரு வீட்டு ஜன்னலில் தற்செயலாக தெரிந்த ஒரு பெண்ணை `சைட்’ அடித்து, ஜாடை காட்டி, ஒருவரை ஒருவர் காதலிக் கவும் ஆரம்பித்தனர்.

இந்த விவகாரம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிந்து முடிவில் அந்தப் பெண்ணின் வீட்டார் வீட்டைக்காலி செய்து விட்டே போய் விட்டனர்.

இதன் பிறகு அமெரிக்கன் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணை காதலித்து, அவருக்கு பின்னாடியே அலைந்து திரிந்து கடைசியில் “காதலிச்சு திருமணம் செஞ்சா என் தங்கச்சி வாழ்க்கை பாதிக்கும்” என்று அவள் டாட்டா காட்டி விட்டு போனது, விஜயகாந்த் சினிமா நட்சத்திரமான பிறகு அவளே தேடி வந்ததெல்லாம் ஒரு குறும்படக் கதை.

இப்படியெல்லாம் சேஷ்டை கள் செய்து கொண்டிருந்த விஜயகாந்த்தை “நீ படிச்சு, கிழிச்சது போதும் இனிமே ரைஸ் மில்லை கவனி” என்று அழகர்சாமி பிரம்பால் அடித்து பின்னி எடுத்த இந்த இடத்தில் “இடைவேளை” விட்டு, விஜயகாந் தின் அதிரடி ஆக்ஷன் இனி

தொடர்கிறது.விஜயகாந்த்தின் ரைஸ்மில் வாழ்க்கை காலை 6 மணிக்கு எழுந்து, இரவு 8 மணி வரை அரிசி விற்பது, விலை நிர்ணயம் செய்வது, மூட்டைகளை மாற்றுவது, நெல்லைக் கிண்டுவது, வெளியே சென்று பணம் வசூலிப்பது என வேலை `டைட்’ ஆகிவிட்டது. இதே சமயத் தில் இப்ராகிம் ராவுத்தரும் வெத்தலை கமிஷன் மண்டியை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

விஜயகாந்த்தை சமூக பார்வை பார்க்க வைத்தது இந்த ரைஸ்மில் தான்!

இங்கு வேலை பார்த்த பெண்களுக்கிடையே மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற வேறுபாடு இருப்பது விஜயகாந்த்திற்கு தெரிய வந்தது.

இதனைக் களைவதற்கு விஜயகாந்த் ஒரு யுக்தியை கையாண்டார். கீழ் ஜாதியினர் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரச் செய்து சாப்பிடலானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேல் ஜாதி பெண்களிடம் சமாதானமாக பேசி அதுவரை தனித்தனியாக இருந்த தண்ணீர் பானையை ஒன்றாக்கினார். அனைவருமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடலானார்கள்.

இதே கால கட்டத்தில் தான் சினிமா ரசிகராக இருந்த விஜயகாந்த் அரசியல் களமிறங் கியதும்!

மதுரை மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது விஜயகாந்த்தின் தந்தை காங்கிரஸ் கட்சியின் வேட்பா ளராக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.

விஜயகாந்த்தும், அவரது அண்ணன் நாகராஜும் எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்கள் என்பதால் தந்தையை எதிர்த்து தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். சுவர்களில் எழுதுவது, கட்சி கொடியுடன் சைக்கிளில் வலம் வருவது, கலைக்குழுவுக்கு ஏற்பாடு செய்வது, மீட்டிங் நடத்தியது என கடைசியில் விஜயகாந்த்தின் அப்பா 100 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

இது பற்றி விஜயகாந்த் கூறும் போது “தேர்தல் முடிவு எங்க அணிக்கு வெற்றியாக இருந்தாலும் அப்பா தோத்ததும் என்னவோ போல்

இருந்தது.அடுத்த தேர்தல்ல அவருக்கு ஆதரவாக இறங்கி அப்பாவை ஜெயிக்க வைச்சுட்டோம்” என்கிறார்.

விஜயகாந்த் சினிமாவுக்கு வருவதற்கும் `ஆட்டுக்கார அலமேலு’ படத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

விஜயகாந்த் கோஷ்டியினர் அரட்டை அடிக்கும் இடத்திற்கு அருகே உள்ள சேனாஸ் பிலிம்ஸ் உரிமையாளர் முகம்மது மர்சூக் `ஆட்டுக்கார அலமேலு’ படத்தை வாங்கியிருந்தார். அவருக்கு போட்டியாக அதே படம் தெலுங்கில் வெளிவந்த “பொட்டேல் பொன்னம்மா”ங்கிற படத்தை மற்றொரு வினியோகஸ்தர் ரிலீஸ் செய்திருந்தார்.

இதனால் ஆட்டுக்கார அலமேலு படத்தை வெற்றி பெறச் செய்ய விஜயகாந்த்திடம் யோசனை கேட்டார் முகம்மது மர்சூக்.

“இந்த இரண்டு படத்திலேயும் நடிச்சது ஒரே ஆடு தான். அந்த ஆடு சோழவந்தான் பக்கத்துல இருக்கிற மட்டப்பாறையில தான் இருக்கு. ஆட்டுக்காரன் நம்ம நண்பன் தான். அந்த ஆட்டை அழைத்து வந்து நம்ம படம் ஓடுற தியேட்டர்களில் நிக்க வைச்சு இடைவேளை சமயத்துல சாகசங்கள் செய்ய வைக்கலாம்” என்று ஆலோசனை சொன்னார் விஜயகாந்த்.

அதன்படியே விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும் அந்த ஆட்டை பிடித்து வந்து டேப் ரெக்கார்டரை `ஆப்’ பண்றது, `ஆன்’ பண்றது என்று செய்து காட்டி மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தார்கள்.

இதனால் விஜயகாந்த்தை மிகவும் பிடித்துப் போன முகமதுமர்சூக் டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகம் செய்து வைத்து “இவன் என் தம்பி மாதிரி. உங்க படத்துல ஒரு நல்ல ரோல் தரணும்” என்று கேட்டுக் கொண்டார்.

101 ரூபாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு “என் கேள்விக்கு என்ன பதில்ப” படத்தில் வில்லனாக 3 நாள் மட்டுமே நடித்தார். உள்பிரச்சினைகளால் விஜயகாந்த் மாற்றம் செய்யப்பட்டு சிலோன் மனோகர் நடித்து அந்தப்படம் வெளிவந்தது.

இதன் பிறகு சினிமாவில் நடிக்க விஜயகாந்த் நீண்ட நாள் போராட்டம் நடத்தியிருக்கிறார். இதே கட்டத்தில் தான் சத்யராஜும் பட வாய்ப்புகள்தேடி அலைந்தது. எனவேசினிமாவுக்கு முன்பே இருவரும் அலைந்து திரிந்ததில் நன்றாக அறிமுகம் ஆனவர்கள்.

முகமது மர்சூக் மீண்டும் விஜயாந்த்தை டைரக்டர் எம்.ஏ.காஜாவிடம் அறிமுகம் செய்து வைத்து `இனிக்கும் இளமை’ படத்தில் நடிக்க வைத்தார். இதன் பிறகு தூரத்து இடி முழக்கத்தில் கதாநாயகன் ஆனார்.

இருந்த போதிலும் தொடர்ந்து வந்த பல படங்கள் தோல்விக்குள்ளாகி விஜயகாந்த் முடங்கிப்போனார்.

ஒரு சாப்பாடு வாங்கி இப்ராகிம் ராவுத்தரும், விஜயகாந்த்தும் சாப்பிட்டது மட்டுமல்ல, பல நாட்கள் வெறும் தண்ணீரைக் குடித்தே பொழுதைக் கழித்ததும் இந்த கால கட்டத்தில் தான்.

18 படங்கள் தோல்வியாகி ஏராளமான வினியோகஸ்தர்கள் “விஜயகாந்த்தை வைத்து படம் எடுத்தால் ஓடாது” என்று முன்னுதாரணங்கள் சொன்ன போதிலும், வடசுரான் கம்பைன்ஸ் பட அதிபர் சிதம்பரம் துணிச்சலுடன் தயாரித்து, விஜயகாந்த்த நடித்து, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய “சட்டம் ஒரு இருட்டறை” படம் 100 நாட்களையும் தாண்டி ஓடியது. விஜயகாந்த் பக்கம் அனைவரின் பார்வையும்

திரும்பியது.திரைப்படக் கல்லூரி மாணவர்களான ஆபாவாணனும், அரவிந்தராஜும் விஜயகாந்த்தை வைத்து இயக்கிய `ஊமை விழிகள்’ படம் ஒரு பிரமாண்ட திருப்பு முனை. தொடர்ந்து செந்தூரப்பூவே, கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, மாநகரக்காவல், சின்னக் கவுண்டர் என அனைத்துமே 100 நாள் படமாக அமைந்தன.

சுந்தர்ராஜனின் திருப்பு முனை இயக்கத்தில் வைதேகி காத்திருந்தாளை தொடர்ந்து அம்மன் கோயில் கிழக்காலே, பூந்தோட்டக்காவல்காரன், நினைவே ஒரு சங்கீதம், வானத்தை போல ஆகிய படங்கள் பெண் ரசிகர்களையும் கவர்ந்தன.

வல்லரசு, ரமணா படங்கள் மிகப்பெரிய ஆக்ஷன் படங்களாக அமைந்தன. விஜயகாந்த் சொல்கிறார்.

என் வாழ்க்கையில் நிறைய வெற்றி, தோல்விகளை சந்தித்து விட்டேன். என் ரசிகர்கள் பெரும்பாலும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவங்க தான். ஆனா கடுமையான உழைப்பாளிகள். அவங்களுக்கு வாழ்க்கை மேல ஒரு நம்பிக்கையும், தைரியமும் ஏற்படுத்தும் வகையிலான கதைகளைத்தான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். லட்சக்கணக்கான எனது ரசிகர்கள் மூலமா நாட்டுக்கு நல்லது செய்ய முடியும் என்கிற உத்வேகம் தான் என்னைத் தானாகவே அரசியலுக்கு இழுத்து வந்து விட்டது. எனக்கு தெரிந்தது கடின உழைப்பு ஒன்று மட்டும் தான்” என்கிறார்.

“தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமாப”-ஊமை விழி கள்.

`ஆராய்ச்சி செய்து பார்த்த விஜயகாந்த்’

விஜயகாந்த்தின் விக்ரம சிங்கபுரம் செயின்ட் மேரிஸ் பள்ளி வகுப்பு டீச்சரான “ஸ்டான்லிஜாண்” சொல் கிறார்.

விஜயராஜா படு சேஷ் டைக்கார மாணவன். சினிமாவில் அவன்செய்யும் காமெடி மாரியே பள்ளி வாழ்க்கையிலும் செய்திருக் கிறான்.

ஒரு முறை நாங்கள் எல்லாம் உலகத்தமிழ் மாநாட்டை பார்ப்பதற்காக சென்னைக்கு `டூர்’ புறப்பட்டோம். ரெயில் பயணம் செய்த போது விஜய ராஜா யாருக்கும் தெரியாமல் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி விட்டான்.டி.டி.ஆர். இத னைக் கண்டு பிடித்து அவனி டமிருந்து ரூ. 50 அபராதமாக வசூலித்தார்.

நான் “ஏண்டா இப்படி செய்தாய்” என்று கேட்டேன்.

“நீங்க தானே சார் எதையும் ஆராய்ஞ்சு பார்த்து உண்மைய தெரிஞ்சுக்கிடணும்”னீங்க என்றான். கோபம் மறந்து அனைவரும் சிரித்து விட்டோம் என்றார்.

—————————————————————————————————————————————————-

தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்தின் அரசி யல் பிரவேசம் என்பது திடீரென்று ஏற்பட்ட விபத்தல்ல. மிகவும் கவனமாக ஆரம்பம் முதலே திட்டமிட்டு நகர்த்தப்பட்ட விஷயம். ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாகத் தனது ரசிகர் மன்றங்களை அவர் அமைத்ததே, வருங்காலத்தில் தனது ரசிகர் மன்றங்கள் அரசியல் கட்சிக் கிளைகளாகச் செயல்பட வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்ததால்தான். அதுவே இப்போது அவரது அரசியல் பிரவேசத்துக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருக்கிறது.

அரசியலுக்கு எந்தத் தமிழ் நடிகருக்கும் இல்லாத பெருமை நடிகர் விஜய காந்துக்கு உண்டு. எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி கணேசன், ஜெயல லிதா என அனைவருமே ஏதாவது பலமான அரசியல் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுதான் வளர முடிந்தது. தனக்கென ஓர் அமைப்பை ஏற்ப டுத்தி, அந்த அமைப்பை அரசியல் கட்சியாக்கி, எந்தவோர் அரசியல் கட்சி யின் நிழலும் தன்மீது படாமல், தேர்தலில் நின்று வெற்றியும் பெற்ற முதல் தமிழ் நடிகர் – அரசியல்வாதி விஜயகாந்த் மட்டுமே!

சந்தித்த முதல் தேர்தலிலேயே எட்டு சதவிகித வாக்குகள். தனக்கு சம்பந் தமே இல்லாத விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி. தமிழகத் தில் இருக்கும் பஞ்சாயத்து வார்டுகள் வரை பரவிக் கிடக்கும் பலமான கட்சிக் கிளைகள். திமுக மற்றும் அதிமுகவுக்கு ஒரு மாற்று ஏற்படாதா என்று ஏங்கும் வாக்காளர்களைக் கவரும் வகையில் தனித்துப் போராடும் துணிவு. இவை தான் நடிகர் – அரசியல்வாதி விஜயகாந்தின் பலங்கள்.

தத்துவ ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தன்னைக் கட்டிப் போட்டுக் கொள்ளாத, அதேசமயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விழையும் விஜயகாந்தின் வேகம் அவரது சொற்களில் தெரிகிறது. தனித்துப் போராடி வெற்றிபெற முடி யும் என்ற தன்னம்பிக்கை, அவரது செயல்பாடுகளில் காணப்படுகிறது. நடிக ராகவோ, அரசியல் தலைவராகவோ அல்லாமல், மிகச் சாதாரணமாக அவர் பேட்டி அளிக்கும் பாணியில் அவரது தனித்தன்மை வெளிப்படுகிறது.

—————————————————————————————————————————————————-

நீங்கள் நடிகராக இருந்ததற்கும் இப்போது அரசியல் தலைவ ராக இருப்பதற்கும் என்ன வித்தியாசம் இருப்பதாக நினைக் கிறீர்கள்?

சினிமா நிச்சயமாக எனக்குள் இருக்கும் அந்த நியாயமான சமூக சிந்தனைக்கு வடிகாலாக அமைந்தது. பல சமூகப் பிரச் னைகளை, சராசரி மனிதனின் இடர்பாடுகளைக் கதாபாத்தி ரங்கள் மூலம் என்னால் மக்கள் மன்றத்துக்குப் படம்பிடித்துக் காட்ட முடிந்தது. ஆனால், ஓர் அரசியல்வாதியாக இப்போது எந்தக் கதாபாத்திரத்திற்குள்ளும் ஒளிந்து கொள்ளாமல், நான் நானாகவே பொதுமேடையில் சமுதாயப் பிரச்னைகளை எழுப்ப முடிகிறது.
அவ்வளவுதான்.

நீங்கள் நடிகராக இருந்து பார்த்த அரசியலுக்கும் அரசியல்வாதியாகப் பார்க் கும் அரசியலுக்கும் என்ன வித்தியாசம் தெரிகிறது?

நான் அரசியல்வாதியாக மாறிய பிறகு தெரிந்து கொண்ட முதல் விஷயம், ஜன நாயக நாட்டின் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கக்கூட முடியவில்லை என்பதே.

திருவள்ளுவரைப் பற்றியும், தமிழ் இலக்கியம் பற்றியும், அரசியல் நாகரிகம் பற்றி யும் அடிக்கொருதரம் பேசும் கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில், மாற்றுக் கட்சி யினர் பேனர் வைப்பதற்குக் கூட பிரச்னைகள் தரப்படுகின்றன என்றால் எந்த அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங் கள்.

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இணையாகத் தமிழகத்தில் போஸ்டர்களும் கொடிக்கம்பங்களும் அமைத்திருக்கும் ஒரே கட்சி தேமுதிகதான் போலிருக்கிறதே!

ஐம்பது வருடக் கட்சியும், முப்பத்தைந்து வருடக் கட்சியும் இப் படியொரு கலாசாரத்தை நிலைநிறுத்தி விட்டார்கள். அதை என் னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைதான். இதை மாற்ற வேண்டும் என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அந்தக் கட்சிகளின் மீதிருக்கும் பொதுமக்களின் வெறுப்பு, இளைஞர்க ளின் கோபம் தேமுதிகவுக்கு ஆதரவாகத் திரும்பி இருக்கிறது. நீங் கள் பார்க்கும் ஒவ்வொரு தேமுதிக கொடியும், தேமுதிக பேனரும் திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வைத்த ஒன்று என்றுதான் கருத வேண்டும். அதனால்தான் அந்த இளைஞர்களின் ஆர்வத்தை நான் குலைக்க முற்படவில்லை.

தனியாக நின்று நீங்கள் பெறும் இந்த வாக்குகள் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை படைத்தவை அல்லவே என்பதுதான் கேள்வி.

தொடங்கிய ஒரு வருடத்தில் தேர்தலைச் சந்தித்து இவ்வளவு வாக்குகள் பெற முடியும் என்றால், தனியாகவே போட்டியிட்டு மக் களின் ஏகோபித்த ஆதரவை நாங்கள் நிச்சயம் பெற முடியும். தாக் குப் பிடிக்கும் தைரியமும், பொறுமையும் எங்களுக்கு இருக்கிறது.
எங்களது இளைஞர் படைக்கு இருக்கிறது. மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக் கும் கட்சி என்பதால் நிச்சயம் தனித்து நின்று எங்களால் வெற்றி பெற முடியும்.

நமது நாடாளுமன்ற ஜனநாயக முறையில், மற்றவர்கள் கூட்டணி அமைத் துப் போட்டியிடும்போது, நீங்கள் தனித்து நின்றால், வெற்றியடைய முடியாது என்று மக்கள் உங்களுக்கு வாக்களிக்காமல் இருந்து விடுவார்களே?

தோற்கும் கட்சிக்கு எப்படி வாக்களிப்பார்கள்? இவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று மக் கள் நினைத்தால், அப்போது கூட்டணியா, தனியாகப் போட்டியா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் எனும்போது, அவர் கள் எங்களைத் தேர்ந்தெடுப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அதனால் நாங்கள் தனியாக நிற்பதைத்தான் விரும்புகிறோம்.

ஒத்த கருத்துடைய சக்திகளை நீங்கள் ஏன் அணி திரட்டக் கூடாது?

ஒத்த கருத்து கொள்ளை அடிப்பதில்தான் இருக்கிறது. ஆட்சியையும் அதிகாரத் தையும் கைபற்றித் தங்கள் உற்றார் உறவினர்களைப் பலப்படுத்திக் கொள்வதில் ஒத்த கருத்து இருக்கிறது. தேர்தலில் இடங்களைப் பகிர்ந்து கொண்டு, வெற்றி பெறுவதற்கும், ஆட்சி அமைத்து மக்களின் வரிப் பணத்தில் தங்களைப் பலப்படுத் திக் கொள்ளவும் கூட்டணி அமைவதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடி யும்?

திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளின் ஊழலையும், அராஜகத்தையும், மக்கள் விரோதப் போக்கையையும் எதிர்க்கும் தேமுதிக, அந்தக் கட்சிகளுடன் எப்படி கூட்டணி அமைக்க முடியும்? தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் கூட்டணி அமைப்பார்கள். மக்கள் தேமுதிகவை இந்தக் கூட்டணிகளுக்கு மாற்றாக நினைக் கிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு நான் மதிப்பளிக்க விரும்புகிறேன்.

தேமுதிகவின் அடிப்படைப் பொருளாதாரக் கொள்கைதான் என்ன?

பொதுவுடைமை, முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம் என்றெல்லாம் பெயர் வைத்து அழைப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும். அதுவும், விரைவில் வந்தடைய வேண்டும். அதற்கு, அந்தந் தப் பிரச்னைக்குத் தகுந்தவாறு, எது பயன்படுமோ அந்த வழியைப் பின்பற்றுவது தான் சரி என்று நினைப்பவன் நான். இதுதான் கொள்கை என்று கண்களுக்குக் கடி வாளம் போட்டுக் கொள்ள நான் விரும்பவில்லை. பிரச்னையைப் பொருத்துத் தீர்வு அமைய வேண்டும். அதுதான், இந்தியாவுக்கும் பொருந்தும் என்பது எனது கருத்து.

அணுசக்தி ஒப்பந்தம் விஷயத்தில் உங்களது நிலைப்பாடு, மத்திய அரசுக்கு சாதகமாக இருப்பதுபோலத் தோன்றுகிறதே?

நான் முன்பு சொன்னதுபோல, தமிழகத்தின் மின் தேவைக்கு இப்போதைக்கு அணுசக்தியை விட்டால் வழியில்லை என்கிற நிலைமை. நீர் மின்சக்திக்கும், அனல் மின்சக்திக்கும் அதிக வாய்ப்பில்லை என்பதால், தமிழகம் அணுமின்சக்தி மூலம்தான் தனது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்தியாவுக்கு அணுசக்தி தேவையா என்று எனக்குத் தெரியாது. தமிழகத்துக்குத் தேவை. அத னால் அதை நான் ஆதரிக்கிறேன்.

சில விஷயங்களில் மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்கிறீர்கள். சிலவற் றில் எதிர்க்கிறீர்கள். அதிமுகவை எதிர்க்கிறீர்களா, ஆதரிக்கிறீர்களா என்று தெரி யவில்லை. ஏனிந்தத் தெளிவற்ற தன்மை?

