Archive for the ‘Treatment’ Category
Posted by Snapjudge மேல் ஜனவரி 9, 2008
எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதா?: டாக்டருக்கு செஞ்சிலுவைச் சங்கம் நோட்டீஸ்
ஜே. ரங்கராஜன்
சென்னை, ஜன. 8: எச்ஐவி, எய்ட்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் டாக்டரின் கிளினிக்கை உரிய காரணம் எதுவும் இன்றி மூடுமாறு இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழ்நாடு கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை மாண்டியத் சாலையில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளை வளாகத்தில் நெஞ்சக நோய் மருத்துவ நிபுணரும் இந்திய நலவாழ்வு நல்லறம் (“ஹெல்த் இந்தியா ஃபவுண்டேஷன்’) அமைப்பின் தலைவருமான டாக்டர் செ. நெ. தெய்வநாயகம் சிறிய புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவை 2002-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.
அரசுப் பணியில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள டாக்டர் செ.நெ.தெய்வநாயகம், எச்ஐவி நோயாளிகள் உள்பட இதுவரை மொத்தம் 6,045 நோயாளிகளுக்கு இந்த புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்துள்ளார். மொத்த நோயாளிகளில் 3,000 பேர் எச்ஐவி நோயாளிகள். திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை இந்த இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு அம்சங்கள் என்ன?
இந்த கிளினிக்கில் மருத்துவ ஆலோசனைக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பதிவுக் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நோயாளி அளிக்கும் ரூ.50 பதிவுக் கட்டணத்திலிருந்து, ரூ.10-ஐ செஞ்சிலுவைச் சங்கத்துக்கு வாடகையாக அளித்து வந்தனர்.
அலோபதி – சித்த மருத்துவ கூட்டு சிகிச்சை முறையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மீதமுள்ள கட்டணத்தில் இரண்டு சித்த மருத்துவர்களுக்கு மாதம் தலா ரூ,.8,000, ரூ.5,000 சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. அலோபதி மருத்துவ நிபுணரான செ.நெ.தெய்வநாயகம், சித்த மருத்துவ நிபுணர்களான ஜி.சிவராமன், தெ. வேலாயுதம் ஆகியோர் ஊதியம் பெறாமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.
திடீர் நோட்டீஸ்:
இந் நிலையில் கடந்த ஜன.2-ம் தேதியன்று இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளையின் தலைவராக உள்ள டாக்டர் விமலா ராமலிங்கத்திடமிருந்து அவரது செயலர் மூலம் டாக்டர் தெய்வநாயகத்துக்கு நோட்டீஸ் வந்துள்ளது.
“”அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம், இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கம், ஜெர்மனி செஞ்சிலுவைச் சங்கம், ஸ்வீடன் செஞ்சிலுவைச் சங்கம், இங்கிலாந்து செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்டவை நிதியுதவி செய்யும் திட்டங்களைச் செயல்படுத்த போதிய இடம் இல்லாததால் உங்களது இடத்தை புதன்கிழமை (9.1.2008) முதல் காலி செய்து விடுங்கள்” என்று அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆளுநர், முதல்வருக்கு பேக்ஸ்:
இதையடுத்து ஆளுநரும் இந்திய செஞ்சிலுவைச் சங்க தமிழகக் கிளையின் தலைமை காப்பாளருமான பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு டாக்டர் தெய்வநாயகம் பேக்ஸ் அனுப்பியுள்ளார்.
“இறக்கும் நிலையில் உள்ள எச்ஐவி நோயாளிகளுக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் செஞ்சிலுவைச் சங்கம் விடுதி நடத்துகிறது; தென்னாப்பிரிக்கா கேப்டவுனில் குழந்தை எச்ஐவி நோயாளிகளுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மருத்துவமனை நடத்துகிறது. இந் நிலையில் தமிழக செஞ்சிலுவைச் சங்கம் செய்ய வேண்டிய பணியைச் செய்துவரும் “ஹெல்த் இந்தியா பவுண்டேஷன்’ சிகிச்சைப் பிரிவு மூடும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த பேக்ஸ் செய்தியில் டாக்டர் தெய்வநாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Posted in AIDS, Allegations, Deivanayagam, Deivanayangam, Deiyvanayagam, Dheivanayagam, Dheiyvanayagam, Doctor, Fear, Health India Foundation, HIV, Hospital, Law, medical, Order, patients, Red Cross, Theivanayagam, Theivanayangam, Theiyvanayagam, Treatment | Leave a Comment »
Posted by Snapjudge மேல் திசெம்பர் 21, 2007
ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் – சிகிச்சையும்
ஃப்ளூ என்று பொதுவாக அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா என்பது ஒரு வைரஸ் காய்ச்சல். இது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகளைத் தாக்குகிறது.
மூச்சுக் குழல் எனப்படும் சுவாசக் குழலைப் பாதிக்கும் மற்ற வைரஸ்களைவிட இன்ஃப்ளூயன்சா வைரஸ், தீவிரமாக நோய்க் கிருமிகளையும், சிக்கல் நிறைந்த நோய்த்தன்மையையும் கொண்டது. இன்ஃப்ளூயன்சா ஏ, பி மற்றும் சி ஆகிய 3 வைரஸ்களால் இந்த காய்ச்சல் ஏற்படலாம். இதில் ஏ ரக வைரஸ் பரவலாக தொற்றக் கூடியது, இது தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.
இந்த ஏ டைப் வைரஸ் சீரான முறையில் வளர்ந்து சில ஆண்டு களுக்கு ஒரு முறை தொற்று நோய்ப் பரவலை ஏற்படுத்தக் கூடியது. இதில் டைப் பி, டைப் சி வைரஸ்களால் சிறு சிறு உபாதைகளே தோன்றி மறையும்.
இன்ஃப்ளூயன்சாவிற்கு வயது வித்தியாசமோ, வயது வரம்போ கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படலாம். பொதுவாக குளிர்காலத்திலேயே இந்தவகை வைரஸ் காய்ச்சல் தொற்றக்கூடியது. இந்த காய்ச்சல் ஏற்பட்டோரின் இருமல், சளி ஆகியவை மூலம் இது பிறருக்கும் தொற்றுகிறது.
இன்ஃப்ளூயன்சா திடீரென, உடனடியாகத் தோன்றும். முதலில் அதிக காய்ச்சல், குளிர், வேர்வை, தசை வலி மற்றும் தலைவலி போன்ற தொடக்க அறிகுறிகள் ஏற்படும். தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை கட்டு மற்றும் சூரிய ஒளிக்கு ஒத்துக் கொள் ளாமல் கண்ணீர் வழியும் கண்கள் என்று இதன் நோய் அறிகுறிகள் விரிவடையும். இந்த உடனடி தீவிர அறிகுறிகள் சாதாரணமாக 3 அல்லது 5 நாட்களுக்கு இருக்கும், பொதுவாக 48 மணி நேரத்தில் நோய்க்கூறுகள் அதிகரிக்கத் தொடங்கும்.
ஃப்ளூ வைரஸ்களால் கூடுதலாக, எலும்பு உட்புழை, காது மற்றும் மூச்சுக்குழல் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகள் ஏற்படுகின்றன. சில சமயம் ஃப்ளூவால் நியுமோனியா ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. நியுமோனியாவானது இன்ஃப்ளூயன்சா வைரசால் மட்டுமோ அல்லது இரண்டாம் கட்ட நோய்க்கிருமிக்கு காரணமாகும் பாக்டீரியாவாலோ தோன்றலாம்.
அறிகுறிகள்
- 104 டிகிரி வரை காய்ச்சல்
- தலைவலி
- தசைவலி மற்றும் பிடிப்பு
- மூக்கிலிருந்து தண்ணீர் போல் சளி வருதல்
- இருமல்
- மூச்சு விடுதலில் சிரமம்
- நடுக்கம்
- தளர்ச்சி
- வியர்வை
- பசியின்மை
- மூக்கடைப்பு
- தொண்டைக்கட்டு
இது சாதாரண ஃப்ளூ காய்ச்சலாக இருந்தால் மருத்துவர்கள் காய்ச்சல் எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளைக் கொடுத்து கட்டுப்படுத்துவர். ஆனால் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், வயதானவர்கள், இருதயம், நுரையீரல் மற்றும் கிட்னி ஆகியவற்றில் நீண்ட நாளைய பழுது இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் இருப்பது 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டால் அமான்ட டின், ரிமான் டடின் ஆகிய வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப் படுவது இயல்பு.
குழந்தைகளை இந்த வைரஸ் நோய் தாக்கினால் சிகிச்சை பொதுவாக தேவையில்லை என்று கருதப்படுகிறது. ஆனால் இதன் மூலம் வேறு நோய்கள், வேறு உறுப்புகளில் பழுது என்ற நிலை தோன்றுவதுபோல் தென்பட்டால் சிகிச்சை அவசியம் தேவைப்படும். குழந்தைகளுக்கு ஆஸ்ப்ரின் கொடுக்கக் கூடாது, ஏனெனில் இது ஆபத்து மிகுந்தது. ஆஸ்ப்ரினுக்கும் சுநலந’ள ளலனேசடிஅந என்ற புது வகை ஃப்ளூவிற்குமான தொடர்பு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தண்ணீர், பழச்சாறுகள் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் அவசியம்.
அதிக திரவங்களை உட்கொண்டால் எலும்பு உட்புழை மற்றும் நுரையீரலில் உள்ள சளிச்சவ்வு மெலிதடைந்து உடலிலிருந்து விரைவில் வெளியேறும்.
பொதுவாக இன்ஃப்ளூயன்சா காய்ச்சலை குறைக்காமல் அதன் முழுக்காலத்தை கடக்கவிடுவதே சிறந்தது. ஆனால் குழந்தை களுக்கும், வயதானவர்களுக்கும் சிகிச்சை அவசியம் தேவை. இது பிறருக்கு தொற்றாமல் இருக்க பாக்டீரியா – தடுப்பு சோப்பை பயன்படுத்தி அடிக்கடி கை கழுவுதல் நலம்.
பிற உறுப்புகளில் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தாக்கினால், மேலும் சிக்கல் நிறைந்த நோய்களை உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்பது தவிர இதனால் பெரும் ஆபத்து எதுவும் இல்லை.
ஆரோக்கியமாக இருந்து வரும் நபர்களுக்கு இன்ஃப்ளூயன்சா 7 முதல் 10 நாட்களில் குணமாகி விடும். வயதானவர்கள், உடல் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், நீண்ட நாள் இருதய, கிட்னி மற்றும் நுரையீரல் நோய் இருப்பவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் மேலும் ஆபத்தானதாக மாறுவதற்குக் கூட வாய்ப்புகள் அதிகம்.
Posted in Advice, Antibody, bacterial, Bio, Care, Cold, Congestion, diagnosis, Doc, Doctor, Fever, Flu, Health, Illness, Immune, immunity, Infection, Influenza, medical, Medicine, Science, Shot, Sick, Symptoms, Transmission, Treatment, Viral, Virus, Wellness | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2007
தேவை விழிப்புணர்வு!
கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தொற்றுநோய்கள் பரவுவது என்பது இயல்பான விஷயமாகிவிட்டது. சமீபத்தில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரே, இதுபோன்ற தொற்றுநோய்க்குப் பலியாகி இருப்பது என்பது எந்த அளவுக்கு நாம் விழிப்புணர்வு இல்லாமலும் கவனக்குறைவாகவும் இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.
ஒருபுறம் முறையாக நடத்தப்படும் உணவு விடுதிகள். மறுபுறம், “கையேந்தி பவன்’ என்கிற காரணப் பெயருடன் அழைக்கப்படும் தெருவோரக் கடைகள். போதாக்குறைக்கு, கடந்த பத்து ஆண்டுகளில் காளான்கள்போல முளைத்திருக்கும் துரித உணவகங்களும், “சாட் பண்டார்’ என்று அழைக்கப்படும் வடநாட்டு உணவகங்களும். அதிக வருமானமுள்ள பிரிவினருக்காகவே நடத்தப்படும் நவநாகரிக உணவகங்கள் இந்தப் பட்டியலிலேயே வராது.
