Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Vaali’ Category

Thirumagan – Malavika, SJ Surya

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 15, 2007

பாடலோடு வாழ்ந்து….

“திருமகன்’ – மாளவிகா, எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படங்களிலும், நடித்த படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிவிடும். ரத்னகுமார் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கும் “திருமகன்’ படத்தைப் பற்றிக் கேட்டபோது…

“” நான் இயக்கிய “குஷி’ “வாலி’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவா என்னுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். நான் நடித்திருக்கிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை… தேவா இசையமைத்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட். இதுவரை அவர் இசையமைத்த படங்களில் இந்தப் படத்தின் ரீரெக்கார்டிங்குக்காகத்தான் அதிக நாள்கள் செலவிட்டுள்ளார்.

கிராமிய மணம் கமழும் இந்தக் கதைக்கு வைரமுத்துவின் பாடல் வரிகளும், தேவாவின் இசையும் பெரிய பலம். குறிப்பாக

  • “பொறந்தது’,
  • “இதுக்குத்தானா’,
  • “ஷாக்கடிக்குது’,
  • “திருமகனே’ போன்ற பாடல்களைக் கேட்டு, பார்த்து மட்டும் மகிழாமல் பாடியும், பாடலோடு வாழ்ந்தும் மகிழ்வீர்கள். நான் இதுவரை பணியாற்றிய படங்களில் பாடல்கள், வெஸ்டர்ன் கலந்து அல்ட்ரா மாடர்ன் டைப்பில் இருக்கும்; கிராமியப் பின்னணியிலான “திருமகன்’ பாடல்கள் அல்ட்ரா டைப் ஆசாமிகளையும் அசத்தும்” என்றார் எஸ்.ஜே.சூர்யா.

Posted in Deva, Kushi, Malaviga, Malavika, Rathnakumar, SJ Soorya, SJ Surya, Tamil Actor, Tamil Actors, Tamil Actress, Tamil Actresses, Tamil Audio, Tamil Cinema, Tamil Film, Tamil Films, Tamil Movie, Tamil Movies, Tamil Music, Tamil Nadu, Tamil Padam, Tamil Pictures, Tamil songs, Tamil Stars, Tamil Theater, Tamil Theatres, Thirumagan, Thirumakan, Vaali, Vairamuthu, Vali | Leave a Comment »

‘Vyabaari’ song picturisation rumors – SJ Surya’s predatory moves against Malavika?

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா மீது நடிகை மாளவிகாவின் புதிய `செக்ஸ்’ புகார்கள்

கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா இடையில் வாய்ப்பின்றி இருந்தார். வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் பாடல் மீண்டும் பிரபலப்படுத்தியது.

“திருட்டு பயலே” படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியது. தற்போது நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ளார். கூடவே சர்ச்சைகளும் மாளவிகாவை துரத்துகிறது.

தெலுங்கு நடிகர் ராஜேந்திரபிரசாத் மீது ஏற்கனவே செக்ஸ் புகார் கூறினார். ஒரே போர்வைக்குள் இருவரும் நெருக்கமாக இருப்பது போல் ஒரு காட்சி எடுத்தனர். அப்போது ராஜேந்திரபிரசாத் சில்மிஷம் செய்தார். மாளவிகா ஆத்திரத்தில் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வெளியேறினார். நடிகர் சங்கத்திலும் புகார் செய்தார். இந்த சம்பவம் தெலுங்கு தமிழ் படஉலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் சபரி பட தயாரிப்பாளர் சேலம் ஏ. சந்திரசேகரன் சம்பளம் பாக்கி வைத்திருப்பதாகவும் அதை வசூலித்து தரும்படியும் நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். மாளவிகா சூட்டிங்குக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை கேட்டு அடம் பிடித்தார் என்றும் இவரால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தயாரிப்பாளர் குறைபட்டார்.

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா பாடல் காட்சியில் மாளவிகாவிடம் சில்மிஷம் செய்ததாக புகார் கிளம்பியுள்ளது.

