Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Thirumavalavan’ Category

Thirumavalavan – Dalits entry into Salem Kanthampatty Temple

Posted by Snapjudge மேல் ஜூலை 18, 2007

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில்
ஆகஸ்டு 6-ந் தேதி ஆலயப் பிரவேச போராட்டம்
திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஜுலை.18-

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி தடைகளை தாண்டி உள்ளே நுழையும் ஆலயப் பிரவேச போராட்டம் செய்ய போவதாக திருமாவளவன் கூறினார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்கள் உள்பட அனைத்து கோவில்களிலும் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கும், வழிபாடு செய்வதற்கும் உரிமை வழங்கி தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுசெயலாளர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான கோவில்கள் இந்து அற நிலையத்துறைக்கு சொந்தமானவை. ஆனால் அந்த கோவில்களில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத நிலை உள்ளது.

சாமிக்கும் ஜாதி

காந்தியடிகள் காலத்தில் அனைத்து சாதியினரும் கோவிலில் நுழைந்து வழிபடுவதற்கு கோவில்களை திறந்து விட சொன்னது வரலாறு. அப்போது, தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எ.எஸ்.வைத்தியநாத அய்யர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்தனர்.

ஆனால் 60, 70 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் கூட, கிராமப்புறங்களில் உள்ள அம்மன், சிவன், அய்யனார், முருகன் கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைய முடியவில்லை. சாதீய வன்கொடுமை இன்னும் தலைவிரித்தாடுகிறது.

சேலம் மாநகரத்தில், கந்தம்பட்டியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை தன் வசம் எடுத்துக் கொண்டது. ஆனால் அந்த கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இந்து மதத்தில் மட்டும்தான் சாமிக்கும் ஜாதி சாயம் பூசுகின்ற கொடுமை நடக்கிறது.

புதிய சட்டம்

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி என்னுடைய தலைமையில் தடைகளை தாண்டி கோவிலுக்குள் நுழைய இருக்கிறோம். ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் இந்த ஆலய பிரவேச போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஆனால் அந்த நிலைமை ஏற்படாதவாறு அதற்கு முன்னதாக, அனைத்து சாதியினரும் அனைத்து கோவில்களிலும் நுழைந்து வழிபடுவதற்காக புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

சிதம்பரம் கோவில்

கோவில்களுக்கு சொந்தமான 12 லட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி, நிலமற்ற விவசாயிக்கு 2 ஏக்கர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வழங்கவேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய முடிவதில்லை. தேவாரம் போன்ற திருமறைகள் பாடுவது தடுக்கப்படுகிறது. அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபடும் கட்டாயத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Posted in Caste, CE, Chidamabram, Chidambaram, Chidhambaram, Community, Dalit, Dalits, Dhroupathy, Drowpathy, FC, Fight, God, Hindu, Hinduism, Kandhambatty, Kandhampatty, Kanthambatty, Kanthampatty, Liberation, Metro, Oppression, Panchaali, Panjali, Poor, Ravikkumar, Ravikumar, Religion, Rural, Salem, SC, Sidhambaram, ST, Temple, Thiruma, Thirumavalavan, Thol, Throupathy, Viduthalai, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Village, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal | Leave a Comment »

Viduthalai Siruthaigal & DMK Convention in Thirunelveli

Posted by Snapjudge மேல் ஜூன் 19, 2007

மண்ணுரிமை மாநாடு சாதித்தது என்ன?

ப. இசக்கி

திருநெல்வேலி, ஜூன் 19: சக “தலித்’ அமைப்புகள் சிலவற்றின் விமர்சனத்துக்கு இடையே, விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு திருநெல்வேலியில் சுமுகமாக நடந்து முடிந்துள்ளது.

சுமார் 20 ஆயிரம் பேர் திரண்ட இந்த மாநாடு மூலம் விடுதலைச் சிறுத்தைகள் சாதித்தது என்ன என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது.

“தமிழனுக்குத் தேவை தன்னுரிமை; தலைநிமிரத் தேவை மண்ணுரிமை’ என்ற கோஷத்துடன் “அனைவருக்கும் வீடு, நிலம்; அரசு சொத்துகளில் குத்தகை உரிமை’ என்பதை வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி நடத்தவிருந்த இந்த மாநாடு, முதல்வர் கருணாநிதியால் வர இயலாததால் தள்ளிவைக்கப்பட்டுத் தற்போது நடத்தப்பட்டது.

நெல்லையில் ஏன் மாநாடு?

வட மாவட்டங்களில் ஓரளவு பலம் பெற்றுள்ள சிறுத்தைகளுக்கு தென் மாவட்டங்களில் பெரிய அளவில் அடித்தளம் இல்லை. எனவே, கட்சிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவது; அதற்கு தற்போது சிதறுண்ட நிலையில் இருக்கும் “தலித்’ மக்களில் பெரும்பான்மையினரான “பறையர்’ இன மக்களை ஒன்று திரட்டுவது; அவர்களைக் கவர வீடு, நிலம், குத்தகைப் பங்கு என கவர்ச்சிகரமான கோரிக்கைகளை முன்வைப்பது; முதல்வர் கருணாநிதியை பங்கேற்கச் செய்வதால் பாமர மக்களிடையே இயக்கம் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது; அதன்மூலம் அரசியல் ஆதாயத்தை ஏற்படுத்திக் கொள்வது என்பதுதான் மாநாட்டின் பிரதான நோக்கங்களாக இருந்திருக்க வேண்டும்.

திருநெல்வேலிக்கு வருவது குறித்து “தில்லி செல்லாமல் இருந்தாலும் இருப்பேனே தவிர, நெல்லைக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன்’ என கருணாநிதியே கூறியதாக திருமாவளவன் மாநாட்டு மேடையில் தெரிவித்தார். அப்படி அக்கறையோடு கருணாநிதி இங்கு வரக் காரணம் என்ன?.

திமுக கூட்டணில் உள்ள பாமக, தற்போது சற்று “குளிர்ச்சி’ அடைந்திருந்தாலும், அது அடுத்த தேர்தலிலும் நீடிக்குமா என்பது அவர்களுக்குதான் தெரியும். கூட்டணியைவிட்டு பாமக விலகினால், அதை ஈடுகட்ட வட மாவட்டங்களில் வாக்கு வங்கி பலம் உள்ள சிறுத்தைகளைத் தங்களுடனே தக்கவைத்துக் கொள்ளவும், தென் மாவட்டங்களில் சிறுத்தைகள் வளர்ந்தால் அதுவும் திமுகவுக்கு கூடுதல் பலமே என்ற நோக்கத்தில்தான் முதல்வர் இந்த மாநாட்டு வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

முதல் வெற்றி:

மாநாட்டில் திரண்ட சுமார் 20 ஆயிரம் பேரில் 90 சதம் பேர் வட மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். எஞ்சிய 10 சதம் பேர் மட்டுமே தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

திருமாவளவன் அளித்த 23 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்பதை தனது பேச்சில் மறைமுகமாகக் குறிப்பிட்டார் கருணாநிதி.

