“வனப்பேச்சி’ நுõல் வெளியீட்டு விழா
சென்னை:உயிர்மை பதிப்பகத்தின் சார்பில், முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய “வனப்பேச்சி’ நுõல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை தாங்கிய இந்திய கம்யூ., தலைவர் ஆர்.நல்லகண்ணு “வனப்பேச்சி’ கவிதை தொகுப்பு நுõலை வெளியிட, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி பெற்றுக் கொண்டார்.
விழாவில் அமைச்சர் ராஜா பேசுகையில்,”தமிழர்கள் வாழ்வில் இலக்கணமும், கவிதையும் பிரித்து பார்க்க முடியவில்லை. கவிதை வெளியே இல்லை. ஒவ்வொருவரிடமும் ஆழப் பதிந்திருக்கிறது’ என்றார்.
இந்திய கம்யூ., தலைவர் நல்லகண்ணு பேசுகையில்,”உலகில் எங்கு என்ன நடந்தாலும், அதை தன்னுடைய நிலையை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். செறிவான கருத்துக்களும், மண்ணின் மொழியும் உள்ளது. நகரம் மற்றும் கிராமம் ஒரே சீரான வளர்ச்சி காண வேண்டும். எனவே, கவிஞர்கள் மக்கள் படும் துன்பங்களை கவிதைகளாக எழுத வேண்டும். அது அரசியலாகிவிடும் என்று ஒதுங்கிக் கொள்ளக் கூடாது’ என்றார்.
முன்னதாக உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளரும், ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் வரவேற்று பேசுகையில், “தமிழச்சி தங்கபாண்டியனின் இரண்டாவது கவிதை தொகுப்பு வனப்பேச்சி. இளம் கவிஞர்கள் மீது விமர்சனங்கள் வரும். அவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வதற்கும், மொழி சார்ந்தவற்றை புதுப்பித்துக் கொள்வதற்கும் உதவும். தற்போது அரசியலில் வரும் மாற்றங்களை கவனித்து கொண்டிருக்கிறோம். எனவே, எம்.பி., கனிமொழியும், தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கும் உந்து சக்தியாக திகழும்’ என்றார்.
ஏற்புரையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில், “நகரவாசிகள் சமரசம் செய்து கொண்டு வாழ்கின்றனர். வணிக பொருளாதாரம், உலகமயமாக்கல் ஆகியவற்றுக்கு நடுவில் நகரவாசிகள் வாழ்க்கை நடத்துகின்றனர். கிராமங் களில், வன்முறை வெளிப்படையாக உள்ளது. ஆனால், நகரத்தில் எப்போது என்ன நடக்கும், என்பது தெரியாத புதிராக இருக்கிறது, என்றார்.
இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள்
- ஜெயகாந்தன்,
- பிரபஞ்சன்,
- தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவி ராமாத்தாள்,
- எம்.எல்.ஏ., ரவிக்குமார்,
- போலீஸ் ஏ.டி.ஜி.பி., திலகவதி,
- கவிஞர் சுகுமாரன்,
- பேராசிரியர் சுப்பாராவ்
உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியை நடிகை ரோகிணி தொகுத்து வழங்கினார்.