மனதுக்கு எது நியாயமோ அதை நான் பேசுகிறேன். நண்பன் என்பதற்காகக் குற்றத்தை மறைக்கவும், எதிரி என்பதற்காக நல்லதைப் பாராட்டாமல் இருக்கவும் எனக்குத் தெரியாது. என்னைப் பற்றி அதிமுக தலைவி ஜெயலலிதா என்னவெல் லாமோ சொன்னார்கள். அதற்காக, அவர்கள் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வரும்போது நான் பேசாமல் இருப்பது எப்படி நியாயமாகும்? அத னால் எதிர்த்தேன்.

முதல்வரின் மகள் செல்வியின் வீடு தாக்கப்பட்டபோது அதைக் கண்டித்தேன். என்னைப் பொருத்தவரை, மனசாட்சிதான் எனது கொள்கை, வழிகாட்டி எல்லாமே!

நீங்கள் திமுகவை எதிர்க்கும் அளவுக்கு அதிமுகவை எதிர்ப்பதில்லை என்று தோன்றுகிறதே?

வெறும் தோற்றம்தான். இப்போது, அதிமுக ஆட்சியில் இல்லை. திமுகதான் ஆட்சியில் இருக்கிறது. ஆட்சியாளர்களின் குறையைத்தானே நான் சுட்டிக்காட்ட முடியும்? எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதில் என்ன பயன்?

அதிமுக செய்யாத எதையும் திமுக செய்துவிடவில்லை என்பதால், திமு கவை மட்டும் நீங்கள் குறை சொல்வது எப்படி நியாயம்?

அதற்குத்தான் மக்கள் அதிமுகவைத் தண்டித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தி விட்டார்களே? எதற்கெடுத்தாலும், அவர்கள் ஆட்சியில் நடந்ததே என்று சொல்வதற்கு இவர்கள் ஏன் ஆட்சியில் அமர வேண்டும்? ஐம்பது வருட அரசியல் அனுபவம் இருந்து என்ன பிரயோஜனம்? அதிமுக ஆட்சியில் உள் ளாட்சித் தேர்தல்கள் முறையாக நடக்கவில்லை என்று குறைகூறிய திமுக என்ன செய்திருக்க வேண்டும்? முறையாக நகராட்சித் தேர்தலை நடத்தினார்களா? மக் களை வாக்களிக்க அனுமதித்தார்களா?

ஜெயலலிதாவையும், அதிமுகவையும் குற்றம் சொல்ல கலைஞருக்கும் திமுகவுக்கும் அருகதை கிடையாது. மக்களின் பார்வையில் இரண்டுமே ஒன்றுதான்.

இந்த அரசியல் கலாசாரத்தைக் குறுகிய காலகட்டத்தில் மாற்றிவிட முடியும் என்று நினைக்கிறீர்களா?

அதற்காக, மாற்றாமல் விட்டுவிடுவதா? இதுதான் தலையெழுத்து என்று சகித் துக் கொள்வதா? படித்தவர்கள் இப்படிப் பேசலாமா? சமுதாயம் தடம்புரள்வதை நாம் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பது சரியா? அதனால்தான், தேமுதிகவை மக்கள் ஆதரிக்கிறார்கள். இவர்களுக்கு மாற்றாகக் கருதுகிறார்கள்.

மாற்று, மாற்று என்று சொல்கிறீர்கள். ஆனால், கரை வேட்டி கட்டுவதிலி ருந்து, உங்களை “கேப்டன்’ என்று அழைப்பது வரை, திமுக – அதிமுக கலாசா ரத்தைத்தான் தேமுதிக பின்பற்றுகிறது. அப்படி இருக்கும்போது எப்படி உங்க ளால் ஒரு மாறுபட்ட அரசியல் கலாசாரத்தை இங்கே கொண்டு வந்துவிட முடி யும்?

கேப்டன் என்று என்னை அழைக்க வேண்டும் என்று நான் சொல்லவுமில்லை, வற்புறுத்தவுமில்லை. அவர்கள் என்மீது இருக்கும் அன்பாலும், மரியாதையாலும் அப்படி அழைக்கும்போது அதை நான் எப்படி தடுக்க முடியும்? கேப்டன் என் றால் என்ன அர்த்தம்? தலைமை தாங்கி நடத்துபவர் என்று பொருள். கட்சியின் தலைவனான என்னைத் “தலைவா’ என்று அழைப்பதற்குப் பதிலாகக் “கேப்டன்’ என்று அழைக்கிறார்கள். பத்திரிகை ஆசிரியரான உங்களை உங்களது உதவி ஆசி ரியர்களும், நிருபர்களும் எப்படிப் பெயரைச் சொல்லி அழைப்பதில்லையோ, அதுபோலத்தான் இதுவும்.

கேப்டன் என்று அழைப்பது சரி; ஆனால், அந்தக் கட்சிகளின் செயல்பாடுக ளுக்கும் தேமுதிகவின் செயல்பாடுகளுக்கும் வித்தியாசமே இல்லையே?

ஏன் இல்லை? நாங்கள் அவர்களைப் போல அராஜகக் கும்பலல்ல. ஊழல் செய்வதற்காக அரசியலுக்கு வந்தவர்களல்ல. மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற ஒரே ஒரு குறிக்கோளுடன் அரசியலுக்கு வந்தவர்கள். இது வித்தியாசமில்லையா? கருணாநிதியும் சரி, எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இப்படிச் சொல் லித்தான் அரசியலுக்கு வந்தார்கள். ஆனால், ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர் கள் மாறிவிட்டார்கள்.

நீங்கள் மட்டும் மாற மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?

தயவுசெய்து இந்த வரிசையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைச் சேர்க்காதீர் கள். அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்றுவரை அவர்தான் முதல்வராக இருந் திருப்பார். தேமுதிகவுக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பதற்கு முக்கியமான கார ணம், அவரைப் போல தங்களது உணர்வுகளைப் புரிந்தவனாக நானும் இருப் பேன் என்று தமிழக மக்கள் நம்புவதால்தான். இவர்களிடம் ஆட்சியைக் கொடுத் துப் பார்த்துவிட்டு நாம் ஏமாந்தோம். என்னிடம் ஆட்சியைத் தந்தபிறகு நான் மாறுகிறேனா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டுமே தவிர இப்போதே நீங் கள் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்?

சொல்லுங்கள், ஆட்சியில் அமர்ந்தால் உங்களால் என்னதான் செய்துவிட முடியும்? லஞ்சத்தை ஒழித்துவிட முடியுமா, வறுமையைப் போக்கிவிட முடி யுமா?

முடியும். ஏன் முடியாது? இவர்கள் ஒரு தொழிற்சாலை கொண்டு வரும்போதே, அதில் தங்களது குடும்பத்துக்கு எத்தனை ஷேர் என்று கணக்குப் பார்க்கிறார்கள். ஒரு திட்டம் போடும்போது, அதில் தங்க ளுக்கு எவ்வளவு பங்கு என்று கணக்குப் போடுகிறார்கள். நமது இந் தியக் குடிமகனின் தேவைகள் ஏசி அறையும், மோட்டார் வாகான மும் அல்ல. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், செய்யத் தொழில், ஆரம்பப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அடிப்படை வசதிகள்தான். அதைக்கூட நம்மால் செய்து தர முடியா மல் போனதற்குக் காரணம், நமது ஆட்சியாளர்கள் அதில் அக்கறை செலுத்தாததுதான். எங்களிடம் ஒருமுறை ஆட்சியை ஒப்படைத்துப் பாருங்கள். அதற்குப் பிறகு இந்த சுயநலக் கும்பல்கள் அரசியலை விட்டே ஒதுங்கி விடுவார்கள்.

வெளியில் இருந்து பேசுவது எளிது. சினிமா வசனமல்ல, நிர்வா கம் என்பது. திறமையான நிர்வாகிகளான கருணாநிதியாலும், ஜெயலலிதாவாலும் முடியாததை உங்களால் செய்ய முடியும் என்று எப்படி நம்புவது?

1967-ல் முதல்வர் கலைஞர் அமைச்சரானபோதும், 1991-ல் அதி முக தலைவி ஜெயலலிதா முதல்வரானபோதும் அவர்களுக்கு அனு பவம் இருந்ததா என்ன? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என் கிற நல்லெண்ணம் இருந்தால் நிச்சயமாக நல்லது செய்ய முடியும். அதைக் காமரா ஜரும், அண்ணாவும், எம்.ஜி.ஆரும் செய்து காட்டினார்கள். என்னாலும் செய்து காட்ட முடியும்.

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால்வாசி வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றி விட்டது என்று முதல்வர் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா?

“நமக்கு நாமே’ என்று திட்டமிட்டுச் செயல்படும் இந்த ஆட்சியைப் பற்றி மக் கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியமே தவிர, முதல்வர் கலைஞர் என்ன சொல்கிறார் என்பதல்ல முக்கியம். அவரே அவருக்கு நூற்றுக்கு நூறு மதிப் பெண்கள் கொடுத்துக் கொள்வது கேலிக்கூத்தாகத்தான் எனக்குத் தெரிகிறது.

உருப்படியாக இந்த அரசு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவும் இல்லை. செயல்படுத்தவும் இல்லை. இரண்டு ரூபாய் அரிசி என்று சொல்லி, அவர்களது கட்சிக்காரர்கள் வெளிமாநிலங்களுக்கு அரிசி கடத்தி சம்பாதிக்க வழிகோலிய தும், இலவச தொலைக்காட்சி என்கிற பெயரில், கட்சி உறுப்பினர்க….

Posted in ADMK, Biosketch, DMDK, DMK, Faces, Madurai, MGR, people, Politics, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | 2 Comments »

Attack Pandi – Sun TV & Dinakaran Madurai office ransacking: How the innocent employees got butchered?

Posted by Snapjudge மேல் மே 9, 2007

நாளிதழ் அலுவலகத் தாக்குதலில் 3 பேர் இறந்தது எப்படி?

மதுரை, மே 10: மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடந்த தாக்குதலில் தீயில் சிக்கி 2 பொறியாளர்களும், காவலாளியும் புதன்கிழமை உயிரிழந்தனர்.

கம்ப்யூட்டர் பொறியாளர்கள்

  • வினோத்குமார் (26),
  • கோபிநாத் (25),
  • காவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் அலுவலக அறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

அவர்களது சடலம் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

வினோத்குமார்: பொறியாளர் வினோத்குமாரின் தந்தை முருகேசன். தாய் பூங்கொடி. மதுரை வானமாமலை நகர் நேரு தெருவில் வசித்து வருகின்றனர்.

முருகேசன் கட்டடங்களுக்கு மார்பிள் போடும் காண்டிராக்ட் தொழில் செய்துவருகிறார்.

கம்ப்யூட்டர் பிரிவில் பி.இ. பட்டம் பெற்ற வினோத்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தம்பி கார்த்திக்பாண்டியன் கேட்டரிங் கல்லூரியில் படித்து வருகிறார்.

கோபிநாத்: ராமநாதபும் மாவட்டம், சக்கரைக் கோட்டையைச் சேர்ந்த கோபிநாத், கம்ப்யூட்டரில் பி.இ. பட்டம் பெற்றவர். இவரது சகோதரர் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

இவரது தந்தை கோகுலதாஸ் மின்வாரிய உதவிப் பொறியாளராக உள்ளார். தாயார் கோகுலவள்ளி.

இறந்தது எப்படி?: ஊழியர்கள் இறந்ததை நேரில் பார்த்த ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

கருத்துக்கணிப்பு வெளியானதை அடுத்து கும்பல் கும்பலாக வந்த பலர் எங்கள் அலுவலகத்தின் முன் பத்திரிகை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10 மணிக்கு வந்த கும்பல் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் பலரையும் பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.

பின்னர் 11 மணியளவில் அட்டாக் பாண்டி தலைமையில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை அலுவலகத்தின் வரவேற்பறை, கணினி அறை, வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட 6 இடங்களில் வீசினர். இதனால், தீ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக வரவில்லை. போலீஸ் நடவடிக்கையும் தாமதமாக இருந்தது. இதனையடுத்து அலுவலகம் புகையால் சூழப்பட்டது. பலரும் தப்பி வெளியேறினோம். இந் நிலையில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் கோபிநாத், வினோத்குமார் ஆகியோர் தங்கள் அறையில் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர்.

தீயணைப்புத் துறையினர் வந்து நீண்ட நேரத்துக்கு பிறகே 2 பேரையும் மீட்க முடிந்தது. காவலாளி முத்துராமலிங்கம் சடலத்தை மாலையில் தான் மீட்கமுடிந்தது என்றனர்.


பலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்மதுரை, மே 10 மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் தீயில் சிக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்தினருக்கும், தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தெரிவித்தார்.மதுரையில் புதன்கிழமை பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்குள்ளான தினகரன் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டு, தாக்குதலில் இறந்த ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவோம். திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், இச் சம்பவம் நடந்திருப்பது வருத்தமளிக்கிறது.இது தனிநபர் மீது நடந்த தாக்குதல் அல்ல. பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றார்.கருத்துக் கணிப்பு தேவையில்லை என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதியே கூறியுள்ளாரே? எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு 3 பேர் சாவுதான் தீர்வாகுமா? என வினவினார்.தாக்குதலின் போது பாதுகாப்புக்கு நின்ற போலீஸôர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படுகிறதே, இதற்கு யார் காரணம்? எனக் கேட்டதற்கு, நீங்கள் (செய்தியாளர்கள்) நினைப்பதைத்தான் நாங்களும் நினைக்கிறோம் எனப் பதிலளித்தார் கலாநிதி மாறன்.

இச் சம்பவத்துக்கு மு.க அழகிரியின் தூண்டுதலே காரணம் என, சன் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். ரமேஷ் தெரிவித்தார்.


மதுரையில் மறியல்} 7 பஸ்கள் உடைப்பு: மேயர், துணை மேயர் உள்பட 200 பேர் மீது வழக்குமதுரை, மே 10: தமிழக முதல்வரின் அரசியல் வாரிசு யார் என்பது தொடர்பாக தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அரசு பஸ்கள் உள்ளிட்ட 7 பஸ்கள் புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டன.இது தொடர்பாக 7 பேரை போலீஸôர் கைது செய்தனர். மதுரை மாநகராட்சி மேயர் கோ.தேன்மொழி, துணை மேயர் பி.எம்.மன்னன், மாநகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்புக்கு கண்டனம் தெரிவித்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் புதன்கிழமை காலையிலிருந்தே மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தினகரன் நாளிதழ்களை எரித்துப் போராட்டம் நடத்தினர்.திமுகவின் 4-ம் பகுதிச் செயலர் எம்.ஜெயராமன் தலைமையில் சுமார் 40 பேர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கூடி அந்த நாளிதழ்களை எரித்தனர். மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 அரசு பஸ்களை கல் வீசியும், கட்டையால் தாக்கியும் சேதப்படுத்தினர்.மேயர் கோ.தேன்மொழி தலைமையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே பஸ் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் அங்கிருந்த பஸ்ûஸ கல் வீசித் தாக்கி சேதப்படுத்தினர். உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற மறியல் சம்பவத்தில் தனியார் பஸ்ûஸயும், அரசு பஸ்ûஸயும் சிலர் சேதப்படுத்தினர்.இதேபோல், மணிநகரத்தில் திமுக பிரமுகர் சரவணன் தலைமையிலும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே 1-ம் பகுதிச் செயலர் ரவிச்சந்திரன், மகால் பகுதியில் தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி தலைமையிலும், நேதாஜி சிலை அருகே 38-வது பகுதிச் செயலர் கே.பி.செல்வம் தலைமையிலும் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரையில் முனிச்சாலை, விரகனூர் சுற்றுச்சாலை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.

இதனால் ஆங்காங்கே கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மதுரை போலீஸ் கமிஷனர் ஏ.சுப்பிரமணியன் கூறியது: பல்வேறு இடங்களில் நாளிதழ்கள் எரிப்பு மற்றும் பஸ் மறியலில் ஈடுபட்ட மதுரை மேயர், துணை மேயர், சில கவுன்சிலர்கள் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்கட்ட நடவடிக்கையாக மதுரை நகரில் 7 பேரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 பேரையும் கைது செய்துள்ளோம். மேலும், நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.


It all started here with Dinakaran – Sun TV Network’s Survey Results from AC Nielsen
கலைஞரின் அரசியல் வாரிசு யார்? கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு தமிழக அளவில் 70 சதவீதம் மக்கள் மு.க.ஸ்டாலின் என்று பதிலளித்துள்ளனர். மு.க.அழகிரி என்று 2 சதவீதம் பேரும், கனிமொழி என்று 2 சதவீதம் பேரும் பதில் அளித்தனர். 20 சதவீத மக்கள் வேறு பெயர்களை பதிலாக தெரிவித்தனர். 6 சதவீதம் பேர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.“ஸ்டாலின்தான் கலைஞரின் அரசியல் வாரிசு’’ என அதிகம் பேர் சொல்லியிருப்பது

  • கோவை பகுதியில்தான். அங்கு 78 சதவீத மக்களிடம் இந்தக் கருத்து காணப்படுகிறது. அதனையடுத்து
  • வேலூர் பகுதியில் 77 சதவீதம் பேரும்,
  • திருச்சி பகுதியில் 71 சதவீதம் பேரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். மாநில சராசரியை விட சற்று குறைவாக
  • சென்னையில் 68 சதவீதம் பேர் ஸ்டாலின் பெயரை குறிப்பிட்டனர்.
  • மதுரையில் இந்த சதவீதம் 67 ஆக,
  • புதுச்சேரியில் 65 ஆக உள்ளது.
  • சேலத்தில் 61%.

“அரசியல் வாரிசு அழகிரி’’ என்று கூறியிருப்பவர்கள் எண்ணிக்கை

  • மதுரையை விட நெல்லையில் அதிகமாக இருக்கிறது.
  • மதுரையில் 6 சதவீதம் பேரும்
  • நெல்லையில் 11 சதவீதம் பேரும் அழகிரி பெயரை சொல்லியிருக்கிறார்கள்.
  • புதுச்சேரியில் 2 சதவீதம் பேரும்,
  • வேலூர்,
  • கோவை,
  • திருச்சி,
  • நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தலா 1 சதவீதம் பேரும் அழகிரிதான் கலைஞரின் அரசியல் வாரிசு என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
  • சென்னை மற்றும்
  • சேலத்தில் அதற்கும் குறைவானவர்கள் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.

“கனிமொழியே கலைஞரின் அரசியல் வாரிசு’’ என்று

  • மதுரையில் 5 சதவீத மக்களும்
  • சேலத்தில் 4 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை
  • நெல்லையில் 3 சதவீதமாகவும்
  • நாகர்கோவில் பகுதியில் 2 சதவீதமாகவும் இருக்கிறது.
  • சென்னை,
  • வேலூர்,
  • புதுச்சேரி,
  • கோவை பகுதிகளில் தலா 1 சதவீதம் பேர் கனிமொழி பெயரை குறிப்பிட்டனர்.

இந்த மூன்று பேரை தவிர வேறு பெயர்களை சொன்னவர்கள் சென்னையில் அதிகம். 31 சதவீத சென்னைவாசிகள் அத்தகைய கருத்து தெரிவித்தனர். சேலத்தில் 23, வேலூர், கோவையில் தலா 19, நாகர்கோவில் பகுதியில் 18, திருச்சியில் 16, புதுச்சேரி பகுதியில் 15 சதவீதம் மக்கள் இவ்வாறு வேறு பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தவர்களில் 33 சதவீதம் பேர் “அரசியலில் அவர் அனுபவசாலி’’ என்ற காரணத்தால் அவரை குறிப்பிட்டதாக சொல்கின்றனர். வேலூர் (40), புதுச்சேரி (38), கோவை (37) சேலம் (35) பகுதிகளில் மாநில சராசரியை விடவும் அதிகமானவர்கள் ஸ்டாலினின் அரசியல் அனுபவத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர். சென்னை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தலா 32 சதவீதம் பேரிடம் இதே கருத்து வெளிப்பட்டது. “கட்சியிலும் ஆட்சியிலும் பல பொறுப்புகளை வகித்திருப்பது ஸ்டாலினுக்குரிய பிளஸ் பாயின்ட்’’ என்று பெரும்பாலானவர்கள் சுட்டிக்காட்டினர்..


சிறப்பாக செயல்படும் மத்திய அமைச்சர்கள் யார்? தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் மிகவும் சிறப்பாக செயல்படுபவர் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

  • தயாநிதி மாறன் என்று தமிழக அளவில் 64 சதவீத மக்கள் கூறியுள்ளனர்.
  • 27 சதவீத மக்கள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
  • கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு பெயரை 7 சதவீதம் பேர் தேர்வு செய்தனர்.
  • ஒரு சதவீதம் பேர் சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பெயரை குறிப்பிட்டுள்ளனர்.
  • வேலூரில் அதிகபட்சமாக 79% பேர் எங்கள் சாய்ஸ் தயாநிதி மாறன் என கூறியுள்ளனர்.
  • சேலம்,
  • கோவையில் தலா 73 சதவீதம் பேரும்,
  • சென்னையில் 61 சதவீதம் பேரும் சிறந்த அமைச்சராக தயாநிதி மாறனை தேர்வு செய்துள்ளனர்.
  • புதுச்சேரியில் 67%,
  • திருச்சி,
  • மதுரையில் தலா 58%,
  • நாகர்கோவிலில் 57%,
  • நெல்லையில் 53% பேர் தயாநிதி மாறன் மிகச் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.

