Archive for the ‘Toll’ Category
Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007
பாதியில் முடங்கிய 3 மேம்பாலங்கள்: ரூ. 42 கோடி வீணாகும் அவலம்
சென்னை, ஆக. 2: சென்னை தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக ரூ. 42 கோடியில் தொடங்கப்பட்ட 3 மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
- தாம்பரம் சானடோரியம்,
- பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை,
- பல்லாவரம் திரிசூலம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படவில்லை.
தகவல் பெறும் உரிமைச் சட்டம்: இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து இங்குள்ள குரோம்பேட்டை நியூகாலனி குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் வி. சந்தானத்துக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறையினர் அளித்துள்ள பதில் விவரம்:
சானடோரியம் மேம்பாலம்:
ரூ. 14.40 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த மேம்பாலப் பணிகள் திட்டமிட்டபடி 2005 ஜூனில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
70 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது, கிழக்குத் தாம்பரம் பகுதியில் இறங்குதளம் அமைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றால் இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி 2008 டிசம்பருக்குள் இந்த மேம்பாலப் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
பல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலம்:
ரூ. 22 கோடி திட்ட மதிப்பீட்டில் 2004 பிப்ரவரியில் இந்த திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.
திட்ட மதிப்பீட்டில் ரூ. 20 கோடி, நிலம் கையகப்படுத்தவே செலவிடப்பட்ட நிலையில் இதுவரை 53 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 723 சதுர மீட்டர் நிலம் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2006 பிப்ரவரியில் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி 2008 ஜூனில் இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிக்கப்படும் என தெரிகிறது.
பல்லாவரம்- திரிசூலம் மேம்பாலம்:
ரூ. 5.75 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 நவம்பரில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இதுவரை 40.55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புத்துறை நிலத்தை ஒப்படைக்காததால் திட்டமிட்டபடி 2005-ல் இந்த மேம்பாலப் பணிகள் முடிக்கப்படவில்லை.
பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் கிடைத்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் இதன் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதம் ஏன்?:
இந்த மூன்று மேம்பாலங்களும் பாதியில் முடங்கியதற்கு இவற்றுக்கு தேவையான நிலத்தை பெறுவதில் ஏற்பட்ட பிரச்னையே காரணம்.
பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்களுக்கு முக்கியத் தேவை நிலம். ஆனால், இந்த திட்டங்களை உருவாக்கிய அரசு அதிகாரிகள் தேவையான நிலத்தை பெறுவதற்கான வழிமுறைகளை தெளிவாக வகுக்கவில்லை.
தனியார் பயன்பாட்டுக்கான பெரிய திட்டங்களுக்கு சாதாரண மக்களின் நிலங்கள் தேவை என்றால் விரைந்து செயல்பட்டு நிலத்தை கையகப்படுத்தும் அரசு நிர்வாகம், மக்களின் திட்டங்களுக்காக சில தனியாரிடம் இருந்து நிலத்தை பெறுவதில் மட்டும் ஆமை வேகத்தில் உரிய அக்கறை இன்றி செயல்படுவதே இத்தகைய திட்டங்கள் முடங்க முக்கிய காரணம் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Posted in activity, ADMK, Airport, Auto, Bridge, Bus, Cars, Chennai, Commuter, completion, Construction, Dam, Data, Delays, DMK, Engineering, Expenses, flyover, Inflation, Information, infrastructure, L&T, Labor, laborers, Larsen, Larsen and Toubro, larsentoubro, Lights, Madras, Mayor, Overbridge, Pallavaram, Politics, Progress, Projection, Projects, Record, Roads, RTI, Scooter, Signal, Stalin, Stall, Statz, Surface, Tambaram, Thambaram, Thrisoolam, Thrisulam, Time, Toll, Toubro, Track, Transport, Trisoolam, Trisulam | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஜூலை 9, 2007
நெட்டில் சுட்டதடா…: மைல் கணக்கில் நின்ற மலைப் பாம்பு வரிசை!