ஷக்தி சிதம்பரம் இயக்கும் வியாபாரி படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கிறார்கள். இப்படத்துக்கான பாடல் காட்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரள ஹவுசில் படமாக்கப்பட்டது.

மாளவிகாவுக்கு கொசு கடிக்கும். உடனே அவர் கொசு கடிக்குது கொசு கடிக்குது என்று பாட ஆரம்பிப்பார். அவருடன் எஸ்.ஜே.சூர்யாவும் சேர்ந்து பாடுவார். தேவா இசையில் கவிஞர் வாலி இப்பாடலை எழுதியுள்ளார்.

பாடல் காட்சியில் மாளவிகாவிடம் நெருக்கமாக நடித்தபோது எஸ்.ஜே.சூர்யா கை விரல்கள் மாளவிகா உடலில் தப்புதப்பாக ஊர்ந்ததாம். இதனால் கடுப்பான மாளவிகா படக்குழுவினர் முன்னிலையிலேயே எஸ்.ஜே.சூர்யாவை கன்னா பின்னா வென்று திட்டினாராம். எஸ்.ஜே. சூர்யா மன்னிப்பு கேட்டாராம்.

மாளவிகா வருகிற 18-ந்தேதி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கிறார். அப்போது பரபரப்பான தகவல்களை வெளியிடுவார் என்று தெரிகிறது.

இதற்கிடையில் மாளவிகா மானேஜர் முனுசாமி கூறுகையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் மாளவிகாவுக்கும் மோதல் இல்லை என்றும் சுமூக உறவு உள்ளது என்றும் தெரிவித்தார். எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக பேட்டி எதுவும் கொடுக்கவில்லை என்றும் மறுத்தார்.

Posted in Allegations, Deva, ECR, Gossip, Malaiviga, Malavika, Manager, Molest, Munusami, Rumour, Scandal, Sex, Shakthi Chidhambaram, SJ Soorya, SJ Surya, Tamil Actor, Tamil Actress, Tamil Cinema, Tamil Films, Vaali, Viyabaari, Vyaabari | Leave a Comment »

Director SJ Surya to marry Meera Jasmine – ‘Thirumagan’ Rumor mill

Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006

டைரக்டர் சூர்யா-நடிகை மீராஜாஸ்மின் திருமணமா?

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை மீராஜாஸ்மின். இவர் தமிழில் `ரன்‘, `சண்டக் கோழி‘, உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது `திருமகன்‘ என்ற படத்தில் டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மீராஜாஸ்மின் நடித்து வருகிறார். 6 மாதங்களாக இதன் படப்பிடிப்பு தேனி பகுதியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் இருவரும் நெருங்கி நடித்துள்ளனர்.

அப்போது மீராஜாஸ்மினுக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும், காதல் ஏற்பட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் இருவரும் சந்தித்து மனம் விட்டு பேசிக் கொண்டனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப் பதாக வும் தகவல் வெளியாகி உள்ளது.

மீராஜாஸ்மின் ஏற்கனவே மலையாள பட டைரக்டர் லோகிததாசை காதலித்து வந்தார். சமீபத்தில் அவருடனான காதல் முறிந்து விட்டதாக மீராஜாஸ்மின் அறிவித்தார்.

எஸ்.ஜே.சூர்யாவை திருமணம் செய்வதற்காகவே அவர் லோகிததாசுடனான காதலை முறித்துக் கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.

ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. மீரா ஜாஸ்மினும், எஸ்.ஜே.சூர்யாவும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது பெற்றோரும் சம்மதித்து விட்டதாகவும், நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பதில் தெரிவிக்க மறுத்து விட்டார்.