அமைச்சர் சிதம்பரம் நன்றாக செயல்படுகிறார் என்று

  • மதுரையில் 36 சதவீதம் பேரும்
  • சென்னையில் 24 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

டி.ஆர்.பாலுவின் செயல்பாடு நன்றாக இருப்பதாக தெரிவித்தவர்கள்

  • திருச்சி,
  • நாகர்கோவிலில் தலா 12%.
  • சென்னை மக்களில் 11 சதவீதம் பேர் பாலு சிறப்பாக செயலாற்றுவதாக கூறினர்.
  • நெல்லை 9%,
  • சேலம்,
  • மதுரை தலா 4%,
  • புதுச்சேரி 3%.

சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியின் செயல்பாடு பிடித்திருப்பதாக

  • புதுச்சேரி பகுதியில் 4 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.
  • சென்னையில் இந்த கருத்து கொண்டிருப்பவர்களின் சதவீதம் 2.
  • வேலூர்,
  • திருச்சி,
  • நெல்லையில் தலா 1 சதவீதம்.
  • சேலம்,
  • கோவை,
  • மதுரை,
  • நாகர்கோவிலில் யாரிடமும் இக்கருத்து வெளிப்படவில்லை.
  1. ஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் போனில் பேசும் வசதி,
  2. செல்போன் கட்டணங்கள் குறைப்பு,
  3. பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தமிழக வருகை ஆகிய காரணங்களால் தயாநிதி மாறனின் செயல்பாட்டை சிறந்ததென குறிப்பிட்டதாக 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
  4. இளமைத் துடிப்புடன் அவர் செயலாற்றுவது தங்களைக் கவர்ந்ததாக 24 சதவீதம் பேர் குறிப்பிட்டனர்.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு சரியான வழி காட்டுகிறார் என்று சிதம்பரம் பெயரை வழி மொழிந்தவர்களில் 52 சதவீதம் பேர் கூறினர். நிதித் துறையை அரசியல்வாதி போல் அல்லாமல் நிபுணர்போல அவர் கையாள்வதாக 11 சதவீதம் மக்கள் கருத்து கூறினர்.

அமைச்சர் பாலு பெயரை குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானோர் சேது சமுத்திர திட்டத்தில் அவர் காட்டும் ஈடுபாட்டை காரணமாக கூறினர். சென்னை பகுதியில் உள்ளவர்களில் அதிகமானவர்கள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் புதிய மேம்பாலங்கள் கட்டுவதில் அவரது ஆர்வத்தை சுட்டிக்காட்டினர்.

அமைச்சர் அன்புமணி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் தங்களை கவர்ந்ததாக தெரிவித்தனர்.


கருணாநிதி பதவி விலக வேண்டும் } விஜயகாந்த்சென்னை, மே 10: மதுரையில் “தினகரன்’ பத்திரிகை அலுவலகம் மீது நடைபெற்ற தாக்குதலில் மூவர் உயிரிழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மதுரையில் புதன்கிழமை காலை “தினகரன்’ அலுவலகமும் சன் டி.வி. அலுவலகமும் தி.மு.க. ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் வெளியே வர முடியாமல் மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர். அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்களால் மதுரை மாநகரமே வெறிச்சோடி கிடக்கிறது.மதுரை மாநகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும் யாரால் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்று மக்கள் அறிய விரும்புகிறார்கள்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புத் தர வேண்டியது ஒரு அரசின் கடமை ஆகும். தீ பரவாமல் தடுத்திருக்க வேண்டியது தீயணைப்புத்துறையின் கடமையாகும். ஆனால் எல்லாத் தரப்பினரையும் செயலிழக்க வைத்தது எது?

ஏற்கெனவே, மதுரையில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் படுகொலைக்குப் பிறகு மக்கள் நடக்கவே பயப்படுகிறார்கள். இன்றைய வன்முறை வெறியாட்டத்திற்குப் பிறகு மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறி ஆகிவிட்டது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோன்று இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

தனது குடும்பப் பிரச்சினை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையைப் போக்க, முதல்வர் கருணாநிதி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்: காட்டுமிராண்டித் தனமான இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகைத்துறையினருக்கு தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன்: மதுரையில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களின் ஜனநாயக விரோதமான வன்முறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையாளர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மு.க. அழகிரி உள்ளிட்டோர் மீது புகார்மதுரை, மே 10: மதுரை தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசி தீவைத்ததில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக முதல்வரின் மகன் மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.அழகிரிக்கு ஏற்கெனவே ஒரு வழக்கில் வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்துசெய்யவேண்டும் என்றும் தினகரன் நாளிதழ் நிர்வாகம் கோரியுள்ளது.முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி 1980 -ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மதுரையில் குடியேறினார். முரசொலியின் மதுரைப் பதிப்பை கவனிக்கும் பணியில் ஈடுபட்டார்.இதையடுத்து கட்சியின் தென்மாவட்ட நிர்வாகத்தின் அதிகார மையமாகவும் அவர் விளங்கினார். இந் நிலையில் மூத்த நிர்வாகிகள் சிலருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து மீண்டும் 1984-ல் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றார்.பின்னர் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரையில் குடியேறிய அவர், பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கினார்.இந் நிலையில் தினகரன் நாளிதழில் முதல்வரின் அரசியல் வாரிசு யார்? என வெளியான கருத்துக்கணிப்பில் அழகிரிக்கு 2 சதவிகிதம் மட்டுமே ஆதரவு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இச் செய்தி அவரது ஆதரவாளர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாளிதழைத் தீ வைத்தும், அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக அந் நிறுவனத்தினரே பேட்டியில் குறிப்பிட்டுள்ளனர்.

பத்திரிகை நிறுவனத்தினர் அளித்த புகாரின் பேரில், மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட பலர் மீது ஒத்தக்கடை போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தமிழகத்தில் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் மூன்று பேர் பலி

தமிழகத்திலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்டத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் தினகரன் நாளிதழின் இன்றைய(புதன்கிழமை) பதிப்பில், தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்பது குறித்த கருத்துக்கணிப்புபின் முடிவுகள் வெளியாகியிருந்தன. இதில் மதுரையில் 67 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினையும், 6 சதவீதம் பேர் மு.க.அழகிரியையும் குறிப்பிட்டிருந்தனர். இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு மதுரையில் தனது செல்வாக்கை குறைத்துவிட்டதாக அழகிரி அவர்கள் கருதியதாகவும், காலையில் பத்திரிகை வெளியானது முதலே தமது அலுவலகத்திற்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தினகரன் பத்திரிகையின் மதுரை பதிப்பின் ஆசிரியர் முத்துப்பாண்டியன் தெரிவித்தார்.

ஆர்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மதுரை மேயர்

இதையடுத்து மதுரை மேயர் தேன்மொழி உட்பட அழகிரி அவர்களின் ஆதரவாளர்கள் தமது அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி நடத்தியத் தாக்குதலில் மூன்று ஊழியர்கள் பலியானதாகவும் அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரில் இருவர் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், ஒருவர் பாதுகாப்பு ஊழியர் எனவும் அவர் கூறினார்.

ஆனால், தாங்கள் எவ்விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனவும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பத்திரிகைகளை மட்டுமே எரித்ததாக தேன்மொழி கூறுகிறார். வன்முறைகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும் அவர் கூறுகிறார். இன்றைய சம்பவங்களில் அழகிரி அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


பத்திரிகைத துறை மீதான தாக்குதல் என்கிறார் தினகரனின் தலைமை நிர்வாகி

எரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்
எரிக்கப்படும் தினகரன் பத்திரிகையின் பிரதிகள்

சர்ச்சைக்குரிய இந்தக் கருத்துக் கணிப்பை தினகரன் பத்திரிகைக்காக ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இது பற்றி கருத்து வெளியிட்ட தினகரன் பத்திரிகையின் தலைமை நிர்வாகி ரமேஷ் அவர்கள், ஏ சீ நீல்சன் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பைத்தான் தினகரன் வெளியிட்டது எனக் கூறினார்.

இந்தத் தாக்குதல் தினகரன் பத்திரிகையின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் என்பதனை விட பத்திரிகைத் துறை மீது நடத்தப்பட்டத் தாக்குதலாகத்தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் எனவும் ரமேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக தங்களிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன எனவும் அவர் கூறினார். இந்தியாவில் பல பத்திரிகைகள் கருத்துக் கணிப்பை நடத்தி கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்தான் என்பதால் இவ்வாறான ஒரு வன்முறை நிகழும் எனத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.

 


தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைவர் கூறுகிறார்

இன்று நடைபெற்ற வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று
இன்றைய வன்முறையில் சேதமடைந்த பேருந்து ஒன்று

இன்றைய வன்செயல்கள் கருத்து வெளியிட்ட தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி, இன்று காலையில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க நடைபெற்ற மூன்று முயற்சிகளின் போது போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் எனவும் ஆனால் நான்காவது முறையாக தாக்குதலை நடத்தவந்த கூட்டம் அந்த அலுவலகத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும் தெரிவித்தார்.

போலீசார் மீது தவறு இருப்பது தெரியவந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வழக்கு விசாரணையில் இருப்பதால் இந்த வன்செயல்களில் யார் ஈடுபட்டிருந்தார்கள் என இப்போது கூறமுடியாது எனவும் முகர்ஜி கூறினார். நான்காவதாக நடைபெற்ற தாக்குதலில் மதுரை மேயர் ஈடுபடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான முக்கிய வழக்கில் மூன்று பேர் பிடிபட்டுள்ளதாகவும், வன்முறை தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், 25 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகியுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி தெரிவித்தார்.

தற்போது மதுரையில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், வழக்கு விசாரணை சுதந்திரமாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


 

தனக்கு யார் வாரிசு என்கிற பேச்சுகே இடமில்லை என்கிறார் கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதி

மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். பலியான ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

திமுக ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரு கட்சி என்றும், எனவே தனக்கு யார் வாரிசு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அழகிரியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றத் தவறிவிட்ட திமுக அரசை, மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெ ஜெயலலிதா கோரியுள்ளார். மதுரை போலீசார், முதல்வர் கருணாநிதிக்கு கட்டுப்படாமல் அவரது மகன் மு க அழகிரிக்கே கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 


 

தினகரன் மீதான தாக்குதலை சி பி ஐ விசாரிக்கும்; கருணாநிதி

தினகரன் நாளிதழ் தாக்குதல் குறித்து சி பி ஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை தமிழக அரசு கோரும் என்று தமிழக முதல்வர் மு கருணாநிதி தெரிவித்தார்.

கருணாநிதியின் அரசியல் வாரிசு .யார் என்பது பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகள் தினகரன் நாளிதழில் பிரசுரிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதன்கிழமை பிரச்சினை உருவானது. வெறும் 2 சதவீத மக்களே கருணாநிதியின் மகனான அழகிரிக்கு ஆதரவு அளித்ததாக இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டது.

இதனால் கொதிப்படைந்த சிலர், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தை தாக்கினர். இதில் அங்கு பணிபுரிந்து வந்த 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் தனது குடும்பம் சம்மந்தப்பட்டுள்ளதால், இதை தமிழக அரசு விசாரணை நடத்துவதற்கு பதிலாக மத்திய அரசின் சி பி ஐ விசாரணை நடத்தும் என்று குறிப்பிட்டார்.

அதே நேரம், தனது யோசனையையும் மீறி தேவையில்லாத கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு தினகரன் நாளிதழ்தான் குழப்பத்துக்கு வழிவகுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.

தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அதிமுக கோரியுள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஜெயகுமார், இது குறித்து பேசுகையில் குடும்பமும், உள் துறையும் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.


பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலல்ல – ஞானி

ஸ்டாலினும், அழகிரியும் சில சமயங்களில் இணைந்தும் பல சமயங்கலில் எதிர்எதிராகவும் செயல்பட்டு வந்துள்ளனர்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஸ்டாலினும், அழகிரியும்

தினகரன் பத்திரிக்கையின் மீதான தாக்குதல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் அல்ல குடும்பத்துக்குள் நடக்கும் ஆட்சி அதிகாரப் போட்டியின் விளைவு என்று அரசியல் விமர்சகர் ஞானி தெரிவித்தார்.

இதை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று காட்டுவது, திமுகவின் அதிகார மையங்கள், தங்களின் அதிகாரப் போட்டிக்காக எத்தகைய கருவியையும் கைகொள்ளவார்கள் என்பதற்கு உதாரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்று முதல்வர் மு கருணாநிதி கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்று குறிப்பிட்ட ஞானி, மாவட்ட அளவில் கூட திமுகவினர் தங்களின் வாரிசுகளை பதவிகளுக்கு கொண்டு வருவதாகக் கூறினார்.

மு க ஸ்டாலின் படிப்படியாக கொண்டுவரப்பட்டார் என்றால் தயாநிதி மாறன் எவ்வித அரசியல் கள அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்டு மத்திய அமைச்சராக்கப்பட்டார் என்றும் ஞானி குறிப்பிட்டார்.

திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது என்பது இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை

 

பத்திரிக்கையாளர் ஞானி

இந்தப் பிரச்சனையில் சி பி ஐ விசாரணை என்பது அபத்தமானது என்று கருத்து வெளியிட்ட ஞானி, ஒரு குற்றத்தை யார் செய்தார்கள் என்பது குறித்து புலனாய்வு செய்ய முடியாத நிலையில் இருக்கும் பட்சத்திலோ அல்லது மாநில காவல் துறை நம்பகத் தன்மையை குறைந்து போய்விட்ட நிலையிலோதான் சி பி ஐ விசாரணை கோரப்படும் என்று அவர் கூறினார்.


தினகரன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது ஏன்?: கைதானவர் வாக்குமூலம் மேலூர், மே 11: மதுரை தினகரன் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணத்தை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்ட சம்பவத்தில் கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸôரிடம் அளித்துள்ள வாக்குமூலம் விவரம்:”நான் கீரைத்துறையில் வசித்து வருகிறேன். அட்டாக் பாண்டியிடம் மாதம் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் டிரைவராகப் பணிபுரிகிறேன்.அண்ணன் அழகிரியிடம் அட்டாக் பாண்டி மிக நெருக்கமான நண்பராக இருந்து வருகிறார். 9.5.2007-ல் தினகரன் நாளிதழில் மக்கள் மனசு கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், எங்கள் தலைவருக்கு ஆதரவே இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தது மிகுந்த வேதனை அளித்தது.

அதனால் அட்டாக் பாண்டியும் நீண்ட மனவேதனை அடைந்தார். தினகரன் பத்திரிகை அலுவலகத்தை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அங்கு சுமோ காரில் சென்றோம். எங்கள் பின்னால் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

அங்கு பெட்ரோல் குண்டுகளை வீசி, அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தோம். வாகனங்களைத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவந்து ரிங் ரோடு அருகே மறைந்து இருந்தோம்.

அதற்குப் பிறகுதான் 3 ஊழியர்கள் இறந்தது தெரியவந்தது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது என அறிய ரிங் ரோடு வழியாக காரில் வந்தபோது போலீஸôர் எங்களைக் கைது செய்து காரையும் கைப்பற்றினர்’ என்று போலீஸôரிடம் கூறியதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

 


மு.க.அழகிரி பேட்டி:கருத்து கணிப்பில் என் பெயரை சேர்த்திருக்கவே கூடாது. கருத்து கணிப்பில் அமைச்சர்களைப் பட்டியலிட்டனர்; அவர்களின் செல்வாக்கை சொன்னார் கள். அது ஒருவகை ஒப் பீடு. ஆனால், இப்போது தம்பி ஸ்டாலின் அமைச்சராக இருக்கிறார்; நான் அமைச்சராகவா இருக் கிறேன்? இல்லையே!

நான் அவர் இடத்துக்கு வரவேண்டும் என என்றைக் காவது நினைத்திருக் கிறேனா? அதுவும் இல்லை. பதவிக்கு வர ஆசைப்படுபவனல்ல நான். அப்படி ஒதுங்கியிருக்கும் என்னை, ஏன் வீணாக இழுத்திருக்கின்றனர் என்பது தான் என் கேள்வி, ஆதங்கம் எல்லாம்…

 


தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் செய்தி விவகாரம்
‘தமிழ் முரசு’ மீது உரிமை மீறல்

சென்னை, மே 15: தமிழ் முரசு நாளிதழ் மீது உரிமை மீறல் பிரச்னையை, காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று கொண்டு வந்தனர். இதை உரிமைக் குழுவுக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்தார்.சட்டப் பேரவையில் தமிழ் முரசு நாளிதழ் மீது, உரிமை மீறல் பிரச்னையை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜெயக்குமார், இஎஸ்எஸ்.ராமன், கோவை தங்கம் ஆகியோர் எழுப்பினர்.

இதில், ஞானசேகரன் பேசியதாவது:

பத்திரிகைகளுக்கு நாங்கள் மதிப்பும், மரியாதையும் கொடுக்கிறோம். பேரவையில் சொல்லப்பட்ட கருத்தை அடிபிறழாமல் அப்படியே பத்திரிகையில் போட வேண்டும். சொல்லப்பட்ட கருத்தை திரித்து வெளியிடக் கூடாது.

கடந்த 9ம் தேதி மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் நடந்த வன்முறையின் போது, தீ வைக்கப்பட்டதில் புகையில் சிக்கி 3 பேர் இறந்தார்கள்.

இது பற்றி அனைத்துக் கட்சியினரும், பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து 10ம் தேதி பேசினர்.
அப்போது முதல்வர் பதிலளிக்கையில்

“இந்த சம்பவத்தில், என் குடும்பத்தையும் சம்பந்தப்படுத்தி இருப்பதால், மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும்”

என்று அறிவித்தார்.

ஆனால், அன்றைய தமிழ் முரசு பத்திரிகையில்

“அழகிரி நடத்திய படுகொலைகள், சிபிஐ விசாரிக்கும், சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு”

என்று செய்தி வந்துள்ளது.

அதே செய்தியின் லீடில்

“மதுரை தினகரன் அலுவலகத்தில் அழகிரி ஏவி விட்ட ரவுடி கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 3 ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்”

என்று செய்தி வந்துள்ளது.

இது குறித்து முதல்வர் சொன்ன பதில் மட்டுமே வந்திருக்க வேண்டும். அது திரித்து சொல்லப்பட்டுள்ளது. இதற்கு நீதி வேண்டும். எங்கள் உரிமையையும் பேரவை உரிமையையும் பேரவைத் தலைவர் காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஞானசேகரன் பேசினார்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், Ôமேலெழுந்த வாரியாக பார்க்கையில் இந்த பிரச்னையில் உரிமை மீறல் இருப்பது தெரிகிறது. எனவே, இதனை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்Õ என்றார்.

 


அமைச்சர் பொன்முடி பேசியதாவது:என் வீட்டிற்கு இன்று (நேற்று) மதியம் செல்வம் வந்தார். அவர் என்னிடம் “தயாநிதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் விபரீதம் உண்டாகும். உங்கள் நண்பர் ஸ்டாலினுக்காக கட்சியை விட்டு விடாதீர்கள். தயாநிதி சாதாரணமான ஆள் இல்லை. எல்லா மட்டத்திலும் அவருக்கு செல்வாக்கு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க அவர் காரணமாக இருந்தார். அதை யாரும் மறந்து விடக் கூடாது. அவர் மீது தவறான முடிவு எடுத்தால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடும். தயாநிதி என்ன தவறு செய்தார். கட்சிக் கட்டுப்பாட்டை அவர் எங்கே மீறினார்.

  • கருத்துக் கணிப்பு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருக்கலாம். ஏன் கலவரத்தை நடத்த வேண்டும்.
  • தி.மு.க.,வில் அழகிரி என்ன பொறுப்பில் இருக்கிறார். கட்சியில் அவர் வட்ட செயலரா? அல்லது மாவட்டச் செயலரா?
  • அவருக்கு எந்த பொறுப்பும் இல்லாத போது அவருக்கு ஏன் கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது’

என்று கேட்டார்.இதுமாதிரியான எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் தி.மு.க., பயப்படாது. தயாநிதியை கட்சியிலிருந்து நீக்குவோம்,” இவ்வாறு பொன்முடி பேசினார்.

 


மதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

மதுரை, ஆக. 7: தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக “அட்டாக்’ பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர்.

இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.

 


முதல்வர் விருந்து: அதிமுக, மதிமுக பங்கேற்கவில்லைசென்னை, மே 10: சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் கருணாநிதி புதன்கிழமை இரவு அளித்த விருந்தில், அதிமுக, மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.ஆண்டுதோறும் பட்ஜெட் விவாதம் முடிவடையும் போது சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் விருந்து அளிப்பது வழக்கம்.இதன் அடிப்படையில், புதன்கிழமை மாலை உறுப்பினர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதில் அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

  • காங்கிரஸ்,
  • பாமக,
  • விடுதலைச் சிறுத்தைகள்,
  • இந்திய கம்யூனிஸ்ட்,
  • மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அனைத்துத்துறை செயலர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

விருந்தில்

  • சிக்கன் பிரியாணி,
  • மீன் வறுவல் மற்றும்
  • தக்காளி ரசம்,
  • மோர் குழும்பு,
  • பாயசம்,
  • குல்பி உள்ளிட்டவை பரிமாறப்பட்டன.

