Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘ULFA’ Category

State of Northeastern states – Neglect & Growth of extremist forces

Posted by Snapjudge மேல் ஜூலை 13, 2007

அவர்களும் இந்நாட்டு மன்னர்களே!

எஸ். சையது இப்ராஹிம்

தீவிரவாதச் செயல்கள் தொடர்பாக உளவுத் துறை அண்மையில் மத்திய அரசுக்கு ஓர் அறிக்கை அளித்தது. அதில், “வடகிழக்கு மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக தீவிரவாதம் மாறி வருகிறது. கடந்த ஆண்டு இந்தத் தொழிலில் புழங்கிய தொகை ரூ. 250 கோடி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  • அருணாசலப் பிரதேசம்,
  • அசாம்,
  • மணிப்பூர்,
  • மேகாலயா,
  • மிஜோரம்,
  • நாகாலாந்து,
  • திரிபுரா ஆகியவை வடகிழக்கு மாநிலங்கள் ஆகும். இவை 7 சகோதரிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சீனா, மியான்மர், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த மாநிலங்களின் மொத்த மக்கள்தொகை சுமார் 3 கோடி.
நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்னும் 6 மாநிலத் தலைநகரங்களுக்கு ரயில் வசதி இல்லை. இடாநகர் (அருணாசலப் பிரதேசம்), கொஹிமா (நாகாலாந்து), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய தலைநகரங்களில் அனைத்து வசதிகளும் கொண்ட விமான நிலையங்கள் இல்லை.

இயற்கை வளங்கள் மிகுதியாக இருந்தும், நவீன வேளாண்மை நுட்பம் தெரியாததால் ஆண்டுதோறும் ரூ. 3500 கோடிக்கு அத்தியாவசியப் பொருள்களைப் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் அவலம் நிலவுகிறது.

நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் மூன்றில் இரு பங்கு, பிளைவுட் உற்பத்தியில் 60 சதவீதத்தை அளித்தாலும் வருவாயில் ஒரு பைசா கூட திரும்ப முதலீடு செய்யப்படுவதில்லை. கல்வி, சுகாதாரம், தகவல் தொடர்பு இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளன. இன்னும் மின்சாரத்தைப் பார்க்காத பல கிராமங்கள் உள்ளன. கடந்த நிதியாண்டில் மத்திய நிதி நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்த ரூ. 50 ஆயிரம் கோடியில் அசாம் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது வெறும் ரூ. 114 கோடி. நாகாலாந்துக்கோ ரூ. 4 கோடி மட்டுமே. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை.

இதனால் உணவுப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளில் சிக்கி இந்த மாநிலங்கள் திணறுகின்றன. அசாமின் கடன்சுமை ரூ. 10 ஆயிரம் கோடி.

இந்த நிலைக்கு யார் காரணம்? அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்று, அன்பு காட்டி அரவணைக்கும் அரசு, ஏன் இந்த 3 கோடி மக்களின் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறை காட்டாமல் புறக்கணிக்கிறது?. வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. புறக்கணிப்புக்கு இதுதான் காரணம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி விட முடியாது. புறக்கணிப்பின் விளைவு தீவிரவாதம்.

“1960-களில் ஷில்லாங் பகுதியில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய- மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்கியிருந்தால் நாங்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது’ என்று மிஜோ தேசிய அமைப்பின் தலைவர் லால்தெங்கா தெரிவித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கூறுவதும் உண்மைதான்.

ஆரம்பத்தில் போராட்டங்களை ஒடுக்க ராணுவத்தை ஏவி மக்களை ஆயுதம் தூக்க வைத்தது மத்திய அரசு என்றால் மிகையல்ல. இருப்பினும் அரசின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

நாகாலாந்தில் நாகா சோஷலிஸ்ட் தேசிய கவுன்சில் அமைப்புடன் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கையால் அங்கு தற்போது அமைதி நிலவுகிறது. பேச்சுவார்த்தைக்குக் கிடைத்த வெற்றி இது.

ஆனால், அசாம் மாநிலத்தில் உல்ஃபாவுடன் மத்திய அரசு செய்து கொண்ட உடன்படிக்கை 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன என்பதை அண்மைச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இதை மனதில் கொண்டு பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை மீது தீவிரவாத அமைப்புகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றையும் செய்யலாம்.

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் நடைமுறையில் உள்ள மக்கள் நலனுக்கு எதிரான ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவின் பரிந்துரைப்படி, வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். குறிப்பாக “வடகிழக்கு ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கி சேவை அளிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் 7 மாநிலங்களில் இயற்கை எழில் மிகுந்த பகுதிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். இதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே அறிவித்த வடகிழக்கு மாநிலங்களுக்கானக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்தலாம். மியான்மர் சாலையைத் திறந்துவிடலாம்.

இது போன்ற நடவடிக்கைகள் வடகிழக்கு மாநில மக்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தினால், பேச்சுவார்த்தையே ஒருவேளை தேவையில்லாமல் போய்விடும்.

இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 3 கோடி மக்களும் நம் சகோதரர்கள், அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இப் பிரச்னையில் மத்திய அரசு உரிய கவனம் செலுத்துமா?

Posted in abuse, AGP, Ahluwalia, AP, Arunachal, Arunachal Pradesh, Asom, Assam, Bangladesh, Banks, Bengal, Bhutan, Budget, Burma, Bus, Capital, Care, Center, China, coffee, Commerce, defence, Defense, Destination, Development, Dilse, Drought, Electricity, Employment, Environment, Exports, Extremism, Flights, Floods, Forest, Funds, GDP, Govt, Green, Growth, IMF, Imports, Improvements, Industry, ISI, Itanagar, Jobs, Kohima, Loans, Mahantha, Manipur, Manirathnam, Maniratnam, Manisha, Manufacturing, Megalaya, Meghalaya, Military, Misa, Mizoram, Montek, Mynamar, Naga, Nagaland, Nature, NE, Neglect, Northeast, Pakistan, Party, Planes, Plants, Plywood, Politics, Pollution, POTA, Power, Preity, Railways, Rains, Roads, Rubber, Shahrukh, Shillong, State, Students, Surface, TADA, Tea, Teak, Terrorism, Terrorists, Tourist, Trains, Transport, Travel, Trees, Tripura, ULFA, Uyire, Water, WB, Wood, Youth, Zinta | Leave a Comment »

China’s outrageous claim – Denies visa, Arunachal Pradesh vents anger on UPA

Posted by Snapjudge மேல் மே 27, 2007

அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே: சீனா

இட்டாநகர், மே 27:அருணாசலப் பிரதேசம் தொடர்பாக சீனா- இந்தியா இடையே ஏற்கெனவே சர்ச்சை உள்ள நிலையில் இப்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. சீனா செல்லவிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா அளிக்க சீனா மறுத்துவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீனாவுக்கு செல்ல இருந்த 102 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயணத்தை இந்திய அரசு ரத்து செய்து விட்டது. இவர்கள் சனிக்கிழமை காலையில் சீனப் பயணம் மேற்கொள்ள இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய பகுதியாக இருப்பதால் அருணாசலப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிக்கு விசா வழங்க இயலாது என்று சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அருணாசலப் பிரதேச முதல்வர் டோர்ஜி கன்டு, அதிர்ச்சி தெரிவித்ததுடன் கடும் கண்டனமும் வெளியிட்டுள்ளார்.

அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு சீனா விசா தர மறுத்தது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மாநில முதல்வர் ஆலோசனை நடத்தினார். வெளியுறவு அமைச்சகம் இந்த விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அருணாசலப் பிரதேச மாநிலம் முழுவதும் இந்தியாவின் பகுதியே ஆகும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தன.

சீன தூதர் பேட்டி: “இந்தியர்கள் யாரும் சீனா வருவதை மகிழ்சியுடன் வரவேற்கிறோம். ஆனால் சர்ச்சைக்குரிய பகுதியான அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த அதிகாரிகளை நாங்கள் அதிகாரிகள் என்று ஏற்றுக் கொள்வது கடினம்’ என்று இந்தியாவுக்கான சீன தூதர் சுன் யுக்ஸி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அருணாசலப் பிரதேசம் தொடர்பாக ஓர் ஆண்டில் இரண்டாவது முறையாக சர்ச்சை எழும் வகையில் சீன தூதர் சுன் யுக்ஸி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா- சீனா இடையிலான எல்லைப் பிரச்சினையை தீர்க்க இருதரப்பும் ஒருபக்கம் முயன்று வருகின்றன. இந்திய ராணுவத் தலைமை தளபதி ஜே.ஜே. சிங், சீனாவுக்கு தற்போதுதான் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அருணாசலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு விசா அளிக்க சீனா மறுத்தது, அருணாசலப் பிரதேசம் எங்களுடையதே என்ற அதன் அடாவடியான போக்கு இருதரப்பு உறவில் விரிசலுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

——————————————————————————

மரியாதைக்குரிய அண்டை நாடு!

எம். மணிகண்டன்

அண்மையில் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு விசா வழங்க சீனா மறுத்தது.

இதையடுத்து, அங்கு செல்ல இருந்த இந்தியக் குழு தனது பயணத்தை ரத்து செய்துவிட்டது. “விசா மறுக்கப்படவில்லை; சீனாவில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல விசா தேவையில்லை என்றுதான் கூறினோம். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விசா இல்லாமலேயே சீனாவின் எந்தப் பகுதிக்கும் செல்லலாம்’ என்பதுதான் சீனாவின் நிலை.

இதன் மூலம், அருணாசலப் பிரதேசம் தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்று சீனா மீண்டும் உரிமை கோர முயற்சிக்கிறது என்று இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டது. வழக்கம்போல், இந்திய அரசியல்வாதிகள், “எந்த நிலையிலும் அருணாசலப் பிரதேசத்தை சீனாவுக்கு விட்டுத் தர முடியாது’ என வீர வசனம் பேசினர்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ஜெர்மனியில் நடந்த ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் ஆகியோர் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது அருணாசலப் பிரதேச விவகாரம் குறித்து “அனல் பறக்கும் விவாதம்’ நடக்கும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ வேறு.

