Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Time’ Category

Tamil Nadu State Health Minister MRK Panneerselvam’s lethargy

Posted by Snapjudge மேல் திசெம்பர் 6, 2007

நேரம் ஒதுக்குவாரா அமைச்சர்?

ஜி. சிவக்குமார்

சென்னை, டிச. 5: சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மூலம் நியமன உத்தரவை வழங்க அதிகாரிகள் முயற்சி செய்வதால், அரசின் பணி நியமன ஆணைக்காக 16 பல் டாக்டர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2006-ம் ஆண்டில் காலியான உதவி பல் டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு தேர்வு ஆணையம் மூலம் கடந்த ஜூன் 24 – ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற 43 பேர் செப்டம்பர் 6 – ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

இவர்களில் இறுதியாக 16 பேர் தேர்வு செய்யப்பட்டதாகத் தேர்வு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவருக்கும் பணியிடம் தொடர்பாக அக்டோபர் 14 – ம் தேதி சென்னையில் கவுன்சலிங் நடத்தப்பட்டது. கவுன்சலிங் மூலம் டாக்டர்களுக்கான பணியிடமும் உறுதி செய்யப்பட்டது.

திடீர் ஒத்திவைப்பு:

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17 – ம் தேதி பல் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவிருந்தது. ஆனால், திடீரென்று பணி நியமன ஆணை வழங்குவது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்வான டாக்டர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒத்திவைப்புக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என பல் டாக்டர்கள் தெரிவித்தனர்.

அமைச்சருக்காக தாமதம்…:

ஆனால், ஒரு சில பல் டாக்டர்கள் மருத்துவ உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கேட்டபோது, நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் முன்னிலையில் பணி நியமன ஆணை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந் நிலையில், தேர்வில் வெற்றி பெற்றும் தங்களுக்குப் பணி நியமன ஆணை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது தேர்வான டாக்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தாமதம் ஏற்படுவதால் தங்களால் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் பல் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Posted in BDS, Conference, Counseling, Counselling, Delay, Dental, DMK, Doctor, Efficiency, employees, Employment, Exam, Govt, Health, Hygiene, Jobs, Lethargy, medical, MK, MRK Paneerselvam, MRK Panirselvam, MRK Panneerselvam, MRK Pannirselvam, Nellai, Paneerselvam, Panneerselvam, Pannirselvam, Postponed, Signature, Stalin, Time, Work | Leave a Comment »

Chennai Overbridge & Flyover Construction Delays – Status Report

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 2, 2007

பாதியில் முடங்கிய 3 மேம்பாலங்கள்: ரூ. 42 கோடி வீணாகும் அவலம்

சென்னை, ஆக. 2: சென்னை தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக ரூ. 42 கோடியில் தொடங்கப்பட்ட 3 மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

  • தாம்பரம் சானடோரியம்,
  • பல்லாவரம் துரைப்பாக்கம் ரேடியல் சாலை,
  • பல்லாவரம் திரிசூலம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி முடிக்கப்படவில்லை.

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து இங்குள்ள குரோம்பேட்டை நியூகாலனி குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் வி. சந்தானத்துக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறையினர் அளித்துள்ள பதில் விவரம்:

சானடோரியம் மேம்பாலம்:

ரூ. 14.40 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த மேம்பாலப் பணிகள் திட்டமிட்டபடி 2005 ஜூனில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

70 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் நிலம் கையகப்படுத்துவது, கிழக்குத் தாம்பரம் பகுதியில் இறங்குதளம் அமைக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றால் இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி 2008 டிசம்பருக்குள் இந்த மேம்பாலப் பணிகளை முடிக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

பல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலை மேம்பாலம்:

ரூ. 22 கோடி திட்ட மதிப்பீட்டில் 2004 பிப்ரவரியில் இந்த திட்டத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன.

திட்ட மதிப்பீட்டில் ரூ. 20 கோடி, நிலம் கையகப்படுத்தவே செலவிடப்பட்ட நிலையில் இதுவரை 53 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 723 சதுர மீட்டர் நிலம் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2006 பிப்ரவரியில் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த மேம்பாலப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி 2008 ஜூனில் இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிக்கப்படும் என தெரிகிறது.