Posted in Aavudaiappan, Aavudaiyappan, Aavudayappan, AC Nielsen, ADMK, AIADMK, Alagiri, Alakiri, Anbumani, Approver, Arrest, Attack, Attack Pandi, Azagiri, Azhagiri, Azhakiri, Baalu, Basha, Batcha, Biotech, Bombs, Cabinet, Celebrations, Chargesheet, Chidambaram, Chidhambaram, Cigar, Cigarette, Dayanidhi, Dayanidhy, dead, destroy, Dharmapuri, Dharmapury, Dhinakaran, Dinagaran, Dinakaran, Dinakaran.com, DMDK, DMK, dynasty, employee, employees, Feast, Finance, FIR, Health, Healthcare, InfoTech, IT, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Kiruttinan, Law, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Maaran, Madurai, Maran, Mayor, Minister, MK Azhagiri, MP, Mu Ka, Mu Ka Azhagiri, Mu Ka Stalin, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Murder, Nelson, network, Nielsen, Nielson, Opinion, Order, P Chidambaram, Pa Chidambaram, Paandi, Pandi, Police, Poll, Ramadas, Ramadoss, Ransack, Sethu, Smoke, smoking, Statistics, Sun, Sun TV, Survey, Telecom, Television, Tha Krishnan, Thaa Krishnan, Thayanidhi, Thayanidhy, Thenmoli, Thenmozhi, Thenmozi, Thinagaran, Thinakaran, Thinakaran.com, TR Balu, Transport, TV, Velu, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth, Worker | 12 Comments »

Madurai West Assembly bypolls during May end – Election Commission

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 3, 2007

மதுரை மேற்கு தொகுதிக்கு மே மாத இறுதியில் இடைத்தேர்தல்: தேர்தல் கமிஷன் ஏற்பாடு

சென்னை, ஏப். 3- மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.).

கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி இவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.இதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா 2 முறை மதுரை சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை முழுவதுமாக வழங்கி இந்த தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது.

மதுரை மேற்கு தொகுதியில் கடந்த தேர்தலின்போது 1 லட்சத்து 81 ஆயிரத்து 710 பேர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது.

இதை ஆய்வு செய்து 35 ஆயிரம் போலி பெயர்களை நீக்கி புதிதாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 26-ந்தேதி வெளியிடப்பட்டது. போட்டோவுடன் கூடிய இந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், ஆட்சேபனை இருந்தால் தெரி விக்க தற்போது அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத கடைசியில் இறுதி வாக் காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதன் பிறகு தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த உள்ளனர்.

தேர்தல்எப்போது நடை பெறும் என்று உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

சட்டசபை கூட்டத்தொடர் வருகிற மே 11-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு தான் தேர்தல் நடத்தப்படும். ஆகஸ்டு மாதம் வரை தேர்தலை நடத்த கால அவகாசம் இருந் தாலும் மே மாதம் தான் தேர்தல் நடத்த உகந்ததாக கருதுகிறோம்.

விடுமுறை காலமாக மே மாதம் இருப்பதால் தேர்தல் நடத்த வசதியாக இருக்கும். அனேகமாக மே மாதம் கடைசி வாரம் ஏதாவதுஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். எந்த தேதி என்பது டெல்லியில் இருந்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மதுரை மேற்கு தொகுதி முழுக்க முழுக்க நகர் பகுதியில் 20 வார்டுகளை உள்ளடக்கி உள்ளது. இப்போதே அரசியல் கட்சிகள் `பூத்’ கமிட்டிகளை அமைத்து தேர்தலுக்கு தயாராக உள்ளன. காலமான எஸ்.வி. சண்முகம் அ.தி.மு.க.வில் நின்று வெற்றி பெற்றாலும் எம்.எல்.ஏ. ஆன பிறகு தி.மு.க. ஆதரவாளராக மாறினார். இதனால் அவருடன் அ.தி.மு.க. வினர் யாரும் தொடர்பு வைக் காமல் இருந்தனர்.

இந்த முறை இந்த தொகுதியை மீண்டும் அ.தி.மு.க. தக்கவைக்க கடுமை யாக தேர்தல் வேலையில் ஈடுபடும் என தெரிகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்டது. இந்த முறை யும் காங்கிரஸ் கட்சியே இங்கு போட்டியிட உள்ளது. இது தவிர தே.மு.தி.க., பா.ஜனதா ஆகிய கட்சிகளும் களத்தில் மோதும் என தெரிகிறது.

ஓட்டு விவரம்:-

கடந்த தேர்தலில் வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டு விவரம் வருமாறு:-

  1. எஸ்.வி. சண்முகம் (அ.தி.மு.க.) – 57,208
  2. பெருமாள் (காங்கிரஸ்) – 53,741
  3. மணிமாறன் (தே.மு.தி.க.) – 14,527
  4. பகவதி (பா.ஜனதா) -1,851

Posted in ADMK, Assembly, BJP, Bypolls, Congress, DMDK, DMK, EC, Election, election commission, Elections, Electorate, Madurai, Madurai West, Polls, Scarcity, SV Shanumgam, SV Shanumgham, Vijaiganth, Vijayganth, Water | 1 Comment »

DMK vs DMDK – Karunanidhi vs Vijayganth

Posted by Snapjudge மேல் மார்ச் 27, 2007

திமுக தொடக்க விழாவில் நான் இல்லையா?: விஜயகாந்துக்கு கருணாநிதி காட்டமான பதில்

சென்னை, மார்ச் 27: திமுக தொடக்க விழாவில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் தெரியாமல் சிலர் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

இது தொடர்பாக திமுகவினருக்கு அவர் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

திமுக தொடக்க விழா குறித்து மறைந்த டி.எம். பார்த்தசாரதி எழுதிய “தி.மு.க. வரலாறு’ ஏட்டில் கழகம் தொடங்கிய வரலாறு குறித்து எழுதி இருப்பது:

17.9.1949 அன்று காலை 7 மணிக்கு சென்னை பவழக்காரத் தெரு, 7-ம் எண் இல்லத்தில் கூடிய அமைப்புக் குழுவின் கூட்டத்தில், கழகத்தின் பெயர், கொடி பற்றிய அறிவிப்புகளும் செய்யப்பட்டு கழகப் பொதுக்குழுவும் அமைக்கப்பட்டது.

அந்த புத்தகத்தில் பக்கம் 109-ல் பொதுக்குழு உறுப்பினர்கள் பெயர்கள் எல்லாம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பொதுக்குழுவில்: சி.என். அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், மு. கருணாநிதி, என்.வி. நடராசன், ஈ.வெ.கி. சம்பத், டி.எம். பார்த்தசாரதி… என்று பட்டியல் தொடருகிறது.

இது மாத்திரமல்ல, “வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்’ என்ற நாவலர் இரா. நெடுஞ்செழியன் எழுதிய புத்தகத்தில் 177-வது பக்கத்தில் கூறி இருப்பது:

“அறிஞர் அண்ணாவின் அழைப்பை ஏற்று 150-க்கும் மேற்பட்ட முக்கிய முன்னணியினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மிக முக்கியமானவர்களின் பெயர்கள் வருமாறு: அறிஞர் அண்ணா, நான், கே.ஏ. மதியழகன், கலைஞர் கருணாநிதி, சம்பத், என்.வி. நடராசன்’ என நாவலர் பட்டியலிடுகிறார்.

இந்த வரலாறெல்லாம் தெரியாதவர்கள் கூறிய தகவல்களை தெரிவித்து வம்பிலே சிக்கிக் கொள்வது நல்லதல்ல. கழகத்தை பற்றிய உண்மைகள் மறைக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தையே அழித்துவிட படை திரட்டுகிறார்கள்.

பதுங்கிப் பாய்கிறார்கள், பச்சைப் பொய்களைத் தங்கள் போர்க்கணைகளாக ஆக்குகிறார்கள் என்பதையெல்லாம் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங்களில் கட்சியினர் மக்களிடம் விளக்க வேண்டும்.

Posted in DMDK, DMK, History, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, M Karunanidhi, M karunanidhy, M karunanithi, Mu Ka, Mu Karunanidhi, Mu Karunanidhy, Mu Karunanidi, MuKa, Politics, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »

DMDK grabs 5 seats – Re-polling details for the Chennai Corporation polls

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 20, 2007

5 இடங்களில் வெற்றிக் கனியை ருசித்த தேமுதிக

சென்னை, பிப். 21: சென்னை மாநகராட்சி மறுதேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களில், 3 பேர் திமுகவையும், ஒருவர் பாமகவையும், மற்றொருவர் காங்கிரஸ் கட்சியையும் வீழ்த்தி வெற்றிக் கனியை ருசித்துள்ளனர்.

27-வது வார்டில், திமுக வேட்பாளர் ஜெய்னுல் ஆபிதீனை எதிர்த்து, தேமுதிக வேட்பாளர் பி. சர்தார் போட்டியிட்டார். 1,176 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்தார்.

இதுகுறித்து சர்தார் கூறுகையில்,””கடந்த அக்டோபரில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலிலும் போட்டியிட்டேன். அப்போது, 2,110 வாக்குகள் பெற்றேன். தற்போது, 3,098 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். இது மகிழ்ச்சியைத் தருகிறது,” என்றார் அவர். மாநகராட்சி மறுதேர்தலில் தேமுதிகவுக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தவர் 35-வது வார்டில் போட்டியிட்ட சேகர். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நெடுமாறனை விட 129 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

“”கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தேமுதிக சார்பில் டேவிட் என்பவர் போட்டியிட்டார். மறுதேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் முடிவு சாதகமாக வந்துள்ளது. பணம் பார்க்க சொந்தமாக தொழில் உள்ளது. மக்களுக்கு உரிய முறையில் சேவை ஆற்றுவேன்” என்றார் சேகர். இதேபோன்று, 45-வது வார்டில் பாமக வேட்பாளரை எதிர்த்து களமிறங்கிய உஷா, 2631 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

48-வது வார்டில் நீண்ட நேர இழுபறிக்குப் பின், தேமுதிக வேட்பாளர் சரவணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் சங்கரை விட, 210 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

63-வது வார்டில் திமுக வேட்பாளர் மோகன், 514 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளர் பிரபாகரனிடம் தோல்வி அடைந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தேவகி, 59-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சேகரை 1064 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மறு தேர்தல்: யாருக்கு லாபம் ? யாருக்கு நஷ்டம்?

சென்னை, பிப். 21: சென்னை மாநகராட்சியில் காலியாக இருந்த 100 இடங்களில் 67 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகிவிட்டன.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் கைப்பற்றிய அதே அளவிலேயே 92 இடங்களுடன் தனி பெரும்பான்மையான கட்சியாக திமுக விளங்குகிறது.

மறு தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸின் பலம் 38-லிருந்து 35 ஆகக் குறைந்துள்ளது. 17 இடங்களாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் தற்போது 16-ஆக குறைந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் நடைபெற்ற வரலாறு காணாத வன்முறைச் சம்பவங்களை அடுத்து 61, 71-வது வார்டுகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கட்சி தலைமையின் உத்தரவுப்படி தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதையடுத்து 155 வார்டுகளிலும் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் எதிரொலியாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் 98 கவுன்சிலர்களும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதையடுத்து ஏற்கெனவே காலியாக உள்ள இடங்கள் மற்றும் இந்த 98 இடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் மறு தேர்தலுக்கு மக்களிடம் அதிக ஆர்வம் காணப்படவில்லை. இதனால் 10 மண்டலங்களிலும் சேர்த்து 30 சதவீத அளவுக்கே வாக்குபதிவு நடைபெற்றது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக 58 இடங்களை ராஜிநாமா செய்த திமுக இந்த தேர்தலில் 56 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஏற்கெனவே காலியாக இருந்த 2 இடங்களை வென்றதன் மூலம் இந்த இழப்பை அக் கட்சி ஈடு செய்துள்ளது.

25 இடங்களை ராஜிநாமா செய்த காங்கிரஸ் இந்த தேர்தலில் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

13 இடங்களில் ராஜிநாமா செய்த பாட்டாளி மக்கள் கட்சி இத் தேர்தலில் 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கணக்கை தொடங்கிய தேமுதிக: ஓராண்டு முன்னர் தொடங்கப்பட்ட விஜயகாந்தின் தேமுதிக, இத் தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை மாநகராட்சி மன்றத்தில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.

கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக இத் தேர்தலில் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே இருந்த மாநகராட்சி மன்றத்தில் இனி தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் குரல் முக்கிய விவாதங்களில் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.

பொதுவாக பார்த்தால் இந்த மறு தேர்தல் சிலருக்கு லாபம் என்றால் சிலருக்கு இது சிறிய அளவிலான நஷ்டங்களை அளித்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

Kalki weekly Editorial (04.03.2007)

தேர்தல் கமிஷனின் தனி அதிகாரம்!

தே.மு.தி.க. ஐந்து வார்டுகளில் வென்றது மட்டுமே எதிர்பாராதது. சென்னை மாநகராட்சி கவுன்சில் தேர்தலின் இதர முடிவுகள் எவ்வித ஆச்சர்யமும் அளிக்கவில்லை.

கடந்த முறை தேர்தல் நடந்தபோது நிகழ்ந்த வன்முறை பலரை அச்சுறுத்தியிருக்கிறது. அ.தி.மு.க. போட்டியிடாததால்,
எப்படியிருந்தாலும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்பது முன்கூட்டியே தெரிந்த முடிவாகிவிட்டது. இவ்விரு காரணங்களினால் மட்டுமின்றி, சமீப காலத்து அரசியல் போக்கினால் விளைந்த சலிப்பு காரணமாகவும் வாக்குப்பதிவு மிகக் குறைவாகவே
நிகழ்ந்திருக்கிறது.

மறு தேர்தல் உணர்த்தும் முக்கியமான பாடம் இதுதான் :

இப்போதுள்ள உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை என்பது சட்டமன்றத் தேர்தலின் மறுவடிவம் போன்றதாகவே இருக்கிறது. கட்சித் தலைமைதான் எங்கே, யார் போட்டியிடலாம் என்று நிர்ணயிக்கிறது. பணபலம், ‘ஆள்’ பலம், ஜாதி போன்றவையும் வேட்பாளரை
நிர்ணயிக்கின்றன. தாங்கள் வோட்டளிக்கப் போகும் நபர் தங்களுள் ஒருவராக – தங்கள் பிரதிநிதியாக – விளங்கி நல்லது செய்வார் என்கிற நம்பிக்கையே வாக்காளர்களுக்கு ஏற்பட வாய்ப்பின்றிப் போய்விட்டது.

கட்சி அடிப்படையில் வோட்டுப் போட வேண்டியிருக்கிறபோது, சட்டமன்றத்தில் அதிகார பலம் கொண்ட கட்சியையே உள்ளாட்சி அமைப்பிலும் தேர்ந்தெடுத்தால்தான் உள்ளாட்சி மன்றத்துக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் நிதி ஒதுக்கீடும் சிரமமின்றிக் கிடைக்கும் என்கிற அவல நிலை வேறு! ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சியின் ஆதிக்கத்தில், உள்ளாட்சித் தேர்தல்களின்போது வன்முறையும் கள்ளவாக்குப் பதிவும்கூட நடைபெறுகின்றன. மறுதேர்தல்
அறிவித்தால், அந்த மறுதேர்தலிலும் சிறிய அளவிலேனும் சில வார்டுகளில் கள்ள வோட்டு, வன்முறை, கலாட்டா!

கட்சி அரசியலில் ஆதிக்கம் மட்டும் இல்லாவிட்டால் உள்ளாட்சித் தேர்தல்களில் இத்தனை வன்முறையும் அராஜகமும் நுழையவே
வாய்ப்பிராது என்பதுடன் சமுதாய நோக்கும் பரந்த சிந்தனையும் உள்ளவர்கள் தேர்தலில் வேட்பாளராக நிற்க முன்வருவார்கள்.
சுயநலமின்றியும் கட்சி சார்பின்றியும் பொதுப்பணிகள் நடக்கும். ஆனால் இன்றோ, உள்ளாட்சி தேர்தல் அரசியல் மயமானதுடன் மாநில தேர்தல் கமிஷனும் நடுநிலையும் சுதந்திரமும் இழந்து ஆளுங்கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்கு உட்பட்டுப் போயிருக்கிறது.

‘‘மாநிலத் தேர்தல் அதிகாரி தமது பொறுப்பை ஒழுங்காக
நிறைவேற்றவில்லை. சென்னை மாநகராட்சித் தேர்தலின்போது புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, எதுவுமே நடவாதது போல் பாசாங்கு செய்திருக்கிறார்’’ என்று பொது நல வழக்கில் தீர்ப்பு கூறிய மூன்றாவது நீதிபதி பி.கே. மிச்ரா விளாசித் தள்ளியிருக்கிறார். இவ்வழக்கின் முதல் தீர்ப்பில் இரு நீதிபதிகள் கருத்து வேறுபட்டபோதிலும் நீதிபதி கலீ·புல்லாவும் தேர்தல்
கமிஷனின் அசிரத்தையைச் சுட்டிக் காட்டியுள்ளார். தேர்தல் கமிஷனர் சந்திரசேகர் பதவி விலக வேண்டும் என்று கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்ட் கட்சி குரலெழுப்பியிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலையில், ராஜினாமா செய்ய மட்டும் மறுத்துவிட்டார் தேர்தல் கமிஷனர்! தனது தனி அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்று மாநில தேர்தல் கமிஷன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய உத்தேசித்துள்ளது. இது பிரச்னையை திசை திருப்பும் முயற்சியே!

தேர்தல்கள் நியாயமாகவும் முறைப்படியும் நடக்கவேண்டும் என்பதற்காக தேர்தல் கமிஷனுக்குத் தனி அதிகாரம் தரப்பட்டதுள்ளது உண்மைதான். அந்த உரிமை பதவிக்குத்தானே தவிர, அந்தப் பதவியை நாணயமற்ற ஒருவரோ திறமையற்ற ஒருவரோ வகிக்கிறபோது, அந்த நபருக்கும் தனி அதிகாரம் வழங்கப்பட்டதாகக் கருதவே முடியாது!

Posted in ADMK, BJP, Chennai, Congress, Corporation, DMDK, DMK, Elections, Electorate, Kalki, Madras, MDMK, Municpality, PMK, Polls, Ramadoss, Re-poll, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth, Violence, Vote, voter | 2 Comments »

‘Captain’ Vijaykanth’s DMDK to compete in Mumbai Civic Polls

Posted by Snapjudge மேல் ஜனவரி 25, 2007

மும்பை மாநகராட்சித் தேர்தலில் தேமுதிக போட்டி

சென்னை, ஜன. 25: மும்பை மாநகராட்சித் தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

179-வது வார்டு தாராவில் என். நவிகிருஷ்ணன், 168-வது வார்டு சயான்கோலிவாடாவில் லட்சுமி ராஜாமணி ஆகியோர் தேமுதிக வேட்பாளர்களாக முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Posted in Bombay, Civic body, Civic Polls, DMDK, Local Elections, maharashtra, Mumbai, Tamil, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | 1 Comment »

Income Tax Raids on Vijayganth, Jeppiyaar, AIADMK functionaries

Posted by Snapjudge மேல் ஜனவரி 24, 2007

விஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் வீடுகளில் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத சொத்துகள் விவரம்: வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜன. 25:நடிகர் விஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் ஆகியோரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சோதனைகள் முடியவில்லை எனவும் 4 இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது எனவும் அவர்கள் கூறினர்.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

இச் சோதனையின்போது நடிகருக்குச் சொந்தமாக ரூ. 2.50 கோடி சொத்தும் அவரது மனைவியின் பேரில் ரூ. 2.35 கோடி மதிப்பிலான சொத்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 5 நிதி ஆண்டுகளாக அவர்கள் சொத்து வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி கட்ட ரூ. 45 கோடி முதலீடு: இச்சோதனையின்போது நடிகரின் உறவினருக்குச் சொந்தமான கல்வி அறக்கட்டளை மூலம் அவரது உறவினர் ரூ. 45 கோடி வரை முதலீடு செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் ரூ. 9 கோடி தொகை செலவிடப்பட்டதற்கான கணக்கும் இல்லாதது தெரிய வந்துள்ளது. மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கு நிதி உதவி அளித்துள்ள வங்கிகள் பற்றிய விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. தவிர, அறக்கட்டளை மூலம் ரூ. 1.72 கோடி வரை தனியாருக்கு அளிக்கப்பட்டுள்ள கடன் விவரத்தையும் வருமான வரித் துறையினர் திரட்டி வருகின்றனர்.

கல்வி அறக்கட்டளையிலிருந்து காசோலை மூலம் ரூ. 11 கோடி: அறக்கட்டளையிலிருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி 23 வரையிலான காலத்தில் கல்வியாளர் தனது பெயரில் காசோலை அளித்து ரூ. 11 கோடி வரை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நாள் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பணம் எடுக்கப்பட்டதற்கான காரணத்தை கல்வியாளரால் விளக்க முடியவில்லை. இது தவிர, இந்த அறக்கட்டளையானது வரி விலக்கு பெறுவதற்கான தகுதியை பெற்றிருக்கவில்லை.

கணக்கில் காட்டாத பணம் ரூ. 8 கோடி: மற்றொரு கல்வி அறக்கட்டளையில் சோதனை நடத்தியபோது, மாணவர்களிடமிருந்து நன்கொடையாக ரூ.8 கோடி பெற்றதையும் அது கணக்கில் காட்டப்படாததையும் அதன் அறக்கட்டளை தலைவர் ஒப்புக் கொண்டார்.

