Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Underworld’ Category

Dawood Ibrahim: India CBI vs Pakistan ISI in US of America’s CIA

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 8, 2007

———————————————————————————————————————–
தாவூத் இப்ராகிம் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு- பாகிஸ்தான் உளவுப்படை முடிவு

இஸ்லாமாபாத், ஆக.8-

மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் தன்கூட்டாளிகள் சோட்டா ஷகீல், டைகர் மேமனுடன் பாகிஸ் தானில் பதுங்கி இருக் கிறான்.

இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு அவன் ஆயுத சப்ளைசெய்து வரு வதால் அவனை பிடித்து ஒப்படைக்கும்படி இந்தியா கடந்த 14 ஆண்டுகளாக பல தடவை கேட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் அல்- கொய்தா இயக்கத்துக்கு நிதி உதவி, ஆயுத சப்ளை செய்வதால், அவனை தங் களிடம் ஒப்படைக்க வேண் டும் என்று அமெரிக்க கூறி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தாவூத் இப்ராகிம் சோட்டா ஷகீல், டைகர் மேமன் ஆகிய மூவரையும் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ பிடித்து தன் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண் டையில் இடது காலில் காயம் அடைந்து கராச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியானது. இதனால் தாவூத் இப்ராகிம் பற்றி குழப்பம் ஏற்பட்டது. தாவூத் இப்ராகிம் தன் செல்போனை எடுத்து பேசாததால் அவர் பிடிபட்டு இருக்கலாம் என்று அவரது கூட்டாளிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்திய உளவுத்துறை இது வதந்தியாக இருக்கலாம் என்றது, என்றாலும் நேற்று காலை மத்திய அரசு, “தாவூத் இப்ராகிமை ஒப்படையுங்கள்” என்றும் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்தது.

தாவூத் இப்ராகிம் பற்றி இந்திய தொலைக்காட்சிகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்களை வழக்கம் போல பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்திë தொடர்பாளர் பிரீகேடியர்ஜாபித் இக்பால் சீமா கூறியதாவது:-

தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் யாரும் பாகிஸ்தானில் இல்லை. அந்த பெயருடைய யாரையும் பாகிஸ்தான் ராணுவமோ, போலீசோ கைது செய்யவில்லை. அவரை நாங்கள் கைது செய்ததாக வெளியான தகவல்களில் சிறி தும் உண்மை இல்லை.

இத்தகைய தகவலை பரப்பி விட்டது யார் என்று தெரியவில்லை. அதிபர்முஷ ரப் ஞாயிற்றுக்கிழமை முதல் கராச்சியில்தான் இருக்கிறார். இதனால் கராச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கராச்சியில் துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்பே இல்லை. அப்படி நடந்திருந்தால் இவ்வளவு பெரிய நகரில் அதை எப்படி மூடி மறைக்க முடியும்ப

இவ்வாறு பிரீகேடியர் ஜாவீத் இக்பால் சீமா கூறினார்.

தாவூத் இப்ராகிம்பற்றி வெளியாகி வரும் முரண் பாடான தகவல்கள் துபாய், மற்றும் மும்பையில் உள்ள உறவினர்களையும், கூட் டாளிகளையும் தவிக்க வைத் துள்ளது. தாவூத், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவ ரையும் கடந்த 3 தினங்களாக தொடர்பு கொள்ள இய லாததால் நெருங்கிய உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தாவூத் இப்ராகிமின் சகோதரி ஹசீனாபர்க்கர் நேற்று குடும்ப உறுப்பினர் களுடன் சேர்ந்துநீண்ட நேரம் தொழுகையில் ஈடுபட்டார். அவர் கூறுகையில் “கடந்த சில தினங்களாக தாவூத்துடன் பேச முடியவில்லை. போன் தொடர்பு துண்டிக்கப்ப ட்டுள் ளது” என்று கவலையுடன் கூறினார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் போலீசார், தாவூத் இப்ராகிம் கைது செய்யப்பட்டுள்ளதை இன்று காலை உறுதி செய்த னர். போலீஸ் அதிகாரி ஒருவர் இது பற்றி கூறுகையில், “தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஐஎஸ்.ஐ. கைது செய்துள்ளது. ப.லுசிஸ்தான் தலைநகரான குயட்டாவின் புறநகரில் ஒரு பங்களாவில் அவர்கள் மூவரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

போலீசார் வெளியிட்டுள்ள இந்த தகவல் தாவூத் இப்ராகிம் குடும்பத்திலும் கூட்டாளிகள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ் தான் வாயை திறந்து உண் மையை வெளியிடாத வரை இந்த விவகாரத்தில் குழப் பமே மிஞ்சும் என்ற நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் காதும் காதும் வைத்தது போல மிக ரகசியமாக அமெ ரிக்காவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் முடிவு செய் துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆப் கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்திடம் அவர்களை பாகிஸ்தான் உளவுத்துறை ஒப்படைக்கும் என்று கூறப்படுகிறது.

இது சாத்தியப்படாதபட் சத்தில் தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், சோட்டாஷகீல் மூவரையும் பாகிஸ்தான் உளவு அமைப்பே சுட்டுக் கொன்று விடும் என்று தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான நெருக்கடியால் முஷரப் அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

கடந்த 14 ஆண்டுகளாக இந்தியா கேட்டபோது பாகிஸ் தான் தாவூத் எங்களிடம் இல்லை, இல்லை என்று சாதித்து விட்டது. ஆனால் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் தாவூத் இப்ராகி மின் அல்-கொய்தா தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபித்தது.

