Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Venugopal’ Category

Anbumani Ramadas Health Ministry, AIIMS Venugopal issue conflicting orders on CPRO

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 4, 2007

அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

புதுதில்லி, பிப். 4: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்த எய்ம்ஸின் மக்கள் தொடர்பு ஆலோசகருக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

எய்ம்ஸின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த வர் பி.கே.தாஸ். கடந்த ஜன.31-ஆம் தேதி இவர் ஓய்வு பெற்றார். அன்றைக்கே அவரை எய்ம்ஸ் மக்கள் தொடர்பு ஆலோகராக மீண்டும் நியமித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. எய்ம்ஸின் தலைவர் என்ற முறையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்நிலையில் எய்ம்ஸ் அலுவலகத்துக்கு சென்ற தாஸ், சனிக்கிழமை காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

“என்னைத் தடுத்திய நிறுத்திய காவலர்கள், அவ்வாறு செய்யுமாறு எய்ம்ஸ் இயக்குனர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தனர்’ என தாஸ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பி.கே.தாஸ் நியமிக்கப்பட்டவுடன் அவருக்குப் போட்டியாக ராஜு சிங் என்பவரை மக்கள் தொடர்பு அலுவலரின் பொறுப்பைக் கவனிப்பதற்காக நியமித்தார் எய்ம்ஸ் இயக்குனர் வேணுகோபால். இதையடுத்து தற்போது பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இடஒதுக்கீட்டையும் பின்பற்றவில்லை: மருத்துவ பேராசிரியர்கள் நியமனத்தில் விதிகளை மீறிய “எய்ம்ஸ்’

புதுதில்லி, மார்ச் 6: அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்), மருத்துவப் பேராசிரியர்களை நியமிப்பதில், அப்பட்டமாக விதிகளை மீறியுள்ளது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2003-ல் எய்ம்ஸ் 164 துணைப் பேராசிரியர்களை நியமித்தது. இதில் 84 பேர் இணைப் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.

துணைப் பேராசிரியர்கள், வெளிநாடுகளில் உள்பட வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, எய்ம்ஸ் பதவி உயர்வு அளித்துள்ளதாக மத்திய அரசு தனது பிரமாண வாக்குமூலத்தில் கூறியுள்ளது.

விதிகளை மீறி சட்டவிரோதமாக 164 பேராசிரியர்களை எய்ம்ஸ் நியமித்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் மார்க்கண்டேய கட்ஜு அடங்கிய பெஞ்ச் உத்தரவின்பேரில் மத்திய அரசு இந்த பிரமாண வாக்குமூலத்தைத் தாக்கல் செய்துள்ளது.

பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய விதிகளும் பின்பற்றப்படவில்லை. எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 13 பேரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 46 பேரும் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எஸ்.டி. பிரிவில் 8 பேரும் இதர பிற்படுத்தப்பட்டோர் 17 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணைப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது மற்றும் குறிப்பிட்ட சில துணைப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதை மறுஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Posted in Agitation, AIIMS, Allegation, Anbumani, Anbumani Ramadas, B K Dash, Chief Public Relations Officer, Clashes, Dean, Education, Educational, Ego, Employ, Employment, Experience, Fights, Government, Health Minister, Health Ministry, Institutes, Instructors, OBCs, P Venugopal, Petty, PMK, Procedures, Prof, Professor, Professors, Promotion, Public Relations, Ramadoss, rules, Teachers, tussle, Venugopal | Leave a Comment »

AIIMS student failed due to Director Venugopal’s Vindictive action

Posted by Snapjudge மேல் ஜனவரி 16, 2007

“எய்ம்ஸ்’ மாணவர் அமைச்சர் அன்புமணியிடம் புகார்: தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது பாரபட்சம் என புகார் கூறியதால் தேர்வில் தோல்வி