4 இடங்களில் சோதனை தொடர்கிறது: வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை முடிவடையவில்லை என்றும் மேலும் 4 இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஓ. பன்னீர் செல்வம், முரளி வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை: எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் மற்றும் நடிகர் முரளி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்படவில்லை என்றும் இதுகுறித்து வெளியான தகவல் தவறு என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயகாந்த், ஜேப்பியார், கனகராஜ் வங்கிக் கணக்குகள் முடக்கம்: 4 இடங்களில் சோதனை தொடர்கிறது

சென்னை, ஜன. 25: நடிகர் விஜயகாந்த், கல்வி நிறுவனங்களின் தலைவர்களான ஜேப்பியார் மற்றும் கனகராஜ் ஆகிய மூன்று பேரின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் முடக்கியுள்ளனர். அவர்களது வங்கி லாக்கர்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் 14 இடங்களிலும் கோவை, புதுச்சேரி, கடலூர், மதுரை ஆகிய ஊர்களில் 17 இடங்களிலும் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

நடிகர் விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர் வீடுகள், சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜேப்பியார் மற்றும் ஜெயா பொறியியல் கல்லூரிகளின் தலைவர் கனகராஜ் ஆகியோர் வீடு, அலுவலகம் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். இச் சோதனையை 400 வருமான வரித்துறையினரும் 50 அதிகாரிகளும் மேற்கொண்டனர்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கல்வி நிறுவனங்களை நடத்தும் ஜேப்பியார், கனகராஜ் ஆகியோரது பெயரைக் குறிப்பிடாமல், இச் சோதனை குறித்து வருமான வரித்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கல்வியாளர் மற்றும் அவரது உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 54.22 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல நடிகரின் (விஜயகாந்த்) சகோதரியின் வீட்டிலிருந்து ரூ. 12 லட்சம் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விஜயகாந்த் வங்கி கணக்குகள் முடக்கப்படும்: வருமான வரித்துறை அதிகாரி தகவல்

சென்னை, ஜன. 24-

விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர்களுக்கு ரூ. 60 கோடிக்கு சொத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன சொத்துக்கள் உள்ளது என்பது பற்றி விசாரித்து வருகிறோம்.

இந்த சொத்துக்களுக்கு அவர் வரவு-செலவு கணக்கு சரிவர பராமரிக்காதது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்கள் மூலம் எவ்வளவு வருமானம் வருகிறது என்ற விவரமும் இல்லை. வருமானத்தை வைத்து தானே வரி போட முடியும்.

விஜயகாந்தின் வீட்டில் உள்ள நகைகள் மதிப்பு எவ்வளவு என்று கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது. அவரது கட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையில் வரவு-செலவு கணக்கே பராமரிக்கப்படாதது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது போல அவரது என்ஜினீயரிங் கல்லூரியிலும் வரவு-செலவு சரிவர பராமரிக்கப்படவில்லை. ரூ. 10 கோடிக்கு மேல் வரவு-செலவு விவரங்களை அவரால் சொல்ல முடியவில்லை.

மதுரையில் உள்ள விஜயகாந்தின் அக்காள் விஜயலட்சுமி வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 காரட் வைரம் உள்பட 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கைப் பற்றப்பட்டுள்ளன.

விஜயகாந்தின் ஒன்றுவிட்ட சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் இருந்து 2 கிலோ 300 கிராம் மதிப்புள்ள நகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரனின் சொத்துக்கள் மொத்தம் ரூ. 33 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ளவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் அறக்கட்டளை சொத்து மட்டும் ரூ. 45 கோடி ஆகும். அவரின் பாங்கி கணக்குகள் வங்கி லாக்கர்கள் எங்கெங்கு உள்ளன என்று விசாரித்து வருகிறோம். அவைகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நேற்று நடந்த சோதனைக்கு விஜயகாந்த் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். சோதனைக்கு சென்ற அதிகாரிகளின் கார் கண்ணாடியை வெளியே இருந்த சிலர் உடைத்து விட்டனர். அதுபற்றி போலீசில் புகார் கொடுத்து இருக்கிறோம்.

விஜயகாந்தின் முழு சொத்து விவரம், மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் முழு பட்டியல் நாளை வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. கூட்டணிக்கு என்னை இழுக்கவே இந்த சோதனை: விஜயகாந்த் சொல்கிறார்

சென்னை, ஜன. 24-

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயகாந்தின் வீடு, திருமணமண்டபம், மதுரையில் உள்ள அவருக்குச் சொந்தமான ரைஸ்மில் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் நேற்று ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் அவருடைய உறவினர்களின் வீடுகள், அலு வலகங்கள், கட்சி நிர்வாகிகள் வீட்டிலும் சோதனை நடந்தது.

வருமானவரிச் சோதனை குறித்து நடிகர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வருமான வரிச் சோதனை அரசியல் உள் நோக்கம் கொண்டது. என் வீட்டில் இருந்து எந்த ஆவணங் களும் கைப்பற்றப்படவில்லை.

அரசியல் காரணங்களுக் காக இந்த சோதனை நடை பெறவில்லை என்று கூறியதற் காக ஆளும் கட்சியினரின் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தி உள்ளனர். எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாகள்.

முதல்-அமைச்சர் கருணாநிதி இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் முறையாக வருமான வரி செலுத்தி வருகிறேன்.

எங்கள் கட்சியை தி.மு.க. கூட்டணிக்கு இழுப்பதற்கே இந்த வருமான வரி சோதனை நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். எங்கள் கட்சி தனித்தே போட்டியிடும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

விஜயகாந்த் வீட்டில் வருமான வரி சோதனை: 12 இடங்களில் அதிரடி வேட்டை

சென்னை, ஜன. 23-

நடிகரும், தே.மு.தி.க. தலை வருமான விஜயகாந்த் வீடு சென்னை சாலி கிராமத்தில் உள்ளது. இங்கு அவரது
அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரி கள் விஜயகாந்த்தின் வீட் டிலும், அலுவலகத்திலும் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்தவர்களிடமும் விசா ரணை நடத்தினார்கள்.

இதே போல் சாலி கிராமத் தில் உள்ள விஜயகாந்தின் மைத்துனரும், பட அதிபரு மான சுதீஷ் வீட்டிலும்
அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து திடீர் சோதனை நடத்தினார்கள்.

100 அடி ரோட்டில் உள்ள சுதீசுக்கு சொந்தமான `லீ கிளப்’ என்ற கேளிக்கை விடுதியிலும் வருமான வரி சோதனை நடந்தது.

ஒவ்வொரு இடத்திலும் வருமான அதிகாரிகள் குழு குழுவாக சென்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள். அப்போது உள்ளே இருந்தவர்கள் வெளி யில் செல்ல அனுமதிக்கப் படவில்லை. சோதனை நடந்த போது வீடு அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு அரசியலில் குதித்து தே.மு.தி.க. என்ற கட்சி தொ டங்கினார். அவரது கட்சி சட்டசபை தேர்தலில் போட்டி யிட்டது. இதில் விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது கட்சி கணிச மான ஓட்டுக்களை பிரித்தது.

அதன் பிறகு நடந்த உள் ளாட்சி தேர்தலிலும் தே.மு. தி.க. போட்டியிட்டது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக விஜயகாந்த் உண்ணாவிரதம் இருந்தார்.

விஜயகாந்துக்கு சொந்த மான திருமண மண்டபம் கோயம்பேட்டில் உள்ளது. மேம் பாலம் கட்டுவதற்காக அவரது கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் விஜயகாந் தின் வீடு, அலுவலகம், அவரது மைத்துனர் வீடு, அலு வலகத்தில் வருமான
வரித்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள சில தனி யார் கல்லூரிகளிலும் இன்று வருமான வரி சோதனை நடந்தது. பழைய மகாபலிபுரம் ரோட்டில் ஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரி உள் ளது. அதே பகுதியில் அருகில் ஜேப்பியார் வீடு இருக்கிறது. அந்த வீடு மற்றும் கல்லூரியில் சோதனை நடந்தது.

திருநின்றவூரில் உள்ள ஜெயா என்ஜினீயரிங் கல்லூரி யிலும் வருமான வரித்துறை யினர் புகுந்து சோதனை நடத்தினார்கள்.

கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புரபஷனல் கொரியர் நிறு வனத்தின் கோவை ஏரியா நிர்வாகி கணேசன் என்பவரது வீடு-அலுவலகம் உள்ளது. அங்கும் வருமான வரி சோதனை நடந்தது.

இவர் தே.மு.தி.க. பிரமுகர் ஆவார். சென்னையில் இருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் இங்கு சோதனை மேற்கொண்டார்கள்.

தமிழ்நாடு முழுவதும் மொத் தம் 9 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

தொடர்ந்து சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. இதன் முடிவில்தான் எதுவும் சிக்கியதாப என்பது தெரிய வரும்.

Posted in ADMK, AIADMK, Allegations, Andal Azhagar College, Andal Azhagar Kalyana Mandapam, anti-tax, assembly polls, Chennai, Cinema, Coimbatore, DMDK, fraud, Ganesh, Ganesh Kumar, Income Tax, IT, Jaya Engineering College, Jeppiar Group of Educational Institutions, Jeppiyaar, Kanakraj, Leaders, Madras, Madurai, Medical University, Murali, O Paneerselvam, panruti ramachandran, political vendetta, Politics, self-financing college, Tamil Actors, Tamil Nadu, tax evasion, Udumalpet, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »

Cho S Ramasamy wants BJP, ADMK & Vijaykanth to form Alliance as Opposition

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

ரஜினிகாந்த் முன்னிலையில் பரபரப்பான பேச்சு; அ.தி.மு.க., பாரதீய ஜனதா, விஜயகாந்த் கூட்டணி: சோ வற்புறுத்தல்

சென்னை, ஜன. 16- சென்னையில் துக்ளக் பத் திரிகையின் 37ம் ஆண்டு விழா நடந்தது.

அத்வானி அவரது

  • மகள் பிரதிபா,
  • நடிகர் ரஜினிகாந்த்,
  • வெங்கையாநாயுடு,
  • நாகேஷ்,
  • மைத்ரேயன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் சோ பேசிய தாவது:-

தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்கள்தான் ஆகியுள்ளது. ஆட்சிக்கு வரும் முன்பே பலவாக் குறுதிகள் அளித்தனர். அவற்றை முழுமையாக செய்ய முடியாமல் பகுதி பகுதியாக செய்கிறார்கள்.

2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார் கருணாநிதி இப்போது உள்ளங்கை அளவேனும் தருவேன் என் கிறார்.

இலவச திட்டங்களால் பீகாரில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியவில்லை. அதே போல் இங்கும் திவால் வருமோ என்று தெரிய வில்லை.

சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்த முறைகேடு களை நீதிமன்றம் வன்மை யாக கண்டித்துள்ளது. 99வாக்குசாவடிகளுக்கு மறுவாக் குப்பதிவு நடத்த சொல்லி யுள்ளது. தேர்தலின்போது எதிர் கட்சிகள் சொன்ன குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளன.

முல்லைப்பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்தம் செய்யவில்லை. இதை நான் சொன்னால் இருவரும் சேர்ந்து அணையில் குதிப்போமா என்று அழைப்பார் ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்று வது பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. நளினிக்கு கருணை காட் டப்பட்டால் மகிழ்ச்சிதான் என்று கருணாநிதி கூறியுள்ளார். அந்த தண்ட னையை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என்று தைரியமாக கேட்ட ஒருவர் ஜெயலலிதாதான். அதுவும் வைகோ கூட்டணியில் இருக்கும் போது அவ்வாறு கேட்டு இருக்கிறார்.

தமிழக அரசுக்கு உடனடியாக எந்த ஆபத்தும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்த ஆட்சி போக வேண்டும் என்றும் நான் கூறவில்லை.

ஆனால் எதிர்காலத்தில் தி.மு.க. கூட்டணியில் தற்போ துள்ள கட்சிகள் என்ன முடிவு எடுக்கும் என்று சொல்ல முடியாது. காங்கிரசில் உள்ள த.மா.கா. பிரிவினர் அதி ருப்தியில் உள்ளனர். அது போல் பா.ம.க.வுக்கும் அதி ருப்தி உள்ளது. எனவே எதிர் காலத்தில் எதுவும் நடக் கலாம்.

எதிர் கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மாந கராட்சி தேர்தல் முறைகேடு அதோடு முடிந்து விட்டதாக கருதக்கூடாது பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும் பல தொகுதிகளில் அத்தகைய முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது.

எனவே தனக்குள்ள செல்வாக்கினால் தனித்து நின்று ஜெயிக்கலாம் என்று ஜெயலலிதா நினைக்க கூடாது. விஜயகாந்த் தனித்து நின்றால் டெபாசிட் போகும் அவர் மட்டும் ஜெயித்த மாதிரிதான் நிலைமை வரும் இதை இருகட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் மத்தியில் காங்கிரசுக்கு மாற்றாக பாரதீய ஜனதா வருவது தான் நல்லது. 3-வது அணி வர வாய்ப்பு இல்லை.

எனவே பாரதீய ஜனதா, ஜெயலலிதா, விஜயகாந்த் ஒரே அணியில் இருப்பது நல்லது.

இவ்வாறு சோ பேசினார்.

Posted in ADMK, Advani, AIADMK, Alliance, Bharathiya Janatha Party, BJP, Cho, Cho S Ramasamy, Cong (I), Congress, DMDK, GK Vaasan, Indira Congress, J Jayalalitha, J Jeyalalitha, Opposition, Politics, Thuglak, Thuglaq, Thuklak, Thuklaq, TMC, Vijaiganth, Vijaikanth, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »

Vijayganth’s Marriage Hall demolition to make way for Traffic Congestion – Rs 8.55 Crores compensation to be paid

Posted by Snapjudge மேல் திசெம்பர் 19, 2006

திருமண மண்டபம் இடிப்பு: விஜயகாந்த்துக்கு ரூ.8.55 கோடி நஷ்டஈடு திங்கட்கிழமை வழங்கப்படுகிறது

சென்னை, டிச. 16-

சென்னையில் போக்குவரத்து நெரிசலை சீரமைப்பதற்காக சர்வதேச தரத்துக்கு இணையாக மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கத்திப்பாரா சந்திப்பு, பாடி, விமான நிலையம் எதிரில் தற்போது பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த வரிசையில் கோயம்பேடு சந்திப்பிலும் மிக பிரமாண்டமான, நவீன அடுக்கு மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக கோயம்பேடு சந்திப்பு பகுதியில் உள்ள 165 பேரின் நிலம் மற்றும் கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தி உள்ளது.

165 பேரின் கட்டிடங்களில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபமும் ஒன்றாகும். இந்த திருமண மண்டபத்தின் ஒரு பகுதி, சாலை விரிவாக்கத்துக்கு தேவைப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை கூறியது. இதற்கு விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்தார்.

மண்டபத்தை இடிக்காமல் மேம்பாலம் கட்டலாம் என்று கூறிய அவர், அதற்காக மாற்றுத்திட்டம் ஒன்றை வரையறுத்து, அதை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி டி.ஆர்.பாலுவுக்கு அனுப்பினார். அந்த மாற்றுத் திட்டத்தை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அது சாத்தியப்படாது என்று கூறி நிராகரித்து விட்டனர்.

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் வருவாய் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து கோயம்பேடு பகுதியில் நிலத்தை கையகப்படுத்தவும், அதற்குரிய நஷ்ட ஈட்டை அளிக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர். பாலத்துக்காக நிலத்தை இழக்கும் 165 பேருக்கும் வருவாய் துறை நோட்டீசு அனுப்பி உள்ளது.

அதில், நிலத்தை கையகப்படுத்துவதற்காக தரப்படும் நஷ்டஈடு விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அவர் மனைவி பிரேமலதா பெயரில் இருப்பதால் அவருக்கு கடந்த 8-ந்தேதி வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்துவதற்கு நஷ்டஈடாக ரூ. 8.55 கோடி வழங்கப்படும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சீபுரத்தில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்து ரூ. 8.55 கோடி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு பிரேமலதாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ. 8.55 கோடி தொகை டி.டி. மூலம் வழங்கப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பிரேமலதா தரப்பில் இருந்து ஏதேனும் பதில் வந்ததா? என்று கேட்டதற்கு, “இதுவரை எந்த தகவலும் வரவில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலம் கையகப்படுத்துவதற்காக மொத்தம் ரூ. 23 கோடி இழப்பீடு வழங்க தேசிய நெடுஞ்சாலை துறை முன் வந்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் உள்ள 20 பேரும் தங்கள் இடத்தை கொடுக்க உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் வரும் திங்கட்கிழமை இழப்பீடு தொகை வழங்கப்படும். ஒரிஜினல் நிலப்பத்திரத்தை காட்டி இவர்கள் இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்கப்பட்டதும் கோயம்பேடு சந்திப்பை சுற்றி உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி விரைவில் தொடங்கும். அவை முழுமையாக அகற்றப்பட்டதும் பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்படும்.

Posted in acquisition, Andaala Azhagar, Congestion, Demolition, DMDK, flyover, Highways, Kathipaara, Koyambedu, Land, Maduravayal, Marriage Hall, NHD, Premalatha, RTO, Tamil, Traffic, Transportation, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »

Recent Tamil Movie Reviews

Posted by Snapjudge மேல் திசெம்பர் 10, 2006

இருவர் மட்டும்
காட்டில் இருகேரக்டர்களை உலவவிட்டு பின்னியுள்ள கதை…

சிறு வயதிலேயே காட்டில் வசிக்கும் அழகு அனாதை. மலை அடிவாரத்தில் நீர் வீழ்ச்சி அருகில் ஆங்கிலேயர்கள் கட்டிப்போட்ட பழைய மரவீட்டில் தனியாக குடியிருக்கிறான். பறவைகள், விலங்குகளிடம் பாசம் காட்டுகிறான். வெளியுலக அறிவு இல்லை.

திருமணத்திற்கு வற்புறுத்தும் குடும்பத்தினரை விட்டு பிரிந்து அதே காட்டின் வழியாக பஸ்சில் செல்லும் செல்வி டிரைவர், கண்டக்டரிடம் தகராறு செய்ய வற்புறுத்தி இறக்கி விடப்படுகிறாள். மிருகங்கள் சத்தத்தில் பயந்து ஓடும் அவள் அழகு வீட்டில் பதுங்க விறுவிறுப்பு…

அழகு, செல்வி இடையே மோதல், நட்பு, காதல் என நீண்டு திருமணத்துக்கு தயாராக திருப்பம்…

கல்யாணத்துக்கு அம்மா ஆசிர்வாதம் வாங்குவோம் என்று செல்வியை அழைத்து போய் மூடிக்கிடந்த அறையை திறக்க… செத்துப்போன அவன் தாய் பலகாலம் நாற்காலியில் அப்படியே பிணமாக சாய்ந்து கிடக்க மரண பயம். தப்பி ஓடுகிறாள் செல்வி. அவளை விரட்டி பிடித்து ஆவேசமாக தூக்கி வந்து பலவந்தமாக தாலி கட்டுகிறான், அழகு அறியாமையில் இருந்து மீண்டானா? செல்வி அவனோடு வாழ்ந்தாளா? என்பது கிளைமாக்ஸ்…

இரு பாத்திரங்கள் மட்டுமே கதையை நகர்த்துவது வித்தியாசம்… அழகுவாக வரும் அபய், பாத்திரத்துக்கு கச்சிதம். மரங்களில் ஏறி குருவிக்குஞ்சிக்கு பொறியை சவைத்து நாக்கில் வைத்து உணவூட்டுவது… தாயை இழந்த குஞ்சுகளை மீட்டு வந்து வீட்டில் தொட்டிலில் வைத்து தாலாட்டுவது பளிச்…

தாய் உயிருடன் இருப்பதாக அவள் பிணத்துடன் பேசும்போது திடுக்கிட வைக்கிறார். செல்வியாக வரும் சுனிதாவர்மா இளமைச்சாரல்… காடு, மலை, நீர் வீழ்ச்சி பின்னணியில் அரைகுறை ஆடையுடன் சூடேற்றுகிறார்.

அழகு தாய் பிணத்தை தன்னோடு வைத்து வாழ்வதை பார்த்து மிரண்டு ஓட்டம் பிடிப்பது மரண பயம்… குழிதோண்டி மண்ணில் புதைந்த அழகுவை மீட்க அழுது போராடுவது ஜோர்…

படத்துக்கு ஜீவனாக இருப்பது அருவியும், காடு, மலை இயற்கை காட்சிகளும் பி.கே.தாஸின் காமிரா அவற்றின் கொள்ளை அழகை மொத்தமாகஅள்ளியுள்ளது. அந்த பகுதியில் வாழவேண்டும் என்ற ஆவலை தூண்ட வைக்கிறது.

புத்திசாலித்தனமாக பேசவும் ஊருக்குள் நடமாடிவிட்டு வரவும் செய்யும் அழகுக்கு மரணம் பற்றிய அறிவு இல்லை என்பது சறுக்கல் இருவரை மட்டுமே வைத்து படம் பண்ணியது துணிச்சல் என்றாலும் சிலஇடங்களில் அலுப்பு…

விஜய் ஆண்டனி இசையில் வைரமுத்துவின் பாடல் சுகராகம்… இயற்கையின் ஜில்லிப்போடு கவித்துவமாக படத்தை செதுக்கியுள்ளார். இயக்குனர் துவாரகிராகவன்.

நெஞ்சில்
சுற்றுப்பயணத்தில் உருவாகும் காதல் கதை…

தனியார் நிறுவனம் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களை தேர்வு செய்து லண்டனுக்கு இலவச சுற்றுலா அனுப்புகிறது.

பயணக்குழுவில் உள்ள நவ்தீப்-அபர்ணாவுக்கு காதல். அவர்களை பிரிக்க அதே குழுவில் சென்ற கிருஷ்ணமூர்த்தியும் கல்யாணியும் சதி செய்கின்றனர்.ஆனந்த் மோசமானவன் என்று பிரியாவை நம்ப வைத்து அவனை வெறுக்கச் செய்கின்றனர்.

மோதலை சாதகமாக்கி பிரியாவை அடைய துடிக்கிறான் லண்டனில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி. காதலர்கள் சேர்ந்தார்களா? என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.