“சீனா எங்கள் மரியாதைக்குரிய அண்டைநாடு’ என மன்மோகன் சிங் வர்ணிக்க, “இரு தரப்பு உறவுகள் மேம்பட ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுத்து வருகிறோம்’ என்று பதிலுக்கு ஐஸ் வைத்தார் சீன அதிபர். இப்படியாக, இந்த விவகாரம் திடீரென எழுவதும், சில நாள்களில் மறக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

அருணாசலப் பிரதேசத்தின் மீது சீனாவுக்கு “அதீத ஆசை’ ஏற்பட, அதன் புவியியல் அமைவே முதல் காரணம். அருணாசலப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிட்டால், மேற்குவங்கத்தில் உள்ள குறுகிய “சிலிகுரி’ துண்டுப் பகுதியை ஆக்கிரமித்து விடலாம்.

இந்தப் பகுதிதான் இந்தியாவின் பெரும்பான்மை பகுதியை, வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது. இப் பகுதியை இழந்துவிட்டால், வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் கையை விட்டுப் போய்விடும் அபாயம் இருக்கிறது.

மணிப்பூர், அசாம் மாநிலங்களில் நடக்கும் இந்திய அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டிவிடுவதற்கும் அருணாசலப் பிரதேசம் பயன்படும். அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நீர்மின் திட்டங்கள் அமைப்பதற்கான வாய்ப்புகள், அதிக கனிம வளங்கள் போன்றவையும் அப்பகுதி மீது சீனா கண் வைக்க காரணங்களாகும்.

இப்படியெல்லாம் செய்வதற்கு சீனா திட்டமிட்டிருக்கிறதோ இல்லையோ, இவை நடப்பதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதால் இந்தியத் தரப்பு, அருணாசலப் பிரதேச விவகாரத்தில் உஷாராகவே உள்ளது.

ஏற்கெனவே, வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களுக்கு சீனா நிதியுதவி செய்கிறது என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இதுவும், அருணாசலப் பிரதேசம் மீது சீனா கோரி வரும் உரிமையை, இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருவதற்கு மற்றுமொரு காரணம்.

1962 போருக்குப் பிறகு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட நீண்ட காலம் ஆனது. சீனாவின் “ஐந்து விரல் கொள்கையே’ இதற்குக் காரணம்.

திபெத் பகுதியை சீனாவின் உள்ளங் கையாக வைத்துக் கொண்டால், நேபாளம், பூடான், சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம் ஆகியவையே அந்த ஐந்து விரல்கள். இந்தப் பகுதிகள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சீனாவின் “ஐந்து விரல் கொள்கை’.

அதே சமயம், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் நாடு என ஒரேயடியாக சீனாவை ஒதுக்கிவிட முடியாது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இருதரப்பு உறவுகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

ஆனால், பொக்ரான்-2 அணு குண்டு சோதனை நடத்தியபோது, மீண்டும் முடங்கிப் போன அரசு முறை உறவுகள், கடந்த சில ஆண்டுகளாக மேம்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.

கடந்த பத்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் 15 மடங்காக உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக வர்த்தகம் செய்வது சீனாவுடன்தான்.

சீனாவின் “ஒரே சீனா’ கொள்கையை இந்தியா ஆதரித்து வருகிறது. அந்நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்கி, தைவானை இதுவரை தனி நாடு என இந்தியா அங்கீகரிக்கவில்லை. அந்நாட்டுடன் ராஜீய உறவுகள் எதையும் இந்தியா ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சீனாவுடன் நட்புறவோடு இருப்பதை இந்தியாவும் விரும்புகிறது என்பதற்கான சிறந்த சான்றுகள் இவை.

என்னதான் இருந்தாலும், பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்வது, அருணாசலப் பிரதேசத்துக்கு உரிமை கோருவது போன்றவை இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன.

இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது.

ஆனால் அண்மையில் சீனா சூசகமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், அவ்வளவு எளிதாகக் எடுத்துக் கொள்ளத் தக்கவை அல்ல. “ஐந்து விரல் கொள்கையை’ சீனா இன்னும் விட்டுவிடவில்லை என்பதற்கான அறிகுறிகள் இவை.

மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, “இந்தியாவின் முதல் எதிரி சீனாதான்’ என்று வெளிப்படையாகவே பேசினார் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் பகையை ஏற்படுத்திவிட்டார் பெர்னாண்டஸ்’ என பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவுக்குள் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்காத அவர், கடைசியில் தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டியதாயிற்று.

பெர்னாண்டஸ் கூறியது போல, சீனா முதல் எதிரியா? அல்லது இன்றைய பிரதமர் கூறுவது போல மரியாதைக்குரிய அண்டை நாடா? என்பதுதான் தற்போது நம்முன் நிற்கும் கேள்வி.

