Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for the ‘Theft’ Category

Depletion of Rivers and Sand Theft – KS Radhakrishnan

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 3, 2007

தொடரும் மணல் கொள்ளை!

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ஆற்று மணல் இயற்கையின் கொடை; நிலத்தடி நீர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மணல் அவசியமாகிறது. ஒரு செ.மீ. அளவுள்ள மணல் சேர பல ஆண்டுகள் ஆகும். ஆற்றுப்படுகைகளில் 30 அடி, 40 அடி மணல் படிந்துள்ளது என்றால் இதற்கு பல நூற்றாண்டுகள் பிடித்து இருக்கும். நீரில் கலக்கும் கழிவுகளை மணல்தான் வடிகட்டுகிறது. நீர்ப்பதத்தைச் சீரமைக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே மணல் கொள்ளை ஆரம்பித்துவிட்டது. இயற்கையின் வரங்களான காடு, மலை, நீர் என்பவை சுயநல சக்திகளால் சூறையாடப்படுகின்றன.

ஆற்றுமணலைப் பொதுப் பணித் துறையே விற்பனை செய்கின்ற நிலையில், வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் மீது லாரிகளை ஏற்றி கொல்லும் சம்பவங்கள் நடந்துள்ளன. இது ஒரு தொடர் கதை. மணல் விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி சில நிபந்தனைகளுடன் உரிமம் வழங்க வேண்டும்:

பொதுப்பணித்துறையின் பார்வையில், அதன் நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் மணல் எடுக்க வேண்டும். மணலை வாரித்தான் எடுக்க வேண்டும். இயந்திரம் எதையும் பயன்படுத்த அனுமதி கூடாது. தரைமட்டத்திலிருந்து அரை மீட்டர் ஆழத்திற்குள்ளேதான் மணல் எடுக்க வேண்டும். நீர் மட்ட அளவுக்குக் கீழ் மணல் எடுக்கக் கூடாது. குடிநீர்க் கிணறுகள் மற்றும் பம்புகளிலிருந்து 500 மீட்டருக்குத் தொலைவில்தான் மணல் எடுக்க வேண்டும்.

ஆனால் மணல் எடுக்கும் இடங்களில் இந்த நடைமுறைகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டம் வைப்பாற்றில் இந்த நிபந்தனைகளை மீறி மணல் வியாபாரம் மும்முரமாக நடக்கிறது. ஒரு டிப்பர் லாரியில் ஏற்றப்படும் மணலின் மதிப்பு சுமார் ரூ. 1,300. எடுக்கப்படும் மணல் அருகில் உள்ள களத்தில் குவிக்கப்பட்டு பின் மணல் வியாபாரிகளின் விருப்பம்போல் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. எத்தனை தடவை என்ற அளவே கிடையாது. மணல் கொள்ளையால், நீர் மேலாண்மையும் பாதிப்புறுகிறது. ஆற்றின் வெள்ளைமணல் நிலத்தடிநீர் வளத்தைப் பாதுகாக்கிறது.

தரமான வெள்ளை மணலுடன் நிரப்பு மணலைக் கலந்து ஒரு சிலர் விற்கின்றனர். சில இடங்களில் விவசாய நிலங்களில் உள்ள துகள் மண்ணையும் எடுத்து விற்கத் தொடங்கியுள்ளனர்.

தாதுமணல் சட்டங்கள் மீறப்படுவதைக் கண்காணிக்க எந்த அமைப்பும் கிடையாது. உண்மையில் மணல் எடுக்க ஜே.சி.பி. – பொக்லைன் போன்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை.

தாமிரபரணி ஆற்று நீர் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசனமாகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள சுமார் 421 கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சுமார் 50 லட்சம் மக்களின் தாகத்தைத் தீர்க்கிறது. தண்ணீர் ஓடிய ஆறுகளில் பல மாதங்கள் மணல் மட்டுமே காட்சி தருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் ஆற்று மணலில் தோரியம் என்ற அரிய தனிமம் உள்ளது. மணல் எடுப்பதால் தோரியம் தாது அழிந்து வருகிறது.

ஆற்றுப்படுகையில் 20 அடி 30 அடி ஆழம் இயந்திரங்களால் தோண்டி மணல் எடுக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி பகுதியில் உள்ள குடிநீர்க் கிணறுகளை ஒட்டியே மணல் எடுத்ததால் அத்தனை கிணறுகளும் பாதிப்படைந்துள்ளன. இந்த அத்துமீறலுக்கு ஆட்சியாளர்கள் பொறுப்பேற்றால்தான் பிரச்னை தீரும்.

10 டயர்கள் கொண்ட பெரிய லாரிகளில் பெருமளவில் பொருநை ஆற்று மணல் ஏற்றப்பட்டு கேரளத்துக்குக் கடத்தப்படுகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளம், முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் கட்டுகின்ற புதிய அணைக்கு தேனி மாவட்டத்திலிருந்து மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இத்தனைக்கும் கேரளத்தில் நீர், மணல்வளம் குறைவில்லை. ஆனால் அங்கு மணல் எடுக்கத் தடை. வளம் குறைந்த தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு மணல் கடத்தப்படுகிறது.