இதனால் நெருக்கடிக்குள் ளான பாகிஸ்தான், தாவூத் இப்ராகிம் தலைவலியாக மாறிவிட்டதால் அவன் கதையை முடித்து விடலாம் என்ற உச்சக்கட்ட முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தாவூத் இப்ராகிமுக்கு சர்வதேச அளவில் பரம எதிரியாக இருப்பவன் சோட்டா ராஜன். இவனும் மும்பை நிழல் உலக தாதாக் களில் ஒருவன் ஆவான். சிங் கப்பூரில் பதுங்கி இருக்கும் இவன் கூறியதாவது:-

தாவூத் இப்ராகிம் பாகிஸ் தானில்தான் இருக்கிறான். அங்கு முகத்தை சர்ஜரி செய்து மாற்றி உள்ளான். அடிக்கடி ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளுக்கு போய் வருகிறான்.

என் துப்பாக்கி குண்டுகளுக் குத்தான் அவன் சாக வேண் டும். என்னுடைய இந்த லட் சியம் நிறைவேறும் வரை நான் ஓய மாட்டேன்.

இவ்வாறு சோட்டா ராஜன் கூறினான்.
———————————————————————————————————————–
13 ஆண்டுகள் தலைமறைவு- மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளுடன் கைது

மும்பை, ஆக. 7-

1993-ம் ஆண்டு 300 பேரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு “மூளை” யாக இருந்து சதி திட்டத்தை நிறை வேற்றியவன் தாவூம் இப்ராகிம்.

மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த இவன் மும்பையில் குண்டுகள் வெடிப்பதற்கு முந்தின நாளே கூட்டாளிகளுடன் துபாய் வழியாக பாகிஸ் தானுக்கு தப்பிச் சென்று விட்டான்.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் அவன் தங்கி இருந்தான். அவனுக்கு தேவையான எல்லா வசதி களையும் பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் உளவுத் துறையும் செய்து கொடுத்தது. பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் வைத்துள்ள தாவூத் இப்ராகிம் கடந்த 13 ஆண்டுகளாக கராச்சியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.

இதைக்கண்டு பிடித்த இந் திய உறவுத் துறை கராச்சி யில் இருக்கும் தாவூத் இப் ராகிமையும், அவன் கூட் டாளிகளையும் கைது செய்து ஒப்படைக்குமாறு வேண்டு கோள் விடுத்தது. இதை ஏற்க மறுத்த பாகிஸ்தான் அரசு, தாவூத் இப்ராகிம் என்ற பெயரில் பாகிஸ்தான் நாட்டில் யாரும் இல்லை என்று அறிவித்தது. கடந்த 13 ஆண்டுகளாக தாவூத் இப்ராகிம் பற்றிய எல்லா தக வல்களையும் பாகிஸ்தான் மறுத்தே வந்தது.

கடந்த 2005-ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் தன் மூத்த மகள் மக்ரூக் இப்ராகிமை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டட்டின் மகன் ஜுனையட் மியான்டட்டுக்கு திருமணம் செய்து கொடுத்தார். இதன் மூலம் தாவூத் இப்ராகிம் கராச்சியில் வாழ்வது உறுதி படுத்தப்பட்டது. அப்போதும் பாகிஸ்தான் தாவூத் இப்ராகிமை பிடித்து இந்தி யாவிடம் ஒப்படைக்க முன்வரவில்லை.

இதற்கிடையே உலக அள வில் பின்லேடனின் அல் கொய்தா பயங்கர வாதி களை ஒடுக்க தீவிர நடவடிக் கைகளில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவத்தின் பார்வையில் தாவூத் இப்ராகிம் சிக்கினான். உலகம் முழுக்க “ஹெராயின்” போதை பொருட்களை வினியோகிக்கும் தாவூத் இப் ராகிமின் கும்பல், கடந்த சில ஆண்டுகளாக அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பல வகை களில் மறைமுக உதவிகள் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு தேவை யான ஆயுதங்களையும் வெடிப் பொருட்களையும் ரகசியமாக கடத்தி சென்று ஒப்படைக்கும் படுபாதக செயலை தாவூத் இப்ராகிம் கும்பல் செய்தது. அதோடு அல் கொய்தா இயக் கத்துக்கு அவன் நிதி உதவியும் செய்தான். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, தாவூத் இப்ராகிமை பிடித்து எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கோரிக்கை விடுத்தது.

இதற்கும் பாகிஸ்தான் வழக்கம் போல மழுப்பலான பதிலையே அளித்தது. தாவூத் இப்ராகிமுக்கும், அவனது கும்பலுக்கும் பாகிஸ்தான் அரசே அடைக்கலம் கொடுப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, அவர்களை கராச்சியில் இருந்து விரட் டும்படிமுஷரப்புக்கு நெருக்கடி கொடுத்தது.