Posted in A Aa, BF, Director, Gossip, Kushi, Meera Jasmine, New, Rumor, Run, SJ Surya, Tamil Cinema, Tamil Film, Tamil Movies, Thirumagan, Vaali | 1 Comment »

Ilaiyaraja starts a Tamil Ilakkiya Manram with Jeyaganthan as Head

Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006

தமிழ் அறிஞர்களைக் கௌரவிக்க புதிய இலக்கிய மன்றம்- இளையராஜா தொடங்குகிறார்

சென்னை, நவ.7: சிறந்த தமிழ் அறிஞர்களைக் கெüரவிப்பதற்காக இசையமைப்பாளர் இளையராஜா புதிய இலக்கிய மன்றத்தை தொடங்குகிறார்.

இதுகுறித்து இளையராஜா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வரும் அறிஞர்களை கெüரவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதன்படி பலருடன் கலந்தாலோசித்து ஓர் இலக்கிய மன்றத்தை உருவாக்கியிருக்கிறோம்.

இந்த மன்றத்துக்கு அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க “இசைஞானி இலக்கிய மன்றம்‘ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் தொடக்க விழா வரும் டிசம்பர் 2-ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

  • இதற்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைவராகவும்,
  • ஆறு அழகப்பன் செயலாளராகவும் இருப்பார்கள்.
  • அப்துல் ரகுமான்,
  • வாலி,
  • மு.மேத்தா,
  • முத்துலிங்கம்,
  • ஞானசுந்தரம்,
  • திருப்பூர் கிருஷ்ணன்,
  • ரவி சுப்ரமணியம் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

சிறந்த படைப்புகளைப் படைக்கும் அறிஞர்களுக்கும், புதியவர்களுக்கும் இந்த மன்றத்தின் பெயரில் ரொக்கப் பணமும், பரிசுகளும் வழங்கப்படும்.

இவை “பாவலர் வரதராஜன் நினைவுப் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.

என்னுடைய இசையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் “அஜந்தா‘ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் அதே நாளில் பொதுமக்கள் முன்னிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் வரும் லாபத்தை ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக அளிக்கவிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கர். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்றார் இளையராஜா.

Posted in Abdul Rehman, Ajantha, Charity, Ilaiyaraja, Ilakkiya Manram, Isainjaani, Jeyaganthan, Jeyakanthan, Kavikko, Literature, Madurai, Mu Mehtha, Muthulingam, Paavalar, Pavalar Varadarajan, Ravi Subramaniam, Tamil Poets, Thamizh, Thamukkam, Thiruppur Krishnan, Vaali | Leave a Comment »

Kavitha Deepan :: Vetrilai, Paakku, Thaamboolam

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

பாரம்பரியம்: கும்பகோணம் சீவலே… சீவல்!

இ. கவிதாதீபன்

“கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்’ என்று நாட்டாமை திரைப்படத்தில் குஷ்பு சிவக்கச் சிவக்க வெற்றிலை- சீவல் போட்டு சரத்குமாருடன் ஆடும் காட்சியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

வெற்றிலையும் சீவலும் போட்டு குஷியாக இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. முதல் மணக்க மணக்க தாம்பூலம் போட்டு வாய் சிவக்க பாட்டு எழுதிவரும் கவிஞர் வாலி வரை எல்லோருமே வெற்றிலை சீவலின் ரசிகர்கள்தாம்.

அர்ச்சனைத் தட்டில் இறைவழிபாட்டுப் பொருளாகவும், ஆலய விழாக்களில் “விடையமாய்’ கொடுக்கப்படுவதாகவும், நம் வீட்டு விழாக்களுக்கு நட்பை, உறவை, ஊர் மக்களை அழைப்பதற்கு முன்வைப்பதாகவும், தடபுடலான விருந்துக்குப் பின் தாம்பூலம் தரிப்பதாகவும் இந்தத் தொன்மைக் கலாசாரம் இன்றும் தொடர்கிறது.

இன்றைய நாட்களில் இந்தப் பாக்குகள் “போதைப் பாக்குகளாக’ மாறி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு கடைகளில் தொங்கி, நம் இளைஞர்களின் வாய்களில் தங்கி, மெல்ல மெல்ல அவர்களின் உயிரை வாங்கிவிடுவதும் உண்டு.