மத்தியதர வகுப்பினர் குடும்பத்துடன் செல்கின்ற உணவு விடுதிகள் பெருகி இருப்பது மட்டுமல்லாமல் அவற்றின் தரமும் செயல்படும் விதமும் நிச்சயமாக உயர்ந்திருக்கிறது. இதுபோன்ற உணவு விடுதிகளில் சராசரித் தமிழன் முப்பது ரூபாய் இல்லாமல் மதிய உணவு சாப்பிட முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், ஓரளவில் சுத்தமாகவும் தரமாகவும் இந்த விடுதிகள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மேலும், இதுபோன்ற விடுதிகள் நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறையினரின் கண்காணிப்புக்கு உட்பட்டு, இயன்றளவுக்கு அடிப்படைச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க முனைகின்றன என்பது உண்மை.
ஆனால், திரும்பிய இடத்திலெல்லாம் காளான்களாக முளைத்திருக்கும் துரித உணவகங்கள் எந்த அளவுக்குச் சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தெருவோரக் கடைகள் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடுகளை விளைவிக்கின்றன என்பதை அந்தப் பகுதியில் குடியிருப்போரிடம் கேட்டால் தெரியும். துரித உணவகங்களும், தெருவோரக் கடைகளும் அவை செயல்படும் பகுதியின் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினரின் நல்லாசியைப் பெற்றிருக்கின்றன என்பதும் ஊரறிந்த ரகசியம்.
வாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிநீரைக்கூட இதுபோன்ற உணவகங்களும் கடைகளும் வழங்குவதில்லை என்பது மட்டுமல்ல, அடிப்படைத் தரமோ, சுத்தமோகூட இருக்க வேண்டும் என்று நினைப்பதுமில்லை. இவை அனேகமாக இரவு நேரக் கடைகள் என்பதாலும், “டாஸ்மாக்’ மதுபானக் கடையிலிருந்து வருபவர்களைத் தங்கள் வாடிக்கையாளர்களாகக் கொண்டிருப்பதாலும், தரமும், சுத்தமும் தேவையில்லை என்றேகூட நினைக்கிறார்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் காணப்படும் இந்தப் போக்கு இப்போது தாலுகாக்கள் வரை காணப்படுவதுதான் வருத்தப்பட வைக்கும் விஷயம். தொற்று நோய்களின் ஊற்றுக் கண்களாகச் சாக்கடைகள் இருந்த காலம் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறதே என்று மகிழ்ச்சி அடைய முடியாமல் செய்து விடுகின்றன இப்போது இதுபோன்ற சுகாதாரக் கேடுகளை விளைவிக்கும் உணவு விடுதிகள்.
உணவு விடுதிகளில் போய் சாப்பிடுவது என்பதே கௌரவக் குறைவான, இழிவான விஷயமாக நினைத்திருந்த காலம்போய், வெளியில் போய் சாப்பிடுவது என்பதுதான் நாகரிகம் என்று நினைக்கத் தொடங்கி இருக்கிறோம். அதேநேரத்தில்,தரமும் சுத்தமும் இல்லாத உணவு விடுதிகளில் சாப்பிடுவது நமது உடல் நலனுக்குக் கேடு என்பதை நமது அதிகரித்திருக்கும் கல்வி அறிவு ஏன் உணர்த்த மறுக்கிறது? முன்பு சிக்குன் குனியா, இப்போது “டெங்கு’ காய்ச்சல் பரவுவதாகத் தகவல். இதற்கெல்லாம் காரணம், அடிப்படைச் சுகாதாரக் குறைவும், நமது மக்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு இல்லாமையும்தான். இதைக் கண்காணிக்க வேண்டிய அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது?
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் ஆயிரம் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கத் தீர்மானித்திருக்கிறது தமிழக அரசு. அதுமட்டுமல்ல, 39 நகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கவும் முடிவெடுத்திருக்கிறது. இவ்வளவு நாள்கள், முறையான சுகாதாரக் கண்காணிப்பு இருக்கவில்லை என்பதுதானே இதன் பொருள்? கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் பொதுமக்களைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னைகளை எப்படி அணுகியிருக்கிறார்கள் என்பதைத்தானே இது காட்டுகிறது?
எத்தனைபேர் அவதிப்பட்டிருப்பார்கள்? எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும்? சிந்தித்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இப்போதாவது விழித்துக் கொண்டதே அரசு என்று ஆறுதல் அடைவதைத் தவிர என்னதான் வழி?
Posted in Anbumani, Awareness, Bacteria, bacterial, Clean, College, Consumers, dead, Dengue, Dine, Disease, Doc, doctors, Drinking, Eat, Eatery, Education, employees, Fever, Food, Germs, Hotel, Hygiene, Infection, Inspections, Kareema, medical, Mosquito, Nurses, Purity, Ramadas, Restaurants, Sanitary, SMC, Society, Stanley, Student, Treatment, Viral, Virus, Water, Welfare | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2007
தவறுகளும் வரம்புமீறல்களும்!
வழக்கறிஞர்களின் போராட்டத்தால் சென்னையிலுள்ள நீதிமன்றங்கள் ஸ்தம்பித்திருக்கின்றன. தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எச்சரித்திருக்கிறது வழக்கறிஞர்கள் சங்கம்.
சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்ற ஒரு வழக்கறிஞர், காலதாமதமாவது ஏன் என்று கேள்வி கேட்க, அதுவே வாக்குவாதமாகி, அங்கிருந்த காவல்துறையினர் ஒருவரால் வழக்கறிஞர் தாக்கப்பட்டார் என்பதுதான் வழக்கறிஞர்கள் தரப்பு வாதம். “”காலதாமதத்தையோ, நிர்வாக முறையீடுகளையோ கேள்வி கேட்டதே தவறா? ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களின் நிலைமை என்ன? காவல்துறையினரும் சரி, வழக்கறிஞர் என்றும் பாராமல் அவரைத் தாக்கியது என்ன நியாயம்?” – இவையெல்லாம் வழக்கறிஞர்கள் தரப்பு வாதம்.
இணை ஆணையர் ரவியின் தலைமையில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. ஆனால், அவர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களையோ, வழக்கறிஞர் சங்கத் தலைவரையோ விசாரிக்காமலேயே காவல்துறையினர் மீது எந்தத் தவறும் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்துவிட்டார் என்பது வழக்கறிஞர்களின் அடுத்த ஆதங்கம். நீதிமன்ற விசாரணை தேவை என்பது அவர்கள் கோரிக்கை.
வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் எப்போதுமே பனிப்போர் நிகழ்ந்தவண்ணம் இருப்பது உலகளாவிய ஒன்று. காவல்துறையினரிடம் ஆஜர்படுத்தப்படும் குற்றவாளிகள் பலரையும் சட்டத்தின் ஓட்டைகளைக் காட்டி விடுவித்துவிடுகிறார்கள் வழக்கறிஞர்கள் என்பது காவல்துறையினரின் வருத்தம். மேலும், கிரிமினல் வழக்குகளில் தங்களைச் சாட்சிக் கூண்டுகளில் ஏற்றி தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்டு கேலிப்பொருள்களாக்கிவிடுகிறார்கள் என்பதும் காவல்துறையினரின் ஆதங்கம்.
வழக்கறிஞர்கள் தரப்பும் சரி, காவல்துறையினர் தங்களுக்குத் தரவேண்டிய மரியாதையைத் தருவதில்லை என்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்கிறது. வழக்கறிஞர்கள் காவல்நிலையங்களில் தகுந்த மரியாதையுடன் காவல்துறையினரால் நடத்தப்படுவதில்லை என்பதும் குற்றவாளிகளை முறையாக ஜாமீனில் எடுக்க வழக்கறிஞர்களைக் காவல்துறையினர் முடிந்தவரை அனுமதிப்பதில்லை என்பதும் நீண்டகாலமாகவே இருந்துவரும் குற்றச்சாட்டுகள்தான்.
எழுபதுகளில் திருப்பரங்குன்றத்தில் வழக்கறிஞர் அய்யாத்துரை என்பவர் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவம் முதல் இன்று வரை, காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் தொடரும் பரஸ்பர அவநம்பிக்கையும், எதிரி மனப்பான்மையும் குறைந்தபாடில்லை. காலம் தரும் பாடம் இரு தரப்பினரையும் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பையும் அவர்களிடம் நல்லுறவையும் வளர்த்திருக்க வேண்டும். சொல்லப்போனால், காவல்துறையினரும் சரி, வழக்கறிஞர்களும் சரி நவீன உலகத்தின் நாகரிகக் கோட்பாடுகள் தெரிந்த தலைமுறையினராக இருந்தும், இவர்களுக்குள் நல்லிணக்கம் ஏற்படாமல் இருப்பது ஏன் என்பதுதான் கேள்வி.
இவர்களுடைய கருத்து வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றங்கள் மட்டுமல்ல, பொதுமக்களும்தான். சென்னை உயர் நீதிமன்றத்தில் மட்டும் 2006ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி தேங்கிக் கிடக்கும் வழக்குகள் 4,06,958. கீழமை நீதிமன்றங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் மூன்றரை லட்சம் வழக்குகள் இருப்பதாகக் கடந்த மார்ச் மாதப் புள்ளிவிவரம் கூறுகிறது. விசாரணையில் இருக்கும் வழக்குகள் சுமார் எட்டரை லட்சம்.
இப்படியொரு நிலையில், பலருடைய ஜீவாதாரப் பிரச்னைகள் நீதிமன்றங்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன. காக்கிச் சட்டை போட்டவரானாலும், கருப்புக் கோட்டு அணிந்தவரானாலும், சிவப்பு விளக்கு எரியும் வாகனங்களில் பயணிப்பவர்களானாலும், பேனா பிடித்து எழுதுபவரானாலும் அனைவரும் பொதுமக்களின் நன்மைக்காகவும் தேசத்தின் வளர்ச்சிக்காகவும் சேவை செய்யக் கடமைப்பட்டவர்கள். வரம்பு மீறுவது யாராக இருந்தாலும் கண்டனத்துக்கு உரியவர்களே. சக பணியாளர் என்பதற்காக அவர்களது தவறுகளும் வரம்புமீறல்களும் அனுமதிக்கப்படலாகாது.
நீதி கேட்டு நெடும்பயணம் போக வேண்டிய நிலையில் இருக்கும் பொதுமக்களை மேலும் அவதிப்பட வைப்பது தவறு. கைகுலுக்கிச் செயல்பட வேண்டிய காக்கிச் சட்டைகளும் கருப்புக் கோட்டுகளும் கைகலப்பில் ஈடுபடலாமா?
Posted in abuse, Attorneys, Bandh, Chennai, Conflicts, Cooperation, Correctional, Corrections, Doc, doctors, Force, Hardhal, Hospital, Jobs, Justice, Law, Lawyers, medical, Medicine, Order, Police, Power, Protest, Treatment, Work | 2 Comments »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 25, 2007
யானைக்கால் நோய்க்கான கிருமியின் மரபணு ஆய்ந்தறியப்பட்டது
 |
 |
யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரது கால்கள் |
உலக அளவில் பல நாடுகளில் லட்சக் கணக்கான மக்களை தாக்கும் யானைக்கால் நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணு எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
உலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது.
இது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார்.
இந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Posted in aanaikkaal, aanaikkal, Bacteria, Biotech, Blockbuster, Burkina Faso, Cases, Challenged, Chemists, China, cure, disability, Disabled, Disease, DNA, doctors, Drugs, Elephantiasis, eradicate, Eradication, genes, Genetic, Genetics, genitals, genome, immunisation, India, infected, Infection, legs, Medicine, Mosquito, parasite, R&D, Research, RnD, Science, Scientists, Sri lanka, Srilanka, Treatment, Vaccines, Viral, Virus, worms, yaanaikkaal, Yaanaikkal | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 26, 2007
இது புதுசு: அமெரிக்காவிலிருந்து வந்த ஆர்ட் தெரபிஸ்ட்கள்!
