சர்ச்சையை ஏற்படுத்திய பிரான்சின் சட்டம்
![]() |
![]() |
ஆர்மேனிய ஆர்பாட்டக்காரர்கள் |
ஆர்மேனியர்களுக்கு எதிராக துருக்கியர்கள் 90 ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலைகளை செய்ததை மறுப்பது, குற்றமாக கருதப்படும் என்கிற பிரெஞ்சு நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு பரவலான கண்டனம் எழும்பியுள்ளது.
இது ஒரு பொறுப்பற்ற செயல் எனறும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளுக்கும் இது ஒரு பெருத்த அடி எனவும் துருக்கிய அரசு கூறியுள்ளது. இது பொருளாதார விளைவுகளையும் ஏற்படுத்தும் எனவும் துருக்கிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், இந்த விடயம் குறித்து ஏற்படக்கூடிய இணக்கப்பாடு கடினமாகிவிடும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி சேரும் நம்பிக்கையில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
தனது மேலவையில் இது வாக்கெடுப்பிற்கு வரும் போது, இதைத் தொடர்ந்து எதிர்க்கப் போவதாக பிரெஞ்சு அரசு தெரிவித்துள்ளது.
பிரஞ்சு நாடாளுமன்றத்தின் கீழவையில் இந்த மசோதவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல உறுப்பினர்கள் வெளியேறிய பிறகு இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிரெஞ்சு அதிபர் தேர்தலில், ஆர்மேனிய வம்சாவழியினரின் வாக்குகளை கவரவே இந்த வாக்கெடுப்பின் போது பல உறுப்பினர்கள் வெளியேறினர் என விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.