Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘TNA’ Category

April 1 – Mannaar, Viduthalai Puligal, Eelam, SriLanka: Elections, Peace (BBC Tamil)

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 2, 2008

புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 ஏப்ரல், 2008 

இலங்கையில் மடு தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் கடும் மோதல்கள்

இலங்கையின் வடக்கில் மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்கர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமான மடு தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இலங்கை இராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் நடந்துவருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

அதேவேளை, மடு மாதா தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்து எறிகணைகளை வீசி வருவதாக விடுதலைப்புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதற்கு முன்னர் 1999இல் அங்கு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில், 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், அதனை மறுத்துள்ள இலங்கை இராணுவத்தினர், மடுமாதா ஆலய வளாகத்துக்குள் விடுதலைப்புலிகள் அத்துமீறி நுழைந்துள்ளதாகவும், அந்தப் பகுதியை சுற்றி கண்ணிவெடிகளை அவர்கள் புதைத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த மோதல்கள் காரணமாக மடுமாதா தேவாலயம் மற்றும் அதனைச் சுற்றிவரவுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே வவுனியா கூமங்குளம் பகுதியில் இரண்டு பொதுமக்கள் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மடு தேவாலயம் – பின்னணித் தகவல்கள்

சுமார் முப்பது வருடமாகத் தொடருகின்ற இலங்கையின் இந்த உள்நாட்டு மோதலில், முதல் தடவையாக, அந்த மடு தேவாலயத்தின் முக்கிய திருச்சொரூபமான கன்னி மரியாளின் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆலயத்தில் இருந்து வியாழனன்று அகற்றப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அமைந்துள்ள இந்த தேவாலயத்துக்கு பொறுப்பான மன்னார் மறைமாவட்ட ஆயரான ராயப்பு ஜோசப் அமைதி வேண்டி வெள்ளிக்கிழமையன்று ஒருநாள் உண்ணாவிரதமும், பிரார்த்தனையும் அறிவித்துள்ளார்.

இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் வழிபடப்படுகின்ற இந்த வழிபாட்டிடத்தை இராணுவத்தினாலோ அல்லது விடுதலைப்புலிகளாலோ பாதுகாக்க முடியாது போயுள்ளது. இந்நிலையில் தேவாலயத்தில் இருந்து திருச்சொரூபத்தை அகற்றுவதற்கான ஆயரின் முடிவானது அங்கு நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு ஓர் அடையாளமாகும்.

டச்சுக்காரர்களால் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தேவாலயம் முதன் முதலில் அமைக்கப்பட்டது. தம்மை அழிவிலிருந்து காப்பாற்றியது இந்த கன்னிமரியாளின் சொரூபம்தான் என்று அவர்கள் நம்பினார்கள்.

மடு தேவாலயத்தின் வரலாறு மற்றும் தற்போது அதற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்த செய்திக் குறிப்பினை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்


புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 ஏப்ரல், 2008

மடு மாதா திருவுருவச்சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது

இலங்கையின் வட பகுதியில் தொடருகின்ற கடுமையான மோதல்கள் காரணமாக, அங்கு பிரபலமான மடு மாதா தேவாலயத்தின் முக்கிய திருவுருவச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழுகின்ற தமிழ் மற்றும் சிங்கள மக்களால் வணங்கப்படுகின்ற இந்த மடு மாதா தேவாலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு அமைக்கப்பட்டதாகும்.

மடுவை நோக்கி வீசப்படுகின்ற கடுமையான எறிகணை வீச்சுக்கள் காரணமாக மடு மாதா தேவாலயத்தை அண்டியிருந்த மக்கள் எல்லாம் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

தேவாலயம்
 

தேவாலய வளாகத்துக்கு அருகில் பல எறிகணைகள் வந்து வீழ்ந்துகொண்டிருப்பதாகவும், இந்த நிலையில் அங்கு இருப்பது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்ற முடிவுக்கு வந்த பங்கிற்கான மதகுருமார், தற்போது ஆலயத்தின் முக்கிய திருவுருவச் சிலையையும் அங்கிருந்து அகற்றி பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்வதாகவும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயரான இராயப்பு ஜோசப்பு தமிழோசைக்குத் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் இருந்து தேடிவரும் மக்களுக்கு அருள்பாலித்து வந்த மாதா சிலையை அங்கிருந்து அகற்ற நேர்ந்தமை தமக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆயர் கூறினார்.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