ந.ஜீவா
சில குழந்தைகள் எப்போது பார்த்தாலும் துருதுருவென்று இருப்பார்கள். அவர்களை ஓர் இடத்தில் பிடித்து வைப்பது என்பது பெரும்பாடு. இங்கிருந்து அங்கே குதிப்பார்கள். அங்கிருந்து இங்கே குதிப்பார்கள். சில குழந்தைகளோ அதற்கு நேர்மாறாக எப்போதும் அமைதியாக இருப்பார்கள். “துருதுரு’ குழந்தையோ, அமைதிக் குழந்தையோ அவர்களின் மனதைப் படிப்பது எப்படி? அவர்களுடைய மனப்பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி? இதற்கு விடை சொல்லும் வகையில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள ஆர்ட் தெரபியை இந்தியாவில் அறிமுகப்படுத்த வந்திருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் ஆரோன் ரூபினும், போடா நாரோவும். இருவரையும் இங்கே அழைத்து வந்தவர் அமெரிக்காவில் வாழும் சங்கீதா பிரசாத். இவரும் கூட ஒரு ஆர்ட் தெரபிஸ்ட்தான். சென்னையிலும், பிற நகரங்களிலும் ஆர்ட் தெரபியைப் பற்றிய அறிமுக நிகழ்ச்சியையும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆர்ட் தெரபி ட்ரெயினிங் புரோக்ராமையும் நடத்த வந்திருக்கும் அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அதிலிருந்து…
“”ஆர்ட் தெரபி 60 ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் புழக்கத்தில் வந்துவிட்ட ஒன்று. குழந்தைகளுக்கு என்றில்லை, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் இந்த ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். ஆரோக்கியமாக்கலாம்.
இந்த ஆர்ட் தெரபி தொடர்பான ஐடியா முதன் முதலில் ஒரு மனநல மருத்துவருக்குத்தான் வந்தது. மனநல மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் சிலர் படம் வரைந்து கொண்டிருந்ததை அங்கிருந்த மருத்துவர் பார்த்தார். சாதாரணமாக ரொம்பவும் ஆர்ப்பாட்டம் செய்யும் அவர்கள் படம் வரையும் போது மிகவும் அமைதியாகக் காணப்பட்டனர். இது அவருக்கு வித்தியாசமாகப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்றன. அதிலிருந்து பிறந்ததுதான் இந்த ஆர்ட் தெரபி.
அமெரிக்காவைச் சேர்ந்த மார்க்கெரெட் நாம்பர்க் 1947 இல் முதன் முதலாக ஆர்ட் தெரபியைப் பற்றி புத்தகம் எழுதினார்.
ஆர்ட் என்றவுடன் ஏதோ படம் வரைவது மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். படம் வரைவது, களிமண் சிற்பங்கள் செய்தல், ஏன் நாடகம் போடுதல், நடனம் ஆடுதல் எல்லாம் ஆர்ட் என்பதில் அடங்கிவிடும். இந்தக் கலை முயற்சிகளில் ஈடுபடும் பெரியவரோ சிறியவரோ தங்களை மறந்து ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் வரைந்த படங்களைப் பார்த்தோமானால் அது அவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். இதிலிருந்து அவர்களுடைய மனதைப் படித்துவிடலாம். அவர்களுடைய மனநிலைக்கேற்ப ஆர்ட் தெரபி பயிற்சிகள் கொடுத்து அவர்களுடைய மனதை ஆரோக்கியமான நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்தப் பயிற்சி மூன்றுவிதங்களில் நடைபெறும். உளவியல் அடிப்படையிலான அணுகுமுறையுடன் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுவது, ஆலோசனை கூறுவது, அப்புறம் அவர்களைப் படம் வரையச் சொல்வது. இதில் படம் வரைவதன் மூலம் நோயாளியின் மனநிலையை ஓர் ஆர்ட் தெரபிஸ்ட் படிக்க முடியும். அதே சமயம் படம் வரையும் அந்தச் செயலே மனநலக் குறைபாட்டிற்கான ஒரு மருந்து போலச் செயல்படும். சாதாரணமாக ஒருவர் படம் வரையும் போது அவர் மனம் ரொம்ப ரிலாக்ஸôக இருக்கும். உதாரணமாக எப்போதும் பதட்டமாக எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் ஒருவரை இந்த ஆர்ட் தெரபி மூலம் அமைதியாக்கிவிடலாம். அவருடைய கவனத்தை ஒருமுகப்படுத்தலாம்” என்கிறார் அமெரிக்காவில் தங்கியிருந்து ஆர்ட் தெரபிஸ்டாகப் பணிபுரியும் சங்கீதா பிரசாத்.
“”அமெரிக்காவில் முதலில் எல்லாம் மனநல மருத்துவர்கள்தாம் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி பண்ணலாம் என்று எங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள். இப்போதெல்லாம் நோயாளிகளே நேரடியாக எங்களை அணுகுகிறார்கள். குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த ஆர்ட் தெரபி அங்கு நல்ல பலனளிக்கிறது. ஸ்கூல் டீச்சரே ஒரு பையன் வித்தியாசமாக இருந்தால் எங்களிடம் சொல்லி விடுகிறார்கள். நாங்கள் அந்தப் பையனுக்கு ஆர்ட் தெரபி மூலம் ட்ரீட்மென்ட் கொடுப்போம். ஸ்கூல் டீச்சர்களுக்கு ஆர்ட் தெரபி பயிற்சியும் கொடுக்கிறோம்” என்று சொல்லும் ஜூடித் ஆரோன் ரூபின் ஆர்ட் தெரபித் துறையில் நீண்ட கால அனுபவம் உள்ளவர். ஆர்ட் தெரபி தொடர்பான திரைப்படங்களும் எடுத்துள்ளவர்.
“”ஆர்ட் தெரபியைக் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம். எய்ட்ஸ் நோயாளிகள் வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டிருப்பவர்கள். விரக்தியின் உச்சியில் வாழ்பவர்கள். அவர்களுக்கு மனநலப் பிரச்சினை ஏற்படுவது இயல்பானதே.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஆர்ட் தெரபி செய்ய முடியும். முதலில் அவர்களுடைய வியாதியைப் பற்றி அவர்களுக்குப் புரிதல் ஏற்பட உதவுவோம். சிலர் மருந்து சாப்பிடக் கூட மாட்டார்கள். சாப்பிட்டு என்ன ஆகப் போகிறது? எதற்கு வாழ வேண்டும்? என்றெல்லாம் யோசிப்பார்கள். வாழ்க்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த இந்த ஆர்ட் தெரபி பயன்படுகிறது. நோயாளிகளுக்கு மனநிலை சரியாக இருந்தால்தான் அவர்கள் உட்கொள்ளும் மருந்து நன்றாக வேலை செய்யும். மனநிலையைச் சரிசெய்ய ஆர்ட் தெரபி உதவுகிறது.” என்கிறார் போடா நாரோ. இவர் இந்தியாவுக்கு வந்திருப்பது இப்போது இரண்டாவது முறை.
சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தமானுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு போடா நாரோ ஆர்ட் தெரபி முறையில் சேவை செய்திருக்கிறார். தீவிர சைவரான இவருக்கு இந்தியா பிடித்திருப்பதற்கு ஒரே காரணம், அங்கே கிடைக்காத விதவிதமான சைவ உணவுகள் இங்கே கிடைப்பதுதானாம்.
“”புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஆர்ட் தெரபி மூலம் மனதை அமைதிப்படுத்தலாம். உடலில் எந்த அளவுக்கு அவர்களுக்கு வலி உள்ளதை என்பதை அவர்கள் சொன்னாலும் யாரும் அதை உணரப் போவதில்லை; தெரிந்து கொள்ளப் போவதில்லை. அவர்களைப் பார்த்துக் கொள்ளும் நர்சுகளுக்கே கூட தெரியாது. அவர்களைப் படம் வரையச் செய்து அதைப் பார்த்தால் அவர்களின் உடல் வேதனையும் அதனால் நேர்ந்த மனவேதனையும் தெரிய வரும். “நாளைக்குச் செத்துப் போவேன்’ என்று அவர்கள் நினைப்பது அவர்கள் வரைந்த படத்தின் மூலமாகத் தெரிய வந்தது.
குழந்தைகள் உடல் தொடர்பாக ஏதாவது சொன்னால் சாதாரணமாக, “சும்மா இருடா’ என்று ஒரு வார்த்தையில் அடக்கி விடுவோம். அவர்களுடைய மனதைப் புறக்கணித்துவிடுவோம். ஆனால் அவர்களைப் படம் வரையச் சொன்னால் அவர்களுடைய மனதையே வரைந்து கொடுத்துவிடுவார்கள்.” என்கிறார் சங்கீதா பிரசாத். அவர் மற்ற இருவரையும் சந்தித்தது சமீபத்தில்தானாம். அவர்கள் மூவரும் இத்தனைக்கும் அமெரிக்காவில் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்கள். ஒருவர் கேன்ஸ். இன்னொருவர் பென்சில்வேனியா. மற்றவர் வெர்ஜினியா.
அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் நடந்த ஆர்ட் தெரபி தொடர்பாக நடந்த ஒரு கான்ஃபரன்ஸின் போது, “இந்தியாவிற்கு என்னோடு வந்து ஆர்ட் தெரபியைப் பற்றி அறிமுகம் செய்ய யார் வரப் போகிறீர்கள்?’ சங்கீதா பிரசாத் அறைகூவல் விட்டிருக்கிறார். அந்த அறைகூவலின் விளைவுதான் அமெரிக்கப் பெண்களின் இந்த வருகை.
“இந்த ஆர்ட் தெரபி அமெரிக்காவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு எட்டுமா? இல்லை பணக்காரக் குழந்தைகளுக்கு மட்டும்தானா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தோம்.
“”எங்களுடைய முன்னாள் பிரசிடென்ட் ஜான் எஃப் கென்னடி காலத்திலேயே “வறுமைக்கு எதிரான போரை’ அமெரிக்காவில் தொடங்கிவிட்டோம். எனவே அமெரிக்காவில் உள்ள சேரிக் குழந்தைகளுக்கு எங்களுடைய சேவை தொடர்கிறது” என்றார் சற்றுச் சூடாக ஜூடித் ஆரோன் ரூபின்.
———————————————————————————————-
நனவாகுமா இவர்கள் கனவு?
வி. கிருஷ்ணமூர்த்தி
ஓரளவு மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வசதிகள், இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ளன.
குழந்தை கருவாக இருக்கும்போது, குழந்தை பிறக்கும்போது, குழந்தை பிறந்தவுடன் ஆகிய மூன்று நிலைகளில் பல்வேறு காரணங்களால் குழந்தைகளின் மூளை நரம்புகளில் வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை மனவளர்ச்சி குன்றியவர்கள் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இந்த பாதிப்பை மூன்று நிலைகளாக டாக்டர்கள் வகைப்படுத்துகின்றனர். இதில் மூன்றாவது பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பதை அவர்களுடன் பேசிப் பழகினாலொழிய, அவர்களைக் கூர்ந்து பார்த்தாலொழிய கண்டுபிடிக்க முடியாது.
உடலளவில் பெரிய பாதிப்பு இல்லாத இவர்களுக்கு, பேசுவதில், சிந்திப்பதில் சிரமம் இருக்கும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் இவர்களுக்கு அதிக நேரம் பிடிக்கும். மேலும் ஏற்கனவே புரிந்த விஷயத்தை நினைவுபடுத்தி எழுதுவதற்கும் காலதாமதம் ஏற்படும். மனவளர்ச்சி குன்றியவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் – சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் – இத்தகைய நிலையில் உள்ளனர்.
முறையான பயற்சி மற்றும் செயல்வழி கல்வி போன்ற முறைகளில் சில ஆண்டுகளில் இவர்களைப் பூரணமாகக் குணமாக்க முடியும். பிற குழந்தைகளுடன் போட்டி போடும் அளவுக்குத் தயார்படுத்த முடியும். ஆனால், இதற்கான சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பது கேள்விக்குறியே.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தமிழகத்தின் பின்தங்கிய மலைக்கிராமங்களில் ஒன்றான கீழானவயல் என்ற ஊரில் மிகச் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இத்தகைய பாதிப்பு காரணமாக தனது மகன் பிரேம்குமாரை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார். சிறுவன் பிரேம்குமாரால் படிக்க முடியாது என முடிவு செய்த பெற்றோர், அவனை மாடு மேய்ப்பது, வீடுவீடாகச் சென்று பால் விற்பனை செய்வது போன்ற வீட்டு வேலைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றார். இந்தப் பணிகளை எவ்விதக் குறையும் இல்லாமல் பிற குழந்தைகளைப் போலச் சரியாக செய்வதில் பிரேம்குமாரின் சாமர்த்தியம் தெளிவாகத் தெரிகிறது. “நாமும் மற்ற குழந்தைகளை போல பள்ளிக்குச் சென்று படிக்க மாட்டோமா?’ என்ற ஏக்கம் அவனுக்கு இல்லாமல் இல்லை.