பொருள்காட்சித் திடலில் கூடிய அந்த கட்டுக்கோப்பான கூட்டம் தென் மாவட்ட “தலித்’ மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சக “தலித்’ இயக்க தலைவர்களை கவலை அடையச் செய்துள்ளது. இதை முதல் வெற்றியாகக் கருதலாம்.

இந்த வெற்றி வாக்கு வங்கியை உருவாக்குமா, அது திமுகவுக்கு பலம் சேர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

————————————————————————————–
குமுதம் ரிப்போர்ட்டர்
தேவர் சமுதாய மக்களின் மனதைக் கவர்ந்த கலைஞர்
(நெல்லை அதிரடி)

– அ. துரைசாமி

தன் மீது அதிருப்தியாக இருந்த தேவர் சமுதாய மக்களின் மனங்களை, ‘ஒரு சமயோசித அறிவிப்பால்’ குளிரச் செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர்.

நெல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மண்ணுரிமை மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, மாநாட்டிற்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, சிறுத்தைகளின் சகோதர இயக்கமான மக்கள் தேசம் கட்சியினர் வெளிப்படையாக ‘மண்ணுரிமை மாநாட்டிற்கு’ எதிர்ப்புத் தெரிவித்ததோடு நில்லாமல், ‘அதில் கலைஞர் கலந்துகொள்ளக் கூடாது’ என்று உயர்நீதிமன்றத்திலும் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது வேறு விஷயம்.

மாநாட்டிற்கு முன்தினம் டாக்டர் கிருஷ்ணசாமிகூட ‘மண்ணுரிமை மாநாட்டில் கலைஞர் கலந்துகொள்ளக்கூடாது’ என்று அறிக்கை விடுத்ததோடு, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிராக ‘புதிய தமிழகம் கட்சி’யினரை ஆர்ப்பாட்டம் செய்யவும் வைத்தார்.

இப்படி விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக அதன் சகோதர இயக்கங்களே போர்க்கொடி தூக்கும்போது, மண்ணுரிமை மாநாட்டிற்கு எதிர்த்தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பக் கேட்கவா வேண்டும்?

தென்மாவட்டங்களில் கணிசமாக வாழும் தேவர் சமுதாய மக்கள் இந்த ‘மண்ணுரிமை மாநாட்டை’ கடுமையாக எதிர்த்து வந்தனர். தி.மு.க.வில் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கும் தேவரின மக்களுக்குக் கூட கலைஞர், விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் கலந்து கொள்வது அடியோடு பிடிக்கவில்லை. இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்ட உளவுத்துறை கோட்டைக்குத் தகவல் அனுப்பியுள்ளது. அதன் பிறகே, பல தேவரின பிரமுகர்கள் ‘ஆஃப்’ செய்யப்பட்டனர்.

வட மாவட்டங்களில் இருந்து வரும் சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டால் ‘கலைஞர் மாநாட்டிற்கு வரமாட்டார்’ என்றும் அறிவுறுத்தப்பட்டது. புதிய தமிழகம், மக்கள் தேசம் கட்சியினரின் எதிர்ப்பை அவ்வளவாகப் பொருட்படுத்தாத கலைஞர், தேவரின மக்களின் அதிருப்தியை மட்டும் சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

‘தேவரின மக்களை சமாதானம் செய்ய என்ன வழி?’ என்று யோசனை செய்தவாறே கடந்த பதினேழாம் தேதி காலை ரயில் மூலம் நெல்லை வந்து இறங்கினார். அன்று காலையில் பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், சுமார் 470 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். அதில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

விழா மேடையில் கூட தேவர் சமுதாய மக்களின் அதிருப்தியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த கலைஞருக்கு, அவர்களைச் சமாதானம் செய்ய அடியெடுத்துக் கொடுத்தார் நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன்.

அவர் பேசும்போது ‘‘நெல்லை நகரில் போக்குவரத்து அதிகரித்துவிட்டது. ஆனால், ஒரே ரோடுதான் இருக்கிறது. எனவே, வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அமைந்திருக்கும் இடத்தில் புதிய மேம்பாலம் கட்டவேண்டும். இதற்காக 18 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது!’’ என்று பேசியதைக் கேட்ட கலைஞரின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் விளக்கின் பிரகாசம். உடனடியாய் மேயரை அருகில் அழைத்து புதிய மேம்பாலம் பற்றிக் கூடுதல் தகவல்களைக் கேட்டறிந்துகொண்டார்.

பின்னர் முதல்வர் கலைஞர் பேசத் தொடங்கியதும் எடுத்த எடுப்பிலேயே புதிய மேம்பாலம் பற்றித்தான் பேசினார். ‘‘மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கு பலவற்றை மறுத்த நான், அவரது கோரிக்கையான புதிய மேம்பாலம் கட்ட அனுமதிக்கிறேன். அதற்கு அரசு நிதியிலிருந்து பதினெட்டுக் கோடி ஒதுக்கப்படும்’’ என்றதும் பயங்கர கரகோஷம்.

மேயர் ஏ.எல்.சுப்பிரமணியனுக்கோ இன்ப அதிர்ச்சி. உடனடியாக எழுந்து வந்து கலைஞரின் காலைத் தொட்டுக் கும்பிட்டார். அதோடு விடவில்லை கலைஞர். அவர் அடுத்துச் சொன்னதுதான் தேவரின மக்களைக் கவர்ந்த விஷயம்.

அதாவது ‘‘புதிய மேம்பாலத்திற்கு ‘செல்லபாண்டியன் பாலம்’ என்ற பெயரையும் சூட்டுகிறேன்’’ என்று கலைஞர் அறிவித்ததுதான் தாமதம்… விண்ணதிரக் கரகோஷம் கேட்டது. கலைஞரின் இந்த அறிவிப்பு தென் மாவட்டத் தேவரின மக்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. காரணம், முன்னாள் சபாநாயகரான செல்லபாண்டியன் தேவரினத்தைச் சேர்ந்தவர்.

‘‘செல்லபாண்டியன் பாலம் என்று ஒரு தேவரினத் தலைவரின் பெயரைச் சூட்டியதன் மூலம் தலித் மக்களின் மாநாட்டில் கலந்து கொள்வதனால் ஏற்பட்ட அதிருப்தியை சரிக்கட்டி விட்டார் தலைவர்’’ என்றார் தி.மு.க. அமைச்சர் ஒருவர்.

