கொத்தமங்கலம் சுப்பு படைப்புகளை வெளியிட குடும்பத்தினர் கோரிக்கை
சென்னை, ஜன. 18: “தில்லானா மோகனாம்பாள்’ உள்ளிட்ட நாவல்களைப் படைத்த கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கவிதைகள், கதைகளைப் புத்தகங்களாகக் கொண்டு வர அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
“”அவரது படைப்புகள் பல கிடைக்கப் பெறாமையால், அப்படைப்புகளைக் கைவசம் வைத்திருப்போர் அனுப்பி உதவ வேண்டும்” என்று கொத்தமங்கலம் சுப்புவின் மகன் கொத்தமங்கலம் விசுவநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
படைப்புகளைத் திரும்பப் பெற விரும்பினால், நகல் எடுத்து திருப்பி அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புகொள்ள:
கொத்தமங்கலம் விசுவநாதன், ஏ2, இரண்டாவது மாடி, கொத்தமங்கலம் சுப்பு இல்லம், புதிய எண் 185 (பழைய எண்: 107), அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 004.
தொலைபேசி: 044- 2811 5817, 2811 6938, செல்பேசி: 98846 61758.