ராமன் ராஜா
முன்பு ஒருமுறை போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு மும்பை செல்ல வேண்டிய விமானத்தைக் கோட்டை விட இருந்தேன். ரிஷப ராசிக்கு “விரயம்’ என்று ஒற்றை வார்த்தையில் ரத்தினச் சுருக்கமாக தினப்பலன் போட்டிருந்ததை மதிக்காமல் டாக்ஸியில் புறப்பட்டு, அண்ணா சாலையில் திரும்ப வேண்டிய நேரத்தில் போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஒரு முக்கிய பிரமுகர் அந்த வழியாக வருகிறாராம்; அவருக்கு ஓட்டுப் போட்டு முக்கிய பிரமுகராக்கியவர்கள் அனைவரும் காத்திருக்க வேண்டுமாம். அடுத்த நாற்பது நிமிடம், பல்லைக் கடித்துக் கொண்டு எஃப் எம் ரேடியோவில் “தமில்ப்’ பாட்டு கேட்டுக் கொண்டு கழித்தேன். நல்லவேளை, நான் பிரசவத்துக்குப் போய்க் கொண்டிருக்கும் பெண்மணியாக இல்லையே என்று நிம்மதியுடன் அடி வயிற்றைத் தடவிவிட்டுக் கொண்டேன். கடைசியில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தபோது, ப்ளேனும் ஒரு மணி நேரம் தாமதம் என்று தெரிய வந்தது. (பைலட்டும் பக்கத்துக் காரில்தான் வந்தாரோ?)
போக்குவரத்து நெரிசல் என்பது முன்னேறிய நாடுகள் எல்லாமே முன்னேற்றத்துக்குத் தப்பாமல் கொடுக்கும் விலை. இந்தியாவிலும் வங்கிகள் வண்டிக் கடன்களை “ஊரான் வீட்டு நெய்யே’ என்று வாரி வழங்குவதால், இப்போது ஏழை எளியவர்கள் அனைவரும் வாகனம் வாங்குவது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் ஒரு பிரச்னை: தமிழ் நாட்டில் ஓடும் சற்றேறக்குறையத் தொண்ணூறு லட்சம் வாகனங்களில் கால் பாகத்தை, பிடிவாதமாக அவர்கள் சென்னை நகரத்தில்தான் கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். இதைக் கண்ட பன்னாட்டுக் கம்பெனிகள், “சிக்கியதடா ஒரு மார்க்கெட்’ என்று இங்கே வந்து கடை பரத்தி, நம் ஜனத் தொகையை விட வேகமாகக் கார், டூ வீலர் முதலியவற்றை உற்பத்தி செய்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். விளைவு, எனக்கு இருபது நிமிட தூரத்தில் இருந்த அதே அலுவலகம் இப்போது அறுபது நிமிடமாகிவிட்டது. டெல்லி, கல்கத்தா எங்கும் இதே கதைதான். பெங்களூரோ, ஏற்கனவே “பூட்ட கேஸ்’ என்று முடிவு கட்டப்பட்டு விட்ட நகரம். சென்னையில் நகைச்சுவை உணர்வு மிக்க உணவு விடுதிக்காரர் ஒருவர், தன் கடைக்கு ஹோட்டல் டிராபிக் ஜாம் என்று பெயர் வைத்திருக்கிறார்.
இங்கிலாந்தில் உள்ள எம்6 என்ற நெடுஞ்சாலையில் 87-ம் வருடம் ஒரு நெரிசல் ஏற்பட்டது. ஐம்பதாயிரம் வாகனங்களில் இரண்டு லட்சம் பேர் மாட்டிக் கொண்டார்கள். இருபது லட்சம் கெட்ட வார்த்தைகளில் அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்தார்கள். உலகத்திலேயே மிக நீளமாக நின்ற டிராபிக் ஜாம் எது என்று கின்னஸ் புத்தகத்தைப் புரட்டினால், மிரட்டுகிறது: 1980-ம் வருடம், காதலர் தினத்துக்கு இரண்டு நாள் கழித்து ஃப்ரான்ஸில் நடந்தது அது. விடுமுறைக்கு ஜாலியாக எல்லாரும் பனிச் சறுக்கு விளையாடிவிட்டு பாரீஸ் திரும்பிக் கொண்டிருந்தார்கள். இடையில் எங்கோ ஒரு லாரி மக்கர் செய்ய, மழை வேறு சேர்ந்துகொள்ள, திடீரென்று ட்ராபிக் ஜாம். லியான் நகரில் ஆரம்பித்து பாரீஸ் வரை, சுமார் 176 கிலோ மீட்டருக்கு அடைத்துக் கொண்டு நின்று விட்டது. ஒரு வழியாக விடுபட்டு வீடு போய்ச் சேர்ந்ததும், பல பேர் கடுப்பில் தத்தம் கார்களைக் கொளுத்தியிருப்பார்கள்!
