Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2007
முந்தைய பதிவு: புதுமை பூக்கும் புடவைகள்

சென்னை சில்க்ஸ் அறிமுகம்
ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலை
தங்கம், வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட நவரத்தினங்களால் ஆனது
சென்னை, நவ.27-தங்கம், வைரம், முத்து, பவளம், மாணிக்கம், மரகதம் உள்ளிட்ட நவரத்தினங்களால் தயாரிக்கப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள பட்டுச்சேலையை செனëனை சில்க்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.உலகப்புகழ் பட்டுசேலை
தமிழ்நாட்டில் முனëனணி ஜவுளி நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பட்டுச்சேலையை தயாரிக்க திட்டமிட்டது. இதற்காக அந்த நிறுவனம் தனித்திறன் மிக்க நெசவாளர்களைக் கொண்டு வடிவமைத்து, நவரதëதினங்களை இணைத்து சொந்த தறியில் அழகும், கலைநயமும் மிக்க பட்டுச்சேலையை உருவாக்கி உள்ளது.
தங்கம், வைரம், பிளாட்டினம், மாணிக்கம், முத்து, பவளம், புஷ்பராகம், மரகதம் உள்ளிட்ட 12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் ரவி வர்மாவின் 12 ஓவியங்களுடன் வடிவமைத்துள்ளனர். ஆபரணங்களை சேலையுடன் சேர்த்து நெய்திருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.
விலை ரூ.40 லட்சம்
51/2 மீட்டர் நீளம் கொண்ட இந்த பட்டுச்சேலையில் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் இசைக்கருவிகளுடன் அணிவகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களும் ஒவ்வொரு பார்டரிலும் இடம்பெற்றுள்ளன.
விலை உயர்ந்த ஆபரணங்களைக் கொண்டு நுணுக்கமாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பட்டுச்சேலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். உலகிலேயே அதிக விலை கொண்ட பட்டுச்சேலை என்ற சிறப்பையும் இந்த சேலை பெறுகிறது. இந்த சேலையை உருவாக்க மொத்தம் 18 மாதங்கள் ஆனது.
சுகாசினி அறிமுகப்படுத்தினார்
உலகின் மிக விலை உயர்ந்த பட்டுச்சேலை, 12 விதமான உலோகங்கள் மற்றும் நவரத்தின கற்களால் தயாரிக்கப்பட்ட பட்டுச்சேலை, ஒரே பட்டு சேலையில் ரவிவர்மாவின் 11 விதமான ஓவியங்கள் இடம்பெற்ற பட்டுச்சேலை என்பதற்காக கின்னஸ் சாதனைக்கு இந்த பட்டுசேலை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி இந்த பட்டுசேலையை அறிமுகப்படுத்தினார்.
அப்போது பேசிய சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான விநாயகம், “உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் கலைநயமிக்க பட்டுசேலையை தயாரிக்க வேண்டும் என்பதற்காகவும், நெசவு குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் நெசவாளர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியில் இறங்கினோம்.
இந்த சேலையை உருவாக்கியவர்கள் வெறும் கூலிக்காக வேலை செய்யவில்லை. 3 தலைமுறையாக நெசவு தொழில் செய்து வரும் அவர்கள் அர்ப்பண உணர்வுடன் அதிக அக்கறை எடுத்து இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களது மனோதைரியத்திற்கும், நம்பிக்கைக்கும் புதிய ஊக்கம் கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.
சேலை அறிமுக விழா நிகழ்ச்சியில்
- சென்னை சில்க்ஸ் இயக்குனர்கள் மாணிக்கம்,
- ஆறுமுகம்
- நந்தகோபால்,
- சிவலிங்கம்,
- சந்திரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,
- கவிஞர் வைரமுத்து,
- நடிகை ஷோபனா,
- நடிகர் ஜீவா,
- பின்னணி பாடகி பி.சுசீலா,
- கர்நாடக இசை பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்,
- டாக்டர் கமலா செல்வராஜ், மத்திய
- பட்டு வாரிய முன்னாள் இயக்குனர் டி.எச்.சோமசேகர்,
- ஓவியர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கர்நாடக அரசுத் துறை நிறுவனமான மைசூர் சில்க் நிறுவனம்
வடிவமைத்துள்ள பட்டுச் சேலையை உடுத்திப் பார்க்கும்
இளம்பெண். இச்சேலையின் விலை ரூ. 1.5 லட்சமாகும்.