இந்த நிலையில் கராச்சியில் உள்ள ரீஜெண்டு கிரவுன் பிளாசா ஓட்டலில் தாவூத் இப் ராகிமுக்கும், பிர்ரா ஜ×தீன் பவீசா என்ப வனுக் கும் இடையே கடந்த வியா ழக்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் தாவூத் இப்ராகிம் இடது காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியா னது. இது உலகம் முழுக்க தாதா கும்பலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அத்தகைய சம்பவம் எது வும் நடைபெறவில்லை என்று கராச்சி போலீசார் மறுத்தனர்.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் உளவுபடையிடம் சிக்கி உள்ள தகவல் நேற்றிரவு வெளியானது. பாகிஸ்தான் – ஆப்கானிஸ் தான் எல்லையில் உள்ள ஒரு ஊரில் தாவூத் இப்ராகிம் பதுங்கி இருந்த போது ராணுவத்தினரும், உளவுத் துறையினரும் அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். உளவுத் துறையினர் அவனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தாவூத் இப்ராகிமுடன் அவனது நம்பிக்கைக்குரிய கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை முன் நின்று நடத்திய டைகர் மேமனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் குவாட்டா நகரின் புறநகரில் உள்ள ஒரு பங்களாவில் பலத்த பாதுகாப்புடன் உளவுத் துறை வைத்துள்ளது. இது பற்றி சர்வதேச நாடுகள் கேட்டதற்கு வழக்கம் போல பாகிஸ்தான் மவுனம் சாதித்து

வருகிறது.தாவூத் இப்ராகிம் துப்பாக்கி சண்டையில் காயம் அடைந்துள்ளானாப அல்லது அவனை பாகிஸ்தான் உளவு படை பிடித்து வைத்துள்ளதா? என்பன போன்ற எதையும் பாகிஸ்தான் உறுதி செய்யவில்லை. இதில் பதில் கூறினால் தனக்கு நெருக்கடி ஏற்பட்டு விடும் என்று பாகிஸ்தான் அரசு பயப்படுகிறது. எனவே தாவூத் இப்ராகிம் பிடிபட்டுள்ளதை மூடி மறைக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.

தாவூத் பற்றி வெளியாகும் தகவல்கள் வெறும் புரளி என்று இந்திய உளவுத்துறை கூறி உள்ளது. தாவூத்தை காப்பாற்ற பாகிஸ்தான் நாடக மாடுவதாக இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.

என்றாலும் தாவூம் இப்ரா கிம் உளவுப்படையிடம் சிக்கி இருப்பதை மும்பை, துபாய், லண்டனில் உள்ள அவன் கூட்டாளிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போன்களில் இதுவரை அறிமுகம் இல்லாதவர்கள் பேசுவதால் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தாவூத் இப்ராகிமின் செல்போனை எடுத்து பேசும் உளவுப் படையினர் மறு முனையில் பேசுபவரிடம் “உங்கள் பெயர் என்னப எங்கு இருந்து பேசு கிறீர்கள்ப சொல்லுங்கள். தாவூத்பாயிடம் சொல்லி விடுகி றோம்” என்றே சொல்கி றார்களாம்.

கடந்த 13 ஆண்டு தலை மறைவு வாழ்க்கையில் தாவூத் இப்ராகிமிடம் இருந்து இப்படி பதில் வந்ததே இல்லையாம். இதனால் தாவூத் இப்ராகிம் கூட்டாளிகள், தொழில் நண்பர்கள் மிகவும் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இதற்கிடையே தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல், டைகர் மேமன் மூவரையும் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து ஆயுத சப்ளை செய்து வருவதால் தாவூத் இப்ராகிம் நடவடிக்கையை முடக்குவதை மிக முக்கிய பணியாக இந்தியா கருதுகிறது.

அது போல உலக அளவில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு உதவுவதால் தாவூத் இப்ராகிமை பிடித்து தண்டிக்க அமெரிக்க ராணுவம் துடி துடித்துக் கொண்டு இருக்கிறது. இந்தியா, அமெரிக்கா இரண்டுமே தாவூத் இப்ராகிமை பெற சர்வதேச போலீஸ் உதவியை நாடி உள்ளன. ஆனால் பாகிஸ்தான் தன் மவுனத்தை கலைத்து தாவூத் இப்ராகிம் பற்றிய மர்மங்களை உலகுக்கு வெளிப்படுத்துமா என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது.
———————————————————————————————————————–

Posted in 1993, 9/11, AK-47, AK47, Al Qaida, Al Quaeda, Al quaida, al-Qaeda, Al-Queda, Al-Umma, America, Arabia, Arms, Arrest, Assets, Backgrounder, Baluchistan, Bharatiya Janata Party, Biosketch, BJP, Blast, Bombay, bombings, Bombs, CBI, Chhota, Chhota Rajan, Chhota Shakeel, Chota, CIA, Clifton, Clifton beach, Clifton Kahakasha, Cocaine, Commerce, Company, Criminal, Currency, Custody, D-company, Dawood, Dawood Ibrahim, dead, Dealer, Death, defence, Defense, Detained, Detainee, Don, Drugs, Dubai, Dutt, Estate, Extortion, extradition, Extremism, Extremist, Extremists, Faces, Fake, Finance, Gulf, Haseena, Haseena Parkar, Hasina, Havala, Hawala, Hindutva, Ibrahim, Illegal, India, Intelligence, Inter Services Intelligence, Interpol, Investigation, Iraq, ISI, Islam, Jama’at ud-Dawa, Justice, Karachi, Kovai, Law, Masjid, Memon, Military, Money, Movies, Mumbai, Murder, Musaraf, Musaraph, Musharaf, Musharaff, Musharaph, Musharraf, Muslim, Narcotics, Navy, NDA, Order, Pakistan, Parkar, people, Pervez, Pervez Musharraf, Police, Property, Quetta, Rajan, RSS, Saudi, Security, Shakeel, Smuggle, smuggler, Smuggling, Terrorism, terrorist, Terrorists, Tiger, Treaty, UAE, Underworld, UPA, US, USA, Weapons, WTC, Yakub, Yakub Memon | Leave a Comment »

