Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vijaya T Rajendar’ Category

Ramar sethu, Minority Governments, Politics+Religion: ‘Thuglaq’ Cho Interview in Dinamani

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2007

Thuklaq Cho Interview Ramar Sethu Ram ADams Bridge BJPசேது சமுத்திரத் திட்டத்துக்குத் தாற்காலிகத் தடை விதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அர சியல் ரீதியாக எழுப்பப்படும் சர்ச்சைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டத்துக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை.
ராமர் பாலத்தை இடிப்பதற்குத்தான் தடை விதித்தி ருக்கிறது. வேறு மாற்று வழிகள் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஏதா வது ஒன்றைத் தேர்ந்தெடுத்து சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றுவதில் யாருக்கும் ஆட்சே பனை இருப்பதாகத் தெரியவில்லை. யாருமே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்காதபோது ஏதோ அந்தத் திட்டமே கைவிடப்பட்டதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு, முக்கிய மாகத் திமுக தலைமை முயல்கிறது. ராமர் பாலத்தை இடிப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை, சேது சமுத்திரத் திட்டத்தில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

ராமாயணம் என்பது காவியம் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடுகள் இல்லை. அதற் குப் புனிதத்தன்மை உண்டா, இல்லையா என்ப தில்தானே விவாதமே? ராமாயணம் ஒரு புனிதமான நூல். அது ஏன் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் புனித நூல்களைப் பற்றியும் கேட்கலாம். உலகில் புனிதம் என்று கருதப்படும் எல்லா விஷயங்க ளைப் பற்றியும் கேட்கலாம். மற்ற மதங்களைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. எப்படி மற்ற மதங்க ளின் நூல்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின் றனவோ அதேபோல இதுவும் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும். எப்படி மற்ற மத நூல்களை விமர்ச னம் செய்து அவர்களது மனம் புண்பட்டு விடக்கூ டாது என்று நினைத்துச் செயல்படுகிறார்களோ } முதல்வர் கலைஞர் எப்படிச் செயல்படுகிறாரோ – அதேபோல இந்துமத நம்பிக்கைகள் விஷயத்தி லும் செயல்பட வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டம் ராமர் பாலப் பிரச்னை யாக மாறி இப்போது ராமர் கடவுளா கட்டுக்க தையா என்று திசை திருப்பப்பட்டிருக்கிறதே, அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? யார் திசை திருப்பியது?

மத்திய அரசுதான் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் ராமரும் மற்ற கதாபாத்திரங்க ளும் வெறும் கற்பனையே என்று குறிப்பிட்டது.

அதனால்தான் மத்திய அரசு தனது தவறை உணர்ந்து தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற்றது. அப்போது ஆரம்பித்ததுதான் இந்த விவாதம். இப்படி ஒரு விவாதத்தை ஆரம் பித்தது ஏன் என்று மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும்.
இந்த விஷயத்தில் தீர ஆராயாமல் மத்திய அரசு செயல்பட்டது என்று கூறலாமா? ஆராய்ந்தார்களா இல்லையா என்பது தெரி யாது. ஆனால், இதை நாங்கள் ஆராயத் தேவை யில்லை, அதனால் நாங்கள் ஆராய்ச்சி செய்ய வில்லை என்று இந்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India) கூறுகிறது.
அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் புவி இயல் துறை (Geological Survey of India) ஆராய்ச்சி செய்திருக்கிறது என்பது அவர்கள் வாதம். புவி இயல் துறை என்பது ஓர் இடம் அல் லது பொருள் எந்த அளவுக்குப் பழமையானது என்பதைத் தீர்மானிக்கும் துறை. கால நிர்ணயம் செய்வது மட்டும்தான் அவர்களது வேலை. மனித முயற்சி எந்த அளவுக்கு இருந்தது என்பதைத் தீர் மானிக்கக் கூடிய வல்லுனர்களோ செயல்திறனோ அந்தத் துறைக்கு இல்லை என்பது பல நிபுணர்க ளால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் ஒருவரே இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். புவி இயல் துறை யின் ஆராய்ச்சிப்படியே, இந்த ராமர் சேது பல்லா யிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது நமது நம்பிக்கையுடன் ஒத்துப்போகும் விஷயம்.

தொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் ஆய்வறிக்கையும் இல்லாமல் இது வெறும் மணல் திட்டுகள் என்று கூறுவதை எப்படி விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி முடிவு என்று கூறுகிறார்கள் என்பது புரியவில்லை.

