மனோரமா, பாரதிராஜா, வேலுபிரபாகரன் வரிசையில் இப்போது ‘குருவி குடைஞ்சா கொய்யாப்பழம்’ புகழ் தங்கர்பச்சான்! ஏதோ கலைமாமணி விருது பெறப்போகிறவர்களின் லிஸ்ட் அல்ல. ரஜினியை திட்டிவிட்டு பின்னர் தடாலென்று புகழ்ந்து தள்ளுபவர்களின் லிஸ்ட்தான்.
விஷயம் இதுதான். தங்கர்பச்சான் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ கதையை படமாக்க ரஜினியிடம் கால்ஷீட் கேட்டாராம். கதையைக் கேட்டுவிட்டு ரஜினியும் தங்கரை பாராட்டியிருக்கிறார்.
குஷியான தங்கரும், ரஜினி போல ஒரு இயல்பான நடிகர் யாரும் கிடையாது. அவருடைய வயதுக்கும், அவருடைய நடிப்புக்கும் இந்தக் கதையில் நடித்தால் அவரை உலகத்தரத்துக்கு கொண்டு செல்லமுடியும் என்று சொல்லித் திரிகிறாராம். ‘எடுத்தது மூணு படம்…அதுல ஊத்திக்கிட்டது ரெண்டு படம்… இதுல பேச்சுக்கு மட்டும் குறைச்சலேயில்லை’ என்று முணுமுணுக்கிறது ரசிகர்கள் வட்டாரம்.