அன்று மாலை நெல்லைப் பொருட்காட்சித் திடலில் விடுதலைச் சிறுத்தைகளின் மண்ணுரிமை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘தலித் பழங்குடியினருக்கு 5 சென்ட் நிலத்தில் வீடு கட்டித்தர வேண்டும்’ என்ற கோரிக்கை உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் திருமாவளவன், கலைஞர் இருவர் மட்டுமே பேசினர். பல்லாயிரக்கணக்கான சிறுத்தைகள் திரண்டிருந்த போதும், மாநாட்டில் சின்ன சலசலப்புக்கூட இல்லை. இது சிறுத்தைகளின் சகோதர இயக்கங்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.

மாநாட்டில் பேசிய கலைஞர் ‘‘சிறுத்தைகளின் இரண்டு எம்.எல்.ஏ.க்களும் நன்றாகச் செயல்படுகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் திருமாவளவனின் தயாரிப்பு. திருமாவளவன் தன்னை தளபதி என்கிறார். அப்படியல்ல, அவர்தான் மேஜர் ஜெனரல்’’ என்று சொல்லி சிறுத்தைகளைத் தன்பால் கட்டிப் போட்டார்.

‘‘ஒரே நேரத்தில் தேவர் சமுதாய மக்களின் மனதிலும், தலித் சமுதாய மக்களின் இதயத்திலும் இடம்பிடித்துள்ளார் கலைஞர். இது அவரது சாணக்கியத் தனத்தையே காட்டுகிறது’’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

– அ. துரைசாமி

Posted in Alliance, Appeasement, BC, Bridge, Caste, Chellapandiyan, Coalition, Community, Convention, Dalit, deal, Devar, DMK, Equations, Harijans, Leader, MBC, Nellai, OBC, Party, Politics, Puthia Thamilakam, Puthia Thamizhagam, Puthiya Thamilagam, Puthiya Thamilakam, Puthiya Thamizagam, Puthiya Thamizakam, Puthiya Thamizhagam, Puthiya Thamizhakam, SC, Sellapandiyan, ST, Thevar, Thiruma, Thirumavalavan, Thirunelveli, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Viduthalai Siruthaikal, Vituthalai Chiruthaigal, Vituthalai Chiruthaikal, Vituthalai Siruthaigal, Vituthalai Siruthaikal, voter, Votes | 3 Comments »

Kanimozhi Karunanidhi – Rajya Sabha MP, Biosketch

Posted by Snapjudge மேல் மே 27, 2007

இந்திய மேலவை உறுப்பினராக திமுக சார்பில் கனிமொழி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

நடக்கவுள்ள, மேலவைத் தேர்தலுக்கான தனது வேட்பாளர்களை திமுக இன்று அறிவித்துள்ளது. தனது மகள் கனிமொழியை மேலவை உறுப்பினர் பதவிக்காக திமுக தலைவர் மு கருணாநிதி பரிந்துரை செய்துள்ளார். ஆனால் அவருக்கு உடனடியாக மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படாது என்றும் திமுக தலைவர் கூறியுள்ளார்.

திமுக தலைவரின் மகனான மு க ஸ்டாலின் ஏற்கனவே தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இவரது சகோதரர் மு க அழகிரி, கட்சியிலும், ஆட்சியிலும் முறைப்படி பதவியில் இல்லாவிட்டாலும் தென் மாவட்டங்களில் திமுகவை இவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இது தவிர கருணாநிதியின் மருகமகனான, முரசொலி மாறனின் மகனான தயாநிதி மாறன் 2004 ஆம் ஆண்டு அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டு உடனடியாக மத்திய அமைச்சாரகவும் ஆக்கப்பட்டார்.

மூன்று வாரங்களுக்கு முன்பு தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகம் தாக்கப்பட்டதை அடுத்து கருணாநிதியின் குடும்பத்துக்கும்- முரசொலி மாறனின் குடும்பத்துக்கும் இடையேயான விரிசல் அதிகமானதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு கருணாநிதி, தனது மகளான கனிமொழியை தற்போது அரசியலுக்கு கொண்டு வந்துள்ளார்.

திமுக சார்பில் திருச்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிவாவும் இத்தேர்தலில் களமிறக்கப்பட உள்ளார்.

கட்சியில் தான் பல ஆண்டுகளாக இருந்ததாக தமிழோசையிடம் தெரிவித்த கனிமொழி, வாரிசு அரசியல் குறித்து செய்யப்படும் விமர்சனம் தொடர்பான கேள்விகளை தனக்கு பதவி அளிக்க முடிவு செய்தவர்களிடம் தான் கேட்கவேண்டும் என்று கூறினார்.

—————————————————————————————————————————————————–

எம்.பி. ஆகிறார் கனிமொழி
Kalianjar _Karunanidhi_Kanimozhi_stalin_Rajathi_Ammal

தந்தை மு. கருணாநிதி, தாயார் ராசாத்தி அம்மாள், அண்ணன் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருடன், மாநிலங்களவை திமுக வேட்பாளராகத் தேர்வு பெற்ற கனிமொழி.

சென்னை, மே 27: தி.மு.க. சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் கவிஞர் கனிமொழியும், திருச்சி என். சிவாவும் போட்டியிடுகின்றனர்.

தி.மு.க.வுக்கு இரண்டு இடங்களிலும் வெற்றி உறுதி என்பதால் கனிமொழியும், திருச்சி என்.சிவாவும் மாநிலங்களவை எம்.பி. ஆகின்றனர்.

இதற்கான அறிவிப்பை தி.மு.க. தலைவரும், முதல்வருமான கருணாநிதி சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் வெளியிட்டார்.

முன்னதாக, இதுகுறித்து முடிவு எடுக்க, திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியது:

ஜூன் மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் குறித்து உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், திமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கு 2 வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி என். சிவாவும், கவிஞர் கனிமொழியும் போட்டியிடுகின்றனர்.

நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:

குதிரை பேரம் கூடாது:

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டி போட்டு, இங்குள்ள எம்.எல்.ஏ.க்களை அங்கு இழுப்பதும் அங்குள்ள எம்.எல்.ஏ.க்களை இங்கு இழுப்பதுமான குதிரை பேரத்துக்கு இடமளிக்கக் கூடாது.

சுமுகமான முறையில் மொத்தமுள்ள 6 இடங்களில் திமுகவுக்கு இரண்டு, எதிர்க்கட்சிக்கு இரண்டு, தோழமைக் கட்சிகளுக்கு இரண்டு என்கிற முறையில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியும், பரபரப்பும் இல்லாத தேர்தலை நடத்த விரும்புகிறேன் என்று ஒரு வாரத்துக்கு முன்பே நிருபர்களிடம் சொல்லி இருக்கிறேன்.

மத்திய அமைச்சருக்கு வாய்ப்பு இல்லை:

கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமா என உடனே கேட்கிறீர்களே.

தமிழகத்தில் இருந்து 13 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அதற்குமேல், சங்கப்பலகை இடம் தராது.

தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான அதிகாரியாக சட்டப் பேரவை செயலாளர் செல்வராஜை முதலில் நியமித்துவிட்டு, இப்போது அவரை மாற்றி இருக்கிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது, சட்ட ரீதியான காரணமா? அரசியல் ரீதியான காரணமா? எனத் தெரியவில்லை என்று பதில் அளித்தார் கருணாநிதி.

———————————————————————————————————

கனிமொழியின் சொத்து எட்டரை கோடி

சென்னை, ஜூன் 2: மாநிலங்களவைத் தேர்தலுக்கு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் மகள் கனிமொழி மனு தாக்கல் செய்தார். அவருடன் மற்றொரு திமுக வேட்பாளரான திருச்சி என். சிவாவும் மனு தாக்கல் செய்தார்.

மாநிலங்களவைக்கான தேர்தல் இம்மாதம் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 2 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கவிஞர் கனிமொழி முதல்முறையாக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் வெள்ளிக்கிழமை அவர் மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் சென்று தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதியிடம் ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் தலைமைச் செயலகம் வந்து மனு தாக்கல் செய்தார்.

சொத்து ரூ. 8.56 கோடி:

தனது சொத்து மதிப்பு ரூ. 8.56 கோடி என வேட்புமனுவில் கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ள தொகை ரூ. 6.58 கோடி.

மேலும் ரூ. 3.61 லட்சம் நகைகளும்,

ரூ. 18.70 லட்சம் மதிப்பிலான “டொயோட்டா காம்ரி’ காரும் தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர அண்ணா சாலையில் ரூ. 1.61 கோடி மதிப்பிலான வர்த்தக வளாகம் உள்ளதாகவும்,

தனது கணவர் ஜி. அரவிந்தனுக்கு அத்திக்கோட்டையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் ஒரு ஏக்கர் வீட்டுமனை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வங்கிக் கணக்கில் ரூ. 15 ஆயிரம் ரொக்கமும், தனது கணவருக்கு ரூ. 10 ஆயிரமும் இருப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு வேட்பாளரான திருச்சி என். சிவா, தனது வேட்பு மனுவில் தனது குடும்பத்தினருக்கு வங்கி மற்றும் இதர சேமிப்பு வகையில் ரூ. 1.83 லட்சம் இருப்பதாகவும், நகை ரூ. 7.59 லட்சத்துக்கு இருப்பதாவகும், குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 59.8 லட்சம் மதிப்பில் நிலம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி மனு தாக்கல் செய்யும்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் உடனிருந்தனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, தனது வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு ரூ. 61,944 என்று குறிப்பிட்டுள்ளார். தனது கையில் ரூ. 3,000 ரொக்கம் இருப்பதாகவும், தனது குடும்பத்தினருக்கு வங்கியில் ரூ. 58,944 இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜா மனு தாக்கல் செய்யும்போது அமைச்சர்கள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆர். நல்லகண்ணு, சட்டப்பேரவை உறுப்பினர் வை. சிவபுண்ணியம் மற்றும் பாமக தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் உடனிருந்தனர்.

மனு தாக்கல் செய்தபிறகும் செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியது:

மாநிலங்களவை உறுப்பினராவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கட்சி முன்னிறுத்தும் பிரச்சினைகள் குறித்து நிச்சயம் பேசுவேன் என்றார். அதிமுக சார்பில் மைத்ரேயன் மற்றும் இளவரசன் ஆகியோர் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துவிட்டனர். எஞ்சிய இரு இடங்கள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மனு தாக்கல் செய்ய இறுதி நாள் இம்மாதம் 5-ம் தேதியாகும். அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் 6 பேரைத் தவிர வேறு எவரும் மனு தாக்கல் செய்யாதபட்சத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.

——————————————————————————————————–

தாலி கட்டும் பழக்கம் தொடர்வது ஏன்?: கனிமொழி கேள்வி

விழுப்புரம், மே 27: பகுத்தறிவாளர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில்கூட தாலி கட்டும் பழக்கம் இதுவரை தொடர்வது ஏன் என்று தெரிய வில்லை என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி யின் மகளும், கவிஞருமான கனிமொழி கேள்வி எழுப்பினார்.

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய தலித் நாடக விழாவில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக் குமாருக்கும், பொன்னம்மாளுக்கும் சாதி மறுப்பு திருமணத்தை கனிமொழி நடத்தி வைத்தார்.

அப்போது அவர் பேசியது:

இதுபோன்ற திருமணங்களை கலப்புத் திருமணம் என்று கூறுகிறார்கள். இதைப் பற்றி தந்தை பெரியார் கூறுகையில், நான் ஆட்டுக்கும், மாட்டுக்குமா திருமணம் நடத்தி வைக்கிறேன். மனிதனுக்கும், மனிதனுக்கும் நடத்தி வைக்கும் திருமணம், எப்படி கலப்புத் திருமணமாகும் என்று வினவினார்.

சாதியை, மதத்தை எதிர்த்து இந்த திருமணம் நடக்கிறது. பெண்ணுக்கு வழக்கமான திருமணத்தின்போது கயிறு (தாலி) தேவைப்படுகிறது. பல பகுத்தறிவாளர்கள் நடத்தி வைக்கும் திருமணங்களில் கூட இன்னும் தாலியை பயன்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை.

அமெரிக்க கருப்பர் மக்களை போல, நாம் நமது போர் முறையை மாற்றிக் கொண்டு போராட வேண்டும் என்றார் கனிமொழி.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடி, விடுதலைச் சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலர் திருமாவளவன் ஆகியோர் உடனிருந்தனர்.

————————————————————————————————————

Kaalachuvadu Kannan

கனிமொழி, சசிகலா: ஞானியின் ஒப்பீடு.

ஆனந்த விகடன் புத்தாண்டுச் சிறப்பிதழைச் சற்றுத் தாமதமாகவே படிக்க முடிந்தது. சினிமா சார்ந்த செய்திகளையும் தாண்டிப் பல பொருட்கள் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடும் ஆரோக்கியமான மாற்றம் ஆனந்த விகடனில் ஏற்பட்டதிலிருந்து தொடர்ந்து வாசிக்க முயன்று வருகிறேன். பயணங்களிலும் வேலை நெருக்கடியிலும் சில இதழ்கள் விடுபட்டுவிடுவதுண்டு. ஆனந்த விகடனில் தொடர்ந்து படிக்கும் பகுதிகளில் ஒன்று ஞாநியின் ‘ஓ பக்கங்கள்’. வெகுஜனத் தளத்தில் மாற்றுக் கருத்துகள் புழங்கும் குறைவான தளங்களில் ஒன்று ‘ஓ பக்கங்கள்’.