இவனைப் போல பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூழல் காரணமாக வீட்டு வேலைக்கும், தோட்ட வேலைக்கும் பெற்றோர்களால் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை மாநிலப் பாடத்திட்டம் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இத்தகைய குழந்தைகளை வயது வரம்பு பார்க்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இத்தகைய குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு, பார்வையற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது போல, ஓர் உதவியாளரை வைத்துக் கொள்வது, டேப்ரெக்கார்டர் வைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. தேசிய திறந்த நிலை கல்வித் திட்டத்திலும் இத்தகைய குழந்தைகள் கல்வி பெற மத்திய அரசு பல்வேறு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
“ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ என்ற அமைப்பு மூலம் இவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை அரசு நடத்தி வருகிறது.
அரசின் இந்தத் திட்டங்கள் எல்லாம் அணையில் தேங்கியுள்ள நீராகவே உள்ளன. அது பிரேம்குமார் போன்ற கடைமடைப் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்குச் சென்று சேரவில்லை. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு சமுதாய அடிப்படையிலான செயல் திட்டங்களை வகுத்து அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களை அமைத்துள்ளது.
அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் இந்தக் குழுக்களின் செயல்பாடு பல மாவட்டங்களில் இன்னமும் பெயரளவிற்குத்தான் உள்ளது. களப்பணிக்கு இந்தக் குழுக்கள் நம்பியுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தொலைதூர கிராமங்களுக்குத் தேடிச்சென்று இத்தகைய குழந்தைகளைத் தேடிப்பிடித்து பள்ளிகளில் சேர்ப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.
நகர்ப்புறங்களில் செயல்படும் தொண்டு நிறுவனங்களில் பணம் படைத்தவர்களின் குழந்தைகளே அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். குறைந்த வருவாய்ப் பிரிவினரில் பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில், மனவளர்ச்சி குன்றிய ஒரு குழந்தைக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவதற்கு அவர்களுடைய பெற்றோர்களால் முடிவதில்லை. இதுவே பல குழந்தைகள் கல்வி பெற முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.
புரிந்து கொள்ளும் திறன் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிக்க வேண்டியது தங்களின் கடமை என்பதைப் பெற்றோர்களும், அரசு நிர்வாகமும் புரிந்து கொண்டால் மட்டுமே பிரேம்குமார் போன்ற குழந்தைகளின் கல்விக் கனவு நனவாகும்.
இத்தகைய குறைபாடு இனி பிறக்கும் எந்தக் குழந்தைக்கும் இருக்கக் கூடாது என்பதற்கு போலியோ ஒழிப்புப் பிரசாரம் அளவுக்கு விழிப்புணர்வுப் பிரசாரப் பணிகள் தேவை. அதேசமயம் இவ்வாறு பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதைப் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
திட்டங்களை அறிவித்து விட்டோம் என்பதுடன் நின்றுவிடாமல், அந்தத் திட்டம் சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா? அவ்வாறு சென்று சேரவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்? என்பன போன்றவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப செயல்பட வேண்டியது அரசின் கடமை.
Posted in Active, Add, Affected, AIDS, Arts, Attention, Baby, Brain, Challenged, Child, Children, Colleges, Community, Crafts, cure, Deficiency, Disabled, Disorder, Donate, Education, Europe, Group, Handicrafts, Health, Help, Kid, medical, Mental, Needy, Neuro, NGO, Patient, Poor, Procedure, Project, Pshychic, Pshychology, Relax, Releiver, Reliever, Rich, Schizo, School, service, Shrink, Sick, SNEHA, Spastic, Stress, Suicide, Tax, Tension, Therapist, Therapy, Trauma, Treatment, univ, University, univs, US, USA, Volunteer, Wealthy, Work | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 19, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்!: உப்பைக் குறைக்கும் வழி!
பேராசிரியர் எஸ்.சுவாமிநாதன்
சர்க்கரை வியாதி பதினெட்டு ஆண்டுகளாக உள்ளது. கால்கள் வீங்கி இருக்கிறது. டாக்டர் உப்பு அதிகமாக உள்ளது என மாத்திரை கொடுத்தார். சரியாகவில்லை. வலியினால் வலது கையை சரியாகத் தூக்கக்கூட முடியவில்லை. உப்பைக் குறைக்க வழி என்ன?
நீரில் உப்புள்ளவர்கள் உப்பைக் குறைப்பதால் அல்லது உப்பை அறவே நீக்குவதால் சிலருக்குக் குணமாகிறது. சிலருக்கு எத்தனை உப்பில்லாப் பத்தியமிருந்தாலும் குறைவதில்லை. நோய்க்கும் பத்திய உணவிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்வது அவசியம். உடலில் உள்ள கப தாதுவான லஸீகை (albumin)சிறுநீர் வழியே வெளியேறுவதே இந்நோய். கப தாதுவை நீர் வழியே வெளியேறாமல் தடுக்கும் சக்திபெற்ற சீறு நீரகங்கள் இதைத் தடுப்பதில்லை. அதற்குக் காரணம் அவை முழுவதிலுமோ சில பகுதிகளிலோ புண்ணாகி அந்தப் பலவீனத்தால் இது வெளியேறக்கூடும். ரத்தத்திலுள்ள இந்த லஸீகை அதன் இயற்கைத் தடிப்பு குறைந்து சிறுநீரகங்களின் சல்லடைகளில் தங்காமல் வெளியேறியிருக்கலாம். சிறுநீரகங்களில் ரத்த ஓட்ட அழுத்தம் அதிகமாகி அழுத்தத்தால் அது வெளியேற்றப்படலாம். இப்படிப் பல காரணங்களால் கபாம்சமான ஆல்புமின் எனும் லஸீகை சிறுநீரில் காணக்கூடும். எல்லா நிலைகளிலும் உப்பை நீக்குவதும் அல்லது அளவைக் குறைப்பதும் உதவலாம். ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றிவரும் இந்த லஸீகை கேடுற்றால் ஆங்காங்கு தங்கி ரத்த ஓட்டத்தைத் தடை செய்து வீக்கத்திற்குக் காரணமாகும். கேடடைந்த லஸீகையினால் சிறுநீரகங்களும் கெடக்கூடும். இத்தகைய நிலைகளில் உப்பைக் குறைப்பது உதவுகிறது.
பொதுவாகவே இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையுள்ளவை கபத்தை அதிகப்படுத்தும். கபம் கெட்டுள்ள நிலையில் இவற்றைச் சேர்க்க கெட்ட கபத்தின் அளவும் செயலும் அதிகமாகும். இவற்றைக் குறைக்க கபம் குறையும். இம்மூன்று சுவைகளிலும் குறிப்பாக உப்பு கபத்தின் பிசுபிசுப்பைக் குறைத்து நீர்க்கச் செய்து அளவில் அதிகமாக்கும். சிறுநீரின் வழியே வெளியாகும். லஸீகை நீர்த்து அதிக அளவில் வெளியாவதால் கபத்தின் அந்த வளர்ச்சியை அதிகப்படுத்தும் உப்பைக் குறைப்பதால் ரத்தத்தில் கபம் வளரத் தக்க சூழ்நிலை அகற்றப்படுவதால் உடல் வீக்கம் குறைகிறது. ரத்த ஓட்டத் தடை குறையக் குறைய ரத்தக்குழாய்களின் உட்புறப்பூச்சு தடிப்பும் குறைய குழாய்கள் பூர்ண அளவில் விரிந்து சுருங்குகின்றன. ரத்த ஓட்டம் அதிகமாக அதிகமாக உடலில் ஆரோக்கியம் ஏற்படுகிறது.
நீங்கள் உணவில் உப்பை நீக்க வேண்டும் என நினைத்து இட்லி, தோசையில் அதைச் சேர்க்காமல் சாப்பிட்டாலும் உங்கள் உபாதை குறைய வாய்ப்பில்லை. காரணம் இட்லி, தோசையிலுள்ள உளுந்து நுண்ணிய ரத்தக் குழாய்களின் உட்பூச்சை அதிகப்படுத்தி குழாய்களைத் தடிக்கச் செய்யும். உப்பு சேர்க்காததால் வரும் வினையிது. உப்பு சேர்த்தால் இட்லி, தோசை போன்றவை எளிதில் செரித்துவிடும். உப்பில்லாத பண்டம் எளிதில் செரிக்காததால் அதன் சத்து பிரிக்கப்படாமலேயே உடலில் குப்பை கழிவுப் பொருள் தேங்கும் பெருங்குடலில் போய்ச் சேரும். அப்படியே வெளியாகும். செரிக்காத உணவே மறுபடியும் கபதோஷ வளர்ச்சிக்குக் காரணமாகி வளர்ந்து நோய் மாறுவதில்லை.
பாகற்காய், சுண்டைக்காய், வாழைக்கச்சல், கொள்ளு, பாசிப்பருப்பு, வாழைப்பூ, மணத்தக்காளி, கறிவேப்பிலை, நெல்லிமுள்ளி, நன்கு கடைந்து ஆடை எடுத்த மோர், ஆடை புடைக்க இளந்தீயில் காய்ச்சி ஆடை நீக்கிய பசுவின் பால், வல்லாரைக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை முதலியவை உணவில் சேரச்சேர கபம்தானே குறைந்து சிறுநீர் தெளிவாக வெளியேறுவதை உணரலாம். தயிர், பச்சரிசி, அதிக இனிப்பு, வெல்லம், பகல் தூக்கம், உளுந்து முதலியவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதுபோன்ற கபம் சம்பந்தப்பட்ட நீர் நோய்களில் கசப்பும் துவர்ப்பும் மிக்க மருந்து சரக்குகளைக் கொண்ட கஷாயங்கள் நல்ல பலனைத் தருகின்றன.
Posted in Advice, Alternate, Avoid, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, cure, diabetes, Diet, Doc, Doctor, Health, Healthcare, Herbs, medical, Medicines, Natural, Patient, Salt, Sugar, Swaminathan, Tablet, Tips, Treatment | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 2, 2007
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கருப்பை கட்டிக்குக் கஷாயங்கள்!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
கருப்பையில் உள்ள கட்டிகளால் ( Uterine fibroids) அவதிப்படுகிறேன். அவை ஏற்படுவதற்கான காரணங்களையும் நீங்குவதற்கான வழிமுறைகளையும் கூறவும்.
கருப்பை கட்டிகளால் அவதியுறும் பெண்களின் விகிதம் தற்சமயம் கூடியுள்ளது. இதற்குக் காரணமாக அடிக்கடி கருக்கலைப்பு, டி அண்ட் ஸி முறையில் கருப்பையைச் சுத்தம் செய்வதால் ஏற்படும் மறைமுக ரணங்கள், வம்ச பரம்பரை, பெண் வளரும்போது புரதச் சத்து உடல் அணுக்களில் ஏற்படுத்தும் விரிவாக்கம், கருப்பையைச் சூழ்ந்துள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் உபாதைகள், கருப்பையின் வேலைத் திறனை செவ்வனே செய்யும் அபான வாயு சீற்றம் அடைதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஐம்பது சதவீதம் பெண்கள் இந்தக் கருப்பைக் கட்டிகளால் பாதிப்படைந்தாலும் பலருக்கும் அதனால் உபாதை ஒன்றும் ஏற்படாததால் அவை இருப்பதைப் பற்றியே அவர்கள் அறிவதில்லை.
கட்டியின் அளவு, கருப்பையில் அது வந்துள்ள இடம், மற்ற உறுப்புகளின் அருகாமை ஆகியவற்றைப் பொருத்து அறிகுறிகளை ஏற்படுத்தும். அடிவயிற்றில் அழுத்தம், வலி, சிறுநீர்ப்பை அழுத்தம் காரணமாக அடிக்கடி சிறுநீர் அல்லது தடையுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம், மலப்பை அழுத்தத்தால் மலம் கழிக்கையில் வலி, அதிக அளவில் உதிரப்போக்கு, அதிகமான ரத்தக் கசிவினால் இரும்புச் சத்து குறைந்து ரத்தசோகை, கருத்தரிக்க இயலாத நிலை போன்றவை ஏற்படும்.
