18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக சீனப் பொலிஸார் கூறுகின்றனர்
![]() |
![]() |
ஜிங்ஷியாங்கைக் குறிக்கும் வரைபடம் |
சீனாவில் மேற்குப்புற தன்னாட்சி அந்தஸ்து கொண்ட ஜிங்ஷியாங் மாகாணத்தில் தீவிரவாதிகளின் முகாம் என்று அதிகாரிகளால் கூறப்படும் ஒரு முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தாங்கள் பதினெட்டு பேரைக் கொன்றதாகவும், பதினேழு பேரைக் கைது செய்திருப்பதாகவும், சீனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் எல்லைக்கருகே உள்ள இந்தத் தொலைதூர மேற்குப் பிரதேசத்தில், வெள்ளிக்கிழமையன்று இந்த சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றதாக பிராந்தியப் பாதுகாப்பிற்கான இயக்குனர் சோங் ஹோங்லி தெரிவித்தார்.
இந்த முகாமை கிழக்கு துர்கெஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வந்ததாக ஹொங் லி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஷிங்ஷியாங் மாகாணம் சீனாவில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என இந்த அமைப்பு கோரி வருகிறது.
முகாம் மீதான தாக்குதலில் சில சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற காரணத்தினால் இந்தப் பகுதியில் பொலிஸார் தேடுதல் வேட்டையினை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனையில் ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டிருக்கிறார்.