பெங்களூர் இன்பான்டரி சாலையில் உள்ள கர்நாடக நிர்வாக
அதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை துவங்கிய
மைசூர் சில்க் சேலைக் கண்காட்சியில் இது இடம் பெற்றுள்ளது
Posted in Aarani, aesthetics, Art, Banaras, Banares, Benaras, Benares, Bengal, blouse, Border, Budget, CAD, cat's eye, Chennai, clothing, coral, Cotton, Deepam, Deepavali, Deepavalli, Design, designers, Dharmavaram, Diamond, Diwali, Dress, embellishments, embroidery, emerald, Evening, Events, Expensive, Exports, Fabric, Fear, Feast, Festival, Formals, Formalwear, Garments, Gems, girls, Gold, Gowns, Guiness, Handicrafts, Heritage, Individual, Instruments, Jari, Jarigai, Jeeva, Jewels, Kala Niketan, KANCHEEPURAM, Kanchi, Kanchipuram, Kanchipuram Silk, Kanchivaram, Kanjeepuram, Kanjeevaram, Kanjipuram, Kanjivaram, Kasi, Kumaran, Ladies, Lady, Laundry, Limca, Marriages, music, musical, Musicians, Mylai, Mylapore, Mysore, Nalli, Nithashree, Nithashri, Nithyashree, Nithyashri, Nithyasree, Nithyasri, nylon, ornate, P Suseela, P Susheela, P Sushila, P Susila, Painter, Paintings, pallu, Party, Partywear, pearl, Platinum, Pochampalli, Polimer, polycot, polycotton, Polymer, Pothys, precious, Radha, Rasi, Ravi Varma, RaviVarma, RaviVerma, Receptions, Record, Records, Rich, RMKV, Roopkala, ruby, sapphire, Saree, Sarees, Sari, Saris, She, Shobana, Shobhana, Silks, silver, Skirt, stones, Sugasini, Suhasini, Sukasini, Synthetic, Tamil Nadu, TamilNadu, terrycot, terrycotton, Textiles, Thread, TNagar, topaz, Tussar, Varanasi, Vijayalakshmi, Wash, Weddings, Woman, Women, yellow sapphire, zari, Zarigai, Zhari | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007
சர்வதேச மகளிர் சம்மேளன துணைத் தலைவராக இந்தியப் பெண் தேர்வு
புது தில்லி, ஏப். 25: சர்வதேச ஜனநாயக மகளிர் சம்மேளனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராக, இந்திய தேசிய மகளிர் சம்மேளனத்தின் பொதுச் செயலர் ஆன்னி ராஜா (படம்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச சம்மேளனத்தின் 14-வது மாநாடு, வெனிசூலா தலைநகர் காரகாஸில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், இந்திய சம்மேளனத்தின் தலைவர் சாரதாமணி, ஆன்னி ராஜா, கிருஷ்ணா மஜும்தார், பி.வி. விஜயலட்சுமி, ஆந்திரத்தின் பஸ்யா பத்மா, கேரளத்தின் கமலா சதானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும், ஏழை மக்களைப் பாதிக்கும் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகவும் இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சர்வதேச சம்மேளனத்தின் தலைவராக பிரேசில் நாட்டைச் சேர்ந்த மர்கியா கேம்போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் ஆன்னி ராஜாவுடன், பாலஸ்தீனம், அங்கோலா, ஆர்ஜென்டீனா, சைப்ரஸ் நாடுகளின் பிரதிநிதிகள் துணைத் தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
Posted in activism, Angola, Annie Raja, Argentina, Brazil, Caracas, Chavez, Cyprus, Female, Feminism, Kamala Sathanathan, Krishna Mazumdar, Lady, Majumdar, Majumdhar, National Federation for Indian Women, Palestine, Pasya Padma, Sadhanandhan, Sadhananthan, Sarada mani, Saradha mani, Saradhamani, Sarathamani, Sathanandhan, Sathananthan, Vijayalakshmi, Vijayalakshmy, Women | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 17, 2006
கன்னட நடிகர் மகனை மணக்கிறார்: நடிகை விஜயலட்சுமி காதல் திருமணம்
Thanga Vettai compere Actress Vijayalakshmi Suicide – Background Details « Tamil News: “சின்னத்திரை சீரியல் கதையை விட மகா சோகமானது நடிகை விஜயலட்சுமியின் நிஜக் கதை.”
“ப்ரண்ட்ஸ்” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி.
சூரி, கலகலப்பு உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்திருக்கும் இவர் டி.வி. தொடர்களிலும் நடித்தி ருக்கிறார்.