Samuels accused of liaison with bookmaker – Underworld rivalry in cricket betting

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 8, 2007

தாவூத் இப்ராகிம் கூட்டாளியிடம் சூதாட்டம்: சாமுவேல்ஸ் லஞ்சம் வாங்கினாரா?

நாக்பூர், பிப்.8-

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே நாக்பூரில் கடந்த மாதம் 21-ந் தேதி நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்று இருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சாமுவேல்சிடம் நாக்பூர் போட்டிக்கு முந்தைய இரவில் தாவூத் இப்ராகிம் கூட்டாளியும், சூதாட்டக்காரருமான முகேஷ் கொச்சார் டெலிபோனில் பேசியது அம்பலமாகி உள்ளது.

முகேஷ் கொச்சார்- சாமுவேல்ஸ் இடையே நடந்த டெலிபோன் உரையாடலை நாக்பூர் போலீசார் டேப் செய்து உள்ளனர். பேட்டிங் வரிசை, பந்து வீச்சு வரிசை உள்பட பல்வேறு தகவல்களை சூதாட்டக்காரரிடம் சாமுவேல்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக நாக்பூர் போலீஸ் உதவி கமிஷனர் அமிதேஷ்குமார் கூறியதாவது:-

அணியில் இடம் பெறும் வீரர்கள், யார் யார் பந்து வீசுவார்கள் உள்பட பல விவரங்களை சாமுவேல்ஸ் சூதாட்டக்காரர் முகேஷ் கொச்சரிடம் பேசியதை டேப் செய்துள்ளோம். இது மேட்ச் பிக்சிங் (வெற்றி-தோல்வி நிர்ணயம்) அல்ல. அணியின் நம்பிக்கைக்குரிய சில விஷயங்கள் பரிமாறப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சூதாட்டக்காரரிடம் சாமுவேல்ஸ் பணம் வாங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துணை போலீஸ் கமிஷனர் கூறும் போது இருவருக்கும் இடையே பணம் ஒப்பந்தம் நடந்ததா என்ற விவரம் இல்லை என்றார்.

சாமுவேல்ஸ் சூதாட்டக்காரருடன் தொடர்பு வைத்திருப்பது தொடர்பான அறிக்கை தங்களுக்கு வந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஆகியவை இன்று தெரிவித்தன.

இது தொடர்பாக சாமுவேல் சிடம் கேட்டபோது முகேஷ் கொச்சாரை எனக்கு தெரியும். ஆனால் அவர் சூதாட்டக்காரர் என்பது தெரியாது என்றார்.

இந்த தகவல் அறிந்ததும் சாமுவேல்ஸ் தாயார் லூனன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தன்னால் இதை நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

இதே போல இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சந்தீப்பட்டீல், சாந்து போர்டே ஆகியோரும் அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்.

சூதாட்டக்காரரிடம் தொடர்பு கொண்டதன் மூலம் சாமுவேல்ஸ் ஐ.சி.சி. நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். விரைவில் அவரிடம் ஐ.சி.சி. விசாரணை நடத்தும். இதற் காக அவருக்கு சில போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்படலாம்.

நாக்பூர் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 3 விக் கெட்டுக்கு 338 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 324 ரன் எடுத்தது. இதனால் 14 ரன்னில் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது.

இந்த ஆட்டத்தில் சாமுவேல்ஸ் 10 ஓவர் வீசி 53 ரன் விட்டுக்கொடுத்தார். விக்கெட் கைப்பற்றவில்லை. பேட்டிங் கில் 60 பந்துகளில் 40 ரன் எடுத்தார்.

கிரிக்கெட் சூதாட்டத்துக்கு ஆதாரம் கிடைக்கவில்லை: விசாரணையை கைவிட முடிவு

மும்பை, பிப்.11-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் இந்திய கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் முகேஷ் கோச்சாருடன் டெலிபோனில் ரகசியமாக பேசியதால் சூதாட் டம் நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதுபற்றி நாக்பூர் போலீசில் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் இருவரும் பேசிய டெலிபோன் உரையாடலில் சூதாட்டம் நடந்ததற்கான எந்த தகவலும் இல்லை. விளையாட்டை பற்றியும், வீரர்களை பற்றியும் விவாதித்த வார்த்தைகள் தான் இடம் பெற்று உள்ளன. இதை வைத்து சூதாட்டம் நடந்ததாக தீர்மானிக்க முடியவில்லை.

பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி னார்கள். ஆனாலும் எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. யாரும் இது சம்பந்தமாக புகாரும் கொடுக்கவில்லை. எனவே மேற்கொண்டு விசார ணையை தொடராமல் இந்த பிரச்சினையை கைவிட போலீசார் முடிவு செய்துள்ள னர்.