மேற்படி இதழின் ‘ஓ பக்கங்கள்’ தலைப்பு “சசிகலா நிதி அமைச்சர், கனிமொழி கல்வி அமைச்சர்”. இந்த ஒப்பீடு துணுக்குற வைத்தது. உள்ளே செம்மொழிக் குழுவில் கனிமொழி இடம்பெற்றதை ஞாநி கண்டித்திருந்தார். வருங்காலத்தில் ராகுல் காந்தி உள்துறை அமைச்சராகவும் சசிகலா நிதி அமைச்சராகவும் கனிமொழி கல்வி அமைச்சராகவும்கூடும் எனும் சாத்தியப்பாட்டையும் அவர் முன்வைத்திருந்தார்.

இவை நியாயமற்ற வார்த்தைகளாகவும் கலைஞர் மீது ஞாநி சமீபகாலமாக வெளிப்படுத்திவரும் வன்மமும் கோணலும் வெளிப்படும் கண்டனங்களின் உச்சமாகவும் தோன்றின. கலைஞர்மீதான வன்மத்தை அவர் கனிமொழிமீதும் காட்டியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. கனிமொழிக்கு ஞாநியின் மனதில் ‘கலைஞரின் மகள்’ என்பதைத் தாண்டிய எந்தப் பரிமாணமும் இல்லை, அல்லது அது இங்கு வெளிப்படவில்லை என்பது அவரது பெண்ணிய ஆதரவு நிலைப்பாட்டிற்குக் களங்கம் சேர்ப்பதாக உள்ளது. ஏனெனில் கனிமொழியின் பிற தகுதிகளை ஆராய்ந்து ஞாநி தன் கருத்தைப் பதிவுசெய்யவில்லை.

ஞாநியின் எழுத்துகளில் கலைஞர் பற்றிய விமர்சன பூர்வமான மரியாதை ஒரு காலகட்டம் வரை இருந்தது. பா.ஜ.க.வுடன் தி.மு.க. உறவு கொண்ட பின்னர் ஞாநி கலைஞரைக் கருத்தியல் அடிப்படையில் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். விரைவில் இக்கருத்தியல் விமர்சனங்கள் தனிப்பட்ட வன்மத்தை வெளிப்படுத்தத் தொடங்கின.

 

இதற்கு மறுபக்கமும் உண்டு. ஞாநியின் விமர்சனங்களைத் தி.மு.க.வும் அதன் ஊடகங்களும் சகிப்புத்தன்மையற்று எதிர்கொண்டன. எடுத்த எடுப்பிலேயே அவர்மீது சாதியக் குற்றச்சாட்டைச் சுமத்தின. இந்த ஆட்சியில் கண்ணகி சிலை மறுபிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஞாநி வெளிப்படுத்திய விமர்சனத்தைத் தி.மு.க. தலைமை எதிர்கொண்ட விதம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஞாநிமீது பல குற்றச்சாட்டுகளை வைக்கலாம். ஆனால் சாதி உணர்வு கொண்டவர் என நெஞ்சுக்கு நீதி கொண்டு சிந்திப்பவர்கள் சொல்ல முடியாது.

 

இந்தக் குற்றச்சாட்டு முன்னரும் ஞாநிமீது சுமத்தப்பட்டிருக்கிறது. கருத்து வேறுபாடு கொண்டவுடனேயே மர்ம ஸ்தானத்தில் அடிக்கும் கடைநிலைப் பண்பின் வெளிப்பாடாகவும் பல சமயங்களில் குற்றஞ்சாட்டுபவர்களின் சாதிய உணர்வின் சான்றாகவும் இவை அமைந்துவிடுகின்றன.

 

செம்மொழிக் குழுவில் முன்னரும் இப்போதும் பங்கு பெற்ற, பெற்றிருக்கும் உறுப்பினர்களின் பலரின் தகுதி என்ன என்பதை ஆராய்ந்து அவற்றோடு கனிமொழியின் தகுதிகளை ஒப்பிட்டு விவாதிப்பதே சரியானது. செம்மொழிக் குழுவிலும் அரசு அமைக்கும் பிற பண்பாட்டுக் குழுக்களிலும் இடம் பெற்றிருப்பவர்களுக்கு அவர்களின் தகுதிதான் அடிப்படையாக உள்ளதா? அல்லது வேறு காரணங்களா? அந்தக் காரணங்கள் ‘வாரிசு’ என்பதைவிட மேலானவையா? மேலும் ஞாநி ‘வாரிசு’ என்ற கோணத்தில் மூடத்தனமாக எதிர்ப்பவர் அல்ல.

 

ஸ்டாலினுக்குத் தி.மு.க.வில் அளிக்கப்படும் பொறுப்புகளை அவருடைய தகுதி மற்றும் அனுபவம் சார்ந்து ஞாநி ஆதரித்து எழுதியுள்ளார். எனவே கனிமொழி விஷயத்திலும் அதே அணுகுமுறையைக் கையாள வேண்டும். கனிமொழிக்குப் பதிலாக அவரைவிடத் தகுதியான ஒருவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பைச் சமகால அரசியலின் நியமன முறைகள் வெளிப்படுத்தவில்லை. மொழி சார்ந்த நவீனப் பார்வையும் தி.மு.க.வினுள்ளும் அப்பாலும் இருக்கும் அறிவுஜீவிகளுடனான உரையாடலும் கொண்டவர் கனிமொழி. மொழி சார்ந்த பிற்போக்கான பார்வை கொண்ட இன்னொரு தமிழறிஞரைவிட கனிமொழி இடம்பெற்றிருப்பது சாதகமானதாகவே எனக்குப் படுகிறது.

 

ராகுல் காந்தி மற்றும் சசிகலாவுடனான ஒப்பீடு சிறிது அளவுகூட நியாயம் அற்றது. ராகுல் காந்தி அரசியலில் இயங்கிவரும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவரைப் பொறுத்தவரையில் ஒரே கேள்வி ‘எப்போது?’ என்பதுதான்; ‘ஆவாரா?’ என்பது அல்ல. சசிகலா தமிழக அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் குணாம்சங்களுக்குக் கனிமொழி நேர் எதிர். இங்கே எந்த ஒப்பீட்டுக்கும் இடம் இல்லை.

ஞாநியின் இந்த ஒப்பீடுகள் புண்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவையாகவே தோன்றுகின்றன. கனிமொழி வழி அவர் கலைஞரைத் தாக்குவது, மிக நாகரிகமாகச் சொல்வது என்றால், துரதிருஷ்டவசமானது.

 

கண்ணன் காலச்சுவடு

——————————————————————————————————————

-அப்பா-கனிமொழியின் கவிதை

அப்பா குறித்த கனிமொழியின் கவிதை ஒன்றை ‘அகத்திணை’ என்ற அவரின் கவிதைத் தொகுப்பில் இருந்து தருகிறேன் வாசியுங்கள்.