தமிழகத்தில் ரூ. 1,300 பெறுமானமுள்ள மணல் கொச்சியில் ரூ. 32 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு, அங்கிருந்து கப்பல் மூலம் ஏற்றுமதியாகிறதாம். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அரிய தாதுக்கள் அடங்கிய மணல் சிறிது சிறிதாகக் கடத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கேரள ஆறுகளில் மணல் எடுத்தால் பொதுமக்களே விரட்டி அடிக்கிறார்கள். அதனால் பிளாச்சிமடவிலிருந்து பெப்சி தொழிற்சாலை விரட்டப்பட்டு, தமிழர்கள் ஏமாளிகள் எனக் கருதி கங்கைகொண்டானில் நமது தண்ணீரைக் கொள்ளை அடித்து நமக்கே விற்கின்ற துர்பாக்கிய நிலை உள்ளது. கேரளத்தில் உள்ள விழிப்புணர்வு தமிழகத்தில் இல்லை என்பதை நினைக்கும்போதே வெட்கமாக உள்ளது. மணல் கொள்ளைக்காக பல கோடி ரூபாய் கப்பம் கட்டப்படுகின்றது எனப் பரவலான குற்றச்சாட்டும் உள்ளது.

அரியநாயகிபுரம் அருகே தாமிரபரணியில் குளிக்கச் சென்ற 3 பேர் புதை குழியில் சிக்கி மாண்டனர். மணல் எடுத்த பள்ளத்தில் ஆழம் தெரியாமல் போனதால் மூன்று உயிர்கள் பறிபோயின. இதைக் கண்டித்து, மணல் எடுப்பதைத் தடுக்கப் பொதுமக்கள் போராடியபோது அப்பாவிகள் 16 பேரின் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளியதால், வலிமை மிகுந்த பாலம் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். அந்தப் பாலம் இடிந்துவிழக் காரணமாக இருந்த மணல் கொள்ளையர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு கரூர், முசிறி, தேனி, தஞ்சை, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், காஞ்சி மற்றும் வைகை, அமராவதி கரைகள் போன்ற இடங்களிலும் மணல் கொள்ளை நடக்கிறது. ஆனால், மாட்டு வண்டியில் மணலை சொந்தத் தேவைக்கு ஏழை விவசாயிகள் எடுத்துச் சென்றால் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அரசின் நிபந்தனைகளையும் சட்டங்களையும் மீறி மணல் எடுக்கும் “பிரமுகர்கள்’ மற்றும் அதற்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை எளியோரின் தேவை அறிந்து அவர்களுடைய கட்டுமானப் பணிகளுக்கு மணல் உரிய விலையில், எளிதில் கிடைக்க நடவடிக்கை அவசியம். குடிநீர்க் கிணறுகளிலிருந்து குறைந்தபட்சம் 500 மீட்டருக்கு அப்பால் மணல் எடுக்க வேண்டும் என்ற விதியைக் கடுமையாக்க வேண்டும். மணல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்து கடுமையான சட்டங்களும், இதய சுத்தியான விழிப்புணர்வும் அவசியம். அண்டை மாநிலங்களுக்கு மணல் எடுத்துப் போவோர் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். சமூக விரோதிகளின் ஆதிக்கத்திலிருந்து மணல் தொழிலை மீட்க வேண்டும்.

இயற்கை நமக்களித்த நதிச் செல்வங்களைக் காப்பது நமது கடமை. தொடரும் கொள்ளையால் மணல் வளம் குன்றாமல் தடுப்பது காலத்தின் கட்டாயம்.

(கட்டுரையாளர்: வழக்கறிஞர்)

Posted in ADMK, Ariyanayagipuram, Ariyanayakipuram, Bribes, Cauvery, Cochin, Corruption, Dasani, DMK, Drink, Drinking, Environment, Exploit, Ganga, Ganges, Karunanidhi, Kaveri, kickbacks, Kosasthalai, Lorry, Mineral, Minerals, Mountain, Nature, Party, Pepsi, pilferage, Politics, Pollution, PWD, Quilon, River, Sand, Source, Stalin, Tamirabarani, Tamirabharani, Thamirabarani, Thamirabharani, Theft, Thiruvalloor, Thiruvallur, Thiruvaloor, Thorium, Truck, Vaigai, Vaikai, Water | Leave a Comment »

Kumudam Reporter – Interview with Don ‘Vellai’ Ravi

Posted by Snapjudge மேல் ஜூன் 4, 2007

07.06.07 
குமுதம் ரிப்போர்ட்டர்

வெள்ளை ரவி என்ன சொல்கிறார்?

தலைமறைவாகி இருக்கும் வெள்ளைரவியை பலமுயற்சிகளுக்குப் பிறகு நாம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினோம். ஒவ்வொரு கேள்விக்கும் தெளிவாகவும், நிதானமாகவும் அவர் பதிலளித்தார்.

‘வெள்ளை ரவி’ என்ற பிரபல தாதா உருவானது எப்படி?

‘‘வியாசர்பாடி பகுதியில் பர்மா அகதிகளாக எங்கள் குடும்பமும், சேரா குடும்பமும் குடியேறினோம். நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். சேரா தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் எங்களுக்குள் ஏற்பட்ட பகை உணர்வு நாளடைவில் ஜாதி வெறியாகவே உருவெடுத்தது. எனவே நான் சேராவின்ஆட்களைக் கொலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் எத்தனையோ கொலைகள் நடந்து, சாதாரண வெள்ளை ரவியான நான் ஒரு தாதாவாக ஆக்கப்பட்டேன்.’’