Posted in Aggression, AP, Arms, Arunachal Pradesh, Assam, Bhutan, BRIC, China, Claim, Country, Extremism, Foreign, G8, IAS, India, Integration, Manipur, Missiles, Mizoram, Nagaland, Nation, National, Nepal, North East, Northeast, Nuclear, Op-Ed, Pokharan, Pokhran, Pokran, Power, Rajeev, Rajeev Gandhi, Rajiv, Rajiv Gandhi, Rajiv Gandi, Risk, SAARC, Security, South Asia, State, Superpower, Terrorism, Tibet, Tripura, ULFA, UPA, Violence, Visa, War, Weapons | Leave a Comment »

Pakistan, Bangladesh Involved in North East Terrorism: Stratfor

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 24, 2007

உல்பா, விடுதலைப்புலி, இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு – வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்ட பாக்., வங்கதேச உளவு அமைப்புகள் சதி: அமெரிக்க உளவு செய்தி சேவை அமைப்பு தகவல்

நியூயார்க், ஏப். 24: இந்தியாவின் வடகிழக்கு பிராந்திய மாநிலங்களில் கலவரத்தை தூண்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் வங்கதேசத்தின் உளவு அமைப்புகள் சதித் திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவில் உள்ள உளவு செய்தி சேவை அமைப்பான “ஸ்ட்ராட்பார்’ எச்சரித்துள்ளது.

“இந்தியா: இஸ்லாம் மயமாகிவரும் வடகிழக்கு’ என்ற தலைப்பில் அது வெளியிட்டுள்ள செய்தியில் மேற்கண்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியம் தற்போது இஸ்லாமிய மயமாகி வருகிறது. இதற்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு ஒருபக்கம் உதவி வருகிறது. மறுபக்கம் வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையும் சாதகமாகிவிட்டது. வங்கதேச அரசியல் குழப்ப நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள சீனாவும் பாகிஸ்தானும் உலக அளவில் இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுத்து விடக் கூடாது என்ற நோக்கில் பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவித்து தாம் சொல்லும்படி ஆட்டிப் படைக்கின்றன.

தற்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பும் வங்கதேச உளவு அமைப்பும் மிகவும் நெருக்கமாகிவிட்டன. இந்த இரு அமைப்புகளும் வங்கதேசத்தில் ரகசியமாக செயல்பட்டு வடகிழக்கு பிராந்தியத்தில் செயல்படும் உல்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், தனி ஈழம் கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகள், அல்-காய்தாவுடன் தொடர்புடைய அமைப்புகள் ஆகியவை தமக்குள் ஒத்துழைப்புடன் செயல்பட ஆதரவு அளித்து வருகின்றன.

வங்கதேச தீவிரவாத அமைப்புகள், ஜிகாதி அமைப்புகளுடன் உல்பா மிக நெருக்கமாகி உள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அசாமுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பயணம் செய்ய இருந்த நேரத்தில் ஏப்ரல் 9ம் தேதி அந்த மாநிலத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இந்தவித தாக்குதல் புலிகள் பயன்படுத்தி வருவதாகும். தற்போது இஸ்லாமிய தீவிரவாதிகளும் அடிக்கடி இந்த வகை தாக்குதலை பின்பற்றி வருகின்றனர்.

இந்த பாணி தாக்குலில் உல்பா இறங்கியுள்ளதற்கு உல்பா அமைப்பில் முஸ்லிம்களும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினராகச் சேர்ந்து வருவதே காரணம். மேலும் உல்பா அமைப்புக்கு இந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் அதிக ஆதரவு காட்டுகின்றன.

அசாமில் ஏப்ரல் 9-ம் தேதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியவர் ஐனுல் அலி என்ற பெயருடைய முஸ்லிம் என்று இந்திய பாதுகாப்புப்படை வட்டாரங்களே தெரிவித்துள்ளன. சில காலத்துக்கு முன் உல்பா அமைப்பில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றதில்லை. தற்போது வங்கதேசத்திலிருந்து ஊடுருவும் அகதிகள் உல்பா அமைப்பில் சேர்ந்து தற்கொலைப் படையினராக செயல்பட தயாராக உள்ளனர். இதற்கெல்லாம் பாகிஸ்தான் உளவு அமைப்பின் தூண்டுதலே காரணம்.

வங்கதேசத்தில் காணப்படும் அரசியல் குழப்ப நிலை அங்குள்ள முஸ்லிம்களுக்கு அதிக அதிகாரம், செல்வாக்கை அளித்து வருகிறது. மேலும் வங்கதேச ராணுவத்தின் கையும் ஓங்கி வருகிறது. தற்போது அங்கு காணப்படும் அரசியல் வெற்றிட நிலையை நிரப்பிக்கொள்ள இஸ்லாமிய கட்சிகள் மிகுந்த வெறியுடன் உள்ளன.

அப்படியொரு நிலை உருவாகும்போது பயங்கரவாத பிரச்சினையிலிருந்து இந்தியா மீள எடுக்கும் நடவடிக்கைகள் உரிய பலன் தருவது கடினமே. இவ்வாறு ஸ்ட்ராட்பார் அமைப்பு தெரிவித்துள்ளது.