இந்தக் கட்டிகள் தொல்லைகள் ஏதும் தராதிருந்தால் விட்டுவிடலாம். ஆனால் சிலவகைக் கட்டிகள் உபாதை ஏதும் ஏற்படுத்தாதிருந்தாலும் அறுவைச் சிகிச்சை மூலம் நீக்க வேண்டிவரும். அல்லது அவற்றை ஸ்கேன் மூலம் அடிக்கடி கவனிக்க வேண்டும். காரணம் இந்தக் கட்டிகள் திடீரென்று அசுர வளர்ச்சி அடைய வாய்ப்பிருக்கிறது. அல்ட்ரா சவுண்ட் மூலம் இந்தக் கட்டிகளைப் பற்றிய விவரங்களை நம்மால் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
கருப்பையை அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துவிடுவதால் இந்தக் கட்டிகளும் அகற்றப்படுகின்றன. கட்டிகளை மட்டும் நீக்கும் Myomectomy முறையும் லேசர் மூலம் கட்டிகளைத் துளைப்பதும், கட்டிகளை உறைய வைத்துவிடும் Cryosurgery, பாலிவினைல் ஆல்கஹாலை சிறிய குழாய்மூலம் கட்டிகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களுக்கு அடைப்பை ஏற்படுத்தி அவற்றை பட்டினிப் போடச் செய்யும் Uterine artery occlusion எனும் கருப்பை ரத்தக்குழாய்களை அடைக்கும் முறையும் தற்சமயம் நவீன மருத்துவத்தில் கையாளப்படுகின்றன.
கருப்பை கட்டிகள் உருவாகும் முறையை ஆயுர்வேதம் கூறும் முறையானது நவீன மருத்துவத்தின் கூற்றிலிருந்து வேறுபடுகிறது. கருப்பையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அபான வாயு- வேர்க்கடலை, காராமணி, மொச்சைக் கொட்டை, பட்டாணி, பச்சைப் பயிறு, கடலை எண்ணெய், அதிக நேரம் பட்டினியிருத்தல் போன்ற உணவு மற்றும் செய்கையால் சீற்றம் அடைகிறது. பகல்தூக்கம், சோம்பலுடன் கூடிய வாழ்க்கை முறை ஆகியவற்றால் ஏற்படும் கபத்தின் சீற்றமும் அதனுடன் சேர்வதால் கருப்பையின் உள்ளே அமைந்துள்ள ரத்த நாளங்கள், மாமிசம் மற்றும் கொழுப்புப் பகுதிகள் கேடடைந்து கட்டிகளை உருவாக்குகிறது.
அடிவயிற்றுப் பகுதியில் கட்டிகளின் இறுக்கம் தளர புளித்த சூடான மோரில் சில மூலிகைப் பொடிகளைக் குழைத்துப் பற்று இடுவார்கள். அதன் மூலம் ஏற்படும் உட்புழுக்கம் காரணமாக இறுகி கெட்டியாயிருந்த கட்டிகள் தளர்ந்து தொய்வை அடைகின்றன. அதன்பிறகு உள் மருந்தாகக் காலையில் வெறும் வயிற்றில் வரணாதி கஷாயமும் மாலையில் சுகுமாரம் கஷாயமும் சாப்பிட, இந்தக் கட்டிகள் உடைந்து அமுங்கிவிடும். இன்றைய நவீன அறுவைச் சிகிச்சை முறைகளும் மிகச் சிறப்பான முறையில் வந்திருப்பதால் மருந்தின் மூலம் குணமடையாத கட்டிகளை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றுவதில் தவறேதுமில்லை.
Posted in Alternate, Ayurveda, Ayurvedha, Ayurvedha Corner, Ayurvedic, Ayurvetha, Child, Cryosurgery, cyst, cysts, diagnosis, Doctor, Health, Healthcare, Kid, Medicine, Menses, Menstrual, Mom, Mother, Myomectomy, Ovarian, Parent, Period, PMS, Pregnancy, Sex, solutions, surgery, Symptoms, Treatment | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஜூன் 17, 2007
அரசின் “பார்வை’ சரியா?
சென்னை, ஜூன் 17: பார்வையற்றவர்களில் ஜாதிப் பிரிவுண்டா? உண்டு என்கிறது இந்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை.
இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை, பார்வையற்றவர்களின் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பது அதிர்ச்சி தரும் செய்தி.
உடல் ஊனமுற்றோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது வரவேற்கத் தக்கது. இந்தியாவில் 2.5 கோடி ஊனமுற்றோரில் 12 லட்சம் பேர் கண்பார்வை அற்றவர்கள். இந்தக் கண்பார்வை அற்றோரில் “பிரெய்லி’ மொழி மூலம் படித்தவர்கள் பலர் உள்ளனர். படிக்காதவர்களும் உள்ளனர்.
கடந்த 1982 முதல் அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் பார்வையற்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை மனிதநேயத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு: அரசு வேலைகளில் பார்வையற்ற, உடல் ஊனமுற்றவர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், ஒரு சதவீதம் பார்வையற்றோருக்கும், ஒரு சதவீதம் உடல் ஊனமுற்றோருக்கும், மீதமுள்ள ஒரு சதவீதம் மனவளர்ச்சி குன்றியோருக்கும் வழங்கப்படுகிறது.
இதேபோன்று, அரசு கல்வி நிறுவனங்களில் மொத்தமுள்ள 4 சதவீத இட ஒதுக்கீட்டில், பார்வையற்றோருக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பார்வையற்றவருக்கான இட ஒதுக்கீடு பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொதுப் பிரிவு என்ற நிலையில் வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவில் உயர் வகுப்பைச் சேர்ந்த பார்வையற்றவர்கள் வருகிறார்கள்.
“இட ஒதுக்கீட்டில் பாகுபாடு?’
இதன் மூலம், ஒருவர் பார்வையற்றவராகவும், பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராகவும் இருந்தால்தான் அவருக்கு இட ஒதுக்கீடு உறுதி. பிற வகுப்பைச் சேர்ந்தவர் என்றால் அவருக்கு இட ஒதுக்கீட்டில் இடம் கிடையாது.
பார்வையற்றவர்கள் எல்லோரையும் ஒரே பிரிவாகக் கருதாமல் அவர்களுக்கு மத்தியிலும் ஜாதிப் பாகுபாட்டை ஏற்படுத்தி பேதப்படுத்துவது மனித நேயமே இல்லாத கண்மூடித்தனம்.
“”பார்வையற்றவர்களை உயர் வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினர் எனப் பிரித்து ஜாதி அடிப்படையில் கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிர்ணயிப்பது நியாயம் இல்லை என்கிறார் “நந்தினி வாய்ஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர் எஸ்.என். வெங்கட்ராமன்.
இது குறித்து, தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் எந்த பதிலும் வரவில்லை என்றார் வெங்கட்ராமன்.
இட ஒதுக்கீட்டில் மாற்றம் வருமா?
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதால், திறமையிருந்தும் வேலை கிடைக்காத நிலையில் பார்வையற்றோர் பலர் உள்ளனர். இதனால், ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பார்வையற்றோரில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் என வகைப்படுத்தாமல் தகுதியும் திறமையும் உள்ள அனைவருக்கும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது என்னங்க நியாயம்?
தொலைபேசி பேசுவதற்காக வருவோரிடம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார் சென்னை தி. நகரில் பிசிஓ நடத்தும் பார்வையற்றவரான மீனாட்சி சுந்தரி.
அந்தப் பேச்சில் தன்னம்பிக்கை மிளிர்கிறது. ஆனால், அருகே சென்று பேசினால், இந்த நம்பிக்கை பல சமயங்களில் உடைக்கப்படுவதாக சோகத்துடன் கூறுகிறார் மீனாட்சிசுந்தரி. அதுவும் அரசின் இட ஒதுக்கீட்டால் என்கிறார்.
மீனாட்சிசுந்தரி பிறந்த 6 மாதங்களுக்குள் காய்ச்சல் காரணமாக கண் பார்வை இழந்தார். தூத்துக்குடியில் பிறந்த அவர், தனது பள்ளிப் படிப்பை பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் படித்தார்.
தொடர்ந்து விடாமுயற்சியுடன் கல்வியைத் தொடர்ந்த அவர் பட்டப்படிப்பு வரை படித்தார். “”கோவையில் உள்ள அவிநாசிலிங்கம் உயர் கல்வி நிறுவனத்தில் இளங்கலை ஆங்கிலம் படித்தேன். இதன்பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்தேன்.
1989-ல் பட்டப்படிப்பை முடித்த பின்பு, சென்னை வந்தேன். சுருக்கெழுத்து மற்றும் தொலைபேசி ஆபரேட்டர் பயிற்சியில் சேர்ந்தேன். இரு பயிற்சிகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்” எனக் கூறும் மீனாட்சி சுந்தரி, தொலைபேசி ஆபரேட்டராக 2 வருடங்கள் அனுபவம் பெற்றுள்ளார்.
“”இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தொலைபேசி ஆபரேட்டர் வேலைக்கு விண்ணப்பித்தேன். தகுதியிருந்தும் மறுக்கப்பட்டது. ரயில்வே துறை ஏராளமான எழுத்தர் வேலைகளுக்கு விண்ணப்பித்தேன். அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. பார்வையற்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்குள் நான் வரவில்லை. காரணம், உயர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதுதான்” என்றார் மீனாட்சி சுந்தரி.
இவரைப் போன்று இன்னும் எத்தனை பேர் இருக்கின்றனரோ? பார்வையற்றவர் மீதான அரசின் இந்தப் பார்வை சரியா?
Posted in AA, Action, Affirmative, Applicant, Aryan, Autism, BC, Blind, Braille, Caste, Challenged, Colleges, Community, Denial, Development, Disabled, Discrimination, Disease, Disorder, disturbed, Dravidian, Education, EEO, Employment, Equal, Eyes, FC, Forward, Govt, Handicapped, Health, Ill, Jobs, MBC, Mental, Merit, NGO, OBC, OC, Opportunity, PCO, prejudice, psychological, Qualification, Race, Reservation, SC, Schizophrenia, Schools, service, sightless, Society, ST, Students, Study, Treatment, University, Vision, Volunteer | Leave a Comment »
Posted by Snapjudge மேல் மே 10, 2007
காசநோயும் கட்டுப்பாடும்
எஸ். முருகன்
காசநோய் எளிதில் பரவக் கூடிய தொற்றுநோய். நீள்தண்டு வடிவ பாக்டீரியாக்கள் மைக்கோபாக்டீரியத்தால் ஏற்படும் இந்த நோய் உடலின் எப்பகுதியிலும் ஊடுருவவல்லது. குறிப்பாக நுரையீரல் மிக எளிதில் வசப்படும் பகுதி. பாதிக்கப்பட்ட மனிதரிலிருந்து காற்றின்வழி மூக்கு, தொண்டைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் பரவுகிறது.
காசநோய் உள்ளோர் இருமும்போதும் தும்மும்போதும் பாடும்போதும் பேசும்போதும் வெளியேறி காற்றில் பரவும் கிருமிகள், பிறர் சுவாசிக்கும்போது தொற்றுகிறது. மேலும் காசநோய் உள்ளவர்களுடன் தொடர்ந்து பழகும்போதும் நோய் தொற்றுகிறது.
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பெரிய பிரச்சினையான காசநோய் பரவ எய்ட்ஸýம் ஒரு காரணம். இந்தியாவில் நிமிஷத்துக்கு ஒருவர் காசநோயால் இறப்பதாக ஒரு தகவல்.
ஊட்டச்சத்து குறைவாக உள்ளோர் காசநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால், உயிரிழப்போர் வளரும் நாடுகளில்தான் அதிகம். எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளை விரைவில், அதிக அளவில் பாதிக்கிறது இந்நோய்.
பெருமளவில் 15-லிருந்து 24 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நோய் தொற்றுகிறது. இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களில் பாதிப் பேர் 15 முதல் 44 வயதுக்கு உள்பட்டவர்கள் என மதிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 3 லட்சத்திற்கும் மேலான குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து இந்நோயைப் பெற்றிருக்கின்றனர்.
தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புதுப்பிக்கப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டத்திற்கு சுமார் ரூ. 1,156 கோடி உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தி வருகின்றன.
நேரடியாக உட்கிரகித்தல் சிகிச்சை முறையின் ஐந்து கூறுகள்:
- அரசு ஆதரவு- தொடர்ச்சியான நிதியுதவி,
- தரமான பரிசோதனைகள் மூலம் புதிய நோயாளிகளைக் கண்டறிதல்,
- தக்க மேற்பார்வையின் கீழ் தரமான சிகிச்சை முறை -நோயாளிகளுக்கு ஆதரவு,
- மருந்து அளிப்பதில் முறையான மேலாண்மை,
- கண்காணிப்பு மற்றும் மதிப்பிடும் முறை, அதன் விளைவுகளை அளவெடுத்தல் ஆகியவை.