விஷயம் இப்போது திசைமாறி இறை நம் பிக்கை சார்ந்ததாக மாறிவிட்டது.

ராமர் காவிய நாயகன் மட்டும்தானா அல்லது கடவுளா? நீங் கள் என்ன நினைக்கிறீர்கள்?

இப்போது எல்லா மதங்களாலும் வணங்கப்ப டும் கடவுள்கள் கடவுள்கள்தானா? ஏன் இந்தக் கேள்வி எழுப்பப்படவில்லை? ஏனென்றால், அது நம்பிக்கை. உலகில் மிகச் சிறுபான்மையினர் தவிர மற்ற அனைவரும் ஏதாவது ஒரு கடவுளை வணங் குகிறார்கள். நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும். அதேபோல, இந்த நம்பிக் கையும் மதிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் பேசும் முதல்வர் கலைஞர், கண்ணகியின் சிலையை அது இருந்த இடத்திலேயே திருப்பி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணம் என்ன? அந்த இடத்தின் மகிமை, அல்லது புனிதம் என்ன? கண்ணகியின் வரலாற் றில் இருப்பதெல்லாம் உண்மைதானா என்பதை எந்த விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பது?

அது நம் பிக்கைதான். அந்த நம்பிக்கை எப்படி மதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதே போல மற்றவர்கள் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் ஏன் நினைப்பதில்லை? எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கை என்ற பெயரில் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன் னால் எப்படி? அந்த வாதமே பகுத்தறிவுக்கு ஒவ் வாததாக இருக்கிறதே? இன்றைக்கு நீங்களோ நானோ ஒரு மதத்தை ஸ்தாபிக்க முற்பட்டால் அப்போது, நாம் கூறுகிற விஷயங்கள் பற்றி ஆதாரம் கேட்கலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருக்கும் மத நம்பிக்கைகளுக்கு ஆதாரம் கேட்டால் எப் படி?

வால்மீகி ராமாயணத்தில் சேது குறிப்பிடப்ப டுகிறது. பாலம் எப்படிக் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது, அந்த இடம் புனிதமானது என்றும் சொல்லப்படுகிறது. இதைப் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் நம்பினார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை பெருவாரியானவர் கள் நம்புகிறார்கள்.

வால்மீகி ராமாயணப்படி ராமர் சோமபானம் அருந்தினார், குடிகாரர் என்பது போன்ற முதல்வர் கருணாநிதியின் கருத்துகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வால்மீகி ராமாயணத்தில் ராமர் குடிகாரர் என்று எங்கும், எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.
“சோம’ என்கிற கொடியிலிருந்து எடுக்கப்படும் சாறுதான் இந்தச் சோமபானம். இது அமுதத்துக்கு நிகரானது என்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அது போதை வஸ்து அல்ல. சோமபானம் பற்றி வேதங்களிலும், புரா ணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வேடிக்கை என்னவென்றால், அந்த சோமபானத் தைக்கூட ராமர் அருந்தியதாக ராமாயணத்தில் எந்த இடத்திலும் கிடையாது. அனுமன் சீதையி டம் மாமிசம், மது இரண்டையும் ராமர் தொடுவ தில்லை என்று கூறுவதாக வருகிறது. ராமர் பிராம ணன் அல்ல, க்ஷத்திரியன். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அரச குடும்பத்தினர் மாமிசம் சாப்பிடு வதை எந்தத் தர்மமும் வேதமும் தடுக்கவில்லை.

ஆனால், வால்மீகி ராமாயணத்தில் ராமர் மாமிசம் சாப்பிட்டதாகக்கூட எந்த இடத்திலும் இல்லை.
இந்த இடத்தில்கூட, மாமிசம் என்பதற்குப் பழங்க ளிலுள்ள சதைப்பிடிப்பான பாகங்கள் என்பதாகத் தான் அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது.