Posted in Bangladesh, ISI, jihadi, LTTE, North East, Northeast, Pakistan, Stratfor, Terrorism, terrorist, ULFA, Viduthalai Puli, Viduthalai Puligal, Vituthalai Puli, Vituthalai Pulikal | Leave a Comment »

Jegamathy Kalaikkoodam’s Regai – Docu-drama review by Ravikkumar

Posted by Snapjudge மேல் ஜனவரி 27, 2007

ஆவணம்: அது இருண்ட காலம்!

ரவிக்குமார்

இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துவங்கி அறுபது ஆண்டுகள் ஆகின்றது. மாபெரும் ஜனநாயகக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு ஐம்பத்தேழு ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் நாட்டில் எல்லோரின் சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் இருக்கின்றதா? இரட்டைக் குவளை முறை ஒழிந்துவிட்டதா? உத்தரப்பிரதேசத்திலிருந்து அசாமிற்குச் செல்லும் மக்களைக் கொன்று குவிக்கும் உல்ஃபா தீவிரவாதம் மறைந்துவிட்டதா? ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் சாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும் அவர்களால் விதைக்கப்பட்ட வேற்றுமைகள் இன்றுவரையிலும் அப்படியேதான் இருக்கின்றன” என்னும் ஆதங்கத்தை சற்று உரக்கவே சொல்கிறது ஜெகமதி கலைக்கூடம் வெளியிட்டிருக்கும் “ரேகை’ என்னும் ஆவணப்படம்.

“”பிரிட்டிஷ் ஆட்சி செய்த நாடுகளில் அதற்கு எதிராகச் செயல்பட்ட இனக்குழுக்களையும், சமூகங்களையும் அடக்குவதற்கு பலவிதமான வழிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் கடைப்பிடித்தது. அதில் முக்கியமான ஒன்றுதான் “குற்றப் பழங்குடிகள் சட்டம்.’ இந்தச் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்ட குழுக்களில் இருக்கும் ஆண்கள் அத்தனை பேரும், அவர்கள் பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் உள்ள பதிவேட்டில் தங்களின் கைவிரல் ரேகையைப் பதித்துவிட்டு, இரவு முழுவதும் தங்கியிருக்கவேண்டும். இந்த அடக்குமுறைச் சட்டத்தை உலகம் முழுவதும் தான் ஆட்சி செய்த நாடுகளில் பிரயோகித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் முடிவடைந்ததும், ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்கள் எவையெவை என நாடு முழுவதும் சர்வே எடுக்கப்பட்டது. விவசாய நாடான இந்தியாவில், விவசாயம் செய்வதற்குப் பயன்படும் மண்வெட்டி, கதிர் அறுக்கும் அருவா வைத்திருந்த விவசாயிகள் கூட பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் 200 க்கும் அதிகமான சாதிக் குழுக்களை இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்தனர். தமிழ்நாட்டில் 90-க்கும் அதிகமான சாதிகளைப் பதிவு செய்திருக்கின்றனர். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பிடியில் நாம் அனைவருமே குற்றப்பரம்பரைகளாக இருந்தவர்கள் தான். அப்போது ஒற்றுமை என்ற ஒன்று இருந்ததால்தான், ஆசியாவிலேயே இந்தச் சட்டத்தை நம்மவர்களால் முதன்முதலாக எதிர்க்கமுடிந்தது. ஆனால் அதை எல்லாம் மறந்துவிட்டு, அன்றைக்கு ஒற்றுமையாக இருந்த சாதிகளுக்குள் இன்று பகைமையை வளர்த்துக் கொண்டிருப்பது சரியா? என்ற கேள்வி, ரேகை ஆவணப்படத்தைப் பார்ப்பவர்களின் மனதில் எழும்ப வேண்டும். இதுதான் இந்தப் படத்தின் நோக்கம்” என்றனர் தயாரிப்பாளர் தீனதயாள பாண்டியனும், இயக்குனர் தினகரன் ஜெய்யும்.

ரேகை ஆவணப்படமாக இருந்தாலும், அதில் முழுக்க முழுக்க ஆவணங்களுக்கும், குறிப்புகளுக்கும் மட்டுமே இடம் தராமல், தேவையான இடங்களில் போராட்டக் காலத்தை நம் கண்முன்னே நிறுத்தும் வகையில் சிறந்த நடிகர்களைப் பயன்படுத்தி “டாக்கு-டிராமா’ யுக்தியில் படம்பிடித்துள்ளனர். நிறைய காட்சிகளுக்கு தெய்வாவின் ஓவியங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

“”இந்தக் குற்றப் பழங்குடி சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த சாமான்ய மக்களிடமும் இருந்தது. சுபாஷ் சந்திர போஸ் பிறந்த சாதியையும் இந்தச் சட்டத்தை எதிர்த்ததற்காக குற்றப் பழங்குடியினர் லிஸ்ட்டில் சேர்த்திருந்தனர். ஆந்திராவில் உச்சாலியா என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தின் வேரையே இந்தச் சட்டம் நிர்மூலமாக்கியிருக்கிறது.” என்றார் இயக்குனர் தினகரன் ஜெய்.