புதுதில்லி, ஜன. 15: தில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (எய்ம்ஸ்) இறுதி ஆண்டு படித்துவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் அஜய் குமார் சிங், இறுதித் தேர்வில் தம்மை வேண்டும் என்றே நிர்வாகத்தினர் தோல்வி அடையச் செய்துவிட்டதாக புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சரும். எய்ம்ஸ் தலைவருமான அன்புமணிக்கும், யு.ஜி.சி. தலைவர் தொராட்டுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர்களிடம் நிர்வாகத்தினர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக தாம் வெளிப்படையாகப் புகார் கூறியதால் தம்மை தேர்வில் தோல்வி அடையச் செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஆர்.கே.தேவ்ரால், அஜய் குமார் சிங்குக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சிங் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் தேர்வில் தோல்வி அடைந்து மீண்டும் தேர்வு எழுதுவதாக அது கருதப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அஜய் குமார் சிங், எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபாலுக்கும் டீன் ஆர்.சி.டேகாவுக்கும் மற்றொரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் மறு தேர்வு டீன் தலைமையில் நடைபெற வேண்டும் என்றும் விடைத்தாள் பாரபட்சமற்ற குழு திருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மீது நிர்வாகத்தினர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக பிரச்சினையை எழுப்பினார் அஜய் குமார் சிங். இதை மனதில் வைத்துக் கொண்டு அவரை வேண்டும் என்றே தேர்வில் தோல்வி அடையச் செய்துவிட்டனர்’

என்று மருத்துவ விஞ்ஞானிகள் முற்போக்கு அமைப்பைச் சேர்ந்த ஆர்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

மறுதேர்வு நடத்த நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ள போதிலும், தேர்வு அதிகாரிகள் பற்றி சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் பிரசாத் குறிப்பிட்டார்.

“எனினும் அஜய் குமார் சிங் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்படும். இதற்கென தனி தேர்வு குழு அமைக்கப்படும். இது தொடர்பாக இயக்குநருக்கு பரிந்துரைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு வெளியிடப்படும்’ என்று டீன் டேகா தெரிவித்துள்ளார்.

இதனிடையே அஜய் குமார் சிங் இதற்கு முன்பு நடந்துள்ள தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். அப்படியிருக்கையில் இறுதித் தேர்வில் 3 பாடங்களில் அவர் தோல்வி அடைந்ததாக தெரிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.கே.பிரசாத்.

மறுதேர்வு நடந்தாலும் மீண்டும் என்னை தோல்வி அடையச் செய்துவிடுவார்கள். எனவே புதிதாக தேர்வு அதிகாரிகளை நியமித்து, புதிய பேராசிரியர்கள் விடைத்தாள்களை திருத்த அனுமதிக்க வேண்டும் என்கிறார் அஜய்குமார் சிங்.

குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், மருந்துகள் ஆகிய 3 பாடங்களில் சிங் தோல்வி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 17-ம்தேதி சிங் உள்பட வேறு 7 பேருக்கும் சேர்த்து மறுதேர்வு நடைபெற உள்ளது. இந்த 7 பேரில் 6 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

Posted in AIIMS, Ajay Kumar Singh, All-India Institute of Medical Sciences, Anbumani, Anbumani Ramados, anti-reservation, Dr. P. Venugopal, Education, Exam, fail, floating reservation, Progressive Medicos and Scientist Forum, Ramadas, RC Degha, Reservation, RK Devral, RK Prasad, SC/ST, Student, UGC, Venugopal | Leave a Comment »

‘Anbumani Ramadas should be dismissed from Healthcare ministry’- Menaka Gandhi

Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006

அன்புமணியின் முதிர்ச்சியற்ற செயலால் அழியும் எய்ம்ஸ்: மேனகா

புதுதில்லி, நவ. 3: சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியின் முதிர்ச்சியற்ற மற்றும் பொறுப்பற்ற செயலால் தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) அழிந்து வருகிறது என்று பாஜக எம்.பி. மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அன்புமணியை சுகாதாரத் துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் மேனகா காந்தி.

“அன்புமணியின் செயல்பாடுகள் மீது புகார் தெரிவித்து ஆயிரக்கணக்கான புகார் கடிதங்கள் உங்களுக்கு வந்தவண்ணம் உள்ளன. அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் எம்.பி.க்கள் நிலைக்குழு உறுப்பினர்கள் அன்புமணியின் நடவடிக்கை மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் நீட்டிக்க நீங்கள் அனுமதிப்பது ஆச்சர்யமாக உள்ளது’ என்று கடிதத்தில் மேனகா குறிப்பிட்டுள்ளார்.

