Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008
கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
 |
|
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர் |
இந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.
இந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
அத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
அதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Posted in Assassination, Assassinations, Batticaloa, Campaign, Civil Monitoring Committee, Colombo, dead, Devananda, Devanandha, Devanantha, Douglas, Douglas Devananda, Eelam, Eezham, Election, Elections, EPDP, Ganesan, guards, Hindu, Jaffna, Joseph, Joseph Pararajasingham, Killed, Kochchikkadai, Kotahena, LTTE, Mageshwaran, Magesvaran, Mageswaran, Maheshwaran, Mahesvaran, Maheswaran, Mahinda, Mahindha, Mahintha, Mano, Mano Ganesan, MP, Murder, Muthukumar, Muthukumar Sivapalan, Nadaraja, Nadarajah, Nadarajah Raviraj, Nataraja, paramilitary, Pararajasingam, Pararajasingham, Pararajasinkam, Parliamentarian, Polls, Ponnambala Vaneswara Hindu Temple, Rajapaksa, Ranil, Raviraj, Security, Sivabalan, Sivapalan, Sri lanka, Srilanka, Tamil, Tamil National Alliance, Temple, terror, Terrorists, Thiagaraja, Thiyagaraja, Thiyagarajah, Thiyagarajah Maheswaran, TNA, UNP, Western Province Peoples Front, Wickremasinga, Wickremasinge, Wickremasingha, WPPF | 2 Comments »
Posted by Snapjudge மேல் ஜனவரி 30, 2007
இலங்கையில் கட்சித் தாவல்
இலங்கையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் கட்சி மாறி ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்து பதவி பெற்றுள்ளதன் விளைவாக இலங்கை அரசியலில் புதிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒன்றுபட்ட தீர்வு காணும் முயற்சிக்குப் பின்னடைவை உண்டாக்கலாம் என்று கருதப்படுகிறது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரின் கட்சித் தாவல் எதிர்பார்க்காமல் நிகழ்ந்த ஒன்று அல்ல. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஆளும் இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் இடையே கடந்த அக்டோபரில் ஒத்துழைப்புக்கான உடன்பாடு ஏற்பட்டது. நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளில் ஒன்றுபட்டு தீர்வு காண்பது என்பதே இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சம். அப்போதிலிருந்தே எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் அரசில் பங்கு பெற வேண்டும் என்று கோரி வந்தனர்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி பிளவுபட்டது. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியில் பகிரங்கமாகவே எதிர்ப்பு கிளம்பியது. இவரை எதிர்த்தவர்கள் கட்சியில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என ஏற்கெனவே கோரி வந்தவர்கள். இவர்கள் ஆளும் கட்சிக்குத் தாவுவதைத் தடுக்க கடைசி நேரம்வரை முயற்சி நடந்தது. புத்த பிக்குகளும் தலையிட்டு சமரசம் செய்ய முயன்றனர்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த 25 எம்.பி.க்கள் ஆளும் கட்சிக்குத் தாவ விரும்பியதாகவும் ஆனால் 20 பேருக்கு மேல் வர வேண்டாம் என்று இலங்கை அதிபர் ராஜபட்சய கூறியதாகவும் சொல்லப்படுகிறது. 20 பேருக்கு மேல் கட்சி மாறினால் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க நேரிட்டிருக்கும். அப்போது தீவிரப் போக்குக் கொண்ட சிங்களர் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுணாவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துவிடும். இதை ராஜபட்சய விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுணாவுடன் கூட்டு சேர்ந்துதான் இலங்கை சுதந்திரக் கட்சியானது ஆட்சியைப் பிடித்தது. இனி அக் கட்சியை ராஜபட்சய நம்பி நிற்க வேண்டி இராது. அந்த நிலை வரக்கூடாது என்பதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று ஜனதா விமுக்தி பெரமுணா தீவிரமாக எதிர்த்தது.