இந்த பிரச்சினை குறித்து ஏற்கனவே கிரிக்கெட் சங்கத் திடம் தெரிவித்து விட்டனர். எனவே அவர்களும் விசார ணையை தொடங்கி உள்ளனர். இதனால் போலீசார் விசா ரணை தேவை இல்லை என் றும் கருதுகிறார்கள்.

உலக கோப்பை போட்டி தொடங்க போகிற நேரத்தில் பிரச்சினையை கிளப்பினால் அது வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும், மராட்டிய போலீசார் மவுனம் காக்க முடிவு செய்துள்ளனர்.

கிரிக்கெட் சூதாட்டம்: ராபின்சிங்- சாமுவேல்ஸ் ரகசிய தொடர்பா?

சென்னை, பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த 3 தொடரில் முதல் போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று இப்போது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்ட ஏஜெண்டாக செயல் பட்டவர் சுரேஷ் கோச்சார். இவர் போட்டி நடப்பதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமு வேல்ஸ்சிடம் பலமுறை டெலிபோனில் பேசி உள்ளார்.

அப்போது மைதானங்கள் நிலைமை எந்தெந்த வீரர்கள் எந்த வரிசைப்படி இறங்குவார்கள். வெஸ்ட் இண்டீஸ் என்ன திட்டங்களை வைத்துள்ளது போன்ற விவரங்களை எல்லாம் கூறி இருக்கிறார். இதையடுத்து கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சாமுவேல்ஸ் – முகேஷ் கோச்சார் இருவருக்கும் இடையே இடம் பெற்ற உரையாடலில் பல தடவை ராபின்சிங் என்ற பெயர் உச்சரிக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் குறிப்பிட்ட ராபின்சிங் யார்ப என்று தெரியவில்லை. ஆனால் தமிழக கிரிக்கெட் வீரர் ராபின்சிங்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது பற்றி ராபின்சிங்கிடம் கேட்டபோது எனக்கும் சாமுவேல்ஸ்சுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சூதாட்டத்தில் எனக்கு பங்கும் இல்லை என்று கூறினார்.

கிïபா நாட்டில் புதிதாக கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயிற்சியாளராக ராபின்சிங் நியமிக்கப்பட்டு இருந்தார். இதற்காக கிïபா சென்றிருந்த அவர் நேற்று தான் சென்னை திரும்பி இருக்கிறார்.

ஆனால் ராபின்சிங்குக்கும் சாமுவேல்ஸ்க்கும் ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ராபின்சிங் சென்னையில் வசித்தாலும் அவர் வெஸ்ட் இண்டீசில் தான் பிறந்தார். இந்தியாவில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்ற ஏராளமான குடும்பங்கள் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வசிக்கின்றன.

அதில் ராபின்சிங் குடும்ப மும் ஒன்று. இடையில் அவர்கள் குடும்பம் சென்னை வந்து விட்டது. இப்போதும் ராபின்சிங்கின் உறவினர்கள், நண்பர்கள் அங்கு வசிக்கின்றனர்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கும் ராபின்சிங்குக்கும் தொடர்பு இருக்கலாம். இதில் சாமு வேலுடன் அவர் ரகசிய தொடர்பு வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மராட்டிய போலீசார் சூதாட்டம் நடந்ததாப என்று தீவிர விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். அவர்கள் ராபின்சிங்கிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உண்மை வெளிச் சத்துக்கு வரும்.

சூதாட்ட தரகரை சந்திக்க 4 நாட்கள் ஓட்டலில் காத்திருந்த சாமுவேல்ஸ்: போலீசார் தகவல்

நாக்பூர், பிப். 10-

நாக்பூரில் கடந்த மாதம் 21-ந்தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாவூத் இப்ராகிம் கூட்டாளியும், சூதாட்ட தரகருமான முகேஷ் கோச்சர் போனில் தொடர்பு கொண்டு சாமுவேல்சிடம் பேசியதை போலீசார் டேப் செய்துள்ளனர்.

இதில் அவர் அணியின் நிலவரம் குறித்த பல்வேறு தகவல்களை பரிமாறி இருக்கிறார். சாமுவேல்ஸ் தங்கி இருந்த பிரைட் ஓட்டலில் 206 நம்பர் அறையில் தனது மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு 3 முறை பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

சூதாட்டத்தில் ஈடுபட்ட சாமுவேல்ஸ் லஞ்சமாக பணம் வாங்கினாரா? என்ற ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நாக்பூர் போலீஸ் கமிஷனர் யாதவ் கூறும்போது, பண பரிவர்த்தனை நடந்ததா என்பது பற்றி விசாரிக்க நாங்கள் அமலாக்க பிரிவினருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் பண பரிவர்த்தனை நடந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று கூற முடியாது என்றார்.

இதற்கிடையே சாமுவேல்ஸ் பற்றி புதிய தகவல்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் அனைவரும் புறப்பட்ட நேரத்தில் அவர் செல்லவில்லை. சில நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்த பிறகே சென்று உள்ளார்.

மும்பையில் உள்ள ஹியத் ரிஜன்சி ஓட்டலில் சூதாட்ட தரகர் முகேஷ் கோச்சரை சந்திக்க 4 நாட்கள் காத்திருந்தார்.