அப்பா

சின்ன வயதில்
செய்த தவறுகளுக்கெல்லாம்
பூச்சாண்டியாய் உன்
பெயரைத்தான் சொன்னாள்
அம்மா

காலையில் கணக்குப் பாடம்
குழம்பியபோது
பத்திரிகையில் புதைந்த
உன் தியானத்தை எப்பிடிக்
கலைப்பது?

விடுமுறை நாள்களில்
சினிமாவுக்குப் போக
அம்மாவைத் தூதுவிடுவதே
ஆபத்தற்றதாய் இருந்தது

வாரம் ஒருமுறை
பின் சீட்டில் வைத்து
தேக்காவுக்கு அழைத்துச் சென்றது

உன் கால் செருப்பு
ஓசையில்
வீடு அமைதியானது

அப்பாவுக்குப் பிடிக்கவில்லை
என்று குட்டை ஸ்கர்ட்டை
அம்மா எதிர்த்தது

இதுதான் நீ என்று
பதிந்துபோய்விட்டது

பெருமாள் கோயிலில்
யாரோ ஒருவன்
கையில் பிடித்துக்கொடுத்தபோது
நடுங்கிய உன் கைகளில்
தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்
இத்தனை காலமாய்?

-கனிமொழி
posted by சோமி at

Posted in Accounts, Assembly, Assets, Auto, Azagiri, Azakiri, Azhagiri, Azhakiri, Badge, Betrothal, Bhindhi, Bhindi, Bindi, Biosketch, Bride, Bridegroom, Cars, Caste, Ceremony, Checking, Community, Crores, daughter, Dayanidhi, Dayanidhi maran, Dayanidhy, Dayanithi, DMK, dynasty, Election, Engagement, EVR, family, Flat, Golusu, Hereditary, Heritage, hierarchy, Hindu, Hinduism, Holy, Home, House, Husband, Indication, Indicator, Jewelry, Jewels, Kanimoli, Kanimozhi, Kanimozi, Karunanidhi, Karunanidhy, Karunanidi, Karunanithi, Karuthu.com, Kolusu, Land, Maran, Marriage, Marry, Metti, Millionaire, Modern, Money, MP, N Siva, Party, Periyar, plot, Politics, Polls, Property, Raajaathi, Raajaathi Ammal, Raajathi Ammaal, Raajathi Ammal, Raasaathi, Raasaathi Ammal, Raasathi, Raasathi Ammaal, Raasathi Ammal, Rajya Sabha, Rajyasabha, Rasaathi, Rasathi, Rasathi Ammal, Rational, Rich, Ring, Ritual, Savings, Shiva, Siva, Stalin, Sticker, Sun, Symbol, Tali, Thaali, Thali, Thiruchy Siva, Thiruma, Thirumavalavan, Thread, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal, Vituthalai Siruthaikal, Wedding, widow, Wife | 2 Comments »

‘Arundhathi caste needs separate reservation quota’ – Thol Thirumavalavan

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 5, 2007

அருந்ததியர் இனத்துக்கு தனி இட ஒதுக்கீடு: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்க விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் . உடன் சட்டப் பேரவை உறுப்பினர் செல்வ பெருந்தகை, மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை செயலர் கோவிந்தராஜ், பொருளாளர் நந்தகோபால், பொதுச் செயலாளர் பாபு நாயுடு, மாநிலத் தலைவர் முத்துவேல்ராஜ் மற்றும் புரவலர் சி.எம்.கே. ரெட்டி.

சென்னை, பிப். 5: அருந்ததியர் இனத்துக்கு தனி இட ஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல் திருமாவளவன் வலியுறுத்தினார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்க விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் கூறியது:

தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுக்கான ஒதுக்கீட்டுடன் சேர்த்து அருந்ததியினர் இனத்துக்கும் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக அருந்ததியினர் இனத்துக்கு தனி ஒதுக்கீடு கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

தாழ்வு மனப்பாண்மையால் ஒரு மொழி அழிந்துவிடக் கூடாது. இதற்காகவே தமிழைப் பாதுகாப்பதில் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் பங்கெடுத்து வருகிறது.

இதனால் மற்ற மொழிகளுக்கு இந்த இயக்கம் எதிரிகள் கிடையாது.

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதே விடுதலை சிறுத்தைகளின் முதல் குறிக்கோளாகும். ஆதிக்கம், அடக்குமுறை மற்றும் சுரண்டல் ஆகிய மூன்றையும் ஒழித்தால்தான் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும். இதனடிப்படையில்தான் தற்போது மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை துவக்கப்பட்டுள்ளது.

மொழியின் வழியில் மக்களை ஒருங்கிணைத்து வளம் பெறச் செய்யும் உயர்ந்த நோக்கத்துக்காக துவக்கப்பட்டுள்ள இந்தப் பேரவைக்கு விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்றார் திருமாவளவன்.

விழாவில்

  • அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தலைவர் சி.எம்.கே. ரெட்டி,
  • ஹைதராபாத் ஹனுமந்தராயா கல்வி அறக்கட்டளை செயலாளர் பி. பாலாஜி,
  • தமிழ்நாடு மகாஜன சங்க மாநிலத் தலைவர் சி. வெங்கடசுப்பு,
  • பி. முத்துராஜ்,
  • எஸ். பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மொழிச் சிறுபான்மையினர் நலத்துக்கென தனி வாரியம் ஒன்றை அரசு அமைத்திடவேண்டும்.

விடுதலைக்கு முழக்கமிட்டு உயிர்நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கவேண்டும். மாமன்னர் திருமலை நாயக்கர் பிறந்த நாளை மீண்டும் அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் விழாவில் நிறைவேற்றப்பட்டன.

மொழி சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவை: தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, சௌராஷ்டிரம் உள்ளிட்ட தமிழல்லாத பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டோருக்கான பாதுகாப்புப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

மொழி சிறுபான்மையோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். இந்தப் பேரவையின் புரவலராக சி.எம்.கே. ரெட்டி, மாநிலத் தலைவர் பி. முத்துவேல்ராஜ், பொதுச் செயலராக பாபு நாயுடு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

—————————————————————————————————————————-
அருந்ததியர் உள் ஒதுக்கீடு: நியாயமும் அவசியமும்

பிரபஞ்சன்


தலித்துகளில் ஒரு பெரும் பிரிவான அருந்ததியர்கள், தலித்துகளுக்கான 18 சதம் இட ஒதுக்கீட்டில், தமக்கு ஆறு சதம் உள் ஒதுக்கீடு வேண்டுகிற இயக்கம் மேலெழுந்திருக்கிறது. அறம், மற்றும் நியாயம் சார்ந்ததுமான கோரிக்கை இது. தமிழக அரசும், உள் இட ஒதுக்கீடு தொடர்பான பரிசீலனையைத் தொடங்கி இருக்கிறது. பரிசீலனையின் முடிவு அருந்ததியர்களுக்கு நியாயம் வழங்குவதாகவே இருக்கும். இருக்க வேண்டும்.