ஆனால் உண்மையில் மருத்துவக் குணங்கள் நிரம்பியதும், செரிமான சக்தியைத் தூண்டுவதும், சந்தோஷத்தைத் தருவதுமான கொட்டைப்பாக்கு சீவல் நம் தஞ்சை விவசாயிகளின் இடுப்பில் நீங்காத உடுப்பு. ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் இந்தத் தாம்பூலம் நிறையவே இருக்கும்.

உழைக்கும் விவசாயி முதல் உயர்ந்த கலைஞர்கள் வரை உற்சாகமாய்ப் பணிபுரியத் தூண்டும் “தாம்பூலத்தின் தாயான’ கொட்டைப் பாக்கு சீவலைப் பற்றி அறிய, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள “சங்கு சீவல்‘ நிறுவனத்தின் உரிமையாளர் கே. குணசேகரனிடம் கேட்டோம்…

“”எங்களுக்குச் சொந்த ஊர் புதுக்கோட்டை அருகே உள்ள கீரனூர். என்னுடைய அப்பா கிருஷ்ணமாச்சாரி சின்ன வயசிலேயே பிழைப்புக்காக கும்பகோணம் வந்துட்டாங்க. அந்தக் காலத்துல, அதாவது 1943ல அப்பா கைச் சீவலைப் பாக்கு வெட்டி மூலமா தயாரிச்சு அக்கம்பக்கம் விற்க ஆரம்பிச்சாங்க. இந்தச் சீவலுக்கு முக்கியமான மூலப்பொருள் கொட்டைப் பாக்குதாங்க!

கொட்டைப் பாக்கு மரம் பனை மர வகையைச் சேர்ந்தது. ஒல்லியாக, நல்ல உயரமாக வளர்ந்து, தலைப்பாகம் மட்டும் பச்சை நிறமாக இருக்கும். காய் பச்சையா, பழங்கள் மஞ்சளா குண்டு குண்டா அழகாயிருக்கும்.

இது வருடாந்திரப் பயிர் ரகம். விளையிற பாக்கை ரெண்டு மூணுவாட்டி பறிப்பாங்க. முதல் பறிப்பும் கடைசிப் பறிப்பும் அவ்வளவு தரமா இருக்காது. நடுப் பறிப்பை மட்டும் அறுவடை முடிச்சு காய வைச்சு காய் மேல இருக்கிற மட்டையோட பத்திரப்படுத்தி ஒரு வருசத்துக்கு மேல விவசாயிங்க இருப்பு வைப்பாங்க.

பாக்கோட அளவைப் பொறுத்து

  • மோட்டி,
  • மோரா,
  • விச்சாரஸ்,
  • சேவர்தன்,
  • ஜாம்,
  • ஜீனி,
  • ரெண்டி,
  • பூஜா

இப்படின்னு பல ரகம் இருக்கு. இதில நடுத்தரமா சின்னதா இருக்கிற பாக்குதான் இந்தச் சீவல் தொழிலுக்குப் பயன்படுது.
இந்தப் பாக்கு நம்ம தமிழ்நாட்டுல ஊட்டி, மேட்டுப்பாளையம் பக்கம் நிறைய விளையுது. கேரளம், கர்நாடகத்துல முக்கிய பணப் பயிர் இதுதான். குறிப்பா கர்நாடகத்தோட தென் பகுதியும் கேரளத்தோட கடல் பகுதியும் இணைகிற இடத்தில் வளரும் பாக்கு மரத்தில் கிடைக்கும் பாக்கு மிகத் தரமாக இருக்கும். கர்நாடகத்தில் உள்ள புத்தூள், விட்டாலா பக்கம் நல்ல தரமான பாக்கு கிடைக்குது. ஆனா விலை அதிகம். இந்தப் பக்கம் விளைகிற பாக்குக்கு இந்தியா முழுக்க நல்ல சந்தை வாய்ப்பு இருக்கு.