டிராபிக் ஜாம் என்பது ரோட்டில்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை; எங்கெல்லாம் அவசரக்காரர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தவறாமல் இது நடக்கும். வெனிஸ் நகரின் கால்வாய்ப் போக்குவரத்தில் அவ்வப்போது படகுகள் ஜாம் ஆகி நிற்பது உண்டு. பாங்காக் நகரின் மிதக்கும் மார்க்கெட்களில், படகுகள் சிக்கித் திணறுகின்றன என்று கால்வாய்களையெல்லாம் தூர்த்து சாலைகளாக்கினார்கள். இப்போது அவற்றில் கார்கள் நெரிசலாடுகின்றன!
போக்குவரத்து நெரிசல்கள் ஏன், எப்படி ஏற்படுகின்றன என்பதை கம்ப்யூட்டர் உதவியுடன் விஞ்ஞானிகள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். ஃப்ளூயிட் டைனமிக்ஸ் என்று குழாயின் வழியே தண்ணீர் ஓடுவதுடன் ஒப்பிட்டு, போக்குவரத்தைக் கணித சூத்திரங்களில் அடக்கமுடியும். இப்போது டிராஃபிக் எஞ்சினியரிங் என்பதை பட்டப் படிப்பாகவே எடுத்துப் படிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கே உரிய சாலைத் தொல்லைகளான சாக்கடைப் பள்ளங்கள், எருமை மாடுகள், வி.வி.ஐ.பிகள் போன்றவற்றை எந்த கம்ப்யூட்டராலும் மாடலிங் செய்ய முடியாது. எனவே என்னதான் புள்ளியியல் புரபசராக இருந்தாலும், தெருவில் இறக்கிவிட்டால் அவருக்கும் இதே கதிதான் ஏற்படுகிறது. ஒரு முறை இந்தியப் பிரதமரின் காரைத் தப்பான சாலையில் திருப்பி விட்டு, அவரும் நம்முடைய அவஸ்தைகளைச் சில மணித் துளிகள் அனுபவித்தார். (அங்கே டூட்டியில் இருந்த போலீஸ்காரர்களைப் பாராட்டுவதற்குப் பதிலாகச் சஸ்பென்ட் செய்தார்கள், பாவம்).
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பல வழிகளை ஆலோசித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, ரோட்டில் வண்டி ஓட்டுவதற்குக் காசு வசூலிப்பதுதான். டோல் ரோடுகள், டோல் பாலங்கள் என்று முக்கியமான பிரதேசங்களையெல்லாம் கட்டணப் பகுதிகளாக அறிவிக்க ஆரம்பித்தார்கள். லண்டன் நகரின் பயணம் செய்ய “நெரிசல் கட்டணம்’ ஐந்து பவுண்டு என்று தொடங்கி, வருடா வருடம் விலை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் பல ரோடுகளில் அலுவலகம் போகும் பீக் அவர் நேரங்களில், தெருவில் வீல் வைத்தால் டிக்கெட் வாங்க வேண்டும். சனி, ஞாயிறு இலவசம். அதிலேயே சிக்கனமான சிறிய கார்களுக்கு சற்றுக் குறைந்த கட்டணம், மண்ணெண்ணை கலந்து கரும் புகை கக்கினால் அதிக சார்ஜ் என்று பல பாலிசிகளை ஒன்றாகக் கலந்து குழப்படி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
சாலைக் கட்டணங்களை மறுக்கவும் எதிர்க்கவும் பலர் கோஷ்டிகள் அமைத்து கோஷம் போடுகிறார்கள். “”சாலைகள் போடுவது, அசோகர் காலத்திலிருந்தே அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீது பயங்கரக் கந்து வட்டி வரி என்று உறிஞ்சிக் கொழுத்தது போதாமல், இப்போது தெருவில் போவதற்கும் காசு கேட்கிறீர்களா? இது மனிதனின் அடிப்படையான நடமாடும் உரிமையையே கட்டுப்படுத்துகிறதே” என்பது அவர்களுடைய அனல் மூச்சு. “” வழியில் இருக்கிற ஒவ்வொரு தெருவுக்கும் பாலத்துக்கும் தண்டல் கட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்றால், பணக்காரர்கள் எப்படியும் பயணம் செய்துவிடுவார்கள். அடித்தட்டு மக்கள்தான் நாலு இடத்துக்குப் போய் வேலை செய்து பிழைக்க முடியாமல் தன்னுடைய பேட்டைக்குள் சிறைப்பட்டு விடுவார்கள்” என்பதும் நியாயமாகவே படுகிறது.
கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றால் அடுத்த ஆயுதம், வாகனம் ஓட்டுவதில் முடிந்த அளவு தடைகள் ஏற்படுத்துவது. கூட்டம் கூடும் பகுதிகளில் வேண்டுமென்றே பார்க்கிங் வசதிகளைக் குறைத்து விடுவது. தியேட்டர் அருகே காரை நிறுத்த இடமில்லாமல் லொட்டு லொட்டென்று ஒரு கிலோமீட்டர் நடந்து போய் சினிமா பார்க்க வேண்டுமென்றால், பலர் விடுமுறை நாள்களில் அங்கே போய் அம்முவதைத் தவிர்ப்பார்கள். அமெரிக்காவில் ஒற்றை ஆள் ஒருவர் தன்னந்தனியாகக் காரில் சென்றால் பொதுப் பாதையில் நீண்ட வாகன வரிசையில்தான் போக வேண்டும்; ஒரே காரில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து போனால், ரோடு ஓரத்தில் தனியாக ராஜ பாட்டையில் சல்லென்று சீக்கிரமாகப் போகலாம். கார்பூல் பாதை என்ற இந்த வசதிக்காகவே, ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முறை போட்டுக் கொண்டு தினம் ஒருவருடைய காரில் சேர்ந்து பயணம் செய்வார்கள். நெரிசலைக் குறைப்பதற்கு எல்லாவற்றையும் விடச் சிறந்த ஆயுதம், பஸ், ரயில்தான்!
சாலைச் சுங்கம் வசூலிக்கும் சாவடிகளில் தினமும் லட்சக் கணக்கான வண்டிகளுக்கு எச்சில் தொட்டு டிக்கெட் கிழித்துக் கொடுத்து நாக்கு உலர்ந்து போய்விட்டதால், ஆட்டோ பாஸ், டெலி பாஸ் போன்ற தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சுங்கச் சாவடியில் நிறுத்தவோ, வேகத்தைக் குறைக்கவோ கூடத் தேவையில்லை; ரேடியோ அலைகள் வழியே தொடர்பு கொண்டு காரே போகிற போக்கில் தன் கட்டணத்தைக் கட்டி விடும். சிங்கப்பூரில் நகர மையத்துக்குப் போகிற எல்லா ரோடுகளிலும் வருக வணக்கம் என்று தோரண வாயில்கள், வளைவுகள் உண்டு. எல்லாம் தானியங்கிப் பணம் பிடுங்கி வளைவுகள்! கலீலியோ என்று செயற்கைக் கோள் அமைப்பின் வழியாக ரோட்டில் போகும் அத்தனை வண்டிகளையும் கடவுள் போல் கண்காணித்து நீங்கள் எப்போது, எந்தத் தெருவில் எத்தனை நேரம் பயணம் செய்தீர்கள் என்று கூட துல்லியமாக பில் போட்டு வசூலித்து விடமுடியும். அரசியல், பிசினஸ் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்தத் தொழில் நுட்பத்தில் இருக்கும் துஷ்பிரயோக வசதியைக் கருதி, இதைப் பல நாடுகளில் பரவலாகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். இடது சாரிகள் “உயிரே போனாலும் ஒப்புக் கொள்ள மாட்டேன்’ என்று எதிர்க்கிறார்கள்.