ஆனால் அவரை சந்திக்க சூதாட்ட தரகர் வரவில்லை. சாமுவேல்ஸ் தான் போனில் பேசியதை போலீசார் டேப் செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக அவரை சந்திப்பதை முகேஷ் கோச்சர் தவிர்த்தார் என்று நாக்பூர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு வருகிற 12-ந் தேதி நாக்பூர் வருகிறது. சாமுவேல்ஸ் தங்கி இருந்த ஓட்டலில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை செய்வார்கள்.

சாமுவேல்ஸ் பெட்டிங்கில் ஈடுபட்டாரா அல்லது மேட்ச் பிக்சிங்கில் (வெற்றி- தோல்வி நிர்ணயம்) ஈடுபட்டாரா என்பது தெரியவில்லை. இதுவரை அவருக்கு சாதகமாக இருந்த வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தற்போது விசாரணை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இது தொடர் பாக அந்த வாரியத்தின் செய்தி தொடர்பாளர் மோரிடெயல் கூறியதாவது:-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வரைமுறைக்கு உட்பட்டு விசாரணை நடைபெறும். வீரர்கள் சங்கத்தில் அவர் உறுப்பினராக உள்ளார். இதனால் விசாரணை உள்மட்டத்தில்தான் இருக்கும். கிரிக்கெட் வாரிய கமிட்டிதான் இந்த விசாரணையை மேற்கொள்ளும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு சாமுவேல்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் கெய்லேவுக்கும் தொடர்பு: நேரில் விசாரிக்க ஐ.சி.சி.குழு வருகிறது

நாக்பூர் பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் உஷார் அடைந்துள்ளது.

இது தொடர்பாக நாக்பூர் போலீசார் இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பிய புகாரை அவர்கள் சரவதேச கிரிக்கெட் சங்கத்துக்கு அனுப்பினார்கள். எனவே இது தொடர்பான விசாரணையை சர்வதேச கிரிக்கெட் சங்கம் உடனடியாக தொடங்கி உள்ளது.

இது தொடர்பாக ஆலோ சனை நடத்த அவசர கூட்டம் இன்று துபாயில் நடக்கிறது. அதில் எந்த முறையில் விசாரணை நடத்தலாம் என்று முடிவு எடுக்க உள்ளனர்.

இந்தியா வந்து நேரில் விசாரிப்பதற்காக ஒரு குழு வையும் அமைக்க உள்ளனர். சூதாட்டம் நடத்திருப்பது தெரிந்தால் வீரர்களுக்கு உடனடியாக தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

சூதாட்டத்தில் சாமுவேலுடன் தமிழக வீரர் ராபின் சிங்குக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்லே மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய சுற்றுப் பயணம் முடிந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவரும் கடந்த 1-ந்தேதி நாடு திரும்பி விட்டார்கள். ஆனால் சாமுவேல்ஸ் 4-ந்தேதி வரை மும்பையிலேயே இருந்தார். அவருடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்லேவும் சாமு வேலுடன் மும்பையிலேயே தங்கி இருந்தார். எனவே அவருக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இருவரும் சூதாட்டக்காரர்கள் கொடுத்த விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

எனவே சாமுவேல்ஸ், கெய்லே இருவரும் மும்பையில் தங்கியிருந்த போது என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர் என்பது பற்றி விரிவாக விசாரிக்க உள்ளனர். அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸ் செல்லும் நேரடியாக வீரர்களிடம் விசாரிக்க திட்டமிட்டு உள்ளது.

கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது எப்படி?

கிரிக்கெட் என்ற மந்திரச் சொல்லுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கட்டுப்பட்டு, அதே சிந்தனையில் மயங்கி கிடக்கிறார்கள். இந்த விளையாட்டில் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறது.

மற்ற நாடுகளை விட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானோர் கிரிக் கெட் பைத்தியமாகவே இருக்கி றார்கள். எனவே மற்ற விளை யாட்டுகளை விட கிரிக்கெட் போட்டிகளுக்கு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.

இதை பயன்படுத்திக் கொண்டு கிரிக்கெட் புரோக்கர்கள், கிரிக்கெட் வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் மறைமுகமாக `பெட்டிங்’ வைத்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

இரண்டு அணிகளின் வெற்றி தோல்வியை முன்ன தாகவே முடிவு செய்வது `மேட்ச் பிக்சிங்’. இது நடை பெறுவது அபூர்வம். மிகப் பெரிய சூதாட்டக்காரர்கள் இரு அணி கேப்டன்களுடன் தொடர்பு கொண்டு பேசி முடிவு செய்தால் தான் இது சாத்தியமாகும். இந்த பிரச்சினையில் சிக்கியதால்தான் இந்திய அணி யின் முன்னாள் கேப்டன் அசாருதீன், தென்னாப் பிரிக்க அணி முன்னாள் கேப்டன் ஆன்சி குரோனே ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்திய அணியில் விளையாடிய அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர் ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டு பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, தற்போது `மேட்ச் பிக்சிங்’ நடக்க வாய்ப்பில்லை.

ஆனால் `பெட்டிங்’ ஒவ்வொரு முக்கிய போட்டிக்கும் நடந்து வருகிறது. போட்டியின் அந்தரங்கம் சூதாட்டம் ஆக்கப்பட்டு அதற்காக பணம் கட்டப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் பணம் கொடுக்கப்படுகிறது. இதிலும் கோடிக்கணக்கான பணம் புரளுகிறது. இதற்காக முக்கிய நகரங்கள் அனைத்திலும் `பெட்டிங் சென்டர்’கள் மறை முகமாக செயல்பட்டு வரு கின்றன. `கம்ப்ïட்டர்’ மூலம் இந்த சூதாட்டம் நடக்கிறது.