மிகுந்த கொந்தளிப்புகள் நிறைந்த சூழ்நிலையில், அருந்ததியர் பக்கம் உள்ள அனைத்து நியாயங்களையும் எடுத்துச் சொல்லும் ஆவணங்கள் போல, வரலாற்றுச் செறிவோடு இரண்டு அறிவார்ந்த வெளியீடுகள் வந்திருக்கின்றன. ஒன்று, சிறந்த கவிஞரும் எழுத்தாளருமான ம. மதிவண்ணன் எழுதிய உள் ஒதுக்கீடு சில பார்வைகள் எனும் புத்தகம். மற்றது, “சுவடு -ஐனவரி 2008′ மாத இதழில் வெளிவந்திருக்கும், தமிழக மனித உரிமைக் கழகத்தின் தலைவரும் சிறந்த சிந்தனையாளருமான அரங்க.குணசேகரனின் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான, ஆழம் கொண்ட மிகச் சிறந்த நேர்காணல்.

மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியினரால் பெரும் கவனம் பெற்றுள்ள அருந்ததியர் எழுச்சி, இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. 1920-ம் ஆண்டு எல்.சி. குருசாமியால் அருந்ததிய மகாசபை தோற்றுவிக்கப்பட்டது. 1942-ல் அருந்ததியர் ஊழியர் சங்கம், சமத்துவ சமாஜம், 1958-ல் அருந்ததியர் முன்னேற்ற சங்கம் என்று ஒரு தொடர்ச்சி இயக்கமாக அது இருக்கிறது.

1993 முதல் உள் ஒதுக்கீடுப் போராட்டம் தீவிரம் அடைகிறது.

1996-ல் ஆதித் தமிழர் பேரவை உள் ஒதுக்கீடுக் கோரிக்கையை முன் எடுத்து, எழில் இளங்கோவன் எழுதிய “அடுக்குமுறை இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்குச் சமூக நீதி’ என்ற முக்கியமான நூலை வெளியிடுகிறது. 4.8.1995-ல் தினமணியில் வெளியான பெருமாள் ராஜின், “கடையனுக்குக் கடையன் கதி என்ன?’ என்னும் கட்டுரை பொதுமக்கள் கவனத்தைக் கவர்ந்தது.

23.4.2000-ம் நாள் சென்னையில் பெருமாள் ராஜை முதன்மை ஆலோசகராகவும், வழக்கறிஞர் சேகரை அமைப்பாளராகவும் கொண்டு அமைக்கப்பட்ட “அருந்ததியர் தனி இட ஒதுக்கீடு போராட்டக் குழு’ , அக்காலத்து முதல் அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கைகள் இச்சமயத்தில் முக்கியமாகக் கருதத்தக்கவை. சாத்தியமான கோரிக்கையும் அதுவே.

முதல் கோரிக்கை: அருந்ததியர்க்கு ஆறு சதவீத தனி இடஒதுக்கீடு.

இரண்டாம் கோரிக்கை: தமிழ்நாடு ஷெட்யூல்ட் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 78 சாதிப் பெயர்களில் உள்ளவற்றில், குலத் தொழில் மற்றும் செய் தொழில் முறையை அடிப்படையாகக் கொண்டு கீழ்காணும் பிரிவுகளாகப் (குரூப்) பிரிக்கலாம்:

குரூப் (அ)

  • அருந்ததியர்,
  • சக்கிலியர்,
  • மாதாரி,
  • மாதிகா,
  • பகடை,
  • செம்மான் முதலானவர்கள்.

குரூப் (ஆ)

  • பறையர்,
  • சாம்பவார்,
  • மாலா,
  • சம்பன்,
  • தோட்டி,
  • வெட்டியார்,
  • வள்ளுவர் முதலானவர்கள்.

குரூப் (இ)

  • தேவேந்திர குலத்தார்,
  • பள்ளர்,
  • காலாடி,
  • பண்ணாடி.

குரூப் (ஈ)

  • குரவன்,
  • தொம்பர்,
  • சித்தனார்,
  • நாயாடி,
  • புத்திரி,
  • வண்ணார்,
  • மற்ற பட்டியல் சாதிகளில் மேலே சொல்லப்படாதவர்கள்.

இந்த “குரூப்’ வகை அடிப்படையில் விகிதாச்சார அளவுப் பிரிப்பு சாத்தியமான யோசனையாக அமைந்தது. இதுபோன்ற ஒரு பிரிப்பு, ஆந்திராவில் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. சுமார் மூன்று ஆண்டுகள், இம்முறை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாதிகாக்கள் என்கிற அருந்ததியர் வேகமான வளர்ச்சி பெற்றனர்.

தாழ்த்தப்பட்டவர்களிலேயே தாழ்த்தப்பட்டவர்களாகவும், அடித்தள மக்களிலேயே அடித்தள மக்களாக வைக்கப்பட்டவர்களாகவும், கண்ணியமற்ற பணிகளிலேயே ஈடுபடுத்தப்பட்டவர்களாகவும், முன்னேற்ற வெளிச்சம் என்பதையே இதுவரை காணாத மக்களாகவும், மிகச் சாதாரண வாழ்க்கைக்கும் கூட போராட வேண்டியவர்களாகவும் வாழ்கின்ற அருந்ததியர் இன மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு ஈரமற்ற அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் இல்லை. முக்கியமான அடித்தள மக்கள் அரசியல் தலைவர்கள் எல்லோருமே, உள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் இப்படிக் குறிப்படப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில், அருந்ததியர் தொகை கணிசமாக இருப்பதால், ஆந்திராவில் உள்ளதுபோல இம்மக்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தனி இட ஒதுக்கீடு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் (2006) அறிக்கையில் தாழ்த்தப்பட்டோரில் சாதி வாரி இட ஒதுக்கீடு எனும் தலைப்பில் தரப்பட்ட வாக்குறுதி:

அருந்ததியர் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் உரிய பங்கினைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையை மாற்றிட, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தனித்தனியான மக்கள் தொகை அடிப்படையில், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதே ஏற்ற வழியாகும்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, உள் ஒதுக்கீட்டின் தேவையை வலியுறுத்துகிறார். தமிழக மனித உரிமைக் கழகத் தலைவர் அரங்க குணசேகரன், எப்போதுமே அருந்ததியர்களை ஆதரித்தும், உள் இட ஒதுக்கீட்டை ஒப்புக்கொண்டும் வந்திருக்கிறார்.

ஆக, அருந்ததியர் சகோதரர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கிடைப்பதில் பெருந்தடை ஏதும் இல்லை என்பது மகிழ்ச்சி தருகிறது.

என்றாலும், உள் இட ஒதுக்கீட்டுக்கு மிகச் சிலரால், ஐயம் காரணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ எதிரான ஓரிரண்டு கருத்துகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவை இவை:

அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு கோருவதால் தலித்துகளின் ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படாதா?