ராஜ்குமாரை நீங்கள் கடத்தியது உண்மையா?

‘‘உண்மைதான். நான் ராஜ்குமார் என்ற தொழிலதிபரை கடத்தவில்லை. சாதாரண வீரய்யாவாகத்தான் ராஜ்குமாரின் அப்பா, செங்குன்றத்தில் குடியேறினார். அதன்பிறகு என்னுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி வீரய்யாவின் குடும்பம் மணல் கடத்தல், அதன்பிறகு ஹெராயின் கடத்தல் பின்னர் சந்தன மரம், மற்றும் செம்மரக் கடத்தல், தொழிலில் இறங்கி, கோடிகோடியாக பணம் சம்பாதித்தனர். இன்று அந்தக் குடும்பத்திடம் சுமார் ஆயிரம்கோடி ரூபாய் சொத்து இருக்கிறது.

இந்த சொத்துக்கள் அனைத்துமே எனது பெயரைப் பயன்படுத்தி என் மூலமாகவே அவர்கள் சம்பாதித்தது. இதை செங்குன்றத்தில் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். செங்குன்றம் போலீஸாருக்கும் இது தெரியும். எனக்கு அவர்கள் தரவேண்டிய பணத்தைத்தான் பலமாதங்களாக கேட்டுவந்தேன். அவர்கள் இன்று, நாளை என இழுத்தடித்து Êஏமாற்றப் பார்த்தார்கள். எனவேதான் ராஜ்குமாரை கடத்தினேன்.’’

ராஜ்குமார் குடும்பத்திடம் அறுபது லட்ச ரூபாய் வாங்கியது உண்மையா?

‘‘உண்மைதான். எனக்கு இரண்டு கோடி ரூபாய் தருவதாக வீரய்யாவும், ராஜ்குமாரும் சொல்லியிருந்தார்கள். அதைத் தரவேயில்லை என்பதால்தான் ராஜ்குமாரைக் கடத்தி அறுபது லட்ச ரூபாய் வாங்கினேன்.’’

நீங்கள் சென்னையில் பல கொலைகள் செய்துள்ளதாகவும், ரவுடிகளுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்பி வைப்பீர்கள் என்றும் சொல்கிறார்களே?

‘‘நான் தாதாவாக உருவெடுத்தபிறகு சென்னையில் வளரும் ரவுடிகள் பலரும் எனது உதவியை நாடுவார்கள். அவர்களுக்கு எனது ஆட்களை அனுப்பி அவர்களின் உயிரை பலமுறை காப்பாற்றி இருக்கிறேன். என்னால் எத்தனை ரவுடிகள் இறந்தார்கள் என்பதைவிட, எத்தனை ரவுடிகள் உயிர் பிழைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

நான் இதுவரை எத்தனையோ கொலைகளைச் செய்திருந்தாலும், எனது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் கொன்றதில்லை.’’

இந்தியாவிலேயே எந்த ரவுடிக்கும் இல்லாத சிறப்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஒன்றுக்கு உங்கள் பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாமே?

‘‘ஆரம்பத்தில் எனக்கும் சேராவுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த தொடர் கொலைகளை விசாரிக்க அந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டது. எனது வழக்குகளை விசாரிக்கத் தொடங்கப்பட்டதால் அந்த நீதிமன்றத்துக்கு ‘வெள்ளை ரவி கோர்ட்’ என்று பெயர் வைத்தார்கள். இன்றுவரை அந்தப் பெயர் அப்படியே நிலைத்துவிட்டது.’’

போதைப் பொருள் கடத்தல் தொழில் செய்தீர்களா?

‘‘ஹெப்பிட்ரின் ஹைட்ரோகுளோரைட் என்ற ஒரு பவுடர்தான் ஹெராயின் தயாரிக்க மூலப்பொருள். இதன் விலை இந்திய மார்க்கெட்டில் ஒரு கிலோ இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். இதே பவுடர் சர்வதேசச் சந்தையில் சிங்கப்பூரில் பதினெட்டாயிரம் ரூபாய், மலேசியா, பர்மாவில் இருபத்தைந்தாயிரம் ரூபாய்.

இந்த பவுடர் கடத்தலைத்தான் ராஜ்குமார் குடும்பம் ஆரம்பத்தில் செய்தது. அசாம் மாநிலம் எல்லையில் உள்ள மோரே பகுதியில் இருந்து பர்மாவுக்கு இந்த பவுடரை எளிதாகக் கடத்தி விற்று, இன்று சென்னையில் பலகோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இன்று வரை சத்தியமாக நான் அந்த பவுடரை தொட்டதும் கிடையாது. கடத்தியதும் கிடையாது.’’

நீங்கள் ரவுடியிசத்தில் பல கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறீர்களாமே?

‘‘என்னால் எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இதுவரை எனக்கென்று நான் ஒரு இடத்தைக் கூட வாங்கியது இல்லை. ஆயிரம் ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. வியாசர்பாடி ஆஞ்சநேயர் கோயில் அருகே தொடங்கப்பட்ட எனது வீடு பல வருடங்களாக இன்னும் கட்டி முடிக்கப்படாமலேயே பாழடைந்து கிடக்கிறது.’’

எப்போது போலீஸில் சரண்டர் ஆவீர்கள்?