ஒரு கிரிக்கெட் அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற விவரம் கொண்ட 11 பேர் அணி போட்டி தொடங்குவதற்கு முன்புதான் அறிவிக்கப்படும். இது குறித்தும் `பெட்’ கட்டப்படுகிறது.

இது போல `டாஸ்’ ஜெயித்தால் எந்த அணி `பேட்டிங்’ செய்யும், எந்த அணி பந்து வீசும்ப யார் யார் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள்? யார் யார் அதிக `ரன்’ எடுப்பார்கள்? யார் அதிக விக்கெட் எடுப்பார்? என்பது போன்ற விவரங்களை சரியாக சொன்னால் பல மடங்கு பணம் கிடைக்கும். இந்த `பெட்டிங்’ சூதாட்டத்தில் மிகப்பெரிய பணக்காரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

சூதாட்டத்தில் பங்கேற்பவர்கள் சரியாக கணித்து சொல்லாவிட்டால் சூதாட்டம் நடத்துவோருக்கு கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும். சூதாட்ட ஏஜண்டுகளும் லட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும்.

எனவே `பெட்டிங்’ சூதாட்டம் நடத்துபவர்களும், அவர்களுடைய ஏஜெண்டுகளும் கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு கொண்டு அணியின் விïகம், களம் இறங்கும் வீரர்களின் வரிசை போன்றவற்றை தெரிந்து கொள்வார்கள்.

வீரர்களிடம் பேசி, தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி கூறுவார்கள். இதற்கு உடன்படும் வீரர்களுக்கு பெரும் தொகை சன்மானமாக கொடுக்கப்படும். எனவே, ஒருசில கிரிக்கெட் வீரர்கள் சூதாட்ட ஏஜெண்டுகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் மறைமுகமாக வைத்திருக்கும் தொடர்பு, அவர்களையும் அறியாமல் வெளியே கசிந்துவிடுகிறது. போன் மூலம் பேசுவது, முக்கிய இடங்களில் ஏஜெண்டுகளை சந்திப்பது போன்றவை ரகசிய ஏஜெண்டுகளுடன் வைத்தி ருக்கும் தொடர்பை வெளிச்சம்போட்டு காட்டி விடுகின்றன.

மேற்கிந்திய அணி வீரர் சாமுவேல்ஸ் நாக்பூரில் நடந்த போட்டியின் போது பிரபல கிரிக்கெட் சூதாட்டக்காரன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி முகேஷ் கொச்சார் என்ற சூதாட்ட புரோக்கரிடம் 4 முறை பேசி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சு, சாமுவேல்ஸ் எப்போது பந்து வீசுவார் என்பது பற்றியும் கூறி இருக்கிறார். நள்ளிரவிலும் ஏஜெண்டிடம் பேசியுள்ளார். இதன் மூலம் சாமுவேல்ஸ்க்கு பெருந்தொகை கிடைத் திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின்சிங்கும் சாமுவேல்ஸ் சுடன் டெலிபோனில் பேசியுள்ளார். இவருடைய பங்கு என்ன என்பதும் புதிராக உள்ளது. விசாரணை முடிவில் உண்மை தெரியவரும்.

சாமுவேல்ஸ்- ஏஜெண்டு டெலிபோன் உரையாடல்

வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்- முகேஷ் கோச்சார் இருவரும் டெலிபோனில் என்ன பேசினார்கள் என்பதில் சிலவரிகள் வெளியே கசிந்துள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

சாமுவேல்ஸ்:- பிட்ச்சை பார்த்து விட்டுதான் காலையில் பேட் செய்வதா? என்று முடிவு செய்வார்கள்.

முகேஷ்:- மாலையில் என்றால் நீங்கள் கடைசியில்தான் இறங்குவீர்களா?

சாமுவேல்ஸ்:- கடைசிக்கு கொஞ்சம் முந்தி இறங்குவேன்.

முகேஷ்:- யார் பேட் செய்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

சாமுவேல்ஸ்:- தெரியும்.

முகேஷ்:- யார்- யார்?

சாமுவேல்ஸ்:- டேவன் அவரைதான் நாளை ஆட அனுப்புவார்கள்.

முகேஷ்:- புது பேட்ஸ்மேனா? அல்லது பந்து வீச்சாளரா?

சாமுவேல்ஸ்:- இல்லை. அவர் ஆல் ரவுண்டர்.

முகேஷ்:- அவர் சிறப்பாக ஆடுவாரா?

சாமுவேல்ஸ்:- ஆமாம், அதற்காகத்தான் இறக்குகிறோம்.

முகேஷ்:- ஓகோ எனக்கு எல்லாம் புரிகிறது. கிறிஸ் பார்மில் இருக்கிறார்.

ராபின்சிங் பற்றி நாங்கள் பேச வில்லை: சூதாட்ட ஏஜெண்டு மறுப்பு

மும்பை, பிப். 9-

சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள ஏஜண்டு முகேஷ் கோச்சார் வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்யிடம் பேசியதை ஒத்துக் கொண்டுள்ளார். சாமுவேல்ஸ் எனது நீண்ட கால நண்பர் என்ற முறையில் அவரிடம் பேசினேன் என்று கூறியுள்ளார்.