தமிழில் பிரபல கேம்ஷோ டி.வி. தொடராக விளங்கிய தங்கவேட்டையின் கன்னட பதிப்பை விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார். சமீபத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
தங்கவேட்டை ஷூட்டிங்கின்போது அதன் இயக்குனர் ரமேஷ் கொடுத்த மன உளைச்சலினாலேயே தற்கொலைக்கு முயன்றதாக கூறினார்.
தன்னை காதலிக்க ரமேஷ் தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார். விஜயலட்சுமிதான் ரமேஷை காதல் நச்சரிப்பு செய்ததாக அவர் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் கொடுத்தனர்.
தற்போது டி.வி. தொடர் களில் அதிகக் கவனம் செலுத்தி வரும் விஜயலட்சுமிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. பிரபல கன்னட நடிகரான லோகேஷின் மகனான சுருஜன் லோகேஷை விரைவில் விஜயலட்சுமி மணக்க உள்ளார். இதற்கான நிச்சயதார்த்தம் சமீபத்தில் பெங்களூரில் சிறப்பாக நடைபெற்றது.
சுருஜனுக்கும், விஜயலட்சுமிக்கும் ஏற்கனவே காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
Posted in Bangalore, Betrothal, Friends, Kannada, Logesh, Lokesh, Marriage, Ramesh, Soori, Suicide, Surujan, Tamil, Tamil Cinema, Tamil Movies, Thanga Vettai, TV, Vijayalakshmi | 1 Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006
சின்னத்திரை சீரியல் கதையை விட மகா சோகமானது நடிகை விஜயலட்சுமியின் நிஜக் கதை.
ஃபிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகம். அதன் பிறகு ஒரு சில தமிழ்ப் படங்கள். ஆனால், எதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி பேர் கிடைக்கவில்லை.
மீண்டும் கன்னட பட உலகிற்குப் படையெடுத்தார். ஆனால், அங்கும் சினிமா வாய்ப்புகள் இவருக்குச் சரிவர கிடைக்கவில்லை. பிறகு, டி.வி. பக்கம் தாவினார். விதி அங்குதான் விளையாடிவிட்டது.
ரேடான் டி.வி. தயாரிக்கும் ‘தங்க வேட்டை’யின் கன்னட மொழி நிகழ்ச்சியின் தொகுப்பாளினி இவர்தான்.
நல்ல உயரம்… சுண்டி இழுக்கும் வடிவம்… முகத்தில் மாறா புன்னகை. கலகலப்பான பேச்சு… இத்தனை இருந்தும், அவரிடம் ஒன்று மட்டும் இல்லை. அது சினிமா உலகின் ‘நெளிவு, சுளிவு’ குணம். திரையுலகில் அட்ஜஸ்ட் என்றொரு வார்த்தை உண்டு. அ ந்த விஷயத்தில்தான் விஜயலட்சுமிக்குப் பிரச்னை. சினிமா உலகில் பிழைக்கத் தெரிந்தவர்களின் தாரக மந்திரமான இந்த விஷயத்தை, அவரால் ஏற்க முடியவில்லை. இதுதான், அவரை தற்கொலைவரை அழைத்துச் சென்றிருக்கிறது.
விஜயலட்சுமி சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பேட்டி எடுக்க முயன்றோம். ஆனால், பலத்த பாதுகாப்பு. டிரிப் கையில் ஏறிக் கொண்டிருக்க, வாடிய கொடிபோல், சுருண்டு படுத்துக் கிடந்தார் விஜயலட்சுமி. முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது.
அவரிடம் இருந்து உண்மையான பிரச்னையை எப்படி தெரிந்துகொள்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், நமது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தோம். ஒரு நடுத்தர வயதுக்காரர். ‘‘என்ன பிரஸ்ஸா?’’ என்றார்.
‘‘ஆம்’’ என்று தலையசைத்தோம். தன் பின்னால் தொடர்ந்து வரும்படி சைகை காட்டினார். ஆஸ்பத்திரியின் ஒதுக்குப்புறத்திற்குச் சென்றபிறகு, ‘‘நான் விஜயலட்சுமியை நன்கு தெரிந்தவன். நல்ல அருமையான பெண். சினிமாக்களில் நடிக்கும்போது நட்சத்திர ஹோட்டல்களில் தங்கினார். சினிமா வாய்ப்பு குறைந்து டி.வி. சீரியலில் தோன்ற ஆரம்பித்த பிறகு, அவருடைய ஆடம்பர வாழ்க்கை மாறி சாதாரண வீட்டில் குடியிருக்க வேண்டிய நிலை.