நோய்க் குறிகள்:
- தொடர்ச்சியான இருமல்,
- கோழையுடன் கூடிய இருமல்,
- எப்போதும் சோர்வு,
- எடை இழப்பு,
- காய்ச்சல்,
- ரத்தத்துடன் கூடிய சளி,
- இரவில் வியர்த்தல்,
- பசியின்மை ஆகியவை.
நோய் உருவாக்கம்: பல ஆண்டுகளாகக் காசநோய் ஒருவரைத் தாக்கியிருந்தாலும் அவர் நலமாகவே இருப்பார். திடீரென உடல்நலன் பாதிக்கப்படும்; அல்லது மாற்றங்கள் ஏற்படும். காரணம், மற்ற நோயான எய்ட்ஸ் அல்லது நீரிழிவு நோய்த் தாக்குதலாக இருக்கலாம் அல்லது போதை மாத்திரைகள், குடிப்பழக்கம் போன்றவற்றாலும் மாற்றம் அல்லது குறை ஏற்படுகிறது.
காசநோய் வந்தால் உடலானது அதனுடைய நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து குறைந்து பாதிக்கப்படுகிறது. கிருமிகள் ஒரு வாரத்திற்குள் வளர்ந்து உடலைப் பாதிக்கின்றன.
சிகிச்சை முறைகள்: காசநோயால் தாக்கப்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கைத் தடுப்பு சிகிச்சை அளிக்கப்படும். இதன் நோக்கம், நோய்க்கிருமிகளைக் கொல்வது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை கிருமிகள் உடனடியாக ஒன்றும் செய்யாது. சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் பின்னர் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களை அணுகி தினமும் அவர்களது ஆலோசனைப்படி, அளவாக ஐசோநியாசிட் எடுத்துக்கொள்ள வேண்டும். இது விலை குறைவான மருந்து. பாதிக்கப்பட்ட நபர் ஆறு மாதம் முதல் ஒன்பது மாதம் வரை, சிலருக்கு ஓர் ஆண்டு ஐசஏ மருந்தைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வர்.
குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனைகளை மேற்கொண்டு தொடர்ந்து இம் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டுமா? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
காசநோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மார்பு எக்ஸ்-ரே எடுக்க வேண்டும்.
நீண்ட நாள்களாக காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களைத் தனித்துப் பல மாதங்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டும். சிலருக்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம். அறுவைச் சிகிச்சை கூட மேற்கொள்ள வேண்டி வரும்.
இந்த நோயை சக்திவாய்ந்த மாத்திரைகளினால் குணப்படுத்த முடியும். இவ்வாறு சிகிச்சை பெற்றவர்கள் வீட்டிலேயே சிகிச்சையைத் தொடரலாம்.
சிகிச்சை முறைகளில் மாற்றம் மற்றும் மாற்று நடவடிக்கைகள் எனப் பல வந்தாலும் இன்னமும் இந் நோயை எதிர்த்து நிற்க முடியவில்லை.
காசநோயைப் போக்கப் பல சிகிச்சைகள் இருந்தாலும் நோயாளிகளின் முழு ஒத்துழைப்பால்தான் சிகிச்சையை முழுமையாக முடிக்க முடியும். நோய்க்குத் தக்க மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
எனவே, நோயாளிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இச் சிகிச்சைக்கு உண்மையான வெற்றி என்பது கிடையாது.
(கட்டுரையாளர்: பேராசிரியர், டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.)
Posted in AIDS, airborne, Bacteria, Communicable, cure, diagnosis, Disease, Doctor, drug, Evolution, Health, Healthcare, History, Infectious, Malnutrition, Medicine, Nutrition, Pathogenesis, Prevention, References, Symptoms, TB, Transmission, Treatment, Tuberculosis, Vaccines, Virus, Waterborne | 3 Comments »
Posted by Snapjudge மேல் மார்ச் 14, 2007
சென்னையில் பரவுகிறது சின்னம்மை
சென்னை, மார்ச் 12: சென்னையில் சின்னம்மை (“சிக்கன்பாக்ஸ்’), தட்டம்மை (“மீஸில்ஸ்’) பரவத் தொடங்கியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனையில் சின்னம்மை – தட்டம்மையால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சின்னம்மை – தட்டம்மை பரவுவதற்கான காரணம், பாதிக்கப்படும் நிலையில் சிகிச்சை, உணவு முறை, தடுத்துக் கொள்வது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-
அறிகுறிகள் என்ன? “”பருவ மாற்றம் (கோடை) காரணமாக “வெரிசல்லா úஸôஸ்டர்’ என்ற வைரஸôல் சின்னம்மை பரவுகிறது. லேசான காய்ச்சல், உடலில் பொதுவாக மார்பகத்தில் அம்மை கொப்புளங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். முன்புபோல் இல்லாமல் அலோபதி மருத்துவத்தில் தற்போது அம்மை நோயைக் குணப்படுத்த நல்ல மருந்து உள்ளது.
“ஏசைக்ளோவிர்’ என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் அம்மை நோய் குணமாகும். இந்த மாத்திரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. அம்மையின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 5 வேளைகள் வீதம் தொடர்ந்து 5 நாள்களுக்கு இந்த மாத்திரையைச் சாப்பிட்டால் அம்மை மறையும். இத்துடன் வைட்டமின் ஏ சத்து மாத்திரையும் தரப்படும்.
சுய மருத்துவம் கூடாது: அம்மை குறித்துச் சந்தேகம் எழும் நிலையில் சுயமாக மருந்துகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அம்மை காரணமாக நிமோனியா காய்ச்சல், மூளைக் காய்ச்சலால் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அம்மையுடன் மூச்சுத் திணறலோ அல்லது நினைவிழத்தலோ ஏற்பட்டால் நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
உணவு முறை: அம்மையால் பாதிக்கப்படும் நிலையில் காரம் – மசாலா இல்லாத உணவைச் சாப்பிட வேண்டும். தயிர் சாதம் நல்லது. கீரை, கேரட் உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது நல்லது. அரிப்பு ஏற்படும் நிலையில் கொப்புளங்களை கிள்ளுவது கூடாது. இருமினால், தும்மினால்கூட காற்றின் மூலம் அம்மை வைரஸ் பரவும் என்பதால் பாதிக்கப்பட்டவரை வீட்டில் தனிமையில் வைத்துப் பராமரிப்பது நல்லது. நல்ல காற்றோட்டமான இடத்தில் நோயாளி ஓய்வு எடுக்க வேண்டும்.
தடுப்பூசி உண்டு: ஒருவருக்கு சின்னம்மை வந்துவிட்ட நிலையில், மற்றவர்கள் அம்மை ஏற்படாமல் தடுத்துக் கொள்ள மிக அவசியம் ஏற்படும் நிலையில் சின்னம்மை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஏனெனில் இதன் விலை ரூ.1,200. ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2,400 செலவு செய்து இத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். ஏனெனில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து வசதி இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
========================================================
அம்மையை விரட்டும் சிறுங்கி பற்பம்
சென்னை, மார்ச் 12: சின்னம்மை உள்பட எல்லாவித அம்மையையும் போக்கும் ஆற்றல் சித்த மருத்துவத்துக்கு உண்டு என்றார் டாக்டர் ராஜலட்சுமி சிவராமன்.
“”அம்மையால் பாதிக்கப்பட்டு உறுதியாகிவிட்ட நிலையில், நோயாளியை டாக்டரிடம் அழைத்துச் செல்லாமலேயே சித்த மருந்துக் கடைகளில் உறவினர்கள் சிறுங்கி பற்பத்தை (வெண்மையான பவுடர்) வாங்கி நோயாளிக்குக் கொடுக்கலாம். இந்த பற்பத்தை இரண்டு சிட்டிகை அளவு, காலை-மாலை இரு வேளை பாலில் கலந்து நோயாளிக்கு ஒரு வாரம் கொடுத்தால் அம்மை மறையும். நோய் வராமல் தடுத்துக் கொள்ள மற்றவர்களும் இந்த பற்பத்தைச் சாப்பிடலாம்.
அலோபதி மருந்துகள் சாப்பிட்டாலும்கூட இந்த பற்பத்தைச் சாப்பிடுவதில் தவறில்லை. ஏனெனில் அம்மை காரணமாக உடலில் ஏற்பட்டுள்ள உள் சூட்டை இந்த பற்பம் குணப்படுத்தும். வைரஸ் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் வேப்ப இலையைப் பரப்பி நோயாளி படுப்பது நல்லது.
அம்மை பரவாமல் தடுக்கும் ஆற்றலும் வேம்புக்கு உண்டு’ என்றார் டாக்டர் ராஜலட்சுமி சிவராமன்.
=============================================
சின்னம்மை நோய் தாக்கிய மாணவர்கள் தனியாக அமர்ந்து தேர்வு எழுதலாம்
சென்னை, மார்ச் 12: சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
“”பிளஸ் டூ தேர்வுக்குத் தயாரான மாணவர்கள் யாராவது திடீரென்று சின்னம்மையால் பாதிக்கப்பட்டு, தேர்வு எழுதும் நிலையில் இருந்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அவர்களுக்காகத் தனி அறை, மேசை, நாற்காலி அளிக்கப்படும். தனியாக அவருக்கென்று ஒரு மேற்பார்வையாளரும் இருப்பார்” என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சின்னம்மையால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் வெள்ளிக்கிழமை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
“”நன்றாகப் படிக்கும் மாணவர் இந்நோய் காரணமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படா விட்டால், அவருக்கு ஓராண்டு வீணாகிவிடும். எனவே, மனிதாபிமான அடிப்படையில் அவர் தேர்வு எழுதலாம். மருத்துவர்கள் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோயுற்றவரை நேரில் கண்டறிந்து தேர்வுக்கூட மேற்பார்வையாளரே தெரிவித்து அதற்கான ஏற்பாட்டைச் செய்யலாம் என்றும், எனினும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க இயலாத நிலையில் உள்ளவர் யாரும் தேர்வு எழுத முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
===================================================
சின்னம்மை: சென்னையில் 410 பேர் பாதிப்பு
சென்னை, மார்ச் 16: சென்னையில் சின்னம்மை நோயினால் 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப் பகுதிகளில் 133 பேர் பாதிக்கப்பட்டு சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இது குறித்து அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
“”சின்னம்மை நோய் 15 வயதுக்குள்பட்டவர்களை அதிகமாகத் தாக்கும் தன்மை உடையதால் குழந்தைகள் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
சின்னம்மை நோய் தாக்கியவர்களுக்கு “ஏசைக்ளோவீர்’ எனப்படும் மருந்துகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் கிடைக்கிறது. மருத்துவர் மேற்பார்வையில் 5 நாள்களுக்கு இம் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளில் 1.36 லட்சம் மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நோய் தாக்கியவர்களுக்கு உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தியினால் அவர்களுக்கு மீண்டும் இந்நோய் வரவே வராது. பள்ளிகளில் சிறுவர்களை தினசரி பரிசோதித்து, தோலில் சிவந்த தடிப்புகளோ, கொப்புளங்களோ காணப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு ஒருவாரம் விடுப்பு அளித்து அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக” அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
=====================================================
யாருக்கு சின்னம்மை வராது?
சென்னை, மார்ச் 26: குழந்தைப் பருவத்திலேயே சின்னம்மையால் பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் சின்னம்மை வராது. ஏனெனில் ஒரு முறை சின்னம்மை வந்து குணமானவுடன், நோய் எதிர்ப்புப் பொருள் உடலில் உருவாகி ஆயுள் முழுவதும் சின்னம்மை வராமல் தடுத்து விடும்.
இதேபோன்று இளம் வயதிலேயே தட்டம்மை ஏற்படும் நிலையில், வளரும் நிலையில் தட்டம்மை மீண்டும் வராது. மேலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையிலேயே தட்டம்மை தடுப்பூசி இடம்பெற்றுள்ளதால், தட்டம்மையால் பாதிக்கப்படுவோர் மிக மிகக் குறைவு.