அரங்க குணசேகரன், “சுவடு’ இதழில் முன்வைத்த பதிலில் இருந்து சில பகுதிகள், அக்கேள்விக்குச் சிறந்த தெளிவைத் தரும்.

“”1931-ல் வட்ட மேசை மாநாட்டில் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை, தனி வாக்காளர் தொகுதிகள் கேட்டு டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷாரிடம் கோரியபோது, அதை மறுத்த காந்தி, இது இந்துக்களின் ஒற்றுமையைச் சிதைத்துவிடும் என்றார்.

1980-ல் தொடங்கி 1990-ஐயும் தாண்டி முற்போக்குத் திசைவழியில் கருக்கொண்டு உருவான தலித் இயக்கங்கள் கிராமங்களில் சாதித் தமிழர்கள் அல்லது சாதி இந்துக்கள் என்பவர்கள் தலித்துகள் மீது தொடுக்கின்ற அடக்குமுறைகள் குறித்து, தமிழின, தமிழ்த்தேச அரங்குகளில் விவாதத்தைக் கிளப்பியபோது, இத்தகைய கேள்விகள் தமிழின ஒற்றுமைக்கு எதிரானது என்று சில தலைவர்களால் விமர்சிக்கப்பட்டது.

நிறைவாக உள் இட ஒதுக்கீடு பெறுவதால் தலித் ஒற்றுமை கெட்டுவிடுமானால் கெட்டுவிட்டுப் போகட்டும். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு பெறமுடியாத அவல நிலை தொடர்வதால் தலித் ஒற்றுமை பாதுகாக்கப்படுமானால் அந்த ஒற்றுமையைத் தூக்கிக் கடலில்தான் போடவேண்டும்.”

உள் இட ஒதுக்கீடு தொடர்பாக, மற்றுமொரு முக்கியமான கேள்விக்கு அரங்க குணசேகரன் சொன்ன பதில் வருமாறு: “”மொத்தப் பரப்பான 18 விழுக்காட்டில் தங்கள் பங்கைப் பெற முடியாமல்தான் இவர்கள் ஆறு விழுக்காடு கேட்கிறார்கள். 18 விழுக்காட்டில் பறையர், பள்ளர்களுக்கு இணையாக அருந்ததியர் தங்கள் பங்கைப் பெற்றிருந்தால் உள் இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையே எழுந்திருக்காதே. போட்டித் தேர்வுகளில், பள்ளி, கல்லூரி மதிப்பெண்களில் பறையர், பள்ளர் அளவுக்கு உரிய மதிப்பெண் குறியீட்டை எட்ட முடியாமல்தான் இவர்கள் பின்தங்கிக் கிடக்கிறார்கள். இதே காரணங்களுக்காகத்தான் பார்ப்பனர்களிடமிருந்து பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மீண்டும் பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்து இன்று இசுலாமிய, கிருத்துவர்களுக்கும் உள் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.”

அருந்ததியர், தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டில் ஆறு சதம் உள் ஒதுக்கீடு கோருவதில் எந்தத் தவறும் இல்லை. சகல நியாயங்களும் அவர்கள் பக்கமே இருக்கின்றன.

தமிழக முதல்வரின் மேசை மேல் இருக்கும் இக் கோரிக்கை துரிதமாகச் செயல் உருப்பெற ஒருங்கிணைந்த பிரசாரம் மிக அவசியம். தலித்துகள் மட்டுமல்ல, தலித்துகள் அல்லாதோர்கள் அருந்ததியர் பக்கம் திரள வேண்டும். மனிதர்கள், தாங்கள் மனிதர்கள்தாம் என்று நிரூபித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. மனிதர்களாக இருந்து சிந்திப்போம். செயல்படுவோம்.

Posted in Arundhathi, Arunthathi, Babu Naidu, Caste, Chennai, CMK Reddy, Communities, Community, Dalit, Govindharaj, Govindhraj, Govindraj, Groups, Language, Languages, Madras, Muthuvelraj, Nandhagopal, Organizations, Reservation, SC, Scheduled Caste, Scheduled Tribe, ST, Telugu, Thiruma, Thirumavalavan, Thol Thiruma, Thol Thirumaa, Thol Thirumavalavan, Viduthalai Chiruthaigal, Viduthalai Chiruthaikal, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | 6 Comments »

‘DMK Alliance victory is Asurargal’s victory’ – Thol Thirumavalavan

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006

விடுதலை சிறுத்தைகள் இணைந்ததால் தி.மு.க. கூட்டணியின் வலிமை கூடியிருப்பது நிரூபணம்: திருமாவளவன் அறிக்கை

சென்னை, அக்.20-

விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலிலும் 31 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இது கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பது அவருடைய பெருந்தன்மையான – முதிர்ச்சியான தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது.

கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் அவரது இயல்பான அணுகுமுறைகளே தி.மு.க. கூட்டணியின் இந்த அமோக வெற்றிக்கு அடிப்படையாகும். விடுதலை சிறுத்தைகளின் வரவால் தி.மு.க. கூட்டணியின் வலிமை மேலும் கூடியிருக்கிறது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தேர்தலுக்கு முன்பே வெளிப்படையாக அறிவித்தது, இந்த அமோக வெற்றியின் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேரத்து வரவால் விடுதலை சிறுத்தைகளுக்கு பெரிதும் பயனில்லை என்றாலும், போட்டியிட்ட குறைவான இடங்களில் கணிசமான வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.

குறிப்பாக

  • கடலூர் மாவட்டத்தில் 3 நகராட்சி கவுன்சிலர்கள், 4 பேரூராட்சி கவுன்சிலர்கள்,
  • விழுப்புரம் மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒரு ஊராட்சி மன்ற தலைவர்,
  • தர்மபுரி மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 3 பேரூராட்சி கவுன்சிலர்கள், 5 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர்,
  • பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு பேரூராட்சி கவுன்சிலர்,
  • வேலூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி கவுன்சிலர், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், 8 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒரு ஒன்றிய கவுன்சிலர்,
  • சேலம் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

அத்துடன், தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்கு மிகப்பெருமளவில் பயன்பட்டிருக்கிறோம் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த தீபாவளி நரகாசுரனை கொன்றதற்காக அல்ல; நரகாசுரனும், நரகாசுரனின் வாரிசுகளும் வென்றதற்காக கொண்டாடப்படும் தீபாவளி ஆகும். தி.மு.க. கூட்டணியின் தேர்தல் வெற்றி அசுரர்களின் வெற்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Posted in Alliance, Asurar, civic elections, Dalit Panthers, DMK, Local Body Polls, Tamil Nadu, Thirumavalavan, Thol Thirumaa, Thol Thirumavalavan, Viduthalai Siruthaigal, Vituthalai Chiruthaigal | Leave a Comment »