‘‘நான் எந்தச் சூழ்நிலையிலும் சரண்டராக மாட்டேன். சரண்டரானால் போலீஸ் என்னை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடும். என்கவுன்ட்டர் என்றால் ‘திருப்பித்தாக்குதல்’ என்றுதான் அர்த்தம். ஆனால் தமிழக போலீஸ§க்கு அதன் அர்த்தம் தெரியவில்லை. ரவுடிகளைப் பிடித்து சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? இரண்டரை வருடங்களாக சிறையில் இருந்த மணல்மேடு சங்கர், முட்டை ரவி, பங்க் குமார், இப்படி ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கியவர்களைப் பிடித்து சுட்டு வருகின்றனர் காவல்துறையினர். இந்தப் பட்டியலில் நான் சேரத் தயாராக இல்லை. நான் சரண்டராக மாட்டேன் என்ற விவரத்தை சென்னை நகர முக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சொல்லிவிட்டேன்.’’

நீங்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறீர்களா?

‘‘எனது மனைவி பெயர் பாக்கியலட்சுமி.. தஞ்சாவூரைச்சேர்ந்த சுத்த தமிழ்ப்பெண். அவர்கள் இங்கிருந்துச் சென்று கர்நாடக மாநிலத்தில் செட்டிலானவர்கள்.’’

உங்களுக்கும் துணை நடிகை சானியாவுக்கும் என்ன தொடர்பு?

‘‘உண்மையிலேயே சொல்கிறேன். சபியுல்லாவின் காதலியான அந்தப் துணை நடிகையை நான் இரண்டுமுறை பார்த்திருக்கிறேனே தவிர, சரியாகக் கூடப் பேசியதில்லை. தேவையில்லாமல் என்னையும், அந்தப் பெண்ணையும் சேர்த்து அசிங்கமான செய்திகளை போலீஸார் பரப்பி வருகிறார்கள்.’’

– புஷ்கின் ராஜ்குமார்

Posted in Abscond, Arms, Blasts, Bombs, bootlegging, Capture, Cera, Chennai, Chera, Cocaine, Corruption, Courts, Crime, Criminal, Dacoit, Dada, Dalit, Death, Don, Drugs, Encounter, fraud, Gamble, gambler, Gambling, gang, Godfather, Heroin, Hitman, Illegal, informers, Interview, Judge, Justice, Kidnap, kidnapping, Kumudam, Law, law-enforcement, Leader, Loan-sharking, LSD, Madras, mafia, maphia, Marijuana, Murder, Narcotics, nexus, Order, organized-crime, Police, Politics, prostitution, Rajkumar, ransom, Ravi, Reporter, rival, rivalry, Robber, Robbery, Rowdy, Rowdyism, Sandal, Sandalwood, secrecy, Sera, smuggler, Sopranos, Substance, Surrender, Theft, Thief, traffickers, Trafficking, Veerappan, Vellai Ravi, Violence, Weapons | 3 Comments »

Sri Lanka: Attack on fishermen serious issue – No concerns when the fishermen from Tamil Nadu died

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 4, 2007

கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்

த.நா. மதிவாணன்

“”ஆழ்கடல் சென்று மீன்பிடிப்போம்; நாளும் உழைத்து நாமும் முன்னேறி, நமது நாடும் வளம்பெற பாடுபடுவோம்” எனத் தன் ஆசைக் கணவருக்கு அன்புமொழி கூறி கடலுக்கு மீன்பிடிக்க இன்முகத்துடன் வழியனுப்புவது வழக்கமான காட்சி.

ஆனால் இன்று…! “”எப்பம்மா அப்பா வருவாருன்னு” கேள்வி கேட்டுத் துளைக்கும் தன் மூன்று பிள்ளைகளுக்கும் கண்ணீரை மட்டும் பதிலாகச் சொல்லி இனித் தன் வாழ்வு செல்லும் வழியறியாது தவிக்கும் தமிழக மீனவப் பெண்ணின் வேதனை சொல்லி மாளாது.

முருங்கைவாடி கிராமத்தில் வசித்து வந்த ராமு என்ற மீனவர் இலங்கைக் கடற்படையால் சுடப்பட்டு மாண்டு போக அவரது மனைவி முத்துலட்சுமி, நான்கு குழந்தைகளுடன் ஓலைக்குடிசையில் ஒட்டிய வயிறுடன் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கி காலம்கழிக்கும் வேதனைச் சம்பவம்.

நாகையில் அக்கரைப்பேட்டை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு. இது ஏதோ நிகழ்வு அல்ல. நித்தம் நடக்கும் கண்டனத்துக்குரிய சம்பவங்கள்.

இதுவரை சுமார் 112 மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் சுடப்பட்டு மாண்டு போயுள்ளனர். பலர் காயமுற்றுள்ளனர். இத்தகைய சூழலில் எப்படி மகிழ்வோடு மீன்பிடிக்கச் செல்ல இயலும்? எப்படி மீனவப் பெண்கள் தங்கள் கணவன்மார்களை தைரியமாக வழியனுப்பிட முடியும்?

வான் பொய்த்துப் போனாலும், வருகின்ற நீர் வராது போனாலும், விவசாயம் குறைந்து போனாலும், வற்றாது வளம் கொழிக்கும் கடல் வளம் கண்டு நாட்டின் ஏற்றத்திற்கு கடலை உழுபவன்தான் மீனவன்.