சின்னம்மை தடுப்பூசி நல்லது: சின்னம்மை வராமல் தடுத்துக் கொள்ள தடுப்பூசி உள்ளது; ஆனால் சின்னம்மை வந்த பிறகு இந்தத் தடுப்பூசி பலன் தராது. சின்னம்மை தடுப்பூசி மருந்தின் விலை ரூ.1,200. ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 12 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஒரு மாத இடைவெளியில் இரண்டு தவணையாக மொத்தம் ரூ.2,400 செலவு செய்து இத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
கர்ப்பிணிகளே உஷார்…: சின்னம்மையால் பாதிக்கப்பட்டவருக்கு தனியே அறை, தட்டு, துண்டு, தலையணை, போர்வை அளிப்பது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு சின்னம்மை பரவாமல் தடுக்க முடியும். மேலும் பாதிக்கப்பட்டவர் காற்றோட்டமான அறையில் முழுமையாக ஓய்வு எடுப்பது அவசியம்.
வீட்டில் யாருக்காவது சின்னம்மை ஏற்படும் நிலையில், கருக் குழந்தைக்கு உறுப்புகள் உருவாகும் முதல் மூன்று மாத கால கர்ப்பிணிகள் உஷாராக இருந்து அம்மை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கர்ப்பிணிகளுக்கு அம்மை ஏற்பட்டால், வைரஸ் காரணமாக கருக் குழந்தைக்குப் பரவி, பிறவி ஊனம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
====================================================================================
15 மாவட்டங்களில் சின்னம்மை நோய்: அரசு தீவிர தடுப்பு நடவடிக்கை
சென்னை, மார்ச் 26: சென்னையிலிருந்து காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், மதுரை, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு சின்னம்மை (“சிக்கன்பாக்ஸ்’) பரவியுள்ளது.
கோடை காரணமாக “வெரிசல்லா úஸôஸ்டர்’ என்ற வைரஸ் மூலம் 10 தினங்களுக்கு முன்பு சின்னம்மை சென்னையில் பரவத் தொடங்கியது. சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மட்டும் இதுவரை 535 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும்…: ஆரம்ப சுகாதார மைய பதிவேடுகளின் அடிப்படையில் வேலூர், மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட மேற்சொன்ன மாவட்டங்களில் தலா 25 பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணக்கிடப்பட்டு வருகிறது.
மாத்திரை இலவசம்: “ஏசைக்ளோவிர்’ என்ற பொதுப் பெயர் கொண்ட மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் தொடர்ந்து 5 நாள்களுக்குச் சாப்பிட்டால் 5 நாள்களில் சின்னம்மை குணமாகும். அனைத்து 1,417 ஆரம்ப சுகாதார மையங்களிலும் இந்த மாத்திரையை இலவசமாக விநியோகிக்க அரசின் பொது சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ரூ.40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
ஒரு நோயாளிக்கு ரூ.1000 செலவு: மருந்துக் கடைகளில் ஒரு “ஏசைக்ளோவீர்’ மாத்திரையின் விலை ரூ.8.56. சின்னம்மை வந்துவிட்டால் 5 நாள்களுக்குத் தொடர்ந்து மூன்று வேளை மாத்திரை சாப்பிட வேண்டும்; இதனால் ரூ.1,000 அளவுக்கு மருத்துவச் செலவு ஆகும். ஆக, ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் ஒரு நோயாளிக்கு ரூ.1,000 மதிப்புள்ள மருந்துகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன.
விழிப்புணர்வு பிரசுரங்கள்: சின்னம்மை நோய் மேலும் பரவாமல் தடுக்க நோயின் அறிகுறிகள், நோயாளியைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியம், இலவச மாத்திரை, கேரட் உள்பட வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவு ஆகியவற்றை விளக்கி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.
மூச்சுத் திணறல், நினைவிழத்தல் ஏற்படும் நோயாளியை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது அவசியம் என்றார் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் பி. பத்மநாபன்.
Posted in Acyclovir, Allopathy, Ammai, Ayurveda, Ayurvedha, Chennai, Chicken pox, Chickenpox, Child, Costs, cure, Doctor, Environment, epidemic, Health, Healthcare, Herbal, Infection, Injection, Kid, Local Body, Madras, Measles, medical, Natural, Outbreak, Prevention, Tablet, Treatment, unaani, Unani, Yunaani, Yunani | 2 Comments »
Posted by Snapjudge மேல் பிப்ரவரி 2, 2007
60 லட்சம் மனநோயாளிகள்!
நெல்லை சு. முத்து
இந்தியாவில் அறுபது லட்சம் பேர் மனநோயாளிகள். சென்னையில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டின் அபாய அறிவிப்பு இது.
உலகில் சராசரி நூற்றுக்கு ஏழு பேர் மனநோயாளிகள். அதாவது மனச்சிதைவு மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நாற்பது கோடி பேர். இந்தியாவிலும் இதே கணக்குதான். அதிலும் பத்தில் ஒரு நபர் மட்டுமே சிகிச்சைக்கு வருகிறாராம். ஆக, அறுபது லட்சம் பேர் இங்கு அங்கீகரிக்கப்பட்ட மன நோயாளிகள்.
அப்படியானால் ஏறத்தாழ ஐந்தரை கோடி இந்தியர்கள் பதிவு செய்யப்படாத மன நோயாளிகள். இதற்கிடையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குச் சிறப்புப் பள்ளிகள் வேறு உருவாகி வருகின்றன. பிறப்பிலேயே பாதிப்பு, மனம் சார்ந்த நோய், உடல் உறுப்புச் செயல் இழப்பு, பேச்சு மற்றும் மொழிக் குறைபாடு, புரிதலின்மை எனப் பல்வேறு குறைகள்.
இந்த மன நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கினால் மட்டும் போதாது. சிகிச்சைக்குப் பின் மறுவாழ்வு, வேலைவாய்ப்பு ஆகியவை முக்கியம். ஆனால் நம் நாட்டில் இதற்கான கட்டமைப்பு வசதிகள் போதாது என்றும் அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
நமக்கு அதற்கு எல்லாம் நேரம் ஏது?
ஏதாயினும் தனிமனித மன வியாதி போலவே, இன்றைக்குச் சமுதாய மன வியாதி ஒன்றும் இருக்கிறது. தீவிர வியாதி. பண்டைக் காலத்தில் வேந்தர் படைகள் நால்வகைப்படும். காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை. இன்றைக்கும் நாம் அறிந்த படைகள் நான்கே. ராணுவப்படை, விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கு எதிராகத் தற்கொலைப் படை என்று ஆகிவிட்டது.
இதில் ஒரு சில சக்திகளைத் தீய வழிகளில் அடைய முயல்வது கருவிவாதத் தீமை. இது சுயநல நோக்கத்துக்காகவே அமையும். இங்கு பொய், திருட்டு, பித்தலாட்டம், போர்க்குணம் போன்ற தீயவழிகளை இவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்பற்றுவர்.
லட்சியவாதத் தீமை என்றால் பிறர்க்குத் துன்பம் தருவதோடு மட்டும் அல்ல. பிறரையும் தம் வழியில் இழுக்கும் உத்தி. இவர்கள் தீவிரவாதிகள் என்பதைவிட அதி பயங்கரவாதிகள்.
இதற்கிடையில் உலகிலேயே அமெரிக்காவில்தான் வன்முறைக் கும்பல்கள் உச்சத்தில் இருக்கின்றனர் என்கிறது பான் அமெரிக்க சுகாதார நிறுவன ஆய்வு. 1996ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 31 ஆயிரம் பயங்கரவாதக் குழுக்களாம். இதற்கு மது, போதைப் பழக்கம், கல்வி அறிவின்மை, வேலைவாய்ப்பு இன்மை, அதிக எதிர்பார்ப்பு, சிறு வயதில் கொடுமைக்கு ஆளாகுதல் போன்ற பல காரணங்களாம்.
நம் நாட்டிலும் இதே அடிப்படைக் காரணங்கள் பொருந்தும். அன்றியும் மதம், சாதி, மொழி, கட்சி என்ற பெயரில் ஆட்டிப் படைக்கத் துடிப்பதும் ஒருவகையில் மனவியாதிதான். ஆதிக்கம் ஒன்றே குறியாய் அலைகிறார்கள்.
தீவிரவாதம் நாட்டுக்கே நச்சு. ரஷியாவில் ஒரு சம்பவம். 2005 டிசம்பர் வாக்கில் செசன்யாவின் ஷெல்கோவ்ஸ்க் பகுதியில் ஒரு பள்ளியில் பலருக்குத் திடீரென்று ஒட்டுமொத்த மூச்சுத்திணறல். மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட நூறுபேர் அவதிக்கு உள்ளானார்கள்.
சாப்பாட்டில் அங்கு பல்லி விழுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. சத்துணவுக்கூடமே கிடையாதே! அப்படியானால் பள்ளிக்குப் பக்கத்தில் துர்நாற்றச் சாக்கடை ஏதும் இருந்ததா? அதில் விஷ வாயுப் பூதம் கிளம்பி இருக்குமா? அதற்கு எல்லாம் பள்ளிக்கூடம் அருகே கூவம் இருந்தால்தானே!
பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை நடந்து முடிந்தது. இறுதியில் ஓர் அதிர்ச்சி உண்மை. அவர்கள் அனைவருக்கும் மனநிலை பாதிப்பாம். காப்தா அக்மேதோவா என்னும் உளவியல் நிபுணப் பெண்மணி ஆராய்ந்து உரைத்தார். பொது நரம்புத் தளர்வுநோய் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். கும்பல் கும்பலாகப் பாதிக்கும்போல.
உள்ளபடியே இது ஒரு வகை நரம்பு நச்சு வியாதி. சமுதாயத்தின் நம்பிக்கைகள், நாட்டு நடப்புகள், பயங்கரவாதங்களைப் பிரதிபலிக்கும் உயிரித் தீவிர வியாதியாம். லண்டன், மன்னர் கல்லூரியில் ராணுவத்தினர் உடல்நல ஆராய்ச்சிக்கான அரசர் மையத்தின் மனநலப் பேராசிரியர் சிம்சன் வெஸ்லி கண்டுபிடிப்பு.
ஒருகாலத்தில் ஆந்த்ராக்ஸ் பீதி, செப்டம்பர் 11 சம்பவம் என மேலை நாடுகளில் கும்பலாகப் பரவிய சமுதாய மனத் தளர்வு நோய் கிடக்கட்டும்.
போர்க் கொடுமைகளால் ஏற்பட்ட மனநிலைப் பாதிப்பே அங்கு அதிகம். வியத்நாம் யுத்தத்தின் குண்டு வெடிப்பு, கொலை வெறிகளை நேரடியாகக் கண்டு மண்டையில் மரை கழன்ற வீரர்கள் பலர். இது ஒருவிதத்தில் விபத்துக்குப் பிந்தைய மன இறுக்கக் கோளாறு போன்றது.
இது குறித்துத் தனியொரு நூலே வெளிவந்துவிட்டது. “மனநிலைக் கோளாறு நோயறிதல், புள்ளிவிவரக் கையேடு’ என்பது தலைப்பு.
இன்னும் சொல்லப்போனால் சமீபத்திய இராக் போர்க்களம் விட்டுத் தாய்நாடு திரும்பிய அமெரிக்க வீரர்கள் நிலைமை பரிதாபம். அவர்களில் நூற்றுக்கு 19 பேர் ஓராண்டுக்கு உள்ளாகவே மனநிலைக் கோளாறுக்கு உள்ளாயினர்.
ஆப்கானிஸ்தான் யுத்தக் களம்விட்டுத் திரும்பியவர்களில் நூற்றுக்கு 11 பேர் கதியும் இதுதானாம். நெஞ்சில் நிழலாடும் அகோர யுத்தக் காட்சிகள், கண்விழித்துக் கிடக்கும் இரவுநேர துன்பங்கள், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் உளைச்சல்கள் இப்படி.
மொத்தத்தில் 3 லட்சம் ராணுவ, கடற்படை வீரர்களைத் தேர்ந்தெடுத்து நடத்திய ஆய்வு முடிவு. இது அமெரிக்க மருத்துவக் கழக சஞ்சிகையின் 2006 மார்ச் 1 இதழில் வெளியானது.
அதன் முக்கியச் செய்தி. ஒரு விமானப்படை அதிகாரியின் அனுபவம். பாக்தாத் நகரில் தெரு விளக்கில் சாய்ந்து நின்று கொண்டு இருந்த இராக்கியச் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை. அந்த வீதியில் ஒரு கார் குண்டு வெடித்தது. சிறுவனின் தொண்டைக் குழி தெரிய வலது கீழ்த்தாடை பிய்ந்து எகிறிப் பறந்தது. அவன் அதிகாரியை நோக்கி உதவி நாடி வந்தவன்போல் “”அமெரிக்கரே, அமெரிக்கரே, அமெரிக்கரே” என்று கதறினான். ஆனால் போர்க் களேபரத்தில் அதிகாரி அதற்குள் அந்த இடத்தை விட்டு அகலும்படி ஆயிற்றாம்.