கிழக்கு மாகாணத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்தது

மட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த ஆளும் கட்சிக் கூட்டமைப்பினர்
மட்டக்களப்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்த ஆளும் கட்சிக் கூட்டமைப்பினர்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைக்கான தேர்தல்களில் 37 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்புகளில், 1342 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இலங்கை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும், 19 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. 4 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வந்தவர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வந்தவர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில், 11 உறுப்பினர்களுக்கான போட்டியில், 14 அரசியல் கட்சிகளும், 16 சுயேச்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. இவற்றில் 2 அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும் ஒரு சுயேச்சைக்குழுவின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில், 14 அரசியல் கட்சிகளும், 26 சுயேச்சைக்குழுக்களும் அங்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. ஆனால், அவற்றில் 11 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயேச்சைக்குழுக்களின் வேட்பு மனுக்கள் மாத்திரமே அங்கு ஏற்கப்பட்டிருந்தன.


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உள்ளிட்ட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா; கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்குகின்றனர்

இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தவிசாளர் பஷீர் சேகுதாவுத் மற்றும் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் புதனன்று தத்தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை போன்ற மூன்று மாவட்டங்களிலும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் தாம் மூவரும் தலைமை வேட்பாளர்களாகப் போட்டியிடப்போவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டு அதன் சார்பில் எதிர்வரும் போட்டியிடப்போவதாகத் அறிவித்துள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, கட்சியின் தலைமைப்பீடம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட எடுத்த முடிவினாலேயே தான் அரசுடன் இணைந்துகொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமென்பதே முஸ்லிம் மக்களின் பேரவா என்றும் இதனை அடைவதற்கு தான் அரசுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவது மிக அவசியம் என்றும் தெரிவித்தார்.

போட்டியிடப்போவதில்லை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இதனிடையே, கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதனன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு புதனன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த விருப்பமில்லாத இலங்கை அரசு,, பெறுமதியற்ற அரசியல் ஒழுங்கை வடக்கு கிழக்கில் திணிக்க முயல்வதாகவும், இதன் ஒருபடியாகவே அவசர அவசரமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பினரைக் கையாளாக அரசு வைத்திருப்பதாகவும், இவர்கள் மூலம் பலாத்காரமாகவும் வற்புறுத்தியும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறமுயல்வதாகவும், கூட்டமைப்பு குற்றம்சாட்டி, இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


மன்னாரின் மடுப் பிரதேசத்தை சமாதான வலயமாக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் கோரிக்கை

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டம் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடு தேவாலயத்துக்கு அருகில் இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் தொடரும் நிலையில், மடு தேவாலயப் பகுதியை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தக் கோரி புதன்கிழமையன்று மன்னார் நகரில் அமைதிப் பேரணியொன்று நடைபெற்றுள்ளது.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், மடுப்பகுதியை சமாதான வலயமாக்க இலங்கை ஜனாதிபதியிடம் கோரும் மகஜர் ஒன்றை மன்னார் அரச அதிபரிடம் கையளித்தனர்.

இதே கோரிக்கையை அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் அனுப்பி வைத்தனர். புனித பாப்பரசருக்கும் அங்குள்ள நிலைமைகள் குறித்த தகவல்களை தாம் அனுப்பி வைத்தாக ஆயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் அனுராதபுரம் மாவட்டம் வில்பத்து சரணாலயப் பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.