“”மீனவர்களின் உழைப்பு சிந்திடும் வியர்வைத் துளிகளால் கடல் நீர் உப்பானது” இது கவிதையல்ல. மீனவனின் உழைப்பின் சிறப்பு.

இத்தகு வரலாற்றுச் சிறப்புக்குரிய மீனவன் நாட்டின் பொருளாதார ஏற்றத்திற்கும் அன்னியச் செலாவணியின் அதிக வருவாய்க்கும் ஓய்வின்றி நித்தமும் உழைக்கும் உழைப்பாளி.

இத்தாலி, நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளில் உள்ள மீனவர்கள் செல்வச் செழிப்பில் மேலோங்கி உள்ளனர்.

ஆனால் நம் நாட்டில் மீனவர்களின் நிலை என்ன? அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அவதி! கடலுக்குச் சென்றால் மீண்டும் கரைக்குத் திரும்புவோமா என்ற அச்சம்.

ரூ. 2500 கோடிக்கு மேல் அன்னியச் செலாவணியை ஈட்டித் தருகிற மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். கரையில் வீழ்ந்த மீன் தத்தளிப்பதுபோல் கண்ணீரில் தத்தளிக்கின்றனர் மீனவர்கள்.

தமிழகத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் 65 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் மட்டுமே.

தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்கையில் அவ்வப்போது இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது சாதாரண நிகழ்வாகிப் போய்விட்டது வேதனைக்குரியது.

இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் பின்னர் அதைப்பற்றி மறந்துபோவதும் இயல்பாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நிவாரணம் தருவதால் மட்டும் அவர்களின் இன்னல்கள் தீரப் போவதில்லை. மீனவர்கள் இனியும் பாதிக்காதவண்ணம் காக்கப்பட வேண்டியது அரசின் பொறுப்பு.

படிப்பறிவில்லா பாட்டாளி மீனவர்கள் உழைப்பைத் தவிர வேறொன்றுமறியா ஏழை மக்கள். இவர்கள் கடல் எல்லையைத் தாண்டி அன்னிய நாட்டுக்குள் செல்வதால் சுடப்பட்டார்கள் என்பது ஏற்புடையதா? நடுக்கடலில் கண்ணுக்குத் தெரிகிற வகையில் எல்லைக்கோடு ஏதுமுள்ளதா? வழி தவறி வந்தாலும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிவிட வேண்டும் அல்லவா? அல்லது அவர்களை எச்சரித்து இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கலாம் அல்லவா?

இவ்வாறு மனிதாபிமான முறையில் செயல்படுவதை விட்டுவிட்டு, கடல் எல்லையை அறியாமல் தாண்டி வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்ல எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை. இதை இலங்கைக் கடற்படையினருக்கு உணர்த்த வேண்டியது இந்திய அரசின் முக்கியக் கடமை.

இந்திய அரசு கடலோரக் காவல் படைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழிக்கிறது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் கொடூர நிகழ்வுகளின்போது நமது கடலோரக் காவல் படை எங்கே போனது?

பன்முறை இந்நிகழ்வுகள் நடந்தேறிய போதும், ஒருமுறைகூட நம் கடலோரக் காவல்படையினர் கண்களில் இச்சம்பவங்கள் படாதது வியப்பூட்டுகிறது. கடலோர மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடலோரக் காவல்படை தங்கள் கடமையைச் செய்யாமல் எங்கே போனது?

கிழக்கே வங்கக் கடல், மேற்கே அரபிக் கடல், தெற்கே இந்துமாப் பெருங்கடல் என முக்கடலாலும் நமது நாடு சூழப்பட்டுள்ளது. ஓர் உயரிய குன்றின் மீது நின்று பார்த்தால் மூன்று கடல்களும் தனித்தனியாகத் தெரிகிறதா? ஏதேனும் தனித்தனி எல்லைக்கோடுகள்தான் உள்ளனவா? இவையாவும் நம் மூதாதையர்கள் வைத்த பெயர்கள். இதுதான் கடல்எல்லை என்பதை திட்டவட்டமாக மீனவர்கள் அறிந்துகொள்ள வழியேதும் செய்யப்பட்டதா? இல்லையென்றுதான் கூற வேண்டும். எனவே, மனித உள்ளங்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய மனிதாபிமான விஷயம் இது.

பல நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் இறந்தும் உலகில் மிகச் சிறப்பிடம் பெற்ற நமது இந்தியக் கடற்படை ஒருமுறைகூட இலங்கைக் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்காதது மீனவர்கள் நெஞ்சில் நீங்காத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?

ஒரு ராணுவ அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே அந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காகத்தான்.

அதைவிடுத்து இலங்கை நட்புநாடு எனக் கூறிக்கொண்டு இந்திய அரசு தமிழக மீனவர்கள் விஷயத்தில் அலட்சியமாக நடந்துகொண்டு வருகிறது.

