அஜ்மீர் தர்காவில் குண்டுவெடிப்பு: வங்கதேச தீவிரவாத அமைப்பு காரணம்?
அஜ்மீர், அக். 13: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள சூஃபி ஞானி காஜா மொய்னு தீன் சிஷ்டி தர்காவில் வியாழக் கிழமை நடைபெற்ற குண்டுவெ டிப்பு சம்பவத்துக்கு வங்கதேசத் தைச் சேர்ந்த ஹர்கத்- உல்-ஜிகாதி இஸ்லாமி (ஹுஜி) தீவிரவாத அமைப்பின் ஷாஹித் பிலால் என்பவரே காரணம் என்று கூறப்படுகிறது.
இவர் வங்கதேச சுற்றுலாப் பயணியாக இந்தியாவுக்கு வந்து இத்தகைய சதி செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந் தேகிக்கப்படுகிறது.
இருப்பினும் பிலால், பாகிஸ் தானின் கராச்சி நகரைச் சேர்ந்த வர் என்று தெரியவந்துள்ளது.
ஹுஜி அமைப்புக்கு பாகிஸ்தா னின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிர வாத அமைப்பு உதவியிருக்கும் என்பதையும் மறுப்பதற் கில்லை என்று தகவல்கள் கூறு கின்றன.
ஹுஜி, ஜெய்ஷ் அமைப்புகள் இஸ்லாம் மதத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு எதிரானவை என்று கூறப்படுகிறது.
அதேவேளையில், சந்தேகத் துக்குரிய பல்வேறு நபர்களிட மும் ராஜஸ்தான் மாநில போலீ ஸôர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 6 பேரை பிடித்து வைத்து கடுமையாக விசாரித்து வருகின்றனர். எனினும் இது வரை எவரும் கைது செய்யப்ப டவில்லை.
இதற்கிடையே சம்பவ இடத் தில் சிம் கார்டுடன் கூடிய நோக் கியா செல்போன், வெடிக்காத வெடிகுண்டு ஆகியனவும் கண் டெடுக்கப்பட்டுள்ளன.
குண்டுவெடிப்புக்கு இந்த செல்போனையே பயன்படுத்தி யிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது.
ஹைதராபாத் மெக்கா-மசூதி யில் நிகழ்த்திய குண்டுவெடிப்பு பாணியில் அஜ்மீரிலும் குண்டு வெடிப்பை அரங்கேற்றியுள்ள தாக தகவல்கள் கூறின. வியா ழக்கிழமை அஜ்மீர் தர்காவில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 பேர் இறந்தனர். 28 பேர் காய மடைந்தனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சலீம், மும்பையைச் சேர்ந்த முக மது ஷோயப் ஆகியோர் உயிரி ழந்ததாக அடையாளம் கண்ட றியப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 17 பேர் ஒரிசா, குஜராத், மகாராஷ் டிரம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த யாத்ரீ கர்கள் என கண்டறியப்பட்டுள் ளது. சம்பவம் நடந்த பிறகு தர் காவுக்கு வெளியே ஏற்பட்ட அமளியில் 5 பேர் காயமடைந்த னர்.
சம்பவ இடத்தில் தீவிர புலன் விசாரணை நடைபெற்று வருகி றது. தேசிய பாதுகாப்பு படை அமைப்பின் குழுவினரும் வந் துள்ளனர்.
முன்னதாக வியாழக்கிழமை மாலை ரம்ஜான் நோன்பை ஒட்டி 6.30 மணியளவில் இஃப் தார் விருந்துக்காகக் கூடியிருந்த னர். அப்போது தர்கா அருகே உள்ள மரத்தின் அடியில் பள் ளிக் கூடப் பை ஒன்றில் வைக் கப்பட்டிருந்த குண்டு வெடித் தது.
அஜ்மீரைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப் படையினர் தர்கா வுக்குப் பாதுகாப்பு அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளனர்.
குற்றவாளிகள் விரைவில் பிடிபடு வர்- முதல்வர் வசுந்தரா ராஜே சிந் தியா உறுதி: குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியை வெள்ளிக்கிழமை பார்வையிட்டார் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா.
அப்போது, “”குற்றவாளிகள் விரை வில் பிடிபடுவர். எக்காரணத்தைக் கொண்டும் தப்பிக்க இயலாது.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த தவறு காரணமாக இச்சம்பவம் நடந் ததா என்பது குறித்து விசாரணை நடத்தி கண்டறியப்படும்,” என்றும் அவர் உறுதி கூறினார். சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவம னையில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் வசுந்தரா.
—————————————————————————————————————————————
அஜ்மீர் தர்காவில் வெடிக்காத குண்டு கண்டுபிடிப்பு தாக்குதலின் பின்னணியில் ஹர்கத் உல் இஸ்லாமி
அஜ்மீர் : அஜ்மீர் “காஜா மொய்னுதீன் சிஸ்டி’ தர்காவில் நடந்த குண்டுவெடிப்புக்கு ஹர்கத்உல்இஸ்லாமிஜிகாதி அமைப்பு தான் காரணம் என தெரிகிறது. மேலும் தர்காவில் நேற்று ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் புகழ் பெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில் நேற்று முன்தினம் குண்டு வெடித்ததில், இரண்டு பேர் உயிரிழந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர்.இந்த குண்டு வெடிப்புக்கு வங்க தேசத்தில் இருந்து செயல்பட்டு வரும் ஹர்கத்உல்ஜிகாதிஇஸ்லாமி என்ற இயக்கமே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.வெடிகுண்டில் “ட்ரைநைட்ரோடோலீன்’ என்ற வெடிபொருள் கலவையை பயங்கரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர். ஹர்கத் உல் இஸ்லாமி இயக்கத்துடன் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கமும் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
குண்டு வெடிப்பில் ஐதராபாத்தை சேர்ந்த ஷாகித் பிலால் என்ற பயங்கரவாதியின் மீது தான் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.குண்டு வெடிப்பு தொடர்பாக அஜ்மீரை சேர்ந்த ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் மூலம் இவ்வழக்கில் துப்பு துலங்குவதற்கான வாய்ப்பு இல்லை என வட்டாரங்கள் தெரிவித்தன.அஜ்மீர் தர்காவின் முக்கிய நுழைவு வாயில் அருகே நேற்று ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கப்பட்டது. சம்பவ இடத்தை ஆராய்வதற்காக தேசிய பாதுகாப்பு படையினரும் வந்துள்ளனர் என்று மாநில குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ஏ.கே.ஜெயின் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா நேற்று அஜ்மீர் தர்காவில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டார். குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் அவர் கூறுகையில், “தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்தப்படும்.
குர்ஜார்கள் நடத்தி வரும் போராட்டத்தையொட்டி பெரும்பாலான போலீசார் பாதுகாப்பு பணிக்காக பல இடங்களில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் இதில் எந்த பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை’ என்றார்.