Posted in BBC, Eelam, Eezham, Elections, LTTE, Mannaar, Mannar, Peace, Polls, SLMC, Sri lanka, Srilanka, Tigers, TNA, Vote, voters | Leave a Comment »

Rajeem Mohammed Imam: Tamil National Alliance (TNA) legislator to ‘resettle Muslims’

Posted by Snapjudge மேல் ஜனவரி 28, 2008

இலங்கை வடமாவட்டங்களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் – ததேகூ புதிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினராக இருந்த ஈழவேந்தன் அவர்கள் பதவி இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு யாழ்பாண மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான ரஜீம் முகமது இமாம், அந்தக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியிருக்கும் ஒரே முஸ்லிம் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலில் ஒரு நெருக்கடியான நிலை நிலவி வருவதாகக் கூறப்படும் நிலைமையில் அவரது இந்த நியமனம் வந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறான சூழலில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினரான ரஜீம் முகமது இமாம் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டப்போது, வடமாகாணங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பது தான் தன்னுடைய விருப்பம் என்றும் அதற்காக பாடுபடுவேன் என்றும் கூறினார்.

 


உதயன் செய்தித்தாளுக்கு அச்சுறுத்தல்

ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக புகார்
ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக புகார்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் உதயன் செய்தித்தாள் அலுவலகத்திற்கு அண்மையில் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தொலைபேசி மிரட்டலையடுத்து, அந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசுக்கு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.

கடந்த 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி உதயன் அலுவலகத்தினுள் புகுந்த ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தின்போது 2 பேர் கொல்லப்பட்டார்கள். 2 பேர் காயமடைந்தார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து உதயன் நிறுவனத்திற்கு அரசாங்கம் பொலிஸ் பாதுகாப்பு வழங்கியிருந்தது.

எனினும் தமது நிறுவனத்திற்கு இருந்த அச்சுறுத்தல்கள் குறையவில்லை என உதயன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரவணபவன் ஈஸ்வரபாதம் குறிப்பிடுகின்றார். தமது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பொதுவாக இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

 


மன்னார் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி

இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள மடுமாதா ஆலயத்திற்கு அண்மையில் உள்ள தட்சணாமருதமடு என்னுமிடத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பேருந்து வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணி வெடித் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதலை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே நடத்தியிருப்பதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.
இந்தக் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

கிளேமோர் கண்ணிவெடி
கிளேமோர் கண்ணிவெடி

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களும் ஆசிரியர்களுமே இந்த வண்டியில் அதிகமாக இருந்ததாகவும் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகிய பஸ் வண்டி பாதையைவிட்டு விலகி மரமொன்றில் மோதி காட்டுக்குள் சென்று நின்றதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களும் காயமடைந்தவர்களும் பள்ளமடு மற்றும் முழங்காவில் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் புலிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இந்தச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் முதல் தொகுதியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் அதிகமாக மடுக்கோவில் பகுதியில் வசிப்பவர்கள் எனவும், இதனால் மடுக்கோவில் பகுதி ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியிருப்பதாகவும் மடுக்கோவில் பகுதியில் உள்ள ஒருவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Posted in AI, Colombo, Condemn, Eelam, Eezham, Extortion, Freedom, Independence, Islam, Jaffna, journalism, Journalists, LTTE, Mannaar, Mannar, Media, MSM, Muslims, Newspaper, Rajeem Mohammed Imam, Sri lanka, Srilanka, Tamil National Alliance, TNA, Udayan, Udhayan, Uthayan | Leave a Comment »

Sri Lankan Tamil MP Maheswaran assassinated in Colombo temple

Posted by Snapjudge மேல் ஜனவரி 2, 2008

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம், மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்

இந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Posted in Assassination, Assassinations, Batticaloa, Campaign, Civil Monitoring Committee, Colombo, dead, Devananda, Devanandha, Devanantha, Douglas, Douglas Devananda, Eelam, Eezham, Election, Elections, EPDP, Ganesan, guards, Hindu, Jaffna, Joseph, Joseph Pararajasingham, Killed, Kochchikkadai, Kotahena, LTTE, Mageshwaran, Magesvaran, Mageswaran, Maheshwaran, Mahesvaran, Maheswaran, Mahinda, Mahindha, Mahintha, Mano, Mano Ganesan, MP, Murder, Muthukumar, Muthukumar Sivapalan, Nadaraja, Nadarajah, Nadarajah Raviraj, Nataraja, paramilitary, Pararajasingam, Pararajasingham, Pararajasinkam, Parliamentarian, Polls, Ponnambala Vaneswara Hindu Temple, Rajapaksa, Ranil, Raviraj, Security, Sivabalan, Sivapalan, Sri lanka, Srilanka, Tamil, Tamil National Alliance, Temple, terror, Terrorists, Thiagaraja, Thiyagaraja, Thiyagarajah, Thiyagarajah Maheswaran, TNA, UNP, Western Province Peoples Front, Wickremasinga, Wickremasinge, Wickremasingha, WPPF | 2 Comments »