இலங்கைக் கடற்படை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த அவலநிலைக்கு ஓரளவு முடிவு ஏற்பட்டிருக்கும்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவிடம் இந்தியா புகார் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசிடமிருந்து இழப்பீடு பெற்று மீனவர்களுக்குத் தரவேண்டும்

நித்தம் கடல் காற்றை மூச்சாய் வாங்கி, உப்பு நீரால் வாழ்க்கை நடத்தி, நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்த அயராது உழைத்துவரும் மீனவர்களின் வாழ்வு விடிவும் இன்றி முடிவும் இன்றி வினாக்குறியாகவே இருக்க வேண்டுமா? அவர்களின் துயரத்துக்கு விடிவுகாலம் ஏற்படுவது எப்போது?

(கட்டுரையாளர்: நிர்வாகத் தலைவர், தமிழக மீனவர் இளைஞர் அணி).


மீனவர்களை மீட்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூறுகிறது

தமிழக மீனவர்களுக்காக திமுக நடத்திய பேரணி-ஆவணப் படம்
தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக திமுக பேரணி-ஆவணப்படம்

தமிழகத்திலிருந்து காணாமல் போன இந்த மீனவர்களை மீட்க இந்தியாவின் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தை ஆளும் திமுக கூறியுள்ளது.

இந்தச் சம்பவம் இந்திய எல்லையைக் கடந்து சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றதால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சட்டபூர்வமான அதிகாரம் கிடையாது என திமுகவின் அதிகாரபூர்வ பேச்சாளர் இளங்கோவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மத்திய அரசை வற்புறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோருவதுதான் தமிழக அரசு தற்போதைய நிலையில் செய்யக் கூடியது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய அரசால் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மீனவர்கள் தற்போது இலங்கையில் இருப்பதால், இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசி அவர்களை மீட்க ஆவன செய்யுமாறு இந்திய அரசு கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.


ஜோர்டான் நாட்டு கப்பலில் இருந்த சரக்குகளை விடுதலைப் புலிகள் அப்புறப்படுத்திவிட்டனர் என அந்த கப்பல் நிறுவனம் கூறுகிறது

கப்பலிருந்து சரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம்
சரக்குகள் அகற்றப்படுவதை காட்டும் படம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவுப் பகுதியில் வைத்து ஜோர்டான் நாட்டு சரக்கு கப்பலான ஃபாரா கால நிலை கோளாறு காரணமாக சிக்கிக் கொண்டது.

ஜோர்டான் நாட்டுக் கப்பலில் இருந்த சரக்குகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதாக அந்தச் சரக்குக் கப்பலுக்கு உரிமையாளரான சலாம் சர்வதேச போக்குவரத்து மற்றும் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் சையத் சுலைமான் கூறியுள்ளார்.
அந்தக் கப்பலில் இருந்து எடுத்துச் செல்லக் கூடிய அரிசி, விளக்குகள், ஜெனரேட்டர்கள் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டு விட்டன என்றும் கப்பல் சுத்தமாக துடைத்தெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இச்சம்பவத்திற்கு விடுதலைப் புலிகளைத் தவிர வேறு யார் மீதும் பழி போட தனக்குத் தெரியவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

கப்பலை மீட்பதற்காக ஜோர்டான் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக தொடர்பு கொண்டதாகவும், காப்புறுதி நிறுவனங்கள், மதிப்பீடு செய்பவர்கள் போன்றோரை பாதுகாப்பாக அங்கு அனுப்ப வழியினை ஏற்படுத்திக் கொடுக்க இலங்கை அதிகாரிகள் முயற்சிகள் எடுத்த போதிலும், அது நடைபெற இயலாமல் போயிற்று என்றும் தங்களுடைய முயற்சிகள் தோல்வியடைந்தன எனவும் சையது சுலைமான் தெரிவித்தார்.

தமது கப்பலை மீட்பது தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்த தங்களுக்கு அனுமதி, அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், இந்தச் சம்பவம் ஒரு கடற்கொள்ளை என்பது தனது கருத்து மட்டுமல்ல, நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.


Posted in abuse, ADMK, ammunition, Arms, Attack, Contraband, dead, DMK, Eelam, Eezham, Fish, fishermen, Freight, Government, Jordan, LTTE, Military, Naval, Navy, Pirate, Robbery, Sea, Ship, Sri lanka, Theft, TN, Transport, Transportation, Viduthalai Puli, Viduthalai Puligal, Viduthalai Pulikal, Vituthalai Puli, Vituthalai Pulikal | 4 Comments »

‘Desamuduru’ hero Allu Arjun gets robbed by fans

Posted by Snapjudge மேல் பிப்ரவரி 12, 2007

ரசிகர்கள் போல் முற்றுகை: நடிகரின் நகைகளை பறித்த திருடர்கள்

நகரி, பிப். 11-

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன். அல்லு அர்ஜுன் நடித்த “தேச முதுரு” படம் 100 நாட்களைத் தாண்டி அபார வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் அநியாயங்களைச் தட்டிக் கேட்பவராக நடித்திருக்கிறார்.

இப் படத்தின் வெற்றி விழா குண்டூரில் உள்ள `ராஜ் சென்டர்’ அரங்கத்தில் நடந்தது. இவ்விழாவில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் அவருடன் கைகுலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருட்டுக் கும்பல் ஒன்று அல்லு அர்ஜுனை ரசிகர்கள் போல சூழ்ந்து கொண்டது.

தன்னைச் சுற்றி நின்று கொண்டிருப்பது திருடர்கள் என்பதை அறியாத அர்ஜுன் அவர்களுடன் கை குலுக்கினார்.