பப்லுவுக்குப் பிடித்த புராதனமான கடி ஜோக் ஒன்று: பசியுடன் இருந்த ஒருவன், காலை உணவுக்கு ப்ரெட் வாங்கி வெண்ணை தடவிக் கொண்டு மவுண்ட் ரோடில் போய்க் காத்திருந்தானாம். ஏன்? அங்கே ட்ராபிக் ஜாம் கிடைக்கும், தொட்டுத் தின்னலாம் என்று!
Posted in Accidents, Auto, Carpool, Cars, Chennai, City, Comfort, Commute, Congestion, Diesel, Dinamani, Driver, Environment, Freeway, Gas, Highway, infrastructure, Insurance, Kathir, LA, Lights, Limo, Limousine, London, Luxury, Manufacturing, Metro, NYC, Paris, Parking, Parkway, Patterns, Petrol, Pollution, Pooling, Raman Raja, Roads, Rotary, Rural, Signals, Singapore, Sprawl, Street, Suburban, Tax, Toll, Traffic, Transport, Travel, UK, Urban, Warming | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 9, 2006
2 ஆண்டில் சுங்கச்சாவடிகள் நவீனமயம்: வாகனங்கள் நிற்காமல் செல்லலாம்- டி.ஆர். பாலு தகவல்
புதுதில்லி, நவ. 9: அடுத்த இரண்டு ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சுங்கச் சாவடிகள் நவீனமயமாக்கப்பட உள்ளன. இதன் மூலம் வாகனங்கள் நிற்காமல் செல்லக்கூடிய சூழல் ஏற்படும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு அறிவித்தார்.
பொருளாதார பத்திரிகை ஆசிரியர் மாநாட்டில் புதன்கிழமை பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. அதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்களிடமிருந்து பரவலாக புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தங்க நாற்கர சாலை மற்றும் வடக்கு -தெற்கு மற்றும் கிழக்கு -மேற்கு இணைப்புத் திட்டத்தில் அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் நிறுவப்பட உள்ளன.
அதாவது, வாகனங்களில் சிறிய மின்பொறி பொருத்தப்படும். அதற்குத் தொடர்புடைய முக்கிய மின்பொறி, சோதனைச் சாவடியில் அமைக்கப்படும். வாகனம் சோதனைச் சாவடி அருகே வரும்போது, அதிலுள்ள மின்பொறியின் சமிக்ஞைக்கும் சோதனைச் சாவடி மின்பொறிக்கும் தொடர்பு ஏற்படும். அப்போது, அந்த வாகனத்துக்கான சுங்கச் சாவடிக் கட்டணம் தானாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளும்.
அதாவது, சுங்கச் சாவடிக் கட்டணத்தை முன்னதாகவே செலுத்தியதற்கான தகவல், வாகனத்தில் உள்ள மின்பொறியில் பதிவு செய்யப்பட்டுவிடும். எப்போதெல்லாம் வாகனம் சுங்கச் சாவடியைக் கடக்கிறதோ, அப்போது தேவையான கட்டணம் குறைந்துவிடும். அதற்காக, வாகனம் அந்த இடத்தில் நிற்க வேண்டிய தேவை இருக்காது. தடையற்ற பயணம் உறுதி செய்யப்படும்.
இதேபோன்று எல்லா சோதனைச் சாவடிகளையும் நவீனப்படுத்தும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது.
ஏற்கெனவே, விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்கச் சாவடிக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உள்ளூர் மக்களுக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கத்திப்பாரா சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்படும் மேம்பாலம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று திறந்து வைக்கப்பட உள்ளது. திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருகின்றன என்றார் டி.ஆர். பாலு.