இருவரும் ராபின்சிங் பற்றி பேசியதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே ராபின் சிங்குக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

ஆனால் முகேஷ் கோச்சார், “நாங்கள் இருவரும் ராபின்சிங் பெயரை உச்சரிக்கவில்லை” என்று கூறினார்.

நாக்பூர் போலீசார் இது குறித்து விரிவான விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுபற்றி போலீஸ் கமிஷனர் எஸ்.பி.எஸ். யாதவ் கூறும்போது, “இதுவரை நடந்த விசாரணையில் மேட்ச்பிக் சிங் நடந்ததை கண்டுபிடிக்கவில்லை. இந்த உரையாடல் மூலமாக சூதாட்டம் நடந்தததா? என்றும் தெரியவில்லை” என்றார்.

வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் லாராவிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

நான் இப்போது லண்டனில் இருக்கிறேன். எனவே முழு விவரமும் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி கேள்விபட்டதும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் சங்கத்திடம் பேச முயன்றேன். முடியவில்லை. சாமுவேலிடமும் பேச முயற்சித்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. சாமுவேஸ்யிடம் பேசி முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

சாமுவேலை பொறுத்தவரை எனக்கும் மற்ற வீரர்களுக்கும் மிகவும் உதவியாக இருந்தார். உலக கோப்பை போட்டிக்கு அவர் எங்களுக்கு தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டில் இருந்து இந்திய சூதாட்ட காரர்களை இயக்கிய தாவூத் இப்ராகிம்

மும்பை, பிப். 9-

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் ஒரு நாள் போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. போட்டி நடப்பதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ்சும், கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் முகேஷ் கோச்சார் ஆகியோரும் டெலிபோனில் ரகசியமாக பேசி உள்ளனர். எனவே சூதாட்டம் நடந்திருக்கலாம் என கருதி விசாரணை நடந்து வருகிறது.

புரோக்கர் முகேஷ் கோக்சாருக்கும் மும்பை குண்டு வெடிப்பு தாதாவான தாவூத் இப்ராகிமுக்கும், நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. அவன்தான் முகேஷ் கோச்சாரை இயக்கி உள்ளார்.

தாவூத் இப்ராகிம் வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்தே இந்திய சூதாட்ட புரோக்கர்களை இயக்கி உள்ளான்.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே 2005-ம் ஆண்டு ஷோபன் மேத்தா என்பவரை கைது செய்தனர். அவர் தாவூத் இப்ராகிம் கிரிக்கெட் சூதாட்டகாரர்களை எப்படி இயக்குகிறான் என்ற விவரங்களை விரிவாக கூறி இருந்தான்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாÖமுவேல்ஸ்சுக்கும், முகேஷ் கோச்சாருக்கும் தொடர்பு இருந்த விவரத்தையும் அப்போதே ஷோபன் மேத்தா மும்பை போலீசில் கூறி இருந்தார்.

தாவூத் இப்ராகிம்- ஷோபன் மேத்தா இருவரும் முன்பு சூதாட்ட தொழிலில் எதிரெதிர் திசையில் இருந்தனர். 1999 சார்ஜா கோப்பை போட்டி நடந்தபோது ஷோபன் மேத்தா சூழ்ச்சியால் தாவூத் இப்ராகிம் ரூ.17 கோடியை சூதாட்டத்தில் இழந்தான்.

எனவே தாவூத் இப்ராகிம் ஷோபன் மேத்தா இந்தியாவில் உள்ள சூதாட்ட புரோக்கர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான். இவர்களை அனைவரையும் நிர்வாகிப்பதற்காக ஷரத் ஷெட்டி என்பவனை நியமித்தான்.

முகேஷ் கோச்சாரும் தாவூத்தின் கீழ் இயங்கும் புரோக்கர்களில் ஒருவர் ஆனார். கிரிக்கெட் சூதாட்டத்தின் போது ஒவ்வொரு `பெட்’டுக்கும் தகுந்த மாதிரி புள்ளிகளை நிர்ணயம் செய்வது உண்டு. அதை தாவூத் இப்ராகிம்தான் வெளிநாட்டில் இருந்து நிர்ணயம் செய்வான். அதன் பின்னர் இணைய தளம் மூலம் சூதாட்ட பரிமாற்றங்கள் நடைபெறும்.

Posted in Abu Salem, Antiguay, Azhar, Azharuddin, Bahamas, Barbados, BCCI, betting, bookie, bookmaker, Chennai, Coach, Connections, Corruption, Cricket, Cuba, Dawood Ibrahim, Don, Enforcement, Gaekwad, Gamble, gang, Gavaskar, Hansie Cronje, ICC, India, Jadeja, Kapil Dev, kickbacks, Law, Madras, Manager, Manoj Prabhakar, Marlon Samuel, Match fixing, Mukesh Kocchar, Mumbai, Nagpur, ODI, One day, One Day International, Operations, Order, phone, Police, revenge, rivalry, Robin Singh, Samuels, Shobhan Mehta, Test Match, Trinidad & Tobago, Underworld, Wadekar, West Indies | Leave a Comment »