அப்போது திருடர்கள், `அல்லு அர்ஜுன் வாழ்க’ என்று கோஷமிட்டனர். பின்னர் அவரை கட்டிபிடித்து வாழ்த்துவது போல நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த பெரிய தங்க செயின், கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட், வைர மோதிரம், தங்க கடிகாரம், செல்போன், பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்ஸ்.. என்று ஒவ்வொன்றாகப் பறித்தனர்.

பின்னர் கூட்டத்தோடு கூட்டமாக திருடர்கள் நைசாக தப்பி ஓடிவிட்டனர்.

பொது நிகழ்ச்சி ஒன்றில் திருடர்களிடம் அத்தனை நகைகளையும், பணத்தையும் இழந்ததால் அல்லு அர்ஜுன் மிகுந்த வேதனை அடைந்தார்.

அவர் கூறும்போது `ரசிகர்கள்தான் என்னை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிப்பதாக நினைத்தேன். திருடர்கள் இந்த அளவுக்கு துணிச்சலுடன் பொது நிகழ்ச்சிலேயே எனது அத்தனை நகைகளையும் பறித்து சென்றது வேதனையாக உள்ளது. இனி நடிகர்கள், ரசிகர்கள் கும்பலாக வந்தால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது’ என்றார்.

இதே விழாவில் பலரது செல்போன்களும், நகைகளும் திருட்டு போனது. இது பற்றி குண்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு கும்பலை தேடிவருகிறார்கள்.

Posted in 100th day, Allu Arjun, Andhra, Andhra Pradesh, AP, Celebration, Chiranchivi, Chiranjeevi, Desamudru, Desamuduru, Fans, Pokkiri, Raj Center, Robbery, Siranjeevi, Telugu, Telugu Cinema, Telugu Films, Theft, Thief, Tollywood | Leave a Comment »

‘Dasavatharam movie story is stolen from me’ – Su Senthilkumar gets stay order

Posted by Snapjudge மேல் ஜனவரி 21, 2007

கமல்ஹாசன் நடிக்கும் `தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, ஜன.21-

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த திரைப்பட உதவி
இயக்குனர் சு.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு
தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நான் `தனுஷ்‘ என்ற திரைப்படத்தில் குருமணி என்ற இயக்குனரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். தற்போது `அப்படியா’ என்ற திரைப்படதëதில் இயக்குனர் தீர்த்தமலை என்பவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறேன்.

தனுஷ் திரைப்படம் பாதியில் நின்று போய்விட்ட நிலையில், அர்த்தனாரி அல்லது குளோன்ஸ் என்ற தலைப்பில் இதுவரை வரலாற்றிலேயே எவரும் கண்டிராத அளவில் ஒரு கதையினை உருவாக்கினேன். அந்த கதையில், கதாநாயகன் 10 முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவார். அதைச் சுற்றி ஆயிரம் கதாபாத்திரத்தில் கதாநாயகன் ஒருவர் மட்டுமே தோன்றுகின்ற மாபெரும் ஒரு திரைக்கதையை அமைத்திருந்தேன்.

இதில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் மட்டுமே ஏற்றவர் என்று கருதி அவரிடம் கதையை சொல்ல அனுமதி கேட்டு என் கதையின் தலைப்பின் போட்டோ கார்டை டி.டி.கே. சாலையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தìற்கு பதிவு தபாலில் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு முரளி என்பவர், கதை சொல்ல வரும்படி கமல்ஹாசன் வரச் சொன்னதாக தொலைபேசியில் கூறினார்.

அதன்படி, நானும், நண்பர் பாலா என்கிற பாலசுப்பிரமணியனும் 8-8-2005 அன்று அந்த அலுவலகம் சென்றோம். என்னை மட்டும் உள்ளே அழைத்து முரளி பேசினார். கதையின் நகலை என்னிடம் கொடுங்கள். அதை நன்கு படித்துவிட்டு, அதை வைத்து நாங்கள் படம் எடுப்பதாக இருந்தால் உங்களுக்கு தொலைபேசியில் சொல்கிறேன். அந்த படத்தில் உங்களை உதவி இயக்குனராக அமர்த்துவதுடன், ஒரு குறிப்பிட்ட தொகையை கதைக்காக கொடுப்போம் என்றும் உறுதி அளித்தார்.

ஆனால், ஒரு வாரம் கழித்து நாளிதழ் ஒனëறில் தசாவதாரம் என்ற பெயரில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போவதாகவும் செய்தி வெளிவந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

இதுபற்றி முரளியிடம் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் கூறும்போது, “கமல்ஹாசன் உங்களை இந்த தìரைப்படத்தில் உதவி இயக்குனராக நியமித்துள்ளார். படம் தொடங்கும்போது மறுபடியும் உங்களை அழைக்கிறோம். கவலைப்படாதீர்கள்-உஙëகளுக்கு கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுப்போம்” என்றார். நானும் அதை நம்பி காத்திருந்தேன்.

18-8-06 அன்று தசாவதாரம் படிப்பிடிப்பு நடப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதையடுத்து முரளியிடம் உடனே தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த கதை எல்லாம் உன் கதை இல்லை. உன்னிடம் யாரும் போனில் பேசவில்லை. இந்த கதையை நானும், கமல்ஹாசனும் சேர்ந்து உருவாக்கினோம். இனிமேல் இங்கே நீ வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏமாற்றப்பட்டதை எண்ணி பெரிதும் வருத்தப்பட்டேன்.