மது அருந்துவதில்லை என்பதற்கு என்ன விளக்கம்? மது என்பது மலர்களில் இருந்து கிடைக்கும் மக ரந்தம். அதாவது, தேன் என்பது போதை வஸ்து என்கிற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. சமஸ் கிருதத்தில் மது என்பது தேன். தேன் என்றால் } மகரந்தம், தேன், பால், சுவையுள்ள ரசம் என்றெல்லாம் அர்த்தம். தமிழில் மது என்பது போதை வஸ்து. போதை வஸ்து சுராபானம் அல்லது பானம் என்றுதான் ராமாயணத்திலும் வட மொழி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது.
நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாது என்கிறீர்கள். அதனால் ராமர் பாலம் இடிக்கப்படக் கூடாது என்பதுதான் உங்கள் வாதம், சரிதானே? இதுவரை நான் ராமர், ராமர் சேது என்பதெல் லாம் நம்பிக்கையின்பாற்பட்ட விஷயங்கள் என் றும் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்க முடியாது, என்றும்தான் வாதிட்டு வந்திருக்கிறேன். ஆனால் இன்று இவற்றை எல்லாம் நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. “பாரத் க்யான்’ என்ற அமைப்பை நடத்துகிற டி.கே. ஹரி என்பவர் ஒரு பல் ஊடக விளக்கம் (Multi media presentation)- ஐ எனக்குக் காண்பித்தார். அதில் ராமர் வாழ்ந்ததற்கும், இந்த அணை கட்டப்பட்டதற்கும் பகுத்தறிவாளர்கள்கூட மறுக்க முடியாத வலு வான ஆதாரங்கள் உள்ளன. இது இன்னும் ஒரு சில நாட்களில் இணையத்தில் (Internet) கிடைக் கும் என்றும் அது இந்தப் பிரச்சினையில் தெளி வைத் தரும் என்றும் கூற விரும்புகிறேன்.

ராமர் பாலமா மண் திட்டா என்பது அல்ல பிரச்னை. அது எதுவாக இருந்தாலும் வளர்ச்சித் திட்டத்துக்குத் தடையாக இருப்பதை அகற்றுவ தில் என்ன தவறு?

கபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டால் வாகனங்களை நிறுத்த மிகப்பெரிய மைதானம் கிடைக்கும். மைலாப்பூர் மாடவீதிகளில் இருக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விடலாம்.

எல்லா நகரங்களிலும் இருக்கும் கோயில்கள், மசூ திகள் மற்றும் மாதா கோயில்களை இடித்து விட் டால் போக்குவரத்து நெரிசலையும் இடப்பற்றாக் குறையையும் தீர்த்து விடலாம். இடித்துவிட வேண்டியதுதானே? செய்து விடுவார்களா? வளர்ச்சிதானே? அதே போல, இதுவும் இடிக்கப்ப டக் கூடாது. அதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயம். இதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷ யம். மக்களின் நம்பிக்கையை அலட்சியப் படுத்தக் கூடாது.

இப்படி ஒரு ராமர் பற்றிய சர்ச்சை முதல்வரால் ஏன் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? அவருக்கு மத்திய அரசின் மீது அசாத்திய கோபம். மத்திய அரசு முதல்வர் கலைஞரின் வழி காட்டுதலில் நடக்கும் அரசு என்று இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களும் ஆமோ தித்து வருகிறார்கள். இந்த நிலையில், தன் சொல்லை சேது சமுத்திர திட்ட விஷயத்தில் மத் திய அரசு கேட்கவில்லையே என்கிற கோபம் அவ ருக்கு. ராமர் பாலத்தை இடித்தே தீருவோம் என்று உச்ச நீதிமன்றத்தில் சொல்லவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு.

திமுக கட்டாயப்படுத்தி இருந்தால் மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் அவரது கருத்துப்படி நடந்திருக்காது என்று நினைக்கிறீர்களா?

ஆதரவை வாபஸ் வாங்குகிறேன் என்று காங்கி ரஸ் சொன்னால் இவரது கதி என்ன? இவர் மத்தி யில் ஆதரவை வாபஸ் வாங்கினாலும், இடதுசாரி களின் ஆதரவு இருக்கும்வரை மன்மோகன்சிங் அரசு ஆட்சியில் தொடர முடியும். ஆனால், அதற் குப் பிறகு மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி திமுக ஆட்சியில் இருக்காது. தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கூட்டணி இவருக்குத் தேவை. அத னால் ஒருபோதும் மத்திய அரசை வற்புறுத்தவோ, ஆதரவை வாபஸ் வாங்கவோ முதல்வர் கலைஞர் துணியமாட்டார்.

வேதாந்தி என்பவர் முதல்வருக்கு விடுத்தி ருக்கும் கொலை மிரட்டல் பற்றி என்ன கூறுகிறீர் கள்?

அது காட்டுமிராண்டித்தனமான செயல். தனது கூற்றுக்கு அவர் பகவத் கீதையைத் துணைக்கு அழைத்திருப்பது அதைவிட அபத்தம். பகவத் கீதையில் எந்த இடத்திலும் கடவுளை நிந்தித்துப் பேசுபவர்களின் கழுத்தை அறுக்க வேண்டும், நாக் கைத் துண்டிக்க வேண்டும் என்று சொல்லப்பட வில்லை. தவறாக எதையோ பேசிவிட்டு, அதற் குத் தவறாக ஒரு காரணத்தையும் கூறுகிறார் அவர். அவர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதுதான் நியாயம் என்று கருதுகி றேன்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை என்ன என்று நினைக்கிறீர்கள்?

