Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Ujjain’ Category

Zero funds for Thanjavur under Eco-City project: Programme in six cities

Posted by Snapjudge மேல் மே 15, 2007

“சுற்றுச்சூழல்-நகரம்’ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு

புதுதில்லி, மே 16: மத்திய அரசின் சுற்றுச்சூழல்-நகரம் என்ற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு திங்கள்கிழமை எழுத்து வடிவில் அளித்த பதில்:

  1. கோட்டயம் (கேரளம்),
  2. புரி (ஒரிசா),
  3. திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்),
  4. உஜ்ஜைனி (மத்தியப் பிரதேசம்),
  5. பிருந்தாவன் (உத்தரப்பிரதேசம்) மற்றும்
  6. தஞ்சாவூர் (தமிழ்நாடு) ஆகிய 6 நகரங்கள் சுற்றுச்சூழல்-நகரம் திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

S.
No

Town

Amount
released in Lakh of Rupees

 1

Kottayam

40.84

 2

Puri

55.53

 3

Tirupati

49.34

 4

Ujjain

67.41

 5

Vrindavan

43

 6

Thanjavur

Nil

Posted in Andhra, AP, Brindavan, Brindhavan, eco-city, Environment, Forests, Kerala, Kottaiam, Kottayam, Madhya Pradesh, MP, Namo Narain Meena, Orissa, Pollution, Puri, Tanjore, Thanjavoor, Thanjavur, Thirupathi, Thirupathy, Tirupathi, Tirupathy, Ujjain, Ujjaini, UP, Uttar Pradesh, UttarPradesh, Vrindavan, Vrindhavan | Leave a Comment »

Joy at Sohrabuddin`s home after arrest of three IPS officers

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 26, 2007

3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கைது செய்யவைத்த சோரபுதீன் குடும்பத்தார் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

போலி துப்பாக்கிச் சண்டையில் சோரபுதீன் ஷேக் என்பவரை சுட்டுக் கொன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஆமதாபாத் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை அழைத்துவரப்பட்ட காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா (டி ஷர்ட், கண்ணாடி அணிந்தவர்).

இந்தூர், ஏப். 26: குஜராத் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆர்.கே. பாண்டியன், எம்.என். தினேஷ்குமார் (ராஜஸ்தான்) என்ற 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை, சோரபுதீன் ஷேக் குடும்பத்தார் தங்களுடைய சொந்த கிராமத்தில் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் ஜிர்னியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோரபுதீன் ஷேக். ஜிர்னியா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக சோரபுதீனின் அம்மா ஜெபுன்னிசா பீவி பதவி வகிக்கிறார்.

1995-ம் ஆண்டு சோரபுதீன் பெயர் முதல்முறையாக பத்திரிகைகளில் வந்தது. அந்த கிராமத்து கிணறு ஒன்றிலிருந்து 2 டஜனுக்கும் மேற்பட்ட ஏ.கே.-56 ரக தானியங்கி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அவரை சிபிஐ போலீஸôர் சந்தேகத்தின்பேரில் கைது செய்து அழைத்துச் சென்றனர். பிறகு அவரை நிரபராதி என்று விட்டுவிட்டனர்.

பிறகு அவரை 2005 நவம்பர் 26-ம் தேதி குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப்படை போலீஸôரும் ராஜஸ்தான் மாநில சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி எம்.என். தினேஷ் குமாரும் ஆமாதாபாத் நகருக்கு வெளியே சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர்.

அவருக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அத்வானி மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் தலைவர்களைக் கொலை செய்ய அவர் சதித்திட்டம் தீட்டி, அதை நிறைவேற்ற குஜராத்துக்கு வந்தார் என்றும் கூறப்பட்டது.

பிறகு சோரபுதீனின் சகோதரர் ருபாபுதீன் இச் சம்பவத்தை விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம், குஜராத் போலீஸôருக்கு ஆணையிட்டு இதைத் தீவிரமாக விசாரிக்கும்படி கூறியது. பிறகு உண்மை அம்பலமானது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேண்டுமென்றே சதி செய்து அவரைக் கொன்றிருப்பதாக, விசாரித்த அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அதன் பேரில் 3 பேரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

மே 1 வரை போலீஸ் காவல்: கைதான 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் ஆமதாபாத் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரிக்க 14 நாள்கள் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரப்பட்டது. நீதிபதி மே முதல் தேதி வரை மட்டும் அவகாசம் தந்தார்.