காதலர்களாக வரும் நவ்தீப், அபர்ணா துருதுரு ஜோடி. இருவரும் மோதிக் கொள்ளும் ஆரம்ப காட்சிகள் கல கல…

போதையில் ரஞ்சிதா நவ்தீப் நெருக்கம் திருப்பம். காதல் தோல்விக்கு பின் கதையில் வேகம்… மணிசுடன் சுற்றி நவ்தீப்பை அபர்ணா வெறுப்பேற்றுவது நறுக்…

அபர்ணா நடிப்பில் மெருகு… காதல், கோபம், தோல்வி, வெறுப்பு என ஒவ்வொன்றிலும் வித்தியாசம். காதலனை இன்னொரு பெண்ணுடன் பார்த்து நொறுங்குவது நச்…

ஆண்களை வெறுப்பவராக ரஞ்சிதாவும் பெண்களை வெறுப்பவராக தலைவாசல் விஜயும் கச்சிதம்… காதலர்களை பிரிக்கும் சூழ்ச்சி திக்.. இருவரும் மனம் மாறி காதலர்களாவது கலகலப்பு…

வடிவேலு-மயில்சாமி சிரிக்க வைக்கின்றனர். இங்கிலீஸ்காரன் வடிவேலு, கேரக்டர் நச்… கலகலப்பும் விறுவிறுப்புமாக கதை சொல்லியுள்ளார் இயக்குனர் செல்வா. இமான் இசையில் பாடல்கள் தாளரகம்.

ரெண்டு
மாதவனின் இருவேட ஆக்ஷன், காமெடி படம்.

பட்டிணத்துக்கு வேலை தேடி வரும் மாதவன் பொருட்காட்சியில் மேஜிக் ஷோ நடத்தும் மாமா கிரிகாலனிடம் அடைக்கலமாகிறார். எதிரில் நாகக்கன்னி ஷோ நடத்தும் வெள்ளி மீது காதல்.

மாதவன் உருவத்தில் இன்னொருவர் தொடர் கொலைகள் செய்ய போலீஸ் இவரை பிடிக்கிறது. அதிலிருந்து மீண்டாரா, கொலைகள் ஏன் நடக்கின்றன என்பதை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் சுந்தர்.சி.

பொருட்காட்சி அரங்கில் மாதவன், வடிவேலு பண்ணும் காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ரகம்.

மேஜிக் ஷோவுக்கு பணம் கொடுத்து ஆட்களை வர வைப்பது, சவாரி வந்த ஆட்டோ டிரைவரிடம் ஆர்.சி. புக்கை வாங்கி அடகு வைத்து பணம் வாங்குவது.. என மாதவன் காமெடி அவதாரம் எடுத்துள்ளார். பெண் மனதில் இடம் பிடிக்க வடிவேலுவுக்கு ஆலோசனை சொல்லி சிக்கலில் மாட்ட வைப்பது ரகளை.

வில்லன்களை பழிவாங்கும் கேரக்டரில் வேகம். திருமண மண்டபத்தில் விலிப்பு நோயால் ஒரு பெண்ணின் திருமணம் நிற்க அவளுக்கு தனது அண்ணனை மணமுடித்து வைப்பது ஜீவன். அனுஷ்கா காதல் கவிதை.

வில்லன்களை தீர்த்து கட்டுவது மிரட்டல். திருமண மண்டபத்தில் பலரை கொன்று சாய்ப்பது தூக்கலான வன்முறை. வில்லன் ரகசியம் தெரிந்தவர் மாதவன் தந்தை மட்டும்தான். அவரோடு மொத்த குடும்பத்தையும் கொல்வது ஒட்டவில்லை.

அனுஷ்கா அழகு பதுமையாய் ஜொலிக்கிறார். கவர்ச்சியில் தாராளம்.

வெள்ளியாக ரீமாசென் பளிச். மேஜிக் நிபுணர் கிரிகாலனாக வடிவேலு பண்ணும் காமெடி ஜோர்.. தப்பு தப்பாக மேஜிக் செய்து பார்வையாளர்களிடம் மாட்டி விழிப்பது.. ஒரு பெண்ணின் இதயத்தில் இடம் பிடிக்க வீர சாகசம் செய்ய முயன்று தோற்று தவிப்பது என கலகலப்பூட்டுகிறார்.

மணிவண்ணன், மயில்சாமி, சந்தானம், விச்சு, தாரிகா ஆகியோரும் உள்ளனர்.

முதல் பாதி கலகலப்பாகவும் மறுபாதி விறுவிறுப்பாகவும் செல்கிறது. இமாம் இசை பலம். ரசனையான ரெண்டு.

ஆவணி திங்கள்
கிராமத்தில் வசிக்கும் அனாதை இளைஞன் ராசப்பா. உதவாக்கறை நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறான். குடும்ப பாசத்துக்கு ஏங்குகிறான்.

திருமண ஆசை ஏற்படுகிறது. உள்ளூர் புரோக்கர் மூலம் பெண் பார்க்கிறான். புரோக்கர் அவனை ஏமாற்றி பணம் பறிக்கிறார். பெண் அமையவில்லை. ஏதேச்சையாக புரோக்கர் மகள் காயத்ரியை காணும் ராசப்பா அவள் மீது காதல் கொள்கிறான். காயத்ரியும் விரும்புகிறாள்.

சொந்த பந்தம் இல்லாத ராசப்பாவுக்கு பெண் கொடுக்க புரோக்கர் மனைவி மறுக்கிறாள். அதை சவாலாக ஏற்று பாறையில் வெடி வைத்து உடைக்கும் ஆபத்தான வேலையில் சேர்ந்து பணம் சம்பாதித்து வீடு வாசல் என்று வசதியாகிறான் ராசப்பா. அதன் பிறகு அவனுக்கு பெண் கொடுக்க புரோக்கர் குடும்பம் சம்மதிக்கிறது. திருமணத்துக்கும் நாள் குறிக்கிறார்கள்.

அப்போது ஜமீன்தார் பேத்தி தீபிகா மூலம் ராசப்பா வாழ்வில் விதி விளையாடுகிறது. தீபிகா விளையாட்டாக செய்யும் காரியத்தால் ராசப்பா ஒரு கையை இழக்கிறான். திருமணம் தடைபடுகிறது. மனம் உடையும் தீபிகா தன் திருமணத்தை தள்ளி வைத்து ராசப்பாவுக்கு பெண் தேடுகிறாள் பெண் அமையவில்லை. திருமணம் நடந்ததா? என்பது கிளைமாக்ஸ்.

ராசப்பாவாக வரும் ஸ்ரீகுமார் கிராமத்து இளைஞனாக கச்சிதம். ஒற்றைக் கையுடன் மனதை பிழிகிறார். காயத்ரியாக மதுஷா, தீபிகாவாக தேஜினி போட்டி போட்டு நடித்துள்ளனர். கிணற்றுக்குள் வெடி வைத்து விபத்து ஏற்படும் காட்சி தத்ரூபம்.

லிவிங்ஸ்டன், டெல்லிகுமார், காதல் சுகுமார், அஜய்ரத்னம் ஆகியோரும் உள்ளனர். ஆர்.சங்கர் இசையில் பாடல்கள் நீண்ட இடைவெளிக்குபின் இனிமை. வேதா செல்வத்தின் ஒளிப்பதிவு கிராமத்தை கண்முன் நிறுத்துகிறது. ஹரிகிருஷ்ணா வின் இயக்கத்தில் ஆவணித் திங்கள் மனதை வருடுகிறது.

சிவப்பதிகாரம்
அரசியல்வாதிகளை மாணவன் பழிவாங்கும் கதை…

கல்லூரியில் படிக்கும் ஒழுக்கமான முதல் மாணவன் சத்தியமூர்த்தி. இடைதேர்தல் பற்றி சகமாணவர்களுடன் கருத்துகணிப்பு வெளியிட பலிக்கிறது.

தோற்றுபோன சண்முகராஜன் தனது தோல்விக்கு கருத்து கணிப்புதான் காரணம் என்று அடியாட்களுடன் கல்லூரியை முற்றுகையிட்டு கலாட்டா செய்கிறார்.

மந்திரி உதவியோடு கல்லூரிக்குள் கேஸ் சிலிண்டர்களை வெடிக்க செய்து பல மாணவர்களை சாகடிக்கிறார்.

சத்தியமூர்த்தியின் வாட்சுமேன் தந்தையும் தீயில் பலியாகிறார்.

கண் முன்னே நடக்கும் இந்த கொடூரத்தை பார்த்து பழிவாங்க துடிக்கும் சத்தியமூர்த்தியை பேராசிரியர் ரகுவரன் தடுக்கிறார்.

பொது தேர்தலில் வேட்பாளர்களாக அவர்கள் நிறுத்தப்பட்டதும் கொலைகார அரசியல்வாதிகளை ஒவ்வொருவராக அழிப்பது கிளைமாக்ஸ்…

சத்யமூர்த்தியாக வரும் விஷால் கச்சிதம். நல்ல மாணவராக மனதில் நிற்கிறார். நாட்டுப்புற பாடல் ஆராய்ச்சியாளராக கிராமத்தை வலம் வருவது வேகத்தடை. பொது தேர்தல் அறிவிப்பு வெளியானதும் சூடுபிடிக்கிறது.

வேட்பாளர்களை சாகடிப்பது திக்… திக்… வேட்பாளர்கள் மிரண்டு மொத்தமாக வேட்புமனுவை வாபஸ் பெறுவது… தேர்தலை தேர்தல் கமிஷன் தள்ளி வைப்பது வித்தியாசம்.

விஷாலை காதலிப்பவராக வரும் மம்தா அழகு, கவர்ச்சியில் ஜொலிக்கிறார். அமைதியான பேராசிரியராக வந்து போகிறார் ரகுவரன். கலெக்டர் வேலை பார்த்தவர் என்ற முடிச்சு அவிழும்போது திக்…

கஞ்சா கருப்பு கலகலப்பூட்டுகிறார். அழுத்தம் இல்லாத முதல் பாதி கதை இவரால்தான் நகர்கிறது.

மணிவண்ணன், சண்முக ராஜன், உபேந்திரா லிமாயே, ஸ்ரீகாந்த் ஆகியோரும் உள்ளனர்.

இடைவேளை வரை வயலும் வயக்காடுமாக மெதுவாக நகரும் கதைக்கு பிற்பகுதியில் வேகம் கொடுத்துள்ளார் இயக்குனர் கரு.பழனியப்பன். வித்யாசாகர் இசையில் பாடல் கள் கிராமிய மணம் வீசுகிறது. கோபிநாத் கேமராவில் பசுமை.

வாத்தியார்
ஆசிரியர் தாதாவாகும் கதை…

அர்ஜ×னுக்கு இன்னொரு `ஜென்டில்மேன்’ பாணி படம். அநீதிகளை எதிர்க்கும் ஆசிரியர் `கெட்டப்`பில் வெளுத்துள்ளார்.

பரீட்சை பேப்பரில் அதிக மதிப்பெண் போட மிரட்டும் ரவுடி மாணவன். அர்ஜ×ன் மாணவியை மானபங்கம் செய்யும் சக வாத்தியார் போன்றோரை நொறுக்க வேலை பறிபோகிறது.

பள்ளிக் கட்டிட கூரை எரிந்து 48 மாணவர்கள் பலியாக ஆவேசமாகும் அர்ஜ×ன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை துவைத்து மக்கள் முன் நிறுத்துகிறார். அதில் ஒரு அதிகாரி செத்துப்போக கொலைப்பழி சுமந்து சிறைக்கு போகிறார். ரிலீசாகும் போது தீயவர்களை அழிக்குமாறு பலர் படையெடுக்க தாதா கெட்டப்புக்கு மாறுகிறார்.

ஊனமுற்றோருக்காவும், ஆதரவற்ற முதியோர்களுக்காவும் அன்னை இல்லம் திறந்து காப்பாற்றுகிறார். ரவுடிகளை ஒழித்து கட்டுகிறார். அவரை ஆதாரத்தோடு பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது.

முதல்- மந்திரி பதவியை குறுக்கு வழியில் பிடிக்க முயலும் நாச்சியார் வழிபாட்டு தலங்களில் குண்டு வைக்க அர்ஜ×ன் உதவியை நாட அவர் மறுக்க விறுவிறுப்பான அடிதடி கிளைமாக்ஸ்.

வாத்தியார் கெட்டப்பில் அர்ஜ×ன் கச்சிதம். பள்ளியில் சாராயம் காய்ச்சும் ரவுடி வீராவை வீழ்த்தும் அறிமுகம் தூள்..

பள்ளி கூரை எரிந்து குழந்தைகள் பலியாகக் காரணமான கல்வி அதிகாரிகள், என்ஜினீயர்களை தோல் உரிப்பது நச்…

கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்காத தோல் கம்பெனி முதலாளிக்கு எதிராக தொழிலாளர்களை தூண்டுவது நறுக்…

மகளை பழித்த ரவுடியை தந்தையை விட்டு கொல்ல வைப்பது திடுக்…. சவக்குழிக்குள் இருந்து அர்ஜ×ன் மீள்வது ஹாலிவுட் மிரட்டல்.

அர்ஜ×ன் காதலியாக வரும் மல்லிகா கபூர் அன்னை இல்லத்தில் புகுந்து கல கலப்பூட்டுகிறார். அன்னையாக வரும் சுஜாதா ஜீவன்.

வில்லத்தன போலீஸ் அதிகாரி சாயலில் வந்து இறுதியில் நல்ல அதிகாரி என்ற உண்மையை வெளிப்படுத்தும் பிரகாஷ்ராஜ் பாத்திரம் திருப்பம்….

வடிவேலு காமெடி ஆரவாரம். மல்லிகா கபூர் தன்னை காதலிப்பதாக ஏங்குவது…. பஸ்சில் கண்டக்டரிடம் மீதி கேட்டு ரவுடிகளிடம் சிக்கி அடிவாங்குவது ரகளை….

பிரதீப் ராவன், மணிவண்ணன், தலைவாசல் விஜய் கேரக்டர்கள் கச்சிதம்.

தெளிவான கதை… அழுத்தமான சீன்கள்… வித்தியாசமான கதை களத்தில் படத்தை விறு விறுப்பாக்கியுள்ளார். இயக்குனர் வெங்கடேஷ்… கும்பகோணம் பள்ளி விபத்து, ரேஷன் கடை தில்லு முல்லு… அரசியல் சாக்கடை, நோய் பரப்பும் ஆலைகள் என சமூக அவலங்களை பொறுக்கி பிரமிப்பான கதையாக்கியுள்ள வெங்கடேஷ் முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்துள்ளார்.

இமான் இசை, கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு பலம். `என்னடி முனியம்மா ரீ மிக்ஸ் பாடல் தாளம்.

சபாஷ் வாத்தியார்!

கிழக்கு கடற்கரை சாலை
சுனாமியில் சொந்தங்களை இழந்து அனாதையான இளைஞனின் கதை.

பெட்ரோல் பங்கில் வேலை செய்பவன் கணேஷ். தனது சக கூட்டாளிகளுடன் ஊர் சுற்றி திரிகிறான். அப்போது வக்கீல் வி.டி.ஆரின் தங்கை பிரியாவை சந்திக்க நேரிடுகிறது. அந்த பெண்ணை காதலிக்க வை பார்க்கலாம் என்று நண்பர்கள் சபதம் போடுகிறார்கள். இதை ஏற்கும் கணேஷ் அவள் காதலை பெற கடும் போராட்டம் நடத்துகிறான்.

நம்மால் ஒரு உயிர் போககூடாது என்ற பரிதாபத்தில் தினமும் பத்து நிமிடம் கணேசை சந்தித்து பேசுகிறாள் பிரியா. அப்போது அவளுக்கு காதல் பற்றி கொள்கிறது. இருவர் திருமணத்துக்கும் பிரியா அண்ணன் சம்மதிக்கிறான். பிறகு அவனே பிரியாவை கடத்தி நாடகமாடுகிறான்.

இந்த உண்மையை கணேஷ் வெளி கொண்டு வருகிறான். இறுதியில் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்து காதல் ஜோடிகளை கடலுக்குள் தள்ளி விடுகிறான் பிரியா அண்ணன். இருவரும் உயிர் பிழைத்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

கணேசனாக ஸ்ரீகாந்த் கச்சிதம். அப்பா அம்மாவை நினைத்து கடல் அலைகளுடன் உரையாடுவது உருக்கம். கடலில் தள்ளிவிட்ட பிறகும் காதலியை விடாமல் துரத்துவது வேகம். காதலியின் கனவுகளை நிறைவேற்ற செய்யும் சில்மிஷம் ரசிப்பு.

பிரியாவாக பாவனா. அழகு பதுமையாக கண்களை குளிர வைக்கிறார். கைதேர்ந்த நடிப்பை பாவனாவிடம் பார்க்க முடிகிறது. கிரிமினல் வக்கீல் பாத்திரத்தில் சுரேஷ் வில்லத்தனம் பளிச்.

முத்துக்காளை, கஞ்சா கருப்பு நகைச்சுவை கூட்டணி களை கட்டுகிறது. பால்ஜே இசையில் பாடல்கள் இனிமை.

முரட்டு காதலை சொல்லியவிதம் அருமை. காதல் காட்சிகளை ரசிக்க வைத்துள்ளார், இயக்குனர் ஸ்டான்லி. கதையில் அழுத்தம் குறைவு பன்னீர்செல்வத்தின் கேமரா கடலோர அழகை அள்ளியுள்ளது.

வல்லவன்
நிஜக் காதல் அழகு பார்க்காது என்பதை பதிவு செய்யும் படம்.

மனசுக்கு பிடித்த பெண்ணை காதலித்து மணக்க லட்சியம் வைத்துள்ள வள்ளுவன் கண்ணில் அழகான சுவப்னா பட காதல்… நீண்ட பல்லுடன் முகத்தை விதார மாக்கி சுவப்னாவிடம் காதல் யாசி என்றான் அவளே அவனை அழகற்றவன் என்று வெறுக்கிறாள். பிறகு அவளுக்காக சிறு சிறு உதவிகள் செய்து மனதை தொடுகிறான். காதலிக்க சம்மதிக்கிறாள். அதன் பிறகு கோர பல்லை அகற்றி உண்மை உருவத்தை வெளிப்படுத்துகிறான்.

காதலர்கள் சந்தோஷத்தில் திளைக்கும்போது வள்ளுவன் தன்னை விட வயது குறைந்தவன் என்றும் தனது கல்லூரி மாணவன் என்றும் சுவப்னாவுக்கு தெரிய அதிர்ச்சியாகிறாள்.

அதன் பிறகு கதையில் வேகம்…. வள்ளுவனை உதறி விட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையை மணக்கத் தயாராகிறாள்.

இருவரும் இணைந்தார்களா? என்பது பிற்பகுதி விறுவிறுப்பு…

வள்ளுவனாக சிம்பு, துடுக்கத்தனம், காதல், அழுகை, ஆத்திரம் அத்தனையிலும் முத்திரை….

போடு ஆட்டம் போடு என குழந்தைகளுடன் நடனத் தோடு அறிமுகமாகும் ஆரம்பம் நச்… நீண்ட பல் சோடா புட்டி கண்ணாடியுடன் ஜோக்கர் உருவத்துக்கு மாறி காதலிக்காக ரவுடிகளிடம் அடிவாங்குவது… சுவப்னா விரும்பிய செருப்பை திருடி போலீசிடம் மாட்டி சித்திரவதைப்படுவது… மனதை பிழிபவை…

காதலியுடன் நடத்தும் முதலிரவு கிளு கிளு…. அந்த நேரம் இருவரும் பேசிக் கொள்ளும் வசனம் “ஏ” ரகம்…

காதலி வெறுத்து ஒதுக்கிய பின் வரும் சிம்பு, ரீமாசென் `பிளாஸ்பேக்’ பள்ளிக் காதல் சரவெடி…. சைக்கோவான ரீமாசென்னிடம் செருப்படி வாங்குவது… வாந்தியை அள்ளுவது… மனதை தொடுபவை.

சுவப்னா பாத்திரத்தில் நயன்தாரா ஜொலிக்கிறார். மாணவனை காதலித்து விட்ட தவறை உணர்ந்து அவன் மீது ஆவேசப்பட்டு கதறுவது சபாஷ். `பல்லன்’ தோற்றத்தை பார்த்த உடனே சிம்புவிடம் ஒட்டுவது மனதில் ஒட்டவில்லை.

காதல் சைக்கோ’ பாத்திரத்தில் ரீமாசென் நிஜமாய் கச்சிதம். காதலன் வீட்டு போன் துண்டிக்கப்பட்ட நிலையிலும் விடிய விடிய காத்திருந்து போன் நம்பரை சுழற்றுவது திக்…. திக்… ஷுவை கழற்றி காதலன் மேல் வீசுவது… காலில் விழுந்து கெஞ்ச வைப்பது… திகில் காதல்..

சிம்புவின் தோழியாக சந்தியா வந்து போகிறார். எஸ்.வி.சேகர், சந்தானம், சுகுமார், கொட்டாச்சி கலகலப்பு…

கதையில் `லாஜிக்’ நெருடல்கள் இருந்தாலும் காட்சிகளின் பிரமாண்டம் மறக்கச் செய்கிறது.

யுவன் சங்கர்ராஜா இசையில் `லூசுப் பெண்ணே’, `வல்லவா’ யம்மாடி ஆத்தாடி பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. ப்ரியன் ஒளிப்பதிவு அபாரம்..

காதல் “வல்லவன்”

வட்டாரம்
முழு நீள ஆக்ஷன் படம்…

லாஜிக் பார்க்காமல் இருந்தால் பெரிய துப்பாக்கிகளின் மேஜிக்.