என்னுடைய அபிப்பிராயத்தில், இப்போது தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பில்லை.
இந்த ராமர் பிரச்னையை மேலும் தவறான அணு குமுறைகள் மூலம் பெரிதுபடுத்தாமல் இருக்கும் வரை, காங்கிரசைப் பொருத்தவரை பெரிய அள வில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.
ஏனென்றால், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக இன்னமும் உள்கட்சிக் குழப்பங்களில் சிக்கியிருக்கிறது.

அப்படியானால், இப்போது தேர்தல் நடந்தா லும் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசு மீண்டும் அமைவதற்கான வாய்ப்புகள்தான் இருக்கிறது என்று கூறுகிறீர் கள், அப்படித்தானே?

காங்கிரஸ் கட்சி அமைத்திருப்பது ஒரு சிறு பான்மை அரசுதான். ஐக்கிய முற்போக்கு கூட் டணி என்பது இடதுசாரிகளின் தயவில் ஆட்சி அமைத்திருக்கும் ஒரு மைனாரிட்டி அரசு, அவ்வ ளவே. கூட்டணியிலுள்ள கட்சிகளும் சரி, பெரிய அளவில் எந்தக் கட்சியும் பலவீனம் அடைந்திருப் பதாகத் தெரியவில்லை. தமிழகத்தைப் பொருத்த வரை, தேர்தல் என்று வந்தால் அரசியல் மாற்றங் கள் எப்படி ஏற்படும் என்று இப்போது சொல்ல முடியாது.

தமிழகத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?

ஒருவேளை, அதிமுக ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டால், திமுக கூட்டணி இங்கே ஒரு பெரிய சரிவைச் சந்திக்கக்கூடும். அதன் விளைவுகள் நிச்சயமாக மத்தியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இருக்காது. அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதை நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. அதற்கான வாய்ப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

இப்போது திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள், அணி மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறீர்களா?

ஏன் மாறக்கூடாது? தனக்குப் பலமான ஒரு கூட்டணி வேண்டும் என்று ஜெயலலிதா உணரமாட்டார் என்று ஏன் நினைக்க வேண்டும்? அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. திமுகவுக்கும் சரி, அதிமுகவைவிட அதிகமான வாக்குகள் இருக்கிறதா என்ன? இந்த இரண்டு கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது அவர்கள் அமைக்கும் பலமான கூட்டணிகள்தான் என்பது ஊரறிந்த உண்மை.

கருணாநிதி கூட்டணி கட்சித் தலைவர்களை மதிப்பது, கலந்தாலோசிப்பது என்று செயல்படுவது போல ஜெயலலிதா செயல்பட மாட்டார் என்று அவர்கள் கருதுகிறார்களே?

கலைஞர் மீது பாமகவுக்கும் சரி, இடதுசாரிகளுக்கும் சரி நம்பிக்கை இருப்பது உண்மையானால், இதுபோல அரசுக்கு எதிராக எதுவும் அவர்கள் பேச வேண்டிய அவசியமே இல்லையே! காங்கிரûஸ எடுத்துக்கொண்டாலும் சரி, இந்த ராமர் சேது பிரச்னைக்குப் பிறகு முதல்வர் கலைஞர் மீதும் திமுகவின் மீதும் மிகவும் கோபமாக இருக்கிறார்கள்; வெளியில் சொல்ல முடியவில்லை, அவ்வளவுதான். முதல்வர் கலைஞர் தோழமைக்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவார், மற்றவர்களைப் பேசவிடுவார், ஆனால் அவர்கள் சொல்வது எதையும் செய்ய மாட்டார். ஜெயலலிதாவிடம் அந்தத் தொந்தரவு எதுவும் கிடையாது. பேசவும் மாட்டார், பேசவிடவும் மாட்டார், அவ்வளவுதான்.

விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்?

சரத்குமாரின் பலம் என்ன என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விஜயகாந்தின் தேமுதிகவைப் பொருத்தவரை, வேறொரு கட்சியின் கூட்டணியில் தனது பலத்தைச் சேர்க்க முடியுமே தவிர, தனித்து வெற்றி பெறுமளவுக்கு அவரது கட்சி பலமடைந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.