மதுரைக்கு அருகிலிருக்கும் பெருங்காமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பதினேழு பேர்கள்தான், ஆசியா கண்டத்திலேயே இந்தச் சட்டத்தை எதிர்த்து முதன்முதலாகக் களப்பலி ஆனவர்கள். இவர்களில் மாயக்காள் என்னும் பெண்ணும் ஒருவர். மாயக்காளாக “விருமாண்டி’ படத்தில் நடித்த சுகுணா பாத்திரத்தின் தன்மை உணர்ந்து மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இந்த வரலாற்றுச் சம்பவத்தை நம் கண்முன்னே நேர்த்தியான ஆவணமாக்கியிருக்கிறது-“ரேகை’

Posted in British Rule, Deenathayala Pandiyan, Deenathayala Panidyan, Dheenadhayala Panidyan, Dheenathayala Pandian, Dheenathayala Panidyan, Dhinakaran Jai, Dinakaran Jai, Docu Drama, Documentary, Independence, India, Jegamadhy Kalaikoodam, Jegamathy Kalaikoodam, Jekamadhy Kalaikkoodam, Jekamathy Kalaikoodam, Mayakkaal, Movies, Ravikkumar, Ravikumar, Regai, Rekai, Republic, Short Films, Suguna, Suhuna, Sukuna, Terrorism, Tribes, ULFA, Virumandi | 2 Comments »

India alleges – Bangladesh’s Intelligence Service is using ULFA to train Anti-Indian Insurgents

Posted by Snapjudge மேல் ஜனவரி 14, 2007

உல்பா தலைவர்களுக்கு பங்களாதேஷ் அடைக்கலம் வழங்குவதாகக் குற்றச்சாட்டு

உல்பா தீவிரவாதிகள்
உல்பா தீவிரவாதிகள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும்
உல்பா உள்ளிட்ட பல்வேறு பிரிவினைவாதக் குழுக்களின் தலைவர்களுக்கு, அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் கொடுக்கப்பட்டிருப்பதாக, வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் இந்திய எல்லைப்
பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஜோதி பிரகாஷ் சின்ஹா, செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் தேர்தல் முடியும் வரை வெளியில் நடமாட வேண்டாம் என அடைக்கலம் தருவோரால் அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு சக்திகளின் அறிவுரையின்படி, பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்கள் பங்களாதேஷில் பாதுகாப்பாகத் தங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Posted in Allegation, Anti-India, Bangladesh, BBC, Conflicts, Elections, Insurgents, Intelligence, Militants, Northeast, Terrorists, ULFA | Leave a Comment »

ULFA attacks force migrant labourers to flee Assam – Toll reaches 68

Posted by Snapjudge மேல் ஜனவரி 8, 2007

உல்ஃபா கொலைவெறித் தாக்குதல் எதிரொலி அச்சத்தில் அசாமிலிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறுகின்றனர்: பிகார் மாநில மக்கள்

குவாஹாட்டி, ஜன. 9: அசாமில் குடியிருந்துவரும் பிற மாநில மக்கள் மீது உல்ஃபா (ஐக்கிய அசாம் விடுதலை முன்னணி) பயங்கரவாதிகள் கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதை அடுத்து பிகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் அசாமை விட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.

“”எங்கள் மக்களையும் உடைமைகளையும் பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டது. எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாததால், எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, அசாமை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டோம்” என்று கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பிகாரைச் சேர்ந்த மக்கள் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறினர்.

மேல் அசாமில் உள்ள திப்ரூகர், தின்சுகியா, சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்தடுத்து உல்ஃபா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் செங்கல்சூளையில் பணியாற்றும் பிகாரிகள், பால் வியாபாரம் செய்துவரும் அப்பாவிகள் உள்ளிட்ட 64 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்; 40-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இத் தாக்குதல்களை அடுத்து, மத்திய உள் துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தலைமையில் மத்தியக் குழுவினர் அசாம் வந்தனர். முதல்வர் தருண் கோகோய், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். அசாமில் வாழும் இந்தி பேசும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை உறுதி அளித்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவிலேயே மீண்டும் உல்ஃபா பயங்கரவாதிகள் திப்ரூகர், சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் வசித்துவந்த 17 பிகாரிகளைக் கொன்று குவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர் உறுதி அளித்த பிறகும் உல்ஃபாவின் கொலைவெறித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்காததால் தின்சுகியா, திப்ரூகர், சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பிகாரிகள் வீடு வாசல்களைக் காலிசெய்துவிட்டு சொந்த மாநிலத்தை நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டுவிட்டனர். பெண்களும் குழந்தைகளும் முதியோரும் சாரி சாரியாக ரயில் நிலையங்களை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தனர். அசாமில் செங்கல்சூளை வேலை, பால் விற்பனை, சிறு சிறு கூலிவேலைகள் போன்றவற்றைச் செய்துவந்தவர்கள் அவர்கள்.