Sri Lanka: EU Condemns Abductions of TNA Staff & parliamentarians’ relatives

Posted by Snapjudge மேல் திசெம்பர் 13, 2007

 

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களின் உற்றார், உறவினர்கள் நேற்று முன்தினமிரவு கடத்தப்பட்டமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று தனது கடுமையான கண்டனத்தினை வெளியிட்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம், இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலங்கைப் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புடைய ஒரு தொகை பொதுமக்கள் கடத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தனது கடுமையான அதிருப்தியினையும், விசனத்தினையும் வெளியிட்டுள்ள அதேவேளை, கடத்தல் நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளின் பாணி என்றும் இதனை ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறது.

இவ்வாறு கடத்தப்பட்ட பொதுமக்கள் உடனடியாக பாதிப்புக்கள் ஏதுமின்றி விடுதலை செய்யும்படி கடத்தல்காரர்களிடம் கோரியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், இந்தக்கடத்தல்காரர்கள் மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய சக்திகள் யாராவது இருந்தால், அவர்கள் இந்த பொதுமக்கள் விடுவிக்கப்படுவதற்கு தம்மாலான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் ஜனநாயகத்தின் பண்புகளையும் விழுமியங்களையும், சட்டம் ஒழுங்கையும் கடைப்பிடிக்க விருப்பும் எந்த சக்திகளுக்கும் முழுமையான ஆதரவினை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


ஜப்பானிய அரசு இலங்கை அரசுக்கான உதவிகளை அதிகரித்துள்ளது.

பேராசிரியர் கீத பொன்கலன்
பேராசிரியர் கீத பொன்கலன்

ஜப்பான் இலங்கைக்கான தனது நிதி உதவியினை அதிகரித்துள்ளது. இதற்கான உடன்பாடு அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் டோக்கியோ விஜயத்தின் போது முடிவு செய்யப்பட்டது.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையேயான உறவுகள் 1977 ஆம் ஆண்டுமுதல் உறுதியாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்பதனை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது சுமார் இரண்டு பில்லியன் யென் அளவுக்கு நிதி உதவிகளை ஜப்பான் அளிக்கும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது. இவை பொருளாதார வளர்ச்சிக்கு என்று கூறப்பட்டு வழங்கப்பட்டாலும், அவை முழுவதும் அதற்காகவே பயன்படுத்தப்படுமா என்பது குறித்து ஜப்பானிய அரசு போதிய கரிசனைகளை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை என்கிறார் தற்போது ஜப்பானில் இருக்கும் இலங்கை அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் கீத பொன்கலன்.

ஜப்பானுடையே தற்போதைய செயல்பாடுகள், இலங்கையைப் பொறுத்தவரையில் சிக்கலுக்குரியதாக மாறியிருக்கின்றது என்றும் கூறுகிறார் பேராசிரியர் பொன்கலன். பொருளாதார அபிவிருத்தியையும் தாண்டி ஒரு சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான நிதியுதவியாகவும் பார்க்கப்படுகிறது எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

தற்போது இலங்கையில் இருதரப்பினரும் யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையிலும், பெரிய அளவிலான மனித உரிமை மீரல்கள் சம்பவங்கள் நடைபெற்று வருகின்ற பிண்ணனியிலும், ஜப்பானின் இந்த உதவி, சமாதானம் தொடர்பில் அதற்கு இருக்கும் பொறுப்பு என்பது பற்றி பெரிய அளவில் சில பிரச்சினைகள் எழக்கூடுய வாய்ப்புகள் இருப்பதாகவும் இலங்கை பகுப்பாய்வாளரான பேராசிரியர் கீத பொன்கலன் கூறுகிறார்.