அப்பா, அம்மா அவருடனே இருந்தார்கள். சமீபத்தில் அவருடைய அப்பா இறந்துவிட்டார். இப்படி விஜயலட்சுமி வாழ்க்கையில் அடி மேல் அடி விழ ஆரம்பித்து விட்டது. இந்த நேரம் டி.வி. நிகழ்ச்சிதான் அவருக்கு ஒரு ஆறுதலாக இருந்தது. அப்போதுதான் ரேடான் நிறுவனத்தின் புரொடக்ஷன் மானேஜர் ரவிராதா மீது விஜயலட்சுமிக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி காதலித்தார்கள். ரவிராதா ராதிகாவுக்கு ஒருவகையில் தம்பி முறை வேண்டும்.
இவர்களுடைய காதல் ராதிகாவிற்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர் ஒரு நாள் இவர்கள் இருவரையும் அழைத்து, ‘‘இங்க பாரும்மா… அவருக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிடுச்சி, குழந்தையும் இருக்கு… அவரை நம்பி உன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதே’ என்று அட்வைஸ் பண்ணியிருக்கிறார்.
அதிலிருந்து விஜயலட்சுமிக்கும் ரவிராதாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ரவி ராதாவை விட்டு விஜயலட்சுமி விலகிவிட்டார்.
கடந்த இரண்டு மாதமாக இவர்கள் பேசிக் கொள்ளவில்லை, என்பதைப் புரிந்து கொண்ட, இயக்குநர் ரமேஷ், விஜயலட்சுமிக்குக் காதல் தூதுவிட்டுப் பார்த்தார். நடக்கவில்லை. பின்னர் மிரட்ட ஆரம்பித்து விட்டார். அதுவும் நடக்கவில்லை.
நிகழ்ச்சியை ஷ¨ட் பண்ணும்போது விஜயலட்சுமி நன்றாகத் தொகுத்து வழங்கினாலும் ஒன் மோர் ஷாட் என்பார். இப்படி பல முறை ரீடேக் வாங்குவார். ஒரு முறை 20 தடவைக்கு மேல் ஒரே ஷாட்டை ரீ டேக் வாங்கி டார்ச்சர் பண்ணியிருக்கிறார். கேமிராமேனே நல்லா இருக்குது சார். ஓகே என்றாலும், உன் வேலையைப் பாருடா என்பார்.
அந்த டைரக்டர் வைத்ததுதான் சட்டம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கும் எண்ணற்ற பார்வையாளர்கள் மத்தியில், தான் அவமானப்பட்டதாலும், தன் குடும்ப சூழ்நிலையையும் நினைத்துதான் அந்த அப்பிராணி பெண், தற்கொலைக்கு முயன்று விட்டார். உண்மையைச் சொன்னால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கிறார், பாவம் சார்!’’ என்று கலங்கிய கண்களோடு சொன்னார் அந்த நபர்.
அவர் இப்படி சொன்னதைத் தொடர்ந்து, ராதிகாவிடம் பேச முயற்சித்தோம். முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்த டி.வி. நடிகைகளின் தற்கொலை முயற்சிகள் ஒரு மெகா சீரியல் போல தொடர்ந்து கொண்டே போகிறது. எங்கு முற்றுப்புள்ளி விழும் என்றுதான் தெரியவில்லை.
_ திருவேங்கிமலை சரவணன்
Posted in Actress, Backgrounders, Details, Kannada, radaan tv, radan, Radhika, Ramesh, ravi radha, Suicide, Tamil, Thanga Vettai, Vijayalakshmi | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 23, 2006
நடிகை விஜயலட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி
சென்னை, ஆக. 24: நடிகை விஜயலட்சுமி, அளவுக்கதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நடிகர்கள் விஜய், சூர்யா நடித்த “ஃபிரண்ட்ஸ்‘ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர், தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது, தனியார் டிவி ஒன்றில் கன்னட மொழியில் “தங்க வேட்டை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில், தி. நகர் பசூல்லா சாலையில் உள்ள வீட்டில் தங்கியிருந்த விஜயலட்சுமி, புதன்கிழமை காலையில் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லையாம். பெற்றோர் அவரை எழுப்பியுள்ளனர். பின்னர், மயக்க நிலையில் இருந்த அவரை, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்கொலை செய்ய முயன்றதற்கான காரணங்கள் குறித்து, போலீஸôர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Posted in Actress, Cinema, Friends, Kannada, Kollywood, Soori, Suicide, Tamil, Thanga Vettai, Vijayalakshmi | Leave a Comment »