நாடு திரும்பிய அந்த அமெரிக்க அதிகாரிக்குச் சிறுவனின் சிதைந்த முகம் மனத்தை விட்டு அகலவே இல்லை. விபத்துக்குப் பிந்தைய மன நிலைக் கோளாறு அவரைப் பீடித்தது என்கிறார் ஆலன் பீட்டர்சன் என்கிற உளவியல் நிபுணர்.
வளர்ந்த நாடுகளின் நிலைமை இப்படி. நம் நாட்டில் ரயில்கள், பேருந்துகள், பள்ளிக்கூடங்கள், மனநலக் காப்பகங்கள் எங்கும் கரிக் கட்டைகளாய் கிடக்கும் சடலங்கள், சாலை விபத்தில் கூழான உடல்கள், கார் குண்டுச் சிதிலங்கள், தலை துண்டான பிண்டங்கள் என்று பத்திரிகைகளில் ஒரு முறை படிக்கலாம். ஆனால் நொடிக்கு நூறு தடவை மாறிமாறிப் படம்போட்டுக் காட்டும் சின்னத்திரைகளால் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை கோடியோ?
(கட்டுரையாளர்: விஞ்ஞானி, திட உந்து பொறிகள் திட்டக் குழுவகம், சத்தீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிக்கோட்டா).
Posted in diagnosis, Doctor, emotional disorders, Handicapped, Ill, Medicine, Mental Health, Patient, Prozac, Pshycho Analyst, psychiatrist, psychiatry, Psychology, Schizophrenia, Shrink, Treatment | 1 Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிக்குன்குனியா மூட்டுவலிக்கு மருந்து!
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
தற்போது நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொசு மூலம் சிக்குன்குனியா என்ற நோய் பரவி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நோயில் மூட்டுகளில் ஏற்படும் வலி தாங்க முடியாத அளவில் உள்ளது. ஆயுர்வேதத்தில் இதற்கு மருந்து உண்டா?
இரா.வி.செüந்தர்யா விசாலினி, மொரட்டுப்பாளையம். வீ.நல்லுசாமி, நாமக்கல்.
சிக்குன்குனியாவில் ஏற்பட்டுள்ள காய்ச்சல், உடல் மற்றும் மூட்டு வலி, பசியின்மை, உடல்சோர்வு, ருசியின்மை, மலச்சிக்கல் போன்ற உபாதைகள் காணப்பட்டால் அச்சமயம் சாப்பிட ஏற்ற உணவு கஞ்சியேயாகும். காய்ச்சலின் வேகம் எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு கஞ்சியையும், லேசானதாகத் தயாரிக்க வேண்டும். கஞ்சிக்கேற்ற பொருள்களில் புழுங்கலரிசியும் பார்லியும் நல்லது. புழுங்கலரிசியில் சத்து அதிகம். அதனால் அது உடலுக்கு வலிமை தரக்கூடியது. பார்லி உடலிலுள்ள அடைப்புகளைப் போக்கும். அதனால் வயிற்றில் வாயு, அஜீரணம் போன்ற தொல்லைகள் ஏற்படாது. புழுங்கலரிசியைச் சிறிது சிவப்பு காணும்வரை லேசாக வறுத்து, அதனுடன் பார்லியையும் வறுத்துச் சேர்க்கக் கஞ்சி எளிதில் ஜீரணமாகிவிடும். வறுத்த முழு அரிசி, பார்லி 1 பங்கு, தண்ணீர் 20 பங்கு சேர்த்துக் கொதிக்க வைத்து, கால்பங்கு சுண்டும் வரை காய்ச்சி இறக்கிக் கொள்ளவும். வடிகட்டிய கஞ்சியை இளஞ்சூடாகச் சிறிது இந்துப்பு கலந்து காலை, மதியம், இரவு குடிக்கவும். கஞ்சியைக் குடித்த பிறகு இந்து காந்தம் எனும் கஷாயத்தை 15 மிலி எடுத்து, 60 மிலி சூடான தண்ணீர் சேர்த்துப் பருக காய்ச்சல், உடல்வலி, மூட்டுவலி, வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அஜீரணம், உமட்டல் முதலியவை விரைவில் குறைந்துவிடும். உடலுக்கு நல்ல பலத்தையும் இந்தக் கஷாயம் ஏற்படுத்தித் தரும். நல்ல ருசியும் பசியும் ஏற்பட்டுவிட்டால், அடுத்த இரண்டு நாட்களுக்கு நெல்பொரி 1 பங்கு, 20 பங்கு தண்ணீர் விட்டு கால் பங்கு சுண்டக் காய்ச்சி, அந்தக் கஞ்சியில் கால் பங்கு பால் கலந்து சாப்பிட களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படும். உடம்பில் கடுப்பு வலி, கனம், உடலை முறித்துக் கொள்ளும் வேதனை முதலிய வாயு அதிகமாயுள்ள நிலையில் இரண்டு புளியங்கொட்டையளவு சுக்கை எடுத்து அதை நசுக்கி அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிடலாம். உடல்வலி, வேதனை, கனம் முதலியவை நன்கு குறையும்.
சிலருக்கு காய்ச்சல் விட்ட பிறகும் தொடர்ந்து ஏற்படும் மூட்டுவலி, வீக்கத்திற்கு பிருகத்யாதி கஷாயம் 7.5 மி.லி. + பலாகுடூச்யாதி கஷாயம் 7.5மி.லி. ,சூடான தண்ணீர் 60 மி.லி. கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட ஏற்பட்டுள்ள உபாதைகள் நன்கு குறைந்துவிடும்.
வலி வீக்கம் உள்ள மூட்டுகளில் உத்வர்த்தனம் சூரணம், குலத்தம் சூரணம், ராஸ்னாதி சூரணத்தை 4 : 2 : 1 என்ற விகிதத்தில் கலந்து புளித்த சூடான மோருடன் குழைத்து பற்று இட்டு அது காய்ந்தவுடன் நீக்கி விடும் சிகிச்சை முறையால் மூட்டுகளின் உட்பகுதியிலுள்ள நீர் வற்றி வலி குறையும். ஜடாமாதி சூரணமும் இதுபோன்ற வலி நிவாரணியே. இந்த மருந்துகள் நசரத்பேட்டை
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத மருத்துவமனையில் விற்கப்படுகின்றன.
வீக்கம், வலி வற்றிய பிறகு மூலிகைத் தைலமாகிய பிண்ட தைலம், லஹசராதி தைலம், கொட்டஞ்சுக்காதி தைலம் போன்றவற்றில் ஒன்றை இரும்புக் கரண்டியில் லேசாகச் சூடாக்கித் தடவி அந்த மூட்டிற்கு ஓய்வளிக்கும் வகையில் துணியைச் சற்றி வைத்திருக்க வலியும் வீக்கமும் குறைந்துவிடும். தைலத்தைத் தடவி சுமார் அரை மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறிய பிறகு வேப்பிலை, நொச்சி இலை, புளி இலை, முருங்கை இலை, ஆமணக்கு இலை, எருக்கு இலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட்டுக் காய்ச்சிய தண்ணீரில் துணியைப் பிழிந்து ஒத்தடம் கொடுக்கப் பூரண நிவாரணத்தை விரைவில் பெறலாம்.
Posted in Allopathy, Ayurveda, Ayurvedic, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chickenkunya, chickun gunya, Healthcare, Homeopathy, Medicine, Outbreak, Treatment, Yunani | 3 Comments »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006
யாழ் குடாவில் இருந்து வெளியேறியது மருத்துவ தொண்டு நிறுவனம்
 |
 |
யாழ்ப்பாணம் மருத்துவமனை |
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பையேற்று யாழ் குடாநாட்டில் பருத்தித்துறை அரச வைத்தியசாலையில் மனிதாபிமான பணியாற்றி வந்த மெடிக்கல் சான்ஸ் ஃபிராண்டியர்ஸ் என்ற பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த மனிதாபிமான மருத்துவ தொண்டு நிறுவனம் தனது பணியாளர்களை அங்கிருந்து விலக்கிக்கொண்டதாக அறிவித்துள்ளது.
உள்ளுர் ஊடகங்களில் தமது நிறுவனம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், தனது பணியாளர்களின் விசாக்கள் அரசினால் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் நிறுவனப் பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே இந்த முடிவை தாங்கள் எடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகராகிய பாரிஸ் நகரத்தின் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இருவர் இலங்கைக்கு வருகை தந்து நிலைமைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தியதையடுத்து. தமது பணியாளர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டு அவர்கள் தொடர்பான புலன் விசாரணைகள் நடைபெறுவதாக அரசு அறிவித்திருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில் சண்டைகள் தொடரும் பகுதிகளில் அவசியமாகத் தேவைப்படுகின்ற மனிதாபிமான பணிகளை மேற்கொள்ள தாங்கள் தயாராக இருக்கின்ற போதிலும் பொய்க்குற்றச்சாட்டுக்கள் தம்மீது சுமத்தப்பட்டுள்ளதனால் தமது பணிகளை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Posted in doctors, Doctors without Borders, Eezham, France, French, French humanitarian organization, Help, humanitarian, LTTE, Medecins Sans Frontieres, Medicine, NGO, restrictions, Sri lanka, support, Terrorism, Treatment, Violence, Visa | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
சிக்குன் குனியாவிற்கு ஹோமியோபதி மருத்துவம் பலனளிக்குமா
 |
 |
தமிழக ஹோமியோபதி மருத்துவர்கள் சங்க தலைவர் வெங்கட்ராமன் |
தமிழ்நாட்டளவில் சிக்குன் குன்யா நோயின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. சிக்குன் குன்யா நோயை பரப்பும் கொசுக்களே, டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் வைரசையும் பரப்பும் என்பது மருத்துவ துறையாளர்களின் கருத்து. தமிழ்நாட்டில் சிக்குன் குன்யா வைரசை பரப்பும் கொசுக்கள், ஒரே சமயத்தில் இரண்டாவது ரக வைரசான டெங்கு வைரசை பரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று சுகாதார வல்லுனர்கள் பரவலாக கருதுகிறார்கள்.
எனவே, தமிழ்நாட்டில் சிக்குன் குன்யா நோய் தடுப்பு என்பதே தற்போதைய முக்கிய பொது சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, தற்போதைய தமிழக உள்ளாட்சித்தேர்தலின் முக்கிய பிரச்சார கருப்பொருளாக சிக்குன் குன்யா நோயின் பரந்துபட்ட பாதிப்புகள் உருவெடுத்திக்கிறது.
அதேவேளை, சிக்குன்குன்யா நோய்க்கான சிகிச்சை முறை பற்றி புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. ஒருபக்கம் சிக்குன் குன்யாவுக்கு, அலோபதி சிகிச்சைமுறை போதுமான பலன் தரவில்லை என்று சுகாதார நிர்வாகிகளும், மருத்துவர்களும் கவலைப்பட்டுக்கொண்டிருக்க, மறுபக்கம் சிக்குன் குன்யாநோயை ஹோமியோபதி சிகிச்சைமுறை நல்லவிதமாக குணப்படுத்துவதாக ஹோமியோபதி மருத்துவர்கள் அறிவித்து வருகின்றனர். ஹோமியோபதி மருத்துவர்களின் இந்த அறிவிப்பை அரசு நிர்வாகமும் அலோபதி மருத்துவர்களும் ஏற்க மறுக்கின்றனர்.
ஹோமியோபதி மூலம் சிக்குன் குன்யா நோய் நல்ல முறையில் குணப்படுத்தப்படுவதாக கூறுவதற்கான ஆதாரம் என்ன என்பது பற்றி தமிழக ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தலைவரும் பிரபல ஹோமியோபதி மருத்துவருமான பி.வி.வெங்கட்ராமனின் பேட்டியை நேயர்கள் இன்றைய அனைவருக்கும் அறிவியல் நிகழ்ச்சியில் கேட்கலாம்.
Posted in Allopathy, Chicken Kuniya, Chicken Kunya, Chikun Gunya, Chikun Kunya, Dengue, Healthcare, Homeopathy, Outbreak, Tamil, Treatment | 5 Comments »