திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழு பதவியேற்பு
நகரி, செப். 1: திருப்பதி தேவஸ்தான புதிய ஆறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 10 பேர் அண்மையில் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.
தேவஸ்தான முதன்மை நிர்வாக அதிகாரி நாராயணசர்மா வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மத்திய அமைச்சர் டி. சுப்புராமி ரெட்டியை தலைவராகக்கொண்டு அமைக்கப்பட்ட அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்ததையடுத்து திருப்பதி பூமன் கருணாகரரெட்டி குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சாதாரண பக்தர்களின் வசதிக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் வி.ஐ.பி பக்தர்களின் தரிசனத்தை முறைப்படுத்தவேண்டியுள்ளதாகவும் பூமன் கருணாகரன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அலிபிரி அருகிலிருந்து திருமலைக்கு ரோப்கார் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி முதல்வர் ராஜசேகரரெட்டியிடம் கேட்கப்போவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தேவஸ்தான ஊழியர்கள் போராட்டம் நடத்தியது நியாயமானது என்றும் விரைவில் அக்குறைகள் தீர்த்துவைக்கப்படும் என்றார்.