தேமுதிகவின் அடிப்படை அரசியலே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்று என்பதாக இருக்கும்போது அவர் எப்படி இந்தக் கட்சிகளின் கூட்டணியில் இணைந்துகொள்ள முடியும்?

இப்படிச் சொன்ன கட்சிகள் எல்லாமே, திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கின்றன. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடியுமானால், திமுகவும் மதிமுகவும் கூட்டணி அமைக்க முடியுமானால், தேமுதிக மட்டும் கூட்டணியில் சேர முடியாதா என்ன? தேமுதிக தனித்து நிற்பதால் எந்தப்பயனும் இருக்காது என்பதுதான் எனது கருத்து.

பாரதிய ஜனதா கட்சியின் வருங்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பாரதிய ஜனதா முதலில் தனது உள்கட்சி குழப்பங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அத்வானி வருவாரா, வாஜ்பாயி வருவாரா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இதுவரை வரவில்லை. நரேந்திர மோடியை காங்கிரஸ் தோற்கடிக்காவிட்டாலும் சரி, நாமே தோற்கடிப்பது என்பதில் பாஜகவிலேயே ஒரு கோஷ்டி முனைப்பாக இருக்கிறது. இதுபோன்ற உள்கட்சிப் பிரச்னைகளை எல்லாம் அவர்கள் தீர்த்துக்கொண்டு, பழையபடி கட்டுக்கோப்பான கட்சியாக மக்கள் மன்றத்தைச் சந்தித்தால் நிச்சயமாக அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று கேட்டால், கட்சித் தலைமை எந்த அளவுக்குப் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்குச் சாத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சரி, காங்கிரஸ், பாரதிய ஜனதாக்கட்சி இரண்டுமே இல்லாத மூன்றாவது அணி மத்திய அரசியலில் ஏற்படுவதற்கான வாய்ப்பு எப்படி காணப்படுகிறது?

நிச்சயமாக அதற்கான வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவோ, பங்கேற்போ இல்லாமல் ஓர் ஆட்சி மத்தியில் அமைவது என்பது சாத்தியமே இல்லை. அப்படி ஓர் ஆட்சி அமைவதைவிட, காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையில் அமையும் கூட்டணி ஆட்சிதான் நிலையான ஆட்சியாக இருக்கும்.

காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி கட்சிப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா?

என்னுடைய அபிப்ராயத்தில், ராகுல் காந்தியால் பெரிய அளவில் காங்கிரசுக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்துவிட முடியாது. ராஜீவ் காந்தியேகூட, இந்திரா காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையினால் ஆட்சி அமைக்க முடிந்ததே தவிர, தனிப்பட்ட செல்வாக்கால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு அங்கீகாரம் இருக்கும் என்பதும் கட்சிக்குப் புத்துணர்வு ஏற்படும் என்பதும் உண்மை. அதற்குமேல், இந்திய அரசியலில் ராகுல் காந்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுவார் என்று நான் நம்பவில்லை. நேரு குடும்பத்தினர் மீது மக்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை இப்போது நிச்சயமாக இல்லை. அப்படி இருந்திருந்தால், காங்கிரஸ் கட்சி ஏன் மைனாரிட்டி அரசை அமைக்க வேண்டும்?

தமிழகத்தைப் பொருத்தவரை கருணாநிதி குடும்பத்தின் வாரிசுத் திணிப்பு எந்த அளவுக்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

முதல்வர் கலைஞரின் குடும்ப அரசியல் நிச்சயமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். இது நிச்சயமாக அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய பிரசார ஆயுதமாக இருக்கும். எந்த அளவுக்கு அந்தப் பாதிப்பு திமுகவின் வெற்றி தோல்வியைப் பாதிக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.

கட்சியைப் பொருத்தவரை ஸ்டாலினை அவர்கள் வாரிசாக ஏற்றுக்கொண்டாகிவிட்டது. அவருக்கு எதிராகக் கட்சியில் யாருமே இல்லை என்றுதான் கூற வேண்டும். ஒரு தேர்தலுக்காவது நிச்சயமாக ஸ்டாலினின் தலைமை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பிறகு, என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்றெல்லாம் இப்போதே சொல்லிவிட முடியாது.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஆளும் கட்சியே இதுபோன்ற அடையாள வேலைநிறுத்தத்தை அறிவிப்பது தவறு என்று நீதிமன்றங்களே பல தீர்ப்புகள் அளித்திருக்கின்றன. ஆனால் அந்தத் தீர்ப்புகள் வந்தும்கூட இது போன்ற அறிவிப்புகள் தொடர்கின்றன என்பது வருத்தப்பட வைக்கும் விஷயம். தமிழக ஆளும் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் அறிவித்திருக்கும் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் வேடிக்கை என்னவென்றால் எதை எதிர்த்து இவர்கள் இந்த பந்த் அறிவிப்பைச் செய்திருக்கின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை.