 


இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்களில் குறைந்தது 13 பேர் பலி

வடக்கில் தொடர்ந்து மோதல்கள்
வடக்கில் தொடர்ந்து மோதல்கள்

இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே புதன்,வியாழன் ஆகிய இரண்டு தினங்களில் இடம் பெற்ற வெவ்வேறு மோதல் சம்பவங்களில் 13 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் பலியாகியுள்ளதாக இலங்கை அரசின் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அனுராதபுரத்துக்கும் வவுனியாவுக்கும் இடையே மதவாச்சியில் அமைந்துள்ள முக்கிய சோதனைச் சாவடி இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இருந்த போதிலும், வவுனியாவுக்கும் கொழும்புக்கும் இடையேயான இரவு நேர ரயில் சேவை வழக்கம் போல நடைபெறும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை யுனிசெஃப் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிலிப்பி நிமாலி அவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியில் துறை பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களை சந்தித்து உரையாடியுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். ஒரு அறிமுக சந்திப்பான இதன் போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள்

 


December 14 updates

இலங்கை அரசின் 2008ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் 47 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது

இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தினால் 2008ஆம் ஆண்டிற்காக முன்வைக்கப்பட்டிருந்த வரவு செலவுத் திட்டத்திற்கு 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று 47 அதிகப்படியான வாக்குகளினால் ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்த வாக்கெடுப்பு அரசிற்கு தோல்வியில் முடிவடையும் என்றும், இதனால் அரசினை பதவியிறக்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதிலும், இறுதி நேரத்தில் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது இதற்கு எதிராக வாக்களிந்திருந்த மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததனால் இந்த முயற்சி கைகூடவில்லை.

கடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதியமைச்சரும் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவதும் இறுதியுமான வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றபோது அதற்கு ஆதரவாக 114 உறுப்பினர்களும், எதிராக 67 உறுப்பினர்களும் வாக்களிதிருந்தனர்.

இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது இதற்கு எதிராக வாக்களிந்திருந்த மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

அத்துடன் இந்த வாக்கெடுப்பிற்கு சற்று முன்னதாக ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சி வரிசைக்குத் தாவிய தேசிய அரும்பொருட்கள் அமைச்சர் அனுர பண்டாரநாயாக்கவும், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு முன்னதாக அரச தரப்பிலிருந்து எதிர்க்கட்சி வரிசையில் வந்து அமர்ந்துகொண்ட விஜயதாச ராஜபக்ஷவும் இன்றைய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்ணணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி), ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.வி.பி.யின் போட்டி நாடாளுமன்ற உறுப்பினரான நந்தன குணதிலக ஆகியோர் வாக்களித்திருக்கின்றனர்.

எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி, மற்றும் இவ்வார முற்பகுதியில் அரசிற்கு இதுவரை தான் வழங்கிவந்த ஆதரவினை விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நான்கு உறுப்பினர்களும் வாக்களித்திருக்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறவினர்கள் கடத்தப்பட்ட மூன்று கிழக்கு மாகாண உறுப்பினர்களும் மற்றும் ஈழவேந்தனும் நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.


இலங்கை அரசு சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கவில்லை: சர்வதேச குழு குற்றச்சாட்டு

வன்னியில் அண்மையில் கிளேமோர் தாக்குதலில் பலியான தமிழ் மாணவர்கள்

இலங்கை அரசாங்கம் பெருஎண்ணிக்கையிலான சிறுபான்மை தமிழர்களையும் முஸ்லிம்களையும் தடுத்துவைத்துள்ளது என்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அது தற்போது மேற்கொண்டுவரும் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் உரிமைகளை அது உதாசீனப்படுத்துகிறது என்றும் லண்டனிலிருந்து செயல்படும் ஒரு மனித உரிமைக் குழு எச்சரித்துள்ளது.

சர்வதேச சிறுபான்மையினர் உரிமைக் குழு என்ற இந்த அமைப்பு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இலங்கையில் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படவும் கடத்தப்படவும் காணாமல்போகவும் வழிவகுத்துள்ளது என்று தெரிவிக்கிறது.