சின்ன வயதில் தன்னையும் தன் தந்தையையும் அவமானப்படுத்தி தன் தந்தையின் தற்கொலைக்கு காரணமான அமைந்த குருபாதத்தை பழி வாங்கி அவர் இருக்கும் இடத்தில்தான் இருக்க வேண்டும் எனும் எண்ணம் ஹீரோ பர்மாவிற்கு!

வளர்ந்து பெரியவன் ஆனதும் பெரிய மனிதர், பெரிய பிஸினஸ்மேன் போர்வையில் வலம் வரும் ஆயுத வியாபாரி தாதா குருபாதத்திடம் வேலைக்கு சேருகிறான்.

குருபாதத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி ஒரு கட்டத்தில் அவரது கூட்டாளிகள், அடியாட்கள் என்று சகலரையும் போட்டுத் தள்ளிக்கொண்டே மற்றொரு பக்கம் குருபாதத்தின் எதிராளி என்.கே.சாமி எனும் கருப்புசாமிக்கும் ஆயுத சப்ளை செய்து அந்த கேங்கையும் குருபாதத்திற்கு எதிராக தூண்டிவிடுகிறான் பர்மா.

குருபாதத்தின் ஆட்களை தீர்த்து கட்டி அந்த கொலைகளை கருப்பசாமி குரூப் செய்ததாக கதை கட்டி இரண்டு குரூப்பையும் மோத விடுகிறான்.

எதிர்பாராமல் குருபாதத்தின் மகளுக்கும், கருப்பசாமியின் மகனுக்கும் திருமண பேச்சு வார்த்தை எழுந்து இரு குரூப்பும் சமாதானமாகிறது. இதை விரும்பாத பர்மா குருபாதத்தின் மூத்த மகனோடு சென்று கருப்பசாமியின் மகனை தீர்த்து கட்டி விட்டு குருபாதத்தின் மூத்த மகன், உன் பிள்ளையை தீர்த்து கட்டி விட்டான் என்று கருப்பசாமிக்கு தகவல் அனுப்புகிறான். அதில் கடுப்பாகும் கருப்பசாமி குருபாதத்தின் மூத்த மகனை போட்டுத்தள்ளுகிறான்.

இப்படி பழிக்கு பழி வாங்கியபடி துப்பாக்கி சப்தம் கேட்க செல்லும் கதையில் பர்மா, குருபாதத்தை ஒழித்துக்கட்டிவிட்டு அவரது இடத்திற்கு வந்தனா? இல்லையா? என்பது கிளைமாக்ஸ்.

ஹீரோ பர்மாவாக ஆர்யா, குருபாதமாக நெப்போலியன் இருவரும் தங்கள் பாத்திரங்களில் கச்சிதம்.

துப்பாக்கிகளும் கையுமாக ஆர்யா, ஆக்ஷனில் ஜேம்ஸ்பாண்டு ரேன்ஜ×க்கு அசத்தல். நெப்போலியனும் கலக்கல். அரிவாள், கம்பு என்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இதுவரை திரிந்து நெப்போலியனுக்கு இந்தப் படம் மூலம் வித்தியாச `கெட்அப்’.

கதாநாயகியாக கீரத், அவரது தோழியாக அதிசயா என்று இரண்டு புதுமுகங்கள் இருவருமே வலுவாக காலூன்றும் தன்மை. கீரத்தின் நடை, உடை பாவனை அதிசயாவின் வித்தியாசமான குருல் மைனஸ். தண்டபாணி, ரமேஷ்கண்ணா, வையாபுரி, ராம்ஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

வட்டாரம் எனும் பெயரில் பெரிய தொழில் அதிபர்கள் போர்வையில் இருக்கும் தாதாக்களின் `வட்டாரங்களை டச் பண்ணியிருக்கும் சரண் காட்சியமைப்புகளில் சபாஷ். கதை விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை.

பரத்வாஜின் இசையில் வைர முத்துவின் பாடல்களையும் ஏ.வெங்கடேசனின் ஒளிப்பதிவையும், சரணின் இயக்கத்தையும் ரசிக்கலாம்.

தலைமகன்
சரத்குமாரின் நூறாவது படம்…

பத்திரிகை, அரசியல், தண்ணீர் பிரச்சினை மூன்றிலும் சவாரி செய்கிறது கதை.

மினரல் வாட்டர் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு எதிர்கால சமுதாயத்தை தண்ணீர் தட்டுப்பாடு உலுக்கும் என்ற கருவை ஆக்ஷன் கலந்து பதிய செய்துள்ளனர்.

வெளிநாட்டு நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கி நெடுங்குளம் கிராமத்தில் தண்ணீர் பேக்டரி, திறக்க அனுமதி கொடுக்கிறார் மந்திரி சண்முக வடிவேலு. இத்திட்டத்தால் வறட்சி உருவாகி மக்கள் பாதிக்கப்படுவர் என்று சரத்குமார் எதிர்க்கிறார்.

பத்திரிகையிலும் கட்டுகரை எழுதுகிறார். சரத் மீது எரிச்சல் ஆகும் மந்திரி போலீசை ஏவி பத்திரிகை ஆபீசில் வெடி குண்டுகளை பதுக்கச் செய்கிறார். சரத்குமாருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பொய் வழக்கை பதிவாக்கி கைது செய்ய வைக்கிறார்.

கோர்ட்டில் ஆஜர்படுத்த சரத்குமாரை அழைத்து போகும் போலீஸ் நடுவழியில் அவரை கொல்லத் துணிகிறது. சரத்குமார் தப்பினாரா? தண்ணீர் கம்பெனி தடுக்கப்பட்டதா? என்பதை விறு விறுப்பாக சொல்லியுள்ளனர்…

பத்திரிகை நிருபர் பாத்திரத்தில் சரத்குமார் கச்சிதம். மந்திரி அக்கிரமத்துக்கு துணை போகும் போலீஸ் அதிகாரி, ரவுடிகள் என மூன்று தரப்பினரிடமும் மோதுவதில் வேகம்…

பத்திரிகை எடிட்டர் விஜயகுமாரை சித்ரவதை செய்தும் அவர் மகளை கற்பழித்து கொல்வது கொடூரம்… அதுவரை மெதுவாக நகரும் கதை பின் சூடு பிடிக்கிறது.

சரத்குமாரை ஏற்றி வந்த வேனை தண்டவாளத்தில் நிறுத்தி ரெயிலை மோதச் செய்வது பயங்கரம்….

சரத்குமார் உடல் முழுவதும் ரத்த காயம் ஆகி கேரள மூலிகை சிகிச்சை எடுத்துக் கொண்டு பழைய விஷயங்களை நினைப்பது போல் கதையை பிளாக் பேக்கில் நகர்த்தியது. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டெக்னிக்…

சிகிச்சைக்குப் பின் நீண்டமுடி, உருக்குலைந்த முகம், தெத்தும் பேச்சு, நொண்டும் நடை என வித்தியாசமான தோற்றத்தில் நெடுங்குளம் கிராமத்தில் ஆஜராவது அபாரம்.

மந்திரி, போலீஸ் அதிகாரியை வீழ்த்த சரத்குமார் தொழிற்சாலைக்குள் கம்ப்ïட்டரை இயக்கி விïகம் அமைப்பது… மயானத்தில் கல்லறையை பெயர்த்து ஊழல் பைல்களை தோண்டி எடுப்பது… திக்… திக்… மந்திரியுடன் மோதும் கிளைமாக்ஸ் சண்டை அனல்…

சரத்குமார் காதலியாக நயன்தாரா. குறைவாக வந்தாலும் நிறைவு. தீன் தேனா பாடலில் திறமை காட்டுகிறார்…

போலீஸ் டி.ஜி.பி.யாக வரும் சீமா பிஸ்வாஸ் வில்லன்களுடன் சேர்ந்து மிரட்டுகிறார். மந்திரி கேரக்டரில் வரும் முகேஷ் தீவாரிக்கு சத்தத்தில் மட்டும் வேகம்… கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பின் போது சில இடங்களில் பின்னணி இசை கோர்க்காதது வேகத்தடை…

படத்தின் பிற்பகுதியை விறுவிறுப்பாக இயக்கி உள்ளார் சரத்குமார்.

வடிவேலு ஒளியும் வில்லன்களை காட்டி கொடுத்து மாட்டும் காமெடி ரகளை…

விஜயகுமார், சங்கிலிமுருகன், அலெக்ஸ், டெல்லி கணேஷ் ஆகியோரும் உள்ளனர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், குஷ்பு ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுகிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவா, பால் இசையில் `நூறு நூறு’ பேனாகாரன் பாடல் முணு முணுக்க வைக்கிறது. டைரக்டர் சேரன் திரைக்கதையமைத்துள்ளார்.

வரலாறு
அஜீத்குமார் நடிப்பை பறைசாற்றும் படம்… மூன்று பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

விபத்தில் கால் இழந்ததாக சொல்லி சக்கர நாற்காலியில் வலம் வரும் கோடீஸ்வர தொழில் அதிபர் சிவனுக்கு மகன் விஷ்ணு மீது பிரியம். மனைவியும் அதே விபத்தில் பலியாகி விட்டதாக மகனிடம் சொல்லி வளர்க்கிறார்.

விஷ்ணுவுக்கு கல்லூரி மாணவி திவ்யா மீது காதல். அவன் ஆசைப்பட்ட பெண்ணை மணமுடித்து வைக்க பேசி நிச்சயம் செய்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்ததும் திருப்பம். பூனைக் கண்களோடு வெறி பிடித்தவனாக விஷ்ணு தோற்றத்தில் ஜீவா என்பவன் ஆஜர்ஆக படம் படுவேகம்.

விஷ்ணுவாக திவ்யா வீட்டுக்குள் போதையில் நுழைந்து ரகளை, அடி-தடி செய்து திருமணத்தை நிறுத்துகிறான். திவ்யா தோழியை கற்பழிக்க முயன்று அவள் வெறுப்பை விஷ்ணு மீது திருப்புகிறான். சிவனை கத்தியுடன் பாய்ந்து கொல்லத் துணிகிறான்… மொத்த பழியும் விஷ்ணு மீது விழ அவனை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கின்றனர்.

விஷ்ணு தோற்றத்தில் வந்த ஜீவா யார்? சிவனை பழி வாங்க துடிப்பது ஏன் என்பது பிளாஸ்பேக்கில் ஜெட் வேகத்தில் நகர்கிறது.

வயதான சிவன், அப்பாவி விஷ்ணு, பழிவாங்கும் வெறியில் அலையும் ஜீவா என முன்று கேரக்டரில் வெளுத்துள்ளார் அஜீத்.

செய்யாத தப்புக்கு தந்தையிடம் அடி வாங்குவது… பைத்தியக்காரன் என முத்திரைகுத்தி மனநல ஆஸ்பத்திரியில் மின்சார அதிர்ச்சி சிகிச்சைக்குள் மாட்டி அலறுவது… அனுதாபத்தை நிறைய அள்ளகிறார் விஷ்ணு அஜீத். தந்தை சிவனாக வரும் கேரக்டரில் உச்சத்தை தொட்டுள்ளார்.

மகன் தன்னை கொலை செய்ய வந்ததை பார்த்து அதிர்வது… அவனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுப்பதை சகிக்காமல் பதறுவது அபாரம்.

ஜீவா கேரக்டர் தன்னை கொல்ல பாய்வதை பார்த்து ஆவேசமாக சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கால்களை லாவகமாக சுழற்றி சண்டைக்கு தயாராவது படுபயங்கர திருப்பம்… இருபத்தைந்து வருடமாக கால் ஊனமாக சிவன் நடித்தது ஏன்? அதிலிருந்து பிளாஸ்பேக் விரிகிறது.

இளம் பரத நாட்டிய கலைஞராக சிவன் வரும் காட்சிகள் நச்…நச்…

இடையை குலுக்கி தலையை ஆட்டி, கைகளை பரதக்கலை முத்திரையில் அசைத்து பெண்மைத்தனமாய் நடக்கையில் நடிப்புலகை குலுக்குகிறார்.

மணமேடைக்கு மாப்பிள்ளையாக அன்ன நடையில் வரும் லாவகம்… மணப்பெண் கனிகா ஆண்மையில்லாதவன் என்று தன்னை பழித்ததும் கூட்டத்தினர் மத்தியில் அவமானப்பட்டு கூனி குறுகும் தன்மை… தாய் அதிர்ச்சியில் இறந்ததும் ஆவேசமாக வீட்டுக்குள் போய் பெண்மைக்கான நளினம் ஆண்மை வேகம் கலந்த பாத்திரமாகவே மாறி கற்பழிக்கும் ஆவேசம் என அத்தனையும் அவார்டு பெற்றுத்தருபவை.

ஜீவா பாத்திரத்தில் கொலை வெறியனாக பளிச்.. தந்தை பாத்திரத்தோடு மோதும் கிளைமாக்ஸ் சண்டை அனல்.. பைத்தியகாரத் தாயிடம் காட்டும் பாசம் ஜீவன்.

அஜீத்தின் மூன்று கேரக்டர்களை கச்சிதமாக செதுக்கி விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியுள்ளார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

திவ்யாவாக வரும் அசின் விஷ்ணுவிடம் விலைமாது என ஏமாற்றி பரிதாபப்பட வைப்பது பளிச்…

கனிகா கொஞ்சம் ஆவேசம். கொஞ்சம் அமைதி. ராஜேஷ், சந்தானபாரதி, சுமன்ஷெட்டி, ராஜலட்சுமி, ரமேஷ்கன்னா, பாண்டு, விஜயன், பொன்னம்பலம், மன்சூர் அலிகான், சுஜாதா ஆகியோரும் உள்ளனர்.

இருபத்தைந்து வருடமாக நொண்டியாக நடிக்க அழுத்தமான காரணம் சொன்னாலும் அது சாத்தியமா என்பது போன்ற சில லாஜிக்- தொய்வுகள் இருந்தாலும் அஜீத்தின் வலுவான கேரக்டர்கள் அவற்றை மறக்கடிக்கச்செய்கின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு பலம்.

அஜீத் “வரலாறு” படைத்துள்ளார்…


புதுமையான கதை களம்.

`ஈ’ என்கிற பெயரில், தனது முழுப்பெயர் ஈஸ்வர் என்பதுக் கூட தெரியாமல் ஒட்டுமொத்த திருட்டு தனமும் நிறைந்த குப்பத்து ராஜாவாக சுற்றித் திரிகிறான் ஹீரோ.

காசுக்காக எதையும் செய்யும் `ஈ’க்கு கையாளாக டோனி. சின்ன அளவில் பிக்பாக்கெட், செயின் பறிப்பு வழக்குகளுக்காக உள்ளே போய் வரும் `ஈ’க்கு பெரிய அளவில் கடத்தல், கத்திக்குத்து நடத்தி ஏரியா தாதா ஆக வேண்டும் என்பது ஆசை.

அதற்கான வாய்ப்பு அமையும்போது மும்பையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து ஸ்டார் ஹோட்டல் பார்களில் டான்ஸ் ஆடிப் பிழைக்கும் ஜோதி குறுக்கிடுகிறாள். `ஈ’ மீது காதல் கொள்கிறாள். `ஈ’ யை திருத்த முயற்சிக்கிறாள்.

அந்த ஏரியாவிலேயே பிரபலமான மருத்துவராக இருக்கும் டாக்டர் ராமகிருஷ்ணனின் கையாளாக இருக்கிறான் `ஈ’. அவர் என்ன செய்கிறார் என்பதே தெரியாமல் அவர் சொல்வதை செய்து வருகிறான். ராமகிருஷ்ணன் சட்டத்திற்கு புறப்பாக செய்யும் மருந்து பரிசோதனைக்கு எதிரியாகி அவரை தீர்த்துகட்ட சபதம் பூண்டிருக்கும் நெல்லைமணியை ஒருகட்டத்தில் கடத்தி டாக்டரிடம் பல லட்சங்களை சம்பாதிக்க திட்டம் போடுகிறான் `ஈ’.

திட்டமிட்டபடியே நெல்லை மணியை கடத்தினானா. ஜோதியும் `ஈ’யும் விரும்பியபடி திருமணம் செய்து கொண்டார்களா? டாக்டர் ராமகிருஷ்ணன் சமூக விரோதி என்பதை மக்கள் புரிந்து கொண்டார்களா என பல முடிச்சுகளுக்கு விடை சொல்லும் எதிர்பாராத கிளைமாக்ஸ். வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் படமாக்கியுள்ளார் இயக்குனர் ஜனநாதன்.

`ஈ’ என்கிற ஈஸ்வர் பாத்திரத்தில் ஜீவா வாழ்ந்திருக்கிறார். கறைபடிந்த `பற்கள்’, குளிக்காத முகம், எண்ணையே பார்க்காத பரட்டை தலை என்று ஒரு சேரிப்பையனாக பிரமாதம். மார்வாடிக்கடையில் டூப்ளிகேட் செயினை வைத்துபணம் கேட்பது, புரோக்கர் சிலர் ஜீவாவின் காதலி ஜோதியை விபச்சாரத்திற்கு கூட்டி வரச்சொன்னதும் கூசாமல் போய் அவளை விபச்சாரத்திற்கு அழைப்பது இது மாதிரி பல காட்சிகளில் ஜீவாவின் நடிப்பில் குப்பத்து படிக்காதவர்கள் குறும்பு பழக்க வழக்கங்கள் பிளிச்.

`ஈ’யின் காதலி ஜோதியாகவும், `பார் டான்ஸராகவும் நயன்தாரா பட்டையை கிளப்புகிறார். `ஈ’ யை எடுத்த எடுப்பிலேயே சிக்கலில் மாட்டிவிடும் நயன்தாரா, அந்த காரணத்திற்காகவே அவன் மீது காதல் கொள்வதும், காதலன் தன் பேச்சை மீறி விட்டான் என்று `ஈ’யை பிரிந்து செல்வதும் நெருடல்.

டாக்டர் ராமகிருஷ்ணனாக ஆஷிஸ்வித்யார்த்தியின் வில்லத்தனம் கொடூரம், தனக்கு நெருக்கமான அடியாளாக இருக்கும் `ஈ’ யின் பாட்டியையே தன் மருந்து பரிசோதனைகள் மூலம் பலி கொள்வது படுபயங்கரம். நெல்லை மணியாக வரும் பசுபதி பிரமாதம்.

`ஈ’யின் நண்பராக வரும் கருணாஸ் நடிப்பு உருக்கமாக உள்ளது. அஜய்ரத்னம், அசினா, ஆரியா, சேரன்ராஜ், மாதவி, வானி என்று இன்னும் பலரும் நடித்திருக்கின்றனர். என்.கே. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ஸ்ரீகாந்த்தேவா இசை படத்திற்கு பெரிய பக்க பலம். மிரட்டலான படம் `ஈ’.

தர்மபுரி
விஜயகாந்த் `இமேஜை’ உயர்த்த அவரைச் சுற்றிப் பின்னப்பட்ட அரசியல் நெடி படம்.

மண்பாண்ட தொழில் செய்யும் ஒரு கிராமம். படத்தின் களம். அந்த ஊரையும் மண்ணையும் நேசிப்பவராக விஜயகுமார். ஊர் மக்கள் மண் எடுத்து தொழில் செய்ய தனக்கு சொந்தமான இரு நூறு ஏக்கர் நிலத்தை எழுதி கொடுக்கிறார். ஊர் கோவிலுக்கு மண் குதிரைகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக அவர் மீது பழி விழ குடும்பத்தோடு ஊரை விட்டு வெளியேறி ராமேஸ்வரத்தில் குடியÚறுகிறார்.

ஊருக்கு அவர் இலவசமாக கொடுத்த நிலத்தை சிவந்தி கருப்பு, பெருச்சாளி கருப்பு என்ற அண்ணன்- தம்பி தாதாக்கள் பறித்துக் கொள்ள ஊரால் தவிக்கின்றனர்.

ராமேஸ்வரத்துக்கு போய் மெய்யப்பன் மகன் சிவராமிடம் நிலத்தை மீட்டுத்தர வேண்டுகின்றனர். சிவராம் கிராமத்துக்கு வந்து ரவுடிகளை வீழ்த்தி நிலத்தை பிடுங்கி ஊராருக்கு கொடுப்பது பின் பகுதி கதை…

மக்களுக்கு நன்மை செய்யும் சிவராம் பாத்திரத்தில் விஜயகாந்த் கச்சிதம். சிறு வயது போட்டோவை கம்ப்ïட்டரில் கொடுத்து அவரை அறிமுகப்படுத்தும் இடம் அமர்க்களம். திருமண வீட்டில் தனது நாற்காலிகளுக்கு வாடகையாக தரும் பணத்தை திருப்பி கொடுப்பது, ரவுடிகள் ஆக்கிரமித்து மதுக்கடையாக்கிய பள்ளியை மீண்டும் திறப்பது, சூதாட்ட விடுதிÖக்கிய பிரசவ ஆஸ்பத்திரியை மீண்டும் திறப்பது என வாக்காளர்களை வசியப்படுத்தும் காட்சிகள் நிறைய….

இவன் தமிழன், தமிழ் நாட்லேதான் இருப்பான். ஏ போலீசு இப்ப இவர் முன்ன நிக்கிறீங்க சீக்கிரம் பின்னால் வரப்போறீங்க. இவர் பின்னால் இந்த காலத்துல இவ்வளவு கூட்டம் கூடுது என்று விஜயகாந்தை தலைவராக சித்தரிக்கும் வசனங்கள். `இவர் கோட்டையிலே கொடு பறக்குமோ வந்துட்டாரு வந்துட்டாரு வாத்தியாரு என்பன போன்ற பாராட்டு பாடல்களும் நிறைய… உன்கிட்ட இருப்பது கூலிப்படை என்கிட்ட இருப்பது மக்கள் படை. கள்ள ஓட்டு, குறுக்கு வழியில் அரசியல் நடத்துறே என்று ரவுடி எம்.எல்.ஏ.வை பார்த்து விஜயகாந்த் கர்ஜிப்பது ஆவேசம்.