காரணம் இல்லாமல் அறிவிக்கப்பட்டிருக்கும் பந்த் இது என்கிறீர்களா?

சேது சமுத்திரத் திட்டத்தை அதிமுக, பாஜக உட்பட யாருமே எதிர்க்கவில்லை. நீதிமன்றமும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை. சரி, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த பந்த் என்று சொன்னால், இவர்கள்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள். மத்திய அரசிலும் அங்கம் வகிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக இருப்பது திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுதான். அப்படியிருக்க இப்படி ஒரு பந்த் அறிவிக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருக்க முடியும். மக்களை இம்சை செய்வது என்பதுதான் அது.

Posted in Adams, ADMK, BJP, Bridge, Cho, Communist, Communist parties, Communist Party of India, Communist Party of India-Marxist, Communists, Congress, Congress (I), Congress Party, Congress(I), CPI, CPM, DMK, Governments, Govt, Interview, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, minority, Paalam, PMK, Politics, Ramar, Rameswaram, Religion, Sethu, Setu, Thuglak, Thuglaq, Thuklak, Thuklaq, TN, TR Baalu, TR Balu, Vijaiganth, Vijaikanth, Vijaya T Rajendar, Vijayaganth, Vijayakanth | Leave a Comment »

Madurai West Assembly by-poll: By-election details, campaign strategies, developments

Posted by Snapjudge மேல் ஜூன் 13, 2007

ஒரே நாளில் 6 அலுவலர்கள் மாற்றம் ஏன்?

மதுரை, ஜூன் 14 இடைத்தேர்தலுக்காக உயர் அதிகாரிகள் 6 பேர் ஒரே நாளில் மாறுதல் செய்யப்படுவது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை.

மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார், விதிமீறல்கள் காரணமாக மாவட்ட ஆட்சியர் எஸ்.எஸ். ஜவஹர், மாநகர் காவல்துறை ஆணையர் ஏ. சுப்பிரமணியன், தொகுதி தேர்தல் அலுவலரான கோட்டாட்சியர் அ. நாராயணமூர்த்தி, காவல்துறை துணை ஆணையர் ஆர். ராம்ராஜன், தல்லாகுளம் காவல்துறை உதவி ஆணையர் எஸ்.டி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் எம். ராஜேந்திரன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் முன்பு மத்திய தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றபோது அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் உதவி ஆணையர்கள் எஸ். குமாரவேலு, என். ராஜேந்திரன் மற்றும் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர்.

ஆனால், தற்போது நடைபெறும் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலின் போது உயர் அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக புகார்: தேர்தல் ஆணையப் பார்வையாளர் அஜய் தியாகியிடம் அதிமுக கொடுத்த புகாரில்,” இடைத்தேர்தலின்போது காவல் மற்றும் வருவாய்த் துறையினர் உதவியுடன், திமுகவினர் வன்முறை, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தேர்தல் பிரசாரத்துக்கு சுழல்விளக்குடன் கூடிய காரில் போலீஸôர் பாதுகாப்புக்குச் செல்கின்றனர்.

மேலும் எங்களுக்குக் கிடைத்த தகவல்படி இத் தேர்தலில் வன்முறையைத் தூண்டவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவும் ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆளும் கட்சிக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்தப் புகார் மனுவில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தேர்தல் அதிகாரி ஆகியோர் பெயர்கள் இல்லை.

ஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் டி.ஜே. தினகரனை பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்த மாறுதல் பட்டியலில் மாநகராட்சி ஆணையர் பெயர் இடம்பெறவில்லை.

வேட்புமனுத் தாக்கலின்போது விதிமீறல் : மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் கடந்த 8-ம் தேதி மனுத் தாக்கல் செய்ய வந்தபோது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக முதல்வரின் மகன் மு.க. அழகிரி மற்றும் அவருடன் வந்த பிரமுகர்கள் ஏராளமான கார்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அதிமுக மட்டுமன்றி பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் புகார் தெரிவித்தன. இது அரசு அலுவலர்களின் பணி இட மாறுதலுக்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.