பல்லாவரம்- திரிசூலம் மேம்பாலம்:

ரூ. 5.75 கோடி திட்ட மதிப்பீட்டில் 2003 நவம்பரில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

இதுவரை 40.55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புத்துறை நிலத்தை ஒப்படைக்காததால் திட்டமிட்டபடி 2005-ல் இந்த மேம்பாலப் பணிகள் முடிக்கப்படவில்லை.

பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் கிடைத்த நாளில் இருந்து 12 மாதங்களுக்குள் இதன் பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமதம் ஏன்?:

இந்த மூன்று மேம்பாலங்களும் பாதியில் முடங்கியதற்கு இவற்றுக்கு தேவையான நிலத்தை பெறுவதில் ஏற்பட்ட பிரச்னையே காரணம்.

பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்களுக்கு முக்கியத் தேவை நிலம். ஆனால், இந்த திட்டங்களை உருவாக்கிய அரசு அதிகாரிகள் தேவையான நிலத்தை பெறுவதற்கான வழிமுறைகளை தெளிவாக வகுக்கவில்லை.

தனியார் பயன்பாட்டுக்கான பெரிய திட்டங்களுக்கு சாதாரண மக்களின் நிலங்கள் தேவை என்றால் விரைந்து செயல்பட்டு நிலத்தை கையகப்படுத்தும் அரசு நிர்வாகம், மக்களின் திட்டங்களுக்காக சில தனியாரிடம் இருந்து நிலத்தை பெறுவதில் மட்டும் ஆமை வேகத்தில் உரிய அக்கறை இன்றி செயல்படுவதே இத்தகைய திட்டங்கள் முடங்க முக்கிய காரணம் என இப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Posted in activity, ADMK, Airport, Auto, Bridge, Bus, Cars, Chennai, Commuter, completion, Construction, Dam, Data, Delays, DMK, Engineering, Expenses, flyover, Inflation, Information, infrastructure, L&T, Labor, laborers, Larsen, Larsen and Toubro, larsentoubro, Lights, Madras, Mayor, Overbridge, Pallavaram, Politics, Progress, Projection, Projects, Record, Roads, RTI, Scooter, Signal, Stalin, Stall, Statz, Surface, Tambaram, Thambaram, Thrisoolam, Thrisulam, Time, Toll, Toubro, Track, Transport, Trisoolam, Trisulam | Leave a Comment »

Gandhi, Nehru, Sachin are Time’s heroes

Posted by Snapjudge மேல் நவம்பர் 13, 2006

ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் காந்தி, நேரு, சச்சின்

புதுதில்லி, நவ. 13: கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியதாக,

  • மகாத்மா காந்தி,
  • ஜவாஹர்லால் நேரு,
  • அன்னை தெரசா,
  • சச்சின் டெண்டுல்கர்,
  • விப்ரோ தலைவர் நாராயணமூர்த்தி

ஆகியோரை ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் “டைம்‘ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
“டைம்’ பத்திரிகையின் ஆண்டு சிறப்பிதழ் தற்போது விற்பனையில் உள்ளது. அதில் இந்த விவரம் தரப்பட்டுள்ளது. வியக்கத்தக்க இம்மனிதர்களின் சாதனைக்கு மரியாதை செலுத்துவோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற அஹிம்சை வழியை கடைபிடித்து அதில் வெற்றி பெற்ற உலகின் மாபெரும் மனிதர் காந்திஜி என அந்த இதழ் காந்தியடிகளுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியரும் இரும்பு ஆலை அதிபருமான லட்சுமி மிட்டல், சர்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ஆகியோரும் பெருமைக்குரிய இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தானின் முகம்மது அலி ஜின்னா, ஆப்கானிஸ்தானின் அகமது ஷா மசூத், சீனாவின் டேங் சியோபிங், திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா, மியான்மர் ஜனநாயக இயக்கத் தலைவர் ஆங் சான் சூகி ஆகியோரும் ஆசிய சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

Posted in Achievers, Asia, Gandhi, Heroes, India, Jinnah, Lists, Nehru, Nusrat, Sachin, Time | Leave a Comment »