இலங்கையில் கடந்த ஜனவரிக்கும் ஆகஸ்ட்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 660க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் 540 பேர் காணாமல்போயுள்ளார்கள் என்றும் லண்டனிலிருந்து இயங்கும் சர்வதேச சிறுபான்மையினர் உரிமைக் குழு கூறுகிறது.

இதில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்றும் மற்றவர்கள் முஸ்லிம்கள் என்றும் அது தெரிவிக்கிறது. விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக தமிழின பொதுமக்கள் ஏராளமானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அது தெரிவிக்கிறது.

எமது தெற்காசிய செய்தி ஆசிரியர் சஞ்சய் தாஸ்குப்தா வழங்கும் செய்திக்குறிப்பின் தமிழ் வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.


வட இலங்கையில் அடைமழையிலும் விடாத மோதல்கள்

 

இலங்கையின் வட போர்முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அடைமழைக்கு மத்தியிலும் தொடரும் சண்டைகளில் வியாழனன்றும் வெள்ளியன்றும் இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் குறைந்தது 25 விடுதலைப் புலிகளும் இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாகவும், இரண்டு இராணுவ சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மன்னார் நரிக்குளம் இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் இன்று இடம்பெற்ற மோதல்களில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது.

வவுனியா பறையனாலங்குளம், பூவரசங்குளம், மன்னார் பரப்பாங்கண்டல் ஆகிய பகுதிகளில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் 17 விடுதலைப் புலிகளும், யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு மோதலில் 2 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் விபரம் தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை மணலாறு ஜனகபுர முன்னரங்கப் பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 2 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சண்டைகள், இழப்புகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை, விடுதலைப் புலிகளின் பிரதேசங்கள் எங்கும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், புலிகளின் சமாதான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப் பேச்சாளருமாகிய அண்டன் பாலசிங்கம் அவர்கள் மறைந்த ஓராண்டு நினைவையொட்டி நினைவு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பெயர் குறிக்கப்படாத ஓரிடத்தில் மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் உருவப் படத்திற்கு இன்று மலர் மாலை சூடி அஞ்சலி செலுத்தியதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.

Posted in Abductions, Budget, Economy, Eelam, Eezham, EU, Finance, Japan, Kidnap, LTTE, parliament, relatives, Sri lanka, Srilanka, Staff, TNA | Leave a Comment »

Sri Lanka Muslim Congress party quits Rajapaksa regime – Sri Lanka Majority Cut to One; Budget May Be Defeated

Posted by Snapjudge மேல் திசெம்பர் 12, 2007

இலங்கை அரசுக்கான ஆதரவை முஸ்லிம் காங்கிரஸ் விலக்கிக்கொண்டது

இலங்கையின் பிரதான முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணிக்கு இதுவரை தான் வழங்கிவந்த ஆதரவினை விலக்கிக் கொண்டிருப்பதோடு, இன்று நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் வரிசையிலும் சென்று அமர்ந்துகொண்டிருக்கிறது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹசன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பைசர் காசிம் ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று பிற்பகல் சபை அமர்வின்போது, அரசில் இதுவரை தாம் வகித்துவந்த அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் அனைத்தையும் இராஜினாமாச் செய்துவிட்டு திடீரென எதிர்க்கட்சி வரிசையில் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

ஆனாலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏனைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய பிரதி அமைச்சர்கள் பாயிஸ் மற்றும் நிஜாமுதீன் ஆகியோர் கட்சியின் இந்த முடிவில் பங்குகொண்டிருக்கவில்லை என்பதும், கால்நடைகள் பிரதி அமைச்சர் பாயிஸ் கட்சித் தலைமையின் ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் கட்சியிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசினால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுவரும் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டதின் மூன்றாவதும் இறுதியுமான வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை மறுதினமான வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள இந்த வேளையில் இந்தக்கட்சித் தாவல் இடம்பெற்றிருப்பது அரசின் வரவு செலவுத்திட்டத்தினைத் தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு வலுவூட்டியிருப்பதாகவே அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