அரசு அலுவலர்கள் கருத்து : உயர் அதிகாரிகளின் பணியிட மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தேர்தல் விதிமீறல் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் உள்ளிட்ட 30 பேர் மீதும், தேமுதிக வேட்பாளர் உள்ளிட்ட 350 பேர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் தொடர்பாக 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் அலுவலர்களை மாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது’ என்றனர்.

Posted in ADMK, Alagiri, Alakiri, Analysis, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Backgrounders, By-election, by-poll, Campaign, Details, Developments, DMDK, DMK, Elections, Jaya TV, Jayalalitha, Jayalalithaa, Jeya, Jeya TV, Jeyalalitha, JJ, Kalainjar, Kalainjar TV, Kalanidhi, Kalanidhy, Kalanithi, Kalanithy, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, KK, Madurai, Madurai West, News, Polls, Predictions, Primer, Strategy, Transfers, Vijaiganth, Vijaikanth, Vijaya T Rajendar, Vijayaganth, Win, Winners | 5 Comments »

‘Why did we split’ – Nayan Thara chats about Simbu

Posted by Snapjudge மேல் நவம்பர் 21, 2006

`கதறி அழுதேன், கத்தியால் கிழித்தேன் என்று களங்கப்படுத்துவதா?’ நடிகர் சிம்புவுக்கு நயன்தாரா கண்டனம்

நயன்தாராவும், சிம்புவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஒன்றாக சுற்றினார்கள். விரைவில் திருமணம் செய் வார்கள் என்றும் பேசப்பட்டது.

ஆனால் திடீரென்று காதல் முறிந்தது. இருவரும் பிரிந்து விட்டதாக நயன்தாரா கூறினார். சிம்புவுக்கு நயன் தாரா முடிவு அதிர்ச்சி அளித்தது.

அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வரும் அவர் இதுபற்றி கூறுகையில், “நயன்தாராவிடம் இரண்டு முறை பேச முயற்சித் தேன். முடியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க என்று தெரிவித்தார். நீ இல்லை என்றால் உயிரை விட்டு விடுவேன் என்று கையை கிழித்துக் கொண்டதையும் கட்டிப்பிடித்து கதறியதையும் நயன்தாரா வேண்டுமானால் மறந்து இருக்கலாம். நான் மறக்கவில்லை என்றும் சிம்பு கூறினார்.

ஐதராபாத்தில் படப்பிடிப் பில் இருக்கும் நயன்தாராவிடம் மாலைமலர் நிருபர் இன்று செல்போனில் தொடர்பு கொண்டு சிம்பு பேட்டி குறித்து கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:-

சிம்பு பேட்டி பற்றி செல் போனில் என்னிடம் தெரி வித்தனர். அவரைப் போல் நானும் நிறைய விஷயம் சொல்லலாம். ஆனால் சொல்ல விரும்பவில்லை.

சிம்புவும் நானும் பிரிந்து விட்டோம் என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன். இது தவிர அவருக்கு எதிராக அவமரியாதையான வார்த்தை எதையும் கூறவில்லை.

அவருடன் பழகியதால் பட வாய்ப்புகள் குறைந்தது என்று நான் சொன்னதாக கூறியுள்ளார். அப்படி நான் சொல்லவே இல்லை. அவராக அப்படி நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பாக முடியாது.

தேவை என்றால் நானும் அழுது இருக்கலாம். அவர் அப்படி செஞ்சிருக்கார் இப்படி பேசியிருக்கார் என்று பத்திரிகைகளில் சொல்லி இருக்கலாம். அது மாதிரி சொல்லவே இல்லை. சிம்பு வும் நீங்களும் பிரிந்து விட்டீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். ஆமாம் பிரிந்து விட்டோம் என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன்.

பிரிவதற்கு நிறைய விஷ யங்கள் இருக்கிறது. அதை யெல்லாம் சொல்வது மரியாதை அல்ல என்று கருதி னேன். இன்று அவர் என்ன வெல்லாமோ சொல்லி இருக் கிறார். நானும் அது போல் மரியாதையை விட்டு பேச மாட்டேன்.

நானும் அவரும் என் னென்ன பேசினோம் எங்கள் இருவருக்குள்ளும் என்னென்ன நடந்தது என்பதை பொது ஜனங்களுக்கு தெரிவிக்க அவசியம் இல்லை.

இருவரும் சேர்ந்து நடித் தோம். பழகினோம். பிரிந் தோம். பிரிவதற்கு 1001 கார ணம் இருக்கலாம். ஒவ்வொன் றையும் சொல்ல முடியாது.