3 அதிகாரிகளும் நீதிமன்றத்தில் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். நிருபர்கள் ஏதேதோ கேள்விகள் கேட்டும் அவர்கள் யாரும் பதில் அளிக்கவில்லை. கைதான வன்சாரா, முதல்வர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

Posted in Abdul Latif, abuse, anti-terrorist, Courts, Encounter, Fake, Govt, Gujarat, IAS, IPS, Jhirnya, Judge, Jury, Justice, Lashkar-e-Toiba, Law, LeT, Madhya Pradesh, Modi, MP, Narendra Modi, officers, Order, Police, Sohrabuddin, Terrorism, terrorist, Ujjain | 1 Comment »

Professor Sabarwhal murdered by fellow parties ABVP Students?

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 7, 2006

பேராசிரியர் கொலை: 15 நாளில் அறிக்கை தர ம.பி. அரசுக்கு மனித உரிமைக் கமிஷன் உத்தரவு

புது தில்லி, செப். 7: பேராசிரியர் சபர்வால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பும்படி மத்தியப்பிரதேச உள்துறைச்செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேசிய மனித உரிமைக்கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மாதவா கல்லூரியில் ஆகஸ்ட் 26 ம் தேதி பேரவைத்தேர்தல் நடைபெற்றது. இதை மேற்பார்வையிட்ட பேராசிரியர் சபர்வாலை பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் அடித்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

சம்பவம் நடந்தபோது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸôர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக தொலைக்காட்சிகள் ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டன.

ஆளும் பாஜகவின் மாணவர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் கொலைக்கான ஆதாரங்களையும் போலீஸôர் அழிக்க முயற்சி செய்வதாக பேராசிரியர் சபர்வாலின் மகன் ஹிமான்ஷு சபர்வால் மனித உரிமைக்கமிஷனில் புகார் செய்தார்.

அவரது புகாரைப்பெற்றுக்கொண்ட கமிஷன் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளின் அடிப்படையில் தானாகவே இந்தப்பிரச்சினையில் மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தச்செய்திகள் உண்மையாக இருந்தால் நிச்சயமாக இது மனித உரிமைகளை மீறிய செயலாகும. எனவே இதுகுறித்து விவரங்களை 15 நாட்களுக்குள் அனுப்பவேண்டும் என மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவருக்கு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியர் கொல்லப்பட்ட சம்பவம்: மீண்டும் ஒரு அறிக்கை கேட்கிறார் ஆளுநர்

போபால், செப். 7: மத்தியப்பிரதேச மாநிலத்தில் கல்லூரி தேர்தலின் போது பேராசியர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாநில பாஜக அரசை ஆளுநர் பல்ராம் ஜாக்கர் கேட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில அரசு ஏற்கெனவே ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஆனால் அதன்பிறகு நடைபெற்ற விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், பாஜக மாணவர் அணியைச் சேர்ந்த இருவர் கைதான விவரம் ஆகியவை குறித்து இன்னொரு அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாநில அரசை ஆளுநர் ஜாக்கர் கேட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

உஜ்ஜைனியில் உள்ள கல்லூரி ஒன்றில் பேரவைத் தேர்தல் நடந்தபோது ஆகஸ்ட் 26 ம் தேதி பேராசியர் சபர்வால் கொல்லப்பட்டார். இந்த படுகொலைச் சம்பவத்தில் பாஜக மாணவர் அணியினருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

அதுபோல ஏபிவிபியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குற்றவாளிகளை காப்பாற்ற முதல்வர் சிவராஜ் சிங் செüகான் முயற்சி செயகிறார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதையடுத்து இதுவரை நடந்த விசாரணை விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கும்படி ஆளுநர் கேட்டுள்ளார் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பேராசிரியர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு: இன்னொரு சாட்சி பல்டி

உஜ்ஜைனி, பிப். 7: மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் கல்லூரிப் பேராசிரியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னொருவர் பிறழ் சாட்சியானார். அச் சம்பவம் தொடர்பாக போலீஸôரிடம் அளித்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவர் மறுத்துவிட்டார்.

அதையடுத்து அவரை பிறழ்சாட்சியாக நீதிபதி அறிவித்தார்.

உஜ்ஜைனியில் உள்ள மாதவ் கல்லூரியில், கடந்த ஆண்டு நடந்த மாணவர் பேரவைத் தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததை அடுத்து, அதை ரத்துசெய்தார் பேராசிரியர் எச்.எஸ். சபர்வால்.