இதற்கிடையே கட்சி தாவிய எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. இப்போது 20 எம்.பி.க்கள் கட்சி தாவியுள்ளதன் மூலம் ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது என்பது உண்மையே. ஆனால் ராஜபட்சயவுக்கு தமது கட்சிக்குள் தலைவலி காத்து நிற்கிறது என்று கூறலாம். இதுவரை வெளியுறவு அமைச்சராக இருந்த சமரவீரா, அதிபர் ராஜபட்சயவுடன் கருத்து வேறுபாடு கொண்டவர். இப்போது சமரவீராவிடமிருந்து வெளியுறவுத் துறை பறிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறமிருக்க, இலங்கை அரசில் தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 104-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 பேர் காபினட் அந்தஸ்து கொண்டவர்கள். சின்னஞ்சிறிய நாடான இலங்கைக்கு இவ்வளவு அமைச்சர்கள் தேவையா என்று கேட்கலாம். ஆனால் ஆட்சி அதிகாரம் என்று வரும்போது இதெல்லாம் கவனிக்கப்படுவதில்லை.
கட்சித் தாவலைத் தொடர்ந்து கடந்த அக்டோபரில், ஆளும் கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு முறிந்து விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஆகவே, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எதிர்க்கட்சியினர் அரசுடன் ஒத்துழைக்க முன்வராமல் போகலாம்.
Posted in Anura Priyadarshana Yapa, Communist, Dinamani, Eezham, Jantha Vimukthi Peramuna, Jathika Hela Urumaya, JHU, JVP, Karuna, LTTE, Mahinda Rajapakse, Marxist, Op-Ed, Opinion, Opposition, parliament, Party, Peace, Politics, President, SLFP, SLMC, Sri lanka, Sri Lanka Freedom Party, Sri Lanka Muslim Congress, Srilanka, Tamil Tigers, Tissa Attanayake, United National Party, UNP, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006
பிரபாகரன், இலங்கை அதிபரை சந்திக்க வருகிறார் நார்வே தூதர்: அமைதிப் பேச்சு வார்த்தை
புதுதில்லி, செப். 29: இலங்கை அரசும், விடுதலைப் புலிகள் அமைப்பும் மீண்டும் அமைதிப் பேச்சை தொடங்குவது பற்றி விவாதிக்க நார்வே நாட்டின் சிறப்புத் தூதர் ஜான் ஹான்ஸன் பாயர், வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செல்கிறார்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைதிப் பேச்சை மீண்டும் தொடர புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில் ஜான் ஹான்ஸன் பாயரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செல்லும் ஹான்ஸன் பாயர் முதலில் இலங்கை அரசின் முக்கியத் தலைவர்களை சந்திக்கிறார். பின்னர் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்திக்கிறார். அமைதிப் பேச்சை எங்கு, என்ன தேதியில் தொடங்குவது என்பது குறித்து பிரபாகரனிடம் அவர் விவாதிப்பார்.
இலங்கையில் பாதுகாப்பு நிலைமை சீரடைந்ததும் நார்வே நாட்டின் சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சர் எரிக் சோல்ஹைம் இலங்கை சென்று அதிபரையும், புலிகள் தலைவர் பிரபாகரனையும் சந்திக்க இருக்கிறார்.
இந்த ஆண்டு ஜனவரியில் சோல்ஹைம், புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து வன்முறைகள் ஓய்ந்து அமைதிப் பேச்சு தொடங்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால் எதிர்பார்த்ததுபோல் எதுவும் நடக்கவில்லை.
2002-ல் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு இருதரப்பினரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர்.
இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாயினர். ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேறினர்.
இதற்கிடையே இலங்கைக்கு நிதி உதவி செய்யும் நாடுகள் கூட்டம் வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இரு தரப்பினரும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்தியாவும் இதே கருத்தை வலியுறுத்தி வந்துள்ளது. சமீபத்தில் தில்லி வந்திருந்த எல்.டி.டி.ஈ. ஆதரவு இலங்கை எம்.பிக்கள் மற்றும் புலிகள் எதிர்ப்பு இயக்கங்களான
- தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் வி.ஆனந்தசங்கரி,
- தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பின் தலைவர் டி.சித்தார்த்தன்,
- ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த டி.ஸ்ரீதரன் ஆகியோரிடமும் இனப் பிரச்சினைக்கு விரைவில் சுமுக தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை இந்தியா நேரில் வலியுறுத்தியது
Posted in Anand Sankari, Anandasangaree, D Sitharthan, D Sritharan, Eelam People's Revolutionary Liberation Front, Eezham, EPRLF, LTTE, Norway, Peace, People's Liberation Organisation of Tamil Eelam, plot, SLFP, Sri lanka, Sri Lanka Freedom Party, Tamil, Tamil United Liberation Front, TULF, United National Party, UNP | Leave a Comment »