தசாவதாரம் கதை என்னுடையது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் வைத்துள்ளேன். அந்த கதையை நான் முறைப்படி பதìவும் செய்துள்ளேன்.

என் கதையை என் அனுமதி இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் என்று பெயர் மாற்றம் செய்து எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் என்னை ஏமாற்றியது பற்றி விசாரித்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருக்கும் மனு கொடுத்துள்ளேன். எனவே, தசாவதாரம் படத்திற்கான படப்பிடிப்பு நடத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இநëத வழக்கில் நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் முன்னிலையில் நேற்று நடந்தது. “தசாவதாரம் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால், இந்த படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Posted in Apdiyaa, Appadiyaa, Arthanari, Bala, Balasubramanian, case, Cheat, Clones, Court, Dasavatharam, Dhanush, Dhasavatharam, dialogues, Direction, Gurumani, Intellectual Property, Judge, Justice, Kamal, kamalahasan, Kamalahassan, Kamalhasan, Kamalhassan, KS Ravikkumar, KS Ravikumar, Law, Murali, Order, Oscar Ravichandran, Pictures, Producer, Rajkamal, Screenplay, Stolen, Story, Tamil Cinema, Tamil Films, Tamil Movies, Thasavatharam, Theerthamalai, Theft, TTK Road | 5 Comments »

Did Vadivelu plagiarize concepts from Bhagyaraj?

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

வடிவேலுவின் 2 காமெடி அதை என்னுடையது: பாக்கியராஜ் புகார் 

சென்னை, அக். 24-

விஷால் நடிக்கும் `சிவப்பதிகாரம்‘ படத்தின் பாடல் கேசட் விழா வட பழனியில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் பாக்கியராஜ் தான் எழுதிய 2 காமெடி கதைகள் படமாகி அவற்றில் வடிவேலு நடித்ததாக புகார் கூறினார். பாக்கியராஜ் பேச்சு விவரம் வருமாறு:-

முன்பெல்லாம் படம் ரிலீஸ் ஆன பிறகு சரி இல்லையாமே, ஊத்துக்கிட்டாமே, என்றெல்லாம் கன்னாபின்னா வென்று பேசுவார்கள். இப்படம் வெளிவரும் முன்பே `அது ரிலீஸ் இல்லை, பெட்டி வராது என்றெல்லாம் பேசினார்கள். தீபாவளி படங்கள் ரிலீசின் போது அவற்றை கேட்டேன். வருத்தமாக இருந்தது.

உதவி டைரக்டர்கள் முந்தைய காலங்களில் டைரக்டர்கள் வீட்டு வாசலில் காத்து கிடந்து சான்ஸ் கேட்டனர். நான் பாத்திபன் போன்றோர் அப்படித் தான் டைரக்டராகினோம்.

ஆனால் இப்ப உதவி டைரக்டர்களை தேட வேண்டி இருக்கு. அகப்படும் உதவி டைரக்டர்கள் கூட எவ்வளவு பணம் தருவீர்கள் என்று கேட்கிறார்கள்.தமிழ், படங்களில் மட்டும் அவர்கள் வேலை பார்ப்பதில்லை. தெலுங்கு, மலையாளம், இந்தின்னு சுற்றிக்கிட்டே இருக்காங்க. உதவி டைரக்டர்கள் நம்பிக்கையா இருப்பதும் அவசியம்.

நான் ஒரு காமெடி கதை எழுதி வச்சிருந்தேன். ஓட்டு போட்டவர் கிட்ட எனக்குத் தானே போட்டே என்று வேட்பாளர் கேட்க உங்களுக்குத்தாண்ணே நீங்க நம்ப மாட்டிங்கன்னு காட்டுறதுக்கு எடுத்து வந்துட்டேன் என்று ஓட்டு சீட்டை காண்பிப்பார். சில நாள் கழித்து வடிவேலு நடிக்க இந்த கதையை படத்தில் பார்த்தேன். வடிவேலுக்கே போன் பண்ணி கேட்டேன். எனக்கு தெரியாது நடிக்கச் சொன்னாங்க நடிச்சேன் என்றார். அது போல் பகலில் அம்மா-அப்பாவை மதிக்கும் ஒருவேன் ராத்திரியானால் குடிச்சிட்டு வந்து சித்ரவதை செய்றமாதிரி கதை எழுதி இருந்தேன். அதுவும் வடிவேலு நடிக்க வெளியாகி விட்டது.

நல்ல கதை உள்ள படங்களை மக்கள் ஏற்பார்கள் சித்திரம் பேசுதடி, எம்டன் மகன், திமிரு படங்களில் கதையம்சம் இருப்பதால் ஒடுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர்கள் பார்த்திபன், விஷால், நடிகை மம்தா, கவிஞர்கள் பா.விஜய், யுகபாரதி, டைரக்டர்கள் லிங்கசாமி, கரு. பழனியப்பன் தயாரிப்பாளர்கள் எம்.ஆர். மோகன் ராதா, பி.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள்.

Posted in Bhagyaraj, Comedy, Kollywood, parthiban, Plagiarism, Sivappathigaram, Tamil Cinema, Tamil Movies, Theft, Vadivel, Vishal | Leave a Comment »