“அவரை பதவியில் இருந்து நீக்கினால் உங்களுக்கு ஏற்படும் அரசியல் நெருக்கடி எனக்குப் புரிகிறது. எய்ம்ஸ் மருத்துவமனையையே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான ஏழைகளின் மீது கருணை காட்டுங்கள். உங்களது அரசியல் லாபம் முக்கியமா? லட்சக்கணக்கான மக்களின் சுகாதாரமா? எது முக்கியம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ எனவும் அந்தக் கடிதத்தில் மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Posted in AIIMS, Anbumani Ramadas, BJP, Cabinet, Healthcare, Menaka Gandhi, PMK, Ramadoss, Venugopal | 2 Comments »

AIIMS Vengopal’s corrupt practices exposed by the Healthcare Ministry

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

வேணுகோபாலின் ஆதரவாளர்களுக்கு வெளிநாட்டுப் பயணம், நட்சத்திர விருந்து: மக்கள் பணத்தில் “கொண்டாட்டம்’

ஏ. தங்கவேல்

புதுதில்லி, அக். 24: சர்ச்சைக்குரிய அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (AIIMS) இயக்குநர் டாக்டர் பி. வேணுகோபால், தனது ஆதரவாளர்களுக்கு, வெளிநாட்டுப் பயண வாய்ப்புக்கள் வழங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்தளித்து, பொதுமக்கள் பணத்தில் குஷிப்படுத்தியுள்ளார் என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஏஐஐஎம்எஸ்-ஸின் நிர்வாக அமைப்புக் கூட்டம் கடந்த வாரம் நடந்தபோது, இதுதொடர்பான ஆவணங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. அந்த ஆவணங்களின் மூலம், நோயாளிகளுக்கு அல்லாமல் மற்ற தேவையற்ற காரியங்களுக்கு பொதுமக்கள் பணம் விரயமாக்கப்பட்டது தெளிவாகியுள்ளது.

  • ஏஐஐஎம்எஸ் இயக்குநர்,
  • துணை இயக்குநர் அலுவலகத்தின் நான்காம் பிரிவு ஊழியர்கள்,
  • மூத்த நிதி நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு செல்போன்கள் மக்கள் பணத்தில் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஆடம்பர விருந்துகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இயக்குநருக்கு வேண்டிய நபர்களுக்கு, தகுதியில்லாவிட்டால் கூட, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு, விமான டிக்கெட்டுகளுக்காக பெருமளவு தொகை செலவிடப்பட்டுள்ளது. அதுபோன்ற கருத்தரங்குகளுக்கு அனுப்பப்பட்டவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, அவர்களுக்கும் அந்தக் கருத்தரங்ககுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

நோயாளிகளிடமிருந்து அறுவைச் சிகிச்சை மற்றும் ஸ்கேனிங் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்காக ஏஐஐஎம்எஸ் நிர்வாகத்தால் வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை சுமார் ரூ.40 கோடி, விதிகளுக்கு மாறாக, நிரந்தர டெபாசிட்டில் போடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி அறுவைச் சிகிச்சை நடைபெறாத நிலையில், அந்தத் தொகை நோயாளிகளுக்குத் திருப்பியளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

குற்றப்பிரிவு போலீஸôரிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்திய விசாரணையில் வெளியான இந்த விவரங்கள் அடங்கிய அறிக்கையும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வேணுகோபால் உடனடியாகப் பதிலளிக்க முடியவில்லை.

அறுவைச் சிகிச்சைக்குத் தேவைப்படும் கருவிகள் மற்றும் நோயாளிகளுக்கான உணவுப் பொருள்கள், டெண்டர் முறையில் முடிவு செய்யாமல், ஒவ்வொரு ஆண்டும் ஒரே குறிப்பிட்ட சப்ளையரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும், பொதுமக்கள் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான ஆதாரங்கள் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in AIIMS, Anbumani, Corruption, Healthcare, India, Vengopal, Venugopal | Leave a Comment »