அதனால் ஏற்பட்ட தகராறில், பாஜக ஆதரவு மாணவர் சங்கமான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தை (ஏபிவிபி) சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் சிலர் அவரை அடித்து உதைத்ததில் அவர் படுகாயமடைந்து இறந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி இக் கொலை நடந்தது.

அது தொடர்பான வழக்கு உஜ்ஜைனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அனில் குமார் சர்மா முன்னிலையில் நடைபெற்றுவருகிறது.

அவ் வழக்கில் செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையில், பாஜக தலைவர் சன்வர் பட்டேல் சாட்சியமளித்தார்.

“”பேராசிரியர் சபர்வாலை யாரும் அடித்ததைப் பார்த்ததாக நான் போலீஸôரிடம் வாக்குமூலம் ஏதும் அளிக்கவில்லை” என்று கூறினார் அவர். அதையடுத்து அவரை பிறழ்சாட்சியாக அறிவித்தார் நீதிபதி.

ஏற்கெனவே, திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது, வேறு இரு அரசுத் தரப்பு சாட்சிகள், போலீஸôரிடம் கொடுத்திருந்த வாக்குமூலங்களை மறுத்தனர். அவர்களும் பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டனர்.

கல்லூரியின் நூலகர் கோவிந்த் சிங் குஷ்வாகா-வும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

“”கல்லூரி ஊழியர் கோமள் சிங்கும் வேறு சிலரும் கூக்குரலிட்டதை அடுத்து அங்கு விரைந்து சென்றேன். படுகாயமடைந்திருந்த சபர்வாலை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றேன். ஆனால், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை” என்று அவர் நீதிபதி முன் கூறினார்.

உஜ்ஜைன் பேராசிரியர் கொலை வழக்கு: பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலத்துக்கு வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும் – ம.பி. எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

உஜ்ஜைன், பிப். 14: உஜ்ஜைன் கல்லூரிப் பேராசிரியர் சபர்வால் கொலை வழக்கை, மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாஜக ஆட்சிப் பொறுப்பில் இல்லாத மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என அம் மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஜமுனா தேவி நீதிமன்றத்தில் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் அமைந்துள்ள மாதவ் கல்லூரியில் மாணவர் சங்கத் தேர்தலின்போது, பாஜக-வின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்தவர்களால் பேராசிரியர் சபர்வால் கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி அடித்துக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக சபர்வால் மகன் ஹிமன்சு தொடர்ந்த வழக்கு விசாரணையில் சாட்சியாக செவ்வாய்க்கிழமை ஆஜரானார் ஜமுனா தேவி. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பளித்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் செüகானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். போபால் போலீஸில் முதல்வர் செüகானுக்கு எதிராக அளித்த புகார், ஆளுநர் பல்ராம் ஜாக்கருக்கு அளித்த மனு ஆகியவற்றின் நகல்களை நீதிமன்றத்தில் சமர்பித்தார் ஜமுனா தேவி. கொலை நடந்த மறுநாள் அதை விபத்து என செüகான் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டதன் மூலம், விசாரணையை திசை திருப்ப முயன்றதுடன், குற்றவாளியை அவர் பாதுகாக்க முயன்றுள்ளார் என ஜமுனா தேவி நீதிபதியிடம் குறிப்பிட்டார்.

ம.பி.யில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாஜக அரசினால் வழக்கு விசாரணை பாதிப்புக்குள்ளாகும். எனவே சபர்வால் கொலை தொடர்பான அனைத்து வழக்குகளையும், பாஜக ஆட்சிப் பொறுப்பில் இல்லாத மாநிலத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.

“பாஜக இந்த வழக்கு விசாரணையில், குற்றவாளிகளுக்கு சாதகமாக தலையிடுகிறது. இந்த வழக்கின் சாட்சிகள் பல்டி அடித்ததன் மூலம் அவர்கள் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது’ என அவர் குற்றம் சாட்டினார். “ஆதாரத்தை மறைத்ததற்காகவும், குற்றவாளிகளுக்கு புகலிடம் அளித்ததற்காகவும் முதல்வர் செüகான்

Posted in abuse, ABVP, Balram Jakar, Balram Jakkar, Balram Jhakar, Balram Jhakkar, bhopal, BJP, CM, Himanshu Sabarval, Human Rights, Jamuna Devi, Law, Madhav College, Madhya Pradesh, Order, Police, Prsosecution, Sabarvaal, Sabharwal, Sangh Parivar, Shivraj Singh Chauhan, Shivrajsingh Chauhan, Sivaraj Singh Chauhan, Student Union, Tamil, Ujjain, Witness | Leave a Comment »