கடந்த நவம்பர் 7 ஆம் திகதி நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்றபோது 225 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், அதற்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் கிடைத்தன. அன்றையதினம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்கவில்லை. மேலும் இருவர் நாடாளுமன்றத்தில் சமூகமளித்திருந்த போதிலும் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் கடத்தல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர்

இலங்கை வரவு செலவுத்திட்டம் குறித்த இறுதிக்கட்ட வாக்கெடுப்பு நாளை மறுதினம் நடக்கவிருக்கின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரது உறவினர்கள் நேற்று ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் மருமகனான தபால் ஊழியர் 28 வயதுடைய அருணாசலம் சிவபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமரின் செயலாளரான 70 வயதுடைய அன்புமணி ஆர்.நாகலிங்கம் ஆகியோர் நேற்றிரவு அவர்களது வீடுகளிலிருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பீ.அரியநேத்திரனின் சகோதரனான 54 வயதுடைய கிராம சேவை அலுவலகர் எஸ். ஸ்ரீகாந்தசெய அவர்கள் அவரது அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் நேற்று மாலை வீதியில் வைத்தும் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி நோர்வேயிலும் பீ.அரியநேந்திரன் நெதர்லாந்திலும் தற்போது தங்கியிருக்கின்றார்கள்

நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடை பெறவிக்கும் இவ் வேளையில் இடம் பெற்றுள்ள இக் கடத்தல் சம்பவமானது தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தடுக்கும் செயல் என்று குற்றஞ்சாட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இதனை மீறி சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டால் கடத்தப்பட்டவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஆயுததாரிகளினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதே பாணியில் ஏற்கனவே கடந்த 19 ம் திகதி வரவு செலவு திட்டம் மீதான இரண்டாவது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முதல் நாள் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரி.கனகசபையின் மருமகன் கடத்தப்பட்டு வாக்கெடுப்பு முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டு, கனகசபை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததையடுத்து அன்று இரவு அவர் விடுவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


யாழ்ப்பாணத்தில் சர்வமத சமாதான மாநாடு

உள்நாட்டுப் போர் ஒன்றில் சிக்கியுள்ள இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சமாதானம் தொடர்பான இரண்டுநாள் சர்வதேச சர்வமத மாநாடு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது.

கம்போடியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், ஜப்பான், நேபாளம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் சுமார் 11 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.

யாழ்ப்பாண நூலக மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகிய இந்த மாநாட்டை தென்னாபிரிக்காவில் செயற்பட்டு வரும் காந்தி மன்றத்தின் தலைவியும், மகாத்மா காந்தியின் பேத்தியுமாகிய எலாகாந்தி அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

இலங்கையின் சமாதான முயற்சிக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அக்காசி அவர்கள் இந்த மாநாட்டில் விசேடமாகக் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கின்றார்.

யுத்த மோதல்கள் காரணமாக இரத்தம் சிந்தும் நிலை, மக்கள் இடப்பெயர்வு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம், பீதி, அமைதியின்மை ஆகிய பல்வேறு துன்பங்களுக்கும் முடிவு காணப்பட வேண்டும் என்பதை இங்கு உரையாற்றிய இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த சர்வதேசத் தலைவர்களுடன் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த உள்ளுர் மதத் தலைவர்களும் ஒரு முகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.

இன்றைய முதல்நாள் மாநாட்டு நிகழ்வுகள் குறித்து இதில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய செய்திக்குறிப்பை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

 

Posted in Abductions, Ampara, Basheer Cegu Dawood, Batticaloa, Budget, Eelam, Eezham, Faisal Cassim, Finance, Hakeem, Hasan Ali, Islam, Jaffna, Karuna, Karuna Amman, LTTE, majority, Muslim, Opposition, parliament, Rajapakse, Ranil, Ranil Wickremasinghe, Rauff, Rauff Hakeem, Religion, SLMC, Sri lanka, Srilanka, Tamil Makkal Viduthalai Pulikal, Tamil National Alliance, TMVP, TNA, War, Wickremasinghe | Leave a Comment »