வெளிநாட்டுல மலேசியா, இந்தோனேசியா இங்கெல்லாம் பாக்கு விளைஞ்சாலும் நம்மூரு பாக்கைப் போல தரமா இருக்காது. அந்தமான் தீவுல வெளையுற பாக்கு பெரிசா, லேசா வாசனையோட இருக்கும். இது பெரும்பாலும் கொல்கத்தா சந்தைக்குத்தான் போகும்.

பாக்குல கொட்டைப் பாக்கு, களிப்பாக்கு, பீட்டன் பாக்கு, ஷிமோகா பாக்கு இப்படி நிறைய வகை இருக்கு. அந்தக் காலத்தில எல்லாம் பாக்கைக் கடிச்சு வெத்தலை போடுற அளவுக்கு பல்லு உறுதியா இருந்துச்சு. காலம் மாற மாற பாக்கை சீவலா கொடுக்க வேண்டியதாப் போய்டுச்சு.

எங்க அப்பாதான் முதல் முதல்ல பாக்கிலிருந்து சீவலைத் தயாரிக்கிற மிஷினைக் கண்டுபிடித்தார். இன்னிக்கு பல பேர் சீவல் தொழிற்சாலை வைக்கக் காரணமே அப்பாதான். அப்பாகிட்ட தொழில் கத்துக்கிட்ட பல பேர் இன்னிக்கு பெரிய நிறுவனமா வளர்ந்திருக்காங்க. நாங்களும் அப்பாவை பக்கத்துல வைச்சுக்கிட்டு சிறப்பா தொழில் செஞ்சுக்கிட்டு இருக்கோம். நான் வக்கீலுக்கு படிச்சிருந்தாலும் இந்தத் தொழிலை விடாம செஞ்சுக்கிட்டு வர்றேன்.

பொதுவாக வெத்தலை சீவல் போடுற பழக்கம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலா இருக்கு. நாம எல்லோரும் சாப்பிட்டுட்டு வெத்தலை சீவல் போடுவோம். ஆனா நம்ம விவசாயிகளுக்கு சாப்பாட்டை விட முக்கியமானது இந்த வெத்தலை சீவல்.

இதே சீவலை இன்றைக்குக் கொஞ்சம் நவீனமா சுத்தமான நெய் விட்டு பொன்னிறமாய் வறுத்து நெய்சீவல் என்றும், தேங்காய்ப் பூவுடன், ஏலக்காய், ஜாதிக்காய், கற்பூரம் சேர்த்து புதிய மணத்துடனும் விற்பனை செய்து வருகிறோம். இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் இவற்றுக்கு நல்ல வரவேற்பு உள்ளது சந்தோஷம் அளிக்குது” என்றார் குணசேகரன்.

தஞ்சை காவிரிக் கரையில் பயிராகும் இளந்தளிர் வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பு தடவி, குடந்தை சீவலை வைத்து மடித்து வாயிலிட்டு மென்று, நாவும் உதடும் சிவக்க ஊறும் நறுமண எச்சிலை விழுங்கினால் வருகின்ற ஏப்பம் நல்ல ஜீரணத்தின் அடையாளம்.

என்ன இருந்தாலும் வெற்றிலை சீவல் போடுவோரை பார்க்கும்போது ஒரு வசீகரம் இருக்கத்தானே செய்கிறது.

வெத்தலை பாக்கு சுண்ணாம்பு

பத்திரி ஏலம் கிராம்பு

ரெத்தம் போல சிவந்து போச்சுதே

என் ராஜாத்தி

ஒம் மேலே ஆசையாச்சுதே!

என்று கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் அந்தக் காலத்திலேயே சும்மாவா பாட்டெழுதியிருக்கார்!

Posted in Addiction, Ban, betelnut, Chew, Habit, Kumbakonam, Paakku, Seeval, Thamboolam, Thanjai Ramiah Daas, Vaali, Vethilai, Vetrilai | Leave a Comment »