Posted in Chennai, Congestion, Economic Editors Conference, EZ-Pass, Flyovers, Golden Quadrilateral, Highway construction, Madras, Minister, National Highway Development Project, Road Transport and Highways, Shipping and Surface Transport, Toll, TR Baalu, TR Balu, Traffic | Leave a Comment »
Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006
சிக்குன்குனயா தொற்று நோய் என தமிழக அரசு அறிவிப்பு
 |
 |
சிக்கன்குனியா நோயைப் பரப்பும் கொசு |
இதற்கிடையே, கடந்த சிலமாதங்களாக தமிழகத்தில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்திய சிக்குன்குனியா நோயை, அரசுக்கு அறிவிக்கப்படவேண்டிய தொற்றுநோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலரா, மலேரியா, அம்மை, டைபாய்ட் காய்ச்சல் உள்ளிட்ட 21 நோய்கள் ஏற்கெனவே அரசுக்கு அறிவிக்கப்படவேண்டிய தொற்றுநோய்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது சிக்குன் குன்யாவும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் அரங்கில் சிக்குன் குன்யா நோய் பரவல் என்பது தமிழகத்தை ஆளும் திமுகவுக்கும் பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கும் இடையிலான அரசியல் விவகாரமாக உருவெடுத்ததால், தமிழகத்தில் சிக்குன் குன்யாவின் நிஜமான பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து முறையான தகவல்கள் இல்லை என்று சுகாதாரத்துறை வல்லுனர்கள் பலர் கவலை தெரிவித்திருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் எத்தனைபேருக்கு சிக்கன் குன்யா காய்ச்சல் தாக்கியது என்பது குறித்து இருவேறு மதிப்பீடுகள் நிலவி வருகின்றன.
அரசு தரப்பில் சுமார் அறுபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்தரப்பில் லட்சக்கணக்கானவர்கள் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்த சிக்குன் குன்யா நோயாளிகளின் கணக்கை மட்டுமே அரசு தருவதாகவும், அவர்களைப்போல பலமடங்கு நோயாளிகள் தனியார் மருத்துவ மனைகளிலும் தனியார் மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற்ற விவரத்தை அரசு கணக்கில் கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
Posted in Affected, Chicken gunya, Chicken Kuniya, Chicken Kunya, Chickenkunya, chickun gunya, Chikan Kunya, Chiken Gunya, chiken kunya, Chikun Gunya, Chikun kanya, Chikun Kunya, Chikungunya, Chikunkunya, dead, Disease, Govt, Healthcare, Infectious, Outbreak, Tamil Nadu, TN, Toll | 1 Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 16, 2006
6 கிராமங்களில் விஷவாயு வெளியேறியது எப்படி? விசாரணை நடத்த ம.பி. அரசு உத்தரவு
போபால், அக். 16-
மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டம் உம்ராகஞ்ச் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, திடீர் என்று விஷவாயு பரவியது. இந்தவிஷவாயு எங்கிருந்து வெளியேறியது என்பது மர்மமாக இருக்கிறது.
இந்த விஷவாயு 6 கிராமங்களுக்கு பரவியதால் 1500 பேர் மூச்சுதிணறல், வாந்தி , மயக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.
விஷவாயு எங்கிருந்து பரவியது?என்பது பற்றி மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
Posted in 1984, battery, bhopal, Death, eveready, Gas, Ill, Industry, leak, Madhya Pradesh, MP, suffering, Toll, union carbide | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 6, 2006
சிக்குன்-குனியாவால் யாரும் சாகவில்லையா? அன்புமணிக்கு கேரள முதல்வர் கண்டனம்
திருவனந்தபுரம், அக். 6: சிக்குன்-குனியா காய்ச்சல் வந்து இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்று அறிக்கை விடுத்ததற்காக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார் கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன்.
மாநிலத்தின் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், கேரள காங்கிரஸ் (எம்) தலைவருமான கே.எம். மணி எழுப்பிய ஒழுங்குப் பிரச்சினைக்குப் பதில் அளித்து கேரள சட்டப் பேரவையில் வியாழக்கிழமை பதில் அளித்தபோது இக் கண்டனத்தை அவர் வெளியிட்டார்.
“கேரள அரசிடமிருந்து எந்தத் தகவலையும் கேட்டுப் பெறாமலே அமைச்சர் தில்லியில் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்; எதிர்காலத்தில் இப்படிச் செய்யக்கூடாது என்று பிரதமர்தான் அவருக்கு அறிவுறுத்த வேண்டும். கேரளத்தில் உள்ள நிலைமையை நேரில் அறிய மத்திய அரசு அனுப்பிய நிபுணர்கள் குழு புதன்கிழமைதான் திருவனந்தபுரத்துக்கு வந்துள்ளது. இப்படி இருக்கும்போது, சிக்குன் குனியாவால் யாருமே, எங்குமே சாகவில்லை என்று அமைச்சர் அன்புமணி எப்படி அறிக்கை வெளியிட்டார் என்று தெரியவில்லை’ என்றார் முதல்வர் அச்சுதானந்தன்.