நான் கதறி அழுதேன். கத்தியால் கையை கீறிக் கொண்டேன் என்று சிம்பு கூறியுள்ளார். அவரைப் பற்றி சொல்லவும் என்னிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது.

இருவர் காதலிக்கும் போது நல்ல விஷயங்களும் நடக்கும். சண்டையும் நடக்கும். அது எனக்கும் சிம்புவுக்கும் உள்ள விஷயம். கத்தியால் கிழித்து இருக்கலாம் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம். அவற்றை வெளிப் படுத்துவது நாகரீகமாகாது.

சிம்புவை பிரிந்ததற்கு 1000 பேர் காரணம் கேட்டனர். நான் ஒரு பொண்ணு. ஒரு பொண்ணு சொன்னால் நம்புவார்கள். எல்லாவற்றையும் சொல்லி இருக்கலாம். ஆனால் சொல் லாமல் தவிர்த்தேன். அதுதான் எனக்குள்ள மரியாதை.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.

சிம்பு மீது நயன்தாரா பாய்ச்சல்

சென்னை, பிப். 9: நடிகை நயன்தாராவும் நடிகர் சிம்புவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் வெளியானதால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  “சிம்புதான் இதை வெளியிட்டிருப்பார்; அவரது தவறான புத்தியை இது வெளிப்படுத்துகிறது“ என நயன்தாரா கூறியிருக்கிறார்.

Ôவல்லவன்Õ படத்தில் நடிக்கும்போது சிம்புவும் நயன்தாராவும் நெருக்கமாக பழகினர். அதில் ஒரு முத்தக்காட்சியிலும் நடித்தனர். வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்று வந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் வல்லவன் படம் வெளியான சில நாட்களில் அவர்களுக்குள் மன வேறுபாடு ஏற்பட்டது.

Ôசிம்புவுடன் உறவு முறிந்தது. இனி அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்Õ என்று நவம்பர் மாதம் நயன்தாரா ஒரு பேட்டியில் அறிவித்தார். அப்போது அமெரிக்கா சென்றிருந்த சிம்பு, சென்னை திரும்பியதும், Ôஇனி நயன்தாரா வாழ¢க்கையில் குறுக்கிடமாட்டேன். அவர் எங்கிருந்தாலும் வாழ்கÕ என்றார்.

இந்த முறிவுப் பிரகடனம் முடிந்து ஒரு மாதமான நிலையில் இப்போது இன்டர்நெட்டில் இந்த நட்சத்திர ஜோடியின் அன்னியோன்யமான படங்கள் வெளியாகியுள்ளன. இருவரும் கன்னத்துடன் கன்னம் வைத்து சிரிப்பது போலவும், இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடுவது போலவும் படங்கள் உள்ளன.

இது குறித்து கேட்க சிம்புவை தொடர்பு கொண்டபோது அவர் மொபைலை  எடுக்கவில்லை. அவரது தந்தை டி.ராஜேந்தர், Ôபோலிப் படங்களை நிஜம்போல காட்டும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லைÕ என்றார்.

நயன்தாரா கூறியதாவது:

சிம்பு எப்படிப்பட்டவர் என்பதை புரிந்துகொண்ட பிறகுதான் அவரை விட்டு விலகினேன். இருவரும் பழகியபோது அடிக்கடி என்னை போட்டோ எடுப்பார். பேப்பர் படிப்பது போல, பல் துலக்குவது போல, சோபாவில் அமர்ந்திருப்பது போல என்று பல கோணங்களில் படங்கள் எடுத்திருக்கிறார். அதையெல்லாம் அவ்வப்போது அழித்துவிட்டதாக கூறுவார்.

அது பொய் என்று இப்போது தெரிகிறது. அவர்தான் இந்த படங்களை வெளியிட்டிருக்க முடியும். முத்தம் போட்டோ எங்கே எப்போது எடுத்தார் என்று தெரியவில்லை. ஒரு பெண் என்றும் பாராமல் என் படத்தை இப்படி உலவ விட்டிருப்பது அவரது தவறான புத்தியை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.

Posted in Allegation, Camera, Cellphone, Gossip, Hotel, Kiss, Manmadhan, Nayan Dhara, Nayan Thara, nayandhara, Nayanthara, Photos, Pictures, Room, Rumor, Rumour, Sex, Silambarasan, Simbhu, Simbu, T Rajendar, T Rajendhar, Tamil Cinema, Tamil Movies, Usha Rajenthar, Vallavan, Vijaya T Rajendar | 12 Comments »