“”தின்சுகியா மாவட்டத்தில், நாங்கள் வசிக்கும் லாங்ஸ்வால் கிராமத்துக்குள் இரவில் புகுந்த முகமூடி அணிந்த பயங்கரவாதிகள் எங்களுக்கு அடுத்த வீட்டுக்காரர்களை வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்ற சம்பவம் எனது நினைவில் வந்து அச்சமூட்டிக்கொண்டிருக்கிறது. அதனால், உறக்கம்கூட வரவில்லை” என்று அச்சத்துடன் கூறினாள் 12 வயதுச் சிறுமி ராதா.

“”எங்களது பாதுகாப்பு குறித்து எங்கள் சொந்த ஊரில் உள்ள முதியோர் கவலை அடைந்துள்ளனர். அசாமிலிருந்து பிகாருக்குத் திரும்பி வந்துவிடுமாறு அவர்கள் கூறினர்; அதனால்தான் புறப்பட்டுவிட்டோம்” என்று குவாஹாட்டி ரயில் நிலையத்தில் காத்திருந்த ஹரி யாதவ் என்பவர் கூறினார். ஆனால், வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் யாரும் அச்சத்தில் அசாமைவிட்டு வெளியேறவில்லை என்று மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Posted in Assam, Bihar, Borali Bari, Chokolia, CM, Dhinsukia, Dibrugar, Dibrugarh, Dimow, Displacement, Mahmara, migrant labourers, minority, New Jalpaiguri, non-Assamese, Refugee, Shivsagar, Sri Prakash Jaiswal, Terrorism, Tharun Gogoi, Tinsukia, ULFA, United Liberation Front of Asom, workers | 1 Comment »

Chief Ministers of Congress (I) Congregate in UP

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2006

காங்கிரஸ் முதல்வர்கள் மாநாடு

காங்கிரஸ் கட்சியால் ஆளப்படுகிற மாநில முதல்வர்களின் மாநாடு அடிக்கடி நடப்பதாகிவிட்டது. இப்போது உத்தராஞ்சல் மாநிலத்தில் நைனிதால் நகரில் காங்கிரஸ் முதல்வர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. நாட்டில் மொத்தம் உள்ள மாநிலங்களுள் கிட்டத்தட்ட பாதி மாநிலங்களில், அதாவது 14 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் முதல்வர்களின் ஆட்சி நடைபெறுகிறது. இவற்றில் ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்தும் சிறிய மாநிலங்களே. அதிலும் மகாராஷ்டிரம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் பிற கட்சிகளின் ஆதரவுடன்தான் காங்கிரஸ் ஆட்சிபீடத்தில் உள்ளது. காங்கிரஸ் தனது பலத்தைக் காட்டிக்கொள்ள இப்படியான மாநாடுகளை நடத்துவதைத் தவறு எனச் சொல்ல முடியாது. ஒருங்கிணைந்த கொள்கைகளைப் பின்பற்றும்படிச் செய்வதற்கு இது ஓரளவில் உதவலாம்.

நைனிதால் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில் பயங்கரவாதம் பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலை நாடுகளில் பயங்கரவாதம் குறிப்பிட்ட மதத்துடன் பிணைத்துப் பேசப்படுவதாக அவர் கூறியுள்ளார். மேலை நாடுகள் விஷயம் வேறு, இந்திய நிலைமை வேறு என்பதை அவர் மறந்துவிட்டார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, அத்துடன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக அப்பாவி மக்களைக் கொன்று வந்துள்ளனர். இந்த அமைப்புகள் அண்மைக் காலமாகத்தான் பிற மாநிலங்களிலும் கைவரிசையைக் காட்ட முற்பட்டுள்ளன. ஆனால் நாட்டில் எந்தப் பொறுப்புள்ள கட்சியும் பயங்கரவாதத்தைக் குறிப்பிட்ட மதத்துடன் பிணைத்துப் பேசியது கிடையாது. அதுமட்டுமல்ல, கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டில் பல மாநிலங்களில் ஆங்காங்கு வகுப்புக் கலவரங்கள் நடந்தது உண்டு. இவையெல்லாமே அந்த வட்டாரத்துடன் முடிந்துவிடுகிற சம்பவங்களாகவே இருந்துள்ளன. அந்த மாநிலத்திற்குள்ளாக அல்லது பிற மாநிலத்திற்கு அவை பரவியது கிடையாது. இந்திய மக்கள் பாரம்பரியமாக மத நல்லிணக்கத்தைக் காத்து வருபவர்கள். எங்காவது எப்போதாவது மொழி அடிப்படையில் நடந்துள்ள மோதல்களும் மக்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்தது கிடையாது. இது பற்றி நாம் பெருமைப்படலாம்.

மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒருபடி மேலே போய் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரானவை என்ற எண்ணத்தை உண்டாக்கி விடக் கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் அவர் அப்படிக் கூறாமல், பயங்கரவாதத்துக்கு எதிரான எந்த நடவடிக்கையும் அத்துமீறிப் போய்விடாமல் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தால் அது வரவேற்கத்தக்கதாக இருக்கும். ஏனெனில் காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் பல சமயங்களில் அப்பாவி மக்களைத் துன்புறுத்துகிற செயல்களாக அமைந்துள்ளன. மணிப்பூரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அத்துமீறிப் போய் அது “மனித உரிமை மீறல்’ விவகாரமாக மாறியது. அசாமிலும் உல்பா இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து புகார்கள் உண்டு.

மணிப்பூர், அசாம் மட்டுமன்றி ஜார்க்கண்ட், பிகார், ஆந்திரம் ஆகியவற்றிலும் நக்சலைட் பிரச்சினைகளை நாம் எதிர்ப்பட்டுள்ளோம். இவ்விஷயத்தில் நாட்டில் உள்ள அடிப்படைப் பிரச்சினை, பயங்கரவாதிகள் அல்லது பல்வேறு வகையான தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எப்படிக் கையாளப்பட வேண்டும் என்பதில் போலீஸ் படையினருக்குத் தகுந்த பயிற்சி கிடையாது என்பதுதான். மத்திய அரசின் அல்லது மாநில அரசுகளின் குறிப்பிட்ட நடவடிக்கைகளை எதிர்த்து நடத்தப்படும் ஊர்வலங்களைச் சமாளிப்பதிலும் கூட பல நேரங்களில் முரட்டுத்தனம் காட்டப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க நைனிதால் மாநாட்டு உரைகள் அடுத்த ஆண்டில் உ.பி. மாநிலத்தில் நடக்க இருக்கும் தேர்தலை மனத்தில்கொண்டு அமைந்துள்ளன என்று குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

Posted in Andhra Pradesh, AP, Assam, Chief Ministers, Congregation, Congress (I), Elections, India, Indira Congress, Kashmir, maharashtra, Manipur, Manmohan Singh, Meet, Meeting, Nanital, Naxals, Pakistan, Sonia Gandhi, States, Strategy, Tamil, Terrorism, ULFA, Uttar Pradesh, Vacation | Leave a Comment »

ULFA opposes addition of Military Bases in Assam

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 17, 2006

மேலும் 2 ராணுவ தளம்: உல்பா எதிர்ப்பு

குவஹாட்டி, செப். 17: அசாமில் மேலும் 2 இடங்களில் ராணுவ தளம் அமைக்கும் முயற்சிக்கு உல்பா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நகான் அருகிலுள்ள மிசா மற்றும் குவாஹாட்டியின் புறநகர்ப் பகுதியில் உள்ள சங்சாரியில் ராணுவ தளங்கள் அமைக்க ராணும் முயன்று வருகிறது.

இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உல்பா அமைப்பின் தலைவர் பரேஷ் பரூவா, செய்தி நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை அறிக்கை அனுப்பியுள்ளார்.

ராணுவ தளங்களுக்கு இடம் ஒதுக்கப்படுவதால் அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் இடம் பெயர வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இது மக்களிடையே நிலையற்ற தன்மையைத் தோற்றுவிக்கும்.

இத் திட்டம் நிறைவேறினால், இப்பகுதியில் உள்ள டீ பயிர்கள் அழிக்கப்படும். இங்குள்ள வன விலங்களும், தாவரங்களும் கூட அழிக்கப்படும். இது மாநிலத்தின் இயற்கைச் சமன்பாட்டையே பாதிக்கும்.

ராணுவத்தின் இச்செயல் அமைதியை விரும்பும் அசாம் மக்கள் மீதான அத்துமீறலாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Posted in Assam, Bharesh Baroowa, Gauhati, India, Indian Force, Military, Military Bases, Misa, Native Folks, Tamil, Tea, Tea Plantations, Tribal People, ULFA | Leave a Comment »

Banned Organizations in India

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2006

இந்தியாவில் 32 அமைப்புகளுக்கு தொடர்ந்து தடை: அமைச்சர்

புதுதில்லி, ஆக. 2: சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்படி அல்-காய்தா, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது, ஹிஸ்புல்-முஜாகிதீன் உள்ளிட்ட 32 அமைப்புகளுக்கு தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

இதுகுறித்து மக்களவையில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:

இந்தியாவில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து ஹவாலா உள்ளிட்ட பல வழிகளில் நிதி உதவிகள் வருகின்றன.

  • பாபர் கல்சா இன்டர்நேஷனல்,
  • காலிஸ்தான் கமாண்டோ படை,
  • காலிஸ்தான் ஜிந்தாபாத் படை,
  • ஹர்கத்-உல்-முஜாகிதீன்,
  • உல்பா,
  • போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி,
  • தமிழ் ஈழ விடுதலைப்புலிகள்,
  • சிமி,
  • சிபிஐ-எம்எல்,
  • ஜமாத்-உல்-முஜாகிதீன் போன்றவைகளும் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் என்றார் அவர்.

Posted in al-Qaeda, Ban, CPI-ML, Dinamani, India, LTTE, SIMI, Tamil, Terrorism, ULFA | Leave a Comment »