முன்னதாகப் பேசிய கே.எம். மணி, “”அன்புமணியின் அறிக்கை குழப்பத்தையே தருகிறது; கேரளத்தில் என்ன நிலைமை என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அவர் அறிக்கை வெளியிட்டாரா என்று தெரியவில்லை” என்றார்.
அமைச்சரவை முடிவு: கேரள அமைச்சரவை புதன்கிழமை கூடி, சிக்குன்-குனியா, டெங்கு, எலிக் காய்ச்சல் ஆகியவை கேரளத்தின் 10 மாவட்டங்களில் பரவியிருப்பது குறித்து கவலையுடன் பரிசீலித்தது. (மொத்தமே 14 மாவட்டங்கள்தான்).
மாநிலம் முழுவதும் தீவிர சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இதற்கு முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாயை ஒதுக்குவது என்றும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள டாக்டர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என்று 400 பதவி இடங்களுக்கு உடனே ஆள்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
கேரளத்திலேயே, கிருமிகளைக் கண்டுபிடிக்கும் தனி ஆய்வகத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
75 பேர் சாவு: இதுவரை கேரளத்தில் மட்டும் 75 பேர் சிக்குன்-குனியா காய்ச்சல் வந்த பிறகு இறந்திருக்கிறார்கள். அவர்களில் 68 பேர் ஆலப்புழை மாவட்டத்தில் இறந்திருக்கிறார்கள். இதுவரை ஒரு லட்சம் பேருக்கு இக் காய்ச்சல் வந்திருக்கிறது.
சுற்றுலாத் தொழிலும் பாதிப்படைந்திருக்கிறது. கேரளத்துக்கு வர சுற்றுலாப் பயணிகள் அஞ்சுகின்றனர். ஆலப்புழை, குட்டநாடு, குமரகம், கோவளம், கொல்லம் ஆகிய முக்கிய சுற்றுலா மையங்களில் சிக்குன்-குனியா பரவியிருக்கிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்: சிக்குன்-குனியா நோயைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய முதல்வர் அச்சுதானந்தன், திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புதன்கிழமை இரவு கூட்டியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர்.
முதலில் மாவட்ட அளவிலும் பிறகு வட்ட அளவிலும் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்ட முடிவெடுத்தனர்.
Posted in Achuthananthan, Anbumani, Chicken Kunya, Chikun Gunya, Chikun Kunya, Chikunkunya, dead, Healthcare, Kerala, Misinformed, Outbreak, Ramadoss, Toll | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 5, 2006
சேர்த்தலையில் சிக்குன் குனியாவுக்கு மேலும் 8 பேர் பலி: ஊரை காலி செய்து மக்கள் ஓட்டம்
கொழிஞ்சாம்பாறை, அக். 5-
தமிழ்நாட்டை உலுக்கி வரும் சிக்குன் குனியா நோய் தற்போது கேரளாவுக்குள் ஊடுருவி விட்டது. இங்கு இந்த நோயின் தாக்கம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
குறிப்பாக சேர்த்தலை பகுதியில் சிக்குன் குனியா நோய்க்கு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 8 பேர் பலியா னார்கள்.
ஊரை காலி செய்யும் மக்கள்
இதன் மூலம் சிக்குன் குனியா நோய் தாக்கி இறந்த வர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
சிக்குன் குனியா நோய் தாக்குதலால் அச்சம் அடைந்த சேர்த்தலை தாலுகா மக்கள் தங்கள் ஊரை காலி செய்து விட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் ஊர்களில் மக்கள் தொகை குறைந்து காணப் படுகிறது.
கோர்ட்டுகளுக்கு விடுமுÛ
சேர்த்தலை தாலுகாவில் 2 கோர்ட்டுகள் உள்ளன. இங்கு பணிபுரியும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு சிக்குன் குனியா நோய் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, கோர்ட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நோய் தாக்குதல் காரணமாக கேரளாவில் மக்கள் பீதி அடைந்துள்ள னர்.