வேலைக்காரனை தன் உருவில் மாற்றி அவனுக்கு வேலைக்காரன் வேடத்தில் விஜயகாந்த் கிராமத்தில் நுழையும் உத்தி பளிச்.

விஜயகாந்த் வேலைக்காரனாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் காமெடி ரசனை. மெய்யப்பன் மகன் நான்தான் என்று கிராமத்தில் ஆஜராகி ரவுடிகளிடம் மாட்டி தவிப்பது, விஜயகாந்த் முறைப்பெண்ணை விரும்பி நிச்சயதார்த்தத்தில் தட்டு மாற்றுவது என கல கலப்பூட்டுகிறார்.

மணிவண்ணன், பாபி, ராஜ்கபூர், ஜெயபிரகாஷ் ரெட்டி மூவரும் வில்லத்தனத்தில் மிரட்டல். லட்சுமிராய் அழகாய் ஜொலிக்கிறார். நடனம் பளிச்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் படல்கள் துள்ளல் ரகம். சரவணன் ஒளிப்பதிவு மண்மேடு கிராமத்தை கண்ணில் பதிக்கிறது.

கட்சிகளில் விறுவிறுப்பு காட்டியுள்ளார் இயக்குனர் பேரரசு. கதையில் அழுத்தம் குறைவு.

விஜயகுமார், சுமித்ரா, ராஜேஷ், பீலிசிவம், மனோ பாலா ஆகியோரும் உள்ளனர்.

விஜயகாந்த் புகழ் பாடும் தர்மபுரி.

துள்ளுற வயசு
இளசுகளின் காதல் கதை…

பள்ளியில் ஒன்றாய் படிப்பவர்கள் ராகவ், தீபிகா. நட்பாய் பழகும் அவர்கள் மனதில் காதல்…

இருவருக்கும் காதலை வெளிப்படுத்த தயக்கம். பள்ளி முடியும் நாளில் ஆட்டோ கிராப் எழுத நோட்டை மாற்றும்போது ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் கடிதம் எழுதி வைக்கின்றனர்.

கடிதம் தீபிகா அண்ணன் கைக்கு போகிறது. ராகவின் காதல் கடிதத்தை படித்து அவனுக்கு அதிர்ச்சி.

தீபிகாவுக்கு மயக்க ஊசி போட்டு செத்து விட்டதாக ராகவை நம்ப வைத்து பிரிக்கிறான்.

காதலியை இழந்த தூக்கத்தில் ராகவ் பட்டினத்தில் படிக்க வர திருப்பம்.

அதே ஊரில் மருத்துவக்கல்லூரி மாணவியாக தீபிகா…

காதலை பிரிக்க அண்ணன் செய்த சூழ்ச்சி இருவருக்கும் புரிகிறது. ராகவை தீர்த்துக் கட்ட தீபிகா அண்ணன் ரவுடிகளை ஏவுகிறான். தீபிகாவையும் வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறான். இருவரும் சேர்ந்தார்களா? என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.

பள்ளி மாணவனாக அமைதியாக வரும் ராகவ் பிற்பகுதியில் ஜொலிக்கிறார். காதலி செத்து விட்டதாக அழுது புலம்புவது உருக்கம். ரவுடிகளிடம் அடிபட்டு ரத்த சகதியாவது அனுதாபம். காதலியை பார்க்க விடாமல் தடுப்பவர்களுடன் கிளைமாக்ஸ் சண்டை வேகம்…

தீபிகா குருத்தோலை மாதிரி வருகிறார். `மிடி’யில் கைப்பந்து ஆடுவது இளமை நச்…

தீபிகா அண்ணனாக வரும் பிரணவா மிரட்டல்… தங்கையை மயக்கமடைய வைத்து செத்து விட்டதாக ஒப்பாரி வைத்து நடிப்பது, தங்கைக்கு உளவு சொன்ன வேலைக்காரியை தீர்த்து கட்டுவது வில்லத்தனத்தில் கச்சிதம்… ஷர்மிலி, ஆசிரியையாக வந்து கிறங்கடிக்கிறார்.

`டீன் ஏஜ்’களின் இளமைப் படையல் பாதி… காதல் வலி மீதி என தெவிட்டாமல் கொடுத்துள்ளார் இயக்குனர் கோபால்… இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் தாளம்.

இளமை துள்ளல்…

Posted in Aashish Vithiyaarthy, Aavani Thingal, Ajeeth, Ajith, Anushka, Aparna, Arjun, Arya, Ashish Vithyarthi, Asin, Bharadhwaj, Bhardvaaj, Bhardwaj, Bhavna, Bhawana, By2, Captain, Clips, Comedy, Dharmapuri, Director, Dwaragi Ragavan, Dwaraki Raghavan, E, ECR, Imaan, Irandu, Iruvar Mattum, Jananathan, Jeeva, Jenanathan, Kanika, Karthk Raja, Karu Palaniappan, Karu Pazhaniyappan, Kizhakku Kadarkarai Saalai, Kollywood, KS Ravikumar, KSR, Maadavan, Madhavan, Manivannan, Mayilsaamy, Mayilsami, Navdeep, Nayanthara, Nenjil, Nepolean, Pasupathy, Raghuvaran, Reema Sen, Rendu, Reviews, Sandhiya, Sandhya, Santhanam, Saran, Sarathkumar, Selva, Silambarasan, Simbu, Sivappathigaram, Sivappathikaram, Srikanth, Sundar C, Tamil Cinema, Tamil Movies, Thala, Thalai Makan, Thalaimagan, Thullara Vayasu, Vaathiyaar, Vaathiyar, Vadivelu, Vallavan, Varalaaru, Vattaaram, Vijay Antony, Vijayakanth, Vijayganth, Vimarsanam, Vishal, YSR, Yuvan Shankar Raja | Leave a Comment »

DMDK >> MDMK, CPI(M) + CPI & BJP

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

உள்ளாட்சி தேர்தலிலும் விஜயகாந்த் கட்சிக்கு புதிய செல்வாக்கு: ம.தி.மு.க., கம்ï. கட்சிகளை விட கூடுதல் ஓட்டுகள்

சென்னை, அக். 23-

விஜயகாந்த் தொடங்கியுள்ள தே.மு.தி.க. கட்சி சட்டசபை தேர்தலில் முதன் முதலாக அடியெடுத்து வைத்தது. விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் எம்.எல்.ஏ. வாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

போட்டியிட்ட மற்ற தொகுதிகளில் விஜயகாந்த் கட்சி வெற்றிபெறவில்லை என்றாலும் அனைத்து தொகுதிகளிலும் இந்த கட்சி வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளைப் பெற்று முக்கிய இடத்தைப் பிடித்தனர். இது போல மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலிலும் தே.மு.தி.க. வுக்கு 3-வது இடம் கிடைத்தது.

முதன் முறையாக உள்ளாட்சி தேர்தலை சந்தித்துள்ள இந்த கட்சி அதிரடியாக 607 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றி தனது புதிய செல்வாக்கை நிரூபித்துள்ளது.

தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட 16 பேர் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆகி இருக்கிறார்கள். நகராட்சி கவுன்சிலர் பதவி 71 பேருக்கும், மூன்றாம் நிலை நகராட்சி பதவி 27 பேருக்கும், பேரூராட்சி கவுன்சிலர் பதவி 234 பேருக்கும் கிடைத்துள்ளது. இதுவரை 244 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவியும் 15 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவியும் இந்த கட்சிக்கு கிடைத்திருக்கிறது.

பல தேர்தல்களை சந்தித்துள்ள

  • ம.தி.மு.க. 527 இடங்களிலும்,
  • மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு 349 இடங்களிலும்,
  • பா.ஜனதா கட்சி 228 இடங்களிலும்,
  • இந்திய கம்ïனிஸ்டு கட்சி 196 இடங்களிலும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால் தே.மு.தி.க. 607 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பெரிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பை கேள்விக்குறி ஆக்கிய விஜயகாந்த் கட்சி உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., கம்ïனிஸ்டு, பாரதீய ஜனதா கட்சிகளின் வெற்றியை தட்டிப் பறித்துள்ளது.

இந்த கட்சியின் புதிய செல்வாக்கை எடுத்துக் காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் ëகருத்து தெரிவிக்கின்றனர்.

Posted in BJP, Civic Polls, CPI, CPI(M), DMDK, local body elections, MDMK, Tamil Nadu, Vijayakanth, Vijayganth | 6 Comments »

Desiya Murpokku Dravida Kazhagam’s Impact on Elections & Tamil Nadu

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 19, 2006

உள்ளாட்சி தேர்தல் புதிய சக்தியாக வலுப்பெறும் விஜயகாந்த் கட்சி- அ.தி.மு.க. ஓட்டுகளை பிரித்தது

சென்னை, அக். 19-

“ஊழலை ஒழிப்பேன், மக்களுக்கு தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன்” என்ற வாக்குறுதியுடன் அரசியலில் கடந்த ஆண்டு விஜயகாந்த் காலடி எடுத்து வைத்தார். தனது எண்ணத்தை அடித்தட்டு மக்களிடம் எதிரொலிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அவர் ஊர், ஊராக சென்று பேசினார். அப்போதே அவரது அணுகுமுறை மக்களுக்கு பிடித்துப்போய் விட்டது.

இதையடுத்து கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் அவர் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. அந்த தேர்தலில் 234 தொகுதிகளில் 232 வேட்பாளர்களை விஜயகாந்த் நிறுத்தினார். இதில் விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்றார்.

223 தொகுதிகளில் தே.மு.தி.க. வேட்பாளர்கள் “டெபாசிட்” இழந்தனர். எனினும் தே.மு.தி.க.வுக்கு தமிழகம் முழுவதும் 27 லட்சத்து 64 ஆயிரத்து 223 வாக்குகள் கிடைத்தது. பதிவான மொத்த வாக்குகளில் இது 8.38 சதவீதம் ஆகும்.

மிக குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் மனதில் இடம்பிடித்த தே.மு.தி.க. தன் வளர்ச்சி காரணமாக, இயல்பாகவே பெரிய கட்சிகளின் வெற்றி தோல்விக்கு வழி வகுத்தது. சுமார் 50 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி வாய்ப்பை இழக்க தே.மு.தி.க. காரணமாக இருந்தது. இது தமிழக அரசியலில் புதிய மாற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதாக உள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

தே.மு.தி.க.வின் வலுவை நிரூபிக்கும் அடுத்த வாய்ப்பாக சமீபத்தில் நடந்த மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் அமைந்தது. பொதுத்தேர்தலில் 12038 ஓட்டுக்களைப் பெற்ற தே.மு.தி.க. இடைத்தேர்தலில் 17394 ஓட்டுகள் பெற்று 3-வதுஇடத்தைப்பெற்றது. அதாவது 5 மாத இடைவெளியில் தே.மு.தி.க.வுக்கு கூடுதலாக 5300 ஓட்டுகள் கிடைத்தது.

இது தே.மு.தி.க. மக்களிடம் வளர்ந்துவரும் கட்சி என்பதை நிரூபித்தது அது மட்டுமின்றி அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் உள்ள ஓட்டு வித்தியாசம் 2500தான். இதன் மூலம் அ.தி.மு.க. அனுதாபிகளின் ஓட்டுகளில் கணிசமானவற்றை தே.மு.தி.க. கைப்பற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

இதையடுத்து 3-வது முறையாக தன் வளர்ச்சி ஆற்றலை தற்போது உள்ளாட்சித் தேர்தல் மூலம் தே.மு.தி.க. நிரூபித்துள்ளது. தனிப்பட்ட முறையில் எந்த நகராட்சி, பேரூராட்சியையும் தே.மு.தி.க. தன் ஆதிக்கத்துக் குள் கொண்டுவர இயலா விட்டாலும் கூட கணிசமான அளவுக்கு கவுன்சிலர்களையும், வார்டு உறுப்பினர்களையும் அந்த கட்சி பெற்றுள்ளது.

இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் 3-வது சக்தி யாக தே.மு.தி.க. உருவெடுத்து இருப்பது மீண்டும் ஒருதடவை நிரூபிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, சட்டசபைத் தேர்தல் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் ஏராளமான இடங்களில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி- தோல்வியை தே.மு.தி.க. பிரித்த ஓட்டுகள் நிர்ணயிப்பதாக அமைந்துவிட்டன.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அ.தி.மு.க., தி.மு.க.வின் கணிசமான ஓட்டுக்களை காந்தம் போல விஜயகாந்தின் தே.மு.தி.க. மெல்ல மெல்ல ஓசையின்றி ஈர்த்து வருகிறது. கிராம பஞ்சாயத்துகளிலும் கணிசமான தே.மு.தி.க.வினர் வென்றுள்ளனர். இது உள்ளாட்சி அமைப்பில் தே.மு.தி.க. வலுவான நிலைக்கு வந்து இருப்பதை காட்டுகிறது.

அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு அடுத்த இடத்தில் உயர்ந்து இருக்கும் தே.மு.தி.க., உண்மையில் மக்களிடையே நம்பர் ஒன் இடத்தில் இருப்பதாக அந்த கட்சி அவைத்தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் சொல்கிறார். உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டுகளை பலமின்றி தனித்தனியாக கணக்கிட்டால், அ.தி.மு.க., தி.மு.க.வை விட தே.மு.தி.க.வுக்குத்தான் அதிக ஓட்டு உள்ளது என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார்.

தொடரும் தேர்தல் முடிவுகளால் தன் வலிமையை தே.மு.தி.க. வெளிப்படுத்தினாலும் கூட அந்த கட்சியால் தேர்தல் கமிஷனில் உரிய அங்கீகாரம் பெற இயலவில்லை. அரசியல் கட்சியாக பதிவு பெற 2 எம்.எல்.ஏ.க்கள் வேண்டும் என்ற விதி காரணமாக தே.மு.தி.க.வுக்கு இன்னும் அந்த அங்கீகாரம் மட்டும் கிடைக்கவில்லை.

Posted in ADMK, Desiya Murpokku Dravida Kazhagam, DMDK, DMK, Elections, panruti ramachandran, Tamil Nadu, Vijayaganth, Vijayakanth, Vijayganth, vijaykanth | Leave a Comment »

Dharmupuri & Vaathiyaar : Deepavali Tamil Cinema

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2006

சினிமா
தீபாவளி திரைப்படங்கள் ஒரு முன்னோட்டம்

இந்த வருட தீபாவளிப் பண்டிகைக்கு

  1. விஜயகாந்த்,
  2. சரத்குமார்,
  3. அர்ஜுன்,
  4. அஜித்,
  5. சிம்பு,
  6. ஜீவா,
  7. ஆர்யா

ஆகியோர் நடித்த ஏழு படங்கள் திரைக்கு வருகின்றன. கமல், ரஜினி, விக்ரம், விஜய், சூர்யா, த்ரிஷா ஆகியோ ரின் படங்கள் இந்த தீபாவளிக்கு வெளிவரவில்லை. தீபாவளிக்கு வெளிவரும் ஏழு படங்களில் மூன்றில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மற்ற படங்களில்

  1. அஸின்,
  2. ரீமாசென்,
  3. சந்தியா,
  4. லஷ்மிராய்,
  5. கனிகா,
  6. மல்லிகா கபூர்,
  7. கீரத், அதிசயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தீபாவளிப் படங்களைப் பற்றிய ஒரு சிறு முன்னோட்டம்…

தர்மபுரி

விஜயகாந்த், லஷ்மிராய், விஜயகுமார், மணிவண்ணன், ராஜ்கபூர், எம்.எஸ்.பாஸ்கர், பாபி, மனோபாலா, சுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்மபுரியில் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடு பவராக நடித்துள்ளார் விஜயகாந்த். தான் உண்டு; தன் வேலையுண்டு என வாழ்ந்து வரும் அவருக்கு ஊரிலுள்ள பெரிய மனிதர்களால் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவற்றை தன்னுடைய வசனங்களாலும், வலுவான கால்களாலும் எதிர்கொண்டு எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை.

காதல், சென்டிமெண்ட், காமெடி இவற்றினூடே சிறிது அரசியல் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களோ டும் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இசை -ஸ்ரீகாந்த் தேவா.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – பேரரசு.

தயாரிப்பு -ஸ்ரீசூர்யா மூவிஸ் சார்பாக ஏ.எம்.ரத் னம்.

மக்கள் தொடர்பு -நெல்லை சுந்தர்ராஜன்.

வாத்தியார்
அர்ஜுன், மல் லிகா கபூர், பிரகாஷ்ராஜ், வடி வேலு, மணிவண்ணன், தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கமுத்து, அல்வா வாசு, பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் நேர்மையான பள்ளி ஆசிரியர். ஆசிரியர் பணியை சேவையாக நினைத்து வாழ்ந்துவருகிறார். இந்த நேரத்தில் அவருக்கு சில அரசியல் குறுக் கீடுகள் ஏற்படுகின்றன. குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல்வாதி ஒருவர் சமூகத்துக் குப் புறம்பான காரியங்களில் ஈடுபடுகிறார்.

அவருடைய முயற் சியை அர்ஜுன் புத்திசாலித்தனமாக முறியடிக்கிறார். அர்ஜுன் படங்களுக்கேயுரிய ஆக்ஷன் காட்சிகளும், வடிவேலுவின் காமெ டியும் படத்துக்கு பலம்.

கதை -அர்ஜுன்.

வசனம் -ஜி.கே.கோபி நாத்.

இசை -இமான்.

ஒளிப்பதிவு -கே.எஸ்.செல்வராஜ்.

கலை -சங் கர்பாபு.

படத்தொகுப்பு -வி.டி.விஜயன்.

திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ்.

தயாரிப்பு -ஏ.பி.ஃபிலிம் கார்டன் சார்பில் வி.பழ னிவேல், ஏ.சி.ஆனந்தன்.

மக்கள் தொடர்பு -மெüனம் ரவி.

Posted in Arjun, Captain, Cinema, Deepavali, Dharmupuri, Diwali, Movies, Tamil Padam, Thamizh, Vaathiyaar, Vijayganth | 1 Comment »

ADMK vs DMK – Chennai Local Body Elections

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 14, 2006

உள்ளாட்சி தேர்தல் வன்செயல்கள் குறித்து திமுகவினர் மீது குற்றச்சாட்டு

தேர்தல் வன்செயல்கள்
தேர்தல் வன்செயல்கள்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றபோது, சென்னையில் திமுகவினர் அதிக அளவில் தேர்தல் வன்முறைகளிலும், முறைகேடுகளிலும் ஈடுபட்டதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி வழக்குத் தொடந்துள்ளது.

சென்னையில் வாக்களிக்க சென்ற சில வாக்காளர்கள் இதுவரை தாங்கள் கண்டிராத வன்முறைகள் நேற்றைய வாக்குப் பதிவின் போது இடம்பெற்றதாக கூறுகின்றனர். வேறு சிலரோ வன்முறை சம்பவங்கள் குறித்துப் பேசவே தயங்குகின்றனர்.

வன்முறைக்கு காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட பலரை சென்னை காவல் துறை கைது செய்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், ஒரு அதிமுக எம் எல் ஏ, பல இடங்களில் திமுகவினரும் – காவல்துறையினரும் இணைந்து வன்செயல்களை அரங்கேற்றியதாக குற்றம்சாட்டினார்.

ஆனால் தமது கட்சியினர் வன்செயல்களில் ஈடுபடவில்லை என்று திமுக தலைவரும், மாநில முதல்வருமான, மு. கருணாநிதி கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து பல்வேறு தரப்பினர்களின் கருத்துக்கள் கொண்ட பெட்டகத்தை தமிழோசையில் நேயர்கள் கேட்கலாம்.

Posted in ADMK, Chennai, DMDK, DMK, Elections, Jayalalitha, Karunanidhi, Local Body, Madras, Polls, Ullaatchi, Vijayganth, Violence | Leave a Comment »

Central Madurai Campaign ends – Who will be the Winner?

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2006

தமிழகத்தின் மத்திய மதுரை தொகுதி இடைத்தேர்தலின் பிரச்சாரம் ஒய்ந்தது

வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்
வாக்குச் சேகரிக்கும் திமுக, அதிமுக, தேதிமுக வேட்பாளர்கள்

தமிழகத்தின் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு கடந்த இரண்டு வாரக்காலமாக நடைபெற்ற பரபரப்பான பிரச்சாரம் திங்கட்கிழமை மாலை ஐந்து மணியுடன் முடிவடைந்துள்ளது.

திமுக அரசில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் மறைவால் நடத்தப்படும் இந்த தேர்தலில், 13 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 16 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். திமுக வின் சார்பில் கவுஸ் பாட்சாவும், அதிமுகவின் சார்பில் ராஜன் செல்லப்பாவும், நடிகர் விஜயகாந்த்தின் தேதிமுகவின் சார்பில் பன்னீர்செல்வமும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்த மூன்று வேட்பாளர்கள் இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது. தமது வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேதிமுக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இங்குத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக திமுகவும், அதிமுகவும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன. இந்தக் குற்றச்சாட்டு அடிதடியாகவும் மாறியுள்ளது.

இது குறித்து திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களிடமும், யாருக்கு வாக்களிக்க இருக்கின்றார்கள் என்று மதுரை வாக்காளர்கள் சிலரிடமும் பிபிசியின் எல். ஆர். ஜெகதீசன் அவர்கள் கேட்டறிந்தார்.

Posted in bypoll, DDMK, Election, Gous Batcha, Madurai Central, Panneerselvam, Rajan Chellappa, Vijayganth | Leave a Comment »