பாகிஸ்தானின் வடமேற்கில் தொடர் குண்டுவெடிப்பு
![]() |
![]() |
பாகிஸ்தான் வரைப்படம் |
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் இசை குறுந்தகடுகள், திரைப்படங்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு டஜனுக்கும் அதிகமான கடைகள் சேதமடைந்துள்ளன.
இஸ்லாத்திற்கு எதிரான விடயங்கள் என்று தாங்கள் கருதுபவைகளுக்கு, விடயங்களுக்கு எதிராக தீவிரவாதிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று போலத் தோன்றுகிறது.
தாங்கி, மற்றும் சார்சட்டா ஆகிய இடங்களில் உள்ள கடைகள் சேதமடையக் காரணமான இந்தக் குண்டுகளை யார் வைத்திருக்கக் கூடும் என்பது குறித்து தாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிசார் கூறுகின்றனர்.
சார்சட்டாவில் சென்ற வாரம் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருபத்து எட்டு பேர் கொல்லப்பட்டனர், இதில் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.