Posted in Chicken gunya, Chicken Kunya, Chikun Kunya, Death, Kerala, Tamil, Tamil Nadu, Toll | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2006
கேரளாவில் சிக்குன் குனியாவுக்கு 59 பேர் சாவு
திருவனந்தபுரம், அக். 2-
கேரள மாநிலத்தில் சிக்குன் குனியா நோயால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக சேர்த்தலை, அம்பலபுழை ஆகிய தாலுகா பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை சிக்குன் குனியாவுக்கு மாநிலம் முழுவதும் 56 பேர் பலியானார்கள்.
நேற்று மேலும் 3 பேர் இறந்துள்ளனர். இதையும் சேர்ந்து இதுவரை 59 பேர் சிக்குன் குனியாவால் இறந்து விட்டதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீமதி கூறியுள்ளார்.
சிக்குன் குனியா நோயை தடுக்க கேரளாவில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் ஏராளமானோர் சிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
எனவே அவர்களுக்கு துரிதமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக விடுமுறையில் சென்ற டாக்டர்கள், ஆஸ்பத் திரி ஊழியர்களை உடனடியாக வேலைக்கு திரும்புமாறு அரசு உத்தரவிட்டு உள்ளது.
Posted in Affected, Chicken Kunya, Chikun Gunya, Chikunkunya, dead, Healthcare, Kerala, Outbreak, Tamil, Toll | Leave a Comment »
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 20, 2006
சிக்குன் குனியா காய்ச்சல்: இறந்தவர்களின் பட்டியலை வெளியிட்டார் ஜெ.
சென்னை, செப். 21: தமிழகத்தில் சிக்குன் குனியா காய்ச்சலுக்கு இதுவரை 232 பேர் இறந்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதற்கு ஆதாரமாக இறந்தவர்களின் முகவரி பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சிக்குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 155 பேருக்கு மேல் இறந்துள்ளனர் என நான் கூறினேன்.
இதற்குப் பதிலளித்த மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, இறந்ததாகக் கூறப்படும் 155 பேர்களின் பெயர்களையும், முகவரிகளையும் வெளியிடத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.
அரசு தகவல் பெற எவ்வளவோ துறைகள், சாதனங்கள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து பெறுவதை விட்டுவிட்டு என்னிடம் தகவல் கேட்கிறார் அமைச்சர்.
பத்திரிகைகளைத் தினமும் படித்துவிடுவேன் எனக் கூறி வரும் முதல்வர் கருணாநிதி, சிக்குன் குனியா குறித்து பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் படிக்கிறாரா இல்லையா?
முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் தமிழகத்தில் சிக்குன் குனியா இல்லை என்றும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனவும் சட்டப்பேரவையில் பதிவு செய்து விட்டார்கள்.
அதை நிலைநாட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்களே தவிர, காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் இல்லை; நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கவில்லை.
மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கேட்டபடி, சிக்குன் குனியா காய்ச்சலால் இறந்தவர்களின் பட்டியலைத் தொகுத்துள்ளேன் என்றார்.
பட்டியல் விவரம்: தமிழகம் முழுவதும் சிக்குன் குனியாவால் இறந்தவர்கள் என்று ஜெயலலிதா வெளியிட்ட பட்டியல் விவரம்:
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி, பழைய வத்தலகுண்டு, சின்னாளப்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 24 பேர் சிக்குன் குனியா காய்ச்சலால் இறந்துள்ளனர்.
தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 29 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 பேரும் இறந்துள்ளனர்.
சேலம் மாநகர்ப் பகுதியில் 21 பேரும், எடப்பாடி தொகுதியில் 4 பேரும் இறந்துள்ளனர்.
மேட்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 10 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 14 பேரும் இறந்துள்ளனர்.
கடலூர், தஞ்சாவூர், சிவகங்கை, நாகை மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
ராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களில் தலா 4 பேரும், புதுக்கோட்டையில் 2 பேரும் பலியாகி உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 பேரும், ராமநாதபுரத்தில் 20 பேரும், வேலூரில் 9 பேரும் இறந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 11 பேரும், கோவை மாவட்டத்தில் 19 பேரும் இறந்துள்ளனர்.
Posted in Anbumani, Chicken Kunya, Chikun Gunya, Chikungunya, dead, Disease, Healthcare, KKSSR Ramachandran, Minister, Ministry, Tamil, Tamil Nadu, TN, Toll | Leave a Comment »