6 கிராமங்களில் விஷவாயு வெளியேறியது எப்படி? விசாரணை நடத்த ம.பி. அரசு உத்தரவு
போபால், அக். 16-
மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டம் உம்ராகஞ்ச் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, திடீர் என்று விஷவாயு பரவியது. இந்தவிஷவாயு எங்கிருந்து வெளியேறியது என்பது மர்மமாக இருக்கிறது.
இந்த விஷவாயு 6 கிராமங்களுக்கு பரவியதால் 1500 பேர் மூச்சுதிணறல், வாந்தி , மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.
விஷவாயு எங்கிருந்து பரவியது?என்பது பற்றி மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டு இருக்கிறது.